Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, February 24, 2014

ஆனந்த அனுபவங்கள் பகுதி 2

ஆனந்த அனுபவங்கள் என்ற தலைப்பில் என் மாணவர்களின் ஆன்மீக அனுபவங்களை சென்ற பதிவில் தொகுத்திருந்தேன். அது இங்கே.. 

மேலும் காசி பயணம் பற்றி சில மாணவர்கள் எழுதியவைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.


திருமதி.சாயனதேவி சச்சின் - அவர்களின் அனுபவ பகிர்வு. இவர் முதன் முதலில் கட்டுரை எழுதுகிறார் என சொல்வதை நம்புவது கடினம். சரளமான நடையும் , கூட்டி செல்லும் பயண அனுபவமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கட்டுரை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


திருமதி. பாபி நாராயணன் & அருண் - சென்ற ஆண்டு கும்பமேளாவில் ஒரு மாதமும், இந்த முறை காசி பயணத்திலும் கலந்துகொண்டவர்கள். எளிய நடையில் அனுபவத்தை கடத்தும் எழுத்து இவர்களுடையது.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

திரு.சரவண பாண்டி 
- கோவையில் வசிக்கும் இவரின் கன்னி பேச்சு போன்று மழலை நிறைந்த கட்டுரையில் தன் வெண் மனசு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறார். பசுமையான பாமர எழுத்துக்கு இவரின் கடிதம் உதாரணம். அவரின் கையெழுத்திலேயே பதிவேற்றம் செய்துள்ளேன்.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பங்கு சந்தை ஜோதிடம்


Monday, February 17, 2014

ஆனந்த அனுபவங்கள்...!

சென்று ஆண்டு கும்பமேளா மற்றும் அருணாச்சல திருபயணம் ஆகியவையும், இந்த ஆண்டின் துவக்கத்தில் காசி திருப்பயணமும் பல்வேறு மாணவர்களுடன் சென்று வந்தோம்.

இதில் பங்குபெற்றவர்கள் தங்களின் வலைபக்கத்திலும் தனிப்பட்ட முறையிலும் அவர்களின் அனுபவங்களை எழுதுகிறார்கள். ஆன்மீக ரீதியாகவும், தனிப்பட்ட நிலையிலும் அவர்கள் அனுபவித்த கண்டு உணர்ந்த விஷயங்கள் உங்களையும் பரவசப்படவைக்கும். 

அவர்களின் அனுபவத்தை வெளியிடுவதற்கு ஒரு முறை படித்தவுடன் நானும் அச்சூழலை மீண்டும் கண்டு களித்தது போல இருந்தது. முழு விழிப்புணர்வுடன் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது இவர்களின் எழுத்து காட்டியது.

அருணாச்சல மலை ஏற்றம் : 

சிங்கப்பூரை சேர்ந்த பாலா அவர்களின் அற்புத அனுபவம் :) இனி அருணாச்சல மலை ஏற என்னுடன் வருபவர்களுக்கு எச்சரிக்கை விடும் அனுபவம். படிக்க இங்கே க்ளிக் செய்யவும் : அனுபவம்-1

கும்பமேளா :

ஷங்கர் மற்றும் அகநாழிகை பொன்வாசுதேவன் ஆகிய இருவரும் கும்பமேளாவில் என்னை வந்து சந்தித்தனர். ஷங்கர் அவர்கள் பார்வையில் கும்பமேளா..  அனுபவம் 2

காசி திருபயண அனுபவம் :

திருமதி .விஜி ராம் அவர்களின் காசி பயண அனுபவங்கள் தொடராக இந்த சுட்டியில் படிக்கலாம். அனுபவம் 3

திரு.சுப்பிரமணியன் மற்றும் திருமதி.கோமதி ஆகியோர் தம்பதிகளாக காசி பயணம் வந்தனர். அவர்களின் அனுபவம் பெரும் பிரவாகமாக இங்கே அனுபம் 4