Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label கோவி கண்ணன். Show all posts
Showing posts with label கோவி கண்ணன். Show all posts

Friday, December 18, 2009

கோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..!



சிங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக நாடுகளால் விமர்சிக்கபட்ட கோவியார் பவனின் வாரம் முழுவதும் கிடைக்கும் உணவுகளின் பட்டியல் கீழே.

திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா

நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் கிழமை: ஜாதிக்காய் பிரியாணி

காய்களில் இருக்கும் ஜாதியை சுட்டிக்காட்டும்படி செய்யபட்ட பிரியாணி. வாரம் ஒருமுறை இதில் இருக்கும் காய்கறிகள் மாறுமே தவிர ஜாதிக்காய் போடாமல் பிரியாணி செய்ப்பட மாட்டாது.

புதன் கிழமை: மத்திய கிழக்கு பொடிமாஸ்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விரும்பு சாப்பிடும் உணவுகள் இங்கே செய்து தரப்படும். அதில் நீங்கள் குற்றம் குறை கூறினால் , சமையல் புத்தகத்திலிருந்து அந்த பகுதி சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்படும்.

வியாழக்கிழமை: தினமலர் கிச்சடி

தினமும் பூக்கும் மலர்களை கொண்டு செய்யபட்ட கிச்சடி. மலரின் ஓரம் மடங்கி இருக்கிறது, அதில் இருக்கும் நிறம் சரியல்ல என சுட்டிகாட்டி உங்களுக்கு கிச்சடி பரிமாறுவார்கள்.

வெள்ளிக்கிழமை : எதிர் வினை பரோட்டா மற்றும் சுய வினை பாயா

அடுத்த ஹோட்டலில் இருக்கும் உணவுப்பொருள்களை கேவலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பரோட்டாக்கள். அவற்றை இங்கே வரவழைத்து உங்கள் முன்னால் கொத்து பரோட்டா போடப்படும். அனத்தும் சாப்பிட்டப் பிறகு சுய வினையின் காரணமாக ஏற்படும் அஜீரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.

ஆயிரம் முறை உணவு அளித்த உலக சாதனை உணவகத்தில் நீங்களும் உணவருந்த வேண்டும் என துடிக்கிறீர்களா? எல்லாம் காலக் கொடுமையை காண :) இங்கே செல்லவும்.
-----------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் காணும் திரு கோவி.கண்ணனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Friday, January 30, 2009

கோவிகண்ணனின் அட்டகாசங்கள்

வலைபதிவுலகில் கடந்த ஆறு மாதங்களாக தட்டிக்கொண்டிருக்கிறேன். ( எழுதிக்கொண்டு என எப்படி சொல்லுவது? ) அதற்கு சில பல காரணங்கள்.

ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஓர் ஊடகமாக பயன்படுத்த எண்ணம். பல்வேறு பரிணாமங்களில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன் அதற்கு காரணம் இருந்தது. எழுதும் எண்ணம் இருந்தாலும் போதிய நேரம் இல்லை என்பதும், சில புத்தகங்களையும் மாத பத்திரிகையையும் எழுதி வந்ததால் ஏற்பட்ட நெருக்கடியும் காரணமாக இருந்தது.

பதஞ்சலி யோக சூத்திரம், திருமந்திரம், ஜோதிட ஆய்வு என பல ஆன்மீக, வேத கருத்துக்களை புத்தக வடிவில் எழுதி வந்தேன். ஒரு நாள் யோக சூத்திரம் பற்றி ஒரு கருத்தை சுட்டியாக எனது மாணவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். திரு ஜெயமோகன் அவர்கள் பதஞ்சலியோக சூத்திரத்தை பற்றி எழுதிய பதிவு அது.

அதை படித்து விட்டு கிளர்ந்து எழுந்த நான், பல வரிகள் கொண்ட கடிதத்தை அனுப்பினேன். :)) வழக்கம் போல ஜெயமோகன் அவர்கள் அதை சாத்வீகமாக அனுகினார். :)

இந்த காலகட்டத்தில் தான் எனக்கு வலையுலகம் பரிச்சயமானது.. குரு கீதை என ஓர் வலைதளத்தை ஆரம்பித்து ’தட்டி’ தடுமாறி சில கதைகளை பதிவேற்றினேன். குரு சிஷ்யன் பற்றிய கதைகள் 108 எழுத வேண்டும் எனது எண்ணம். அந்த தளத்தில் வந்த கதைகளை படித்துவிட்டு காரசாரமாக பின்னூட்டம் இடுவதன் மூலமும் தனி மின்னஞ்சல் அனுப்பியும்
தொடர்பு கொண்டவர் தான் கோவி கண்ணன்.

கோவி.கண்ணன் என்ற பதிவர் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். (..தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள முயல வேண்டாம் என நல்லெண்ணத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். :)) )

அவரை பற்றி சில வரிகள்...

காலாகாலமாக சொல்லிவந்த விஷயங்களை காலம் எனும் தலைப்பில் பதிவு செய்து வருபவர்.
நாத்திகருக்காக பெரியார் படமும், ஆத்திகருக்காக வள்ளலார் படமும் போட்டு இரு தரப்பு வாசகர்களையும் கவர்ந்தவர் ( என்ன ஒரு அரசியல்த்தனம் ;). .)

கூகுள் பற்றியாகட்டும், ஆன்மீகம் பற்றியாகட்டும் எதுவாக இருந்தாலும் பொளந்து...கட்டுவார் ...
( இது என்ன ”பொளந்து...கட்டுவார் ...” என கேட்பவர்களுக்கு விளக்கம்: பதிவில் இவர் விஷயத்தை பொளந்து விடுவார்.. படிக்கும் வாசகர்கள் பின்னூட்டத்தில் கட்டுவார்கள் பாருங்கள் அப்படியொரு கட்டு :)) )

கோவியாரின் வலைதளத்தில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பரிமாறிகொள்ளும் பொழுது
அவரின் தூண்டுதலால் உருவானது தான் இந்த தளம். ஜோதிட சாஸ்திரத்தை பற்றி தெளிவு கொடுக்கும் ஓர் வலைபக்கம் உருவாக அவருக்கும் பங்கு உண்டு. ( இந்த வலை தளத்தின் மேல் காண்டுடன் இருப்பார்கள் கவனிக்க.. கோவியாருக்கும் பங்கு உண்டு)

ஆக இப்படி எனது வலையுலக பயணம் செயல்பட காரணமாக இருந்தார் கோவியார்.
சினிமா.. சினிமா எனும் தொடர் பதிவை பதிவர்கள் எழுதி வர அதில் என்னை அழைத்தார் எழுத..

என்னை தொடர செய்ய அவருக்கு எப்படி எண்ணம் வந்தது என எனக்கு தெரியவில்லை... ஆனால் அவரின் அழைப்பை சிறப்பாக செயல்படுத்தினேன் என்றே நினைக்கிறேன். சினிமா சினிமா என்ற எனது பதிவை படித்தவர்கள் பல குழப்பத்திற்கு ஆளானார்கள். ஸ்வாமி இப்படி எழுதலாம என்றும்... பிரபல பதிவர் வேறு பெயரில் எழுதுகிறார் என்றும் விமர்சமம் வர துவங்கியது. இந்த பதிவுக்கு பிறகு நகைச்சுவை பதிவு எழுதினால் வரவேற்பு இருப்பதை உணர்ந்தேன்...

இவ்வாறு எனது பல வலையுலக பயணத்திற்கு தூண்டுகோலாகவும், கிரியா யூக்கியாகவும், மேம்படுத்துபவராகவும், மோட்டிவேட்டராகவும் ( அட எல்லா எழவும் ஒன்னுதானு நீங்க சொல்லுவது கேட்கிறது - என்ன செய்ய கோவியார் அதற்கு தனி பேமெண்ட் தருவதாக சொன்னார்) இருந்தவர் கோவியார்.

இத்தகைய மாபெரும் பணியை செய்த கோவியார் கோவை வருவதாக சொன்னார். என்னை சந்திப்பதாகவும் கூறினார். மகிழ்ச்சியில் திளைத்தேன்... ஆனந்த கூத்தாடினே.. ( பாரட்டு பதிவு எழுதும் போது இதெல்லாம் சேத்துக்கனும் ;) ).

சொன்னது போல என்னை ச்ந்திக்க வரும் நேரத்தை தொலைபேசினார்...
”சிங்”கை கோவி கண்ணன் என்பதால் பஞ்சாபி போல தலையில் தலைப்பாகை வைத்திருப்பாரோ...
கண்ணன் என்பதால் தலையில் மயிலிற்கு வைத்திருப்பாரோ என எண்ணினேன்..

அவர் வந்த பிறகு தான் தெரிந்தது அவர் தலையில் ஒன்றும் இல்லை என்பது. ;)

வெளிநாட்டில் அதிக காலம் இருந்ததால் என்னவோ சொன்ன நேரத்தில் சரியாக வந்தார். தனது இந்திய அடையாளத்தை இழந்துவிட்டார் என்பதற்கு இதுவே சாட்சி... ;)



மேலும் இந்தியர்கள் புதிய நபர்களை அறிமுகப்படுத்தி , பயணம் செய்து சந்திப்பதை விரும்பமாட்டார்கள். வெளிநாட்டிலிருந்து வந்ததும் கையில் மினரல்வாட்டர் பாட்டிலுடன் உறவினர் வீட்டுக்கு சென்று அளந்து விடுவார்கள்...

இது போன்ற செய்கை அற்றவராக கோவிகண்ணன் இருந்தார். ( முக்கியமாக மினரல்வாட்டர் பாட்டில் கையில் இல்லை .. ;) பையில் இருந்திருக்கலாம்..!)

2000 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஆசிரமத்தையும்...
ஸ்வாமி ஜீ பிசியாக இருக்கிறார் காத்திருங்கள் என கூறி குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையில் உற்கார வைப்பார்கள்...ஸ்வாமி சிஷ்யர்கள் புடைசூழ வருவார் என எதிர்பார்த்திருப்பார் என நினைக்கிறேன்.

ஆனால் நடந்தது வேறு :)

அவரின் கற்பனையில் இருந்த ”நான்” இயல்பில் வேறு மாதிரி இருந்திருப்பேன் என நினைக்கிறேன். அல்லது சுவாரசியமாக இருந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். வந்த சில மணி நேரத்தில் பிற பதிவர்களை சந்திக்க வேண்டும் என கிளம்பினார்..

நாங்கள் என்ன பேசினோம் என கேட்பவர்களுக்கு... இரு நாட்டு அதிபர்கள் என்ன பேசினார்கள் என வெளியிடுவார்களா? அதுபோலதான் நாங்கள் பேசியதும்..

ஒரே வித்தியாசம்... நங்கள் “NOT" அதிபர்கள்.

இனிக்க இனிக்க பேசினார்... குழந்தை சிரிப்பது போல அழகாக சிரித்தார்.. ( இது எல்லாம் உண்மைதாங்க.. அவர் எழுத சொல்லலை..)

திருப்பூர் சென்று பரிசல்காரன், வெயிலான் போன்றவர்களை சந்திக்கப் போவதாக சொல்லி விடைபெற்றார்... (பாவம் என அவர்களை நினைத்து தனியாக ப்ரார்த்தனை செய்தேன் ;) ).

நான் நேரில் சந்தித்த முதல் வலைபதிவர் இவர்தான். நான் வலைபதிவுக்கு வரும் முன்னரே கோவை வலைபதிவர்கள் கூட்டம் நடந்து முடிந்துவிட்டதால் பிற பதிவர்களை சந்திக்க முடியவில்லை..

என்ன கோவை பதிவர்களே சந்திப்போமா? ஆவலாக உள்ளேன்... (என்னையும் ஆட்டத்தில் சேத்துக்குங்கப்பா...;) )

விடைபெரும் பொழுது சில புத்தகத்தையும் சாக்கலெட்டையும் வழங்கினார்.

சாக்கலெட்டை விட அவரின் சந்திப்பு இனிமையாகவே இருந்தது...