Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts
Tuesday, September 20, 2011
திருமந்திரம் எனும் அருமந்திரம்
விளக்கம்
சத்சங்கம்,
தியானம்,
திருமந்திரம்,
விழா
வாழ்வியலில் திருமந்திரம்
நம் அன்றாட வாழ்க்கையில் திருமந்திரம் என்ற தலைப்பில் சென்ற சனிக்கிழமை (17-09-2011) அன்று சிங்கப்பூர் குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயத்தில் சொற்பொழிவு நடைபெற்றது.
நம் வேதத்தின் கண்மணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே ஒலி வடிவில் அளிக்கிறேன்.
மற்றும் ஒரு லிங்க்
விளக்கம்
ஆன்மிகம்,
தியானம்,
திருமந்திரம்,
யோகம்
Friday, September 16, 2011
வாழ்வியலில் திருமந்திரம்
திருமந்திரம் பற்றிய சொற்பொழிவு நாளை மாலை சிங்காப்பூரில் நடைபெறுகிறது.
வாழ்வியலில் திருமந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றுக்கிறேன்.
அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக ஆனந்தை பருக அன்புடன் அழைக்கிறோம்
நாள் : செப்டம்பர் 17 (சனி) நேரம் : 7.30 மாலை
இடம் : குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயம், சிங்கப்பூர்
விளக்கம்
அனுபவம்,
திருமந்திரம்,
விழா
Thursday, August 4, 2011
சென்னையில் ஸ்வாமி ஓம்கார்
*Discovery Book Palace*
டிஸ்கவரி புக் பேலஸ்,
இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது)
ஸ்வாமி ஓம்கார் அவர்கள் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். அவரை டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் வரவேற்கிறோம். அவரை சந்திக்க விரும்பும் நண்பர்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மனிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் - வரவும். அவரின் “தினம் ஒரு திரு மந்திரம்” முதல் & இரண்டாம் பாகங்களின் அறிமுக விழாவாக அவை அமைய உள்ளது . அனைவரும் வருக.
----------------------------------------------------------------டிஸ்கவரி புக் பேலஸ்,
இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது)
தொலை பேசி : 99 44 2 333 55, 99 44 1 333 55
விளக்கம்
சந்திப்பு,
திருமந்திரம்,
பதிவர் வட்டம்,
பேச்சு,
விழா
Sunday, January 30, 2011
விரைவில்.....!
திருமந்திரத்தை மக்களிடம் சேர்க்க எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகள் மூலமாகவும் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். டிவிட்டரும், குறுஞ்செய்தி மட்டுமே பாக்கி..!
இதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமந்திரங்கள் தொகுப்பாக ஒளி/ஒலி வடிவில் வெளியிட இருக்கிறோம். தித்திக்கும் திருமந்திரம் எனும் வீடியோவின் முன்னோட்டம் இதோ.
தித்திக்கும் திருமந்திர வீடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் ஏதேனும் தொலைக்காட்சி வழியாக தினமும் காலை ஆறு மணிக்கு உங்கள் வீடு வரை வந்து தொல்லை கொடுக்க வேண்டி வரும். :)
விளக்கம்
அனுபவம்,
ஆன்மிகம்,
திருமந்திரம்,
பேச்சு
Friday, May 14, 2010
உள்ளங்கை அளவிலான ஒரு நூல்
விளக்கம்
அனுபவம்,
திருமந்திரம்
Sunday, January 3, 2010
தினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
ஜனவரி ஒன்றாம் தேதி இறைவனின் செயல் நிலையும் சமாதி நிலையும் இணந்த ஆருத்ர தரிசனம் அன்று தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

மாலை 6 மணிக்கு ப்ரணவ பீட பஜன் குழுவினரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

சிறிய ப்ரார்த்தனைக்கு பிறகு தினம் தினம் திருமந்திரம் புத்தகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மந்திர ஜபம் மற்றும் தியானத்துடன் மக்கள் ஆன்மீக நிலையில் திளைத்தார்கள். அருள் காரியம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.
|| ஓம் தத் சத் ||

மாலை 6 மணிக்கு ப்ரணவ பீட பஜன் குழுவினரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

சிறிய ப்ரார்த்தனைக்கு பிறகு தினம் தினம் திருமந்திரம் புத்தகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

புத்தகத்தின் அச்சுப்பணியை சிறப்பாக செய்த வடகரை வேலன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். வடகரைவேலன் அவர்கள் புத்தகம் அச்சிடும் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் மந்திர ஜபம் மற்றும் தியானத்துடன் மக்கள் ஆன்மீக நிலையில் திளைத்தார்கள். அருள் காரியம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.
திரு நிகழ்காலம் சிவா, சஞ்சய் காந்தி ஆகிய பதிவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மெருகூட்டினார்கள்.
குறிப்பு : புத்தகம் விலை 80/- ரூபாய். 366 பக்கம் கொண்ட கையடக்க புத்தகம். புத்தகம் வேண்டுவோர் தபாலில் பெறலாம். தபால் செலவு தனி. குறைந்த பட்சம் 2 புத்தகத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் ஒரு புத்தகத்திற்கு அனுப்பினால் போதுமானது. நீங்கள் படிக்க மட்டுமல்ல பிறருக்கு பரிசாக கொடுத்து மகிழ வேண்டிய புத்தகம். அறக்கட்டளை சார்ப்பில் பெரிய புத்தகத்தின் விலையே 80 என நன்கொடையாகவே அமைக்கபட்டுள்ளது. புத்தகம் வேண்டுவோர் அதற்கான வழிமுறைகளை தொலை பேசிவாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி : +91 99 44 2 333 55.
தொலைபேசி : +91 99 44 2 333 55.
|| ஓம் தத் சத் ||
விளக்கம்
அனுபவம்,
ஆன்மீகம்,
திருமந்திரம்,
விழா
Tuesday, December 29, 2009
தினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்
திருமந்திரம் என பலராலும் அழைக்கப்படும் சதாசிவ மந்திரம் என்ற நூலுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளேன். சதாசிவ மந்திரம் என்பது ஆன்மீகத்தின் உயர் நிலையில் எழுதப்படாமல் ஆன்மீக உச்ச நிலையில் எழுத்தப்பட்டது. இந்த நூலுக்கு பல நூற்றாண்டுகளாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை சைவ சிந்தாந்தம் அல்லது இந்து சமயம் என்ற வட்டத்தின் உள்ளேயே அமைந்திருந்தது.
ஒரு வரையறையில் அடைக்கப்படாமல் தினம் தினம் திருமந்திரம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக கண்ணோட்டம் கொண்டு ஒவ்வொரு மந்திரங்களும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் தேவையான விளக்கங்கள் இதில் இருக்கிறது. ஜாதி,மத மற்றும் இனம் கடந்த நிலையில் திருமந்திரம் விளக்கபட்டிருப்பது இந்த நூலில் மட்டுமே என கூறலாம்.
3088 திருமந்திரங்கள் இருப்பதாக கூறினாலும் திருமூலர் காலத்திற்கு பிறகு பல மாற்றங்கள் அதில் செய்யப்பட்டன. திருமூலரின் திருமந்திரத்தில் 3000 திருமந்திரங்களையும் படிக்க வேண்டிய சூழலில் நாம் இல்லை. அதனால் 3000 திருமந்திரத்தில் இருந்து 366 திருமந்திரம் மட்டும் தேர்வு செய்து விளக்கி உள்ளேன். இதனால் தேதி வாரியாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு திருமந்திரம் என அமைப்பில் வடிவமைக்கபட்டுள்ளது.
3000 திருமந்திரங்களை படிக்க இந்த 366 மந்திரங்கள் தூண்டுகோலாக அமையும் என கூறலாம். திருமந்திரத்தில் யோகம் செய்யும் முறை, சித்துக்கள் அடையும் தன்மை, சமாதி செய்யும் முறை, சன்யாசம் என பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இவை சம்சார வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு தேவையில்லை. தினம் தினம் திருமந்திர புத்தகத்தில் இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உதவும் நிலையில் திருமந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறைந்த எண்ணிக்கையில் முதல் பதிப்பு அமைகிறது என்பதால் சில நூறு பிரதிகளே வெளி விற்பனைக்கு இருக்கிறது.
இந்த புத்தகத்தை அச்சுடும் பணியை நம் சக பதிவர் திரு வடகரை வேலன் அவர்கள் செய்கிறார். அவருக்கு என் நன்றிகள்.
வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி ஒன்றாம் தேதி “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு நிகழ்சிகள் துவங்கும்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரி :
ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை
பொன்னுரங்கம் சாலை கிழக்கு,
ஆர் எஸ் புரம், கோவை.
தொலைபேசி :99 44 2 333 55
கோவையை சேர்ந்த பதிவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதற்கான விளக்கம் விரைவில் கிடைக்கும்.
விளக்கம்
ஆன்மீகம்,
திருமந்திரம்,
விழா
Wednesday, December 23, 2009
புத்தக வெளியீடு
அன்புள்ள வேதத்தின் கண்மணிகளுக்கு,திருமூலரின் திருமந்திரத்தின் முக்கிய மந்திரங்களை விளக்கத்துடன் தொகுத்துள்ளேன். “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வரும் ஆங்கில வருடம் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கபடுகிறது.
பதிவர்கள், இணைய வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.
பதிவர்கள், இணைய வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.
விளக்கம்
ஆன்மீகம்,
திருமந்திரம்,
விழா
Tuesday, December 8, 2009
விசுவல் போஸ்ட்
விளக்கம்
திருமந்திரம்,
மொக்கச்சுவை,
யோகம்
Thursday, July 30, 2009
ஹதயோகம்
நமது பாரத கலாச்சாரம் யோகசாஸ்திரத்தின் களஞ்சியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. யோகத்தின் அனைத்து பரிணாமங்களையும் உலகுக்கு அளித்தது பாரதம்.
யோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.
யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.
யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.
நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.
தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.
பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.
கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.
ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.
ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.
மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.
யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.
பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
ஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.
ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.
அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.
உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.
ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.
ஆசனம் மட்டுமே பலருக்கு யோகாசனம் என நினைக்கிறார்கள். பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா ஆகியவற்றை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
யோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.
யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.
யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.
நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.
தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.
பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.
கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.
ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.
ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.
மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.
யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.
பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
ஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.
அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.
உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.
ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்.
ஆசனம் மட்டுமே பலருக்கு யோகாசனம் என நினைக்கிறார்கள். பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா ஆகியவற்றை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(.........யோகம் தொடரும்)
விளக்கம்
ஆன்மீகம்,
ஞானம்,
திருமந்திரம்,
யோகம்
Wednesday, June 10, 2009
இளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்
பழைய பஞ்சாங்கத்தில் திருமந்திரத்திற்கான விளக்கம் கேட்டிருந்தேன்.
திருமந்திரத்தில் இருக்கும் 3048 பாடல்களில் எது பிடிக்கும் என பிரிப்பது சிரமம். பூந்தி லட்டுவில் எந்த பூந்தி இனிப்பானது என சொல்லுவதை போல திருமந்திரத்தில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் நிலையும் ஒன்று. இருந்தாலும் அந்த லட்டுவுக்கு இடை இடையே முந்திரி திராட்சை இருந்து அதன் தித்திப்பை அதிகரிக்குமே? அது போன்ற சில பாடல்கள் உண்டு.
திருமந்திரம் ஒரு ஆன்மீக என்சைக்ளோபிடியா. இந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும் வேறு எதையும் கற்றுக்கொள்ள தேவையில்லை. காரணம் அனைத்து ஆன்மீக விஷயத்தின் சாரமே திருமந்திரம்.
திரு மூலரையும் திருமந்திரத்தையும் பற்றி கூறுவது என்பது எனக்கு எவ்வளவு பிடித்த விஷயமோ அவ்வளவு பிடிக்காதது.
பிடித்தது எதுவெனில் திருமந்திரத்தில் இருக்கும் சொற்பிரயோகம், அதன் நேர்த்தி, பல்கோண விளக்கம் மற்றும் வார்த்தையின் அடர்த்தியான பொருள் என நீண்ட பட்டியல் உண்டு.
பிடிக்காதது என்னவென்றால் பிறருக்கு விளக்கம் கொடுக்க துவங்கினால் தேன் கிண்ணத்தில் விழுந்த எறும்பு போல நான் என்னை மறந்து அதில் இறந்துவிடுவேன்.
இப்பொழுது கூட பாருங்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்ல வந்த நான் எங்கோ மூழ்கிப்போகிறேன்.
திருமந்திரம் பாடல் 1514:
இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.
மேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீக தன்மைக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கும் பாடல். எளிமையாக சொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி. உங்களை சரியாக பிரதிபலிக்கும். சூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக விளக்கம் கொடுக்க முடியும். அவற்றில் சில...
ஞான யோக விளக்கம் :
ஜகத் எனும் உலகம் இரு மஹாபொருளால் உருவாக்கப்பட்டது. அது பிரகிருதி மற்றும் புருஷார்த்தம். பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம நிலை.
பிரகிருதி புருஷனுடன் இணைவதால் நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ ரஜோ மற்றும் தமோ குண சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால் குணங்களை கடந்து பிரகிருதி நிலையில் புருஷார்த்த தன்மை இருந்தால் அதன் பெயர் ஜீவன் முக்தி.
பக்தி யோக விளக்கம் :
சக்தி என்பவள் மாற்றத்திற்கு உட்பட்டவள். சிவ நிலை என்பது மாறாதது. என்றும் இருக்கும் சிவ நிலையானது முதுமையானது. சக்தியானவள் தன்னை எப்பொழுதும் புதுப்பித்து கொள்வாள். அதனால் தான் சக்தியை கன்னிப்பெண்ணாகவும், குமரிப்பெண்ணாகவும் வணங்கும் வழக்கம் நம்மில் உண்டு.
நம்மில் இருக்கும் சிவதன்மையில் சக்தி நிலை ஒன்றிணந்து பரவச நிலைக்கு கொண்டு சேர்ப்பது பக்தியோகத்தின் திருமணம் எனலாம். கோவில்களில் நடக்கும் மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம் இவை இதற்கு சான்று.
குண்டலினி யோக விளக்கம் :
குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்குகிறாள். அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி அறியாமையை நீக்கி சகாஸ்ராரத்தை அடைவாள்.
அறிவியல் விளக்கம் :
அனுக்கரு என்பது நிலையான ஒன்று. அனு உருவாக்கத்தில் முதலில் தோன்றுவது அனுக்கரு. அனுவை சுற்றிவரும் எலக்ட்ரான்கள் /புரோட்டான்கள் ஆற்றல் நிலையில் இருப்பதால் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். சில அறிவியல் வினையால் (குணம் பல காட்டி) அனுக்கருவான கிழவனை பிளந்து இவற்றுடன் மோதசெய்வதால் வெளிப்படும் ஆற்றல் அளவில்லாதது. திருமணம் எப்படி தனி ஒருவனாக செய்ய முடியாதோ, அனைவருக்கும் தெரிந்து விடுமோ அது போல இந்த செயலும் மறைத்து தனிமனிதனாக செய்ய முடியாது.
எளிய விளக்கம் :
ஆன்மீகம் என்றவுடன் ஏதோ வயதானவருக்கான விஷயம் நமக்கு ஏன் என கேட்பவர்கள் உண்டு. அறுபது வயசுக்கு மேல கிருஷ்ணா ராமானு இருக்கிறது தானே இருபது வயசுல இது தேவையா என சிலர் இளைஞர்களை பார்த்து கேட்பதை பார்த்திருக்கிறேன்.
ஆன்மீகம் என்பது இளம் பெண்ணை போன்றது. ஒரு இளம் பெண்ணை முதிய வயதில் திருமணம் செய்தால் எவ்வளவு சிக்கல் வருமோ அதுபோன்றது அறுபது வயது வரை ஆன்மீக நாட்டம் இல்லாமல் அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது.
தக்கவயதில் ஆன்மீகத்தில் ஈடுபடுவது சரியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
எனது விளக்கம்
இதயம் எனும் இருட்டு அறையில் பரமாத்மா எப்பொழுதும் ஒளியுடன் திகள்கிறது. இருள் எனும் அறியாமையில் இருக்கும் மனதை ஒளிபெறச்செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது பல குண தோஷங்களை நீக்கியும், எதிர்பாராத நிகழ்வுகள் (மருட்டி) மூலமும் 'தான்' எனும் அகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக திருமணம் அல்லவா? தான் எனும் அகந்தை அற்று அதனுள் ஒன்றாக இணையும் தெய்வீக திருமணத்திற்கு முயலுங்கள்.
மேற்கண்ட பாடலுக்கு ஓரளவு சரியாக விடை சொன்ன புதுகை.எம்.எம்.அப்துல்லா மற்றும் திருப்பூர் சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். ப்ரணவ பீடத்தில் தயாரான தியான ஆசனம் அவர்களுக்கு எனது இதயப்பரிசாக அளிக்கிறேன்.
பி.கு : எனது திருமந்திர விளக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டம் செய்யவும். மேலும் மிக நுட்பமான திருமந்திரங்களுக்கு விளக்கம் சொல்ல முயலுகிறேன்.
திருமந்திரத்தில் இருக்கும் 3048 பாடல்களில் எது பிடிக்கும் என பிரிப்பது சிரமம். பூந்தி லட்டுவில் எந்த பூந்தி இனிப்பானது என சொல்லுவதை போல திருமந்திரத்தில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் நிலையும் ஒன்று. இருந்தாலும் அந்த லட்டுவுக்கு இடை இடையே முந்திரி திராட்சை இருந்து அதன் தித்திப்பை அதிகரிக்குமே? அது போன்ற சில பாடல்கள் உண்டு.
திருமந்திரம் ஒரு ஆன்மீக என்சைக்ளோபிடியா. இந்த ஒரு புத்தகம் இருந்தால் போதும் வேறு எதையும் கற்றுக்கொள்ள தேவையில்லை. காரணம் அனைத்து ஆன்மீக விஷயத்தின் சாரமே திருமந்திரம்.
திரு மூலரையும் திருமந்திரத்தையும் பற்றி கூறுவது என்பது எனக்கு எவ்வளவு பிடித்த விஷயமோ அவ்வளவு பிடிக்காதது.
பிடித்தது எதுவெனில் திருமந்திரத்தில் இருக்கும் சொற்பிரயோகம், அதன் நேர்த்தி, பல்கோண விளக்கம் மற்றும் வார்த்தையின் அடர்த்தியான பொருள் என நீண்ட பட்டியல் உண்டு.
பிடிக்காதது என்னவென்றால் பிறருக்கு விளக்கம் கொடுக்க துவங்கினால் தேன் கிண்ணத்தில் விழுந்த எறும்பு போல நான் என்னை மறந்து அதில் இறந்துவிடுவேன்.
இப்பொழுது கூட பாருங்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்ல வந்த நான் எங்கோ மூழ்கிப்போகிறேன்.
திருமந்திரம் பாடல் 1514:
இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.
மேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீக தன்மைக்கு ஏற்ப விளக்கம் கொடுக்கும் பாடல். எளிமையாக சொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி. உங்களை சரியாக பிரதிபலிக்கும். சூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக விளக்கம் கொடுக்க முடியும். அவற்றில் சில...
ஞான யோக விளக்கம் :
ஜகத் எனும் உலகம் இரு மஹாபொருளால் உருவாக்கப்பட்டது. அது பிரகிருதி மற்றும் புருஷார்த்தம். பிரகிருதி என்பது பெண் தன்மை கொண்ட இறை நிலை. புருஷார்த்தம் என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம நிலை.
பிரகிருதி புருஷனுடன் இணைவதால் நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ ரஜோ மற்றும் தமோ குண சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால் குணங்களை கடந்து பிரகிருதி நிலையில் புருஷார்த்த தன்மை இருந்தால் அதன் பெயர் ஜீவன் முக்தி.
பக்தி யோக விளக்கம் :
சக்தி என்பவள் மாற்றத்திற்கு உட்பட்டவள். சிவ நிலை என்பது மாறாதது. என்றும் இருக்கும் சிவ நிலையானது முதுமையானது. சக்தியானவள் தன்னை எப்பொழுதும் புதுப்பித்து கொள்வாள். அதனால் தான் சக்தியை கன்னிப்பெண்ணாகவும், குமரிப்பெண்ணாகவும் வணங்கும் வழக்கம் நம்மில் உண்டு.
நம்மில் இருக்கும் சிவதன்மையில் சக்தி நிலை ஒன்றிணந்து பரவச நிலைக்கு கொண்டு சேர்ப்பது பக்தியோகத்தின் திருமணம் எனலாம். கோவில்களில் நடக்கும் மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம் இவை இதற்கு சான்று.
குண்டலினி யோக விளக்கம் :
குண்டலி எனும் மஹாசக்தி மூலாதரத்தில் உறங்குகிறாள். அவள் இருப்பது தெரியாமல் அனைவரும் குருட்டுநிலையில் இருக்கிறார்கள். உடலை காட்டிலும் அவள் எப்பொழுதும் இளமையானவள். என்றாவது ஒருநாள் அவள் பல சித்துக்களை நமக்கு காட்டி தன்பால் வசமாக்கி அறியாமையை நீக்கி சகாஸ்ராரத்தை அடைவாள்.
அறிவியல் விளக்கம் :
அனுக்கரு என்பது நிலையான ஒன்று. அனு உருவாக்கத்தில் முதலில் தோன்றுவது அனுக்கரு. அனுவை சுற்றிவரும் எலக்ட்ரான்கள் /புரோட்டான்கள் ஆற்றல் நிலையில் இருப்பதால் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். சில அறிவியல் வினையால் (குணம் பல காட்டி) அனுக்கருவான கிழவனை பிளந்து இவற்றுடன் மோதசெய்வதால் வெளிப்படும் ஆற்றல் அளவில்லாதது. திருமணம் எப்படி தனி ஒருவனாக செய்ய முடியாதோ, அனைவருக்கும் தெரிந்து விடுமோ அது போல இந்த செயலும் மறைத்து தனிமனிதனாக செய்ய முடியாது.
எளிய விளக்கம் :
ஆன்மீகம் என்றவுடன் ஏதோ வயதானவருக்கான விஷயம் நமக்கு ஏன் என கேட்பவர்கள் உண்டு. அறுபது வயசுக்கு மேல கிருஷ்ணா ராமானு இருக்கிறது தானே இருபது வயசுல இது தேவையா என சிலர் இளைஞர்களை பார்த்து கேட்பதை பார்த்திருக்கிறேன்.
ஆன்மீகம் என்பது இளம் பெண்ணை போன்றது. ஒரு இளம் பெண்ணை முதிய வயதில் திருமணம் செய்தால் எவ்வளவு சிக்கல் வருமோ அதுபோன்றது அறுபது வயது வரை ஆன்மீக நாட்டம் இல்லாமல் அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது.
தக்கவயதில் ஆன்மீகத்தில் ஈடுபடுவது சரியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
எனது விளக்கம்
இதயம் எனும் இருட்டு அறையில் பரமாத்மா எப்பொழுதும் ஒளியுடன் திகள்கிறது. இருள் எனும் அறியாமையில் இருக்கும் மனதை ஒளிபெறச்செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது பல குண தோஷங்களை நீக்கியும், எதிர்பாராத நிகழ்வுகள் (மருட்டி) மூலமும் 'தான்' எனும் அகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக திருமணம் அல்லவா? தான் எனும் அகந்தை அற்று அதனுள் ஒன்றாக இணையும் தெய்வீக திருமணத்திற்கு முயலுங்கள்.
மேற்கண்ட பாடலுக்கு ஓரளவு சரியாக விடை சொன்ன புதுகை.எம்.எம்.அப்துல்லா மற்றும் திருப்பூர் சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். ப்ரணவ பீடத்தில் தயாரான தியான ஆசனம் அவர்களுக்கு எனது இதயப்பரிசாக அளிக்கிறேன்.
பி.கு : எனது திருமந்திர விளக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டம் செய்யவும். மேலும் மிக நுட்பமான திருமந்திரங்களுக்கு விளக்கம் சொல்ல முயலுகிறேன்.
விளக்கம்
ஆன்மீகம்,
திருமந்திரம்,
யோகம்
Subscribe to:
Posts (Atom)









