Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label யோகிகள். Show all posts
Showing posts with label யோகிகள். Show all posts

Sunday, February 26, 2017

சிவனின் கண்ணீர்..!


சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்கும் நோக்கத்தில் ஒருத்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்.

புதிய இளைஞர் வந்திருந்தார். முதல் சந்திப்பிற்கு உண்டான பணிவுடன் வணக்கம் சொல்லி அமர்ந்தார். என்ன விஷயமாக சந்திக்க வந்தார் எனக்கேட்டேன்.

இனி எங்களுக்குள் நடந்த கலந்துரையாடல் இங்கே...

 “ஸ்வாமிஜி, எனக்கு ருத்ராக்‌ஷ மாலை வேண்டும். இங்கே கிடைக்கும் என என் நண்பர் சொன்னார்.”

“ஓ அப்படியா? கண்டிப்பாக வாங்கிக்கலாம். அதுக்கு முன்னாடி ஏன் ருத்ராக்‌ஷ மாலை வாங்கறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் சிவ பக்தன் ஸ்வாமி, சிவராத்திரி அன்னைக்கு பூஜை செஞ்சு போட்டுக்கலாம்னு வாங்க வந்தேன்”

”ரொம்ப நல்லது. கையில என்ன வச்சிருக்கீங்க?”

“இதுவா? ஐபோன் ஸ்வாமிஜி”

“நீங்க ஸ்டீவ்ஜாப் பக்தரா?...இதை எதுக்கு வச்சிருக்கீங்க?”

“என்ன ஸ்வாமி இப்படி கேக்கறீங்க?.. இது பேசரதுக்கு”

“நீங்க புரிஞ்சுக்க்கணும்னு தான் இப்படி கேட்டேன். சிவ பக்தரா மட்டும் இருந்தா போதுமா? ருத்ராக்‌ஷம் எதுக்கு பயன்படுது?”

சிறிது யோசனைக்கு பிறகு....

“அதுவா சாமி ......நல்ல எண்ணம் வரும், நம்மை சுத்தி தீட்டு இருக்காது. கெட்டவங்க வைப்ரேஷன் நம்ம கிட்ட வராது. ஒரு விதத்தில் நம்மை காப்பாத்தும்”...

ஓ......நல்ல எண்ணம், கெட்டவங்க வைப்ரேஷன்....தீட்டு...... அப்ப இவரு ஏன் அதை போட்டுருக்காரு?  இவருக்கும் நல்ல எண்ணம் வரணும்னு போட்ருக்காரா? என நான் இந்த படத்தை காட்டினேன்...

”?!?!”

மிகக்குழப்பத்துடன்...என்னை பார்த்தார் அந்த இளைஞர்.

தம்பி ருத்ராக்‌ஷம் எதுக்கு அதன் பயன்பாடு என்ன என தெரிஞ்சு பயன்படுத்தனும்.  சிவ பக்தர் சொல்லிட்டு பயன்படுத்தறது, சினிமாவில் ஹீரோ போட்ட ட்ரஸ்னு வாங்கி போட்டிருக்கற மாதிரி ஒரு செயல். அது சிவனையும் பக்தியையும் அசிங்கப்படுத்தும்.

ஒரு உயிர்த்தன்மை இல்லாத ஐ போன் வாங்கும் போதே இது என்ன என்ன வசதிகள் , செயல்பாடுகள் இருக்குனு பல மணி நேரம் செலவிட்டு , எந்த செல்போன் நல்லா வேலை செய்யும்னு யோசிச்சு வாங்கும் நீங்க, ஆன்மீக விஷயம் மட்டும் ‘நல்ல வைப்ரேஷன்’ சொன்னா கண்ணை மூடிட்டு வாங்கறீங்களே.. இது நியாயமா?

ஆனா ஒன்னு தம்பி....உங்களை மாதிரி சிவனை நோகடிக்கிறவங்கங்க ஊருக்குள்ள பலர் இருக்காங்க...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!

எப்படி ஸ்வாமி? புரியலையே...

ருத்ரனின் ஆக்‌ஷம் - சிவனின் கண்ணீர் தான் ருத்ராக்‌ஷம்னு சொல்லுவாங்க. உங்களை மாதிரி ஆட்களை பார்த்து அவருக்கு நிறைய கண்ணீர் வரும்...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!
ஸ்வாமி என்னை வெச்சு விளையாடறீங்கனு நினைக்கிறேன். ருத்ராக்‌ஷத்தை பத்தி நல்லா தெரிஞ்சுட்டு வந்தே நான் வாங்கிக்கிறேன் எனொல்லி விடெற்றார்.
 
ஆன்மீகத்ற்றி ெரிய இளர்கைவிட.. ஆன்மீகத்ை அறைகுறையாக ற்றத்ைய இளர்கால் நம் காச்சாரத்ின் ‘வைப்ரன்’ கெட்டுப்போகிறு...!

 இப்படியாக அன்று ஆதிசிவன் திருவிளையாடல் நிகழ்த்தினார்... 

Tuesday, June 21, 2016

Ebook - Yoga @ 35000 Feet

Today International Yoga day.

To celebrate our Yoga Tradition,  here i give a ebook 'Yoga at 35000Ft"

Yoga @ 35000 Ft-Ebook about Astanga Yoga




Wednesday, March 31, 2010

தவளை சொன்ன வேதம்




க்ரோக்....க்ரோக்...

மனுசங்களா வணக்கம். நான் தான் ஞானம் பெற்ற தவளை பேசறேன்.
தவளைக்கு எப்படி ஞானம் கிடைக்கும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

ஆன்மீகத்தில மேல வர தியானம், யோகா எல்லாம் செஞ்சு கோவிலுக்கு எல்லாம் போயி கஷ்டப்பட்டும் எங்களுக்கு ஞானம் வரலை. ஆப்ட்ரால் நீ ஒரு தவள உனக்கு எப்படி ஞானம் வந்துச்சுனு நீங்க பொறாமையில் கேட்பீங்க.

மனுசனுங்க மட்டும் தான் ஞானம் அடையனும், மிச்ச உயிர்கள் எல்லாம் ஞானம் அடையாதுனு நினைக்கறது உங்க ஆணவம் தானே? அந்த ஆணவம் இருந்தா நீங்க எப்படி ஞானம் அடையமுடியும்?

வேதகாலத்தில் எத்தனையோ மிருகங்கள் ஞானம் அடைந்து ஞானிகளாகி வேதகருத்துக்களையும், ஞானக்கருத்துக்களையும் சொல்லி இருக்காங்க.

ஞானியான மிருகம் சொன்ன விஷயத்தை அறியாமையில் இருக்கிற மனுசனால ஏத்துக்க முடியாதுனு ஞான மிருகங்களுக்கும் மனுச உருவம் கொடுத்துட்டாங்க.

புலி ஆன்மீகமா இருந்துச்சு அதற்கு வியாக்ரபாதர் என பெயர் கொடுத்துட்டாங்க, பாம்பு ஞானம் அடைஞ்சுது அதற்கு பதஞ்சலினு பேரு கொடுத்து மனுச உருவம் கொடுத்துட்டாங்க. மீன் ஞானியா வாழ்ந்துச்சு அதுக்கு மச்ச முனினு பேரு.

இதுமாதிரி மனுசங்க மிருகம் ஞானம் அடைஞ்சாலும் தங்களை மாதிரி உருவம் கொடுத்ததால எங்களுக்கு மதிப்பில்லாம போச்சு. நம்புங்க விலங்குகளுக்கும் ஆன்மீகம் இருக்கு, எல்லா உயிரும் ஞானம் அடையலாம்.

பாருங்க தவளையா இருக்கும் எனக்கு ஞானம் வந்து வேத கருத்துக்கள் எனக்குள்ள வர ஆரம்பிச்சுடுச்சு. இதை வெளியே சொன்னா என்னை தவளை முனி என கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. வட மொழியில் மாண்டுக்யம்-னா தவளை. என்னை மாண்டுக்கிய மகரிஷினு இப்பவே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்ப இன்னாதுக்கு என் சுய விளம்பரம்னு கேட்கறீங்களா?
பிரபஞ்ச ஒலியில் கிடைச்ச வேத கருத்துக்களை உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.

இந்த பிரபஞ்சத்தில எல்லா விஷயம் உருவாகிறதுக்கும் ஒலி காரணமா இருக்கு. “ஓம்” அப்படினு சொல்லுவோம்ல? அந்த சப்தம் தான் அனைத்துக்கும் காரணம்.

ஓம் சப்தம் பிரபஞ்சத்தில் கிளம்பினவுடனே அதிலிருந்து எல்லாம் விஷயமும் வெளிப்பட ஆரம்பிச்சுடுச்சு.

ஓம்-னா அது ப்ரணவ மந்திரம் சொல்லுவாங்க. ஓம் என்ற சப்தம் ஒரே சப்தம் கிடையாது. அ - உ - ம அப்படிங்கற மூனு ஒலியோட கூட்டணிதான் ஓம்.

அ அப்படினு ஆரம்பிச்சு உ-னு நீண்டு ம்-னு முடிச்சா அதுக்கு ஓம்னு முழுசா கேட்கும்.

அ ஒலி உருவாக்கிறதை குறிக்கும், உ-னா வளர்ச்சியை குறிக்கும். ம்-னா முடிவை குறிக்கும்.
அதனாலத்தான் அ- பிரம்மா, உ-னா விஷ்ணு, ம்-னா சிவன்னு சொல்லுவாங்க.

உண்மையில் இறைவனுக்கு உருவம் கிடையாது. அ-உ-ம வை குறிக்க உருவம் கொடுத்து வழிபடுறாங்க. ஓம்- ஒலிதான் இறைவன். அதன் உற்பகுதிகள் இறைவனின் செயலாக இருக்கு.

பிரபஞ்சம் பஞ்சபூதத்தால ஆனதுனு சொல்லுவாங்க. பஞ்ச பூதம் எதனால ஆனது தெரியுமா?

அ-உ-ம மூலம் மூன்று பூதமும், மூனு சப்தத்திற்கு இடையே சின்னதா கோடு போட்டிருக்கேனே அதிலிருந்து அடுத்த ரெண்டு பூதம்னு மொத்தம் பஞ்ச பூதம் உருவாச்சு.

வேதங்களும் அப்படித்தான் உருவாச்சு, அ சப்தத்தில் ரிக்வேதமும், உ சப்தத்தில் யஹூர் வேதமும், ம் என்பது சாம வேதமாகவும் இருக்கு. இதன் தொடர்ச்சிய அனைத்து சப்தங்களின் இணைப்பா இருக்கிறது தான் அதர்வணம்.

நீங்க மூச்சு எடுக்கிறீங்களே அதுக்கும் ஓம் தான் காரணம். அ என்ற நிலையில் உள்மூச்சும், உ என்ற நிலையில் மூச்சை உள்ளே நிறுத்தி, ம் என்ற நிலையில் மூச்சை வெளியிடுவீங்க.


அ-உ-மவில் சிந்திச்சா எல்லா விஷயமும் இதில் உருவாகி இருக்கு என புரியும்.

சமஸ்கிருதத்தை தேவ பாஷை என சொல்லுவாங்க. இதை கேட்டு நம்ம மக்கள் அப்ப நாங்க பேசறது கேவலமான பாஷையா என வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு வருவாங்க.

சமஸ்கிருதம் மட்டும் அல்ல தமிழும் தேவ பாஷைதான். அதனாலதான் ஞானிகள் பாட இரண்டு மொழியை மட்டுமே பயன்படுத்துறாங்க.

கல்தோன்றி மண் தோன்றா காலம் கொண்ட மூத்த மொழி தமிழ்னு ஸ்கூல் பாடத்தில் படிச்சிருப்பீங்க. கல்தோன்றா காலம்னா பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்து மொழி இருக்குனு அர்த்தம். பிரபஞ்சம் ஒருவாக ஓம் என்ற சப்தம் காரணம் என்பதால ஓம் என்பதே தமிழ் என புரிஞ்சுக்குங்க.

உங்க மொழி தெய்வீக மொழியான தெரிஞ்சுக்க ஒரு ஆராய்ச்சி செய்வோம்.

அ ஒலி உருவாக்கிறதை குறிக்கும், உ-னா வளர்ச்சியை குறிக்கும். ம்-னா முடிவை குறிக்கும்னு முன்னாடி சொன்னேன். இதை நினைவில் வச்சுக்குங்க.

நம்ம மொழியில் இருக்கும் உருவாக்ககூடிய பெயர் சொல்லை பார்த்தால் அ சப்தம் வருவது போல இருக்கும். உதாரணம் குழந்தையை உருவாக்குபவர்கள், அம்மா, அப்பா. முடிவும் ஆரம்பமும் அ சப்தம் வருதா?

அதனால தமிழில் பிரம்மாவுக்கு அயன் அப்படினு பேரு. உங்களுக்கு சினிமா ஞாபகம் வந்தா அது என் தப்பில்லை.

நிர்வகிக்கும் விஷயத்திற்கும் வளர்ச்சிக்கும் உ சப்தம் வரும். மக்கள் வாழும் இடம்- ஊர், நிரந்திரமாக இருப்பது ஊறுகாய். ஊரணி, உட்காருவது. உணவு என வளர்ச்சி சம்பந்தபட்ட விஷயங்கள் உ சப்தம் கேட்குது.

ம சப்தம் முடிவு நிலையை குறிக்கும். மரணம், மகிழ்ச்சி, மன்னிப்பு, மறத்தல் என ம சப்தம் தற்காலிக முடிவு-இறுதி நிலையை குறிக்கும்.

எந்த மொழி அ-உ-மவின் அடிப்படையில் இருக்கோ அந்த மொழி தேவ மொழி அல்லது தெய்வீக மொழினு புரிஞ்சுக்கோங்க.

வடமொழியில் மாத்ரு, பிதா என அ-சப்தமும், குரூ - என்ற உ சப்தமும், தேவம் - என இறுதி நிலையையும் குறிக்கும்.

அதனாலத்தான் தமிழும் தெய்வீக மொழினு சொல்லறோம். ஓங்காரத்தின் சப்தம் வந்தா எந்த மொழியிம் தெய்வீகம் தானே?

உங்க மொழியை தெய்வீகமாக்கனும்னா அ-உ-ம சப்தம் வர மாதிரி பயன்படுத்துங்க.

அ சப்தம் பிரம்மாவை முதல் உருவாக்கும் இறைவனோட அம்சம் இல்லையா? அதனால அனைத்து மதத்திலும் இறைவனை அழைக்கும் சப்தம் அ-வில் துவங்கும். கவனிச்சு பாருங்க.

அம்மாவை வாய் நிறைய அம்மானு கூப்பிடுங்க. மம்மினு கூப்பிட்ட முடிவு நிலை வந்துடும். மம்மினு எகிப்துல இருக்கிற பொணத்துக்கு பேரு இருக்கு. ம-னு ஆரம்பிச்சதால அது இறுதி நிலையில் இருக்கு.

நம்ம வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அ-உ-ம காரணமா இருக்கு. அதை விழிப்புணர்வோட கவனிச்சா நீங்க பூச்சியா இருந்தா கூட ஞானம் அடையலாம். மனுசனா இருக்கனும்னு அவசியம் இல்லை. ஓங்காரத்தை கவனிக்கலைனா நீங்க மனுசனா இருந்தும் பிரயோஜனம் இல்லை..

திருமூலர் என்கிட்ட கத்துக்கிட்டுதான் திருமந்திரத்தில இந்த விஷயத்தை பிட் அடிச்சுருக்காரு.
நீங்களே கேளுங்க..

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628

-------------------------

குறிப்பு :

மாண்டூக்ய உபநிஷத் என்னும் பேரறிவை எளிமையான நடையில் விளக்கும் முயற்சி இது. உபநிஷத்தை எப்படி இவ்வாறு கூறலாம் என சில வேத வித்துக்கள் பொங்க வாய்ப்புண்டு. அவர்களிடம் நான் வேண்டுவது எல்லாம் ஒன்றுதான். நீங்க கோபத்தில் சாபம் கொடுக்க எண்ணினால்,

“கோடான கோடி பிறவிகள் ஈனமான பிறவியாகிய ஓம்காராகவே பிறந்து இறக்க கடவது” என சபிக்கவும். தன்யனாவேன்..!

Wednesday, March 3, 2010

பரமஹம்ஸா....

உயர்வு தாழ்வு, வேற்றுமை-ஒற்றுமை, நல்லது-கெட்டது என ஆன்மீகத்தில் பிரிவுகள் இல்லை. ஆனால் உலகம் என்ற குளத்தில் உணர்வுகள் என்ற சகதியில் பல உயிர்கள் வாழுகிறது. அவற்றில் உன்னை பிரித்தரிய வேண்டாமா? புழுக்களை உண்ணும் மீன்கள், பிற மீன்களையே உண்ணும் மீன்கள், சப்தம் எழுப்பும் தவளைகள், தவளைகளை தின்னும் பாம்புகள், இறைக்காக காத்திருக்கும் கொக்குகள் என பல்லுயிர் பள்ளமாக இருக்கிறது இக்குளம்.

இத்தகைய உயிர்களுக்கு உன்னை ஒப்பிடலாமா?

இந்த குளத்தில் தாமரை உண்டு. அதில் சகதிகள் இருப்பதில்லை. அதனால் அது ஆன்மீக பொருளாக கருதுகிறார்கள். உற்றுப்பார்...

அந்த தாமரையிலும் அதன் தண்டுப்பகுதி சகதியில் ஊன்றியே மேல் எழுந்து நிற்கிறது. தாமரையிலும் சகதி உண்டு, குளத்தின் நீர் சில துளிகள் அதன் மேல் ஒட்டும் தன்மை உண்டு.


அதனால் தான் உன்னை அம்ஸம் என்கிறேன். அம்ஸ என்றால் அன்னம் என பெயர். அன்னத்தை பார்த்திருக்கிறாயா? வெளிர் வெண்மை நிறத்தில் கால்களிலும் மூக்கிலும் மட்டும் செந்நிறத்துடன் உலாவருமே அந்த அம்ஸம்.

அதன் மேல் ஒரு துளி கசடு இருக்காது. சகதிகள் அதன் மேல் ஒட்டாத வண்ணம் இறைவன் படைத்துள்ளான். இதனால் தானே தமிழில் கூட ஒரு விஷயத்தை அழகாக இருக்கிறது என்பதற்கு அம்ஸமாக இருக்கிறது என்கிறார்கள்?

நம் ஊரில் பல கட்டுக்கதைகள் உண்டு. அம்ஸம் பாலையும் நீரையும் பிரித்து குடிக்கும் என்பார்கள். அது கற்பனையாக இருந்தாலும் ஆன்ம-உண்மையில் எது கலக்கபட்டாலும் அதை பிரித்து அறிபவன் அம்ஸத்தின் அம்ஸம் என கூறலாம் தானே?

அப்பழுக்கற்ற விஷயத்தை அம்ஸம் எனலாம். ரசிகர்களில் மிகவும் உயர்வானவனை பரம ரசிகன் என்பார்கள். அதுபோல அம்ஸத்தின் இயல்பில் உச்சமான உள் தூய்மை அடைந்தவனை பரமஹம்ஸன் என்பார்கள் என்பது உனக்கு தெரியுமா?

ஆன்மீகவாழ்வில் மிக எளிமையாக வாழ்ந்து தன் சிஷ்யன் நாரேந்திரன் மூலம் உலகுக்கு தெரியவந்த ராமகிருஷ்ணர் கூட தன்னை பரமஹம்ஸன் என அழைப்பதை விரும்பவில்லை. அதனால் தான் இச்சொல் அவரின் இயற்பெயருக்கு பின்னால் இருக்கிறது.

உன்னிடம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எந்த அம்ஸமும் தன்னை அம்ஸம் என கூறிக்கொண்டதில்லை. எந்த அம்ஸத்தின் தலைவரும் தன்னை பரமஹம்ஸம் என பிரகடனப்படுத்தியதில்லை.

நம்மிடைய வாழ்ந்த பல
பரமஹம்ஸர்கள் பிறப்பிலேயே பரமஹம்ஸர்களாக இருந்தார்கள். பல பரமஹம்ஸர்கள் பரமஹம்ஸர்கள் என தெரியாமலேயே இறைவனில் இணைது இருக்கிறார்கள். பரமஹம்ஸமாக இருந்துகொண்டு சகதியில் இருக்கக்கூடாதா பலர் கேட்கலாம்.


சகதியில் உழன்றதால் தானே மீனும்,தவளையும், பாம்புகளும் தாமரையும் நீருக்கு அடியில் வாழ்கிறது?

பரமஹம்ஸமான நீ, நீருக்கு மேல் அல்லவா வாழும் இயல்பு கொண்டவன்?

பரிசுத்தத்தின் உச்சமான பரமஹம்ஸமாக இருக்க தேவையில்லை, குறைந்தபட்சம் தாமரையாக இருக்கப்பழகு. குளத்தில் இருக்கும் புழுவாகிவிடாதே..


Friday, October 9, 2009

ஆன்மீகவாதியின் டாப் 15 லட்சணங்கள்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

6) ஆன்மீக வாழ்க்கை என்பது அனைவராலும் திடீரென பின்பற்றக்கூடிய விஷயமல்ல. அதனால் ஆன்மீக வாழ்க்கையின் பிறப்பிலேயே கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். இவர்களின் தாய் -தந்தையர் தெய்வீக குணம் கொண்ட பக்திமானாக இருப்பார்கள். அதன் பயணாக இவர் பிறந்திருப்பார். பிறக்கும் பொழுதும் சிறுவயதிலும் அனேக அதிசயங்கள் இவரை சுற்றி நடந்திருக்கும்.

7) தான் ஞானம் அடைந்த விஷயம் மற்றும் ஆன்மீக உயர்வு கொண்ட சம்பவத்தை கேட்கும் பொழுது மிக உணர்ச்சி பெருக்குடன் விளக்குவார். எப்படி ஆன்மீகத்திற்குள் வந்தார், இவரின் குரு யார் போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிப்பார். ஆன்மீகவாதி என்பவர் ஒரு திறந்த புத்தகம் என்பதால் அவருக்கு எந்த ரகசியமும் கிடையாது. அனேக ஆன்மீகவாதிகள் சுயசரிதை எழுதுவார்கள். அதில் அவர்களின் வாழ்க்கையில் எப்படி அதிசயம் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படையாக இருக்கும்.

8) பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் அல்லது திருமந்திரம் போன்ற ஏதோ ஒரு நூலை பின்பற்றியே அவரின் ஆன்மீக வாழ்க்கை இருக்கும். எந்த நூலை அவர் பின்பற்றுகிறார் என தெரிந்து கொண்டால் அவரின் ஆன்மீக வாழ்க்கை எப்படிபட்டது என எளிமையாக கணிக்கலாம். ஆன்மீகவாதி பேசும் பொழுது கூட இடை இடையே புனித நூலின் மேற்கொள்காட்டி பேசுவார்.

9) கைகளால் பணத்தை தொடுவது ஆன்மீகவாதியின் குணம் அல்ல. பணத்தை சேமிக்கவும் மாட்டார். மக்கள் பால் பழம், உடை கொடுத்திவிடுவதால் இவருக்கு தேவைகள் இருக்காது.

10) ஆன்மீகவாதிகளின் பெயர்கள் ஸ்வாமி, யோகி, மஹான், சத்குரு, ஸரஸ்வதி, பரமஹம்சர் போன்று அமையும். இப்பெயர்கள் அவர்களே வைத்துக் கொள்ளக்கூடாது. இமயமலையில் சில ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு பெயரை வழங்குவார்கள் அல்லது பெரிய மடாலயத்தில் தீட்சை வாங்கும் பொழுது இந்த பெயர்சூட்டும் வைபவம் நடக்கும்.

11) இவர்கள் திருமணம் ஆனவர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி திருமணம் செய்திருந்தாலும் குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பார்கள். மணவாழ்க்கை என்பது ஆன்மீகத்திற்கு தடை என்பதால் தனித்து இருப்பார்கள்.

12) தினமும் நித்திய பூஜை செய்வார்கள். அவர்கள் எங்கு பயணித்தாலும் அவர்களுடன் விக்ரஹங்கள் எடுத்து சென்று பூஜை தொடர்வார்கள்.

13) நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.

14) எங்கும் நிரந்தரமாக தங்காமல் சஞ்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் பக்தர்கள் கோரிக்கைக்கு இணங்க வெளிநாடு பயணம் செய்வார்கள். தர்மத்தை பிறநாடுகளில் பரப்புவது இவர்களின் கடமை. கடல் மேல் பயணிப்பது தர்மத்திற்கு எதிரானது என்றாலும் ஆன்மீக விஷயத்திற்காக அந்த பாவத்தையும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

15) தான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே அனேகமாக இருக்கமாட்டார்கள். ஒரு ஊரில் பிறந்து , வேறு ஊர்களில் சஞ்சரித்து, மற்றொரு ஊரில் ஆசிரமம் அமைத்து இருப்பார்கள். இதனால் தன் குடும்ப உறுப்பினர்களை விலக்கியே வைத்திருப்பார்கள். ஊரில் மேலும் உறவின் மேலும் பற்று இருக்க கூடாது என்பது இச்செயலின் உள்ளர்த்தம்.


கொஞ்சம் பெரிய டிஸ்கி :

இது எல்லாம் ஆன்மீகவாதியின் அடையாளம் என மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புகள். மேற்கண்ட 15 விஷயங்களில் ஒன்றாவது நீங்கள் ஆன்மீகவாதியிடம் எதிர்பார்த்திருப்பீர்கள்.

ஆன்மீகவாதியை ஒரு சட்டதிட்டத்தில் அடக்க அவர்கள் செயற்கையான இயந்திரங்கள் அல்ல. ஆன்மீகவாதிகள்
இயற்கையான மலை, காட்டாறு போன்றவர்கள். இலக்கணத்தில் அவர்களை அடைக்க அவர்கள் ஒரு கலாச்சார சார்பு கொண்ட மொழி அல்ல. அவர்கள் அனைத்து கலாச்சாரத்தையும் தாண்டியவர்கள்.

மேற்கண்ட விஷயங்களை மக்கள் விரும்புகிறார்கள் என தெரிந்துகொண்டு சிலர் போலியாக இந்த வேடம் அணிந்து உலா வருவார்கள். அவர்களிடம் இந்த விஷயங்களை கண்டு மக்களும் மயங்கி தங்கள் அறியாமையால் வீழ்வார்கள். இந்த டாப் 15 விஷயங்களால் எத்தகைய முட்டாள்தனமும் மோசடியான விஷயங்கள் சமூகத்தில் நடந்திருக்கிறது என நாளை பட்டியலிடுகிறேன்.

நான் பல ஆன்மீகவாதிகளுடன் பழக்கம் உள்ளவன். அதனால் ஆன்மீகவாதிகள் எப்படி இருப்பார்கள் என்றும் வேறு ஒரு நாள் கூறுகிறேன். உங்களுக்கு தெரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

Friday, April 3, 2009

ஞானம் அடைய இதோ எளிய வழி

ஞானம் அடைவது என்பதை பற்றி பேச
நான் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.

நான் ஞானம் அடைந்தவன் என நீங்கள் உணர
உங்களுக்கும் ஞானம் இருக்க வேண்டும்.

எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்
ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச வேண்டும் ?
-ஸ்வாமி ஓம்கார்
--------------------------------------------------------------------------
சென்ற பதிவில் பின்நவீனத்துவம் எனும் தலைப்பில் ஒரு இடுக்கை இருந்தது.
அந்த கட்டுரையை படித்த பலர் பின்னூட்டங்கள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் சில கருத்துகளை சொன்னார்கள். அதன் சாராம்சம் "அதில் எங்கே பின்நவீனம் இருக்கிறது? விடுகதை போல் அல்லவா இருக்கிறது.? "

உண்மையில் பின்நவீனத்துவம் எனும் கருத்தை பழிப்பவன் இல்லை நான். நான்
சொல்லவந்த கருத்தை நீங்கள் ஊன்றி படிக்க நான் தேர்ந்தேடுத்த தலைப்புதான் அது. நான் இலக்கியம் செய்வேன் என நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். எனக்கு இலக்கியம் எல்லாம் செய்யத் தெரியாது...லேக்கியம் வேண்டுமானால் செய்வேன்.

ஞானம் எனும் கருத்து மிகவும் மலிந்த விஷயமாகிவிட்டது. கடைக்கு சென்றால் எனக்கும் ஒரு கிலோ வாங்கிவா என சொல்லும் அளவுக்கு மலிந்துவிட்டது. மாத பத்திரிகையில் விளம்பரங்கள் உங்களை ஞானியாக்குகிறோம் என்று கூவி கூவி அழைக்கிறார்கள். சரி...ஞானம் அடைந்தால் என்ன ஆகும் என கேட்டால், கடன் தொல்லை தீரும், தொழில் மேன்மை நடக்கும் என பதில் வருகிறது.

தன்னை யோகி என்று அழைத்துக்கொள்ளுபவர்களோ தங்களின் சுயசரிதை புத்தகத்தில் 1980ல் இன்ன மாதம் இன்ன தேதியில் ஞானம் அடைந்தேன் என்கிறார்கள். எதிர்காலத்தில் விசிடிங் கார்டிலோ அவர்களின் யோகபயிற்சி பள்ளியிலோ இப்படி எழுதினாலும் எழுதுவார்கள்.
“ஞானி Since 1980".

ஆன்மீகம் என்பது கடைசரக்கே. அதிலும் ஞானம் என்பது வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு அசிங்கமாகிவிட்டது.
நமது கலாச்சாரம் பலயோகமுறைகளை கொண்டது. யோகம் என்பது பிரம்ம சொரூபத்துடன் வேறுபாடு இல்லாமல் கலப்பது. ஹடயோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம், ஞான யோகம் என பல யோக முறைகள் இருக்கிறது. உடல், மனம், ஆன்மா அனைத்தையும் வருத்தி தன்னை இறைவனுடன் ஐக்கியப்படுத்திகொள்ளும் முறைகள் ஹட,கர்ம,பக்தி மற்றும் ராஜ யோக முறைகள். ஆனால் இதை தவிர்த்து எந்த செயலும் இல்லாமல், தனது ஞானம் கொண்டே இறைவனுடன் கலப்பது ஞானயோகம்.

எந்த செயலும் தேவை இல்லை என சொல்லிவிட்டு, ஞானம் ”அடைவது” , “கலப்பது” என பல செயல்பற்றி சொல்லுகிறேன், உண்மையில் இவை செயல்கள் அல்ல. ஞானம் என பிரத்யோகமாக அடைய எதுவம் இல்லை. அனைவரும் ஞான நிலையிலேயே இருக்கிறார்கள். அதை உணர்வதில்லை.

கஸ்தூரிமான் தனது வால்பகுதியில் கஸ்தூரி இருப்பது தெரியாமல் அந்த வாசனை காட்டில் எங்கே இருக்கிறது என தேடி அலையுமாம். கடைசியில் சோர்வுற்று அமரும்பொழுது அதன் கஸ்தூரி இருக்கும் இடம் அதற்கு தெரியவரும். அது போல ஞான நிலையிலேயே இருக்கிறோம் என அறியாமல் செயல் செய்ய வேண்டி இருக்கிறது.

ஞான யோகிகள் தாங்கள் பிரம்ம சொரூபம் என்றும், உலகம் பொய்யானது, தனது இருப்பே மெய்யானது என எண்ணுகிறார்கள். ஞான யோகிகளின் நிலையை உணரவும். ஞான யோகத்தை பின்பற்றி ஞானத்தை உணரவும் தோன்றிய நூல் “யோகவாஸிஷ்டம்”.

ராமாயண காலத்தில் ( த்ரிதாயுகம்) நடப்பதாக வர்ணிக்கபட்டுள்ளது. பகவத் கீதை போன்ற நூல் அல்ல இது. ஸ்ரீ ராமனின் குருவான வஸிஷ்டர் தனது மாணக்கனுக்கு ஞானம் அடைய வேண்டி உபதேசிக்கிறார். உபதேசித்தவுடன் தான் பிரம்மம் என ஸ்ரீராமன் உணருகிறான்.

என்ன வேடிக்கை பார்த்தீர்களா? கடவுளாக இருந்தாலும் இங்கே வந்தால் தான் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். நம்மை பற்றி யோசியுங்கள். 32000 சுலோகம் கொண்டது இந்த நூல் பல ஞானிகளால் எளியவடிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காலம் மற்றும் தேசம் எனும் இரு கொள்கைகள் எவ்வளவு தவறானது என சுட்டிகாட்டி விளக்குகிறார் வஸிஷ்டர். நீங்கள் இரவில் தூங்குகிறீர்கள் அப்பொழுது கனவில் வரும் செயல்கள் அனைத்தும் உண்மை போலவே இருக்கிறது. உங்களை வேறு உலகில் எடுத்து செல்லுகிறது. கண் விழித்தவுடன் அந்த உலகம் மறைந்து வேறு உலகம் கண்களில் தெரிகிறது. எது உண்மை?

கண் விழித்தது என்பது கனவாக இருந்து நினைவு என்பது பொய்யாக இருந்தால்?
நமது உணர்வு நிலையை தூக்கத்திலிருந்து நாம் எட்டியவுடன் நமக்கு முதலில் மூளையில் வரும் செய்தி இரண்டு. இன்ன நேரத்தில் நான் விழித்திருக்கிறேன், இன்ன இடத்தில் இருக்கிறேன். இதில் ஏதேனும் ஒன்று சரியாக செயல்படவில்லை என்றால் உங்களால் இயல்பாக இருக்க முடியாது.

காலம் என்பது உங்களுக்குள் புகுத்தப்பட்ட மாயை. இடம் என்பதும் அது போன்றதே.


நமது வாழ்க்கையிலும் ஏதோ சில நிமிடம் நம்மை அறியாமல் ஞானத்தை சுவைத்ததுண்டு.

சில தருணங்களை சுட்டி காட்டுகிறேன்.

மதிய நேரத்தில் தூங்கி மாலை நேரத்தில் எழுத்தவுடன் மனதில் காலை நேரமாக இருக்குமோ என நினைத்து பல் தேய்க்க முயற்சி செய்ததுண்டா? பிறகு மாலை நேரம் என தெரிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இரவு நேர நீண்ட பயணங்களில் திடீரென முழிப்பு வந்ததும் எந்த ஊரில் பயணிக்கிறோம் அறிய என முயற்சி செய்யாமல் இருந்ததுண்டா? ஜன்னல் வழியே பார்த்தால் உங்களுக்குள் என்ன உணர்வீர்கள் ?

இது போல வஸிஷ்டர் ஸ்ரீராமனுக்கு சில கதைகளை சொல்லி அவரின் அறியாமையை தவிடுபொடியாக்குகிறார். ஸ்ரீராமன் உணர்வு நிலையில் இருந்து ஞானவெளியில் தூக்கிவீசப்படுகிறார்.

காலம் என்பது கற்பனையே. அந்த கற்பனைதான் ஞானம் அடைய தடையாக இருக்கிறது.

உங்களுக்கு முப்பது வயதாகிறது என சொல்லிகிறோம். அல்லவா? இது எப்படி வந்தது? பிறந்து முப்பது வருடம் ஆகியது, 365.25 நாட்கள் சேர்ந்து 24 மணி நேரம்.

24மணி நேரம் ஒரு நாள் என்பது ஏன் நாம் அமைத்துக்கொண்டோம்? ஒரு பகல் ஒரு இரவு இருப்பது ஒரு நாள் என அனைவரும் எடுத்த ஒருமித்த முடிவு. இதையே 12 மணி நேரம் ஒரு நாள் என முடிவு செய்தால் உங்களுக்கு 60 வயதாகிவிட்டது. இதே ஒரு நாள் 48 மணி நேரம் என கொண்டால் உங்களுக்கு பதினைந்து வயது தான்.

காலகணிதம் எனும் அடிப்படியில் நான் 60வயதில் இறந்து மறுபிறவி எடுக்கிறேன் என கொண்டால், மேற்கண்ட விளக்கத்தில் ஒரு நாள் 12 மணி நேரம் என்றால் இந்த நேரம் நான் அடுத்த பிறவியில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 60 மணி நேரம் எனக்கொண்டால் இந்த நேரம் நான் எனது முற்பிறவியில் இருப்பேன்.

ஒருவரின் அடுத்த பிறவி மற்றும் முந்தைய பிறவி என அனைவரும் நம்புவது காலத்தை வைத்துதான். உண்மையில் நாம் இறந்துவிடவில்லை என நினைப்பதும், அடுத்த பிறவி என்பது காலத்தை பொருத்தது.

இந்த கருத்தை வஸிஷ்டர் விளக்க கூறும் கதை அபாரமானது. கடைசியில் ஸ்ரீராமர் புரிந்துகொண்டதும் வஸிஷ்டர் கூறுகிறார், “ஸ்ரீ ராமா அங்கே பார், ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசிக்கிறார், இங்கே பார் மச்சவதாரம் நிகழ்கிறது. அனைத்தும் ஒருங்கே நிகழ்கிறது. நீ அதை அறியவில்லை”

அதனால் தான் சொல்லுகிறேன் ஞானம் அடைவது எளிது. காலம் எனும் கட்டை உடைத்து வெளியேறுங்கள். அனைத்தும் காணும் “அதனுடன்” ஒன்றாகிவிடுவீர்கள்.


வலையுலக பாணியில் சொன்னால், இந்த பதிவை எழுதும் நான் உங்களின் அடுத்த பிறவியாக இருக்கலாம். இதற்கு பின்னூட்டம் இடும் நீங்கள் எனது அடுத்த பிறவியாகவோ, முந்தைய பிறவியாகவோ இருக்கலாம்.
--------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)

படித்தபின் இறுக்கமாக உணர்ந்தால் இதை சொடுக்குங்கள் சுட்டி :)

Thursday, February 19, 2009

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் பகுதி மூன்று

“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”

விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்...

வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.

டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக
இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.

சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.

உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள்.

கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும் துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.

இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..

கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி
சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது.

பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.

உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை
கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் - மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.


பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.

மேற்கண்ட சம்பவத்தை நான் ஒரு யோகியிடம் இருந்து கேட்டு கதைவடிவில் தந்திருக்கிறேன். தகவல் உண்மையா என காண இங்கே இருக்கு சுட்டி இங்கே. சுட்டியில் உள்ள சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை தன்மையில் விவரிக்கபட்டுள்ளது..

என்ன செய்ய...? சாட்சி கொடுத்தால் தானே நம் மக்கள் இங்கே அனைத்தையும் நம்புகிறார்கள்.

இது போல எத்தனையோ சம்பவங்கள், நீதி மன்றத்தில் இது போன்ற விசித்திர வழக்குகள்.[திரு. ஷண்முகப்ரியன் கூறியது போல விமலானந்தா எனும் அகோரியின் வாழ்க்கை சம்பவம் கூட நீதிமன்றவழக்கு தான்]

இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!

உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம் கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும் வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன் கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.

நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.
[ காலேஜ் அட்மீஷன் காட்சியை பார்த்தவுடன் கால்ககளை சேர்த்து உற்கார தோன்றுகிறதா?]

காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே
ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது... காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]

சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.

ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.

யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்பு

கடந்த சில பதிவுகளாக யோகிகளை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.


அமானுஷ தன்மையை கூறியும், யோகிகள் உயர்ந்தவர்கள் என கூறியும் இவர்களை பின்பற்ற சொல்லுவதற்காக நான் இந்த பதிவு இடவில்லை. இவர்களை பின்பற்ற சொல்லுவது கூட இவர்களுக்கு பிடிக்காது என்பதே உண்மை. இவர்களை வணங்க தேவையில்லை குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்.

சத்யமேவ ஜெயதே..!

Tuesday, February 17, 2009

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் - பகுதி இரண்டு

அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவே
இருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.

ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே
தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.

காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா?

அஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.

தன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.

யோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம் காண்பது அரிது.

இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

யோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

உபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ
ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது? சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் ?

தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் ? என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக
இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.

நான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.

வரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும்
மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள் பேசவில்லை. சைகைகாட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.





கும்பமேளாவில் பங்கெடுக்கும் ஆரம்ப நிலை யோகிகளை கொண்ட வீடியோ காட்சி.

கும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம்
ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது? ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி?

தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்...! இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.

மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.




சென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.

இறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.
யோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.

அந்த வழக்கு...

(தொடரும்)

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள்

உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார் உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது இரவு ஏது பகல்? மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும், மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கிறார்கள்.

ஆன்மீகவாதிகள் என்றவுடன் பாரத தேசத்தில் மட்டுமே இருப்பதாகவும், உலகில் வேறுபகுதியில் கடவுள் ஆன்மீகவாதிகளை வளரவிட மாட்டார் எனவும் பலர் எண்ணுகிறார்கள். வேத காலம் என ஒன்று இருந்தது. அக்காலத்தில் உலகமே ஒரு நாடாக இருந்தது. எல்லை பிரச்சனையில் பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடும் நமக்கு இதை சிந்திப்பது சிரமம் தான். வேத மந்திரம் “பாரத கண்டே” எனும் சொல் நமது உலகமே ஒரே கண்டமாக இருந்தது என உணர்த்துகிறது.

காலத்தால் கலாச்சார மாற்றம் அடைந்து பெரிய சேலையாக இருந்த பாரதம் பல சிறு துண்டங்களாக மாற்றம் அடைந்து கைக்குட்டையானது.
உலகின் பிறபகுதிகள் கலாச்சார மாற்றம் அடைந்தாலும், பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மீகவாதிகள் பெருக காரணம் சூழல் தான். தாங்கள் செய்யும் ஆன்மீக சாதனைகள் (பயிற்சிகள்) இடையூறு வராதவண்ணம் சூழல் இங்கு இருக்கிறது. ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும்.

திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஓர் மந்திரத்தை சொல்லி கடவுளை வேண்டுவதுண்டு. “கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை”- என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டுமாம். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். பாவம் அவர்களுக்கு தெரியாதே, நாம் துரித உணவகத்தில் உண்டு, கேளிக்கை செய்து, இனத்தை பெருக்கி மாண்டுவிடுவோம் என்பது...!

ஆன்மீகவாதிகள் என்றவுடன் நம் மக்களுக்கு சில எண்ணங்கள் உண்டு. கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள் தங்கள் நினைத்தது போல தான் பிறர்வாழ்கிறார்கள் என எண்ணுவார்கள். உண்மையில் ஆன்மீகவாதிகளின் நிலை ரகசியாமாக காக்கப்படுவதில்லை. மக்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் ரகசியமாகி விட்டது.கடலுக்கு அடியில் முத்து எடுக்க சென்றவன், தான் கடலின் ஆழத்தில் கண்டவற்றை கரையில் இருப்பவனுக்கு சொல்ல முடிவதில்லை. அது போல ஆன்மீக நாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மீகவாதிகளை பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.

ஆன்மீகம் என்பது மதம்,கலாச்சாரம், சடங்குகள், மொழி போன்றவற்றை கடந்தது. ஆன்மீகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்தி குழப்பி கொள்கிறார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகள் மற்றும் தன்மைகள் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வித்தியாசம் தெரிவதில்லை.

சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”

தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.

தமிழகத்தில் சித்தர்கள் என சிலரை சொல்லுவதுண்டு. தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு சென்று சித்தர் பற்றி பேசினால், சித்தார் எனும் இசைகருவியை தான் காண்பிப்பார்கள். காரணம் சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களை தான் நாம் சித்தர்கள் என தமிழ் “படுத்தி” இருக்கிறோம். இது போதாது என்று அவர்கள் பதினெட்டு எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என கட்டயாம் வேறு படுத்துகிறோம். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல. தங்களை உடலாலும், உயிராலும் மேன்மை அடைய ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எனலாம்.

நாம் எப்படி காவி காட்டிய அனைவரையும் சாமியார் என்கிறோமோ அது போல வட நாட்டில் அவர்களை “பாபா” என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை அல்லது உயிர் கொடுத்தவர் என அர்த்தம்.

அங்கு அனைவரும் பாபா தான். மேல்தட்டு மக்கள் மஹராஜ் என அழைப்பார்கள். ரிஷிகள் அவர்களுக்கு அரசனை போன்றவர்கள்.[இந்த சொல்லாடலை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் இதை பற்றி பேசுவோம்.]

அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். தமிழில் வடமொழி சொற்கள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவனை பார்த்து “கேவலமானவன் நீ” என சொன்னால் அவர் என்ன நினைப்பார்?
வடமொழியில் “கேவல” எனும் சொல் தனித்துவமான - மேல்நிலையான என பொருள்படும். [உ.ம். கேவல சைதன்யம்- உண்னதமான துய்மை நிலை]. இப்பொழுது எதற்கு இந்த சமஸ்கிருத வகுப்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

தினசரிகளில் கொடூரமான விபத்தை பற்றி எழுதும் பொழுது “கோரமான விபத்து” என எழுதுவார்கள் அல்லவா? கோரம் என்றால் “பார்க்க முடியாத அளவுக்கு”,“மனம் பாதிப்படையும் தன்மை உள்ள” என பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்பதம் தான் அ-கோரம்.

ரம்மியமான, பார்த்தால் ரசிக்க தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். அகோரமான முகம் என தமிழில் இந்த சொல்லையும் தவறாகவே பயன்படுத்துகிறோம்.

அகோரமான நிலையில் இருப்பவர்கள் தான் அகோரிகள். வடநாட்டில் அனைவராலும் அகோரிகள் என அழைக்கப்படுபவர்கள் யோகிகளே. நாக சன்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள் தான். ஹிந்தியில் நங்கா என்றால் நிர்வாணம் என அர்த்தம். நங்கா பாபா எனும் சொல் வழக்கு பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும் மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.இனிவரும் பகுதியில் இவர்களை யோகிகள் என அழைப்போம். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.

யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் யோகிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும்.
ரிஷிகேசத்தில் இருந்த ஒரு யோகியின் புகைப்படம். இந்த படம் எடுக்கும் பொழுது அவருக்கு 85 வயது...!

தத்வவாலே பாபா

ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலய வனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் , பின்னாலும் இருக்கும் யோகிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப மேளாவில் கஞ்சா எல்லா இடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டுவருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.

இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

கும்பமேளாவில் யோகிகளின் அணிவகுப்பு ஒரு சில காட்சிகள்.



நன்றி யூடியூப்

ஏன் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? இதனால் இவர்களுக்கு என்ன பிரயோஜனம்?


அடுத்த பதிவில்..

(தொடரும்)