Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label பங்கு சந்தை. Show all posts
Showing posts with label பங்கு சந்தை. Show all posts

Monday, May 31, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 3

கேள்வி : நீங்க பங்குசந்தையை பற்றி எழுதுவது விளம்பர நோக்கிலா? உங்களிடம் எல்லோரும் பங்கு சந்தை பற்றிய ஜோதிட தகவலை SMS மூலம் பெறும் நோக்கில் எழுதுகிறீர்களா?

பதில் : உண்மையை கூற வேண்டுமானால் - இல்லை. திருவண்ணாமலையை பற்றி எழுதினேன், காசியை பற்றி எழுதினேன் அந்த ஊர்களுக்கு நான் வழிகாட்டியா என கேட்பது போன்றது இது. பங்கு சந்தையை தினமும் கணித்து SMS மூலம் பலருக்கு அனுப்புகிறோம். விபரங்களுக்கு
vediceye.in. இங்களின் பங்கு சந்தை சேவையில் இதுவும் ஒன்று. இதற்கு கட்டணமும் உண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கிறோம். தற்சமயம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஏற்படுத்த முடியாத அளவுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.


கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடத்தில் கணிப்பது எதற்கு? ஜோதிடத்தை நிரூபணம் செய்யவா?

பதில் : சான்றோர்கள் கண்டறிந்த ஜோதிடத்தை யாரும் நிரூபணம் செய்ய வேண்டியது இல்லை. ஜோதிடம் தன்னை தானே நிரூபணம் செய்து கொள்ளும். நான் பங்குசந்தை ஜோதிடம் மூலம் முயலுவது எனது ஜோதிட ஆற்றலை எவ்வளை தூரம் செலுத்த முடியும் என என்னை நானே பரிசோதனை செய்யும் களம் தான்.

அதன் மூலம் சிலர் பயன்படுவதால் வெளிப்படையாக செய்கிறேன். எனது பல ஆய்வுகள் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அது பங்குசந்தை போல வெளிப்படையாக பலரால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது எனக்கு தெரியும்.

கேள்வி : சென்ற வாரம் நீங்கள் கூறிய பங்கு சந்தை கணிப்பு எப்படி இருந்தது? அதைபற்றி கூறுங்களேன்.

பதில் : முன்பு கூறியது போல 80% சரியாக அமைந்திருந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை கணித்ததில் செவ்வாய் கிழமையும், புதன் முற்பகலும் தவறாக இருந்தது. மற்ற தினங்கள் சரியாக அமைந்தது. தினமும் எந்த பங்குகள் விலை ஏறும் என கூறியது மிகச்சரியாக வந்தது.

உதாரணத்திற்கு திங்கள் கிழமை எனது கணிப்பையும், சந்தையின் போக்கை பற்றிய வரைபடத்தையும் கீழே தருகிறேன்.


சந்தை ‘up' என குறிப்பிட்டது போல கிடக்கை மட்ட சிகப்பு கோட்டில் இருக்கும் சென்ற நாளின் அளவை விட மேலே இருப்பது காணலாம்.
அம்புஜா சிமெண்ட் பங்கு குறிப்பிட்டதை போல உயர்ந்து இருப்பதை காண முடியும்.

வரைபடம் nseindia.com என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்திய பங்கு சந்தையின் தின நடவடிக்கைகள் nseindia.com என்ற தளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் எனது கணிப்பை சரிபார்க்க முடியாமல் சிரமம் கொண்டார்கள் என கேள்விப்பட்டேன். இனி இந்த வலைதளம் பயன்படும். பல பதிவர்கள் மற்றும் பங்கு சந்தை சார்ந்தவர்கள் எங்களை தனிமடலில் பாராட்டினார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.

கேள்வி : பங்கு சந்தையை எப்படி கணிப்பது? அதற்கான பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். விபரங்கள் கூறுங்களேன்.

பதில் : இந்த சுட்டியில் பாருங்கள் முழுமையான விபரம் கிடைக்கும். விபரம்

முழுமையாக ஜோதிடம் தெரியாதவர்களுக்கு கூட பங்குசந்தை கணிக்கும் அளவுக்கு அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொடுக்கிறோம். அதனால் அனைவரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

கேள்வி : பங்கு சந்தை ஜோதிட பயிற்சிக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறதே?

பதில் : உண்மையில் இது அதிகம் இல்லை. சுகாதாரமான உணவு மற்றும் நல்ல சூழலில் பயிற்சி ஆகியவை கொடுப்பதற்கான கட்டணம். மேலும் நாங்கள் வழங்கும் கையேடு மற்றும் சான்றிதழ்கள் இக்கட்டணத்தில் அடங்கும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் ரூபாய் 6600 என்ற கட்டணம், படித்து முடித்த பிறகு உங்களின் ஒரு நாள் லாபம் என புரிந்திருக்கும்.

வருமானத்திற்கான கல்வி வருமானத்தை கொடுக்கும் முதலீடு என மறந்துவிடாதீகள்.

Friday, May 21, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 2

கேள்வி : பங்கு சந்தை என்பது அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளை சார்ந்தது செயல்படும் ஒன்று. உதாரணமாக நானோ கார் ஒன்று தீப்பிடித்து விபத்து ஆனது என்றால் உடனடியாக டாடா மோட்டார் நிறுவன பங்குகள் விலை குறையும். பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் பங்கு சந்தை தடுமாற்றம் காணும். அப்படி இருக்க இவற்றை எல்லாம் ஜோதிடத்தில் கண்டு பங்கு சந்தையை நிர்ணயம் செய்ய முடியுமா?

பதில் : முடியும். உங்கள் பார்வை மிகவும் உலகியல் சார்ந்ததாக இருப்பதால் அவ்வாறு நினைக்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் ஒரு லாட்டரி தொழில் செய்யும் தொழில் அதிபர் என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்தார். இன்னும் ஆறு மாதங்களில் உங்களுக்கு தொழில் மாறும் என்றேன். தமிழகத்தில் பிரபல லாட்டரி அதிபரான அவர் என்னை கிண்டலாக பார்த்துவிட்டு சென்றான். பின்னர் அரசு ஆணையால் அவருக்கு தொழில் மாறியது என்பது உண்மை.

அரசு தடை செய்யப்போகிறது என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அரசு, உலக நிகழ்வு மற்றும் இயற்கை சீற்றங்களை கணிக்க ஜோதிடத்தில் வேறு தனி முறைகள் உண்டு. ஆனால் தனிநபர் ஜாதகத்தில் அவர் தொழில் மாறுவார் என சொல்லலாமே தவிர எப்படி என கூற முடியாது. அது போலவே இன்று வங்கி பங்குகள் உயர்வடையும், இன்று ஆட்டோமொபைல் பங்கு உயர்வடையும் என ஜோதிடத்தில் கூற முடியும் ஆனால் எதனால் உயர்கிறது என கூற இயலாது.

என்னிடம் காரணம் கேட்டால் சூரியன், குரு சேர்க்கையால் வங்கி பங்கும், சுக்கிரன் செவ்வாயால் ஆட்டோமொபைல் பங்கும் உயர்ந்தது என்பேன்.


கேள்வி : ஸ்ரீ திருஷ்டி என்பது என்ன? நீங்கள் கணித்து சொல்லுவீர்கள் அதன் படி நாங்கள் முதலீடு செய்ய வேண்டுமா? ஸ்ரீதிருஷ்டியில் மென்பொருட்கள் உண்டா?

பதில் : ஸ்ரீ திருஷ்டி என்பது ஒருவகை ஜோதிட ஆய்வு முறை. இம்முறை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பங்கு சந்தையை கணிக்கலாம். நான் கணிக்கிறேன் என கூறுவதற்காக பங்கு சந்தை ஜோதிடத்தை கற்றுக்கொடுப்பதில்லை. சிந்திக்கும் அறிவு இருக்கும் யாவரும் எங்களிடம் கற்றுக்கொண்டு நீங்களாகவே கணிக்கவும், முதலீடும் செய்யலாம். கற்றுக்கொடுத்த பிறகு எனக்கோ உங்கள் முதலீடுக்கோ தொழிலுக்கோ சம்பந்தம் இல்லை.

ஸ்ரீதிருஷ்டி என்பது ஜோதிட சிந்தாந்தம் என்பதால் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் இருந்தால் நீங்களும் கணிக்கலாம். இது ஜோதிட கணிதம் செய்யும் கால விரயத்தை குறைக்கும். மற்றபடி மென்பொருள் பங்கு சந்தையை கணிக்காது.


கேள்வி : ஸ்வாமி, நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளேன். தங்களின் பங்கு ஜோதிடத்தை இதில் பயன்படுத்த முடியுமா? எத்தனை விழுக்காடு வரை கணித்து லாபம் ஈட்ட முடியும்?

கரன்ஸி டிரேடிங் தாராளமாக பயன்படுத்த முடியும். மேலும் இந்தியாவில் இன்னும் கரன்ஸி டிரேடிங் முழுமையாக திறக்கப்படவில்லை. அவ்வாறு முழுமை பெற்றால் 80% கணிக்க முடியும்.

கேள்வி : என் ஜாதகத்தை தாங்களுக்கு அனுப்பினால் பங்கு சந்தையில் நான் ஈடுபடலாமா? லாபம் கிடைக்குமா என கூறமுடியுமா? இதற்கு கட்டணம் உண்டா?

சமூக சேவை செய்ய முடியுமா? ஆன்மீக வழியில் செல்லுவேனா போன்ற பொது நல கேள்விகளுக்கு கட்டணம் இல்லாமல் வழிகாட்டுவேன். உங்கள் பொருளாதார உயர்வுக்காக கேட்கிறீர்கள் அதற்கு கட்டணம் இருக்கும். சேவை நோக்கமான கேள்விக்கு மட்டுமே இலவசம்.

கேள்வி : அடுத்த வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும் ?

24-05-2010 முதல் 28-05-2010 வரை உள்ள தேசிய சந்தை நிலவரம்(NIFTY) தினவாரியாக கணிக்கப்பட்டது.


இது மேலோட்டமான கணிதம் மட்டுமே. பங்கு சந்தை ஜோதிடம் கற்றால் இது ஆழமாக செயல்படுத்த முடியும். எனது ஜோதிட அறிவை சோதிக்கவே இங்கே கணிதம் செய்துள்ளேன். இதை கொண்டு யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட பலன் 75 முதல் 85% சரியாக இருக்கும்

கேள்வி :சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும்?

ஜூன் மாதத்தில் முதல் வாரம் அதிக தடுமாற்றத்துடன் காணப்படும். புள்ளிகள் 4900 முதல் 5190 வரை இருக்கும். 17 ஜூனுக்கு பிறகு சந்தை ஏற்றம் காணும்.

தேசிய பங்கு சந்தை குறைந்த புள்ளியாக 4780 புள்ளிகளும் அதிகபட்சம் 5380 புள்ளிகளும் பெறும்.
மே மாதத்தை விட வர்த்தகம் செய்ய நல்ல மாதமாக இருக்கும்.


Wednesday, May 19, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ]

பங்கு சந்தை பற்றிய மினி தொடர் ஒன்று எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. எனது பணிச்சூழல் கருதி தற்சமயம் எழுத இயலவில்லை. ஆனால் பங்கு சந்தையும் ஜோதிடமும் எப்படி இணையும் என பலருக்கு பல்வேறு கேள்விகள் இருப்பதால் அவற்றை விளக்கும் பொருட்டே இந்த பதிவு. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் [அ.கே.கே- Frequently asked questions] அதற்கான விளக்கமும் இதில் இடம் பெறும்.

1.கேள்வி : பங்கு சந்தை என்பது சூதாட்டம் அல்லவா? அதை ஆன்மீக வழியில் இருக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளலாமா?

சூதாட்டம் என்றால் என்ன? உங்கள் மனம் யாரோ சொன்ன ஒரு விஷயத்தை கொண்டு கட்டமைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் சூதாட்டத்தை ஒரு நாள் அனைவரும் புறக்கணித்தால் இந்திய நாடு என்ன ஆகும் தெரியுமா? வெளிப்படையான கணக்குகளுடன் தேர்ந்த பொருளாதார நிபுணர்கள் குழுவுடன் செயல்படும் பங்குசந்தை எப்படி சூதாட்டம் என கூறமுடியும்?

உற்பத்தி விலையை மறைத்து வியாபாரி மற்றொரு விலையில் பொருட்களை விற்கிறார். அவரிடம் உற்பத்தி விலையை கேட்டால் கூறமாட்டார். அவரை நாம் சூது கொண்டவர் என கூறி வியாபாரமே சூதாட்டம் தான் என கூற முடியுமா?

அரசால் அங்கீகாரம் செய்யபட்ட வெளிப்படையாக லாப நஷ்டங்கள் தெரியக்கூடிய விஷயங்கள் எதுவும் சூதாட்டம் ஆகாது. அதிர்ஷ்டம் என்ற தன்மையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விதியில் அடிப்படையில் இயங்கி வருமானம் பெருக்கும் விஷயங்கள் சூதாட்டம் ஆகாது.


முன் காலத்தில் உணவு என்பது மிகவும் அத்தியாவசிய விஷயமாக இருந்தது. உணவு கிடைக்காத மனிதனின் ஆன்மீக வளர்ச்சி தடை ஏற்பட்டது. அதனால் ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் தங்களின் சேவை மூலம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட வேண்டும் என அன்னதானம் செய்தனர்.

வள்ளலார் இதில் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

ஆனால் தற்சமயம் இருக்கும் சமூக சூழல் உணவை தாண்டிய நுகர்பொருள் கலாச்சாரத்தில் இருக்கிறது. உணவுடன் மனிதன் திருப்தி அடைவதில்லை. அதனால் தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி அளித்தாலும் தொலைக்காட்சி பெட்டியையும் இலவசமாக அளிக்கிறது. அரிசி, தொலைக்காட்சியுடன் தேவை நின்றுவிடுவதில்லையே..!

உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கையில் செல்லும் மனோநிலை ஏற்படும். உங்களுக்கு உணவையும் பொருளையும் கொடுத்து சோம்பேறிகளாக்காமல் உங்களுக்கு அறிவை போதித்து அதன் மூலம் வாழ்க்கை வளத்தை பெருக்குவதே எனது நோக்கம்.

உங்களின் வாழ்க்கைக்கான பொருளாதாரத்தை தேடும் வழி உங்களுக்கு தெரிந்திருந்தால் என் உதவி உங்களுக்கு தேவை இல்லை.

மாறாக பொருளாதார தன்னிறைவு பெறாதவர்களாக இருந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


2.கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடம் மூலம் எப்படி கணிக்க இயலும்?

ஜோதிடம் என்பது அடுத்த வினாடி என்ன நிகழும் என கணிக்கும் கருவி. ஜோதிடம் எதிர்காலத்தை கணிக்கும் விஷயம் என்பதால் அடுத்த வினாடியும் எதிர்காலம் தானே? பல்வேறு ஜோதிட முறைகள்

இருந்தாலும் நாங்கள் பயன்படுத்தும் ஜோதிட முறை மிகவும் நுட்பமானது. நட்சத்திர ஜோதிடம் என அதற்கு பெயர்.

நாங்கள் பயன்படுத்தும் ஜோதிடத்தில் -
கிரிகெட்டில் எந்த அணி வெற்றி பெறும்,
எவ்வளவு ரன் எடுப்பார்கள்,
முதலில் எந்த அணி பேட் செய்வார்கள்,
தடைபட்ட மின்சாரம் எப்பொழுது மீண்டும் வரும்,
எம் எதிரில் இருக்கும் மனிதர் மனதில் இருக்கும் விஷயங்கள் என்ன,
கைத் தொலைபேசியில்

அடுத்த அழைப்பு எப்பொழுது வரும் போன்றவற்றை விஷயங்களை கணிக்க முடியும். அவ்வாறு இருக்கும் பொழுது மிக நுட்பமான பங்குசந்தையையும், அதைவிட மிகவும் சிக்கலான எந்த விஷயத்தையும் ஜோதிடத்தில் கையாளலாம்.

கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒருவித தாக்கத்தை மனித மனதில் ஏற்படுத்துகிறது. அதை பொருத்தே மனிதனின் முதலீடு செய்யும் அமைப்பு இருக்கிறது. முதலீடுகள் எப்படி அமையப்போகிறது என தெரிந்துகொண்டால் அதன் படி நாமும் முதலீடு செய்து லாபம் அடையலாம்.

3. தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் பலர் பங்கு சந்தை நிலவரம் கூறுகிறார்களே அதற்கும் ஜோதிட ரீதியாக சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் ?

பொருளாதார நிபுணர்கள் தொழில்நுட்ப ரீதியாக செய்திகள் (Technical analysis) கூறும் ஆய்வுகள் மற்றும் முந்தைய பங்குசந்தை வரலாறு அடிப்படையாக கொண்டது. மேலும் இத்தகைய செய்திகள் 30% அளவே வெற்றி வாய்ப்பு கொண்டது என தொழில் நுட்ப நிபுணர்களே கூறுகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் பங்கு சந்தையை கணிப்பது எளிது. படித்த சில நாட்களிலேயே உங்களால் 80% கணிக்க முடியும். உங்கள் மதி நுட்பத்தால் 80 சகவிகிதம் என்பதை மேலும் அதிகரிக்க முடியும். 80% சதவிகிதம் என்பது பல்வேறு தொழில்நுட்பவாதிகள், பங்கு வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் முன் நிரூபணம் செய்யப்பட்ட விஷயம்.

4.பங்கு சந்தையில் ஜோதிடத்தைக் கொண்டு எவற்றை எல்லாம் கணிக்கலாம்?

நிஃப்டி என்ற தேசிய பங்கு சந்தையின் போக்கை ஜோதிடம் மூலம் கணிக்கலாம். ஒரு நாளில் சந்தையின் நிலை துவங்கி ஒரு வருடத்திற்கு எவ்வாறு இருக்கும் என கணிக்க முடியும். ஈக்குவிடி மற்றும் டெரிவேட்டிவ் என்ற இரு பகுதியிலும் ஜோதிடத்தில் கணிக்க முடியும்.

கமாடிட்டி மற்றும் கரன்ஸி டிரேடிங் ஆகியவையும் கணிக்கலாம். ஆனால் இவை இரண்டும் முழுமையான சட்ட தெளிவுக்கு வரவில்லை என்பதால் நாங்கள் பயன்படுத்துவதில்லை.

5.ஜோதிடம் மூலம் கணிக்கும் பொழுது என் ஜாதகம் வேண்டுமா?

ஆம். உங்கள் ஜாதகம் இருந்தால் கூடுதல் செளவுகரியம் உண்டு. கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் பயன்படுத்தும் ஸ்ரீதிருஷ்டி என்ற பங்கு சந்தை ஜோதிட கோட்பாட்டில் மூன்று நிலைகள் உண்டு.

ஜோதிடம் மூலம் சந்தையை கணித்தல்.
ஜோதிடம் மூலம் தனிமனிதனின் எவ்வளவு லாபம் அடைவார் என நிர்ணயம் செய்யலாம்.
ஜோதிடம் மூலம் ஒருவர் எந்த பங்கு வங்கினால் லாபம் அடையலாம் என கூறமுடியும்.

இதனால் பெரிய லாபங்கள் ஈட்டவில்லை என்றாலும் ஏற்படும் நஷ்டத்தை முற்றிலும் தவிர்க்கலாம். உங்களுக்கு பிறப்பு ஜாதகம் இல்லை என்றாலும் ஆருட ஜாதகம் கணித்து அதே அளவுக்கு பயன்பெற முடியும்.

6.யார் எல்லாம் பங்கு சந்தை ஜோதிடம் பயிற்சி எடுக்கலாம்?

அடிப்படை பங்குசந்தை தெரிந்தவர்கள், இல்லத்தரசிகள், முழு நேரம் பங்கு வர்த்தகத்தை தொழிலாக கொண்டவர்கள். பங்கு வர்த்தகம் செய்ய விரும்புபவர்கள் இதில் பயிற்சி செய்யலாம்.

ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை. பயிற்சியில் பங்கு சந்தைக்கு தேவையான அளவு ஜோதிட விதிகளை கற்றுக்கொடுக்கிறோம். அதனால் ஜோதிடம் கற்றவர்கள், கல்லாதவர்கள் பேதம் இல்லை.

7. ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை நிர்ணயித்தால் அனைவரும் லாபம் அடைந்துவிடுவார்களே?
உங்களிடம் பயின்றவர்கள் எல்லாம் அதிக லாபம் ஈட்டுகிறார்களா?

ஜோதிடத்தை பங்கு சந்தையில் பயன்படுத்தலாம் என பலருக்கு தெரியாது. 15 கோடிக்கும் மேல் இருக்கும் பங்கு வர்த்தகர்களில் ஆயிரம் பேர் ஜோதிடத்தை பயன்படுத்துகிறார்கள் என்றாலே அது அதிக எண்ணிக்கை.

நாங்கள் கற்றுத்தருவது அதிக லாபம் அடைய அல்ல. தெளிவாக லாபங்கள் அடையவும், நஷ்டத்தை தவிர்க்கவும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஸ்ரீதிருஷ்டி என்ற எங்கள் ஜோதிட முறையில் சரியாக கையாண்டால் முதலீட்டை 10 முதல் 15 சதவீதம் ஒரு மாதத்தில் உயர்த்தலாம். ஆனால் அதிக ஆசையுடன் 50 முதல் 70 சதம் உயர்த்த எண்ணினால் வீழ்ச்சியே மிஞ்சும்.

நிதானமாக முதலீடு செய்து நிரந்தரமாக வருமானம் பார்க்க ஸ்ரீதிருஷ்டி முறை பயன்படும். பணம் இரட்டிப்பு ஆக்கும் முறை அல்ல இது.

என் மாணவர்களில் பலர் நிதானமாக வருமானம் சேர்க்கிறார்கள். நானும் அதன் அடிப்படையிலேயே இயங்குகிறேன்.

[தொடரும்]
----------------------------------------------------
இது போன்று கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள் அடுத்த பகுதியில் வெளிவரும்.

வரும் வெள்ளிக்கிழமை அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும் என்ற எனது கணிப்பு வெளிவரும்.

Friday, December 5, 2008

பங்கு சந்தையும் ஜோதிடமும்

பங்கு சந்தையும் ஜோதிடமும்
- மாயையின் முழு ரூபம்

உலகில் மக்கள் ஒரே நோக்கத்தில் பயக்கிறார்கள். அவர்கள் பொருள் சேர்க்கை மற்றும் காமம் எனும் பாதையே அவர்களில் இலக்கு என்கிறார் ஆதிசங்கரர். பஜ கோவிந்தம் சுலோகத்தில் இதை குறிப்பிட்டு இவை அழியக்கூடியது என்கிறார். கோவிந்தனை பாடி அழியாத நிலையை அடைவது இதை விட எளிது என்கிறார்.



ஆனால் இன்றைய உலக மக்களிடையே இதை சொன்னால் ஆதிசங்கருக்கு கிடைத்த மரியாதை கிடைக்காது. ஏசு நாதருக்கு கிடைத்த கடைசி மரியாதையே கிடைக்கும். ஆனால் மனிதன் தற்சமயம் இருக்கும் மாய நிலையை வைத்து பார்க்கும் பொழுது இது போன்ற பொருளாசை மற்றும் உடலாசையிலிருந்து விடுதலை அடைய கட்டுப்பாடு விதிப்பது , மேலும் பல தவறுகளை சமூகத்தில் செய்ய தூண்டும். இதை செய்யாதே செய்யாதே என சொல்ல சொல்ல தானே மனிதன் மீண்டும் மீண்டும் செய்கிறான்?

ஞான மார்கத்திற்கு செல்ல பல வழிகள் உண்டு.நமது பாரத மண் பல ஞானிகள் அவதரித்த அவதார பூமியாகும். தன் உடலை வருத்தி கடவுளின் சொரூபத்தை அறிவது என்பது ஞான மார்கத்தின் ஓர் வழியாக இருந்தாலும், பொருள் தேடி மனதின் சமஸ்காரத்தின் தேவைகளை பூர்த்தி செய்து பின்பு கடவுளை அடைவது மற்றொரு வழியாகும். பொருள் தேடி கடவுளை அடைவது நடக்கக்கூடிய காரியமா என உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்? இதே வியப்பு ஓர் பத்திரிகையாளருக்கு ஏற்பட்டு, என்னிடத்தில் கேள்வியை கேட்டார்.

பத்திரிகையாளர் : ஆன்மீகவாதிகள் ஆசையை விடு,பொருள் சேர்க்கையை செய்யாதே எனும் பொழுது நீங்கள் பங்கு சந்தை மேலும் பல வழிகளில் சம்பாதிக்கும் வழிகளை கூறுவதன் காரணம் என்ன?

ஸ்வாமி ஓம்கார் : மனித குலம் பொருள்சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் மனதில் திட சங்கல்பத்துடன் செயல்படுகிறது. இதை கட்டுப்படுத்த கூறினால் விரக்தியான மனப்பான்மையும் மேலும் கர்ம சமஸ்காரங்களும் அதிகரிக்கும். அவர்கள் பிறவியெடுத்த கர்மா பொருள்சேர்ப்பது என்றால் அந்த கர்மா நிறைவடைய உதவி செய்வது தவறல்ல. மேலும் கௌதம புத்தர், புரந்தரதாசர், ஜனக மஹாராஜா, பட்டினத்தார், தாயுமானவர் மற்றும் சைதன்யர் இவர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்த ஞானிகள் என்பது உங்களுக்கு தெரியும். என் வழிகாட்டுதலில் உள்ளவர்களை பக்தர்களாக்கும் கடமை மட்டுமல்ல அவர்களை ஞானிகளாக்குவதே எனது எண்ணம். ஆகவே உங்களில் இருக்கும் புத்தனை காண என்னிடம் வழி உண்டு...!

கலியுகத்தில் ஞான மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இது ஓர் வழி என உங்களுக்கு புரிந்திருக்கும். நமது உலக கடமைக்காக மட்டும் பொருள் சேர்த்து மற்ற நேரங்களில் மனதில் இறை உணர்வை நிலை நிறுத்தினால் , ஆன்மீக உயர்வடையோம். ஆனால் பொருள் சேர்த்து அதன் மூலம் கர்மங்களை அதிகரிக்காமல் இயன்றளவு தர்மம் செய்வது, பிறர் பொருளுக்கு அதிக ஆசை படாமல் இருப்பது அவசியம்.

சிலர் ஆசை படாதே அல்லது ஆசை படு என மக்களுக்கு கூறுகிறார்கள். ஆசை படுவதற்கோ அல்லது ஆசை படாமல் இருப்பதற்கோ எந்த வழியையும் அவர்கள் கூறுவதில்லை. செல்வந்தன் ஆசைபடாமல் இருப்பதும் ஏழை ஆசைபட வேண்டும் என்பதும் எனது எண்ணம். எல்லோரும் ஆசை படாதீர்கள் என கூறுவது ஏழைக்கு பொருந்தாது. இது ஆண்மை குறைவுள்ளவன் பிரம்மச்சரிய விரதம் இருப்பதும், வறுமையில் இருப்பவன் ஏகாதசி விரதம் இருப்பதாக சொல்வதற்கு சமம். ஆக பொருள் சேர்ப்பது சமூகத்திற்கும், இயற்கைக்கும் எதிராக இல்லாதவரை நல்லது தான்.

மேலும் தேவை பூர்த்தியானதும் மனதில் ஓர் வெறுமை உண்டாகும். நான் எங்கிருந்து வந்தேன், நான் யார் என கேள்வி எழும் இந்த விசாரம்(கேள்வி) ஞான மார்கத்தின் முதல் படி. ஓர் வைசியன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அவனது தர்மம். அவனிடத்தில் தத்துவங்கள் உதிர்ப்பது முட்டாள் தனம். இங்கு வைசியன் என நான் குறிப்பிடுவது வியாபாரம் செய்பவர்களைதான்.

ஓர் சந்தையில் வியாபாரம் செய்வது போன்றது தான் பங்கு சந்தை. ஆனால் இங்கு வாடிக்கையாளர்களை நீங்கள் நேரில் பார்க்க முடியாது. உங்கள் முதலீடு வளர்ந்ததும் , அதை கொண்டு பயனடைகிறீர்கள். ஜோதிடத்திற்கும் பங்கு சந்தைக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் நட்சத்திரங்களின் சக்திக்கு உட்பட்டு செயல்படும் பொழுது பங்கு சந்தையும் அதில் பங்கு கொள்பவர்களும் இதில் அடக்கம் என்பதை மறந்து விட கூடாது. ஜோதிடம் மூட நம்பிக்கை, துல்லியமான பலன்கள் ஜோதிடத்தில் கூற முடியாது எனும் எண்ணம் மக்களிடையே பரவிகிடக்கிறது. ஜோதிடத்தை

உங்களால் நிரூபிக்க முடியுமா? என என்னிடத்தில் கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் எண்ணம் எனக்கு வந்தது. வேதகால விஞ்ஞானமான ஜோதிடத்தின் உண்மையை நிரூபிக்க பங்கு சந்தையை தேர்ந்தெடுத்தேன். காரணம் அதிக ஏற்ற இறக்கங்களும், வியாபார அனுபவம் வாய்ந்தவர்களால் கூற முடியாத பங்கு சந்தையை துல்லியமாக கூறுவது சவாலான விஷயம். ஜோதிடம் மூலம் காலையில் கூறப்படும் பலன் பங்கு சந்தை முடிவடைந்ததும் மாலையில் தெரிந்துவிடும். ஒரே நாளில் ஜோதிடம் என்ற உண்மை ரூபிக்கப்பட்டு விடும். மேலும் நஷ்டமடைபவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

எனது இந்த கருத்தை பல பத்திரிகைகள் பாரட்டியுள்ளன. ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை காண்போம். பிறப்பு ஜாதகத்தில் 2,6,10,11 ஆம் வீடுகளுடன் 5 ஆம் பாவ உபநட்சத்திரம் ன்ற நட்சத்திரம் தொடர்பு கொண்டு மேலும் 10ஆம் பாவ உபநட்சத்திரம் 5ஆம் பாவத்தை குறிகாட்டினால் அவர்கள் பங்கு சந்தை மூலம் பலன் அடைவார்கள். ராசியில் துலா ராசி , கிரகத்தில் குரு மற்றும் புதன் பங்கு சந்தையை குறிக்கும். 2,5,10,11 ஆம் பாவங்கள் தசா புக்தி காலத்தில் ஜாதகர் நல்ல பலனை அடைவார்.

ஓர் சில நிறுவனங்களில் முதலீடு செய்து பயனடைய முடியுமா என்பதை பிரசன்ன முறையில் நிர்ணையம் செய்வதே சிறந்தது. பிரசன்ன ஜாதகத்தில் 6 ஆம் பாவ உப நட்சத்திரம் 2,6,11 குறிகாட்டினால் முதலீடு வளரும் என்பதையும்,5,8,12 யை குறிகாட்டினால் முதலீடு நஷ்டமடையும் என அறியலாம். பங்கு சந்தையில் பல வகையான றுவனங்கள் பங்கு கொள்கிறது. பெட்ரோல், தொலை தொடர்பு என நிறுவனங்களின் தொழில் பிரிவுகள் வேறுபடுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பான முன்னேற்றம் பெறும் வியாபார பிரிவு( sector) சந்திரனை கொண்டு முடிவு செய்யலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திராதிபதி வியாபார பிரிவை நிர்ணையம் செய்கிறார். கிரகங்கள் குறிக்கும் வியாபார பிரிவுகள் சிலவற்றை காணலாம்.

கிரகம்-----------------------------------தொழில் பிரிவு
சூரியன் / செவ்வாய்
----------------மருந்து பொருட்கள்
குரு / புதன்
-----------------------------வங்கி
சுக்கிரன் / புதன்
------------------------கம்யூட்டர்
புதன்
--------------------------------------தொலை தொடர்பு
கேது / சந்திரன்
------------------------எரிவாயு
சந்திரன்
--------------------------------- சிமெண்ட்
செவ்வாய் / சுக்கிரன்
-----------------ஆட்டோ மொபைல்
சனி/சந்திரன்/யுரைனெஸ்
---------பெட்ரோலியம்
சனி / நெட்டியூன்
----------------------மது
சனி/செவ்வாய்
------------------------உரம்

இது போன்ற கிரகத்தின் தன்மையை கொண்டு வியாபார பிரிவில் முதலீடு செய்யலாம். மேலும் பங்கு சந்தை இயற்கை சீற்றங்களையும் , அரசியல் மாற்றத்தையும் பொருத்து மாறுபடும். ஜோதிடத்தில் உலக நிகழ்வுகளை கணிக்க தெரிந்த ஜோதிட அறிஞர்களுக்கு பங்கு சந்தை கணிப்பது எளிது. சிறிது பங்கு வர்த்தக அறிவும் , முழு ஜோதிட ஞானமும் இருந்தால் பங்கு சந்தை உங்கள் வங்கி கணக்கை உயர்த்தும். இந்த ஜோதிட விதிகளை கொண்டும் , கடவுளின் அனுகிரகத்தாலும் உங்கள் பங்கு வர்த்தகம் சிறக்க வாழ்த்துகிறேன்.