Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சத்சங்கம். Show all posts
Showing posts with label சத்சங்கம். Show all posts

Monday, April 13, 2015

புத்தாண்டு - சத்சங்கம்

மன்மத வருஷ வாழ்த்துக்கள்

இன்று நமது ப்ரணவ பீடம் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறோம். அதன் முதல் படியாக இன்று சத்சங்கம் நடைபெறும். இலவசமாக அனைவரும் இதில் பங்கு பெறலாம்.

இனி வரும் காலத்தில் ஜோதிடம், ஆன்மீக வகுப்புகள் இங்கே நடைபெறும். அதன் அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும்.

கீழே உள்ள தகவலை பயன்படுத்தி ஆன்லைன் சத்சங்கத்தில் இணையுங்கள்.

Tomorrow zodiacal new year - 2015

Online Satsang and Inauguration of Online class from Pranava Peetam.

Free to join - All are welcome - Satsang will be in English.

Time : Tomorrow noon At IST 3 PM.

Please join me in an Adobe Connect Meeting.

Meeting Name:  Satsang - Online
Summary: Welcome to Online Satsanga and Class rooms.
Inauguration of Online classes. As a first session free Satsang for all. will explain on satsanga how the Online classes works. and Spiritual talk about Saranagathi - self surrender .

When:  04/14/2015 3:00 PM - 4:30 PM

To join the meeting:
https://meet49542053.adobeconnect.com/april14satsang/



----------------
If you have never attended an Adobe Connect meeting before:

Test your connection: https://meet49542053.adobeconnect.com/common/help/en/support/meeting_test.htm

Get a quick overview: http://www.adobe.com/products/adobeconnect.html

Adobe, the Adobe logo, Acrobat and Adobe Connect are either registered trademarks or trademarks of Adobe Systems Incorporated in the United States and/or other countries.

Friday, October 29, 2010

சத்சங்கத்துவே நிர்சங்கத்துவம்


கேள்வி : பசித்திரு, தனித்திரு விழித்திரு என்ற வள்ளலாரின் கூற்றை பின்பற்றியதன் விளைவு, உடல் உபாதைகளுடன், உறவுகள் பிரிவுற்று, மனம் சமனிலை தவறி இருக்கிறேன். இந்த போதனையில் ஏதேனும் தவறு உண்டா?

பசித்திருக்க சொன்னதும் சாப்பிடாமல் இருந்து உடலையும், தனித்திருக்க சொன்னதால் அனைத்து உறவுகளிடம் இருந்தும் பிரிந்தும், விழித்திருக்க சொன்னதால் தூங்காமல் இருந்தும் உங்களை நீங்களே கேடு பாதைக்கு கூட்டி சென்றிருக்கிறீர்கள்.

இக்கருத்தை சொன்ன வள்ளலாரின் மேல் குற்றமல்ல, அதை நாம் பயன்படுத்தும் விதமே தவறு.

மனித உடல் என்பது ஐந்து நிலையாக உள்ளது. அதாவது மனித உடல் ஒன்றல்ல. மனிதனுக்கு ஐந்து உடல்கள். இதையே உபநிஷத் கோஷங்கள் என்கிறது. உணவால் உருவாகும் உடல், மனம் என்கிற உடல், ப்ராண சக்திகள் செயல்படும் உடல், நம் ஞாபக அடுக்குகளால் உருவான அறிவு உடல், ஆன்மா என்ற உடல் என ஐந்து உடல்கள் விவரிக்கப்படுகிறது. இதில் மனிதன் பிற நான்கு உடல்களை பற்றிய அறிவு இல்லாமல் தான் உணவால் உருவாகும் உடல் என்றே நினைக்கிறான்.

இங்கே தான் நீங்களும் வள்ளலாரின் கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள்.

அவர் ரத்தமும், சதையும் கொண்ட உடலுக்கு அதை சொல்ல வில்லை. உங்கள் அறிவுடலுக்கே அந்த கருத்தை போதித்தார்.

அறிவுக்காக பசித்திருங்கள், என்றும் ஞானத்தை அடைய பசியுடன் இருங்கள்.
அறிவுக்காக தனித்திருங்கள், என்றும் அனைவரும் செல்லும் பாதையிலேயே பயணிக்காமல் தனிப்பாதையில் முயலுங்கள்.
அறிவு பெற விழித்திருங்கள், ஞானம் எத்திசையிலிருந்து யார் மூலம் வருகிறது என தெரியாது எனவே விழிப்புணர்வுடன் இருங்கள்.

வள்ளல் சொன்னதை துள்ளலுடன் மீண்டும் நினைவு கூறுங்கள்
பசித்திரு, தனித்திரு விழித்திரு..!
--------------------------------------

கேள்வி : தூக்கத்திற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

தூக்கம் என்பது உடல் மட்டும் இளைப்பாறுவது. தியானம் என்பது ஆன்மா இளைப்பாறுவது.

-------------------------------------
கேள்வி : நாள் என் செய்யும், வினை தான் என்செய்யும் என சான்றோர் கூறியது போல நாம் ஏன் ஜோதிடம், கிரகங்கள் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டும்?

உங்களின் கேள்வி உலக நகைச்சுவையில் ஒன்றாக வரிசைப்படுத்தலாம். ஐயாயிரம் ரூபாய் பொருள் வாங்கினால் முவ்வாயிரம் ரூபாய் பொருள் முற்றிலும் இலவசம்* என்பது போன்ற விளம்பரங்களை தற்கால பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதில் நட்சத்திர குறிக்கு அருகே condition apply என எழுதி இருப்பார்கள். நீங்கள் கூறிய வரிகளும் இத்தகைய விளம்பரங்களுக்கு சமமானவையே.

முழு வரிகளை கூறுகிறேன் கேளுங்கள்.

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
!

கடைசி வரியை புரிந்துகொண்டீர்களா? இது தான் அந்த *Condition apply...!

உங்கள் முன் சிலம்பும் சதங்கையும், சண்முகமும் தோன்றினால் உங்களுக்கு நாளும் கோளும் வேலை செய்யாது..!

-------------
முந்தைய சத்சங்க பதிவுக்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும் : ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்

Monday, May 10, 2010

ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்


சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம். சத்- உண்மை, சங்கம் கூடும் இடம். இது ஒரு முரண்பாடான வார்த்தை தான். உண்மை என்பது பன்மையாக இருக்காது.

உண்மைகள் என்னும் சொல் வேடிக்கையானது. பொய் வேண்டுமானால் பன்மையாக இருக்க முடியும். ஒரு உண்மையை மறைக்க பல பொய் என்று தானோ கூறுகிறோம்.

உண்மை என்பது ஒன்றுதான் என்றால் எப்படி சந்திக்க முடியும். இரண்டு விஷயம் இருந்தால் தானே சங்கம் - சந்திப்பு என்பது சாத்தியம் ஆகும் என கேள்வி எழலாம்.

நம்மில் இறைவன் ஆன்ம வடிவில் உறைகிறான் என்பது உண்மை. இந்த உண்மை உங்களிடமும் என்னிடமும் உணர்ந்துகொள்ள இரு ஆன்மாவும் இணையும் இடமே சத்-சங்கம்.

ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தின் பின்வருமாறு கூறுகிறார்.

சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.

ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும்.

ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம்.

கடந்த பத்து வருடங்களாக பல ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை கடந்து வந்துள்ளேன். ஆன்மீக சாதகர்கள், ஆன்மீக தேடல் கொண்டவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது அலாதியானது.

ஆணவம் கொண்ட அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு இறைவன் அருளிய பதிலால் ஆணவத்தை சிதறடித்து அவர்களை முழுமையை நோக்கி பயணிக்கச் செய்வது அலாதியான அனுபவம்.

எனது சத்சங்க கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறோம். இப்புத்தகம் தயாராகி வருகிறது. உங்களுக்கும் கேள்விகள் எழுமானால் கேளுங்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்களை அளிக்கிறேன்.

இனிவரும் நாட்களில் ‘சத்சங்கம்’ என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதி வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

உங்களுக்காக சத்சங்கத்தில் கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்வியையும் அதன் பதிலையும் கீழே விவரித்துள்ளேன்.

-------------------------

கேள்வி : நீங்கள் துறவியா?

பதில் : என்னை பற்றி நான் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், நான் பொறாமை, குரூரம், பேராசை போன்ற தமோ குணத்தை துறந்தவன்.

துறவு என்பதை நீங்கள் தவறாக நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு ஓடுவது துறவு அல்ல. உலகே என் குடும்பம் என்றும் உலக நிகழ்வுகள் என் பொறுப்பு என்றும் இருப்பவன் துறவி.

கேள்வி : துறவி என்றால் பிச்சை எடுத்து தானே வாழ வேண்டும்.? நீங்கள் அப்படியா?

பதில் : ஆம். தனக்காக எதையும் உருவாக்காமல் பிறருக்காக உருவாக்கி அதில் தான் ஒரு பிச்சைக்காரனாக வாழ வேண்டும். இதுவே துறவு. நான் தொழிலதிபர் என்றோ அல்லது வியாபாரி என்றோ என்னை அடையாளப்படுத்த முடியுமா? நான் என்னை பிச்சைக்காரன் என கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி : நான் உணவுக்காக பிச்சை எடுப்பதை கூறுகிறேன் நான். நீங்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுத்தது உண்டா?

பதில் : உண்டு. என் செயல்பாடுகளும் நான் தினமும் உண்ணும் உணவும் பிறர் அளிக்கும் பிச்சை தான். நான் எதையும் உருவாக்குவதில்லை.

கேள்வி : பிச்சையாக எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களா?

பதில் : பிச்சை எடுக்க மட்டுமே எனக்கு உரிமை உண்டு. பிச்சையாக இதை கொடு என கேட்டால் அது பிச்சையாக இருக்காது அல்லவா?

கேள்வி : ஒரு பெண் தன்னையே பிச்சையாக அளிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் : மாட்டேன்.

கேள்வி : ஏன்?
பதில் : எனக்கு நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை...!