
சிங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக நாடுகளால் விமர்சிக்கபட்ட கோவியார் பவனின் வாரம் முழுவதும் கிடைக்கும் உணவுகளின் பட்டியல் கீழே.
திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா
நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.
செவ்வாய் கிழமை: ஜாதிக்காய் பிரியாணி
காய்களில் இருக்கும் ஜாதியை சுட்டிக்காட்டும்படி செய்யபட்ட பிரியாணி. வாரம் ஒருமுறை இதில் இருக்கும் காய்கறிகள் மாறுமே தவிர ஜாதிக்காய் போடாமல் பிரியாணி செய்ப்பட மாட்டாது.
புதன் கிழமை: மத்திய கிழக்கு பொடிமாஸ்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விரும்பு சாப்பிடும் உணவுகள் இங்கே செய்து தரப்படும். அதில் நீங்கள் குற்றம் குறை கூறினால் , சமையல் புத்தகத்திலிருந்து அந்த பகுதி சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்படும்.
வியாழக்கிழமை: தினமலர் கிச்சடி
தினமும் பூக்கும் மலர்களை கொண்டு செய்யபட்ட கிச்சடி. மலரின் ஓரம் மடங்கி இருக்கிறது, அதில் இருக்கும் நிறம் சரியல்ல என சுட்டிகாட்டி உங்களுக்கு கிச்சடி பரிமாறுவார்கள்.
வெள்ளிக்கிழமை : எதிர் வினை பரோட்டா மற்றும் சுய வினை பாயா
அடுத்த ஹோட்டலில் இருக்கும் உணவுப்பொருள்களை கேவலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பரோட்டாக்கள். அவற்றை இங்கே வரவழைத்து உங்கள் முன்னால் கொத்து பரோட்டா போடப்படும். அனத்தும் சாப்பிட்டப் பிறகு சுய வினையின் காரணமாக ஏற்படும் அஜீரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.
ஆயிரம் முறை உணவு அளித்த உலக சாதனை உணவகத்தில் நீங்களும் உணவருந்த வேண்டும் என துடிக்கிறீர்களா? எல்லாம் காலக் கொடுமையை காண :) இங்கே செல்லவும்.
-----------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் காணும் திரு கோவி.கண்ணனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.









