Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label கிருஷ்ணமூர்த்தி முறை. Show all posts
Showing posts with label கிருஷ்ணமூர்த்தி முறை. Show all posts

Monday, August 2, 2010

அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்

கோவை ப்ரணவ பீடத்தில் அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஞாயிறும் காலை 9 முதல் 12 வரை வகுப்புகள் நடைபெறும். 8 வாரங்களில் முழுமையான ஜோதிடத்தை கற்று தெளிவு பெறலாம்.

இந்த பயிற்சியில் அடிப்படை ஜோதிடம், பிறப்பு ஜாதகத்திற்கு பலன் கூறுதல், பிரசன்ன ஜாதகத்திற்கு பலன் கூறுதல் மற்றும் உயர் நட்சத்திர ஜோதிடம் ஆகியவை கற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சிக்கு முன் ஜோதிடம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கான பயிற்சி இது.


மேலும் விபரங்களுக்கு : 99 44 2 333 55, 99 44 1 333 55

Thursday, February 12, 2009

ஜோதிட கல்வி பகுதி - IV


ராசிநிலையில் உடல் உறுப்புக்கள்


ராசிகளின் தன்மைகளை சென்ற வகுப்பில் பார்த்தோம். ஒவ்வொரு ராசியும் மனித உடலின் சில பாகங்களை குறிக்கும்.மேஷம் முதல் மீனம் வரை பன்னிரு ராசிகள் குறிக்கும் உடல் பகுதிகள் எளிதில் புரிய படமாக கீழே கொடுத்துள்ளேன்.


ராசிகள் குறிக்கும் உடல் உறுப்புகளை மனதில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி உண்டு. ஒரு மனிதனை தலை முதல் பாதம் வரை மேலிருந்து கீழாக பன்னிரண்டு பிரிவாக பிரித்தால் எளிமையாக கூறலாம்.

ராசிகள் மட்டுமல்லாமல் , கிரகக்களும் மனித உடலின் உறுப்புக்களையும் வியாதியின் தன்மையையும் குறிக்கும்.

சூரியன் : ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம்
சந்திரன் : பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரயீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள்
செவ்வாய்: அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்
புதன் : நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு
குரு : ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்
சுக்கிரன்: சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்
சனி : தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்
ராகு : அதிகமான வலி, அலர்ஜி
கேது : வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்


மனித உடலில் ஏற்படும் நோய் மற்றும் உறுப்பு இழத்தல் (அங்கஹீனம்) ஆகியவற்றை அறிய மேற்கண்ட தன்மைகள் பயன்படும். மேலும் ஒருவரி உடலில் இருக்கும் மச்சம் மற்றும் தழும்புகள் எந்த பகுதியில் இருக்கிறது எனவும் காணலாம். கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உடல் உறுப்பை குறிக்கிறது, ஆனால் ராகு கேதுக்கள் உறுப்புகளை குறிக்காது. காரணம் ராகு-கேதுக்கள் உருவமில்லா கிரகம் என்பதால், அவை குறிக்கும் விஷயமும் உருவம் இல்லாமல் இருக்கிறது. வலியை கண்களால் பார்க்க முடியுமா?

ராசி தன்மையுடன் இணைத்து கிரகத்தன்மையை பயன்படுத்தும் பொழுது பலன்கள் மேலும் துல்லியமடையும்.உதாரணமாக நோய் கொடுக்கும் கிரகம் ஒருவருக்கு ரிஷபராசியில் இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு கண், காது, மூக்கு , வாய் மற்றும் தொண்டை பகுதியில் நோய்வரும் என பொதுவாகத்தான் சொல்ல முடியும். ஆனால் கிரகத்தன்மையை இணைத்தால் மேலும் துல்லியமாக்கலாம்.

நோய் கொடுக்கும் கிரகம் சூரியனாக இருந்து ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு கண் சம்பந்தபட்ட நோய் மட்டுமே வரும் என சொல்லலாம். காரணம் ரிஷப ராசிக்கும் சூரியனுக்கும் பொதுவான தன்மை கண்கள். மேலும் நீங்கள் நன்கு சிந்திப்பவராக இருந்தால் பலனை ஆழமாக சொல்ல முற்படுவீர்கள்.

கண்களில் நோய்வரும் என்பது மட்டுமல்லாமல் ஜாதகர் ஆணாக இருந்தால் வலது கண்ணிலும், பெண்ணாக இருந்தால் இடது கண்ணிலும் நோய்வரும் என சொல்லி உங்கள் பலனை துல்லியமாக்கலாம்.

மருத்துவ ஜோதிடம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஓர் தனிப்பிரிவு. நடைமுறை உலகிற்கு நன்கு பயன்படக்கூடிய துறையும் கூட. உயர்நிலை மருத்துவ ஜோதிடம் கற்றால் மருத்துவ ஜோதிடர் ஆகி நோய்வரும் தன்மை, எது போன்ற மருத்துவ முறையில் குணமாகும், எவ்வளவு காலம் அவர் நோயில் துன்பப்படுவார் போன்ற விஷயங்காளை சொல்ல முடியும். அனைத்துக்கும் இதுதான் அடிப்படை, எனவே இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :

இந்த வார கேள்வி :
பாடத்தில் சூரியன் ரிஷபத்தில் இருந்தால் கண் நோய் வரும் என சொல்லி இருந்தேன். குரு துலா ராசியில் இருந்தால் எந்த உறுப்பில் நோய் வரும்?
பின்னூட்டத்தில் உங்கள் பதில்களை கூறுவும்.

----------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

டாக்டருக்கும் ஜோஸியருக்கும் என்ன வித்தியாசம்?

டாக்டர் கிட்ட போன நம்ம பல்ஸை பார்ப்பாரு
ஜோஸியர்கிட்ட போன நம்ம பர்ஸை பார்ப்பாரு


Wednesday, February 4, 2009

ஜோதிட கல்வி - பகுதி III

ராசிகள் மற்றும் அதன் பெயர்களை பற்றி தெரிந்து கொண்டோம். இனி ராசிகளின் தன்மைகளை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசியும் தனக்கென ஓர் தன்மையை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தினால் பலன் சொல்லும் நிலையில் மேம்மை கிடைக்கும்.


ராசி நிலையில் சர - ஸ்திர - உபய ராசிகள்




சரம் என்பது நகரும் தன்மையை குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும். உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். மேஷம் முதல் துவங்கி ஒவ்வொரு ராசியாக இந்த மூன்று தன்மைகள் நான்கு முறை வரும். [3X4 = 12].

மேற்கண்ட ராசி தன்மையை பலவிதமான பலன் சொல்லுவதற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக ஒருவரின் தொழில் பற்றி ஆராயும் பொழுது , ஜாதகரின் தொழிலை கொடுக்கும் கிரகம் சர ராசியில் இருந்தால், மார்கெட்டிங் சார்ந்த தொழில் செய்வார் என சொல்லலாம். காரணம் அவரின் தொழில் தன்மை ஓர் இடத்தில் இருந்து செயல்படும் நிலையில் இருக்காது. ஸ்திர ராசி சம்பந்தம் இருந்தால் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருப்பார். அரசு அதிகாரிகள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

உதாரணத்தை பார்த்தவுடன் உங்கள் ஜாதகத்தை எடுத்து ஆராய வேண்டாம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் சர தன்மையில் வேலை செய்வார்கள் என முடிவுக்கு போக வேண்டாம். மேலே உதாரணத்தில் “தொழிலை கொடுக்கும் கிரகம்” என கொடுத்திருக்கிறேன் அல்லவா? ஒருவர் ஜாதகத்தில் தொழிலை கொடுக்கும் கிரகம் எது என தேர்ந்தெடுப்பது பின்னால் உங்களுக்கு கூறுகிறேன். தற்சமயம் ராசியின் தன்மையை மட்டும் கற்றுக்கொள்ளலாம்.

சர ஸ்திர உபய ராசிகளின் தன்மைகளை ஆயுள் அறிய, காணாமல் போனவரை கண்றிய என பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

ராசி நிலையில் பஞ்சபூதங்கள்





பஞ்சபூதங்களான நெருப்பு,பூமி,காற்று மற்றும் நீர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பஞ்சபூதம் என நான்கு தன்மைகள் மட்டுமே கூறிகிறேன். ஆகாயம் எனும் தன்மை இதில் இடம் பெறாது. ஏன் தெரியுமா? ராசி மண்டலம் முழுவதும் ஆகாயத்தில் தானே இருக்கிறது. பஞ்ச பூதம் ஒவ்வொன்றிலும் மற்ற நான்கு பூதம் அடக்கம் எனும் வேதாந்தத்தை இங்கே காணமுடிகிறது. நான்கு விதமான தன்மைகள் ராசியில் மூன்று முறை வருவதால் பன்னிரு ராசிகளுக்கும் சமமாகிறது.

பஞ்சபூத தன்மையையும் தொழில், வானிலை அறிதல் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.


ராசிநிலையில் இரட்டைபடை, பலகால், நான்குகால் ராசிகள்





மேற்கண்ட ராசிகளின் தன்மை மூலம் ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் அமையும் விஷயத்தை சொல்லலாம். உதாரணமாக இரு தொழில் அமைவது.. ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் இருப்பது என பல உதாரணம் கூறலாம்.

ஒருவர் எப்படி பட்ட வாகனம் வாங்குவார் என்பதை இதன்மூலம் கண்டறியலாம். வாகனத்தை குறிக்கும் கிரகம் இரட்டை ராசியில் இருந்தால் இரு சக்கர
வாகனம் என்றும், நான்கு கால் ராசியில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் என்றும் சொல்லலாம். லாரி, பஸ் போன்றவை பலகால் ராசி தன்மையில் அமையும்.


ராசிநிலையில் மலட்டு ராசிகள்





மேஷம், மிதுனம்,சிம்மம், கன்னி ராசிகள் மலட்டு ராசிகள் என வழங்கப்படுகிறது. இந்த ராசிகள் குழந்தை பிறப்பை தடை செய்யும். உடனே இந்த நான்கு ராசிகாரர்களுக்கு குழந்தை பிறக்காது என வதந்தியை கிளப்பி விட வேண்டாம். ஒருவரின் ஜாதகத்தில் குழந்தையை குறிக்கும் கிரகம் மலட்டுராசியில் இருக்க வேண்டும். அந்த கிரகத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என பின்வரும் வகுப்பில் பார்ப்போம்.

மலட்டு ராசிகளின் தொடர்பு எல்லோருக்கும் இருக்கும். ஒருவருக்கு இரண்டு குழந்தை இருக்கிறது என்றால், மூன்றாம் குழந்தையை கொடுக்கும் கிரகம் மலட்டு ராசி தொடர்பு கொண்டு இரண்டுடன் குழந்தை பிறப்பை தடைசெய்யும். முதல் குழந்தையை கொடுக்கும் கிரகமே இவ்வாறு இருந்தால் குழந்தை இல்லாமல் போகும்.

ராசி நிலையில் ஆண் பெண் ராசிகள்





ஆண் ராசிகள் பெண் ராசிகள் என ஒன்று விட்டு ஒன்று ராசியாக பன்னிரு ராசியில் அமைகிறது. கொடுக்கப்பட்ட ஜாதகம் ஆண் ஜாதகமா பெண் ஜாதகமா என பார்க்கவும். பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என கூறவும் இந்த தன்மை பயன்படுகிறது. ஆண்- பெண் தன்மையை குறித்தாலும் உண்மையில் இது எதிர்மறை தன்மையை குறிக்கும் ராசிகள். ஆண் பெண் மட்டுமல்ல இரவு-பகல், மேல்-கீழ் என எதிர்மறை தன்மைகள் அனைத்தையும் இது குறிக்கும்.



ராசிகளின் தன்மைகளை எப்படி மனதில் வைத்துக்கொள்ளுவது?

ராசிகளின் மேற்கண்ட தன்மைகளை எப்படி மனதில் வைத்து கொள்வது என புரியாமல், ஆறாம் வகுப்பு மணவன் போல மனப்பாடம் செய்ய துவங்க வேண்டாம். அதற்காகத் தான் நம் முன்னோர்கள் ராசிகளுக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இத்தனை தன்மைகளை ராசிகளின் வடிவத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் உங்களால் எளிமையாக மனதில் வைக்க முடியும். உதாரணமாக சில...

மேஷ ராசி ஆடு எனும் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் மேஷ ராசி நான்குகால் ராசி. ஆண் ஆடு என்பதால் ஆண் ராசி, ஆண்களால் குழந்தையை பிரசவிக்க முடியாது என்பதால் மலட்டு தன்மை.

மிதுன ராசி இரு குழந்தைகள் கையில் நாதசுவரத்துடன் இருப்பார்கள். காரணம் மிதுனம் இரட்டை ராசி, நாதஸ்வரம் வைக்க காரணம் அது ஓர் காற்று ராசி. குழந்தைகள் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் மலட்டு ராசி.

நவீன அறிவாளிகள் பயன்படுத்தும் மெம்மரி மாப்பிங் (memory mapping) எனும் முறையை நம் முன்னோர்கள் முன்பே பயன்படுத்தி இருக்கிறார்கள். ராசிகளின் வடிவம் அது போல வானத்தில் தெரியாது. ராசிகளை மனதில் வைக்கவே அவ்வாறு வடிவம் கொடுக்கபப்ட்டுள்ளது. ராசிகளின் வடிவத்தை கூர்ந்து கவனித்து ராசிகள் குறிக்கும் தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------

பதில் நேரம் :

சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி :

ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?

சனி >> குரு >> செவ்வாய் >> பூமி (சந்திரன்) >> சுக்கிரன் >> புதன் >> சூரியன் |
மேற்கண்ட நிலையில் சூரிய மண்டலத்தில் கிரகங்கள் அமைந்திருங்கின்றன. ராசி கட்டத்தை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

கிரகங்களான சனி,குரு,செவ்வாய்,சுக்கிரன், புதன் ஆகியவை இரு வீடுகளை ஆட்சி செய்கிறது. காரணம் கிரகத்திற்கு நட்சத்திர ஆற்றலை உள்ளே பெற்று எதிரொளிக்கும் தன்மை இருக்கிறது. சென்ற வகுப்பில் சந்திரன் ஓர் உப கிரகம், சூரியன் ஓர் நட்சத்திரம் என படித்தோம் அல்லவா?

இவைகளுக்கு எதிரொளிக்கவோ உள்வாங்கவோ ஒரு தன்மை மட்டுமே உண்டு. அதனால் ஓர் ராசி.

ராகு கேது கிரகமோ, நட்சத்திரமோ, உபகிரகமோ கிடையாது அதனால் அவைகளுக்கு வீடு இல்லை.

ஜோதிடம் என்பது கிரகங்களின் ஆற்றலும் நட்சத்திர ஆற்றலும் பூமிக்கு வரும் அமைப்பை ஆராய்வதால், ராசி மண்டலத்தில் பூமிக்கு இடமில்லை. ராசி கட்டத்தின் நடுவில் பூமி இருப்பதாக கற்பனை செய்யுங்கள். எளிமையாக ராசிகளை ஏன் அந்த கிரகம் ஆட்சி செய்கிறது என விளங்கும்.

நம் முன்னோர்கள் வானவியலில் எவ்வாறு முன்னேற்றம் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

(குடிபோதையில் ஒருவர் ஜோதிடரிடம் வருகிறார்.. )

ஜோதிடர் : உங்க பத்தாவது வீட்டில் குரு இருக்கான்.
வந்தவர் : எப்படி ஜோஷியரே எங்க பக்கதூட்டுகாரன் பத்தியெல்லாம் ஷோக்கா சொல்லரே..
ஜோதிடர் : கஷ்டகாலம்..
வந்தவர் : பரவாயில்லயே என் நெலமையை கரிகிட்டா சொல்லிட்டியேபா..

Monday, January 26, 2009

ஜோதிட கல்வி - பகுதி II


சூரிய மண்டலம் மற்றும் அதில் இருக்கும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். சூரியனும் , பிற கிரகங்களும் கோள் வடிவமாக இருக்கிறது அல்லவா? சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் நீள் வட்ட பாதையில் சுழலுகிறது அல்லவா?

ஆக வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது.இயற்கையில் உருவாகும் அனைத்து விஷயத்திலும் வட்டம் அடிப்படை வடிவமாகவே இருக்கும். வட்டம் வளரும்பொழுது கோளம், உருளை என முப்பரிமாணமாக மாற்றமடையும்.

கரு உருவாகும் பொழுது சூல் வட்டவடிவமாக இருக்கும். உலகின் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்பான சக்கரம் வட்டவடிவமானது என வட்டத்தின் சிறப்பை கூறிக்கொண்டே செல்லலாம்.

வட்டம் ஆரம்பமும் முடிவும் அற்றது. அதனாலேயே வட்டத்தின் அடிப்படையில் இயங்கும் பிரபஞ்சமும் தோற்றமும் முடிவும் அற்றதாக இருக்கிறது.

இத்தகைய வட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

கணிதத்தில் வட்டத்தின் சுற்றலவு 360 டிகிரி என்கிறார்கள்.

வட்டத்தை இரண்டாக பிரித்தால்....இரண்டு... 180 டிகிரியாக மாறும்.

வட்டத்தை நான்காக பிரித்தால் ... நான்கு 90 டிகிரியாக மாறும்.

இதுவரை நாம் பிரித்தது செங்கோணமாக இருக்கும் வடிவங்கள். 90 டிகிரியை இரண்டாக பிரித்தால் 45 டிகிரி கிடைக்கும். ஆனால் அது செங்கோணம் அல்ல..

90 டிகிரியை மூன்று பிரிவுகளாக பிரித்தால் 30 டிகிரி என பன்னிரெண்டு பிரிவுகள் கிடைக்கும்.

30 டிகிரிக்கு கீழே பிரிக்க வேண்டும் என்றால் 1 டிகிரி என்பதே சரியான கோணமாகி 360 பிரிவுகள் கிடைக்கும்.





பன்னிரெண்டு பிரிவான 30 டிகிரியை ஓர் அடிப்படை அலகாக (Units) கொண்டு ஜோதிடத்தில் ஆய்வு செய்கிறார்கள். இந்த பன்னிரெண்டு பிரிவகளே ராசிகள் என அழைக்கப்படுகிறது.

பன்னிரெண்டு பிரிவுகள் எவ்வாறு அமைந்து இருக்கிறது என தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஓர் ஆரஞ்சு பழத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் சுளைகள் பன்னிரெண்டு இருப்பதாக கொண்டால், பூமியின் சுற்று பகுதியில் ராசிகள் அமைத்தவிதம் எப்படி இருக்கும் என யூகிக்க முடியும்.

ஜோதிட ஆய்வு செய்யுபொழுது கருத்துக்களை எழுத சிரமமாக இருக்கும் என்பதற்காகவே வட்டதின் மூலை பகுதிகளை சீராக்கி சதுர வடிவில் அமைத்திருக்கிறோம். மற்றபடி ராசி மண்டலம் என்பது வட்டவடிவம் தான், நமது செளகரியத்திற்காக அனைத்து பிரிவுகளும் சதுரத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் வட்டத்தின் சித்தாந்தம் குலையாமல் 30 டிகிரியாகவே அமைந்துள்ளது.

ராசி மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்கென ஓர் பெயரும் கிரக ஆதிக்கமும் கொண்டு அமைக்கபட்டுள்ளது. அதன் படம் கீழே..




















ராசி
மண்டலம் பற்றிய பாடத்தின் வீடியோ காட்சி




-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :


ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?
செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?

நன்றாக ஜோதிடம் தெரிந்தவர் என உங்கள் நண்பர் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.
அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடையை அடுத்த பதிவில் இடுகிறேன்.

பதில் நேரம் :

சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி :
கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா?

இதற்கு பலதரப்பட்ட விளக்கம் வந்திருந்தது. கிரகணம் , கடல் அலைகள் என பல விளக்கங்கள். நான் கேட்டது மனித உடலில் கிரக வேலை செய்யும் என்றால்

எப்படி.

ஜோதிடத்தை பொருத்தவரை சூரியன் ஒரு கிரகம் அல்லவா? சூரியன் ஒளி மனிதனுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிக தோல்வியாதியால் துன்பபடுவான்.

வைட்டமின் ஈ மற்றும் டி கிடைக்காது.
கிரகம் என்றவுடன் ஒன்பது கிரகத்தையும் நினைத்து குழப்பிக்கொள்ளுகிறோம். சூரியன் எனும் கிரகம் மனித உடலில் வேலை செய்கிறது தானே?

எளிமையாக யோசிப்போம்..வளமை காண்போம் :))
-------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]

கோவில் திருவிழாவில் “டாடி மம்மி வீட்டில் இல்லேனு தடைபோட யாரும் இல்லைனு” பாடிக்கிட்டு இருக்காறே, யாரு அவரு?

அவர் “வில்லு” பாட்டுக்காரராம்.

Monday, October 20, 2008

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படுமா ?- ஓர் ஜோதிட ஆய்வு

செயற்கைகோள் வரலாற்றில் இந்தியா அடுத்த இலக்கை தொடும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

22 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஏவப்படும் செயற்கைகோள் சந்திரனுக்கு சென்று ஆய்வு நடத்த இருக்கிறது. விஞ்ஞானமும் கணினி பயன்பாடும் வளர்ந்த இந்த காலத்தில் நவீன மனிதர்கள் என்பவர்கள் ஜோதிடம் சாஸ்திர போன்றவற்றை நம்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும்.
விண்வெளி ஆய்வு மற்றும் அதிக பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக்கு முன்னர் ஜோதிட ரீதியாக ஆய்வின் வெற்றியை முடிவு செய்தால் பலசிக்கல்களை தவிர்க்க முடியும்.


சந்திராயன் செயற்கைகோளுக்கு ஜாதகம் பார்க்க போகிறீர்களா என நீங்கள் கேட்பது புரிகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆருடம் எனும் பகுதியை கொண்டு ஆய்வு செய்ய போகிறேன். கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறை துல்லியமானது என நிரூபணம் செய்யப்பட முறை. இந்த முறையை ஜோதிட கருவியாக கொண்டு எனது ஆய்வு துவங்குகிறது.


சந்திராயன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா?
நாள் :20-அக்டோபர் - 2008

நேரம் : காலை 10:55
இடம் : கோவை.

ஆருட எண் : 29.
(கணிக்கப்பட்ட ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது)


ஆய்வு :

லக்னம் ரிஷபராசியில் அமைகிறது. லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தை பார்ப்பதால், கேள்வியின்
தன்மை சரியானதே என்றும், உண்மையாக கேட்கப்பட்ட கேள்வி என்றும் கூறலாம். செயல் வெற்றி அடையுமா என பார்க்க 1,6,11 ஆம் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். முக்கிய வீடாக லக்னம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

லக்னத்தின் உபநட்சத்திராதிபதி சந்திரன்.
அவர் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார். ராகு 1,6,11 ஆம் வீடுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. ராகு சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பதாலும் அதன் உப நட்சத்திர அதிபதியும் சுக்கிரனாக இருப்பதாலும் சுக்கிரன் இங்கு முக்கியத்துவம் பெருகிறார்.


சுக்கிரன் 1,6க்கு அதிபதியாகி 7ஆம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார். லக்ன உபநட்சத்திராதிபதி சந்திரனை, 11ஆம் பாவகத்தின் அதிபதி குரு பார்வை செலுத்துவது நன்மையை கொடுக்கும்.

குருவின் நட்சத்திரத்தில் யாரும் இல்லை என்பது முக்கியமான அம்சம். மேலும் குரு 1,6,11க்கு
நேரடி குறிகாட்டி. சனி லக்னத்தை பார்வை செலுத்துவதும், குருவுடன் திரிகோணத்தில் அமர்ந்திருப்பதும் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.


ஆய்வு முடிவு :

22 ஆம் தேதி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படும். ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். ஆறு மணிக்கு மேல் எட்டு மணிக்குள் துலாம் லக்னத்தில் சந்திராயனை வெற்றிகரமாக பிஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தும். இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்வோம்.


உங்கள் கருத்துக்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது.