Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, October 7, 2013

ஆன்மீக பயணங்கள் ஓர் அறிவிப்பு

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்

இறையருள் நிறைந்த இடங்களுக்கு  பயணம் செய்வது ப்ரணவ பீடத்தில் வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு. இனி வரும் மாதங்களில் ஆன்மீக பயணமாக மட்டும் இல்லாமல் தியான நிகழ்வாகவும் நடத்த எண்ணி உள்ளோம். வரும் டிசம்பர் மாத இறுதியில் திருவண்ணாமலை மற்றும் பர்வத மலை பயணம் செல்ல இருக்கிறோம். மேலும் ஜனவரி 2014ல் காசி யாத்ரையும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணங்களின் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.


டிசம்பர் 2013

அருணாச்சல தியான முகாம்

திருவண்ணாமலை திருத்தலத்தில் மூன்று நாட்கள் தியான முகாம் நடைபெற உள்ளது. இந்த திருப்பயணத்தில் எளிய தியான பயிற்சிகள், சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் ஆகியவை நடைபெறும். கிரிவலம் செல்லுதல் மற்றும் அருணாச்சல மலையில் உச்சியில் உள்ள அருணாச்சல பாத தரிசனம் ஆகியவையும் நிகழும். 

டிசம்பர் 25ஆம் தேதி துவங்கும் இப்பயணம் 27ஆம் தேதி முடிவடையும்.  

28ஆம் தேதி சனிக்கிழமை பர்வதமலை பயணம். 29ஆம் தேதி ஞாயிறு அன்று திருவண்ணாமலை திரும்புதல்.

அருணாச்சலை தியான முகாமில் கலந்து கொள்பவர்கள் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கலந்து கொள்ளலாம். அல்லது 29 ஆம் தேதிவரை பர்வதமலை பயணத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.

பர்வதமலை பயணம் மட்டும் 28,29ஆம் தேதிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பினும் அனுமதி உண்டு.

20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மிக செளகரியமான சூழ்நிலையில் தங்குமிடம், போக்குவரத்து வாகனம் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்படும். 

டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்பவர்களுக்கே அனுமதி உண்டு.


தியான முகாமில் பங்கு பெற அடிப்படை தகுதிகள் :

1. ப்ரணவ பீடத்தின் ஏதேனும் ஒரு ஆன்மீக பயிற்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். (ப்ராண வித்யா, மந்திர சாஸ்திரம் , யோக பயிற்சி)

2. ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

3. திருவாண்ணாமலை மலையேற்றம், பர்வதமலை ஏற்றம் ஆகியவை செய்ய  உடல் பலம் மற்றும் ஆரோக்கியம் அவசியம்.

-----------------------------------

காசி யாத்ரா 2014

ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 வரை ஆறு நாள் பயணமாக காசி யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.

காசி யாத்ரா என்பது அலகாபாத் என்கிற திரிவேணி சங்கமம், காசி புண்ணிய பூமி மற்றும் கயா ஆகிய இடங்களுக்கு சென்று வழிபடுவதை உள்ளடங்கியது.

ஆற்றல் பெற்ற இவ்விடங்களில் தன்வந்திரி ஹோமம் மற்றும் காசியில் மஹா மிருதியன்ஜெய ஹோமம் ஆகியவை நடைபெறும்.

முழுமையான மந்திர ஆற்றல் நிறைந்த இவ்விடங்களுக்கு சென்று ஸ்வாமி 
ஓம்கார் அவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக அனுபவம் பெறலாம்.

25 டிசம்பர் 2013க்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும். 

காசி யத்ராவில் பங்கு பெற அடிப்படை தகுதிகள் :

1. ப்ரணவ பீடத்தின் மந்திர சாஸ்திர பயிற்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அன்பர்களின் நலனுக்காக டிசம்பர் முதல் வாரம் மந்திர சாஸ்திர பயிற்சி கோவையில் நடைபெறும். அதில் கலந்து மந்திர தீட்சை பெற்று பிறகு ஜனவரில் காசி யாத்திரையில் கலந்துகொள்ளலாம்.

2. ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

3. ஜனவரியில் தை அமாவாசையை முன்னிட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அச்சமயம் அங்கே தட்பவெப்பம் மிக குளிர்ந்த சூழல் இருக்கும். பனியும், அதிக குளிரும் தாங்கும் பக்குவம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

--------------------------

மேற்கண்ட பயணங்களில் கலந்துகொள்பவர்கள் மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்யும் முறைகளையும், பயண கட்டணம் மற்றும் இதர தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.


ஆன்மீக பயணத்திற்கு தொடர்புடைய கட்டுரைகள்