Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Tuesday, July 19, 2016

ப்ராணாயாம ரகசியங்கள் - ஒலி பதிவு

அனைவருக்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்

ப்ராணாயாம ரகசியங்கள் என்ற உரை  இங்கே ஒலிவடிவில் அளிக்கிறேன்.
வாழ்வில் ப்ராணாயமத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

உரையின் நடுவில் அளிக்கும் பயிற்சியை செய்து பாருங்கள், ஸ்வாசத்தின் முக்கியத்துவம் உடலின் அமைப்பை பயன்படுத்துவதன் அவசியம் உணர முடியும்.



20 ஜூலை 2016 அன்று ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையில் குருபூர்ணிமா விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு குருவருள் பெற பேரன்புடன் அழைக்கிறோம்.


Wednesday, June 18, 2014

குரு பூர்ணிமா அழைப்பிதழ் 2014

குருவின் அருள்பெற்று ஆன்மீக உயர்நிலை பெற 
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Tuesday, April 15, 2014

அருணாச்சல விநாயகர் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக அழைப்பிதழ்

அன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அருணாச்சல விநாயகர் என்ற திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 10,11 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

எனது மாணவர் திரு.அருணாச்சலம் மற்றும் அவரின் குடுபத்தாரின் ஆழ்ந்த பக்தியால் உருவாகி இருக்கிறது இந்த கோவில். பல்வேறு கோவில்கள் விநாயகருக்கு இருந்தாலும் இக்கோவில் சில சிறப்புகளை கொண்டது. தனது இல்லத்தில் இருந்த விநாயகர் கோவிலை விரிவாக கட்ட என்னிய திரு.அருணாச்சலம் அவர்கள் என்னிடம் வடிவமைப்பு பற்றி யோசனை கேட்டார். 

நம் கலாச்சாரத்தில் விநாயகர் முழு முதற்கடவுளாக வணங்கப்படுகிறது. அதே சமயம் அருவுருவமாகவும் முழுமுதற்கடவுளாகவும் ஸ்ரீமேருவை ஆன்மீகவாதிகள் வணங்குகிறார்கள். இரண்டையும் இணைந்து வடிவமைக்கும் எண்ணம் இறையருள் அளித்தது. அதனால் கோவிலின் கோபுரமே முழுமையாக ஸ்ரீமேருவாக ஆகாயத்தை நோக்கியும். கோவிலின் கருவறையின் உட்புறம் பூமியை பார்த்த நிலையில் ஒரு ஸ்ரீமேருவாக இருக்கும் படியும் வடிவைத்து இறையருளால் முழு கற்கோவிலாக அமைந்திருக்கிறது. மஹாபலிபுரம் போன்ற பழமையான கட்டிடகலை நுணுக்கத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.


இது தவிர கருவறையில் அமர்ந்திருக்கும் விநாயக பெருமானின் பீடத்தில் உள்ளேயும் ஒரு ஸ்ரீமேரு என மூன்று நிலைகளை குறிக்கும் வகையில் ஸ்ரீசக்ர மேரு கோவிலாக உருவாகி இருக்கிறது இந்த அருணாச்சல விநாயகர் கோவில்.

கோவிலின் அற்புதத்தை காணவும், நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகத்திற்கும் வந்து இறையருள் பெருமாறு பேரன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு திரு அருணாச்சலம் : 9443107780

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



Wednesday, August 28, 2013

ப்ரணவ உற்சவம்

அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Thursday, July 18, 2013

குருபூர்ணிமா 2013

அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்


Saturday, May 18, 2013

ப்ராணாயாமமும் ஜோதிடமும்

கடந்த ஞாயிறு அன்று திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஜோதிட ஐபெரும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் அடியேன் ஆற்றிய சிற்றுரையின் தொகுப்பு உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ராணாயாமம் என்ற தலைப்பில் ஜோதிட மாநாட்டில் ஆற்றிய உரை இதோ :


Friday, June 22, 2012

குரு பூர்ணிமா 2012

அழைப்பிதழின் மேல் சுட்டியை அழுத்தி பெரிதாக பார்க்கவும்

Saturday, December 31, 2011

மஹா யாகம்

மஹா யாகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Friday, September 16, 2011

வாழ்வியலில் திருமந்திரம்

திருமந்திரம் பற்றிய சொற்பொழிவு நாளை மாலை சிங்காப்பூரில் நடைபெறுகிறது.
வாழ்வியலில் திருமந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றுக்கிறேன்.
அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக ஆனந்தை பருக அன்புடன் அழைக்கிறோம்

நாள் : செப்டம்பர் 17 (சனி) நேரம் : 7.30 மாலை
இடம் : குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயம், சிங்கப்பூர்

Thursday, August 4, 2011

சென்னையில் ஸ்வாமி ஓம்கார்

*Discovery Book Palace*

ஸ்வாமி ஓம்கார் அவர்கள் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். அவரை டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் வரவேற்கிறோம். அவரை சந்திக்க விரும்பும் நண்பர்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மனிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் - வரவும். அவரின் “தினம் ஒரு திரு மந்திரம்” முதல் & இரண்டாம் பாகங்களின் அறிமுக விழாவாக அவை அமைய உள்ளது . அனைவரும் வருக.
----------------------------------------------------------------
டிஸ்கவரி புக் பேலஸ்,
இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது)

தொலை பேசி : 99 44 2 333 55, 99 44 1 333 55

Sunday, July 10, 2011

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்


விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

Thursday, July 22, 2010

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்

விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2

Sunday, January 3, 2010

தினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

ஜனவரி ஒன்றாம் தேதி இறைவனின் செயல் நிலையும் சமாதி நிலையும் இணந்த ஆருத்ர தரிசனம் அன்று தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.



மாலை 6 மணிக்கு ப்ரணவ பீட பஜன் குழுவினரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.



சிறிய ப்ரார்த்தனைக்கு பிறகு தினம் தினம் திருமந்திரம் புத்தகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


புத்தகத்தின் அச்சுப்பணியை சிறப்பாக செய்த வடகரை வேலன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். வடகரைவேலன் அவர்கள் புத்தகம் அச்சிடும் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.



ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.



நிகழ்ச்சியின் முடிவில் மந்திர ஜபம் மற்றும் தியானத்துடன் மக்கள் ஆன்மீக நிலையில் திளைத்தார்கள். அருள் காரியம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

திரு நிகழ்காலம் சிவா, சஞ்சய் காந்தி ஆகிய பதிவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மெருகூட்டினார்கள்.

குறிப்பு : புத்தகம் விலை 80/- ரூபாய். 366 பக்கம் கொண்ட கையடக்க புத்தகம். புத்தகம் வேண்டுவோர் தபாலில் பெறலாம். தபால் செலவு தனி. குறைந்த பட்சம் 2 புத்தகத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் ஒரு புத்தகத்திற்கு அனுப்பினால் போதுமானது. நீங்கள் படிக்க மட்டுமல்ல பிறருக்கு பரிசாக கொடுத்து மகிழ வேண்டிய புத்தகம். அறக்கட்டளை சார்ப்பில் பெரிய புத்தகத்தின் விலையே 80 என நன்கொடையாகவே அமைக்கபட்டுள்ளது. புத்தகம் வேண்டுவோர் அதற்கான வழிமுறைகளை தொலை பேசிவாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி : +91 99 44 2 333 55.


|| ஓம் தத் சத் ||

Tuesday, December 29, 2009

தினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்

திருமந்திரம் என பலராலும் அழைக்கப்படும் சதாசிவ மந்திரம் என்ற நூலுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளேன். சதாசிவ மந்திரம் என்பது ஆன்மீகத்தின் உயர் நிலையில் எழுதப்படாமல் ஆன்மீக உச்ச நிலையில் எழுத்தப்பட்டது. இந்த நூலுக்கு பல நூற்றாண்டுகளாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை சைவ சிந்தாந்தம் அல்லது இந்து சமயம் என்ற வட்டத்தின் உள்ளேயே அமைந்திருந்தது.

ஒரு வரையறையில் அடைக்கப்படாமல் தினம் தினம்
திருமந்திரம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக கண்ணோட்டம் கொண்டு ஒவ்வொரு மந்திரங்களும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் தேவையான விளக்கங்கள் இதில் இருக்கிறது. ஜாதி,மத மற்றும் இனம் கடந்த நிலையில் திருமந்திரம் விளக்கபட்டிருப்பது இந்த நூலில் மட்டுமே என கூறலாம்.

3088 திருமந்திரங்கள் இருப்பதாக கூறினாலும் திருமூலர் காலத்திற்கு பிறகு பல மாற்றங்கள் அதில் செய்யப்பட்டன. திருமூலரின் திருமந்திரத்தில் 3000 திருமந்திரங்களையும் படிக்க வேண்டிய சூழலில் நாம் இல்லை. அதனால் 3000 திருமந்திரத்தில் இருந்து 366 திருமந்திரம் மட்டும் தேர்வு செய்து விளக்கி உள்ளேன். இதனால் தேதி வாரியாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு திருமந்திரம் என அமைப்பில் வடிவமைக்கபட்டுள்ளது.

3000 திருமந்திரங்களை படிக்க இந்த 366 மந்திரங்கள் தூண்டுகோலாக அமையும் என கூறலாம். திருமந்திரத்தில் யோகம் செய்யும் முறை, சித்துக்கள் அடையும் தன்மை, சமாதி செய்யும் முறை, சன்யாசம் என பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இவை சம்சார வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு தேவையில்லை. தினம் தினம் திருமந்திர புத்தகத்தில் இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உதவும் நிலையில் திருமந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறைந்த எண்ணிக்கையில் முதல் பதிப்பு அமைகிறது என்பதால் சில நூறு பிரதிகளே வெளி விற்பனைக்கு இருக்கிறது.


இந்த புத்தகத்தை அச்சுடும் பணியை நம் சக பதிவர் திரு வடகரை வேலன் அவர்கள் செய்கிறார். அவருக்கு என் நன்றிகள்.

வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி ஒன்றாம் தேதி “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு நிகழ்சிகள் துவங்கும்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரி :

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை
பொன்னுரங்கம் சாலை கிழக்கு,
ஆர் எஸ் புரம், கோவை.

தொலைபேசி :99 44 2 333 55

கோவையை சேர்ந்த பதிவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதற்கான விளக்கம் விரைவில் கிடைக்கும்.

Wednesday, December 23, 2009

புத்தக வெளியீடு

அன்புள்ள வேதத்தின் கண்மணிகளுக்கு,

திருமூலரின் திருமந்திரத்தின் முக்கிய மந்திரங்களை விளக்கத்துடன் தொகுத்துள்ளேன். “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வரும் ஆங்கில வருடம் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கபடுகிறது.

பதிவர்கள், இணைய வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

Thursday, August 20, 2009

தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்

நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள்.

பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது.

புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உருவாக்கிய விக்னேஷ்வரர் சிவனை பிரித்தரியாத மூட படைப்பாக இருக்க முடியுமா?

இல்லை சக்தி தான் அவ்வாறு உருவாக்குவாளா? அண்ட சராச்சரத்திற்கும் நாயகனான சிவன் தன் முன் இருக்கும் பாலகன் யார் என தெரியாமல் போர் புரிவாரா? இவை எல்லாம் திருவிளையாடலுக்காக என கொண்டாலும் தலையை கொய்து போடும் அளவிற்கா திருவிளையாடல் நடக்கும்.? எந்த அசுரனையும் வதம் செய்யாலம் அவனுக்கு வரம் மட்டுமே தருபவர் அல்லவா ஈசன்?

புராண கதைகள் அனைத்தும் கூறப்பட்டது உங்கள் மனதில் கணபதியின் உருவம் பதியவேண்டும் என்பதற்கும் உங்களின் பக்தி பெருகவேண்டும் என்பதற்குமே. ஆனால் நாத்திக வாதம் பேசும் சிலர் கணபதியின் உருவை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

ஒரு வேடிக்கை கதை ஒன்று உண்டு. ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நண்பர்கள். தினமும் காலையில் ஒன்றாக நடைபயிற்சி செய்பவர்கள். நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் கொள்கையில் வேறுபட்டவர்கள்.


ஆத்திகர் நடைப்பயிற்சியின் இடையே வந்த அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்ந்தார். அப்பொழுது நாத்திகர் வேடிக்கையாக “நண்பரே இது என்ன முட்டாள் தனம் தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய் குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி..!” என்றார் கிண்டலாக. ஆத்திகர் புன்சிரிப்புடன், “நண்பரே .. உங்கள் நாய் குட்டியை என் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் நாயின் மீது போடுகிறேன். எது சக்தி வாந்தது என தெரியும். சக்தி எதில் இருக்கிறது என முடிவு செய்ய வேண்டியது நாம் தான்..!” என்றார். கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்லுவது அஹங்காரத்தின் அதிகாரமே தவிர வேறொன்றும் அல்ல.

வேடிக்கை கதைகள் இருக்கட்டும் கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?


விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.


ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந்திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான் , சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள்ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
நான் கடவுள் படத்தை பகடி செய்து நான் உருவாக்கிய நான் விநாயகர்

அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என்கிறார்கள். கணபதி என்ற பெயருக்கு கணங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மையில் கணம் என்றால் காலத்தின் அளவு கோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக்கூறலாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் - தடைகளை ஏற்படுத்துபவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.


ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம்.
கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.

மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது !

பிள்ளையாருக்கு
பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.

நாடியும் விநாயகரும் :

ஆன்மீகத்தில் இருக்கும் மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன். உடலின் வலது பகுதி மூளையின் இடது பக்கதிலும் ; இடப்பகுதி வலது மூளையாலும் கட்டுபடுத்தப்படுகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.


நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அமைந்திருக்கிறது.


கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.

விக்னேஷ்வரர் உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டவர் அதனால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அரசமரம் மூலம் சுத்தப்படுத்துகிறோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை அதனால் தான் இது விநாகயர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். வாருங்கள் ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.