Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label மொக்கச்சுவை. Show all posts
Showing posts with label மொக்கச்சுவை. Show all posts

Friday, December 18, 2009

கோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..!



சிங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக நாடுகளால் விமர்சிக்கபட்ட கோவியார் பவனின் வாரம் முழுவதும் கிடைக்கும் உணவுகளின் பட்டியல் கீழே.

திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா

நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் கிழமை: ஜாதிக்காய் பிரியாணி

காய்களில் இருக்கும் ஜாதியை சுட்டிக்காட்டும்படி செய்யபட்ட பிரியாணி. வாரம் ஒருமுறை இதில் இருக்கும் காய்கறிகள் மாறுமே தவிர ஜாதிக்காய் போடாமல் பிரியாணி செய்ப்பட மாட்டாது.

புதன் கிழமை: மத்திய கிழக்கு பொடிமாஸ்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விரும்பு சாப்பிடும் உணவுகள் இங்கே செய்து தரப்படும். அதில் நீங்கள் குற்றம் குறை கூறினால் , சமையல் புத்தகத்திலிருந்து அந்த பகுதி சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்படும்.

வியாழக்கிழமை: தினமலர் கிச்சடி

தினமும் பூக்கும் மலர்களை கொண்டு செய்யபட்ட கிச்சடி. மலரின் ஓரம் மடங்கி இருக்கிறது, அதில் இருக்கும் நிறம் சரியல்ல என சுட்டிகாட்டி உங்களுக்கு கிச்சடி பரிமாறுவார்கள்.

வெள்ளிக்கிழமை : எதிர் வினை பரோட்டா மற்றும் சுய வினை பாயா

அடுத்த ஹோட்டலில் இருக்கும் உணவுப்பொருள்களை கேவலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பரோட்டாக்கள். அவற்றை இங்கே வரவழைத்து உங்கள் முன்னால் கொத்து பரோட்டா போடப்படும். அனத்தும் சாப்பிட்டப் பிறகு சுய வினையின் காரணமாக ஏற்படும் அஜீரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.

ஆயிரம் முறை உணவு அளித்த உலக சாதனை உணவகத்தில் நீங்களும் உணவருந்த வேண்டும் என துடிக்கிறீர்களா? எல்லாம் காலக் கொடுமையை காண :) இங்கே செல்லவும்.
-----------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் காணும் திரு கோவி.கண்ணனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Tuesday, December 8, 2009

விசுவல் போஸ்ட்


தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே
-திருமந்திரம் 129


வேதத்தின் கண்மணிகள் : ஸ்வாமி நீங்க பதிவு எழுத முடியாத அளவுக்கு பிஸியா இருக்கீங்க ஒத்துக்கறோம். அதுக்காக இப்படியா.....

Tuesday, July 28, 2009

எனக்கு பிடிச்ச இரண்டு சினிமா...


தலைப்பை படிச்சுட்டு சாமீ..... நீங்களுமா என கேட்பவர்களுக்கு.

எனக்கு உலகசினிமா பத்தியும் நம்மூர் சினிமா பத்தியும் அறிவு கம்மி. சினிமாவிஷயத்தில் நான் ஈரோட்டுக்காரர் மாதிரி.
ஆனால் எந்த ஒரு ஊடகத்திற்கும் நல்லது கேட்டதுனு இரண்டு கோணம் இருக்கும். ஊடகம் எப்பொழுதும் கத்தி மாதிரி யார் கையில் இருக்குங்கிறதை பொருத்து வேலை செய்யும்.

அந்த வகையில நான் ரசித்த சினிமாவை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அதற்கு முன் ஒரு எச்சரிக்கை :

வாக்கிங் ஸ்டிக்குக்கு ஜீன்ஸ் டீசர்ட் போட்டு அது இருபத்து அஞ்சு பேரை அடிச்சுட்டு, கேமராவை பார்த்து நான் யாரு தெரியும்ல என கூறும் படங்களை பாத்துரசிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்க இதுவரைக்கும் வந்ததே பெருசு. என் அடுத்த பதிவை படிச்சுக்குங்க.

முதல் படம் : What the Bleep do we Know

இந்த படம் குவாண்டம் அறிவியல் கொள்கைகளை ஒரு கதையாக விளக்கும் படம். படத்திற்கு நடுவே சில விஞ்ஞானிகள் அறிஞர்களின் உரையும் உண்டு. படத்தின் தலைப்பே பல விஷயங்களை சொல்லிவிடும். ரியாலிட்டி (இருப்பு நிலை) மற்றும் கால பரிணாமம் ஆகியவற்றை கூறும் சிறந்த ஆக்கம். பல அறிவியல் தகவல்களை கொண்டது. 2004 ஆம் ஆண்டு வந்த படம். திரையாக்கம் மற்றும் ஒளியாக்கம் அருமை. பொழுதுபோக்குக்காக பார்க்கவேண்டும் என நினைத்தால் தலைவலி நிச்சயம். :) டாக்குமெண்டரி பாணி திரைப்படம் என்பதால் விவாதமாக எடுத்து பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள சுட்டி

இரண்டாவது படம் : THE LAST MIMZY

குழந்தைகளுக்காக குழ்ந்தைகள் உலகில் பெரியவர்களின் விஷயத்தை கொண்ட படம். அறிவியல் புனைகதைகள் என்றாலும் 90 நிமிடம் அசையமுடியவில்லை. இயக்குனர் இந்திய கலாச்சாரத்தை தெரிந்தவர் என நினைக்கிறேன். ஸ்ரீசக்ரம் மற்றும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயத்தை அறிவியல் புனைவில் சேர்த்திருக்கிறார். திபத்திய கலாச்சாரம் என திரைப்படத்தில் காட்டினாலும் அது இந்திய கலாச்சார அம்சமே.(இப்ப தெரிஞ்சுதா எனக்கு ஏன் இந்த படம் பிடிச்சுருக்குனு :) ).

குழந்தைகளை பெற்றோர் நடத்தவேண்டிய முறைகள், குழந்தைகள் உலகம் என படத்தில் அருமையான விவரிப்பு. இதில் வரும் சிறுவன் ஸ்ரீயந்திரத்தை வைத்து சில காட்சிகளை காண்பான். அவை யந்திர சாஸ்திரத்தில் உண்மையில் அப்படித்தான் இருக்கும். இதை தெரிந்து சேர்த்தார்களா தெரியாமல் சேர்த்தார்களா என புரியவில்லை.இவ்விஷயங்கள் ஆன்மீகத்தின் உயர்வில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. திரையில் அந்த சிறுமியின் முகமும் அவளின் நடிப்பு திறனும் விவரிக்க முடியாத அழகு.

மேற்கண்ட இரு திரைபடத்ததில் THE LAST MIMZY என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு காரணம் சொல்ல வந்த அறிவியல் விஷயத்தை கதையாக சொன்ன விதம் அருமை.

கோவை பதிவர்கள் விரும்பினால் ஞாயிறு அன்று பதிவர் சந்திப்பு ஏற்படுத்தி இந்த திரைப்படத்தை திரையிடலாம். அதற்கான இடம் மற்றும் சூழலை ஏற்பாடு செய்கிறேன். திரைப்படம் பற்றி பிற பதிவர்கள் பேச, இதில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை பற்றி நான் விளக்குகிறேன். இதற்கு கோவை பதிவர்கள் தலைவர் சஞ்சையை நெஞ்சை தொட்டு கோரிக்கைவைக்கிறேன். (ஏதோ நம்மால முடிஞ்சது..! பார்த்து செய்யுங்க சஞ்சய்.) இதற்கு அவர் ஏற்பாடு செய்வாராக....

இதில் ஒரு நன்மை என்ன வென்றால் சென்னை பதிவர்களிடம் நாங்களும் ஒலகபடம் பார்ப்போம்னு சொல்லிகிடலாம்

இந்த இரண்டு படமும் ரொம்ப பழசு. முன்னமே பார்த்துட்டேன்னு சொல்லும் அறிவுலகவாதிகள் பின்னூட்டத்தில் திரைப்படத்தை பற்றி கருத்துக்கள் சொல்லலாம்.

நம்மூரில் THE LAST MIMZY போன்ற திரைப்படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். இத்தகைய திரைப்படம் எடுக்கப்பட்டால் முதல் காட்சியில் முதல் டிக்கெட் வாங்கி அந்த இயக்குனருக்கு என்றென்றும் உபகாரமாக இருப்பேன்.

Friday, June 5, 2009

பதிவுலக மேனியா



மேனியா என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ மனோதத்துவ விஷயம் என நீங்கள் நினைத்தால் , நீங்கள் தப்பான இடத்திற்கு வந்ததாக அர்த்தம்.


மேனி என்ற தமிழ் வார்த்தைக்கு உடல் என அர்த்தம். பதிவுலகின் உடல் முழுவதும் இந்த விஷயம் பீடித்திருப்பதால் இதை “மேனியா” என கூறிகிறேன். கடந்த பத்து நாட்களாக பன்றிக்காய்ச்சலை விட ஒரு மகாவியாதி பதிவுலகை ஆட்டிப்படைக்கிறது. ஆம் அது தான் தொடர்பதிவு காய்ச்சல்.

யாரோ ஒரு மஹானுபாவலு இதை தொடங்கி வைத்தாலும் வைத்தார் நம் மக்கள் அதை பொங்கல் கரும்பு போல கடித்து மென்று சுவைக்கிறார்கள்.

ஆரம்பித்தது சில எளிய பதிவர்களிடம் என்றாலும் அது பரவிய வேகம் அதிகமே. மெல்ல பிரபல பதிவர்களை வந்து அடைய துவங்கி உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள். உதாரணம் வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? பதில் எழுதும் பொழுது என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்.

என்ன கேள்வி இது சாமி? முடியல. இதை தெரிஞ்சு என்ன செய்ய போறாங்களோ.

ஒன்று இரண்டல்ல 32 கேள்விகள். ஸ்ப்ப்பா....

அலுவலகத்தில் ரொம்ப பிஸி பதிவு போடவே வரமுடியரது இல்லை என்ற பதிவர்கள் எல்லாம்... இரவு இரண்டு மணிக்கு உட்கார்ந்து இதற்கு பதில் எழுதுகிறார்கள். இது என்ன IAS எக்ஸாமா?

தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் உச்சக்கட்டம் ஒரு பதிவர் மூன்று பேரை அழைக்கவேண்டுமாம். இதில் MLM வேறு.

சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில்
“நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)

இதற்கெல்லாம் மேல் ஒருவர் சாதனை செய்திருக்கிறார். 32 கேள்விக்கும் ஒரு முறை பதில் சொன்னாலே கண்ணை கட்டும். அவர் இரண்டு முறை வெவ்வேறு விதமா பதில் சொல்லி தனது பதிவு வறட்சியை தனித்துள்ளார்.

(நேற்று) இப்பொழுது ஒரு பதிவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு சென்னையிலிருந்து அழைப்பு. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் மறக்காம பதில் சொல்லுங்க என்று. இரண்டு பதிவர்களும் அரோக்கியமான நல்ல விஷயங்களை நீயா நானா என போட்டி போட்டு பதிய கூடியவர்கள். இவர்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு ?

இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.

கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.

இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன். காரணம் அத்தனை மரங்களை அழித்து காகிதம் உற்பத்தி செய்து அதில் தொடர்பதிவு எழுதினால் பூமி சூடாகாதா?

வலையில் எழுதினாலும் கணினி மின்சாரம் இதனால் பூமி சூடாகும். என்ன செய்வது யாரும் தொடர்பதிவு வேண்டாம் என சொல்லுவதில்லையே..

நீ மட்டும் இதற்காக ஒரு பதிவு எழுதி பூமியை வெப்பமடைய வைக்கவில்லையா என கேட்கலாம். இதையெல்லாம் படித்து எனது தலை சூடாவதை காட்டிலும் இந்த பதிவு ஏற்படுத்த போகும் சூடு குறைவுதான். :)

எழுத்து வறட்சி கேள்விபட்டு இருக்கிறேன் அதற்காக இப்படியா..

இப்படிக்கு
ஆரோக்கியமான வலைபதிவுகளை ஏதிர்பார்த்து

ஏமாந்த சாமானியன்

டிஸ்கி 1 : இந்த இடுக்கையில் குறிப்பிட்ட பதிவர்கள் யார் என கிசுகிசுக்க வேண்டாம் :). அவர்களாகவே பின்னூட்டம் இடுவது நல்லது :)

டிஸ்கி 2 : என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.”
என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)