Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Monday, August 26, 2019

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2  - 


    அனுபவ பகிர்வு : விஜி ராம்


பயணம் வேறு யாத்திரை வேறு. பயணத்திற்கு நண்பர்கள் தேவை. யாத்திரைக்கோ குரு மிக அவசியம். புராண தலங்கள், ஆன்மீகதலங்கள் போன்றவை நண்பர்களுடன் செல்வதை விட நம்மை அறிந்த நாம் புரிந்து கொள்ள நினைக்கும் குருவுடன் செல்வது நம்முள் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அந்தந்தத்தலங்களை இன்னும் அதிகம் அனுபவிக்க வழிவகுக்கும்.



நான் போக வேண்டும் என்று நினைத்த பெரும்பாலான தலங்கள் குரு மூலமே தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் நம் எண்ணத்தை சொல்லிவிட்டு மறந்து விடலாம், எப்படியேனும் நம்மை அழைத்து சென்றிடுவார். திருவண்ணாமலை, காசி, அலகாபத், கயா, ஹிமாலயாஸ், தேவப்ரயாகை, கும்பமேளா என்ற அந்த வரிசை இன்னும் அதிகம், 2015 வருடம் முக்திநாத் செல்லும் ஆர்வத்தை செயலாக்கும் போது பூகம்பத்தால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இதோ இந்த மேமாதம் முக்திநாத்தை தரிசிக்கும்  பாக்யம் பெற்றோம். 



முக்தி நாத்: 

நாத பரம்பரையின் பூமி, ஆதிநாதரின் ஆதிக்கபூமி. அங்கே செல்கிறோம் என்ற எண்ணமே மிக உவப்பானதாக இருந்தது. போகும் முன் பார்த்த , படித்த விசயங்கள் அனைத்துமே கொஞ்சம் பீதியளிப்பவையாகவே இருந்தது. ஆனால்  அதைப்பற்றி அதிகம் என்றுமே யோசித்ததில்லை, அழைத்துசெல்பவர் கண்டிப்பாக இவற்றை சரிபடுத்தி நல்ல தரிசனத்துடன் ஆனந்த பயணமாகவே ஆக்குவார். டெல்லி, காத்மாண்டு, போஹ்ரா, ஜோம்சம் என்று தினமுமே குறிப்பிட்ட தூரம்  பயணம்  செய்தே முக்திநாதரை அடைய முடியும். பயணத்திட்டம் நாம் தீட்டலாம், ஆனால் இயற்கையே இறுதி முடிவெடுக்கும். மழை, பனிப்புயல், நிலச்சரிவு, அடிக்கடி நடக்கும் விபத்துகள் என்று அனைத்தையும் தாண்டி இயற்கை நம் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும்.  ஆதிநாதர் அனுமதித்து, இயற்கை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். 

மே 21 நடு இரவு 1 மணி விமானத்தில் டெல்லிக்கு பயணித்து காத்மாண்டு விமானம் ஏறி  மதியம் 2 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் அடைந்தோம். காத்மாண்டு நேபாள தலைநகர், மலைப்பிரதேசமே, ஊருக்கு நடுவில் விமான நிலையம், எங்கு சென்றாலும் அதனை சுற்றியே பாதைகள். எங்களுடய பயணமத்திட்டம்  தினமும் காலை ஆரம்பித்து 3வது  நாள் தான் முக்திநாத்தை அடையும்படியானது. 


காத்மாண்டு : ஊர் முழுதும் சாலையோர  ஊதாப்பூக்கள் சிந்தும் மரங்கள், சற்றே அழுக்கான நகரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பரபரப்பிலும் நிதானமான ஊர்.  காத்மாண்டு அடைந்து மற்ற மாணவர்களும் வந்த பின் மாலை முதலில் சென்ற இடம் பசுபதிநாதர் கோவில் . யுனெஸ்கோவின்  கீழிருக்கும் சின்னமாக அறிவித்திருக்கிறார்கள். பெரிய சுற்றுப்புறத்துடன் , வெறும் செங்கல் கட்டுமானத்துடன் கேரளாவை நினைவுபடுத்தும் கோவில். இந்த பயணம் முழுதும்   துளி வெயில் இன்றி, மழை மேகங்கள் சூழ, அவ்வப்போது மழை சாறலாகவும் பெருமழையாகவும் பெய்து ஆசிர்வதித்துக்கொண்டே இருந்தது. பசுபதிநாதர் கோவில் வலதுபுறத்தில் இருக்கும் புவனேஸ்வரியை தரிசித்து , பசுபதிநாதரை தரிசிக்க வரிசையில் இணைந்த போது மணி 6. 

பசுபதிநாதர்  , லிங்க வடிவில் இருந்தாலும் நான்கு புறமும் முகம் கொண்டு சதுர்முகனாக இருக்கிறார். வழக்கமாக ஒரு கதவு திறந்திருக்கும் தரிசித்து வரலாம், காலையில் 9.30 முதல் 12.30 வரையிலும் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலும் நான்கு கதவுகளும் திறந்திருக்கும் நாற்புறம் சுற்றி வந்து சிவனை தரிசிக்கலாம். நாங்களும் காத்திருந்து நாற்புறமும் சுற்றி  நாதரை தரிசித்து வரும் போது மழை தூறலாக ஆசிர்வதிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிறிய அறிமுக உரையுடன் பிரிந்தோம்.


2 ஆம் நாள் :

 காலை பத்து மணிக்கே எங்களுக்கு போஹ்ரா விமானம். இங்கு கவனிக்க வேண்டியது விமானம் கிளம்ப எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை, வரும்போது வரும், கிளம்பும் போது கிளம்பும், எனவே உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் விமான நிலையம் அடைந்து விடுவது நலம். காலை 6 மணிக்கு கோரக்கர் சன்னதிக்கு பயணம். பசுபதிநாதர் கோவிலின் இடதுபுறம் ஒரு சாலை பிரியும் அதில் சிறு குன்று உண்டு, பெரிய பெரிய படிகளில் அநேகம் பேர் ஓடிக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் இருப்பார்கள், அந்த படிகளில் ஏறி சிறு குன்றின் உச்சியை அடைந்தால் அங்கே வசிக்கிறார் கோரக்கர்.  தலைவரின் அனுமதியுடன் தான் எந்தப்பயணமும் ஆரம்பிக்கவேண்டும், இதோ கோரக்கரை தரிசித்து, அனுமதிபெற்றுக்கொடிருக்கிறோம். மந்திர ஜெபமோடு அந்த சூழல் இன்னொரு முறை மீண்டும் வாய்க்க குருவருள் துணையிருக்கட்டும்.


விமான நிலையம் அடைந்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் போஹ்ரா அடைந்தோம். போஹ்ரா, அழகான சிறிய ஊர். காத்மாண்டு போல் கூட்டமில்லை, மிக மிக இதமான கால நிலை, அழகான ஏரியை சுற்றி அமைதியான பாதையும், ஒரு புறம் கடைகளும், நினைத்த பொழுது வானத்தை பிளந்த மழையும் தூரத்தில் வெள்ளிப்பனி மலையுமாக கண்நிறைந்த ஊர். மாலை சத்சங்கத்தில் முக்திநாத், ஏன் எதற்கு, நாத பரம்பரை, இன்னும் எங்களின் எத்தனையோ கேள்விகளுக்கு  பதிலுரைத்து அடுத்த நாள் பயணத்திற்கு மனதளவில் தயார் படுத்தப்பட்டோம்.



3-ம் நாள் = ஜோம்சம் பயணம் 

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,



 ஒரே ஒரு நீண்ட தெரு, அதில் இந்தக்கோடியில் விமானநிலையம் பாதி வழியில் ஹோட்டல், அந்தக்கோடியில் காளிகண்டகி நதி. 8 மணிக்கு  முக்திநாத் செல்ல தயாரானோம். இங்கிருந்து 21 கிலோமீட்டர் பயணம், ஆனால் 2 முதல் 3 மணிநேரம் ஆகும். சாலை என்பது கடைசி 10 கிலோமீட்டருக்கே அதுவரை தண்ணீர் வற்றிய கண்டகி நதியில் பஸ் பயணம். குலுங்கி  விலா எலும்புகள் இடம் மாறுகையில் பாதை தென்பட்டது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி புகைப்படும் எடுத்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இரண்டு கிலோமீட்டர் போனதுமே கவனித்தேன் என் ஹேண்ட் பேக் காணோம். பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லாமே இருந்தது. ட்ரைவர் உடனே வண்டியை திருப்ப முடியாது என்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் போய் வண்டியை திருப்பி நாங்கள் புகைப்படம் எடுத்த இடம் வந்த போது வைத்த இடத்திலேயே என் கைப்பை அநாதையாக கிடந்தது. அதுவரை அந்த ரோட்டில் ஒரு வண்டியோ மனிதனோ கடக்கவில்லை. 



முக்திநாத்  ஆட்டோ ஸ்டேண்ட் எனப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடக்க வேண்டும். 2 கிலோமீட்டர் மட்டுமே. நடக்க முடியாதவர்களுக்கு போனி எனப்படும் மட்டக்குதிரை சவாரியும், டோலி எனப்படும் நான்கு பேர் சேர்ந்து தூக்கிசெல்லும் வசதியும் ஹோம்சம்மிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அப்படி ஒன்றும் கடினமான பாதை அல்ல, கொஞ்சம் படிகள்  கரடுமுரடான பாதை என்று மொத்தமே 2 கிலோமீட்டர் தான். மெதுவாக ஏறலாம்.  கவனிக்க வேண்டியது இங்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறந்து மாலை 4 மணிக்கு மூடப்படும். எலுமிச்சம் பழம் கிடைக்காது. தண்ணீர் தேவைக்கு எடுத்து செல்லவும். குளிர் கொஞ்சம் அதிகம். . 



முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.



சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர்.  மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.


காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்
போஹ்ரா, காலை விமானத்தில் போஹ்ராவை அடைந்ததும் ஆரம்பித்த  மழை  விடாமல் பெய்துகொண்டே இருந்தது. போஹ்ராவில் பார்க்கவேண்டிய இடங்களில் சில, பராஹி கோவில் ( வராஹி கோவில்) ஏரிக்கு நடுவில் அமைந்துள்ளது, படகில்  இந்திய மதிப்பில் போக வர 100 ரூபாய், அழகிய சிறு கோவில், இங்கு கோவில்களில் ஸ்டிக்கர் பொட்டு, கண்ணாடி வளையல் போன்றவைகளை ஸ்வாமிக்கு சமர்பிப்க்கின்றனர். 
குப்தேஸ்வர மஹாதேவ் கேவ் : குகைக்கோவில், தரையிலிருந்து  100 படிகள் வரை கீழிறங்கி சென்றால்  ஆயிரம் வருட பழமையான சிவன் கோவிலும் இன்னும் இறங்கினால் ஆர்பரிக்கும் அருவியையையும் பார்க்கலாம்..
குப்தேஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ளது டாவிஸ் அருவி. இந்த அருவிதான் குப்தேஸ்வரர் கோவிலுக்குள்ளும் விழுகிறது.
பிந்தியபாஷினி கோவில் : பழைய பஜார் பகுதியில் உள்ள பிந்தி பாஷினி கோவில் முக்கியமான துர்கை ஆலயம். சிவன், கிருஷ்ணர், பஜ்ரங்பலி என்று எல்லாருக்கும் சந்நதி உள்ளது. சிறு குன்று போன்ற இடம். லிப்ட் உண்டு, கட்டணமும் உண்டு.
இந்த இடங்களை பார்த்து , ஓய்வெடுத்து அடுத்த நாள் காத்மாண்டு பயணித்தோம்.

காத்மாண்டு. 
நினைத்ததை விட சுலபமாக, நிறைவான தரிசனம் முக்திநாத்திலும், போஹ்ராவிலும். நாங்கள் காத்மாண்டு அடைந்த பின்னரே அறிந்தோம் அன்றும் அதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முக்திநாத் சேவை பனிப்புயல், கடும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது என்று. ஆதிநாதரின் அருளின்று எங்கள் பயணம் இதுவரை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. காத்மாண்டுவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

ஸ்வய்ம்பு நாத் : முழுதான ஹிந்துக்கள் நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதமும் பரவியிருக்கிறது. ஸ்வம்புநாத் அதில் ஒன்று. சிறு குன்றின் மேல் இருக்கும் புத்த ஆலயம், அருமையான சிற்பக்கலைகளுடன் பெரிய கண்கள் வரையப்பட்ட ஸ்தூபியை வணங்குகின்றனர்.

ஜலநாராயணன் கோவில் : தண்ணீரில் துயில் கொள்ளும் பிரம்மாண்ட  விஷ்ணுவின் கோவில், அதன் சின்ன  அளவு சிலையை வைத்து தினப்படி யாகம் நடத்தப்படுகிறது.

கைலாத்நாத் கோவில் : ஊரைவிட்டு சிறிது தள்ளி இருக்கும் 140 அடி சிவன் கோவில்,, தனியாருக்கு சொந்தமானது.

டோலேஸ்வர் கோவில் : காத்மாண்டுவை சுற்றி பெரும்பாலும் ஹிந்து கோவில்கள், அதில் முக்கியமானது டோலேஸ்வர், மஹாபாரதக்கதைகளில் இடம்பெற்ற பழமை வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

சங்குநாராயணன் கோவில். மலைமேல் இருக்கும் விஷ்ணு கோவில், மிக மிக அழகான சிற்பங்களும் விஷ்ணுபுராண சிலைகளுமாக அழகான இடம்.

இந்த கோவில்கள் அனைத்திலும் ஆள் நடமாட்டம் குறைவு, நுழைவுக்கட்டணம் உண்டு, அனைத்துமே காத்மாண்டுவின் நான்கு திசைகளிலும் தள்ளி அமைந்திருக்கிறது.



காத்மாண்டுவை விட்டு கிளம்பும் நேரம்  வந்துவிட்டது. மீண்டும் பசுபதிநாதரை தரிசித்து, கோரக்கரிடம் நன்றிகூறி தியானித்து , யாத்திரையின் நிறைவு உரையாக ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் சந்தேகம் தெளிந்து அருளாசி வாங்கி டெல்லியை நோக்கி பயணப்படுகிறோம்.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, ஆயிரம் பக்கம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை. முக்திநாத் போகவேண்டும் என்று நினைப்போருக்கு  இப்படி இருக்கும் என்ற சிறிய வழிகாட்டி. நாதர்களின் பூமியின் அருளையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் எழுத முடியாது என்றாலும் , எப்போது  படித்தாலும் மீண்டும் அந்த இடங்களுக்கு கண்மூடி மனதளவில் பயணிக்கவும், காளி கண்டகியின் வழியில் முக்திநாதரை தரிசிக்கவும், கோரக்கரை அருகிருந்து உணரவும் ,, மறுபடியும் வாழ்வில் இன்னொரு முறை அவர்களை காணும்  வாய்ப்பினையும் வேண்டவும் ஒரு வழி. மீண்டும் குருஅருள் மனம் வைத்து கோரக்கரையும் நாதபுரியையும் தரிசிக்க அருள்புரியட்டும்.

Thursday, April 20, 2017

இணைய வழி குருகுல பயிற்சி

நமஸ்காரம்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை மற்றும் ஸ்வாமி ஓம்கார் ஃபவுண்டேஷன் - (இந்தியா) இணைந்து இணைய வழி குருகுலபயிற்சியை துவங்குகிறது.


இதன் மூலம் இண்டர்நெட் வழியாக ஆன்மீக கல்வி, ஜோதிட பயிற்சிகள் மற்றும் சாஸ்திர கல்விகளை கற்றுக்கொள்ளலாம். ஆறு மாதம் மற்றும் ஒருவருட பயிற்சிகள் கொண்ட சிறந்த பாடத்திட்டம் கொண்ட பயிற்சிகள்.


பயிற்சியை பற்றிய முக்கிய குறிப்புகள்
  • நேரடியாக ஸ்வாமி ஓம்கார் அளிக்கும் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம்  வெள்ளிக்கிழமை  ஜோதிட பயிற்சி வகுப்புகள்.
  •  இரண்டாம் மற்றும் நான்காம் மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஆன்மீக வகுப்புகள்.
  • நேரம் : இரவு 9 மணி முதல் 11 மணி வரை - இரண்டு மணி நேரம்.
  •  உயர் நட்சத்திர ஜோதிடத்தில் அடிப்படை முதல் ஜாதக பலன் அறியும் வரை தெரிந்துகொள்ளலாம்.
  •  ஆன்மீக வகுப்பில் திருமந்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், விஞ்ஞான பைரவ தந்த்ரா, தியான வகுப்புகள் மற்றும்  ஆன்மீக சூட்சமங்களை தெரிந்துகொள்ளலாம்.
  •  பயிற்சி மொழி - தமிழ் மற்றும் ஆங்கிலம்.
  •  வயது வரம்பு - 16 முதல் ஆர்வம் உள்ள வரை
  •  இணைய வழி குருகுல பயிற்சி தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அல்ல. பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கானது. தமிழகத்தில் வசிப்பவர்கள் நேரடி பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பயிற்சி பல மாணவர்கள் ஒன்றிணைந்து கற்றுக்கொள்ளும் வகுப்பறை பயிற்சியாகும். இது ஒரு இணைய வகுப்பறை. தனி நபர் வகுப்பு (One to One) வகுப்புகளும் கோரிக்கைக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.
  •  பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பயிற்சி சார்ந்த 5 மணி நேர வீடியோ இலவசமாக அளிக்கப்படும்.
  •  இப்பயிற்சி தவிர பிற தலைப்புகளிலும் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
  •  பயிற்சிக்கு பின் சுய பரிசோதனை களம் அமைத்து தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும்.
  • நாதகேந்திரா என்ற ஆன்மீக சூழலை மேம்படுத்தும் நோக்கில் இவை கட்டணப்பயிற்சியாக அமைய இருக்கிறது.
  • கட்டணம் மற்றும் இதர விளக்கம் வேண்டுமெனில் swamiomkar@gmail.com மின்னசலிலோ அல்லது 9944233355 என்ற வாட்சப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


பயிற்சிகள் மே மாதம் 12ஆம் தேதி முதல் துவங்குகிறது.

இணைய வழி குருகுலபயிற்சியில் இணைய அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.

Sunday, February 26, 2017

சிவனின் கண்ணீர்..!


சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்கும் நோக்கத்தில் ஒருத்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்.

புதிய இளைஞர் வந்திருந்தார். முதல் சந்திப்பிற்கு உண்டான பணிவுடன் வணக்கம் சொல்லி அமர்ந்தார். என்ன விஷயமாக சந்திக்க வந்தார் எனக்கேட்டேன்.

இனி எங்களுக்குள் நடந்த கலந்துரையாடல் இங்கே...

 “ஸ்வாமிஜி, எனக்கு ருத்ராக்‌ஷ மாலை வேண்டும். இங்கே கிடைக்கும் என என் நண்பர் சொன்னார்.”

“ஓ அப்படியா? கண்டிப்பாக வாங்கிக்கலாம். அதுக்கு முன்னாடி ஏன் ருத்ராக்‌ஷ மாலை வாங்கறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் சிவ பக்தன் ஸ்வாமி, சிவராத்திரி அன்னைக்கு பூஜை செஞ்சு போட்டுக்கலாம்னு வாங்க வந்தேன்”

”ரொம்ப நல்லது. கையில என்ன வச்சிருக்கீங்க?”

“இதுவா? ஐபோன் ஸ்வாமிஜி”

“நீங்க ஸ்டீவ்ஜாப் பக்தரா?...இதை எதுக்கு வச்சிருக்கீங்க?”

“என்ன ஸ்வாமி இப்படி கேக்கறீங்க?.. இது பேசரதுக்கு”

“நீங்க புரிஞ்சுக்க்கணும்னு தான் இப்படி கேட்டேன். சிவ பக்தரா மட்டும் இருந்தா போதுமா? ருத்ராக்‌ஷம் எதுக்கு பயன்படுது?”

சிறிது யோசனைக்கு பிறகு....

“அதுவா சாமி ......நல்ல எண்ணம் வரும், நம்மை சுத்தி தீட்டு இருக்காது. கெட்டவங்க வைப்ரேஷன் நம்ம கிட்ட வராது. ஒரு விதத்தில் நம்மை காப்பாத்தும்”...

ஓ......நல்ல எண்ணம், கெட்டவங்க வைப்ரேஷன்....தீட்டு...... அப்ப இவரு ஏன் அதை போட்டுருக்காரு?  இவருக்கும் நல்ல எண்ணம் வரணும்னு போட்ருக்காரா? என நான் இந்த படத்தை காட்டினேன்...

”?!?!”

மிகக்குழப்பத்துடன்...என்னை பார்த்தார் அந்த இளைஞர்.

தம்பி ருத்ராக்‌ஷம் எதுக்கு அதன் பயன்பாடு என்ன என தெரிஞ்சு பயன்படுத்தனும்.  சிவ பக்தர் சொல்லிட்டு பயன்படுத்தறது, சினிமாவில் ஹீரோ போட்ட ட்ரஸ்னு வாங்கி போட்டிருக்கற மாதிரி ஒரு செயல். அது சிவனையும் பக்தியையும் அசிங்கப்படுத்தும்.

ஒரு உயிர்த்தன்மை இல்லாத ஐ போன் வாங்கும் போதே இது என்ன என்ன வசதிகள் , செயல்பாடுகள் இருக்குனு பல மணி நேரம் செலவிட்டு , எந்த செல்போன் நல்லா வேலை செய்யும்னு யோசிச்சு வாங்கும் நீங்க, ஆன்மீக விஷயம் மட்டும் ‘நல்ல வைப்ரேஷன்’ சொன்னா கண்ணை மூடிட்டு வாங்கறீங்களே.. இது நியாயமா?

ஆனா ஒன்னு தம்பி....உங்களை மாதிரி சிவனை நோகடிக்கிறவங்கங்க ஊருக்குள்ள பலர் இருக்காங்க...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!

எப்படி ஸ்வாமி? புரியலையே...

ருத்ரனின் ஆக்‌ஷம் - சிவனின் கண்ணீர் தான் ருத்ராக்‌ஷம்னு சொல்லுவாங்க. உங்களை மாதிரி ஆட்களை பார்த்து அவருக்கு நிறைய கண்ணீர் வரும்...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!
ஸ்வாமி என்னை வெச்சு விளையாடறீங்கனு நினைக்கிறேன். ருத்ராக்‌ஷத்தை பத்தி நல்லா தெரிஞ்சுட்டு வந்தே நான் வாங்கிக்கிறேன் எனொல்லி விடெற்றார்.
 
ஆன்மீகத்ற்றி ெரிய இளர்கைவிட.. ஆன்மீகத்ை அறைகுறையாக ற்றத்ைய இளர்கால் நம் காச்சாரத்ின் ‘வைப்ரன்’ கெட்டுப்போகிறு...!

 இப்படியாக அன்று ஆதிசிவன் திருவிளையாடல் நிகழ்த்தினார்... 

Wednesday, November 25, 2015

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா?

வெகு காலமாக பேசாமல் தவிர்த்து வந்த கருத்து. இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் என் கருத்தை பிறர் கருத்தாக போட்டு விளம்பரம் தேடுவதை பார்த்தேன். அதனால் இங்கேயும் கருத்துரை இடுகிறேன்.

http://www.vikatan.com/news/article.php?aid=55482

முதல் வரி முதல் இந்த கட்டுரை அபத்தத்தையே பேசுகிறது..

உதாரணமாக

//இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது//

இந்திய கோவில்களில் இல்லை. தென் இந்தியாவில் அதுவும் தமிழக, கேரள கோவில்களில் மட்டுமே இந்த நிலை. வட இந்தியாவில் பெண்கள் இத்தகைய காலத்தில் கோவிலுக்குள் சென்று தங்கள் கைகளால் அபிஷேகமே செய்யலாம். இச்செய்தி எத்தனை போராளிகளுக்கு தெரியும்? இந்து மதம் தடை செய்கிறது புலம்பும் மதவாதிகள் திருப்பதியை தாண்டியதில்லை என புரிகிறது...!

தமிழகத்தில் இருக்கும் ஒரு அமைப்பு 80களில் பெண்களை அவர்களின் வழிபாட்டு தளத்தில் அனுமதிக்க ஆரம்பித்த பொழுது பெரிய புரட்சியாக பார்த்தார்கள். உண்மையில் நம் மரபில் இது எங்கும் தவிர்க்கவோ தடைசெய்யவோ சொல்லவில்லை..

சுகாதாரம் என்ற கருத்தாக்கத்தில் விலகி இருக்க சொன்னார்கள். நம் தென் இந்தியாவில் கோவில்கள் (ஷேத்திரம்) விசேடமானவை, வட இந்தியாவில் தீர்த்தம் ( நீர் தன்மைகள்) விஷேடமானது. தென்னக புகழ் பெற்ற கோவில்களில் கட்டமைப்பு சராசரியாக 2 சதுர கீமி இருக்கும். அதனுள் கழிப்பறை இருக்காது. அதனால் பெண்கள் ஆலயத்தில் நுழைந்து, தரிசன வரிசையில் காத்திருத்தல் என்பது அவர்களுக்கும் பிறருக்கும் சுகாதார பிரச்சனையை உண்டு செய்யும் என்பது உணர வேண்டும்.
இதே வட நாட்டில் தீர்த்தகட்டம் அருகே இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய முடியும்.

ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான கழிப்பறையை எதிர்பார்ப்பது அவசியம்.  இப்படி கட்டிட கலையின் உச்சத்தில் இருக்கும் கோவிலுக்கே கழிப்பறை சாத்தியமில்லை என்றால் ஒரு காலத்தில் வனமாக இருந்த  சபரிமலை பற்றி யோசிக்க வேண்டும்.

பழைய மரபை கண்மூடித்தனமாக பின்பற்றும் தற்கால தந்திரிகளை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இப்படியே போனால் சபரிமலைக்கு வரும் சாமிகள் வேன் மற்றும் பேருந்தை தவிர்த்து ஐயப்ப சாமி போல புலி மேல் வர சொன்னாலும் சொல்லுவார்கள்...!

கேரளாவில் மன்னார்சாலை என்ற நாக கோவில் உண்டு. இங்கே இளம் பெண்கள் தான் பூசாரிகள். ஆலயத்தின் ஒரு பகுதிக்கு மேல் ஆண்கள் அனுமதி இல்லை. காரணம் பூசாரிகள் உடை அணிவது இல்லை. இந்த கோவிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என யாரும் போராடுவதில்லை.. அது போல கோவிலின் மரபு அதன் தன்மையை மதிக்கும் பொறுப்பு நமக்கு அவசியம். எந்த மரபும் ஒன்று போல இருப்பதில்லை. காலத்தால் அனைத்தும் மாறும்.

ஃபேஸ் புக்கில் Happytobleed என்ற தலைப்பில் சபரிமலைக்கு எதிராக பேசுவது வட நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு துளி கூட புரிய போவது இல்லை. மேலும் இது மதம் சார்ந்த ஒரு விஷயம். மதம் கடந்து வர நாம் தயாராக வேண்டுமே தவிர மதத்தை நாம் ஏன் தயார் செய்ய வேண்டும்?

என்னிடம் ஆன்மீக பயிற்சி செய்ய வருபவர்களிடம் மாதவிடாய் தவிர்க்க சொல்லுவது இல்லை. ருத்ராக்‌ஷம் அணிந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அதனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அணியக்கூடாது என்றும் புனிதம் என்றும் கூறுவதை தவிர்த்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எல்லா காலத்திலும் அணியலாம் என கூறுகிறேன். இதற்கு முதலில் தடையாக இருப்பது பெண்கள் தான் , நான் கூறினாலும் இந்த விஷயத்தை செய்ய முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்..!

இந்த பிரச்சனையில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் ஊடக அறம், இணைய  போராளிகளின் அறிவு தரம், தம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாத மேல் நாட்டு மோகம். வேறு ஒன்றும் ஆரோக்கியமான விஷயம் நடந்துவிடவில்லை...!

தற்கால இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்தாமல் கலாச்சாரத்திற்கு எதிராக தூண்டிவிடுவது வெட்கக்கேடானது.

Friday, March 6, 2015

ஓம்கார யோகம்

இறையருள் ஒளிரட்டும், குரு அருள் பெருகட்டும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நமது இயல்பு வாழ்க்கையின் சூழலால் ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டாலும் அதை தொடர்வதிலும் ஆழ்ந்து செயல்படுவதிலும் சில தடைகள் ஏற்படுகிறது.

அத்தகைய சூழலை சரி செய்யும் நோக்கில் ப்ரணவ பீடத்தில் நடைபெறும் நிகழ்வு - ஓம்கார யோகம்.

ஓம்கார யோகம் என்பது 90 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாளை முற்றிலும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணிக்கும் வகையில் உங்களை தூண்டி ஆன்மீக வேள்வியில் ஈடுபடுத்தும் நிகழ்வாகும்.

காலை ஹத யோக பயிற்சியில் துவங்கி  பல்வேறு தியான பயிற்சிகள் மற்றும் மனவள பயிற்சி நடைபெறும். மாலை வேளையில் நம் கலாச்சார நூல்களான பாகவதம், திருமந்திரம் மற்றும் உபநிஷத்துகளுடன் சத்சங்கம் மற்றும் பஜன் நடைபெறும்.

ஆங்கில வருடத்தின் ஒற்றைப்படை மாதங்களின் மூன்றாம் ஞாயிறு அன்று ஓம்கார யோகம் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 15ஆம் தேதி கோவை ப்ரணவ பீடத்தில் நடைபெறுகிறது.

ஓம்கார யோகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு முன் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

ஓம்கார யோகத்தில் கலந்து கொள்ள நன்கொடை 500/- ரூபாய். இந்த நன்கொடையில் மதிய உணவு  தேனீர் வழங்கப்படும். ஓம்கார யோகம் என்ற இந்த அந்தர் யோக நாளில் உங்கள் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்கள் என யாரேனும் ஒருவரை உங்கள் சார்பாக அழைத்து வரலாம். அவர்களுக்கு இப்பயிற்சி இலவசம்.

உங்களின் ஆன்மீக நெருப்பை அணையாமல் ஒளிர செய்ய ஓம்கார யோகத்தில் இணைவோம்.

மேலும் விபரங்களுக்கு

ஸ்வாமி ஓம்கார்

தொலைபேசி எண் : 9944 2 333 55

Monday, October 13, 2014

பக்தி யோகம் - நீங்கள் எப்படிப்பட்ட பக்திமான்? - ( யோகம் - 1)

யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 


நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம். ஆனால் இதெல்லாம் வரலாறு, தற்சமயம் நம் நிலை..?

இறைவனை தியானிக்கும் பொழுது தேவையற்ற சிந்தனை வருகிறது என நினைக்கிறோம். உதாரணமாக உங்கள் குழந்தை பற்றியோ சிலருக்கு.. காதலி நினைவு, சிலருக்கு நண்பர்களின் நினைவு, தொழில் என மனது அலைபாயும். இவ்வாறு ஆன்மீகத்தில் ஈடுபடும் பலருக்கு தங்கள் அலைபாயும் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது என தெரிவதில்லை. அதனால் அவர்களுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடுவது உண்டு. இவ்வுணர்ச்சி அதிகமாகி அவர்களை ஆன்மீகத்தை விட்டே வெளியேற வைக்கும், இவற்றை தவிர்க்க நல்ல மருந்தாக அமைவது பக்தியோகம்.

பெற்றோர், காதலன்/ காதலி , குழந்தை, நண்பர் என உங்கள் மனம் உறவால் வசப்பட்டு அதனால் எழும் உணர்வால் நிரப்பப்பட்டு இருக்கலாம். உங்களின் உணர்வுகளை விட்டுவிட்டு வாருங்கள் அப்பொழுது தான் இறைவனை காணலாம் என சொன்னால் அது எப்பொழுதும் முடியாது. மீனை தண்ணீரை தாண்டி வா உனக்கு வாழ கற்று தருகிறேன் என சொல்லுவதை போன்றதே இச்செயல்.  பல மதங்கள் இச்செயலை தான் செய்கின்றன. ஆனால் ஆன்மீகம் உங்களின் அடிப்படை உணர்வு மிகுதியை வைத்தே உங்களை மேம்படுத்தும்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.

இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் பக்தியில் பலராலும் கொண்டாடப்படும் தெய்வாம்சம். இதன் காரணம் ஸ்ரீக்ருஷ்ணர் வாழும் காலத்திலேயே இந்த ஐவகையான முறையில் பக்தி செய்யப்பட்டவர், யசோதையால் வாத்சல்யம் (குழந்தையாக), கோகுலத்தில் கோபியரிடம் தாசியம் (அடிமை தன்மை), பாண்டவர்கள் மற்றும் பிருந்தாவனத்தில் இருப்பவர்களின் பிரச்சனைக்கு சாந்தம் (பெற்றோராக), அர்ஜுனனுக்கு சகியம் ( நண்பன்), ராதைக்கு மதுரம் ( காதலன்) என பக்தி செய்யப்பட்டதால் கண்ணன் அனைவராலும் வணங்கப்படுகிறார்.  

இந்த ஐவகை பக்தியும் பஞ்சபூதத்தின் அடிப்படையில் உருவானது.

இறைவனை குழந்தையாக பாவனை செய்தல் எனும் வாத்சல்யம் பஞ்ச பூதத்தில் அக்னியை குறிக்கும். இறைவனை நண்பனாக பாவனை எனும் சகியம் பஞ்ச பூதத்தில் ஆகாயத்தை குறிக்கும்.  இறைவனை முதலாளியாக்கி நம்மை அடிமையாக பாவனை செய்தல் எனும் தாசியம் பஞ்ச பூதத்தில் பூமியை குறிக்கும்.

இறைவனை , காக்கும் தந்தையாக பாவனை செய்தல் எனும் சாந்தம் பஞ்ச பூதத்தில் காற்றை குறிக்கும்.  இறைவனை காதலனாக பாவனை செய்தல் எனும் மதுரம் பஞ்ச பூதத்தில் நீர் தன்மையை குறிக்கும். இந்த பக்தி வழிமுறையையும் பஞ்ச பூத தன்மையையும் ஆழ்ந்து ஒப்பிட்டால் பக்தி செயல்படும் முறையும் அதன் அவசியமும் தெரிய துவங்கும்.  

இந்த ஐவகைகளில் எப்படிப்பட்ட பக்தியை தேர்வு  செய்வது? எது சிறந்தது? என கேள்வி எழும். 

நம் உடல் மற்றும் மனம் பஞ்ச பூத தொகுப்பால் உருவாகி இருக்கிறது அத்தகைய பஞ்ச பூதத்தின் தொகுப்பால் உருவாகிய நாம் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கத்தில் இருப்போம்.  உதாரணமாக பஞ்ச பூதத்தில் பூமியின் ஆதிக்கத்தில் செயல்பட்டு நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மையை பின்னுக்கு தள்ளிய நிலையில் இருந்தால் நீங்கள் பக்தி செய்ய வேண்டிய தன்மை தாசியம் எனும் அடிமை தன்மை ஆகும். இது போன்று உங்கள் பஞ்சபூதத்தின் தன்மை ஆதிக்கம் தெரிந்து பக்தி வழியை தேர்வு செய்யலாம்.  

உங்களால் பக்தி தன்மையை உங்களின் பஞ்ச பூத தன்மையை கொண்டு அறிய முடியவில்லை என்றால் உங்கள் குருவிடம் சரணடையுங்கள் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். குரு என்றவுடன் உங்களுக்கு மற்றொரு கேள்வியும் தோன்றி இருக்கக் கூடும். ஐவகை பக்தியில் குரு பக்தி என சொல்லப்படுவது எந்த வகை சார்ந்தது? இதன் பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதற்கான விடையை நீங்களே கூற முயலுங்கள்.

பஞ்சபூதங்களின் அடிப்படையில் பக்தி வகைகள் இருக்கிறது என பார்த்தோம். பஞ்சபூதங்கள் நிலைபடுத்த வேண்டுமானால் அதற்கு பராமரிப்பு தேவை. முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தற்கால வாழ்க்கை முறையில் பஞ்ச பூதத்தில் அனைத்தும் மாசு அடைகிறது என்பதை பார்க்கிறோம். ஆகவே தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்.



1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

ஒன்பது வழிகளை திரும்ப திரும்ப செயல்படுத்துவதாலும் அத்துடன் இணைந்து இருப்பதாலும் பக்தி வலுவடைந்து மாசுபடாமல் வளர்கிறது. இந்த ஒன்பது வழிகளும் நவக்கிரகங்களின் செயலுடன் இணையாக வருவதால் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக ஒருவர் எப்படிப்பட்ட பக்தி செய்வார் என்பதையும் எத்தகைய வழியில் ஈடுபாடு இருக்கும் என்பதையும் அறியும் முறைகள் முற்காலத்தில் இருந்தது.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம். பக்தியோகத்தை எளிமையாகவும் அதன் கருப்பொருளையும் கொடுக்கவே இவ்வாறு குறுகிய வடிவில் எழுதி உள்ளேன். இதனை வாசிப்பவர்கள் பக்தியோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் போதுமானது.  

இனி பக்தி கதைகளையோ நூல்களையோ படிக்கும் பொழுது இது ஐவகை பக்தியில் எந்தவகை சார்ந்தது என சிந்தியுங்கள். அப்படி செய்வதால் நீங்கள் ஸ்மரணம் என்ற வழியில் பக்தியை பயன்படுத்துகிறீகள் அல்லவா...? 

பக்தி யோகத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்கள் : புராணங்கள் - பாகவதம், தேவி பாகவதம். பிற நுல்கள் - நாரத பக்தி சூத்திரம். 

நீங்கள் பக்தி மார்க்கத்தில் பயணித்து பக்தியில் உள்ளார்து இறைவனுடன் இரண்டற கலக்க என் ப்ரார்த்தனைகள். 

Wednesday, June 18, 2014

குரு பூர்ணிமா அழைப்பிதழ் 2014

குருவின் அருள்பெற்று ஆன்மீக உயர்நிலை பெற 
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Tuesday, April 15, 2014

அருணாச்சல விநாயகர் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக அழைப்பிதழ்

அன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அருணாச்சல விநாயகர் என்ற திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 10,11 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

எனது மாணவர் திரு.அருணாச்சலம் மற்றும் அவரின் குடுபத்தாரின் ஆழ்ந்த பக்தியால் உருவாகி இருக்கிறது இந்த கோவில். பல்வேறு கோவில்கள் விநாயகருக்கு இருந்தாலும் இக்கோவில் சில சிறப்புகளை கொண்டது. தனது இல்லத்தில் இருந்த விநாயகர் கோவிலை விரிவாக கட்ட என்னிய திரு.அருணாச்சலம் அவர்கள் என்னிடம் வடிவமைப்பு பற்றி யோசனை கேட்டார். 

நம் கலாச்சாரத்தில் விநாயகர் முழு முதற்கடவுளாக வணங்கப்படுகிறது. அதே சமயம் அருவுருவமாகவும் முழுமுதற்கடவுளாகவும் ஸ்ரீமேருவை ஆன்மீகவாதிகள் வணங்குகிறார்கள். இரண்டையும் இணைந்து வடிவமைக்கும் எண்ணம் இறையருள் அளித்தது. அதனால் கோவிலின் கோபுரமே முழுமையாக ஸ்ரீமேருவாக ஆகாயத்தை நோக்கியும். கோவிலின் கருவறையின் உட்புறம் பூமியை பார்த்த நிலையில் ஒரு ஸ்ரீமேருவாக இருக்கும் படியும் வடிவைத்து இறையருளால் முழு கற்கோவிலாக அமைந்திருக்கிறது. மஹாபலிபுரம் போன்ற பழமையான கட்டிடகலை நுணுக்கத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.


இது தவிர கருவறையில் அமர்ந்திருக்கும் விநாயக பெருமானின் பீடத்தில் உள்ளேயும் ஒரு ஸ்ரீமேரு என மூன்று நிலைகளை குறிக்கும் வகையில் ஸ்ரீசக்ர மேரு கோவிலாக உருவாகி இருக்கிறது இந்த அருணாச்சல விநாயகர் கோவில்.

கோவிலின் அற்புதத்தை காணவும், நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகத்திற்கும் வந்து இறையருள் பெருமாறு பேரன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு திரு அருணாச்சலம் : 9443107780

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



Monday, February 24, 2014

ஆனந்த அனுபவங்கள் பகுதி 2

ஆனந்த அனுபவங்கள் என்ற தலைப்பில் என் மாணவர்களின் ஆன்மீக அனுபவங்களை சென்ற பதிவில் தொகுத்திருந்தேன். அது இங்கே.. 

மேலும் காசி பயணம் பற்றி சில மாணவர்கள் எழுதியவைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.


திருமதி.சாயனதேவி சச்சின் - அவர்களின் அனுபவ பகிர்வு. இவர் முதன் முதலில் கட்டுரை எழுதுகிறார் என சொல்வதை நம்புவது கடினம். சரளமான நடையும் , கூட்டி செல்லும் பயண அனுபவமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கட்டுரை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


திருமதி. பாபி நாராயணன் & அருண் - சென்ற ஆண்டு கும்பமேளாவில் ஒரு மாதமும், இந்த முறை காசி பயணத்திலும் கலந்துகொண்டவர்கள். எளிய நடையில் அனுபவத்தை கடத்தும் எழுத்து இவர்களுடையது.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

திரு.சரவண பாண்டி 
- கோவையில் வசிக்கும் இவரின் கன்னி பேச்சு போன்று மழலை நிறைந்த கட்டுரையில் தன் வெண் மனசு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறார். பசுமையான பாமர எழுத்துக்கு இவரின் கடிதம் உதாரணம். அவரின் கையெழுத்திலேயே பதிவேற்றம் செய்துள்ளேன்.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Monday, February 17, 2014

ஆனந்த அனுபவங்கள்...!

சென்று ஆண்டு கும்பமேளா மற்றும் அருணாச்சல திருபயணம் ஆகியவையும், இந்த ஆண்டின் துவக்கத்தில் காசி திருப்பயணமும் பல்வேறு மாணவர்களுடன் சென்று வந்தோம்.

இதில் பங்குபெற்றவர்கள் தங்களின் வலைபக்கத்திலும் தனிப்பட்ட முறையிலும் அவர்களின் அனுபவங்களை எழுதுகிறார்கள். ஆன்மீக ரீதியாகவும், தனிப்பட்ட நிலையிலும் அவர்கள் அனுபவித்த கண்டு உணர்ந்த விஷயங்கள் உங்களையும் பரவசப்படவைக்கும். 

அவர்களின் அனுபவத்தை வெளியிடுவதற்கு ஒரு முறை படித்தவுடன் நானும் அச்சூழலை மீண்டும் கண்டு களித்தது போல இருந்தது. முழு விழிப்புணர்வுடன் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது இவர்களின் எழுத்து காட்டியது.

அருணாச்சல மலை ஏற்றம் : 

சிங்கப்பூரை சேர்ந்த பாலா அவர்களின் அற்புத அனுபவம் :) இனி அருணாச்சல மலை ஏற என்னுடன் வருபவர்களுக்கு எச்சரிக்கை விடும் அனுபவம். படிக்க இங்கே க்ளிக் செய்யவும் : அனுபவம்-1

கும்பமேளா :

ஷங்கர் மற்றும் அகநாழிகை பொன்வாசுதேவன் ஆகிய இருவரும் கும்பமேளாவில் என்னை வந்து சந்தித்தனர். ஷங்கர் அவர்கள் பார்வையில் கும்பமேளா..  அனுபவம் 2

காசி திருபயண அனுபவம் :

திருமதி .விஜி ராம் அவர்களின் காசி பயண அனுபவங்கள் தொடராக இந்த சுட்டியில் படிக்கலாம். அனுபவம் 3

திரு.சுப்பிரமணியன் மற்றும் திருமதி.கோமதி ஆகியோர் தம்பதிகளாக காசி பயணம் வந்தனர். அவர்களின் அனுபவம் பெரும் பிரவாகமாக இங்கே அனுபம் 4

Sunday, April 7, 2013

பழைய பஞ்சாங்கம் 7-4-2013


சுப்பாண்டியார் - சுப்பாண்டி யார் ?

நமது வலைபக்கத்தை வாசிக்கும் பலருக்கு சுப்பாண்டியை நன்றாக அறிமுகம் உண்டு. நான் பல ஊர்களுக்கு பயணிக்கும் பொழுது சுப்பாண்டி கூட வந்திருக்காரா? என கேட்பதுண்டு. தொலைபேசியில் என்னுடன் பேசுபவர்கள் கூட பேச்சின்முடிவில் சுப்பாண்டியை கேட்டதாக சொல்லுங்க என்பார்கள். அவனுக்கு தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை எழுதி அதற்கு ஆலோசனை வேண்டி பலர் கடிதம் எழுதுகிறார்கள். நான் ஒருவன் இங்கே இருப்பதையே சுப்பாண்டி மறைத்துவிடுகிறான். ஒரு சில வேளைகளில் இவன் பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து எனக்கு பொறாமை கூட ஏற்படுவதுண்டு. இந்த சுப்பாண்டியை பலருக்கு அறிமுகம் செய்துவைத்ததே நான் தான். அவன் எனக்கு எப்படி அறிமுகம் ஆனான் தெரியுமா?


ஒரு நாள் பல்பொருள் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பணம் செலுத்தும் இடத்தில் ஒரே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. நமக்குத்தான் பிறர் பிரச்சனையில் ஆர்வம் அதிகம் வருமே? உடனே சென்று கூட்டத்தை விலக்கிப்பார்த்தேன்.

அங்கே குழந்தை தனமான முகத்துடன் அமர்ந்திருந்தான் சுப்பாண்டி. இப்படி ஒரு அப்பாவியை அடித்திருக்கிறார்களே என நினைத்து, என்னப்பா இங்க பிரச்சனை என கேட்டேன்.

கடையில் ஒருவர் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது பணம் வாங்குபவரிடம் சுப்பாண்டி கேட்டானாம்.., 

“ஏன் சார் காசு கொடுத்து தானே சிகரெட் வாங்கரீங்க? நல்ல சிகரெட் கொடுக்காம, கடைக்காரர் எப்படி உங்களை ஏமாத்தரார் பாருங்க” 

என அவன் சிகரெட் பெட்டியை காண்பிக்க, அதில் புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என எழுதி இருந்தது. முகத்தை பெருமையாக வைத்துக்கொண்டு கடைக்காரரை பார்த்து, “உடம்பை கெடுக்காத சிகரெட்டா கொடுங்க” என கூறவும், நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது.

இத்தனை அறிவு கொண்ட ஆள் நம்முடன் இருக்கட்டும் என அவனை அழைத்துவந்தேன். அன்று பிடித்தது...!

-------------------------------

மனைவி எப்படி நிற்கனும்?

என்னிடம் ஆசிவாங்கும் தம்பதியினர் பெரும்பாலும் என் முன் கபடி ஆடுவதை பார்த்திருக்கிறேன். கணவனுக்கு எந்த பக்கம் மனைவி நின்று கொண்டு ஆசிவாங்க வேண்டும் என்பதில் அவர்கள் ஆசிவாங்க குனியும் பொழுதே சந்தேகம் வரும். பிறகு வலது இடது என கணவனும் மனைவியும் மாறி கபடிக்கு ஒப்பாக பாவனை செய்வார்கள். நம் சம்பரதாயத்தில் இறைவனின் ஆண் தன்மை வலது புறமும், பெண் தன்மை இடது புறமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது சிவன் சக்தியோ, பெருமாளும் தாயாருமோ என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் பல்வேறு கலாச்சரத்திலும் ஆண் பெண் தன்மை வலது இடதாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆன்மீக நிலை கொண்ட ஒரு இடத்தில் தம்பதிகளாக ஆசி வாங்கும் பொழுது ஆணின் வலது பக்கம் பெண் இருக்க வேண்டும். அதனால் தம்பதிகளின் பெண், ஆன்மீகவாதியின் பெண் தன்மைக்கும், தம்பதிகளின் ஆண் ஆன்மீகவாதியின் ஆண் தன்மைக்கும் வணக்கம் செய்வதை போல ஆகும்.

எனக்கு இத்தகைய வெளிச்சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஒருவன் பக்தியுடன் வணங்கினால் எப்படி இருந்தாலும் தவறில்லை என நினைப்பவன். ஆனால் தற்கால குடும்பங்களில் பெரியவர்கள் வழிகாட்டுவதற்கு இல்லை என்பதால் அனேக தம்பதியினர் என்னிடம் கேட்பார்கள். நானும் பொறுமையாக கூறுவேன். இருந்தாலும் அடுத்த முறை ஆசிவாங்க வரும் பொழுது அவர்களுக்கு குழப்பம் வந்துவிடும். மீண்டும் என்னிடம் கேட்ப்பார்கள். இப்படி குழப்பத்துடன் இருந்த தம்பதிகள் என்னிடம் அடிக்கடி கேட்க, நான் பொறுமை இழந்து சுப்புவை கைகாட்டி இவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டேன்.

அடுத்த முறையிலிருந்து அவர்களிடம் குழப்பம் இல்லை...! நானும் ஆச்சரியத்துடன் எப்படி சுப்பு இவங்க குழப்பத்தை தீர்த்த? நானே தீர்க்க முடியாம இருந்தேனே என கேட்டேன். 

“வேற ஒன்னும் இல்லை சுவாமிஜி, கீப்  லெப்டு - மனைவி தான் எப்பவும் ரைட்டுனு சொன்னேன்” என்றான். எனக்கு இதில் ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கு புரிஞ்சுதா?

-------------------------------

அரேபிய விமானம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொழுது அந்த நாட்டிற்கு உண்டான விமான சேவையையே பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பேன். அதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் விமான சேவை மிக குறைந்த கட்டணமாக இருக்கும். அல்லது அந்த நாட்டின் பிரத்யோகமாக குறைந்த கட்டண சேவையை தேர்ந்தெடுப்பதும் உண்டு. பெரும்பாலும் எனக்கான விமான சீட்டு வேறு ஒருவர் தான் எடுப்பார்கள். 

எனக்கு விருப்ப தேர்வு என இருக்காது. சமீபத்தில் எனது ஐரோப்பிய பயணத்திற்கு இதே போல மற்றொருவர் விமான சேவையை தேர்வு செய்தார். எதிஹாட் ஏர்வேஸ் என்ற விமான சேவை அது. துபாய் நகரை மையம் கொண்டு செயல்படும் நிறுவனம். முதன் முதலாக அரேபிய விமானத்தில் பயணம். 

நான் பயணம் செய்ய துவங்கும் முன் ப்ரார்த்தனையில் ஈடுபடுவது உண்டு. அதே போல இந்த விமானத்தில் அமர்ந்ததும் பெல்ட் அணிந்து கண்களை மூடி ப்ரார்த்தனை செய்ய துவங்கும் சமயம், ஸ்பீகரில் குரல் ஒலித்தது....! திருக்குரானிலிருந்து அற்புதமான வரிகள்..என் ப்ரார்த்தனைக்கு மிகவும் நெருக்கமான வரிகள் மெய்சிலிர்த்து போனேன்.

பெரும்பாலான விமான சேவைகள் ப்ரார்த்தனை செய்வதில்லை. இஸ்லாமிய விமான சேவை அனைத்திலும் இது போன்ற ப்ரார்த்தனைகள் இருப்பதாக அறிந்து மகிழ்ந்தேன். அனைத்து விமானங்களிலும் இச்சேவையை துவங்கலாம். சமயசார்பற்ற நாடுகள் அனைத்து சமய ப்ரார்த்தனையையும் செய்யலாம். இது ஒரு வேண்டுகோள்.

அது சரி அந்த திருக்குரான் ப்ரார்த்தனை என்ன என்று தானே கேட்க்கிறீர்கள்? எனக்கு தெரிந்த முறையில் மொழி பெயர்த்துள்ளேன்.

முழுமுதற்கடவுளின் பெயரால் அவரை வணங்குகிறேன். இறையருள் நம் அனைத்து பயணங்களையும் அதற்கான கருவிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதே இறையருள் திரும்பி வருவதற்கும் துணை நிற்கட்டும். 

இப்படி அனைத்து விமானங்களிலும் ப்ரார்த்தனை செய்ய துவங்கினால்., மத நம்பிக்கையும் ப்ரார்த்தனையில் நம்பிக்கையும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் ஒரு வழி உண்டு. அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே பஞ்சு வாங்கி காதில் வைத்துக்கொள்ளலாம்..!

---------------------------------------
ஜென்னிசம்

வானிலிருந்து இறங்கிய 
பனித்துளியால் புல் நிறம் மாறவில்லை 
மாறாக தலைசாய்த்து பணிந்தது...!

Friday, December 16, 2011

திரிகுண ரஹஸ்யம் - பகுதி 2

இந்திய சித்தாந்தங்கள் கூறுவதில் இறைவனின் செயல் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். இச்செயலில் தலைவனாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என பிரிக்கிறார்கள். இவ்வாறு இறை நிலை தன் தன்மையை மூன்றாக பிரித்தால் தான் உருவ நிலைக்கு வர முடியும்.

குணமற்ற நிலையில் இருப்பதை நிர்குணம் என்கிறோம். மூன்று குணங்களும் இல்லாமல் இறைவன் நிர்குண பிரம்மமாக இருந்து பிறகு தன் செயலால் முக்குண நிலையை அடைகிறார். எப்பொழுது பிரம்மம் திரிகுண நிலைக்கு வருகிறதோ அந்த நொடியே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது.

இந்திய கலாச்சாரத்தில் ஆறு வகை சமயம் (ஷண்மார்கம்) என கூறும் பிரிவுகளில் ஓவ்வொரு சமயமும் மூன்று தன்மையுடனேயே விளங்கிகிறது.

கணபதியம் என்ற விநாயகர் வழிபாட்டில் அவர் சித்தி-புத்தியுடன் மூன்று எண்ணிக்கையில் இருக்கிறார்.

கெளமாரம் என்ற சுப்ரமணியர் வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் முருகனையும், வைணவ முறையில் பூமி நீளா சமேத பெருமாளாகவும், சாக்த முறையான அம்பாள் வழிபாட்டில் லக்‌ஷ்மி, சரஸ்வதி, பார்வதியாகவும் மூன்று எண்ணிக்கையாக இறைவனை வணங்குகிறார்கள். சைவர்கள் சிவன், மஹேஸ்வரன், ருத்திரன் என்ற மூன்று நிலையில் சிவனை வணங்குகிறார்கள். சூரிய வழிபாடு செய்பவர்கள் சாயா மற்றும் மாயாவுடன் ஆதித்தியனான சூரியனை வணங்குகிறார்கள்.

சமணர்களிலும், ஜைனர்களில் கொள்கையும் மூன்று எண்ணிக்கையில் இருந்து திரிகுணத்தை பிரதிபலிக்கிறது.

கிருஸ்துவ வழிபாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியாக முக்குணங்கள் வெளிப்படுகின்றன.

இவ்வாறு உலக மதங்கள் மூக்குணங்களை கொண்டிருக்கின்றன. எனினும் சில மதங்கள் முக்குண பேதமில்லாமல் நிர்குண பிரம்மத்தை கூறினாலும், அதை பின்பற்றுபவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து திரிகுணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இறைவனில் இந்த முக்குண நிலை அந்த முக்குணத்துடனே பெருக்கம் அடைவதால் நவக்கிரகங்கள் உருவாகிறது (3X3=9). அந்த நவ நிலையுடன் மீண்டும் திரிகுண பெருக்கம் ஏற்படுவதால் நட்சத்திர மண்டலம் ஏற்படுகிறது (9X3=27).

நவக்கிரகங்களாக வெளிப்பட்ட திரிகுண தொடர்ச்சியாக நவ ரசங்கள், ரத்தினங்கள் என உலகியல் பொருட்கள் வகைப்படுத்தப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்ல ஏனைய சாஸ்திரங்கள் இந்த மூன்று நிலை சார்ந்தே இருக்கிறது.

கால நிலையில் கூட ஆறு காலங்கள் (ருது) முக்குணத்திற்கு இரண்டு என்ற வீதத்தில் இயங்குகிறது. காலை, இரவு மற்றும் சந்தியாக்காலம் என ஓர் நாள் மூன்று தன்மையை கொண்டதாக இருக்கிறது.

நம் உண்ணும் உணவு முறை காலை உணவு சாத்வீகத்தையும், மதிய உணவு ரஜோ குணத்தையும் இரவு உணவு தமோ குணத்தையும் காட்டுகிறது. உணவின் தன்மையில் எளிமையான உணவுகள் சாத்வீகத்தையும், மசாலா-கார உணவுகள் ரஜோ குணத்தையும், பழைய உணவுகள் மற்றும் அசைவம் தமோ குணத்தையும் வெளிப்படுத்துகிறது.

திரிகுண நிலை பற்றி போதிய அளவுக்கு தெளிவு பெற்றோம். இம்மூன்று குணத்தில் எத்தகைய குண நிலை சிறந்தது என முன்பு பார்த்தோம். சாத்வீக நிலை அனைவருக்கும் பொதுவானதாகவும் துன்பம் விளைவிக்காத நிலையும் கொண்டது என்றாலும் சாத்வீக நிலையிலேயே எப்பொழுதும் இருப்பது சாத்தியமா என சிந்திக்க வேண்டும்.

அப்படியானால் எந்த குணத்தில் இருந்தால் நல்லது?

(தொடரும்)

-------- தமோ குணம் / திரிகுணம் (2/3)--------

Sunday, November 27, 2011

திரிகுண ரஹஸ்யம்


தற்சமயம் 3 பற்றிய பேச்சு ஊருக்குள் பிரபலமாக இருப்பதால் நாமும் மூன்று பற்றி பேசுவோம். வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நியூமராலஜி பற்றி பேசப்போவதில்லை.


இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.


மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.

நீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெயில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்பட முடியாது என்பதை இந்த உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

மூன்று குணங்கள் உலக மதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா?

(தொடரும்)
-------- ரஜோ குணம் / திரிகுணம் (1/3)--------

Wednesday, November 9, 2011

www.அகஸ்திரை பாரு.com

சுப்பாண்டி சில நாட்களாக என்னை கண்டும் காணாதது போல இருந்தான். அவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கேட்டதில் அதிர்ச்சி தகவலை தந்தான் சுப்பாண்டி. இண்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது அகஸ்தியரை நேரில் காணும் மந்திரம் ஒரு வெப்சைட்டில் இருந்ததாகவும் அது எப்படி சொல்ல வேண்டும் என்ற வழிமுறையும் கொடுக்கப்பட்டுருந்தது என்றான். நானும் சுவாரசியம் அடைந்து, என்ன மந்திரம் அது என கேட்க, முகத்தை ஏதோ சீக்கு வந்த கோழி போல வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். ஏனப்பா என்னாச்சு என்றேன்...சும்மா கேட்டா சொல்லிடுவோமா? அதுக்கு எல்லாம் தட்சணை தரணும் என்றான்.

என்ன கொடுமை என தலையில் அடித்துக்கொண்டு என்ன தட்சணை என கேட்க, 101 ரூபாய் என்றான். நானும் அவன் கையில் கொடுத்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பவ்வியமாக மந்திர உபதேசம் கேட்க தயாராக நின்றேன். என் காதின் அருகே வந்து....

டபிள்யூ டபிள்யூ டபிள்யூ அகஸ்தியரை பாரு டாட் காம் என கூறிவிட்டு சென்றான். அவன் கூறிய வெப்சைட்டில் இருந்த மந்திரம் சுமாராக இப்படி இருந்தது... “அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வா வா” என துவங்கி கொஞ்சம் டெரரான மந்திரமாக இருந்தது. மந்திரம் 1008 முறை தினமும் கூறிவர வேண்டும். 41 நாள் சொல்ல வேண்டும், இப்படி பத்தியம் இருக்க வேண்டும் என பல கன்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டிருந்தது. இது பத்தாது என்று அகஸ்தியர் 41ஆம் நாள் முடிவில் நம் முன் தோன்றும் பொழுது எப்படி இருப்பார் என அவரின் அங்க லட்சணத்தையும் கூறி இருந்தார்கள்.

நமக்கு மந்திரம் சொல்லுவது, பத்தியம் இருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நம்ம சீனியரிடம் அவரின் அனுபவத்தை கேட்க எண்ணினேன்.

சுப்பாண்டி நீ இந்த அகஸ்திய மந்திரத்தை சொன்னியா? 41 நாள் விரதம் எல்லாம் இருக்கனுமாமே? நீ அகஸ்தியரை பார்த்தியா? என கேட்டேன்.

தன் அகஸ்திய அனுபவங்களை கூற துவங்கினான் சுப்பாண்டி...
“ஓ முதல் நாள் தொடங்கி தினமும் பத்தியம் இருந்து காலையில் சூரிய உதயம் முன்னாடி அந்த மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவ சொன்னேன். அதுவும் வாய்விட்டு - அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வாவா சொல்லும் பொழுது ஒரு வைப்பிரேஷன் தெரிஞ்சுது...” என்றான்.

அப்புறம் கடைசி நாள் அகஸ்தியர் வந்தாரா? - இது நான்.

“கடைசி நாள் நான் சொல்லி முடிச்சுட்டு மெல்ல கண் திறந்தா அங்கே இரண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க..”

“சூப்பர் சுப்பு.. எப்படியோ ஸித்தி பண்ணிட்ட..”

“நீங்க வேற சாமி .....பஞ்சாப் சர்தார்ஜி ரெண்டு பேர் எம் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. யாரு நீங்கனு கேட்டேன். ஒருத்தர் அங் சிங்-காம், இன்னொருத்தன் மங் சிங்-காம்.” என சொல்லி தான் பெற்ற அனுபவத்தை கதறலுடன் முடித்தான் சுப்பாண்டி.

எனக்கு 101 ரூபாய் நஷ்டம்..!

------------------------------------------------------------
டிஸ்கி :

மந்திரங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது. சில இணையதளங்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

அகஸ்திரயை, வசிஷ்டரை காணும் மந்திரம் என கூறி அவர்கள் இந்த உயரம் இருப்பார்கள் தாடி வைத்திருப்பார்கள். கையில் கமண்டலம் இருக்கும். என விவரித்து இந்த மந்திரம் சொன்னால் அவர்கள் தெரிவார்கள் என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.

மந்திரம் உபதேசிப்பவர்கள் மந்திரத்தை மட்டுமே கூறுவார்கள். அதன் விளைவை கூற மாட்டார்கள். கூறினால் நீங்கள் கற்பனையில் நடந்ததாகவே நினைப்பீர்கள் பிறகு ஆன்மீகத்தின் உண்மையை உணராமல் கற்பனை உலகில் வாழ்வீர்கள்.

அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..!

Tuesday, November 1, 2011

வானில் கேட்ட அசிரிரீ

போஸ்ட் ஆபீஸில் தபால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி என்னை உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்ததும் புன்னகையுடன் என்னிடம் வந்து...

”நீங்க....அந்த”

“ஆமாம்.. ப்ரணவ பீடம்..சொல்லுங்க..”

”அது இல்லைங்க...நீங்க....ச்சே சரியா ஞாபகம் வரலை...”

“வேதிக் ஐ ப்ளாக் எழுதரவனும் நாந்தான்..அத்தானே நீங்க கேட்கனும்?..”

“ம்..இல்லை.. தொண்டையில நிற்குது ஞாபகம் வரல...ச்சே..”

“பதட்டப்படாம யோசிங்க.. எம் பேரு ஸ்வாமி ஓம்கார்”

“ம். இப்ப ஞாபகம் வருது ... அந்த தி....”

“ஆமா.ஆமா..தினம் தினம் திருமந்திரம் புத்தகம் எழுதுனது நாந்தான்”

“அது இல்லைங்க.. திலகாவோட மச்சினன் தானே நீங்க?”

"................................."

அப்பொழுது கேட்ட அசிரிரீ “ எத்தனை வாட்டி ஆணவம் அழிக்க உதவினாலும் நீ திருந்தமாட்ட...”