Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, December 14, 2017

வேளாண்மை பஞ்சாங்கம்- 2018

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (ஹேவிளம்பி -விளம்பி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

வேளாண்மை பஞ்சாங்கம் 2018


இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 
வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.
 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Wednesday, July 5, 2017

உண்மையான பிக் பாஸ்...!

தெருவெல்லாம் விளம்பரம்....
ஜனங்கள் தினமும் பார்த்து இணையத்தில் விவாதிக்கிறார்கள்.

ஒரு வீட்டில் முப்பது கேமராக்களுடன் சிலர் வாழும் வாழ்க்கையை எட்டிப்பார்க்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஏதோ அந்த பதிநான்கு நபர்கள் தான் கேமரா கண்காணிப்பில் வாழ்வது போலவும் நாம் சுகந்திரமாக இருப்பதா நினைத்து தினமும் அவர்களின் வாழ்க்கையை பார்த்து சிரிக்கிறோம்.

உண்மையில் நாம் தான் உலகம் என்கிற வீட்டின் உள்ளே ஆயிரம் ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பில் வாழ்கிறோம்.

நம் பிக் பாஸ் ஒருவரே. அவர் நம்மை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கேமராக்கள் மூலம் பேசுகிறார். நம் தவறை சுட்டிக்காட்டி திருத்துகிறார். வீட்டின் உள்ளே வாழும் சிலர் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் இன்னும் சிலரோ அழுகிறார்கள்.

வேறு சிலர் (இறைவனை நோக்கி) கேமரா முன் நின்று தங்கள் தேவையை மன்றாடுகிறார்கள்.
பிக்பாஸில் 100 நாட்கள், உண்மையான பிக்பாஸில் 100 ஆண்டுகள்..!


இவையெல்லாம் என் கற்பனை அல்ல. திருமூலர் மிகவும் எளிமையாக திருமந்திரத்தில் இதை கூறுகிறார்.

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே
                -2067


விளக்கம் :
கண்காணிப்பவர்கள் இல்லை என சிலர் கள்ளம் பல செய்கிறார்கள்.
உண்மையில் கண்காணிப்பவர் இல்லை என்ற இடமே இல்லை என உணருங்கள்.
கண்காணிப்பவராக எங்கம் கலந்து நின்றவனை நீங்கள் கண்காணிக்க துவங்கினால்
கள்ளம் ஒழிந்து உண்மையை நோக்கி பயணிப்பீர்கள்.


மேலும் திருமூலர்....

கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.
                - 2072

என முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது உண்மையான பிக்பாஸை பற்றி சொல்லுகிறார்.
இனிமேலாவது அந்த வீட்டை விட்டு வெளியேறும் முன் ஏதேனும் சிறப்பான காரியம் செய்துவிட்டு விடைபெறுங்கள். அல்லது கண்காணியை கடைசி வரை கண்காணித்து அவரிடம் பரிசு பெருங்கள்..!

நன்றி : திருமதி. அமுதா - சிங்கப்பூர்

Thursday, June 1, 2017

காசி ஆன்மீக பயணம்




காசி பயண விபரங்கள்

காசி ஆன்மீக பயணம்  22 முதல் 26 ஜூலை வரை நடைபெறும்.

22ஆம் தேதி இரவு 7 மணிக்கு முன் காசியை வந்து அடைதல்.
இரவு உணவு மற்றும் காசி பயண குறிப்புகள்

23ஆம் தேதி காலை 6:00 மணிக்கு கங்கா ஸ்நானம் மற்றும் ச்ரார்தம்.
காலை 8 மணிக்கு விஸ்வநாதர் தரிசனம், அன்னபூரணி மற்றும் விசாலட்சி தரிசனம்.
மதியம் 1 மணிக்கு காலபைரவர் தரிசனம் , விடுதி வந்து அடைந்தல்.
மாலை 5 மணிக்கு கங்கையில் படகு பயணம் மற்றும் மாலை 6:30க்கு கங்கா ஆரத்தி
இரவு 7 மணிக்கு மணிகர்ணிக்கை மயானம் செல்லுதல் - தியானம்
இரவு 8 மணிக்கு இரவு உணவு

24ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு - கயா. விஷ்ணு கயா, புத்தகயா சென்று ச்ரார்தம் செய்து திரும்புதல்
இரவு 10 மணி காசி வந்து அடைதல்

25ஆம் தேதி காலை 6 மணிக்கு அலஹாபாத் செல்லுதல், சங்கமம் நதி நீராடல், விந்தியாச்சல் சக்தி பீடம்
இரவு 9 மணிக்கு காசி வந்து அடைதல்

26ஆம் தேதி காலை 6 மணிக்கு காசி கங்கா ஸ்நானம் - விடைபெறுதல்.

----------------------------------------------------
வீட்டிலிருந்து காசி வந்து அடைதல் மற்றும் திரும்ப செல்லும் பயண செலவு உங்களை சார்ந்தது.
விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வரும் இலவச சேவை உள்ளது.

Thursday, April 20, 2017

இணைய வழி குருகுல பயிற்சி

நமஸ்காரம்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை மற்றும் ஸ்வாமி ஓம்கார் ஃபவுண்டேஷன் - (இந்தியா) இணைந்து இணைய வழி குருகுலபயிற்சியை துவங்குகிறது.


இதன் மூலம் இண்டர்நெட் வழியாக ஆன்மீக கல்வி, ஜோதிட பயிற்சிகள் மற்றும் சாஸ்திர கல்விகளை கற்றுக்கொள்ளலாம். ஆறு மாதம் மற்றும் ஒருவருட பயிற்சிகள் கொண்ட சிறந்த பாடத்திட்டம் கொண்ட பயிற்சிகள்.


பயிற்சியை பற்றிய முக்கிய குறிப்புகள்
  • நேரடியாக ஸ்வாமி ஓம்கார் அளிக்கும் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம்  வெள்ளிக்கிழமை  ஜோதிட பயிற்சி வகுப்புகள்.
  •  இரண்டாம் மற்றும் நான்காம் மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஆன்மீக வகுப்புகள்.
  • நேரம் : இரவு 9 மணி முதல் 11 மணி வரை - இரண்டு மணி நேரம்.
  •  உயர் நட்சத்திர ஜோதிடத்தில் அடிப்படை முதல் ஜாதக பலன் அறியும் வரை தெரிந்துகொள்ளலாம்.
  •  ஆன்மீக வகுப்பில் திருமந்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், விஞ்ஞான பைரவ தந்த்ரா, தியான வகுப்புகள் மற்றும்  ஆன்மீக சூட்சமங்களை தெரிந்துகொள்ளலாம்.
  •  பயிற்சி மொழி - தமிழ் மற்றும் ஆங்கிலம்.
  •  வயது வரம்பு - 16 முதல் ஆர்வம் உள்ள வரை
  •  இணைய வழி குருகுல பயிற்சி தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அல்ல. பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கானது. தமிழகத்தில் வசிப்பவர்கள் நேரடி பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பயிற்சி பல மாணவர்கள் ஒன்றிணைந்து கற்றுக்கொள்ளும் வகுப்பறை பயிற்சியாகும். இது ஒரு இணைய வகுப்பறை. தனி நபர் வகுப்பு (One to One) வகுப்புகளும் கோரிக்கைக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.
  •  பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பயிற்சி சார்ந்த 5 மணி நேர வீடியோ இலவசமாக அளிக்கப்படும்.
  •  இப்பயிற்சி தவிர பிற தலைப்புகளிலும் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
  •  பயிற்சிக்கு பின் சுய பரிசோதனை களம் அமைத்து தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும்.
  • நாதகேந்திரா என்ற ஆன்மீக சூழலை மேம்படுத்தும் நோக்கில் இவை கட்டணப்பயிற்சியாக அமைய இருக்கிறது.
  • கட்டணம் மற்றும் இதர விளக்கம் வேண்டுமெனில் swamiomkar@gmail.com மின்னசலிலோ அல்லது 9944233355 என்ற வாட்சப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


பயிற்சிகள் மே மாதம் 12ஆம் தேதி முதல் துவங்குகிறது.

இணைய வழி குருகுலபயிற்சியில் இணைய அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.

Sunday, February 26, 2017

சிவனின் கண்ணீர்..!


சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்கும் நோக்கத்தில் ஒருத்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்.

புதிய இளைஞர் வந்திருந்தார். முதல் சந்திப்பிற்கு உண்டான பணிவுடன் வணக்கம் சொல்லி அமர்ந்தார். என்ன விஷயமாக சந்திக்க வந்தார் எனக்கேட்டேன்.

இனி எங்களுக்குள் நடந்த கலந்துரையாடல் இங்கே...

 “ஸ்வாமிஜி, எனக்கு ருத்ராக்‌ஷ மாலை வேண்டும். இங்கே கிடைக்கும் என என் நண்பர் சொன்னார்.”

“ஓ அப்படியா? கண்டிப்பாக வாங்கிக்கலாம். அதுக்கு முன்னாடி ஏன் ருத்ராக்‌ஷ மாலை வாங்கறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் சிவ பக்தன் ஸ்வாமி, சிவராத்திரி அன்னைக்கு பூஜை செஞ்சு போட்டுக்கலாம்னு வாங்க வந்தேன்”

”ரொம்ப நல்லது. கையில என்ன வச்சிருக்கீங்க?”

“இதுவா? ஐபோன் ஸ்வாமிஜி”

“நீங்க ஸ்டீவ்ஜாப் பக்தரா?...இதை எதுக்கு வச்சிருக்கீங்க?”

“என்ன ஸ்வாமி இப்படி கேக்கறீங்க?.. இது பேசரதுக்கு”

“நீங்க புரிஞ்சுக்க்கணும்னு தான் இப்படி கேட்டேன். சிவ பக்தரா மட்டும் இருந்தா போதுமா? ருத்ராக்‌ஷம் எதுக்கு பயன்படுது?”

சிறிது யோசனைக்கு பிறகு....

“அதுவா சாமி ......நல்ல எண்ணம் வரும், நம்மை சுத்தி தீட்டு இருக்காது. கெட்டவங்க வைப்ரேஷன் நம்ம கிட்ட வராது. ஒரு விதத்தில் நம்மை காப்பாத்தும்”...

ஓ......நல்ல எண்ணம், கெட்டவங்க வைப்ரேஷன்....தீட்டு...... அப்ப இவரு ஏன் அதை போட்டுருக்காரு?  இவருக்கும் நல்ல எண்ணம் வரணும்னு போட்ருக்காரா? என நான் இந்த படத்தை காட்டினேன்...

”?!?!”

மிகக்குழப்பத்துடன்...என்னை பார்த்தார் அந்த இளைஞர்.

தம்பி ருத்ராக்‌ஷம் எதுக்கு அதன் பயன்பாடு என்ன என தெரிஞ்சு பயன்படுத்தனும்.  சிவ பக்தர் சொல்லிட்டு பயன்படுத்தறது, சினிமாவில் ஹீரோ போட்ட ட்ரஸ்னு வாங்கி போட்டிருக்கற மாதிரி ஒரு செயல். அது சிவனையும் பக்தியையும் அசிங்கப்படுத்தும்.

ஒரு உயிர்த்தன்மை இல்லாத ஐ போன் வாங்கும் போதே இது என்ன என்ன வசதிகள் , செயல்பாடுகள் இருக்குனு பல மணி நேரம் செலவிட்டு , எந்த செல்போன் நல்லா வேலை செய்யும்னு யோசிச்சு வாங்கும் நீங்க, ஆன்மீக விஷயம் மட்டும் ‘நல்ல வைப்ரேஷன்’ சொன்னா கண்ணை மூடிட்டு வாங்கறீங்களே.. இது நியாயமா?

ஆனா ஒன்னு தம்பி....உங்களை மாதிரி சிவனை நோகடிக்கிறவங்கங்க ஊருக்குள்ள பலர் இருக்காங்க...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!

எப்படி ஸ்வாமி? புரியலையே...

ருத்ரனின் ஆக்‌ஷம் - சிவனின் கண்ணீர் தான் ருத்ராக்‌ஷம்னு சொல்லுவாங்க. உங்களை மாதிரி ஆட்களை பார்த்து அவருக்கு நிறைய கண்ணீர் வரும்...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!
ஸ்வாமி என்னை வெச்சு விளையாடறீங்கனு நினைக்கிறேன். ருத்ராக்‌ஷத்தை பத்தி நல்லா தெரிஞ்சுட்டு வந்தே நான் வாங்கிக்கிறேன் எனொல்லி விடெற்றார்.
 
ஆன்மீகத்ற்றி ெரிய இளர்கைவிட.. ஆன்மீகத்ை அறைகுறையாக ற்றத்ைய இளர்கால் நம் காச்சாரத்ின் ‘வைப்ரன்’ கெட்டுப்போகிறு...!

 இப்படியாக அன்று ஆதிசிவன் திருவிளையாடல் நிகழ்த்தினார்... 

Saturday, February 18, 2017

சிவனுக்கும் யோகத்திற்கும் என்ன சம்பந்தம்?

 
யோக சாஸ்திரத்தின் மூலமாக சிவன் இங்கே நிறுவப்படுகிறார். இன்னும் சில தினங்களில் வரலாறு உருவாக்கப்பட உள்ளது. ஆதி யோகி சிவன் அவர் தான் அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்தவர் என கதை சொல்லப்படுகிறது. சப்த ரிஷிகள் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தை உலகிற்கு சொன்னார்கள் என கதை விரிவடைகிறது. 

எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்கள் கதையை மெருகேற்றுங்கள். உங்கள் செயல் எத்தகையதாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் யோக பாரம்பரியத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க முயன்றாலோ களங்கப்படுத்த நினைத்தாலோ என்னால் கடந்து போக முடியாது...!

இங்கே சில கேள்விகள் எழுப்புகிறேன். அது மக்களின் விழிப்புணர்வை தூண்டட்டும். இந்த கேள்விகளுக்கு ’நீங்கள்’ தயவு செய்து பதில் சொல்ல வேண்டாம். உண்மையான யோக சாஸ்திரத்தின் விதையான முதல் குரு பதில் சொல்வார்... பொறுத்திருப்போம்!


1) சிவன் தான் ஆதி குருவாக யோக சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தார் என்றால், இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களில் ஏன் யோகா சொல்லித்தரப்படுவதில்லை?

2) 108 வகையான நாட்டிய முத்திரைகளை காண்பிக்கும் வடிவம், நடராஜ ரூபமாக இருக்கும் சிவனை காண்கிறோம். ஆனால் எங்கும் யோகாசனம், ப்ராணாயாமம் செய்யும் சிவனை கண்டதில்லை.  இவர் வேறு யோக சிவன் வேறா?

3) நீங்கள் வடிவமைத்திருக்கும் ஆதி யோகி உண்மையான யோக பாரம்பரியம் என்றால் இந்தியாவில் உள்ள பாரம்பரியம் மிக்க யோக ஆசிரமங்களில் ஏன் ஆதி யோகி வடிவம் சிறிய அளவில் கூட இல்லை?

4) விஞ்ஞான பைரவ தந்த்ரா என்ற முதல் யோக நூல் தியானத்தை 112 வகையாக  கற்றுக்கொடுக்கிறது. அதன் அடிப்படையில் 112 ஆதார சக்கரங்களாக வைத்துக் கொண்டு பெரிய முகத்தை செய்திருக்கிறார்கள். அதில் உள்ள பைரவர் தான் ஆதி குருவா? பைரவர் தான் சிவனா? இல்லை வேறு வேறா?

5) அஷ்டாங்க யோகத்தில் முக்கியமாக சத்யா (உண்மை), ஆஸ்தேயா(ஆடம்பரம் இல்லாத எளிமை) ஆகிய யாம நியமங்களை அனுசரித்துதான் இந்த யோகத்தின் ஆதி குருவின் முகம் அமைக்கப்படுகிறதா?

யோக வரலாற்றை மறைத்து திருத்தி எழுத முயற்சி செய்பவர்களுக்கு என் கண்டனங்கள்.
மக்களுக்கு யோக பாரம்பரியத்தை பற்றிய தவறான விழிப்புணர்வு அளிப்பதற்கும் கண்டங்களை பதிவு செய்கிறேன்.