Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label கலாச்சார சீரழிவு. Show all posts
Showing posts with label கலாச்சார சீரழிவு. Show all posts

Saturday, April 2, 2016

கொலம்பஸ் ...கொலம்பஸ் .. கொலம்பலைஸிங்...போதும்...!

இன்றும் கூட நம் பள்ளிகளில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என கூசாமல் கற்பித்து வருகிறோம். இவர் இந்தியாவை கண்டு பிடிக்க சென்றார் , திசை மாறி தன் குறிக்கோளில் தோல்வியுற்றார் அதனால் தான் கண்ட நிலப்பரப்பை இந்தியா என்றும் அதில் வாழ்பவர்களை இந்தியர்கள் என்றும் அழைத்தார் என வரலாறு சொல்வதில்லை. காரணம் பிரிட்டீஷ் எழுதிய வரலாறு புத்தகமே நம் கையில் உண்டு. பிறகு தற்காலத்தில் அமெரிக்கா சொல்லுவதை கேட்கும் நிலையில் இருக்கிறோம். இதனால் இந்தியாவின் கருத்துக்கள் உரக்க சொன்னாலும் எங்கும் செல்வதில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் சொல்லுவது சத்ய வார்த்தையாக இருக்கிறது. நம்மில் பெரும்பான்மையானவர்கள் கூட ”அமெரிக்காவுல ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்கானாம்..” என கண்கள் விரிய சொல்கிறோம்.  நம் தலையில் கட்டும் விஷயங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்கள் மார்கெட்டிங் செய்கிறார்கள். அந்த செய்தியை நம் கண்ணில் படுமாறு கசிய விடுகிறார்கள். பிறகு உங்கள் வீட்டின் அருகே இருக்கும் கடைகளில் அப்பொருள் வரும் பொழுது.....ஓ அமெரிக்க கண்டுபிடிப்பு என வாங்குகிறோம்.

அதற்காக நான் அமெரிக்க ஏகாதிபத்யமே...! என புரட்சி பேசும் ஆள் இல்லை.  அமெரிக்க மனநிலை என்ற ஒரு தன்மைக்கு இளைஞர்கள் மயங்கி கிடப்பதை சுட்டிகாட்டவே இதை பேசுகிறேன். வேப்பிலை , மஞ்சள் இவைகளை ஆயிரக்கணக்கான வருடமாக நாம் பயன்படுத்தி வந்தோம். கோவில்களிலும், வீடுகளிலும் மற்றும் மருத்துவத்திற்கும் இவை இரண்டும் பயன்படாமல் இருந்ததே இல்லை. ஆனால் அமெரிக்காவில் இதன் மருத்துவ குணத்தை கண்டறிந்து காப்புரிமை வாங்க முயன்றார்கள். பிறகு சில இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல விரும்பிகள் தடுத்தார்கள் என்பது நமக்கு தெரியும்.

முன்பே பயன்பாட்டில் இருக்கும் ஒருவிஷயத்தை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என சொல்லுவது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. காரணம் அமெரிக்காவே அப்படி கண்டுபிடிக்கப்பட்டது தானே? அங்கே பல்லாயிரம் வருடமாக பூர்வகுடிகள் வாழ்ந்து வந்தார்கள். கொலம்பஸ் கண்டறிந்தார் என சொல்லி அவர்களை கொன்று குவித்து இப்பொழுது அமெரிக்கர்கள் பேசுவதை பார்த்தால் கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தகுடி போல பேசுவார்கள். சமூக ஆர்வலர்கள் இச்செயலை  கொலம்பஸிங் என கிண்டலாக சொல்லுகிறார்கள். முன்னரே இருந்த விஷயத்தை கண்டுபிடித்து அதனால் பழைய வரலாறை மறைத்து பெயர் வாங்கும் சின்ன புத்திக்கு கொலம்பஸிங் என கூறலாம்.

இணையத்தில் சூப்பர் யோகா என தோப்புகரணம் போடுவதை ஏதோ ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது போல சொல்லுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது போல இப்பொழுது இயற்கையை சேதப்படுத்தாத இலை பாத்திரங்கள் என சொல்லி தாய்லாந்து நாட்டின் யுனிவர்சிட்டி கண்டுபிடித்திருக்கிறார்களாம். இவர்கள் பின்புலத்திலும் கொலம்பஸிங் ஆட்கள் தான் இருக்கிறார்கள்.

விரிவாக பார்க்க இதோ இணைப்பு : http://m.bangkokpost.com/news/917069



மார்கழி மாச பஜனையும் தொன்னையும் அதில் வழியும் சக்கரை பொங்கலையும் மறக்க முடியுமா? இவர்கள் தான் இயற்கை வழி தொன்னையை முதன் முதலில் கண்டுபிடித்தார்களாம். நாம் நம்ப வேண்டும். புளிசோற்றை பாக்கு மட்டையில் கட்டி கட்டு சோறு என்று எடுத்து செல்வதும், தொன்னையை பயன்படுத்துவதும் நம் வழக்கமாக இருந்தது. அதில் ப்ளாஸ்டிக்கை நுழைத்து, இனியாவது மார்டனா இருங்க என சொல்லி நம் வழக்கத்தை குழைத்து இப்பொழுது இயற்கை கண்டுபிடிப்பு என சொல்லுகிறார்கள். இதை தான் கொலம்பஸிங் என்கிறோம்.

நான் அர்ஜெண்டினா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் தொன்னை எடுத்து செல்வேன். அங்கே இருப்பவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் எப்படி இதை உண்டாக்கினார்கள் என வியப்பார்கள். எடை குறைவாக இருப்பது, பூஜைகளுக்கு தூய்மை ஆகிய காரணங்களால் நான் தொன்னையை சுமப்பேன். அவர்களுக்கு இதன் உண்மை காரணம் தெரியாது...!

இது போன்று பல பாரம்பரியங்களை நாம்  இழந்து வருகிறோம். எதிர்வரும் காலத்தில் நம் சந்ததியினர் பிரான்ஸில் புதிய உணவு கண்டுபிடித்திருக்கிறார்களாம், பசும் பாலை ப்ராஸஸ் செய்து அதில் டோயிர் என உண்டு செய்து சாதத்தில் பிசைத்து சாப்பிடுவார்களாம் என சொல்லுவார்கள். நாமும் டோயிர் ரிஸொட்டோ என உணவு பட்டியலை பார்த்து தயிர்சாதத்தை பெருமையாக சாப்பிடுவோம்.

கற்றாழை, முருங்கை இலை பொடி என முன்பே சென்றுவிட்டது...
இப்படியாக கொலம்பஸிங் விரிவடையும் ....எப்பொழுது உண்மையை உரக்க சொல்லுவோம்?

#columbusing

Saturday, January 30, 2010

நச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...!

கவிதை எழுதி இலக்கியவாதி ஆகிவிட்டாலே பல எதிர்வினை வரும் என்பது தாமதமாகவே புரிந்தது.நானும் எதிர்வினையாக வந்த கடிதங்களை பதிவேற்றம் செய்து எனக்கு இலக்கிய அடையாளம் கொடுத்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கவிதையை
பதிவேற்றம் செய்து சில மணி நேரத்தில் பல தனி மடல்கள், மைனஸ் ஓட்டுக்கள் மற்றும் பின்னூட்டங்கள். சிலர் மிகவும் கடுமையாக எழுதி இதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடுத்துவிட்டு என கூறினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மைனஸ் ஓட்டு போட்டதில் நானும் ஒருவன் என்பதை சுட்டிகாட்டி எனது பின்னவீனத்துவ பாணியை இங்கே பதிவு செய்கிறேன். :)

மேல் எழுந்த வாரியாக எனது வரிகளை படித்துவிட்டு கூச்சலிடுவதும், நானும் நற்குடி பதிவரும் ஒன்று என்பது போலவும் சிலர் குறிப்பிட்டார்கள்.


முதலில் என் கவிதையின் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். நான் அனைத்து மதத்தையும் சுட்டி காட்டியே எழுதி இருக்கிறேன். ஆனால் படித்து அதற்கு கருத்து சொன்னவர்கள், தங்கள் மத அடையாளத்தை மறைந்துக்கொண்டு பிற மதத்திற்கு பரிந்து பேசியது வேடிக்கை. முதலில் உங்களிடம் இருந்து பரிவுக்காட்ட துவங்குங்கள்..!

மதம் என்பது ஒருவித பள்ளிக்கூடம். கல்வி பெற்று சமூகத்தில் வாழ பழகும் ஒருவருக்கு பள்ளியில் படித்த அடிப்படை கல்வி உதவும். அப்படிபட்ட பள்ளிக்கல்வியே மதம். அதனால் மதம் என்பது தேவை இல்லை என்றோ, தவறு என்றோ கூறமாட்டேன்.

நான் ஒருவன் பள்ளிபடிப்பை படித்துவிட்டேன் என்பதற்காக அனைத்து பள்ளிகளையும் தகர்த்து விடுங்கள் என கூறுவது முட்டாள் தனம்.

பள்ளிக்கல்வியில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையாக மதங்களும் வேறுபட்டு இருக்கிறது. அடிப்படை போதித்தவுடன் அதைவிடுத்து மேலே வரவேண்டுமே தவிர அதிலேயே தங்கே பள்ளி கல்வி மட்டுமே பயிலுவேன் கல்லுரிக்கு செல்ல மாட்டேன் என கூறுவது வளர்ச்சிக்கு அழகு அல்ல.

பிறந்தவுடன் குழந்தையாக சுய சிந்தனை இல்லாத நிலையில் நமக்கு மதம் திணிக்கபட்டது. நமக்கு பள்ளி கல்வி எப்படி திணிக்கபட்டதோ அதுபோலவே. குழந்தையிடம் சென்று மதங்களை கடந்துவா என விளக்க முடியாது, ஆனால் வளர்ந்தபிறகு மதங்களை பிடித்திருக்கும் குழந்தைகளுக்காகவே நான் அவ்வாறு எழுதி அதில் இருக்கும் நிலையை பற்றி மேலே வா என கூறினேன்.


பிரபல பதிவர் எனக்கு எழுதிய மடலின் பகுதி...

////இன்றைய உங்களின் கடைசி கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் என்றாலே ஒரு சராசரியைப் போல சுன்னத் மட்டுமே உங்களுக்கு நினைவுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது. அவன் குல்லா அணிவித்துக் கொண்டிருந்தான் என்பதாக எழுதியிருந்தால் நாகரிகமாக

இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.////

இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டுள்ளேன்- அது தெரியவில்லையா ?.

யாசகம் எடுப்பது ஒரு மனிதனுக்கு உளவியலில் பெரிய மாற்றத்தை உண்டு
செய்யும். ஒரு மனிதன் தன் அடையாளம், அகந்தை மற்றும் சுயகவுரவத்தை விட்டு ஒரு வீட்டின் முன் நின்று பிச்சை எடுத்தால் 90 சதவீதம் அவனுள் ஒரு தூய்மை வந்துவிடும். ஆனால் நடைமுறையில் உபநயணம் செய்யும் பொழுது தங்க வெள்ளி பூணலை போட்டு, மாமா-சித்தப்பாவிடம் காசு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்.அதனால் யாசகம் கேட்பதால் ஏற்படும் தன்மை இல்லாமல் போகிறது. மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சடங்காகி முடிவில் சவமாகிறது. உண்மையாக பிச்சை எடுத்திருந்தால் தேவநாதன் உண்மையாக ’தேவ’நாதனாகி இருக்ககூடும்.

மதங்கள் மனிதனின் உடலில் புற அடையாளங்களை விதைக்கிறது. அதன் பயன்பாடு முடிந்தவுடன் அவன் அதை விடுக்க மறுக்கிறான். அதுவே எனது கவிதையின் கருத்து. அந்த கவிதையில் ’கார்’ என்ற வாகனத்துக்கு பதில் ’ஓம்கார்’ என நிரப்பி ஒரு மனிதனாக பாருங்கள். மதங்கள் சிலவற்றை திணிக்கிறது என கூறி இருக்கிறேன்.சுன்னத் என்பது இஸ்லாமிய அடைப்படை மத கோட்பாட்டில் ஒரு பகுதி, அது அவர்களுக்கு அடையாளமாகவும், புனிதமாகவும், மருத்துவ நோக்கத்துடனும் செய்யப்படுகிறது. அவற்றை நம் கண்ணோட்டத்தில் நாகரீகம் என தரம்தாழ்த்தி பார்க்க கூடாது.

கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் கைக்குட்டையை இணைத்து அனுப்புவார்கள். அதுபோன்றது தான் இந்த புற அடையாளங்கள். ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு கல்லூரி செல்லும் பொழுது உங்கள் மார்ப்பில் கைக்குட்டையும், வலது தாடையில் திருஷ்டி பொட்டும் இருந்தால்? நினைக்கவே நடுக்குகிறதே... :)

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நமக்கு நடைவண்டி கொடுத்து நடக்க பழக்கினார்கள். அதில் பழகிய பிறகு திருமணம் செய்யும் காலம் வந்தபிறகும் மணவரையில் மணப்பெண்ணுக்கு அருகே நடைவண்டி இருந்தால்தான் திருமணம் செய்வேன் என கூறுவது வேடிக்கையானது அல்லவா? அதுபோன்றதே இது. முடிவில் மணமகனின் புத்திசுவாதினத்தில் சந்தேகம் ஏற்படலாம்.

மதங்களை பற்றி கூறும் பொழுது நமக்கு கொதிப்பு வருகிறதே காரணம் அதில் நம் அஹங்காரத்துடன் ஐக்கியமாக்கிக்கொண்டோம். உங்கள் அஹங்காரத்தை விடுக்க மதத்தை கொடுத்தால், மதமே அஹங்காரமாகி நிற்கிறது. மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும்.

கடைசியில் ஒரு கவிதை சின்ன விளக்கத்துடன்....



என் மார்க்கம்
------------------

உணர்ந்துகொள்ள ஜெய மார்க்கதை தேர்ந்தெடுத்தேன்
ராஜ மார்க்கத்தால் கவரப்பட்டேன்.
சன்-மார்க்கத்தில் நுழையும் முன் மின்சாரம் தடைபட்டது...!

விளக்கம் : மார்க்கம் என்றால் சானல் என்று அர்த்தம்.

Tuesday, October 6, 2009

வேட்டைக்காரன் பாடல்களில் ஆன்மீக அத்துமீறல்

சென்ற வாரம் வாடகைக் காரில் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். டிரைவர் ஒரு இசை தட்டை ஓடவிட்டார். அதில் இருக்கும் பாடலை கேட்டவுடன் என் நிலை எப்படி இருந்தது என இந்த கட்டுரையின் கடைசி வரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

தற்சமயம் சினிமா உலகில் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் ஆன்மீக அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். சிலர் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமல் அசிங்கபடுத்துகிறார்கள்.

இசை என்பது இறைவனின் வடிவம். நாதமே கடவுளின் சத்சொரூபம் என்கிறது அனைத்து புனித நூல்களும். நாதத்தில் லயம் ஆகும்பொழுது இறைவனின் நிலையை சில ஷணங்கள் உணர முடியும் என்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். முக்கியமாக திரை இசை இந்த வரம்புகளை மீறி செயல்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டைக்காரன் என்ற திரைப்படம் நடிகர் விஜய் என்பவர் நடித்து வெளிவர இருக்கிறது. இத்திரைப்படத்தின் இசையை விஜய் ஆண்டனி என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் 'நக்கமுக்க' என்ற தெய்வீக இசையை உலகுக்கு அளித்தவர். படத்தின் நாயகன் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த திரைப்படத்தில் புலி உறுமுது என்று ஒரு பாடல் இருக்கிறது. தன் அரசியல் பிரவேசத்திற்காவும், இலங்கை தமிழருக்காவும் கருத்தில் ஏற்படுத்தபட்ட பாடல் என நினைக்கிறேன். இப்பாடலில் வேத மந்திரங்கள் அத்துமீறி உபயோகப்படுத்தபட்டுள்ளது. எத்தனையோ விஷயங்கள் திரையிசையில் பயன்படுத்த இருக்க இவர்களுக்கு ஒரு தனிமனித துதிபாடலுக்கு வேதமந்திரம் தான் கிடைத்ததா?

அஷத்தோமா சத்க்ரமய
தமசோமா ஜோதிர்கமய
மிர்த்யோமா அமிர்தம் கமய

என்ற வேதமந்திரத்தின் ஆழமும் அர்த்தமும் அந்த இருவருக்கும் தெரியுமா?
இதை கூட கல்நெஞ்சுடன் பொருத்துக்கொள்ளலாம்..பாடலின் ஆரம்பத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை கத்திவிட்டு ஓம் ஷாந்தி ஓம்ஷாந்தி என கூறி இவர்களின் உளரலையும் வேத மந்திரமாக்க முயற்சி செய்வது கண்டனத்திற்கு உரியது.

திரை இசையில் தமிழ் மொழியை கொன்று குழிதோண்டி மூடியவர்களுக்கு கிடைத்த அடுத்த பலி வேதமந்திரம் என நினைக்கிறேன்.

சில திரைப்படத்தில் மந்திரம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். அந்நியன் என்ற படத்தில் கருட புராணத்தின் வரிகளையும், உன்னை போல் ஒருவன் படத்தில் பகவத் கீதையின் வரிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். (இந்த கட்டுரைக்கு தகவல் திரட்டும் பொழுது தெரிந்து கொண்டேன். மேற்கண்ட கண்றாவியை பார்க்கவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்..)

பகவத் கீதை ஒரு சமயம் சார்ந்த மத நூல். உங்களுக்கு நான் கூறுவது ஆதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். அதுதான் உண்மை. கிருஸ்துவத்தில் பைபிள், இஸ்லாமில் குரான் போல பகவத்கீதை 'இந்து இஸம்' உருவாக்கியவர்களால் பயன்படுத்தபடும் நூல்.

வேதசாஸ்திரத்தின் மெய்ஞான கருத்துக்கள் அதில் இருப்பதால் பகவத் கீதையை நாம் வணங்கலாம். அனைத்து மதங்களிலும் வேத சாஸ்திரம் பொதிந்திருக்கிறது.

நான்கு வேதமும், உபநிஷத்களும் ஒரு மதம் சார்ந்தது அல்ல. இதை உருவாக்கியவர்கள் கிடையாது. அவை சக்தியின் குறியீடுகள், இறைவனின் அருள் ஆற்றல்கள் அதை திரையிசையில் பயன்படுத்துவது மிக கொடூரமான செயல்.

இந்த படத்தின் நாயகனும் இசையமைப்பாளரும் தெரியாமல் பயன்படுத்தினார்கள் என கூறமுடியாது. காரணம் இருவரும் ஒரு யோக கழகத்தில் யோகம் பயின்றவர்கள். அந்த பயிற்சில் கண்டிப்பாக இந்த வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள்.

வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன?

வேத சாஸ்திரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவார்கள் போல இருக்கிறது. நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.


இந்த பாடலை கேட்டவுடன் எப்படி இருந்தது என கேட்கிறீர்களா? அந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் வரியை போல இருந்தது...

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது..............

Wednesday, September 23, 2009

நவராத்திரி ஒரு சமூகத்தினரால் மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறது?


நவராத்திரி மட்டுமல்ல ஏனைய விஷயங்களை இவ்வாறு கேள்வியாக கேட்கப்படுகிறது.

திரு ஸ்ரீதரன் சென்ற பதிவில் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்டிருந்தார்.


சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்பிட்ட சில சமூகத்தினரால் ( பிராமின்ஸ் ) மட்டுமே வீட்டில் கொண்டாடப்படுகிறது. ஒரு எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் அனைத்து சமூகத்தினராலும் நடத்தப்பட்டது என்று ஒரு ஞாபகம் ( வித விதமான சுண்டல் கிடைக்குமே! ) மேலும் வீட்டில் நவராத்திரி பூஜை எப்படி நடத்தவேண்டும் ?

இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். நவராத்திரி ஆன்மீக சம்பந்தபட்டது தானே? தாராளமாக கேட்கலாம். ஆன்மீக கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். எத்தனையோ பேர் விடையளித்த கேள்வியாக இருந்தாலும் என் விடை உங்களுக்கு சில புதிய கோணங்களை காட்டும். உங்களை சிந்திக்க வைக்கும். இந்த கேள்வியின் பதில் விளக்கமாகவும் நீண்டும் இருப்பதால் தனிபதிவாகவே போட்டுவிட்டேன்.

நவராத்திரி என்பது ஒரு ஆன்மீக ரீதியாகவும்,காலநிலைக்காகவும் மற்றும் கலாச்சாரத்திற்ககவும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. வீட்டின் முன் அறையில் படிகள் வைத்து அதில் கீழிருந்து மேலாக பொம்மைகள் அடுக்கி வைப்பார்கள்.

சின்ன ஜீவராசிகள் முதல் படிபடியாக ஜீவராசிகளின் தன்மைக்கு ஏற்ப அடுக்கி உயர் படிகளில் கடவுள் சிலை இருக்கும். அனைத்து ஜீவனும் படிபடியாக முன்னேறி கடைசியில் முக்தி அடைதலை குறிப்பது போல அமையும்.நவராத்திரி விழாவை பயன்படுத்தி அருகில் இருக்கும் வீடுகளுடன் நட்பை பலப்படுத்துவது, பரஸ்பர புரிதல் ஏற்படுத்துவது என்பது நம் கலாச்சாரம். நம் நாட்டில் கலாச்சரத்துடன் இசையும், நாட்டியமும் எப்பொழுதும் கலந்துதே இருக்கும். அதனால் குழந்தைகள் பிறருக்கு தங்கள் கலை அறிவை வெளிப்படுத்தும் ஒரு நாளாக இருக்கிறது.

நவராத்திரி அன்று குழந்தைகள் பெரியவர்கள் பாடுவதையும் கலை நிகழ்ச்சி செய்வதையும் கேள்விபட்டதுண்டா?


இவை எல்லாம் இருக்கட்டும்....

அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் தலைகீழாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எடிசன் மின்சார பல்ப் கண்டு பிடிக்கும் முன் விளக்குகள் மேல் நோக்கி இருந்தது. அதன் பின் விளக்கு கீழ் நோக்கி ஒளி கொடுக்கிறது. ஆட்டுக்கல் நிலையாக இருந்தது குழவி சுற்றியது அந்தகாலம், குழவி நிலையாக இருந்து ஆட்டுக்கல் சுற்றுவது கிரண்டர் காலம்.

அது போல அந்த காலத்தில் நவராத்திரியில் பொம்மைகள் படியில் அசையாமல் இருக்கும், மக்கள் அதன் முன் ஆடுவார்கள், பாடுவார்கள், பேசுவார்கள்.

இது விஞ்ஞனான காலமல்லவா? தொலைகாட்சி பெட்டி என்ற கொலு பொம்மை ஆடுகிறது பாடுகிறது பேசுகிறது. மக்கள் கொலு பொம்மைகளாக எப்பொழுதும் அதன் முன் அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்..!

ஏனைய வேதகாலத்தில் அனேக விஷயங்கள் அனைத்து தரப்பினரும் செய்து வந்தனர். நாளடைவில் அவை யானை பூனையான கதையாக தேய்ந்து வருகிறது. பூணல் போடுவது, மந்திரம் சொல்லுவது, ஆடை அணியும் முறை என அனைத்தும் வேதகாலத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால் தற்சமயம் பிராமணர்கள் என சொல்லும் குலம் மட்டுமே அதை செய்வதாக சொல்லுகிறோம். எனக்கு தெரிந்தவரை அவர்களில் அனேகர் அவற்றை சரியாக செய்வதில்லை. இன்னும் ஒரு ஐநூறு வருடங்களில் பல கலாச்சார மாற்றம் ஏற்படலாம்.

உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ பலவருடம் கழித்து ஒரு ஆன்மீகவாதியிடம் “ஏன் ஒரு சமூகம் மட்டும் தீபாவளி கொண்டாடுகிறார்கள் ?” என கேட்கும் நிலை வரலாம்.

பக்கத்து பிளாட்டில் இருப்பவர் இறந்த பின் துர்நாற்றத்தைவைத்து கண்டு பிடிக்கும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் நவநாகரீகமாக கொண்டாடப்படுகிறது. அப்படி இருப்பவர்கள் கொலுவைத்து பிறரை கூப்பிட்டு பாட்டு பாடி ரசனையுடன் கழிப்பார்களா?

சுயநலமான பணத்தேடல் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஒன்பது நாள் இதை கொண்டாடினால் என்ன கிடைக்கும் என கேள்வி கேட்கப்படுகிறது. வேலை வேலை என ஓடி குழந்தைகளிடம் கூட பேச முடியாமல் இருக்கும் உலகில் கொலுவைத்து கொண்டாடி ரசனையுடன் வாழ்வார்கள் என எதிர்பார்ப்பது நம் முட்டாள் தனமே.

பெண்களின் கலை ஆர்வத்திற்கும் ஆவர்களின் கைவேலைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா நவராத்திரியாகும். ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் சமூக நிகழ்வுகளை ஒரு சிறிய இடத்தில் பொம்மைகளாக செய்து வைத்திருப்பார்கள். அதை பார்க்கும் பொழுது அந்த வீட்டு பெண்மணியின் அறிவு மற்றும் திறன் வெளிப்படும்.

இந்த வருடம் ஒரு வீட்டில் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஒரு பொம்மையாக அமைத்திருந்தார்கள். ஈழ படுகொலையை இன்னொரு பெண் தத்ரூபமாக செய்து அதன் அருகில் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி இருந்தாள்.

ஒருவீட்டின் பெண் அறிவாக இருக்கிறாள் என்றால் அந்த வீடு சுபிக்‌ஷமாக இருக்கும் என்பதன் அடையாளம். பலவீடுகள் அப்படி இருந்தால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம்.

இனி வரும் காலத்திலாவத் பெண்கள் நவராத்திரி கொண்டாட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமூதாயத்தை ஏற்படுத்துவார்கள் என பிரார்த்தனை செய்வோம்.

Friday, July 3, 2009

உலக சமாதானமும் - எனக்கு கிடைக்கப் போகும் நோபல் பரிசும்

உலகின் எந்த மூலையில் ஒரு கேவலமான சம்பவம் நடந்தாலும் அதில் எனக்கு சங்கடம் நேரும். காரணம் என்னில் இருந்து இந்த உலகை வேறாக என்னால் பார்க்க முடியவில்லை. போரினாலும் இனபடுகொலையிலும் மக்கள் இறந்து போவதை பார்க்கும் பொழுது அதை உங்கள் “கர்மா” என்று தாண்டி செல்ல முடியாவில்லை.அதே நேரம் கேவலமான நோபல்பரிசுக்கோ, இந்தியாவின் பத்ம ஸ்ரீ பட்டத்திற்கோ ஆசைபட்டு தமிழினத்தை காப்பாற்றுகிறேன் என என்னால் பிறரை ஏமாற்றவும் முடியாது.

வலையுலகமே அதைபற்றி கொதித்தபோது நான் அமைதியாக இருந்ததன் காரணம் என்னால் முடிந்த விஷயத்தையே செய்ய விரும்புகிறேன். எனது உடலின் ஒரு பகுதி காயமாகி விட்டது என்றவுடன் அதை வலையுலகில் எழுதி , “எனக்கு தலையில் காயம் அநீதியை பாரீர்” என எழுதுவது எவ்வாறு முட்டாள் தனமோ அதற்கு சமமானது நான் படுகொலைகளை பற்றி எழுதுவது.

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் ஒரு நாட்டின் எல்லையை
கொண்டோ, மொழியின் எல்லையை கொண்டோ அடக்கிவிட முடியாது. பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு அனுவும் ஆன்மீகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களின் ஒரு பகுதியே. அந்த ஒரு அனுவில் அசைவும் இவர்களை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது.

பிற உயிருக்கு கூட அல்ல பிற பொருளுக்கு ஏற்படும் துன்பம் உங்களின் துன்பம் ஆகிவுடும். பிறரின் இன்பம் உங்கள் இன்பம் ஆகிவிடும்.ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் முதலில் நீங்கள் அனுபவிக்க போகும் நிலை இதுதான்.

ஒரு வேடிக்கை கதை உண்டு. ஒருவன் யாருக்கும் தெரியாமல் கடவுளின் கோட்டைக்குள் புகுந்துவிட்டான். அது பல்லாயிரக்கணக்கான மாடிகள் கொண்டது. அதில் லிப்ட் வசதியும் இருந்தது. யார் கண்ணிலும் படாமல் லிப்டினுள் நிழைந்து கடவுளின் அறை என்ற பொத்தானை அழுத்தினான். சிலமணித்துளி பயணத்திற்கு பிறகு அது ஒரு தளத்தில் நின்றது. திறந்தவுடன் எதிரில் இருக்கும் அறையில் நுழைந்தான். அங்கே ஒரு மேஜையில் சில கோப்புகளை பார்த்தவாறு கடவுள் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு மேஜை விளக்கு இருந்தது. சரியான மின்சாரம் இல்லாத சூழல் போல அது விட்டு விட்டு எரிந்தது.

“வா மனிதா. உன்னுடைய வாழ்க்கை கோப்பைத்தான் படித்துக்கொண்டிருந்தேன். நீ இங்கே வருவாய் என இதில் இருக்கிறது என்றார். இவனுக்கோ ஒரே ஆச்சரியம். கடவுள் இவனிடம் சகஜமாக பேசுவதை எண்ணி மகிழ்ந்தான். “இறைவா உங்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றவாறே தொடர்ந்தான்.. இந்த கோட்டை எப்படி கட்டப்பட்டது? இதில் இருக்கும் வசதிகள் எப்படி செயல்ப்படுகிறது” என்றான்.

“மனிதா... உலகில் இருக்கும் ஜீவராசிகள் தங்களை பற்றி எண்ணும் தவறான எண்ணங்களை மனக்கோட்டை என்போம். அக்கோட்டைகளை திரட்டி இங்கே வாழ்விடமாக்கினேன். மக்கள் இன்ப-துன்பம் அடையும் பொழுது ஒரு ஆற்றல் பரவும். அதில் இருந்து மின்சாரம் எடுத்தே இக்கோட்டையில் வசதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

“அப்படியா? இன்பதுன்பம் என்பது சரியான அளவில் இருக்காதே எப்படி அதில் மின்சாரம் எடுக்க முடியும்? ” என்றான் மனிதன். புன்சிரிப்புடன் தொடர்ந்தார் கடவுள்...“உன் சந்தேகம் சரியானது தான். மனிதனின் துன்பங்களில் இருந்து எடுக்கும் மின்சாரம் லிப்டிலும், இன்பத்திலிருந்து எடுக்கும் மின்சாரம் எனது மேஜை விளக்கிலும் பயன்படுகிறது..!”

நமது உலகில் சமாதனம் ஏற்படுத்துகிறோம் பேர்வழி என நிறையபேர் கிளம்பி இருக்கிறார்கள். முக்கியமாக மதம் சார்ந்தவர்கள் மனிதனை வளையக்க பயன்படுத்தும் ஆயுதம் இதுதான். கஷ்டத்தில் உழலும் மனிதனுக்கு உலகசமாதம் ஏற்படுத்துகிறோம்.

உலகில் தானே நீயும் இருக்கிறார் எனவே உனக்கும் அதில் சமாதானம் ஏற்படும் என சொல்லுவார்கள்.

“இந்து மதம்” என்ற பெயரில் உலக சமாதானத்திற்கு அதிருத்ர
மஹாயஞ்சம் செய்தவர்களை கேட்கிறேன்.. சதுர்யுகத்தில் யுத்தம் இல்லாத யுகம் எது? கிருதாயுகத்தில் நரசிம்மவதம்,திரிதாயுகத்தில் ராவண வதம், துவாபர யுகத்தில் பாரத போர் என எத்தனையோ யுத்தங்கள் தர்மத்திற்காக நிகழ்த்தபட்டுள்ளதே? அக்காலத்தில் அவதார புருஷர்களுக்கு அதிருத்ர மஹாயஞ்சம் செய்யத்தெரியாதா?

இக்கருத்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அப்பாவிமக்களை உயிர்பலி இடும் பிற மதங்களுக்கும் பொருந்தும்.

அப்படியானால் உலக சமாதானம் என்ற ஒன்றே இல்லையா?

சமாதானம் என்பது தனிமனிதனுக்கொள் நடக்க வேண்டும். உலகில் அல்ல.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுள்ளே சமாதனத்தை தேடினால் உலகம் சமாதானம் அடையும். அதற்கு ஒரே வழி தான்னை போல பிற உயிர்களையும் மதிக்க வேண்டும். பிற உயிர்களில் ஏற்படும் சலனம் தன்னுள் ஏற்பட்டதாக கொள்ளவேண்டும்.

ஒரு ஆன்மீக ஆசரமத்தில் அழைப்பின் பேரில் சென்று அதன் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு தான தர்மம் பற்றி திரும்பியது.

சுனாமியில் பலகோடி ரூபாய்க்கு வீடும், உடையும் கொடுத்ததை பற்றி பேசினார் அவர்.எனது கருத்தில் இரத்த தானம் சிறந்தது என்றேன். உடனே அங்கும் இங்கும் பார்த்துவிட்டு இரத்ததானம் தவறானது என்றார். காரணம் கேட்டதற்கு ஒருவருக்கு இரத்தம் அல்லது உடல் உறுப்பை தானம் செய்தால் அதில் நம் கர்மாவும் இணைந்துவிடுமாம். போன ஜென்ம கர்மாவின் காரணமாகவே இந்த உடல். அதனால் உடல் பகுதிகளை தானமாகினால் அவர்கள் செய்யும் கர்மா நாம் செய்ததாக ஆகிவிடும் என்றார்.

இந்த ஆன்மீக சுயநலமிகளிடன் என்ன பேசுவது? தான் நரகம் அடைந்தாலும் மக்கள் சொர்க்கம் செல்லட்டும் என கோபுரத்தில் ஏறி கூவிய ராமனுஜரின் செயலில் ஒரு சதவிகிதம் கூட இல்லயே?

எனது இருசக்கர வாகனம் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் தான் மைலேஜ் கொடுக்கிறது. உங்கள் வாகனம் 60கிலோமீட்டர் கொடுக்கிறது என்றால் என் வாகனத்தில் இருக்கும் பெட்ரோலை உங்கள் வாகனத்தில் செலுத்தினால் உங்கள் வாகனத்திற்கும் 30 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்குமா?

இவர்களை யார் நல்வழிப்படுத்துவது? மது, புகைப்பழக்கம் இருப்பவர்களை விட ஆசிரம வாழ்க்கையில் இருக்கும் இவர்களும் இவர்களின் சீடர்களும் இரத்த தனம் செய்தால் எவ்வளவு தூய்மையான இரத்தம் கிடைக்கும்.?

வீடு உடை யார்வேண்டுமானாலும் கொடுக்கலாம், இரத்தம் செயற்கையாக உருவாக்க முடியுமா? பலவருடங்களாக ஆராய்ச்சி செய்தாலும் விஞ்ஞானிகள் தோல்வியையே பார்க்கிறார்கள்.
இந்தியாவில் இது போன்ற அனைத்து ஆன்மீக அமைப்புகளும் முனைந்தால் இரத்தம் தட்டுப்பாடு இருக்காது. வீண் விளம்பரங்களுக்கு போராடும் இவர்கள் என்று திருந்துவார்கள்.? உலக சமாதனம் எனும் விஷயத்தை ஒரு விளம்பர யுக்தியாக இருப்பதை காணும் பொழுது வேதனை அதிகரிக்கிறது.

அகிம்சை என்ற வார்த்தையும், ஜீவகாருண்யம் என்ற வார்த்தையை பார்த்தால் எனது இரத்தம் கொதிக்கும்.

இம்சையிலிருந்து விடுதலை வாங்கவே அகிம்சை. ஜீவனுக்கு கருணை காட்டுங்கள் என்பது ஜீவகாருண்யம். விடுதலை அளிக்கவும், கருணை காட்டவும் நீங்கள் யார்? நீங்கள் பிற உயிரை விட மேம்பட்டவர்களா? பிறருக்கு விடுதலை அளிக்கிறேன் என்ற வாக்கியம் நீங்கள் சொல்லவில்லை உங்கள் ஆணவமே சொல்லுகிறது.

தனிமனிதனாக ஒவ்வொருவரும் தினமும் நமது ப்ரார்த்தனையில்
அனைத்து உயிரும் முழுமையான ஆனந்தத்தை அடைய
ப்ரார்த்திப்போம்

இயற்கையின் இயல்பு என்பது இரு துருவங்களில் செயல்படும். அதனால் இரவு,பகல், இன்பம் துன்பம் என இரு தளம் இல்லாமல் இருக்க முடியாது. முழு சமாதானம் என ஏற்பட சாத்தியம் இல்லை என்றாலும் சமாதானம்த்தின் விகிதத்தை 99% அதிகரித்து 1% துயரம் என்ற நிலைக்கு கொண்டு சென்றால் நன்மையே.

இன்றைய நாளிதழில் இரு செய்தியை பார்த்தேன். ஒன்று சின்ன சேலத்தில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு மற்றது மணப்பாறையில் 1500 எருமை மாடுகளை.

நன்றி : தினமலர்

பாரத கலாச்சாரத்தில் இருக்கும் சடங்குகள் நம்மிடம் இருக்கும் துர்குணங்களை களைய உருவாக்கப்படது. சிதறு தேங்காய் உடைப்பது என்பது நமது ஆணவத்தை ஒரு ஷ்ணத்தில் சிதறி இல்லாமல் செய்ய வேண்டும் என்பதன் குறியீடு. அது எப்படி ஆணவமும் தேங்காயும் ஒன்றாக முடியும் என கேட்கலாம்.

கணிதத்தில் x = 1 என்றவுடன் எப்படி x என்பது
ஒன்றாக மாறிவிடுமோ அதுபோலத்தான். நமது ஆணவம் மனசங்கல்ப்பத்தை சார்ந்தது. அது நினைக்கும் பொருளை உடனே உருவகப்படுத்தும். அதனால் சிதறுதேங்காய் ஒரு சடங்காகியது. தேங்காய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் உயிர்சக்திக்கு இணையான சக்தியாக இருப்பதால் அதை மனிதனாக உருவகித்து பலியிடும் சடங்கு உண்டு. ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு மனிதன் தலையில் அதை அடிப்பது முட்டாள் தனம்.

அதே போல துர் குணங்களை நீங்குபவள் துர்கா. துர்குணம் என்பது பொறாமை, துவேஷம், சோம்பேறித்தனம் ஆகியவை மனிதனை தகர்க்கும் குணங்கள். அதை குறியீடாக சொல்லவே அவளின் காலடியில் இருக்கும் எருமை.

இதை புரிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பலி கொடுக்கிறோம் என்ற முட்டாள் தனத்தை நிறைவேற்றுகிறார்கள்.

மந்தகாசுரனை வதம் செய்யத்தான் துர்கா இருக்கிறாளே? இவர்கள் சும்மா இருக்க வேண்டியது தானே?

ஆன்மீகவாதிகள் என்பவர்களுக்கு இது இனப்படுகொலையாக தெரிவதில்லை. காரணம் எருமை சமாதனத்திற்கான விருது கொடுக்காதே?

நர பலிகொடுக்கும் கபாலிகர்களின் முன் தன்னை பலிகொடுக்க சொன்ன சங்கரரை தினமும் துதிக்கும் மஹான்களே முதலில் உங்கள் 'காலடி'யில் இருக்கும் சிறு எறும்புகளை காப்பாற்றுங்கள். அப்புறம் பிற நாடுகளில் இருக்கும் மக்களுக்கு மேன்மை கொடுக்கலாம்.

இறைவனின் கருணை அவர்களுக்கு கிடைக்கட்டும்...

எருமை இனமே சோம்பேறியாக இருக்க கூடாது என்பதை நான் உணர எனக்கு குருவாக இருந்தீர்கள். உங்கள் ஆன்மா மேன்மை அடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

இவண்

உலக அமைதி வேண்டி
அறியாமையை நீக்க
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Wednesday, May 20, 2009

'கிராப்'பாலஜி


[தொலைக்காட்சியில் அந்த தொகுப்பாளினியின் முகத்தை நெருக்கமாக காட்டி பின்னோக்கி நகர்த்துகிறார்கள்]

அன்பர்களே வணக்கம்...

நமது தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு மேல் பல மாமேதைகளை கொண்டு மண்டை காயவைக்கும் நிகழ்ச்சியை செய்து வருகிறோம். உலக மக்களை உய்விக்க எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த ஆலஜிகளின் அலறல்கள் அதிகம். பெயரை மாற்றியும், வீட்டை மாற்றியும் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியவர்கள் பலர். தனது பெயரின் கடைசியில் ஒரு A சேர்த்திக்கொண்டு தொடர் 'வெற்றி' பெரும் அரசியல்வாதிகள் கொண்டது நமது தமிழ்நாடு.

அந்த வரிசையில் நம்மிடையே வந்திருக்கும் மாமேதை, மகாபுருஷர் உலகிலேயே முதல் கிராப்பாலஜிஸ்ட் பண்டிட் பரட்டை பக்கிரி சாமி.

[இப்பொழுது திரையில் இருவரும் தெரியும் வண்ணம் காட்சி நகருகிறது. தலையை நூடுல்ஸ் போல வைத்துக்கொண்டு கோட் சூட்டுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார் ]

அவரின் பிஸி நேரத்திலும் நம்மிடையே உரையாட வந்திருக்கிறார். அவரிடம் நாம் பேசலாம்...

கிராப்பாலஜிஸ்ட் : வணக்கம் எனது புத்திசாலி மக்களே...உங்கள் வாழ்க்கை வளமாக்கவும், வாழ்க்கையில் எளிமையாக வாழைக்காய் வாங்கவும் கிராப்லாஜியை பயன்படுத்துங்கள்.

தொகுப்பாளினி : என்ன சார் நீங்க வாழைக்காய்-னு ஏதோ சொல்லறீங்களே?

கிராப்பாலஜிஸ்ட் : ஒரு ரைமிங்க இருக்கட்டுனு சொன்னேன். கேள்வியை கேளுமா..

தொகுப்பாளினி : கிராப்பாஜினா என்ன சார் சொல்லுங்க..

கிராப்பலஜிட் : முதலில் என்னை சாருனு கூப்பிடாதீங்க. என்னை ஜீ-னு கூப்பிடலாம். உங்க அழகுக்கு பக்கிரினு என் பேரை சொல்லி கூட கூப்பிடலாம்.. ஹி ஹி..

தொகுப்பாளினி : சரிங்க சார் ஜி. சொல்லுங்க...

கிராப்பலஜிட் : [இரண்டு கைகளையும் சினிமா டைரக்டர் போல வைத்துக்கொண்டு தொடர்கிறார் ] கிராப்பாலஜி-னா எல்லாரும் ஏதோ கையெழுத்து வைச்சு சொல்லும் விஷயம்னு நினைச்சுக்கராங்க. இது அப்படி இல்லை... என்னோட பல வருஷ ஆய்வுகளில் சோறு தண்ணி இல்லாமால் கண்டுபிடிச்ச முறைதான் இந்த கிராப்பாலஜி.. ஒருத்தரோட தலைமுடி எப்படி இருக்கோ அதை பொருத்துதான் அவரோட வாழ்க்கை அமையும். இது தான் கிராப்பாலஜி...

தொகுப்பாளினி : ஜீ நீங்க உங்க அளவுக்கு அறிவு பூர்வமா பேசரீங்க.. எங்க அளவுக்கு கொஞ்சம் எளிமையா சொல்லுங்களேன்...

கிராப்பலஜிட் : ஒருத்தர் அவர் தலை எழுத்து சரியில்லைனு சொன்னா அவர் தலை எழுத்த மாத்துர மாதிரி அவர் தலைமுடியின் ஸ்டைலை மாத்திட்டா அவர் வாழ்க்கையே மாறிடும். நீங்க கேட்ட மாதிரி எளிமையா சொல்லனும்னா கிராப்பை மாத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் மாபெரும் அறிவியல் தான் கிராப்பாலஜி.

தொகுப்பாளினி : அருமை ஜி, உங்க விளக்கத்தை கேட்டவுடனே எனக்கு புல்லரிக்கிது.. கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்னு நம்ம நேயர்களுக்கு சொல்லுங்க..

கிராப்பலஜிட் : பிரபஞ்சத்திலிருந்து வர கதிர்வீச்சு மனுஷனுக்கு தலைபகுதியில் நுழையுது. அதனால அந்த கதிவீச்சை நம்ம தலைக்குள் லாவகமா போகிறமாதிரி ஹார் ஸ்டிலை மாத்திட்டா நம்ம் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிதான்... உதாரணமா நமக்கு பிறக்கும் போது ஒரு ஹார் ஸ்டைல் இருக்கும். ஸ்கூலுக்கு போகும்போது அம்மா வழிச்சு சீவி விடும்பொழுது சட்டியை கவித்திய மாதிரி இருக்கும்... காலேஜ்க்கு போகும்போது நாய் சிலிப்பிக்கிட்ட மாதிரி மாறும்... இதிலிருந்து என்ன தெரியுது? [பெருமை பொங்க தொகுப்பாளினியை பார்க்கிறார்..]

தொகுப்பாளினி : தெரியலை ஜி. நீங்களே சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : தலை முடியோட அமைப்பு மாற மாற மனித வாழ்க்கையும் மாறுது...

தொகுப்பாளினி : வாவ்... உலத்துக்கு மாபெரும் தகவலை கொடுத்திருக்கீங்க... கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி எல்லோருக்கும் உதவும். எல்லோருக்கும் மண்டை இருக்கு இல்லையா..?

தொகுப்பாளினி : ஒருத்தர் தனது வாழ்க்கையை எப்படி எல்லாம் கிராப்பாலஜி மூலமா மாத்திக்க முடியும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி ரொம்ப எளிமையானது... [தலை கோதியபடியே] உங்களுக்கு சினிமா நடிகராகனுமா... அதுக்கு ஒரு ஹார்ஸ்டைல் இருக்கு..[இருபக்க முடியை சுழித்துவிட்டபடி] விஞ்ஞானி ஆகனுமா அதுக்கொரு ஹார்ஸ்டைல் இருக்கு அதுக்கேத்தமாதிரி மாத்திகனும்...கிரிக்கெட் வீரர் தோணியை எடுத்துக்குங்க... அவர் எதுனால பேமஸ் ஆனார்? அவங்க நோக்கத்திற்கு ஏற்ப அவங்க தலை முடியை மாத்தி கிரகங்களோட கதிர் வீச்சை மாத்திடுவேன்...

தொகுப்பாளினி:கிரக கதிவீச்சை கூட பொருத்துக்கலாம் போல இருக்கு.. ஆனா... ஸ்ப்பபா.... அடுத்த ஷோவிற்கு வரும்போது கோட்டை டிரைக்கிளீனிங் பன்னுங்க.. கிராப்பாலஜி பிரகாரம் அதிக முடி இருந்தா நல்லதா இல்லை குறைவா இருந்தா நல்லதா ?

கிராப்பாலஜிஸ்ட் : அதிக முடி இருந்தா கதிர்வீச்சை நம்ம தலைக்குள் போகவிடாம தடுக்கலாம்... இதை எப்படி சொல்லறீங்கனு கேட்பீங்க கரக்டா?

தொகுப்பாளினி : இல்லை நான் கேட்கவே இல்லையே...

கிராப்பாலஜிஸ்ட் : இல்லை எனக்கு தெரியும் அது தான் கேட்கரீங்க... ஒரு பிரபல நடிகர் என்கிட்ட வந்தார் அவருக்கு தலைமுடியே இல்லை. அவருக்கு விக்கு வைச்சு கிராப்பாலஜி செஞ்சேன். இப்போ அவருக்கு விக்கு தலையில இருக்கு அத்னால அவர் படமெல்லாம் நல்லா விக்குதாம்.

தொகுப்பாளினி : தமிழ் நாட்டு பெண்கள் தங்களோட ஹார்ஸ்டைலை அவ்வளாவா மாத்திகறது இல்லை. அவங்களுக்கு கிராப்பாலஜி வர்க் ஆகுமா?

கிராப்பாலஜிஸ்ட் : தமிழ்நாட்டு பெண்கள் பெரிய அளவில் வராம இருக்கிறதுக்கு காரணமே அவங்க தலை தான்.

தொகுப்பாளினி : ஜி என்ன சொல்லறீங்க?

கிராப்பாலஜிஸ்ட் :
(சுதாரித்து..) தலைமுடியோட அமைப்புதான். கிரன்பேடி எடுத்துக்குங்க. அவங்க பின்பாதி பெயர் பயப்படுவது போல இருந்தாலும்,
அவங்க ஹார்ஸ்டைல் தான் அவங்களை ஒரு புதுமை பெண்ணா காமிச்சுது.

தொகுப்பாளினி : முடியல ஜீ. எப்படி எல்லா கேள்விக்கும் இப்படி ஒரு பதில் சொல்லறீஙக?

கிராப்பாலஜிஸ்ட் : என் தலையை பார்த்தீங்களா? முதலில் என் தலையை நான் மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி வைச்சுக்கிட்டேன். அதனால உலக புகழ்
அடைஞ்சேன்...

தொகுப்பாளினி : உலகப்புகழ்..? (மனதுக்குள்...எனக்கே இவரை தெரியாதே) ஜீ மைக்கேல் ஜாக்சன் மாதிரி உங்க தலையை வைச்சுக்கிட்டா நீங்க
மியூஸிக்ல பெரியாளா வராம ஏன் கிராப்பாலஜிஸ் ஆனிங்க...

கிராப்பாலஜிஸ்ட் : (மனதுக்குள் : குடுத்த காசுக்கு ஓவரா கேள்வி கேட்கறது தப்பாச்சே...) நான் மியூஸிக்ல உலக புகழ் பெற்ற ஆளா வரனும்னு தான் இப்படி என்னோட ஹார்ஸ்டைலை மாத்திக்கிட்டேன்.. நான் பெரிய பாப் சிங்கர் ஆனப்பிறகு இந்த மாபெரும் அறிவியல் உண்மையை மக்களுக்கு சொல்ல முடியாது இல்லையா? அத்தான் கிராப்பாலஜிஸ்ட் ஆயிட்டேன்.(அப்பாடா மூச்சுவிடாம பேசியாச்சு)

தொகுப்பாளினி : ஜீ கடைசி கேள்வி நான் சில சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன்.பலவருஷம் தினமும் எல்லாரு விட்டிலும் நடு ஹாலிலும் ஒப்பாரி வைச்சுருக்கேன். அப்புறம் சான்ஸ் கிடைக்கலை.. என் வாழ்க்கை மீண்டும் முன்னேற என் ஹார்ஸ்டைலை கிராப்பாலஜி பிரகாரம் எப்படி மாத்திகனும் சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : ( மனதுக்குள்.... நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்ன கேள்விங்கிற பேர்ல உனக்கு பலனை கேட்கறியா... இரு உனக்கு இருக்கு). நிச்சயமா சொல்லறேன். உங்க ஹார்ஸ்டைல் தான் உங்க பின்னடைவுக்கு காரணம். வலைபதிவு எழுதும் ஒரு ஸ்வாமி இருக்கார். அவர் பதிவை நான் படிக்கறது உண்டு. நீங்களும் படிக்கறீங்கனு நினைக்கிறேன். அவரோட ஹார்ஸ்டைல் உங்களுக்கு நல்ல இருக்கும். அந்த ஹார்ஸ்டைல் வைச்சுகுங்க அப்பறம் பாருங்க...

திரை மெல்ல இருளுகிறது...

[இது ஒரு பாபா ஹார்லைன்ஸ் பிரசண்டேஷன்]

Sunday, May 10, 2009

கிபி 5503

தனது கதிரியக்க உடையை அணிந்துகொண்டான் இண்டூ என செல்லமாக அழைக்கப்படும் இண்டெலன். தலையில் பறக்கும் கவசத்துடன் தயாராகி வீட்டின் வெளியே வந்தான்.

பேராசிரியரின் வீட்டிற்கு செல்ல முன்பே மனோ தள தகவலை சினேகிதி பார்ப்பிக்கு அனுப்பி இருந்தான். தூரத்தில் சிவப்பு உடையில் தலைபகுதியில் விசிறி பறக்க என்னருகில் வந்தாள் பார்பி.

அவளை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டாள், “ஏன் தாமதம் என கேட்கிறாயா? என்னை பிரதி எடுத்து கொள்ள சென்றேன். இதோ என் பிரதி” என அவளை போலவே மற்றொரு உயிரை காட்டினாள். இவள் எதற்கு என்றேன்.

"வீட்டில் வேலை செய்ய ஆட்கள் தேவை பட்டது அதனால் பிரதி எடுத்தேன்,அது இருக்கட்டும் இண்டூ,பேராசிரியர் கிழத்திற்கு என்ன வந்தது எதற்காக வ்ரச்சொன்னார்?”

"எதோ ரகசிய ஆய்வு செய்திருக்கிறாராம், நம்மிடம் காட்ட விரும்புகிறார். வா செல்லலாம். நேரம் 45 அணுக்களை தாண்டிவிட்டது. இன்னும் தாமதம் வேண்டாம்.”



தனது பிரதியை அனுப்பி விட்டு தயாரானாள் பார்ப்பி. தங்கள் தலை பகுதி விசிறியை இயக்கி இருவரும் பறந்தனர். பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமவெளியாக இருந்தது. வீடுகள் ஈர்ப்பு விசையில்லாமல் அந்தரத்தில் மிதங்கி கொண்டிருந்தது. அதன் குறுக்கே பறந்த பார்பியும், இண்டூவும் பேராசிரியர் வீட்டை அடைந்தனர்.

தங்களை வீட்டின் வாயிலில் இணைத்து கொண்டதும் கதிரியக்க ஆய்வுக்கு பிறகு இருவரையும் வீடு தன்னுள்ளே இழுத்துக்கொண்டது. பேராசிரியர் இருவரையும் வரவேற்று, அரசின் கண்காணிப்பு கருவியை தற்காலிகமாக நிறுத்தினார்.

அவர் உபசரிப்புக்காக வழங்கிய ஆக்சிஜனை முகர்ந்த படியே கேட்டனர், “எங்களை வர சொன்னதன் நோக்கம் என்ன பேராசிரியரே?”

தனது தாடியை சொறிந்தபடியே கூறத்துவங்கினார்.

“பல நூற்றாண்டுக்கு முன்பு மனித இனம் சிலவிதமான கதிரியக்க போரால் அழிந்துவிட்டது. இந்த கிரகம் முழுவதும் அழிக்கப்பட்டு சில எஞ்சிய மனிதர்கள் மூலமே மனித இனம் தழைத்து வருகிறது.இந்த கிரகத்தின் நிலப்பரப்பு தனது முழு சக்தியை இழந்து வெறும் நிலமாக காட்டி அளிக்கிறது. ஈர்ப்புவிசைக்கு எதிராக பழகிய நாம், நிலத்தை தோண்டி பார்க்க அரசு அனுமதிப்பதில்லை. அதையும் மீறி ஒரு நாள் நிலத்தை தோண்டி பல நூற்றாண்டுக்கு முன் மனித இனம் பயன்படுத்திய ஒரு கருவியை எடுத்துவந்தேன். அதில் ஆச்சிரியப்படும் சில செய்திகள் பார்த்தேன். இதோ பாருங்கள்”

அங்கே சதுர வடிவில் ஒரு கருப்பு நிற பொருள் இருந்தது. இரு மடிப்பாக இருந்த அந்த பொருளை திறந்து விசையை அழுத்தினார் பேராசிரியர்.

"windows Xp" என ஒளியை உமிழ்ந்தது...

சில அனுத்துகள் நேரத்திற்கு பிறகு தன் ஒளி பகுதியில் காட்சி மாறியது.

“பார்த்தீர்களா எப்படி வேலைசெய்கிறது- இன்னும் இதற்கு உயிர் இருக்கிறது” என்றார் பேராசிரியர்.

"ஐயா அது என்ன மூலையில் ஏதோ எண்வடிவில் தெரிகிறதே?” என்றான் இண்டூ.


“நமது முன்னோர்களின் கடிகாரம். அதில் 1980 முதல் 2999 வரை எண்கள் இருக்கிறது. ”


"அதற்கு பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது?”


"தெரியவில்லை. ஒருவேலை அவர்கள் வேறுகிரகத்திற்கு பயணித்திருக்கலாம்”


"இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்” என்றாள் பார்ப்பி.


“இதில் பல தகவல்கள் உண்டு. அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இதில் அறிந்து கொள்ள முடியும். இதை பயன்படுத்தியவர்
தனது நண்பருக்கு சில தகவலை பரிமாறி இருக்கிறார். அதில் வரும் சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் காண முடியவில்லை ஆனால் அகராதியில் தேடிவருகிறேன்.”

"அது என்ன வார்த்தைகள் பேராசிரியரே?”

"மாப்ளே, சும்மா,சினிமா, சாப்பிடுதல் என்ற பல வார்த்தைகள் நடைமுறையில் இல்லை. அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என
நினைக்கிறேன். அதனால் தான் கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கிறார்”

“இதற்கும் எங்களை வர சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ஆசிரியரே?”

“இண்டூ, இந்த கருவியின் ஓரத்தை கவனித்தாயா? உனது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன் இது ஆலயத்தில் வழிபட்ட
கருவியாக இருக்கலாம். இல்லையென்றால் நம் கடவுள் இண்டல் பெயர் இதில் இருக்குமா? மேலும் இந்த கருவியின் தகவல் களஞ்சியத்தில் பார்ப்பி என்று தேடினால் ஒரு பெண் உருவின் தகவல் வருகிறது. நிச்சயம் அது ஒரு வகுப்பினரால் வணங்கப்பட்ட பெண் தெய்வமாக இருக்கலாம்”

”பேராசிரியரே, தயவு செய்து உங்கள் ஆய்வுகளை நிறுத்துங்கள். நமது மின்னனுக்கடவுள் இண்டல் பல நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது”

“உங்களுக்கு எனது ஆய்வு வேடிக்கையாக இருக்கலாம். உண்மையில் அவரிகளிடம் ஒரு சிறிய தகடு இருந்திருக்கிறது. அதை கையில் வைத்துக்கொண்டால் அஷ்டமா சித்தி கிடைக்குமாம்”

“அஷ்டமா சித்தி என்றால்?” என்றனர் கோரசாக.

”தொலைதூரத்தில் இருக்கும் நபரிடம் பேசுதல், அவரின் பிரதியை காணுதல், ஒலி மற்றும் ஒளியை ஏற்படுத்துதல், தகவல்களை பரிமாறுதல், அசைவு படம் எடுத்தல் என பல சித்திகள்.”

“பேராசிரியரே, இது சாத்தியமா? ஏன் வீண் காலவிரயம்? “

”நீங்கள் நம்பவில்லை என்றால் போங்கள் இந்த தகடை வைத்து நான் அஷ்டமா சித்தியை பெருகிறேன்.”

பேராசிரியர் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மொபைல் சிம் கார்ட்டை பிளாஸ்டிக் பூக்களையும், டார்ச்சு லைட்டையும் வைத்து பூஜிக்க துவங்கினார்.

டிஸ்கி : தற்காலத்தில் மந்திர, யந்திரங்களை பயன்படுத்தும் முறையையும் - மாயன் கலாச்சாரம் பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் காட்டுரையையும் படித்ததால் உருவான சிறுகதை.

Friday, April 17, 2009

உலகின் ”யோக”மான வியாபாரம்

தொழில் செய்ய தனம் தேவை. உலகில் தொழில் செய்ய இருவகையான தனம் தேவை. சிலருக்கு தொழில் செய்ய மூலதனம் தேவை, சிலருக்கு மூளைத்தனம் தேவை. இந்த இரு நிலைகள் தாண்டி பிறரை ஏமாற்றும் நிலை எனும் நயவஞ்சகத்தனம் என்பதும் உண்டு. நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.

ஏதோ தொழில் புரட்சி பற்றி சொல்ல போகிறேன் என நினைக்கவேண்டாம். பொருளாதரம் எனும் தலைப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியேல்லம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.

யோகா (yoga) எனும் வார்த்தை தற்சமயம் மிகவும் குழப்பமாகவே பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் இந்த வார்த்தையை தேடிப்பாருங்கள். 90,900,000 எண்ணிக்கையில் தளங்களை காட்டுகிறது.



“யோகா செய்யப் போகிறேன்”, “யோக பயிற்சி கற்றுத் தருகிறார்கள்” என நாம் கூறும் ”யோகா” எனும் வாசகம் கூறும் பொருளும் , நாம் மனதில் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என அர்த்தம். யோக சாஸ்திரம் மதம், கலாச்சாரம் கடந்த ஒரு மெய்ஞானம். ஒன்றிணைதல் என்றால் இரு விஷயங்கள் ஒன்று சேருதல் என கொண்டால் பரமாத்மாவுடன், ஜீவாத்மாவா என ஆத்திகர் நினைக்கலாம். மனமும் உடலும் என நாத்திகர் நினைக்கலாம். யோக சாஸ்திரம் முழுவதும் கடவுள் என்ற கோட்பாடு இல்லை. நீ, உனது, உன் உள்நிலை என மூன்று தன்மையை பற்றியே யோகசாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் யோக நூல் கடவுள் கொள்கையை கொண்டிருந்தாலும், இன்ன கடவுள் இன்ன உருவ நிலை என சொல்லாமல். இறைவன் எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறது.

யாமம்,நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. என யோக சாஸ்திரத்தில் எட்டு நிலைகள் இருக்கிறது. இதில் எட்டாவது நிலையை நீ அடைந்தால் இறைவனை காணலாம் என்றே பதஞ்சலி கூறுகிறார்.

உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது. சில யோக பயிற்சி பள்ளிகள் வெறும் ப்ராணாயமத்தையோ, ஆசனத்தையோ சொல்லி கொடுத்துவிட்டு அதை யோகா என பிரச்சாரம் செய்கிறார்கள்.

யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது.

பாரத தேசத்தில் யோகாவின் பரிதாப நிலை :

நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)



ஒரு சினிமா நடிகையையோ அல்லது நடிகரையோ ”திடீர்” யோக பயிற்சி ஆசிரியர் ஆக்கி அவர்களை கொண்டு பிறருக்கு யோகம் போதிக்கிறார்கள். யோக பயிற்சி ஆசிரியர் ஆவது என்பது சாதாரண காரியம் அல்ல. பள்ளி ஆசிரியர் என்றால் அவர் மாணவனின் அறிவு எனும் தளத்தில் செயல்படுபவர். இவர் இல்லை என்றால் இன்னொருவரிடம் அறிவு பெறலாம். யோக ஆசிரியர் என்பவர் மாணவனின் ஆன்மா எனும் தளத்தில் வேலைசெய்பவர். ஒரு முறை தவறு நிகழ்தால் அந்த ஆன்மாவை பிறகு விழிக்க செய்வது சிரமம்.

சினிமாக்காரர்கள் யோகா சொல்லி கொடுக்க கூடாதா? அதை எதிர்க்கவேண்டும் என் சொல்லவில்லை. எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் குறைந்த பட்சம் 5 முதல் 6 வருட பயிற்சி மூலமே யோகாவை ஆசிரியர் பயிற்சியாக கற்று ஆசிரியர் ஆக முடியும். கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா?

சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் வந்த துணுக்கு, ஒரு நடிகையின் பெயர் ஒரு யோக பயிற்சி பள்ளியின் பெயரை போல இருக்கிறது என்பதால் அவரை யோக ஆசிரியர் ஆக்கிவிட்டார்களாம். இது எவ்வளவு கீழ்தரமான செயல் ? அந்த நடிகையின் பெயர் எனது மனைவியின் பெயரை போல இருந்தால் அவரை மணந்து கொள்ளலாமா? இது எப்படி கீழ்தரமான யோசனையோ அது போலவே அவரை யோக ஆசிரியர் ஆக்குவதும்.

கவர்ச்சியான உடையை உடுத்தி நடத்த அந்த நடிகை ஒரு வாலிபன் முன் வந்து நின்று யோக பயிற்சியை துவங்கினால், அந்த வாலிபனுக்கு மனதில் என்ன தோன்றும் ? யோகபயிற்சி செய்ய எதற்கு இத்தகைய கீழ்தரமான விளம்பர யுக்தி?

எனக்கு தெரிந்த ஒரு மாபெரும் மார்டன் “குரு” தனது ஆசிரமத்தை துவக்கும் பொழுது ஆசனம் செய்வது ஒரு வீண் வேலை. எனது தியான பயிற்சியே போதும் என பிரசாரம் செய்தார். நாளடைவில் அதில் இருக்கும் வியாபர நோக்கம் தெரிந்ததும் தனது பெயரில் ஆசனங்களை அமைத்து பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டார். அவரை சந்திக்கும் பொழுது இதைக் கேட்டேன். உடனே அவர் சொன்னார் “மக்கள் கேட்கிறார்களே”.

இதை கூட பொருத்துக்கொள்ளலாம், சிலர் யோக ஆசனங்களையும் யோக முறைகளையும் தாங்களே கண்டுபிடித்ததாக சொல்லுகிறார்கள். ஸ்வாத ராம என்பவர் கொடுத்த ஹதயோக பரதீபிக்கா எனும் நூல் யோக ஆசனங்களின் என்சைக்ளோபிடியா. இதற்கு மேல் புதிதாக எழுத ஸ்வாத ராம ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. இவர்கள் இந்த நூல்களை வாசித்தார்களா என்றே சந்தேகம், இல்லையென்றால் நான் கண்டுபிடித்தேன் என சொல்லுவார்களா?

குண்டலினியும் குருட்டுவித்தையும் :

எந்த யோக பயிற்சிக்கு சென்றாலும் அங்கே ஏழு புள்ளி கோலம் வரைந்திருப்பார்கள். அது என்ன ஏழு புள்ளி கோலம் என்றால் அதன் பெயர் குண்டலினி.



ஏழு ஆதாரசக்கரங்கள் உண்டு அதில் ஒரு பாம்பு இருக்கிறது என சொல்லி ஒரு மனிதனை இப்படித்தான் குழப்பவேண்டும் என்பதில்லை அளவு கடந்து குழப்பி விடுகிறார்கள். குண்டலினி உண்டா இல்லையா என்ற தலைப்புக்கு நான் வரவில்லை. (அதை தனிபதிவாக இடுகிறேன்)

மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.

குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.

இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.

எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை.

அவர்களுக்கு நேரும் சுகதுக்கங்களை குரு எப்படி மேம்படுத்த முடியும்?

மேலை நாடுகளில் யோக சாஸ்திரம் :

விவேகானந்தர் காலத்திற்கு பிறகு மேலை நாட்டில் நமது யோக சாஸ்திரம் மிகவும் பிரபலமானது. விவேகானந்தர் யோகபயிற்சி செய்பவர் அல்ல, அவர் காலத்திற்கு பிறகு பலர் இந்தியாவிற்கு வந்தும், சில இந்திய குருமார்கள் மேலைநாட்டிற்கு சென்றும் யோக பயிற்சியை மேம்படுத்தினர்.

நாளடைவில் யோகபயிற்சி என்பது ஒருவித பேஷனாக மாறிவிட்டது. தற்காலத்தில் யோகபயிற்சியை இப்படித்தான் அசிங்கபடுத்த முடியும் என இல்லாமல் அவர்கள் அசிங்கபடுத்தி வருகிறார்கள்.



யோகா எடுக்கும் இடம் பெயர் ஸ்டுடியோ, உடையின் பெயர் யோகா சூட் என அங்கே யோகா தடம் பாமாறி சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. அமெரிக்காவில் ஒரு படி மேலே சென்று யோக முறைக்கு காப்பிரைட் வாங்கிவிட்டார்கள். இனி நானோ நீங்களோ பயிற்சி செய்தால் அமெரிக்க யோகத்தைதான் செய்தோம் என சொல்ல வேண்டும்.

Power Yoga, Simple Yoga, Brain Yoga, Dynamic Yoga, Wellness Yoga, Beach Yoga என புது புது பெயரிகளில் மக்களை ஏமாற்ற துவங்கிவிட்டார்கள். இதன் உச்ச கட்டம் nude yoga, நிர்வாணமாக யோகா செய்தால் மஹாநிர்வாணம் கிடைக்குமாம். இந்த யோகா ஸ்டுடியோவில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. இரு ஆண்கள் இணைந்து தான் யோகா செய்ய வேண்டுமாம். என்ன கொடுமை இது?

இவர்கள் பாலியல் இச்சைக்கான வடிகாலாக ஏன் யோக பயிற்சியை கொண்டு வரவேண்டும்?

நம்மை காட்டிலும் இவர்களுக்கு குண்டலினி என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது நீங்கள் இந்த சக்கரத்திற்காக இன்ன ஆசனம் செய்கிறீர்கள் என சொல்ல அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஒரு அமெரிக்கர் என்னுடம் ஆசனம் கற்க வந்தார். கற்று முடித்ததும் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? “In your yoga teaching there is no spicy things"

குண்டலினி, தந்த்ரா என சொல்லியிருந்தால் அவருக்கு தேவையான மசாலா கிடைத்திருக்கும், அதை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு நூறு டாலர் என அவரும் ஒரு ஸ்டுடியோ திறந்திருக்கலாம். என்ன செய்ய? அவர் அனுகிய யோகப்பயிற்சியாளர் அப்படி.

அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.

வாருங்கள்.....நாமும் கேப்பையில் நெய் வடியச் செய்வோம்...!

Sunday, February 15, 2009

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா

நமது பாரத கலாச்சாரம் தொன்மையானது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் உலகின் மூன்றாம் நிலையில் அதிகமாக பின்பற்றப்படும் கலாச்சாரம் நம்முடையது. மேற்கத்திய நாடுகள் அறிவியல் பூர்வமான விஷயங்களில முன்னோடியாக இருந்தாலும் , குடும்ப அமைப்புகள் உணர்வு பூர்வமான பாசங்கள் போன்றவற்றில் நம்மை விட பின் தங்கியே இருக்கிறார்கள்.

மேல் நாட்டிநாட்டினர் நம் நாட்டிற்கு வரும் பொழுது ( குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) அவர்கள் ஓர் முன்நிர்ணயம்(Predefined Mind set) செய்த மனோநிலையில் வருகிறார்கள். எதை முன்னால் முடிவுசெய்கிறார்கள் என பார்த்தால் , பாரத தேசத்தவர்கள் எந்தவிதமான கலாச்சாரமும் நாகரீகமும் அற்றவர்கள் என்பது தான்.அவர்களை பொருத்தவரை நம் மக்கள் மருத்துவம் இல்லாமல், சுகாதாரம் இல்லாமல் இருக்கிறோமாம். ஒரே வார்த்தையில் சொல்லுவதேன்றால் காட்டுமிரண்டிகள் என சொல்லலாம். மிகையாக நான் சொல்லுவதாக உங்களுக்கு படலாம்.

ஐரோப்பியர்கள் நமது நாட்டை ஆளும் காலத்தில் அவர்களின் மனோபாவத்தால் நிறைய விஷயங்கள் நம் கலாச்சாரத்தில் புகுத்தப்பட்டது. அதே சமயம் அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்த இந்தியாவை உலகிற்கு காட்டி,இது தான் இந்த பாம்பாட்டிகளும் - சாமியார்களும் கொண்ட காட்டுமிராண்டி தேசம் என சொன்னார்கள்.

நம் நாட்டவர்களோ அவர்களின் நிறத்தாலும், அடக்கு முறை ஆற்றலாலும் பயந்த நாம் அவர்களை “துரை” என அழைத்து அவர்கள்
உயர்ந்தவர்கள் என்று அவர்களை போற்றி புகழ்ந்தோம்.சிந்து நதிக்கரையிலிருந்து தென்பகுதியை தேசமாக கொண்டதால், இந்தியா என வெளிநாட்டினர் தான் நமது தேசத்திற்கு பெயரையும் வைத்தார்கள். சிந்தியா என்று தானே வைக்கவேண்டும் என நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு "Si" என்ற உச்சரிப்பு "ze" என்று தான் வரும். சுகந்திரத்திற்கு முன் இருக்கும் பிரிட்டீஷ் காலனி ஆதிக்க பத்திரங்கள், அரசு ஆவணங்களில் "zenthu" என்றே இந்தியனை அவர்கள் அழைத்தார்கள்.

அதனால் தான் நம் நாட்டை பாரதம் எனும் சொல்லில் அழைக்கிறேன். காரணம் வெளிநாட்டினர் வைத்ததாற்காக அல்ல, பாரதி நம் தேசத்தை பாரதம் என்றே அழைத்தான். அது தான் நம் நாட்டின் உண்மையான பெயரும் கூட.

முதல் குழந்தை பிறந்ததும் முதலைக்கோ, கொடிய மிருகங்களுக்கோ கொடுத்துவிடுவார்கள். அந்த நாடு முழுவதும் பாம்பாட்டிகளும் சாமியார்களும் நிறைந்து இருப்பார்கள் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மை பற்றி மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவேகானந்தர் அமெரிக்காவிற்கு பயணமாகும் பொழுது இந்தியாவை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைத்தார்கள் என்பது மேற்கண்ட தகவல்களுக்கு ஓர் சான்று. இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார்த்தால் பாம்பாடிகளை வைத்து வேடிக்கை காட்டுவார்கள். இது எல்லாம் எதற்கு என கேட்டால்... நாம் இந்தியர்கள் என நிரூபிக்க வேண்டாமா? சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா வந்த உணர்வு ஏற்படுத்த வேண்டாமா என கூறுவார்கள். விவேகானந்தர் சிகாக்கோவுக்கு பயணமாகி ஒரு நூற்றாண்டு முடிந்த நிலையிலும் இந்த நிலையே நீடிக்கிறது.

ஹைஜீனிக் (hygienic) எனும் விஷயம் நாம் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டுமாம். இதை பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சாமியார்களும் பாம்பாட்டிகளும் என்றாவது குளித்தார்களா? துய்மை என்பதே அவர்களுக்கு கிடையாதே. அதனால் அதான் நாம் மேலை நாட்டினரிடத்திலிந்து துய்மையாக இருப்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹைஜீனிக் என்றவுடன் எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வரும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த சமயம் ஓர் அரசு முறை விருந்தில் கலந்து கொண்டார். அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டதும், ஸ்பூனை பயன்படுத்தாமல் கையால் உணவை சாப்பிட ஆரம்பித்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த மேலைநாட்டுக்காரர் ஒருவர் , ஜனாதிபதியை நெருங்கி “ ஐயா, கரண்டியை பயன்படுத்தாமல் கையால் சாப்பிடுவது சுகாதரமானது அல்ல” என கூறி நீண்ட உரையாற்றினார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட திரு ராதகிருஷ்ணன் அவர்கள், “ஐயா, நீங்கள் கையில் வைத்திருக்கும் கரண்டியில் எத்தனையோ நபர்கள் உணவு அருந்தி இருப்பார்கள். எனது கையில் நான் மட்டும் தான் உணவருந்துவேன். கையில் உண்பதே சுகாதாரமானது” என்றார்.

இன்றைய உலகில் நாகரீகம் என்ற பெயரிலும் சுகாதாரம் என்ற பெயரிலும் எத்தனையோ கோமாளித்தனங்கள் நடக்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஐரோப்பிய ம்னோபாவம் தான் இத்தனைக்கும் காரணம். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் நம்மை ஆண்டதால் நமக்கும் உண்டு. நைஜீரியா மற்றும் உகாண்டாவை பற்றி உங்கள் நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். மக்கள் எலும்பும் தோலுமாக பட்டினியால் சாகிறார்கள் என்பதே அவர்கள் பதிலாக இருக்கும். உண்மையில் உகாண்டாவில் பணக்காரர்களும் இருக்கிறார்கள், தனது கழிவறையை தங்கத்தால் அலங்கரித்தவர்கள் அங்கே அதிகம். ஆனால் செய்தி ஊடகங்களும் மேலைநாட்டு மேதாவிகளும் துயரத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள். தற்சமயம் உகாண்டாவின் அரசர் முடுசூட்டப்படும் பொழுது எடுத்த படம் உங்களுக்காக



எப்படி ஏழ்மையாக எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் என சொல்லப்படும் நிலையில் ஆப்பிரிக்கா சித்தரிக்கப்படுவதை போல பாரதமும் சித்தரிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் சதம்
அடித்தாலும், சந்திராயன் அனுப்பினாலும் அவர்களுக்கு சென்றடையாது. ஆனால் சாமியார் ஒருவர் லிங்கம் எடுத்தால் தென் அமெரிக்காவின் முனையில் இருப்பவருக்கு சென்றடையும் மர்மம் இது தான்.

சினிமாவில் கலாச்சாரம் சீரழிவு என சொல்லிவிட்டு ஐரோப்பிய மனோபாவத்தை சாடுகிறீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. செய்தி ஊடகங்களும் சில மேதாவிகளும் பல நூற்றாண்டுகளாக செய்து வந்த மாபெரும் செம்பணியை தற்காலத்தில் சினிமா எனும் ஒரே ஊடகம் திறம்பட செய்கிறது.

என்னிடம் சாஸ்திரம் கற்க பல மேலை நாட்டுக்காரர்கள் வருவதுண்டு. அவர்கள் வரும் பொழுது கூறுவது, ”நான் நினைத்த இந்தியா ஒன்று. இங்கே இருப்பது ஒன்று.” அவர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்கள் எப்படி ஆடை உடுத்த வேண்டும், இங்கு உள்ள உணவு முறை, தட்பவெப்பம் எப்படி இருக்கும் என கூறிவிடுவேன். பிரச்சனை உடை விஷயத்தில் தான் ஆரம்பிக்கும். குறிப்பாக மேலை நாட்டு பெண்கள் இந்திய திரைப்பட நடிகையின் படத்தை காண்பித்து , இந்திய பெண்கள் இவ்வாறு உடை அணியும் பொழுது நாங்கள் அணியும் உடை மேன்மையானதாகவே இருக்கும் என்பார்கள். அதன் பிறகு இங்கு வந்து நம் பெண்களை பார்த்து உடை மாற்றி புடவை கட்டி அழகு பார்ப்பார்கள் என்பது வேறு விஷயம்.


இந்தியாவை தெரிந்து கொள்ள அவர்கள் நம் சினிமாவையும்,
தொலைகாட்சியையும் நாடுகிறாரர்கள் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும்.

சினிமா என்பது கலாச்சாரத்தின் ஓர் பிம்பம் என மறந்து தங்கள் மனம் போன போக்கில் இவர்கள் சினிமா எடுப்பதால் பாரதம் என்பது வேறு வகையான தன்மையில் வரலாற்றில் பதிவாகிறது. 50 வருடம் கழித்து இந்தியர்களின் மனநிலை 2008ல் எப்படி இருந்தது என ஆய்வு மேற்கொண்டால் ஆவணமாக இருப்பது தற்சமய சினிமா எனும் ஊடகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் எப்படி இருந்தார்கள் என இலக்கியத்தை பார்த்து
தானே தெரிந்து கொள்கிறோம்? புலியை அடித்து விரட்டிய பெண்யை பற்றி யுவான்சுவாங்கின் நூல் குறிப்பிலா தெரிந்துகொள்கிறோம் ? அது போல பெண்கள், சமூதாய உறவுகள்,ஆன்மீகம் என அனைத்தும் சினிமாவில் ஒன்றும் நடைமுறையில் ஒன்றுமாக இருக்கிறது. சில காலத்திற்கு பிறகு பாரதம் இப்படித்தான் இருந்தது என வரலாறு சொல்ல இவர்கள் துணைபோகிறார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையும் சினிமாவில் வந்த கட்டபொம்மனின் வாழ்க்கையும் வேறு வேறானது என எத்தனை சராசரி தமிழனுக்கு தெரியும்?

சினிமாவில் காண்பிக்கப்படும் சில அபத்தங்களை இங்கே பட்டியலிட வேண்டி இருக்கிறது. இதன் மூலம் சினிமாவின் தவறான கலாச்சார ஊடுருவலை உணர முடியும்.

பாசிச மன நிலை : காதல் படங்களை எடுக்கும் பொழுது மத ரீதியான பாஸிச கொள்கை கொண்டு எடுக்கப்படுகிறது. பாரத கலாச்சாரம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதல் மணம் புரிவது போல் எடுக்கும் படங்களில் சில அபத்தங்கள் உண்டு. இது போன்ற படங்களில் அதிகபட்சம் பெண் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக காட்டப்படும். உதாரணம் அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள் துவங்கி காதலுக்கு மரியாதை வரை பெரிய பட்டியலே உண்டு.

கிருஸ்துவ பெண் என்பதால் வேறு மதத்தவருடன் எளிதில் பழகுவா
ள் என காண்பிப்பது எவ்வளவு கொடுமையானது. பாரதத்தில் எந்த மதத்தில் பிறந்தாலும் பெண் அவளுக்கே உண்டான குணத்தில் இருக்கிறாள் என்பதே உண்மை. கிருஸ்துவை கும்பிட்டாலும், கிருஷ்ணனை கும்பிட்டாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை பாரத தேசத்திற்க்கே உரிய பண்பாடு நிறைந்தது என ஏன் மறந்து விடுகிறார்கள்? உங்களுக்கு விளக்க வேண்டியதற்காக தமிழ் படங்களை பட்டியலிட்டுள்ளேன், அனைத்து மொழி இந்திய படங்களில் இது போல நிறைய உண்டு.

சமூதாயத்தை தவறாக சித்தரிப்பது : திருநெல்வேலி என்றவுடன் வீச்சரிவாளை காண்பிப்பது. மதுரை என்றவுடன் அடிதடி செய்வது என காண்பிப்பது ஒட்டு மொத்த மக்களையும் அசிங்கப்படுத்தவதாக இருக்கிறது. இவர்கள் சினிமாவில் காட்டுவதை பார்த்தால், திருநெல்வேலி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகள் கூட மினி அருவாளுடன் பிறக்கும் என நினைக்க தோன்றுகிறது.

சென்னையை விட்டு தாண்டாத உங்கள் சாப்ட்வேர் நண்பரிடம் திருநெல்வேலி
பற்றி கேட்டுப்பாருங்கள், அவர்கள் சினிமாவிலிருந்து எடுத்த தகவலைத் தான் பகிர்ந்து கொள்ளுவார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இதுதான் நிலை. இங்கே திருநெல்வேலி என்றால் அங்கே பீகார் அல்லது சம்பல் பள்ளத்தாக்கு.

ஆன்மீகம் : சினிமாவில் அதிகம் சீரழிவது ஆன்மீகம் தான். தாங்கள் ஆன்மீகத்தை காண்பிக்கிறோம் என அவர்கள் செய்யும் அவமானங்கள் எல்லை இல்லாதது. ஆன்மீகம் என்றவுடன் மத ரீதியான சாயம் பூசுவது இவர்கள் செய்யும் சேட்டையின் முதல் படி.

கஷ்டம் வரும்பொழுது அம்மன் கோவில் வாசலில் நின்று கதறி
அழும் பொழுது மணி காற்றில் ஆட .... புயல் அடிக்க...அங்கு அம்மன் வந்து கஷ்டத்தை நிவிர்த்தி செய்வதாக காண்பிக்கப்படுவது உச்சக்கட்டம். இப்படி நடப்பது உண்மை என்றால் ஒவ்வொரு கோவிலிலும் இண்டஸ்ட்ரியல் விசிறி வாங்கி வைத்து தினமும் புயலை கிளப்ப வேண்டி வரும். பனங்காட்டு அம்மனோ, பாளையத்து அம்மனோ ஏதோ ஒரு படம், அதில் ஓரு காட்சி. அம்மனாக வரும் அந்த நடிகை அடுத்த காட்சியில் குறைந்த ஆடையுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். வில்லனாக வரும் கதாப்பத்திரத்தை அம்மன் மயக்குகிறாளாம். என்ன கொடுமை இது? இந்தியாவின் ஆன்மீக படங்களை சப்டைட்டிலுடன் பார்க்கும் வெளிநாட்டுக்காரர்கள் என்ன நினைப்பான்?

இதெல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் எனது யோக வகுப்பில் சேர ஒருவர் வந்தார். எது போல யோக பயிற்சி எடுக்கிறீர்கள் என கேட்டார். விளக்கினே. திடீரென தனது கைவிரலை மடக்கி இது போல யோகா சொல்லி தருவீர்களா என கேட்டார். பள்ளி நாட்களில் “டூ” விட்ட நண்பரிடம் “பழம்” என காண்பிப்பது போல இருந்தது அந்த செய்கை. பின்புதான் தெரிந்தது ஒரு சினிமா நடிகர் சினிமாவில் யோகாவை அப்படி அசிங்கப்படுத்தினார் என்பது.அப்படி எல்லாம் யோகா கிடையாது என எவ்வளவு விளக்கினாலும் , வந்த நபர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

தற்சமயம் அகோரிகளை அசிங்கப்படுத்தி ஓர் சினிமா. அனைவருக்கும் அகோரிகள் என்பவர்கள் யார் என தவறாக பதிவு செய்வதில் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறது. கபாலிகர்கள் எனும் ஆன்மீகவாதிகளின் வழி வந்த அகோரிகள் மிகவும் தூய்மையானவர்கள், மாமிசம் உண்ணமாட்டார்கள், கஞ்சா குடிக்க மாட்டார்கள் என நான் சொன்னால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு இந்த பக்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள்.

நாகாசன்யாசிகள் எனும்
பரம்பரை அகோரிகள் எனும் பிரிவை கொண்டது. பல நாட்கள் உணவு உண்ணாமல், எங்கே சென்றாலும் கால் நடையாகவே செல்லும் ஓரு வகை சன்யாசிகள் அகோரிகள். பெரும் ஞானம் கொண்ட இவர்களை புரிந்து கொள்வது கடினம். இவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்ததால் எனக்கு இவர்களின் செயல் ஓரளவு தெரியும் இவர்களை பற்றி விரிவான பதிவே போடலாம் (நீங்கள் விரும்பினால் வெளியிடுகிறேன்). ஆனால் சினிமா இவர்களை நரமாமிசம் தின்பவர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாக காட்டுவது மிகப்பெரிய கலாச்சார அதிர்வை உண்டு பண்ணுகிறது.

ஐரோப்பியர்கள் இன்று கூட காசியில் மனிதன் மனிதனை தின்பதாக படங்கள் வெளியிடுகிறார்கள். சில வீடியோ வலைதளத்தில் அகோரிகள் என தேடினீர்கள் என்றால், நர மாமிசம் தின்பவனைதான் காட்டுகிறார்கள். தமிழகத்தில் ஏதோ ஒருவர் சினிமா எடுப்பதால் எப்படி உலக மக்கள் அனைவரும் தவறாக புரிந்து கொள்வார்கள் என நீங்கள் வாதம் செய்யலாம். இணைய தளத்தின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் "அகோரி" என கொடுத்து தேடினால் என்னவருகிறது என கீழே கொடுத்திருகிறேன்.


(படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கவும்)

எதிர்காலத்தில் ஒருவர் அகோரிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த திரைப்படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் காரணம் தகவல் களஞ்சியமே சிபாரிசு செய்துவிட்டதே...!

எத்தனையோ விஷயங்கள் இப்படி நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை நெருப்பில் ஒருவர் கருகி சாவதை கைகொட்டி சிரிப்பதை போல கலாச்சாரம் நெருப்பில் அழியும் பொழுது நாம் சினிமா அரங்குகளில் கைகொட்டி ரசிக்கிறோம். ஒரு நாட்டிற்காகவோ, மதத்திற்கவோ சார்பாக நான் இங்கே பேசவில்லை.

உண்மை தவறாக பதிவு செய்யும் பொழுது அதை சுட்டிக்காடுவதை கடமை என நினைத்து கூறுகிறேன். என்னை பொருத்தவரை உலக ஜீவராசிகள் அனைவரும் என்னில் ஒருபகுதியாகவே பார்க்கிறேன். ஆனால் எனது உடலின் உறுப்பு ஒன்று சீழ் பிடித்து புண்ணாக இருக்கும் நிலையில் பிறரிடம் காட்டி ஆறுதல் தேடும் முயற்சிதான் இது. ஒரு சில நல்ல படங்கள் வெளிவரலாம் , ஆனால் பெருவாரியான படங்கள் இவ்வாறு இருந்தால் நல்ல படங்கள் இதன் முன் மறைந்து விடும். நல்ல படங்களை மட்டுமே சினிமாவாக பதியவேண்டும் என சொல்ல முடியாது.



எனது வேண்டுகோள் எல்லாம் இதுதான்.

உண்மைக்கு புறம்பானவற்றை சினிமாவாக எடுக்காதீகள். சாகசம் செய்யும் இருசக்கர வாகன விளம்பரங்களில் வரும் எச்சரிக்கை செய்தியை போல, திரைபடம் துவங்கும் முன் இதில் வரும் பாத்திரங்கள் சினிமாவுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறுங்கள்.

உங்கள் குறுகிய மனப்பான்மையை சினிமாவாக எடுத்தால்
வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சமூகத்தில் அம்பலமாக்காதீர்கள். சமூக ஆர்வலர் சிலரிடம் கருத்துக்கள் கேட்டு சினிமாவை எடுங்கள் அல்லது காண்பித்தபின் வெளியிடுங்கள்.

எதிர்காலத்தில் இயக்குனார்களாகவோ, திரைப்பட தயாரிப்பாளராகவோ, கதையாசிரியர்களாகவோ வரக்கூடிய ஏனையோர் இந்த பதிவை படிக்கலாம். அதில் யாரேனும் எனது கருத்தை புரிந்து கொள்வீர்கள் எனும் நோக்கத்தில் இக்கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். நீண்ட கட்டுரையை படித்த உங்களுக்கு நன்றி

சத்தியமேவ ஜெயதே..!


டிஸ்கி : பல பக்கங்கள் எழுதிய இப்பதிவு சில காரணங்களால் சுருக்கி வெளியிடுகிறேன். எனது கோபங்கள்,ஆற்றாமைகள் மற்றும் புலம்பல்கள் மூன்றில் ஒருபகுதியாக குறைக்கப்பட்டு இந்த பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது