Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label நியுமரலாஜி. Show all posts
Showing posts with label நியுமரலாஜி. Show all posts

Saturday, January 10, 2009

ஜின்ஜினகாலஜி - ஓர் தொலைகாட்சி நிகழ்ச்சி

முன்னுரை :

நவநாகரீக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அலாதியானது. எத்தனையோ ஆலஜிக்களுக்கு அவர்களின் நம்பிக்கை கரங்கள் நீட்டுகிறார்கள்.ஆலஜி என்றால் என்ன என புரியவில்லையா? அத்தாங்க நியூமாராலஜி, நேமாலஜி, கிராபாலஜி என எத்தனையோ கருமாந்திரங்கள் இருக்கிறதே.

(எனக்கு தெரிந்த ஒருவர் இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் அவரின் ECG யை பார்த்து டாக்டர் கூட 45 டிகிரியில் உங்க ஹார்ட் பீட் வேலைசெய்யனும் சொல்ல , தலை தெரிக்க ஓடிவந்திருக்கிறார் ;) )




டீவியை ஆன் செய்தால் போதும் வாடகை கோட் சூட் அணிந்து கொண்டு இவர்கள் செய்யும் காமெடி தாங்கவில்லை. ஒருத்தர் கல்லை போட சொல்லுகிறார், இன்னொருத்தர் பெயர் மாற்ற சொல்லுகிறார், இன்னொருவரோ கையில் எதோ " T " போல வைத்து கொண்டு ஆட்டுகிறார். இதை விட கொடுமை ஒருத்தர் மணிபர்ஸை எங்கே வைக்க வேண்டும் என சொல்லுகிறார். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் this is bit too much...

இந்த அனைத்து ஆலஜிக்கலையும் ஓர் ஆய்வு செய்து சில கருத்துக்களை சேகரித்துள்ளேன். இந்த உட்டாலக்கடி ஆய்வு இவர்களில் யார் சிறந்தவர்கள் என சொல்லுவதற்கு இல்லை. இவர்களுக்கு போட்டியாக நானும் ஓர் ஆலஜியை கண்டுபிடித்துள்ளேன். அதை இந்த மனித சமுதாயம் பின்பற்றி பயன்பெறுமானால் , எனது கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைக்கலாம். பிறகு மனித சமுதாயம் என்ன ஆகும்னு மட்டும் கேட்காதீங்க. அதை நான் இன்னும் ஆய்வு செய்யலை.



சரி நிகழ்ச்சிக்கு போகலாமா?

ஜின்ஜினகாலஜி

பல கோவில்கள், சித்தர்களின் படத்துடன் பெயர் பட்டியல் போட்டுவிட்டு நிகழ்ச்சி துவங்குகிறது.

ஜின்ஜினகாலஜி என்னும் புதிய முறையை நீங்கள் யாரும் கேள்விபட்டிருக்க முடியாது. காரணம் அது நான் கண்டுபிடித்த முறை.

உலகிலேய முதல் ஜின்ஜினகாலஜி மாமேதை, ஜின்ஜினகாலஜியின் தந்தை என என்னை கூப்பிடுவாங்க.

ஜின்ஜினகாலஜி-னா என்னனு கேட்கறிங்க தானே?
என்ன அவசரம்? பொருமையா இருந்து அழிஞ்சு போங்களேன்.

ஜின்ஜினகாலஜினா ஒருவரோட பெயரை மாற்றாமல் அவரின் பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றி அவரை உலக புகழ் அடையவைக்கும் உன்னதமான விஞ்ஞானம் தான் ஜின்ஜினகாலஜி .

சில எழுத்துக்களை மட்டும் மாற்றினால் உலக புகழ் அடையலாமா உங்களுக்கு சந்தேகம் வந்தால் நீங்க வேற சானலை பாருங்கள். என்னய்யா என்னையா இம்சை பண்ணுறீங்க?


எனனோட 60 வருட ஆராய்ச்சியில் பெயரில் வட மொழி எழுத்துக்கள் இருந்தால் அவர்கள் பிரபலமானவங்களா இருப்பங்கனு கண்டுபிடிச்சிருக்கேன்.

(60வருட ஆராய்ச்சியா? உங்களுக்கு வயசு முப்பதோ நாற்பதோ இருக்ற மாதிரி தெரியுதே சந்தேகமா? நான் ஓவர்டை செஞ்சேன். இதையெல்லம் கண்டுக்க பிடாது....)

உதாரணமா உங்க பெயர் செந்தில் குமாருனு வெச்சுக்குங்க. உங்க பெயரை “ஷெந்தில்” குமாருனு மாத்திக்கனும் அவ்வளவுதான். அதுக்கப்பறம் பாருங்க உங்க வாழ்க்கையில் ஜின்ஜினகாலஜி எப்படியல்லாம் மாத்த போகுதுனு தெரியும்.

ஜ வரிசைனு சொல்ல கூடிய ஜ,ஜா,ஜி,ஜு,ஜெ,ஜே. அப்பறம் ஸ்ரீ, ஹ, ஷ இருக்கற வட மொழி சொல்லை எதாவதது ஒன்னை உங்க பேரு கூட சேத்திக்குங்க.

அப்புறம் உங்களை சாதரண மனிதனா இல்லாமல் உலக புகழ் மனிதனா தான் பார்க்க முடியும்.

என்னிடம் தொலைபேசியில் கருத்துகேட்டு பெயர் மாத்தினவங்க அட்ரஸ் இல்லாம போயிருக்காங்க. தப்பா நினைச்சுக்காதீங்க, ஒரு அட்ரஸ்லிருந்து இன்னொரு அட்ரஸுக்கு மாறி போயிருக்காங்க. குடிசைலிருந்து பங்களாவுக்கு மாற வேண்டாமா?

இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலைனு நினைக்கறேன்.. இதோ சில பிரபலங்களின் பெயர்களை உங்களுக்காக சொல்லறேன், அதில் இருக்கும் வடமொழி எழுத்தால அவங்க எப்படி உச்சத்துக்கு போனாங்கனு உங்களுக்கு தெரியும்.
(”உச்சத்துக்கு” என வாசிக்கவும் ;) )



அரசியலில் பிரபலமானவங்க பெயரை எடுத்துக்கலாம், எம்.ஜியார், காமரார், ராஜாஜி இவங்க எல்லாம் எப்படி பெரும்தலைவர்கள் ஆனார்கள் தெரியுமா? எல்லாம் ஜின்ஜினகாலஜி தான்.

சினிமா நடிகர்கள் எடுத்துக்குங்க..(அதுக்காக அவங்களை தூக்க வேண்டாம்).

அந்தகாலத்துல சிவாஜி கணேசன் முதல்,
ஜினி, கமல் ஹாசன் -னு பயணப்பட்டு அஜித், விய் வரைக்கு ஜின்ஜினகாலஜி இல்லாமல் யாரும் பிரபலமானதா சரித்தரமே இல்லை.

இருங்க மேற்கொண்டு இந்த கருத்தை சொல்லறதுக்கு முன்னாடி ஒரு நேயர் தொலைபேசியில் அழைக்கிறார் அவர்கிட்ட பேசுவோம்..

நேயர் : சார் நான் ஈரோட்டிலிருந்து ராமசாமி பேசறேன்...

ஜின்ஜினகாலஜிஸ்ட் : ஐயா மன்னிச்சுகுங்க....நான் இல்லீங்க , ஏதோ பிளைப்புகாக இதை செஞ்சுக்கிட்டு இருக்கேன்னுங்க.

நேயர் : சார் என்ன சொல்லறீங்க? நான் ராமசாமி சாதாரண விவசாயி.

ஜின்ஜினகாலஜிஸ்ட் : மனதுக்குள் (அட கண்றாவி பிடிச்சவனே, ஊர் பேரோட உன் பெயரை சொல்லி ஏண்டா கிலி எற்படுத்தறீங்க..) அது ஏதோ கிராஸ்டாக். உங்களுக்கு என்ன பிரச்சனைனு சொன்னீங்க ?

நேயர் : என் பொண்ணுக்கு கல்யாணம் தள்ளி போயிக்கிட்டே இருக்கு. கடன் பிரச்சனை வேற. இதுக்கு என்ன தீர்வுங்க?

ஜின்ஜினகாலஜிஸ்ட் : உங்க பேரு ராம சாமினு இருக்கறது தான் பிரச்சனை, இனிமேல் உங்க பெயரை “ ராம ஷாமி”-னு பேருவையுங்க.

நேயர் : இப்படி பேரு மாத்தினா கடன் பிரச்சனை தீருமா?

ஜின்ஜினகாலஜிஸ்டட் : ராமசாமினு பேருல தான கடன் வாங்கிருப்பீங்க. ராம ஷாமினு மாத்திக்கிட்டா இந்த புது பெயரில் இன்னும் கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம்.

நேயர் : அப்போ புது கடனை என்ன செய்யறதுங்க ?
...... டாங்..... டாங் ....(தொலை பேசி துண்டிக்கப்படுகிறது)

விளம்பர இடைவேளை...

உலகின் முதல் ஜின்ஜினகாலஜிஸ்ட் சந்திக்க வேண்டுமா?

ஜின்ஜினகாலஜிஸ்ட் விஜய அட்டவணை இதோ..

அண்டார்டிக்கா விஜயம்... பிரதி மாதம்...26,27
ஆர்டிக் விஜயம் பிரதி மாதம் 15,30
சகாரா பாலைவன விஜயம் பிரதி மாதம் 29,30 ( பிப்ரவரியில் வரமாட்டாரோ? )

நிகழ்ச்சி தொடருகிறது....


சினிமா நடிகர்களை பத்தி சொன்னேன். நடிகைகளுக்கும் ஜின்ஜினகாலஜி ”அதிகமா” செயல்படுது.
சரோஜாதேவி முதல் ஸ்ரீ தேவி, ஸ்ரீப்ரியா கடந்து இப்போ ஜோதிகா, திரீஷா,ஜெனிலியா வரைக்கும் ஜின்ஜினகாலஜி வர்கவுட் ஆனவங்க பட்டியல் நீளம்.

அப்போ வட மொழி சொல் இல்லதவங்களும் பிரபலம் ஆயிருக்கங்களேனு. ...
உங்களுக்கு இருக்கிற கொஞ்சூண்டு புத்திசாலிதனதை வைச்சுக்கிட்டு நீங்க என்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாம்.
இதுக்கே உங்களுக்கு ஜின்ஜினகாலஜி வேலை செய்யாது. இதோ என்னோட பதில்...
ஒன்னு அவங்க பிறந்தப்ப வைச்ச பெயரில் வடமொழி சொல் இருக்கும். அதனால ஜின்ஜினகாலஜி பிறக்கும் போதே வர்கவுட் ஆயிடும்.

உதாரணமா சிவாஜி ராவ் ரஜினி யானதால ஜின்ஜினகாலஜி ரெண்டு முறை அவருக்கு வர்க் ஆயிருக்கும்.ராஜாஜி பாருங்க அதே தான் காரணம். பெயரில் இரண்டு முறை ஜின்ஜினகாலஜி செஞ்சா அதிக புகழ் பெறலாம்.

மன்மோகன் சிங், சோனியா காந்திக்கு ஜின்ஜினகாலஜி பிரகாரம் பெயர் இல்லைனு நீங்க கேட்கலாம். அவங்க வட நாட்டில் இருக்கிறதால வட மொழி தேவை இல்லை. மேலும் அவங்களை எல்லோரும் மன்மோகன் “ஜீ”, சோனியா ‘ஜீ” னுதான் கூப்பிடுவாங்க. அதனால வட நாட்டுக்காரங்களுக்கு ஜின்ஜினகாலஜி தன்னால அமைஞ்சுடும்.

இப்போ தெரியுதா? சில பிரபலங்கள் பெயருக்கு முன்னாடி ஏன் ...”விய”னு சேர்த்திருக்காங்கனு?

எழுத்தாளர்களை கூட பாருங்க சுஜாதா, ஜெயமோகன்-னு தங்கள் எழுத்தில் புகழ் பெற்றவர்களை காட்டிலும் ஜின்ஜினகாலஜி மூலமா பிரபலமானவங்கதான் அதிகம்.

பிளாக்கு பிளாக்கு-னு ஏதோ இண்டர்நெட்டில் மக்கள் எழுதறாங்க. அதுல கூட பார்த்திங்கண்ணா.. அதிக வாசகர்கள் கொண்ட பிரபல பதிவர்கள் இருவர்களோட இயற்பெயர்கள் “கிருஷ்ணா”-னு இருக்கு அதனால ஜின்ஜினகாலஜி மூலமா பிரபலம் ஆயிட்டாங்க.


அதனால உலக மக்களே உங்கள் வாழ்க்கை வளமாக்கனும்னா ஜின்ஜினகாலஜி மேல நம்பிக்கை வையுங்க.

உங்க பெயரின் சில எழுத்துக்களை மாற்றி அமைத்தாலே போதும் ஜின்ஜினகாலஜி உங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..

உங்கள் வேலை நேரமா பார்த்து, முதலாளிக்கு உழைக்காமல் ஜின்ஜினகாலஜி பற்றி சிந்தித்து எனக்கு தொலை பேசியில் தொடர்புகொள்ளவும்.

அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்...


நிகழ்ச்சி ஆக்கம் , ஊக்கம், தாக்கம்

ஜின்ஜினகாலஜிஸ்ட்
ஸ்”வாமி ஓம்கார்


டிஸ்கி : இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அனைவர் மனதையும் பண்படுத்த எழுதபட்டது.

Thursday, September 11, 2008

நியுமரலாஜி உண்மையா?

நியுமரலாஜி உண்மையா?

மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது. ஒருநண்பர் அதே கேள்வியை இங்கு கேட்கிறார்.


மக்களுக்கு என்ன சொல்வேனோ அதை உங்களுக்கும் சொல்கிறேன்.


நவீன காலத்தில் சிரோ எனும் மேலை நாட்டவர் கண்டு பிடித்தாக சொல்லப்படும் நியுமரலாஜி பலரை பாடாய் படுத்துகிறது. ஒருவரின் நம்பிக்கையை பிறர் தாழ்வாக கூற கூடாது எனும் கருத்தை வைத்து பார்த்தல் நியுமரலாஜியை ஆராயக் கூடாது. உண்மையில் இது நம்பிக்கைசார்ந்தது. ஆய்வுக்கு உட்படுத்தினால் கடைசியில் முட்டாள் தனமானது என்றுசொல்லவேண்டும்.


"ஆலாஜி" எனும் வார்த்தை ஒரு விஷயத்தை அறிவியல் என காட்ட சிலவிஷமிகள் துவக்கியது எனலாம்... நாளை நீங்கள் படிக்கும் பழக்கம்தான்உங்களை செல்வந்தராக்கும் என கூறி அதற்கு "ரீடலாஜி" என்பார்கள். ரீடலாஜி உங்களுக்குள் அதிர்வுகளை தரவேண்டும் என்றால் தினமும் 108 முறைகுறிப்பிட்ட புத்தகத்தை மீண்டும் படி என தண்டனை அளித்தாலும்
ஆச்சரியபடுவதற்கு இல்லை.

பெயரில் அதிர்வு கூடும் என்றால் "மின்சாரம்" என பெயர் வைக்கலமே ?
சற்று சிந்தித்து பாருங்கள் நம்மை யார் பெயர் சொல்லி குப்பிடுவார்கள்? உங்கள் தாய் தந்தை? செல்லம் -தம்பி என எதோ ஒரு செல்ல பெயர் அவர்கள்கூப்பிடுவார்கள்.

உங்கள் வாழ்க்கை துணைவரை பெயர்சொல்லி அழைக்க முடியாது காரணம்அன்பு.
நம்ம குழந்தையை நம்மையே பெயர் சொல்லி அழைக்க விட மாட்டோம்...

ஒரே இடத்தில் மட்டுமே நமது பெயர் சப்தமாகவும் தெளிவாகவும்உச்சரிப்பார்கள்..
.
.
.
.
.
.
அந்த
இடம் கோர்ட் .

டபாலி நம்மை மூன்று முறை அழைப்பர். அதற்காகவா நியுமரலாஜி பிரகாரம்பெயர் மாற்றம் செய்கிறோம்? ஒரு படித்து பட்டம் பெற்ற மருத்துவர் அவரது மருத்துவ மனையை "Klinic" என எழுதி இருந்தார். இவரை என்னவென்று சொல்லி புரிய வைப்பது?

உங்கள் வீட்டின் சமயலறையில் இருக்கும் உப்பு டப்பவிற்கு சர்க்கரை என பெயர்மாற்றினால் கப்பியில் கலக்கி குடிப்பீர்களா ?

அது போல தான் உங்கள் உளநிலையை மாற்ற பெயர் தேவை இல்லை.
பெயரைமாற்றினால் உள்நிலை மாறது.

இந்த மோசடி பத்தாது என்று ஹிப்ரு நியுமரலாஜி, கபால நியுமரலாஜி என வகை வகையாய் ஏமாற்ற பார்க்கிறார்கள். நமது கலாச்சாரத்தில் பெயர் வைக்க ஒரு முறை இருக்கிறது அதை வேறு ஒரு நாள் கலந்து ஆலோசிப்போம் ...

இரண்டு நாளுக்கு முன்னால் ஓர் வலை உலக நண்பரிடம் சொன்ன கருத்தைஉங்களிடமும் சொல்ல ஆசைப்படுகிறேன்.



ஓர்
கதை...

நியூமராலஜி வேலை செய்கிறது.....

காலை தினசரியை புரட்டிகொண்டிருந்த தனுஷ்...அந்த விளம்பரத்தை பார்த்தான்...

"ஆசியாவிலேய முதல் பெயரியல் நிபுணர் விஜயம்....உங்கள் பெயர் மூலம் அதிர்ஷ்டத்தை அடையுங்கள்......"

தனுஷுக்கு நியூமராலஜி மேல் நம்பிக்கை இல்லை , இது போன்ற நம்பிக்கையை பயன்படுத்தும் அவனது நண்பர்களை கிண்டல் செய்வது அவனது வாடிக்கை.

ஆனாலும் அன்று அந்த விளம்பரத்தை பார்த்ததும் அவனக்கு ஓர் ஆவல். தொலைக்காட்சியில் வரும் அந்த நபர் நமது நகரத்திற்கு வருகிறார் ஒரு முறை சென்று பார்ப்போம் என எண்ணினான்.

தொலை பேசியில் அனுமதி வாங்கி அவரை சென்று சந்தித்தான். பிறந்த தேதி மற்றும் பெயரை வாங்கி எண்களை கொண்டு கூட்டி கடைசியில் ஒரு முடிவாக பேச ஆரம்பித்தார் பெயரியல் நிபுணர்...

"தனுஷ் அவர்களே உங்கள் வாழக்கையில் 5 ஆம் எண் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதுமே 5 ஆம் எண் ஆதிக்கம் இருக்கிறது. உங்கள் பெயரும் 5 ஆம் எண் தான். எனவே ஐந்தாம் எண்ணை நன்றாக பயன்படுத்துங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.."

தனுஷால் அவரின் கருத்தை நம்ப முடியவில்லை... அவர் கேட்ட பிரகாரம் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

தனது பைக்கை நிறுத்தும் பொழுதுதான் கவனித்தான் அவனது வாகன எண் 1445.

மெல்ல நடந்து காலிங் பெல்லை அழுத்தும் பொழுது
கருப்பு வட்டத்தில் வெள்ளை நிறத்தில் எழுதபட்ட அவனது வீட்டின் எண் கண்களுக்கு பட்டது (32)

அவனுக்கு ஏதோ புரிய துவங்கியது..

தனது அனுபவத்தை மனைவியிடம் கூறினான் தனுஷ்.

அவனை மையமாக பார்த்த அவனது மனைவி “அஞ்சு” அவனை பார்த்து...”எனக்கு உண்மையா இருக்கும் பொல இருக்குங்க நீங்க கூட நாலு பெண்ணை பார்த்த பிறகு தான் என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க. நியூமராலஜி பார்க்க கூட 5000 பீஸ் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் ஐந்தாம் எண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்க...:” என்றாள்.

தனது நண்பன் பஞ்சாபகேசனுக்கு தொலைபேசியில் தனது ஐந்து எண்ணின் மகத்துவத்தை கூறினான் தனுஷ்.
பஞ்சாபகேசன் உற்சாகமடைந்தான். ஐந்தாம் எண்ணை அதிர்ஷ்டமாக்கும் யோசனைகள் விவாதிக்கபட்டது..
இருவரும் ஐந்தாம் எண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க குதிரை பந்தையத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.

தனது வங்கி இருப்பிலிருந்து ஐந்தாம் எண்ணின் சக்தி கொண்ட 50,000 ரூபாயை எடுத்து கொண்டு குதிரை பந்தைய மைதானத்திற்கு இருவரும் சென்றனர்..

எந்த குதிரை மேல் பணம் கட்டுவது என்று குதிரையின் பெயர் பட்டியலில் சோதனை செய்தனர்..

ஃபைவ் ஸ்டார் பிளாக்கி“ என்ற பெயர் அவர்களின் ஐந்தாம் எண்ணுக்கு ஏற்ப அமைந்திருந்தது.

தனது கைகளில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் முழுவதும் அந்த குதிரை மேல் காட்டினான் தனுஷ்.

பந்தையம் ஆரம்பித்தது... இருவரும் உற்சாகமானார்கள். தனுஷின் முன் பண மழை பொழியும் கனவுகள் வந்து போயின...

பந்தைய முடிவு அறிவிக்கப்பட்டது...

ஃபைவ் ஸ்டார் பிளாக்கி எனும் குதிரை ஐந்தாவதாக வந்திருந்தது.