எதிர்கால பலன் கூறுதல் என்பதற்கு பல்வேறு வழிகளை நம் கலாச்சாரம் கண்டுணர்ந்து இருக்கிறது. மனிதனின் எதிர்காலம் மற்றும் அவனை பற்றிய தகவல்களை உள்ளங்கையின் அமைப்பு மற்றும் அதன் வரிகளை கொண்டு கணிக்க முடியும் என்பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூபணம்.
கைகளில் உள்ள ரேகைகள் மட்டுமல்ல, கால்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் ரேகை அமைப்பையும் கொண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ்திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறாமல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பது விஞ்ஞானம் அல்ல.
ரேகை சாஸ்திரம் ஒரு கலை வடிவம். இங்கே நாம் கலைக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது கட்டமைக்கப்பட்ட விதிகளும், அதனை நிரூபணம் செய்யும் சோதனைகளும் கொண்டது. கலை என்பது அடிப்படை அம்சங்களை கொண்டது ஆனால் அதை பயன்படுத்துவோர் பொருட்டு மாறுபடும். உதாரணமாக சோடியம் குளோரைடு என்ற உப்பை நீரில் அமிழ்த்தினால் கரையும் என்பது விஞ்ஞானம் கூறும் விதி. இதை உலகின் எந்த மூலையில் யார் செய்து பார்த்தாலும் நடைபெறும். காரணம் விஞ்ஞானம் மாறாதது.
ஓவியம் என்பது கலை அடிப்படையில் இப்படி ஓவியம் வரையலாம் என்றாலும் உலகில் ஒரே போல ஓவியங்கள் இல்லை. கலாச்சாரம், சூழலுக்கு ஏற்ப அது பெரும் கலைவடிவமாக திகழுகிறது.
ரேகை சாஸ்திரம் என்பதும் ஒரு கலைவடிவம் தான். அடிப்படை விதிகளை உணர்ந்துகொண்டு பயன்படுத்த துவங்கினால் ஓவியம் போல பல வண்ணக் கலவையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் வெளிப்படுத்தும்.
மனித இனத்தின் தனித்துவமான அடையாளம் உடலில் உள்ள ரேகைகள். கைரேகைகள் ஒருவருக்கு இருப்பது போல மற்றொருவருக்கு அச்சு வார்த்தால் போல இருக்காது..! இதனால் தான் மனித அடையாள குறியாக ரேகைகள் எடுத்தாளப்படுக்கிறது. வாகனம் தயாரிக்கும் நிறுவனம் எப்படி ஓவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான என்ஜின் எண் தருகிறார்களோ அதுபோல இயற்க்கை ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவமான அடையாளம் தருகிறது. அவ்வகையில் மனிதனின் தனித்துவமான அடையாளம் ரேகைகள்.
ஒவ்வொரு மனிதனின் மனோநிலை, செயல் நிலைக்கு ஏற்ப ரேகைகள் மாறுபடுகிறது. இதை உணர்ந்து ரேகை சாஸ்திரம் உருவாகியது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரேகை சாஸ்திரத்தை உண்டாக்கியவர்களும் அதன் மூல வேராக இருந்தவர்களும் தமிழர்கள்.
குறிஞ்சி நில மக்களின் ஆதார தொழிலாக ரேகை சாஸ்திரம் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. முருகப்பெருமானிடம் வள்ளியும், வள்ளியிடம் இருந்து பிற மனிதர்களும் கற்றார்கள் என்கிறது தமிழ் செவிவழி கதைகள்.
தமிழ் பாரம்பரியமாகவும், எதிர்காலம் கூறும் கருவியாகவும் இருந்த ரேகை சாஸ்திரம் தற்சமயம் நலிவடைந்து தனது முடிவு நிலையில் இருக்கிறது. சரியான வழிகாட்டிகளோ அல்லது கற்றுக்கொடுக்கும் சூழலோ நம்மிடையே இல்லை. இதை களையும் பொருட்டு ப்ரணவபீடத்தில் கைரேகை சாஸ்திர பயிற்சியை விடியோ வடிவில் வெளியிட்டு உள்ளோம்.
இரண்டு DVD கொண்ட இந்த தொகுப்பில் அடிப்படையில் துவங்கி முழுமையாக கைரேகை பற்றி அறிந்துகொள்ளலாம். விடியோவில் படித்த பிறகு கைரேகை சம்பந்தமான புத்தகத்தை படித்தால் மேலும் உங்கள் கைரேகை அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
கைரேகை டிவிடியின் முன்னோட்டம் உங்களுக்காக
இரண்டு டிவிடிக்கள் மற்றும் சில கைரேகை பிரதிகளுடன்
விலை 400/- மட்டும். தபால் செலவு தனி.
மேலும் தகவலுக்கு : 99 44 2 333 55




