Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 31, 2010

பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ] - பகுதி 3

கேள்வி : நீங்க பங்குசந்தையை பற்றி எழுதுவது விளம்பர நோக்கிலா? உங்களிடம் எல்லோரும் பங்கு சந்தை பற்றிய ஜோதிட தகவலை SMS மூலம் பெறும் நோக்கில் எழுதுகிறீர்களா?

பதில் : உண்மையை கூற வேண்டுமானால் - இல்லை. திருவண்ணாமலையை பற்றி எழுதினேன், காசியை பற்றி எழுதினேன் அந்த ஊர்களுக்கு நான் வழிகாட்டியா என கேட்பது போன்றது இது. பங்கு சந்தையை தினமும் கணித்து SMS மூலம் பலருக்கு அனுப்புகிறோம். விபரங்களுக்கு
vediceye.in. இங்களின் பங்கு சந்தை சேவையில் இதுவும் ஒன்று. இதற்கு கட்டணமும் உண்டு.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவை அளிக்கிறோம். தற்சமயம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஏற்படுத்த முடியாத அளவுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.


கேள்வி : பங்கு சந்தையை ஜோதிடத்தில் கணிப்பது எதற்கு? ஜோதிடத்தை நிரூபணம் செய்யவா?

பதில் : சான்றோர்கள் கண்டறிந்த ஜோதிடத்தை யாரும் நிரூபணம் செய்ய வேண்டியது இல்லை. ஜோதிடம் தன்னை தானே நிரூபணம் செய்து கொள்ளும். நான் பங்குசந்தை ஜோதிடம் மூலம் முயலுவது எனது ஜோதிட ஆற்றலை எவ்வளை தூரம் செலுத்த முடியும் என என்னை நானே பரிசோதனை செய்யும் களம் தான்.

அதன் மூலம் சிலர் பயன்படுவதால் வெளிப்படையாக செய்கிறேன். எனது பல ஆய்வுகள் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அது பங்குசந்தை போல வெளிப்படையாக பலரால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது எனக்கு தெரியும்.

கேள்வி : சென்ற வாரம் நீங்கள் கூறிய பங்கு சந்தை கணிப்பு எப்படி இருந்தது? அதைபற்றி கூறுங்களேன்.

பதில் : முன்பு கூறியது போல 80% சரியாக அமைந்திருந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை கணித்ததில் செவ்வாய் கிழமையும், புதன் முற்பகலும் தவறாக இருந்தது. மற்ற தினங்கள் சரியாக அமைந்தது. தினமும் எந்த பங்குகள் விலை ஏறும் என கூறியது மிகச்சரியாக வந்தது.

உதாரணத்திற்கு திங்கள் கிழமை எனது கணிப்பையும், சந்தையின் போக்கை பற்றிய வரைபடத்தையும் கீழே தருகிறேன்.


சந்தை ‘up' என குறிப்பிட்டது போல கிடக்கை மட்ட சிகப்பு கோட்டில் இருக்கும் சென்ற நாளின் அளவை விட மேலே இருப்பது காணலாம்.
அம்புஜா சிமெண்ட் பங்கு குறிப்பிட்டதை போல உயர்ந்து இருப்பதை காண முடியும்.

வரைபடம் nseindia.com என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்திய பங்கு சந்தையின் தின நடவடிக்கைகள் nseindia.com என்ற தளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் எனது கணிப்பை சரிபார்க்க முடியாமல் சிரமம் கொண்டார்கள் என கேள்விப்பட்டேன். இனி இந்த வலைதளம் பயன்படும். பல பதிவர்கள் மற்றும் பங்கு சந்தை சார்ந்தவர்கள் எங்களை தனிமடலில் பாராட்டினார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.

கேள்வி : பங்கு சந்தையை எப்படி கணிப்பது? அதற்கான பயிற்சி பட்டறை சென்னையில் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். விபரங்கள் கூறுங்களேன்.

பதில் : இந்த சுட்டியில் பாருங்கள் முழுமையான விபரம் கிடைக்கும். விபரம்

முழுமையாக ஜோதிடம் தெரியாதவர்களுக்கு கூட பங்குசந்தை கணிக்கும் அளவுக்கு அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொடுக்கிறோம். அதனால் அனைவரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

கேள்வி : பங்கு சந்தை ஜோதிட பயிற்சிக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறதே?

பதில் : உண்மையில் இது அதிகம் இல்லை. சுகாதாரமான உணவு மற்றும் நல்ல சூழலில் பயிற்சி ஆகியவை கொடுப்பதற்கான கட்டணம். மேலும் நாங்கள் வழங்கும் கையேடு மற்றும் சான்றிதழ்கள் இக்கட்டணத்தில் அடங்கும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் ரூபாய் 6600 என்ற கட்டணம், படித்து முடித்த பிறகு உங்களின் ஒரு நாள் லாபம் என புரிந்திருக்கும்.

வருமானத்திற்கான கல்வி வருமானத்தை கொடுக்கும் முதலீடு என மறந்துவிடாதீகள்.

1 கருத்துக்கள்:

Guru said...

ஸ்வாமி, வணக்கம்.
கேள்வி பதில் அருமை. நல்ல விளக்கங்கள் !
பங்கு சந்தை வணிகத்தை கணிப்பது போல commodity வணிகத்தையும் கணிக்க இயலுமா ? உயரும் தங்க விலை எப்பொழுது நிலை பெறும்? குறையும் என்பதை ஸ்ரீ திருஷ்டியின் மூலம் கணிக்க இயலும? இல்லை வேறு முறை இருக்கிறதா ?