Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 30, 2008

ஜோதிடத்தில் பரிகாரங்கள் வேலை செய்யுமா?

- மாயத்தை மாயத்தால் மாய்க்கலாம்
நவீன உலகில் முட்டாள் தனமானது மற்றும் மூடநம்பிக்கை என பல நல்ல விஷயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பரிகாரங்களும் ஒன்று. உங்கள் மனலை எனக்கு புரிகிறது. பரிகாரம் இல்லை ! பரிகாரம் இல்லை! என வாய் கிழிய பேசியவன் பரிகாரம் உண்டு என கூறுவது விசித்திரம் தான். வருமானம் இல்லததால் இவரும் பரிகாரத்தை பேசுகிறார் என சிலர் சொன்னார்கள். இது வேடிக்கை தான்.


இன்றும் கூட ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஆயிரம் , ரெண்டாயிரம் என வாங்கி அல்லது கோவிலுக்கு சென்று வர கூறும் பரிகாரத்திற்கு நான் விரோதிதான்.இன்றைய கணக்குபடி சில ஜோதிடர்கள் பரிகாரத்திற்காக லட்சக்கணக்கில் கூறுகிறார்கள் என கேள்வி. இதுபோன்ற செயல்களை என் எல்லா ஜென்மத்திலும் எதிர்ப்பேன். எதிர்ப்பவனாக இருந்தால் இந்த கட்டுரைக்கு என்ன அர்த்தம்? உங்கள் கேள்வி புரிகிறது.ஜோதிட பரிகாரத்தை விஞ்ஞான பூர்வமாக அனுகும் தன்மையை கூறுவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.


நடைமுறையில் பரிகாரங்கள் செய்யும் ஜோதிடரை அணுகி சில கேள்விகளை கேட்டுப்பாருங்கள் அவரின் பதில் திருப்தி அளித்தால் அவரிடம் பரிகாரம் செய்யலாம்.

1) "இந்திய ஜோதிடத்தின் தந்தை " என கூறுப்படும் வராக மிகிரர், இளவரசனின் இறப்பை கத்ததால் புகழ் பெற்றார். இவர் ஏன் இளவரசனின் ஆயுளை நீட்டிக்க பரிகாரம் செய்யவில்லை?


2) குரு கடக ராசியில் உச்
சம் பெற்றால் ஸ்ரீராமரின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு சொல்லுவதுண்டு, பரமாத்மாவின் அவதாரமான ஸ்ரீராமர் வனவாசம் செல்வதை தடுக்க ஏன் பரிகாரம் செய்ய வில்லை?

3) ஸ்ரீகிருஷ்ணரும் பாரத போரை தடுக்க ஏன் பரிகாரங்களோ அல்லது பூஜையோ செய்யவில்லை. இதற்கும் பஞ்ச- பாண்டவர்களில் சகாதேவன் ஜோதிடனாக இருந்தும் இதை செய்யாத காரணம் என்ன?

4) வீட்டில் சண்டை சச்சரவு மற்றும் மன வேறுபாட்டை தடுக்க பரிகாரம் செய்யும் ஜோதிடர்கள்,பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் , இலங்கையில் உள்நாட்டு கலவரம் இதை தடுக்கவும் பரிகாரம் செய்வார்களா?


5) ஒரு ஜாதகரின் விதியையே மாற்றும் பரிகாரத்தை ஒர் ஜோதிடர் செய்வதாக வைத்துக்கொண்டால் , விதியை அமைத்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டார் என கூறலாம் அல்லவா?

இந்த கேள்விகள் அனைத்தும் ஜோதிடர்கள் இடத்தில் கேற்கப்பட்டு அவர்கள் வெட்கி தலை குனிந்தவை. காரணம் நடைமுறையில் ஜோதிடர்கள் அனுபவரீதியாக இல்லாமல், கேள்வி ஞானத்தால் மட்டுமே பரிகாரம் செய்கின்றனர்.

ஜோதிட மாத இதழ்களில் வரும் விஷயத்தையோ அல்லது மற்ற ஜோதிடரையோ பார்த்து பரிகாரம் செய்வது வாடிக்கையாகி விட்டது. திருமணஞ்சேரிக்கு சென்றால் திருமணம் 45 நாளில் நடைபெறும் என்கிறார்கள். அங்கு செல்லும் அனைவருக்கும் திருமணம் நடைபெறுமா? சிந்திக்க வேண்டும்.

வேதத்தில் சொல்லப்பட்ட ஜோதிடத்தையே நாங்கள் கூறுகிறோம் என்னும் ஜோதிடர்கள் 100 வருட பழைமையான கோவிலுக்கு அனுப்புகிறார்கள். வேதம் மக்களிடையோ 100வருடமாகத்தான் இருக்கிறதா? அல்ல சுமார் 90 ஆயிரம் வருடத்துக்கு முன் வந்தவை. அதில் 20 ஆம் நூற்றாண்டில் ஜோதிட பரிகாரம் செய்ய இந்த கோவிலை பற்றி சொல்லி இருக்கிறதா? சிந்தித்து பார்க்க வேண்டும்.

நவீன காலத்தில் பிறமதத்தவர்களும் ஜோதிடரை அனுகும் சமயம் அவர்களை கோவிலுக்கு அனுப்புவதா? அல்லது அவர்களின் ஆன்மீக மையத்திற்கு சென்றால் பலன் தருமா?

அப்படியானால் எனக்கு தெரிந்தவருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்தது, அவர் ஒரு கோவிலுக்கு சென்றாதும் குழந்தை பிறந்தது. இதற்கு உங்கள் பதில் என்ன என சிலர் கேற்கலாம்.
கடன், குழந்தை இன்மை, வியாதி ஆகிய பிரச்சனைகளுக்கு கோவில் ஓர் தீர்வு இதை மறுக்க முடியாது. காரணம் மேற்கண்ட பிரச்சனைகள் 6 மற்றும் 4 ஆம் பாவத்தால் வருபவை. இதை தவிர்த்தி 5ஆம் பாவம் நடைபெற்றால் 6க்கு விரய பாவமாகவும், 4 ஆம் பாவத்தின் வேலையை தவிர்க்கவும் பயன்படும். 5 ஆம் பாவம் ஆன்மீகம் , மந்திர உச்சாடனம் ஆகியவற்றை குறிக்கும்.
ஆகவே கோவிலுக்கு செல்லும் சமயத்தில் இதைபோன்ற விஷயத்தை தவிர்க்கலாம். யோகா, தியானம், ஆகியவை 5 ஆம் பாவத்தை குறிப்பதால் இதை பயிற்சி செய்பவர்களுக்கு நோய் ,குழந்தை இன்மை ஆகிய வற்றிலிருந்து விடுபடுகிறார்கள்.

ஆனால் தொழில் முடக்கம், குடும்ப பிரச்சனை, கல்வி தடை இவற்றை சரி செய்ய இவை உதவுமா என்றால் உதவாது.அந்த காலத்தில் ஜோதிடத்தை வகுப்பாக எடுக்காமல் ஜோதிடரின் பக்கத்தில் இருந்து அனுபவமாக கற்றார்கள். இப்படி பயிற்சி செய்தவைதான் தவறான பரிகாரம் சொல்ல வைக்கிறது.

இந்த நேரத்தில் பரமார்த்த குருவின் கதை ஒன்று னைவுக்கு வருகிறது. பரமார்த்த குருவின் சிஷ்யன் மட்டி என்ற முட்டாள் வாலிபன், குரு இறந்ததும் ஓர் வைத்தியரிடத்தில் வேலைக்கு சேர்ந்தான். வைத்தியரின் பையை சுமந்துவருவது அவன் வேலை. மட்டியை, வைத்தியம் செய்யம் முறையை கூர்ந்து கவனித்து அதன் மூலம் மருத்துவம் படிக்குமாறு வைத்தியர் பந்திருந்தார்.

ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் ஒருவருக்கு வயிற்று வலியை தீர்க்க வைத்தியரும் மட்டியும் சென்றார்கள். நோயாளியை பரிசோதித்த வைத்தியர் அவன் நேற்று சாப்பிட்ட வாழைப்பழம் அவனின் வயிற்று வலிக்கு காரணம் என கண்டரிந்து மருந்து கொடுத்தார். வரும் வழியில் மட்டி கேட்டான்,"ஐயா அந்த நோயாளி வாழைபழம் சாப்பிட்டதை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்?" என்றான். வைத்தியர் சொன்னார் , "மட்டி வைத்தியம் செய்யும் சமயத்தில் அங்கு நிலவும் சூழ்லையை கவனி அது உனக்கு முதல் பாடம். நாம் சென்ற வீட்டில் நோயாளியின் படுக்கை அருகில் இருந்த குப்பை தொட்டியில் வாழைப்பழத் தோல் இருந்ததை கவனித்தேன். அனுபவமே வைத்தியம்" என்றார்.

சில மாதங்களுக்கு பிறகு வைத்தியருக்கு வேலையிருந்த காரணத்தால் மட்டி வைத்தியம் பார்க்க சென்றான். அங்கு ஒரு பிராமணர் மார்பு வலியால் துன்பப்பட்டார். மட்டி சூழ்லையை கவனித்தான். குப்பைதொட்டியில் எதுவும் இல்லை. நோயாளியின் வீட்டு ஜன்னல் வழியே பார்க்க, அங்கு மாடு கட்டிவைக்கும் இடம் காலியாக இருந்தது. மட்டியின் மூளை வேலை செய்தது,
"நீங்கள் பசுமாட்டை சப்பிட்டதால் தான் இந்த நெஞ்சு வலி வந்தது" என்றான். அதன் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ஜோதிடத்தை அனுபவத்தில் கற்ற ஜோதிடர்கள் மட்டியை விட புத்திசாலிகள்.


ஒரு ஜோதிடர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தார் அது பலித்தது என்றால் , எல்ல காரியத்திற்கும் கோவிலுக்கு அனுப்புவது முட்டாள் தனமானது. தொழில் முடக்கமா கோவிலுக்கு செல்லுங்கள் என்றால், கோவில் செல்லும் சமயம் ஜாதகருக்கு 5,9,12 நடைபெறும். இது 2,6,11 என்ற வருமானத்திற்கு எதிரான பாவங்கள். உதாரணமாக ஒரு சிறுவன் படிக்கவில்லை என்றால் அவன் ஜாதகத்தில் 4,9 க்கு பதில் 3,8 நடைபெறுகிறது என புரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி அம்மன் அலயத்திற்கோ ஹயக்ரீவரின் ஆலயம் சென்றால் சிறு பிரயாணத்தின் பாவமான 3 ஆம் வீடே நடைபெறும். 3ஆம் வீடு 4க்கு எதிர் பாவம் அல்லவா? அவன் கோவிலுக்கு சென்று வந்ததும் படிப்பானா? சிந்திக்க வேண்டும்.


ஆக ஒருவருக்கு எந்த செயல் நடைபெற வேண்டுமோ அந்த செயல் சம்மந்த பட்ட பாவத்தின் வேலையை செய்தால் அதுவே பரிகாரம்.படிக்காத சிறுவனுக்கு அதிக விலையில் ஓர் புத்தகமே அல்லது எழுது பொருளோ வாங்கி கொடுத்தால் அவனின் ஜாதகத்தில் 4 ஆம் பாவ வேலை ஆரம்பிக்கும். இதே போன்று எல்ல காரியத்தை செயல் படுத்தலாம். இதற்கு பரிகாரம் என கூறாமல் சூட்சும முறையில் பாவத்தை செயல்படுத்துதல் எனலாம். அதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லாத ஒன்றை தர பரிகாரங்கள் உதவாது. படிப்பே வராது, குழந்தையே பிறக்காது என்ற ஜாதகத்தில் முடிவு செய்துவிட்டால் பரிகாரம் சொல்வதை தவிர்கவும்.


இந்த கட்டுரை இவ்வளவு பெரிதாக கூற தேவை இல்லை,பரிகாரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் போதும். ஓர் பாவத்தின் காரகத்துவத்தை முறியடிக்க மற்றொரு பாவத்தின் காரகத்துவத்தை செயல்படுத்துகிறோம். அதற்கு பதிலாக இந்த காரகம். இதை பரி+காரம் எனலாம். பரி என்றால் மாற்றாக என பொருள்படும்.காரம் என்றால் காரகத்தை குறிக்கும்.

எனது அனுபவத்தில் இது பலருக்கு பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறேன். என் அனுபவத்தை புரிந்து கொண்டு முட்டாள் மட்டியின் கதைபோல செயல்படாமல், நீங்கள் இதை பற்றி சிந்தித்து அனுபவப்பட்டு பயனடையவும். இதை பற்றிய விமர்சனத்தை வரவேற்கிறோம்.

Saturday, September 13, 2008

ஜோதிடத்தின் சாபம்

ஜோதிடம் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மையை ஏற்படுத்த சொல்லப்படும் விளக்கங்களெல்லாம் எந்தக் காலத்திலும் லாஜிக்காகவும் அழகாகவும் இருக்கின்றன. ஜோதிடப் புத்தகங்களின் முன்னுரைகள் மிக அற்புதமாக இருக்கின்றன். ஆனால் கணிப்பதில் சரியாகச் செய்வதை விட ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஆட்கள் தான் இந்தத் துறையில் மிகுந்து காணப்படுகிறார்களே.


கலையின் ஆழத்தை அறிவதற்குப் பயில்வதை விடுத்து, மக்கள் தொகைப் பெருக்கமும் பெரும்பாலானோரின் தன்னம்பிக்கைக் குறைவும் தமக்கு மூலதனமாக இருப்பதையே சாதகமாக்கிக்கொண்டு வாழ்வதே இந்தத் துறையினரின் வாழ்நெறி ஆனது எதனால்? - ரத்னேஷ்

அன்பு ரத்னேஷ்,

உண்மையை எப்பொழும் திணிக்க வேண்டியது இல்லை. எப்பொழுதும் அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வலைபூ ஜோதிடம் உண்மை என சொல்ல துவங்கப்பட்டது அல்ல. ஜோதிடத்தை நான் எனது சிறிய அறிவால் புரிந்துகொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமே இது.

ஜோதிடத்திற்கு என ஒரு சாபக்கேடு உண்டு.

மருத்துவம் படித்த மருத்துவர் தவறுசெய்தால் மருத்துவரை தவறானவர் என கூறுகிறோம். ஆனால் ஜோதிடர் தவறு செய்தால் ஜோதிடம் தவறு என கூறுகிறோமே தவிர ஜோதிடர் தவறு என சொல்லுவதில்லை. அதனால் இந்த கூற்று ஜோதிடர்கள் தவறு செய்ய உதவியாக இருக்கிறது. இதைதான் சாபம் என கூறினேன்.

எல்லா துறையிலும் தவறானவர்கள் இருக்கதான் செய்கிறார்கள் அதனால் அந்த துறையே தவறு என சொல்லிவிட கூடாது.

ஜோதிடர் தவறாகலாம் ஜோதிடம் தவறாகாது.


ஜோதிடம் ஒர் கலை அல்ல. அது மெய்ஞான தந்திரம். அதை எளிதில் யார் வேண்டுமானாலும் கற்று
பயன்படுத்தலாம். அதை விடுத்து ஜோதிடர்கள் போலி போலி என கூறிவதால் என்ன பயன்?

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தவர் அனைவரும் கேட்காத கேள்வியை நரேந்திரன் எனும் சிறுவன் கேட்டதால் அவனுக்கு கடவுள் சொரூபம் தெரிந்தது. அது போல தவறானவரை பற்றி கவலைப்பட்டமல் உங்களால் நல்லவர்களை உருவாக்க முடியுமா என பாருங்கள். நன்றாக ஜோதிடம் கற்று பிறருக்கு உதவுங்கள், தானே போலிகள் ஒழிவார்கள்.

ஜோதிடர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அவர்களை தவறு செய்ய தூண்டுவது யார் என்றும் பார்க்கவேண்டும். ஜோதிடத்தால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியாது. உங்கள் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். ஆனால் யாரும் இதற்கு தயாரக இல்லை. நமக்கு என்றும் தேன் மழை பொழியும் நாளும், சூரியன் மறையாத காலையும் , செல்வம் குறையாத பண முடிப்பும் தேவை. இந்த பேராசையுடன் ஜோதிடரிடம் செல்லும் பொழுது அங்கு பேராசை எனும் வியாதி அவருக்கும் பிடிக்கப்பட்டு இருவரும் அழிவில் செல்கிறார்கள்.

ஜோதிடத்தால் எதையும் மாற்ற முடியாது என்றால் ஜோதிடம் எதற்கு என உங்களுக்கு கேள்வி தோன்றலாம்...

அதை ஒரு நாள் விவாதிப்போம்..


ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா ?

கேள்வி பதில் பகுதி இரண்டு
  • ஆமா, ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா??? -குரங்கு

முதலில் ஒன்று கூற விரும்புகிறேன்...உங்கள் பெயர் அருமை.

மனித இனம் தோன்றுவதற்கு முன்னறே பிரபஞ்சமும் அதன் ஆற்றலும் இயங்கி வருகிறது. நமது தோற்றம் பிரபஞ்ச ஆற்றலில் இருந்து நடந்ததால் , நமக்கும் அவ்வாற்றலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கடல் என்பது உயிர் தோற்றத்தின் மூலம் என விஞ்ஞானம் சொல்கிறது. சந்திரனின் அமைப்புக்கு ஏற்ப கடலில் எற்ற தாழ்வு அடைவதை காண்கிறோம். அது போல நமது உடலும் அதில் உள்ள கடல் தன்மையும் கிரக ஆற்றலுக்கு ஏற்றது போல வேலை செய்கிறது.

நவீன யுகத்தில் அனைவரும் பயன் படுத்தும் செல்போன் கருவியை எடுத்துக்கொள்ளுங்கள். இரு செல்போன்கள் தொடர்பு கொள்ளவேண்டுமானால் அருகில் உள்ள கோபுரத்தில் (tower) இணைப்பு ஏற்பட்டு பின்பு தொலைபேசி நிலையத்திற்கு(Tele Exchange) கடத்தப்படும். மீண்டும் தொலைபேசி நிலையத்திலிருந்து மற்றொரு கோபுரம் மூலம் எதிர் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு செல்கிறது. அது போல உயிரினங்கள் கண்களுக்கு புலப்படாத சக்தி மூலம் கிரகம் என்ற கோபுரமும் , நட்சத்திரங்கள் என்ற தொலைபேசி நிலையம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

அவ்வாறு இயக்கத்தை கண்டறிதலை ஜோதிடம் என்றும் , அதற்கான வரைபடத்தை ஜாதகம் என்றும் கூறுகிறோம். செல்போனின் கதிர்கள் கண்களுக்கு தெரிவதில்லை அதனால் செல்போன் தொழில் நுட்பம் என்பது மோசடியானது என சொல்லமுடியுமா? தகுந்த விஞ்ஞானியை கொண்டு ஆய்வுசெய்தால் அதை உணர முடியும். அது போலத்தான் ஜோதிடமும். மனிதன் கண்டறிந்த விஞ்ஞானத்தில் எவ்வாறு ஒரே எண்ணில் இரு செல் போன் இருக்காதோ அது போல இரட்டை குழந்தைகளுக்கும் ஜாதகம் ஒன்று அல்ல. தனிதனியே செயல்படுகிறது.

உங்களுக்காக இங்கு ஒரு வீடியோ காட்சியை இணைத்திருக்கிறேன். அதில் இவ்விளக்கம் மேலும் பல கருத்துக்களை உஙகளுக்கு சொல்லும்.





நிரூபிக்கபட்டால் ஒழிய ஜோதிடத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.அதனால் எனது அமைப்பு மூலம் பங்கு சந்தை மற்றும் இதர விஷயங்களில் ஜோதிடத்தை நிரூபித்து இருக்கிறேன். எனது மாணவர்கள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்வார்கள். அதுபோல நாங்கள் ஜோதிடத்தை அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு நிரூபிக்க வேண்டி இருக்கிறது.

தற்காலத்தில் வெறும் ராசிகட்டதை மட்டும் வைத்து பார்ப்பது ஜோதிடம் என சொல்லப்படுகிறது. ராசி - நவாம்சத்தை பார்ப்பதில்லை. கிருஷ்ண மூர்த்தி முறை , அஷ்டகவர்கம் மற்றும் மிக துல்லிய சந்திர கலா நாடி முறைகளை வைத்து கூறப்படும் ஜோதிடம் என்றும் தவறாவதில்லை.

பரிகாரம் மற்றும் ஏமாற்று வித்தையால் ஜோதிடம் தனது உண்மை தன்மையை இழந்து விட்டது. மீண்டும் அதன் எழுச்சி காலம் கூடிய விரைவில் அமையும்.



  • இந்துக்கள் நல்ல நேரம், அஷ்டமி, திதி மற்றும் இன்ன பிற நேரங்கள் பார்ப்பது போல பிற மதத்தவர் பார்ப்பது இல்லை. அப்படி அவர்கள் பார்க்காமல் செய்வதனால் ஏதேனும் தீய பலன்கள் ஏற்படுமா? நாம் நேரம், காலம் பார்த்து செய்வதனால் நமக்கு நற்பலன்கள் ஏற்படுகிறதா? -AMIRDHAVARSHINI AMMA

உயிரினங்கள் அனைத்தும் காலத்திற்கு உற்பட்டு இயங்குகிறது. எறும்பு மழைகாலம் வருவதை முன்பே அறிந்து அதற்கு ஏற்ப உணவை சேமிக்கிறது. பறவைகள் குளிர்காலம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெப்ப பகுதிக்கு பறந்து செல்கின்றன. அனைத்து விலங்குகளும் கிரகணம் ஏற்படும் போது தனது இருப்பிடத்தில் அடைந்து கொள்கிறது. ஆக சிறு உயிரினம் இவ்வாறு செயல்படும் பொழுது மனிதன் ஏன் நேரம் பார்த்து செயல்பட கூடாது?

நீங்கள் கூறியது போல அஷ்டமி நவமி என்பது கெட்ட திதி அல்ல. சில மூடபழக்கவாதிகளின் கூற்றே அது. அவ்வாறு கெட்ட திதியாக இருந்தால் ஸ்ரீ ராமரும் ஸ்ரீக்ருஷ்ணரும் தோன்றுவார்களா?

ராகுகாலம், எமகண்டம் என்பது பொதுவான கற்பிதம். ஒரு குறிப்பிட்ட திதியோ, நட்சத்திரமோ மற்றும் நாளோ நல்லது என்றோ -கெட்டது என்றோ சொல்ல முடியாது. உங்கள் தனிப்பட்ட ஜாதகம் மூலம் உங்களுக்கான சுப நேரம் தேர்ந்தெடுத்து அதன் மூலம் செயல்பட வேண்டும். அதே போல அசுப காலத்தில் தன்மையாக நடந்துகொள்வது அவசியம்.

வெளிநாட்டினர் இதன் அவசியத்தை தற்பொழுது உணர்ந்து வருகிறார்கள். தங்கள் அறியாமையில் இருப்பதை உணர்ந்து விவசாயத்தை கூட கிரகத்தின் அடிப்படியில் செய்கிறார்கள். Bio-Dynamic Agriculture என அதற்கு பெயர். நமது நாட்டில் பகுத்தறிவாளர்கள் என சொல்லுபவர்கள் மேலை நாட்டை சுட்டிகாட்டுகிறார்கள். இனி வரும் காலத்தில் மேலை நாட்டவரை சுட்டிகாட்டி ஜோதிடம் மூலம் நல்ல நேரம் பார்க்க துவங்குவார்கள். எல்லாம் நமது அறியாமையே..

உலக பொதுமறையில் கூடசொல்லப்பட்டதை இங்கு நினைவு கூறுகிறேன்... ஞாலம் கருதினும் கைகூடும்...என கூறினார்கள். காலம் கருதி செயல்பட முயற்சிப்போம்.

Friday, September 12, 2008

ஜோதிட கேள்வி பதில்

  • ஜோதிடத்தின் மூலம் மனிதன் மன பலம், தன்னம்பிக்கை பெற முடியுமா?

இதற்கு பதில் கூறும் முன், இந்த கேள்வி உங்களுக்கு ஏற்பட்டதன் காரணம் என்ன என பார்ப்போம். சிறு விதையை வைத்து மரத்தை முடிவு செய்யலாம் அல்லவா? தற்சமயத்தில் ஆன்மீகத்தை போதிப்பவர்கள் பலர் ஜோதிடத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். வேத உபஷத்துக்களை மேற்கோள்காட்டி பேசும் இவர்கள் வேதத்தின் கண்ணை மூடி தியானிக்க சொல்கிறார்களோ என நினைக்கிறேன். இவர்களின் பிரச்சாரத்தால் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு பற்று அதிகமாகிறதே தவிர குறைவதில்லை. ஜோதிடம் வேண்டாம் என சொல்லும் இவர்கள் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தபட்ட பஞ்சாங்கம் மூலம் அமாவாசை , பௌர்ணமியை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே காரணம் மட்டுமே.

ஜோதிடம் மூலம் தெளிவான உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு ஆற்றும் சேவையை தொடர்ந்து செய்வீர்களா என்பது சந்தேகம். இதை உணர்ந்த அவர்கள் ஜோதிடத்தை நம்பி உங்களின் வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என பிரசாரம் செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை பேச்சாளர் என வைத்துக்கொள்வோம். உங்களை 5 வருடத்தில் 5 கோடி சம்பாதிக்கும் ஆற்றலை தருகிறேன் என உற்சாகமாக பேசும் சமயம் உங்களின் கற்பனை எல்லை விரிந்து இருக்கும். ஐந்து வருடம் முடிந்ததும் , கையில் 5 ரூபாயுடன் திண்டாடும் சமயம் தன்னம்பிக்கை பேச்சாளரை
நினைத்தீர்கள் என்றால் உலகிலேயே அதிக மன அழுத்தத்தை கொண்ட மனிதனாக மாறுவீர்கள்.

ஏன் என்றால் தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சாளரோ, ஆன்மீக வழிகாட்டியோ அனைவரையும் அந்த நிலைக்கு உயர்த்த முடியுமா? சிந்திக்க வேண்டும். உயராத மற்றவர்களின் நிலை வருத்ததிற்குரியதாகிவிடும். அதற்கு பதில் ஜோதிடரீதியாக உங்களின் எதிர்காலத்தை சிறந்த ஜோதிடர்கள் மூலம் தெரிந்து கொண்டால், நடைபெறாத காரியங்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பை வைக்க தேவையில்லை . உங்கள் மனம் நீர்வீழ்ச்சியை போல கீழ்நோக்கி போகாமல் , காட்டாறு போல தானமாக போகலாம்.

  • செய்வினை கோளாறுகள் என்பது உண்மையா?
கடவுள் எனும் அளவிடமுடியாத சக்தி எல்லா நேரமும் உங்களை ஆட்டுவிக்கிறது என உணருங்கள். அவரை மீறி எதுவும் நடக்காது. இந்த நம்பிக்கை இருந்தால் எந்த கவலையும் இல்லை. கம்யூட்டரில் வைரஸ் வருவதால் ,அதை தடுக்க ஓர் ஏற்பாடு செய்கிறோம். வியாதி வரும் முன் தடுப்பூசி அளிப்பது போல. என்றும் கடவுளிடன் பக்தி கொண்டால் இதை போன்ற சின்ன விஷயத்திற்கு கவலை படவேண்டாமே. ஜோதிட சாஸ்திரத்தில் இதை ஆராயும் முறை உண்டு. தற்காலத்தில் மந்திர சாஸ்திரத்தை சிறப்பாக பயன்படுத்துபவர்கள் குறைவு. அதிலும் பிறர் வாழ்கைக்காக பயன் படுத்துபவர்கள் மிக குறைவு. ஆன்மீக ரீதியான தொடர்பு இல்லாதவருக்கே இந்த பயம்வரும். மாயை எனும் அறியாமையே இதற்கு காரணம்.

  • ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் காணிக்கையை எவ்வாறு முடிவு செய்வது?

உண்மையைச் சொன்னால் இதற்கு அளவுகளே கிடையாது. உங்கள் வாழ்க்கையை துல்லியமாக சொல்லும் ஒருவருக்கு குறைந்தளவு பணம் குடுத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்களே சிறுமையாக்கினீர்கள் என அர்த்தம். பழங்காலத்தில் ஜோதிடரிடத்தில் வருபவர்கள் ஜாதகம் பார்ப்பதற்கு முன்னரே வேஷ்டி,பழங்கள் மற்றும் காக்கை கொடுத்துவிடுவார்கள். காரணம் குரு, மருத்துவர் மற்றும் ஜோதிடர் மூவரும் வாழ்க்கையை ஆராய்பவர்கள். இவர்களுக்கு முன்னரே மரியாதை செலுத்துவது முறை. என்று ஜோதிடரின் மேல் உள்ள அவநம்பிக்கையால் ஜாதகம் பார்த்து முடித்ததும் பணம் கொடுக்க துவங்கினார்களோ அன்று முதல் ஜோதிடரும் பல தவறான வழிகாட்டுதலை செய்கிறார்கள். முன்னரே கொடுப்பதால் மனரீதியாக ஜோதிடர் திருப்தி அடைந்ததும் அவரிடம் ஜோதிட பலன் கேட்பது எளிது. இல்லை என்றால் நாம் அளிக்கும் பணத்தில் அவருக்கு கவனம் இருக்கும் ஜாதகத்தை கவனிக்க தவறலாம்.

  • சூரிய குடும்பத்தில் 10வது கோள் கண்டுபிடிக்கப்படுள்ளதாகவும் இது ஜோதிட ரீதியான பலன் கொடுக்கும் என்கிறார்களே உங்கள் கருத்து என்ன?

ரிஷிகளும், மாமுனிவர்களும் கண்டுபிடித்தது இந்த ஜோதிட சாஸ்திரம். அவர்களின் ஞானத்திற்கு முன் இந்த விஞ்ஞானம் எல்லம் பூஜ்ஜியமே. விஞ்ஞானிகள் சூரியமண்டலத்தை ஆராயும் முன்னரே இவர் இதை பகுத்தாராய்ந்தவர்கள். சூரியமண்டலத்தையும் தாண்டி 27 நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரித்தவர்கள். சூரிய மண்டலத்தை தாண்டி செல்லும் சமயம் பத்தாவது என்ன பதினைந்தாவது கிரகத்தையே அவர்கள் உணர்ந்திருக்க கூடும். ஆனால் இவை ஜோதிடத்திற்கு பயன்படுமானால் முன்பே இணைத்திருப்பார்கள். இந்த மெய்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஒப்பு நோக்கினால் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒன்றுமே இல்லை. ஜோதிட சாஸ்திரத்தில் வானில் எப்பொழுது வானவில் தெரியும் , எவ்வளவு நேரம் தெரியும் என கணக்கிட முடியும். ஆனால் விஞ்ஞானத்தில் அந்த வளர்ச்சி இல்லை. அதனால் விஞ்ஞானிகள் கண்டறிந்தது மெஞ்ஞானிகளுக்கு தெரிந்ததில் கால் பங்கு கூட இல்லை என்பதை உணருங்கள்.

  • கர்ம வினையை மாற்ற முடியுமா?

கர்ம வினையை ஏன் மாற்றவேண்டும்? உங்களுக்கு நல்ல கர்மவினை அமைந்து அதை நீங்கள் உணராமல் இருப்பதால் இந்த கேள்வி உதிக்கிறது. கடவுள் அமைத்த பாதையை மாற்ற துடிப்பது நமது அஹங்காரமே. கடவுளை சரணடைந்து உங்கள் தேவையை பூர்த்திசெய்யுங்கள். கடவுளுக்கு நிகரானவர்களின் சன்னிதானத்தில் மட்டுமே அது சாத்தியம். சிலர் கர்மத்தை கழிக்கிறோம் என கூறி வியாபாரம் செய்கிறார்கள். மனம் முழுவதும் அவனை நினைத்து உருகினால் அனைத்தும் சாத்தியம். சரணடைந்தவர்களுக்கு கர்மவினையை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

நீங்கள் உலக பிரபலமடைய்பவராக ஆவதாக உங்கள் கர்மவினை இருக்கிறது என கொள்வோம் , அது தெரிந்து கொள்ளாமல் கர்மவினையை மாற்றுகிறேன் பேர்வழி எனஒரு சாதாரண மனிதராக மாற வாய்ப்புள்ளது அல்லவா? முதலில் உங்கள் கர்மவினையை அறிய முற்படுங்கள் , அறிந்தால் மற்ற முயல மாட்டீர்கள். உங்கள் அறியாமையே மாற்ற வேண்டும் என போரடுகிறது - நிங்கள் அல்ல...!



Thursday, September 11, 2008

நியுமரலாஜி உண்மையா?

நியுமரலாஜி உண்மையா?

மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது. ஒருநண்பர் அதே கேள்வியை இங்கு கேட்கிறார்.


மக்களுக்கு என்ன சொல்வேனோ அதை உங்களுக்கும் சொல்கிறேன்.


நவீன காலத்தில் சிரோ எனும் மேலை நாட்டவர் கண்டு பிடித்தாக சொல்லப்படும் நியுமரலாஜி பலரை பாடாய் படுத்துகிறது. ஒருவரின் நம்பிக்கையை பிறர் தாழ்வாக கூற கூடாது எனும் கருத்தை வைத்து பார்த்தல் நியுமரலாஜியை ஆராயக் கூடாது. உண்மையில் இது நம்பிக்கைசார்ந்தது. ஆய்வுக்கு உட்படுத்தினால் கடைசியில் முட்டாள் தனமானது என்றுசொல்லவேண்டும்.


"ஆலாஜி" எனும் வார்த்தை ஒரு விஷயத்தை அறிவியல் என காட்ட சிலவிஷமிகள் துவக்கியது எனலாம்... நாளை நீங்கள் படிக்கும் பழக்கம்தான்உங்களை செல்வந்தராக்கும் என கூறி அதற்கு "ரீடலாஜி" என்பார்கள். ரீடலாஜி உங்களுக்குள் அதிர்வுகளை தரவேண்டும் என்றால் தினமும் 108 முறைகுறிப்பிட்ட புத்தகத்தை மீண்டும் படி என தண்டனை அளித்தாலும்
ஆச்சரியபடுவதற்கு இல்லை.

பெயரில் அதிர்வு கூடும் என்றால் "மின்சாரம்" என பெயர் வைக்கலமே ?
சற்று சிந்தித்து பாருங்கள் நம்மை யார் பெயர் சொல்லி குப்பிடுவார்கள்? உங்கள் தாய் தந்தை? செல்லம் -தம்பி என எதோ ஒரு செல்ல பெயர் அவர்கள்கூப்பிடுவார்கள்.

உங்கள் வாழ்க்கை துணைவரை பெயர்சொல்லி அழைக்க முடியாது காரணம்அன்பு.
நம்ம குழந்தையை நம்மையே பெயர் சொல்லி அழைக்க விட மாட்டோம்...

ஒரே இடத்தில் மட்டுமே நமது பெயர் சப்தமாகவும் தெளிவாகவும்உச்சரிப்பார்கள்..
.
.
.
.
.
.
அந்த
இடம் கோர்ட் .

டபாலி நம்மை மூன்று முறை அழைப்பர். அதற்காகவா நியுமரலாஜி பிரகாரம்பெயர் மாற்றம் செய்கிறோம்? ஒரு படித்து பட்டம் பெற்ற மருத்துவர் அவரது மருத்துவ மனையை "Klinic" என எழுதி இருந்தார். இவரை என்னவென்று சொல்லி புரிய வைப்பது?

உங்கள் வீட்டின் சமயலறையில் இருக்கும் உப்பு டப்பவிற்கு சர்க்கரை என பெயர்மாற்றினால் கப்பியில் கலக்கி குடிப்பீர்களா ?

அது போல தான் உங்கள் உளநிலையை மாற்ற பெயர் தேவை இல்லை.
பெயரைமாற்றினால் உள்நிலை மாறது.

இந்த மோசடி பத்தாது என்று ஹிப்ரு நியுமரலாஜி, கபால நியுமரலாஜி என வகை வகையாய் ஏமாற்ற பார்க்கிறார்கள். நமது கலாச்சாரத்தில் பெயர் வைக்க ஒரு முறை இருக்கிறது அதை வேறு ஒரு நாள் கலந்து ஆலோசிப்போம் ...

இரண்டு நாளுக்கு முன்னால் ஓர் வலை உலக நண்பரிடம் சொன்ன கருத்தைஉங்களிடமும் சொல்ல ஆசைப்படுகிறேன்.



ஓர்
கதை...

நியூமராலஜி வேலை செய்கிறது.....

காலை தினசரியை புரட்டிகொண்டிருந்த தனுஷ்...அந்த விளம்பரத்தை பார்த்தான்...

"ஆசியாவிலேய முதல் பெயரியல் நிபுணர் விஜயம்....உங்கள் பெயர் மூலம் அதிர்ஷ்டத்தை அடையுங்கள்......"

தனுஷுக்கு நியூமராலஜி மேல் நம்பிக்கை இல்லை , இது போன்ற நம்பிக்கையை பயன்படுத்தும் அவனது நண்பர்களை கிண்டல் செய்வது அவனது வாடிக்கை.

ஆனாலும் அன்று அந்த விளம்பரத்தை பார்த்ததும் அவனக்கு ஓர் ஆவல். தொலைக்காட்சியில் வரும் அந்த நபர் நமது நகரத்திற்கு வருகிறார் ஒரு முறை சென்று பார்ப்போம் என எண்ணினான்.

தொலை பேசியில் அனுமதி வாங்கி அவரை சென்று சந்தித்தான். பிறந்த தேதி மற்றும் பெயரை வாங்கி எண்களை கொண்டு கூட்டி கடைசியில் ஒரு முடிவாக பேச ஆரம்பித்தார் பெயரியல் நிபுணர்...

"தனுஷ் அவர்களே உங்கள் வாழக்கையில் 5 ஆம் எண் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதுமே 5 ஆம் எண் ஆதிக்கம் இருக்கிறது. உங்கள் பெயரும் 5 ஆம் எண் தான். எனவே ஐந்தாம் எண்ணை நன்றாக பயன்படுத்துங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.."

தனுஷால் அவரின் கருத்தை நம்ப முடியவில்லை... அவர் கேட்ட பிரகாரம் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

தனது பைக்கை நிறுத்தும் பொழுதுதான் கவனித்தான் அவனது வாகன எண் 1445.

மெல்ல நடந்து காலிங் பெல்லை அழுத்தும் பொழுது
கருப்பு வட்டத்தில் வெள்ளை நிறத்தில் எழுதபட்ட அவனது வீட்டின் எண் கண்களுக்கு பட்டது (32)

அவனுக்கு ஏதோ புரிய துவங்கியது..

தனது அனுபவத்தை மனைவியிடம் கூறினான் தனுஷ்.

அவனை மையமாக பார்த்த அவனது மனைவி “அஞ்சு” அவனை பார்த்து...”எனக்கு உண்மையா இருக்கும் பொல இருக்குங்க நீங்க கூட நாலு பெண்ணை பார்த்த பிறகு தான் என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க. நியூமராலஜி பார்க்க கூட 5000 பீஸ் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் ஐந்தாம் எண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்க...:” என்றாள்.

தனது நண்பன் பஞ்சாபகேசனுக்கு தொலைபேசியில் தனது ஐந்து எண்ணின் மகத்துவத்தை கூறினான் தனுஷ்.
பஞ்சாபகேசன் உற்சாகமடைந்தான். ஐந்தாம் எண்ணை அதிர்ஷ்டமாக்கும் யோசனைகள் விவாதிக்கபட்டது..
இருவரும் ஐந்தாம் எண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க குதிரை பந்தையத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.

தனது வங்கி இருப்பிலிருந்து ஐந்தாம் எண்ணின் சக்தி கொண்ட 50,000 ரூபாயை எடுத்து கொண்டு குதிரை பந்தைய மைதானத்திற்கு இருவரும் சென்றனர்..

எந்த குதிரை மேல் பணம் கட்டுவது என்று குதிரையின் பெயர் பட்டியலில் சோதனை செய்தனர்..

ஃபைவ் ஸ்டார் பிளாக்கி“ என்ற பெயர் அவர்களின் ஐந்தாம் எண்ணுக்கு ஏற்ப அமைந்திருந்தது.

தனது கைகளில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் முழுவதும் அந்த குதிரை மேல் காட்டினான் தனுஷ்.

பந்தையம் ஆரம்பித்தது... இருவரும் உற்சாகமானார்கள். தனுஷின் முன் பண மழை பொழியும் கனவுகள் வந்து போயின...

பந்தைய முடிவு அறிவிக்கப்பட்டது...

ஃபைவ் ஸ்டார் பிளாக்கி எனும் குதிரை ஐந்தாவதாக வந்திருந்தது.

Tuesday, September 9, 2008

ஜோதிட சத்சங்கம் - கேள்வி பதில்

ஜோதிடம் பற்றிய கேள்விகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் கேள்விகளுக்கு மெய்ஞான மற்றும் விஞ்ஞான முறையில் தெளிவுகளை பெறலாம்.

கேள்விகள் முழுமையானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட எதிர்கால பலனை கேட்ப்பதை தவிர்க்கவும்.

ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில்களை பின்னூட்டமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
மின் அஞ்சல் : swamiomkar@gmail.com

உங்கள் பார்வைக்கு சில உதாரண கேள்விகள்:

பரிகாரம் என்பது உண்மையா?

ஜோதிடம் எல்லா நாட்டிலும் பார்க்கிறார்களா?

ஜோதிடம் உண்மையா?

ஆன்மீகத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?

உங்கள் கேள்வியால் உலகை விழிப்புணர்வாக்குங்கள் ...


விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...!

மனித வாழ்வில் விரதங்களை கடைபிடிப்பதால் மேல் நிலையை அடைந்தவர்கள் ஏராளம். அப்படி ஒவ்வொருவரையும் மேல்நிலைக்கு ஏற்றுவதே எங்கள் நோக்கம். வேதங்களில் விரதங்களுக்கு தனி இடம் உண்டு எனலாம்.

விரதம் என்பது பலவகை உண்டு உதாரணமாக உண்ணாமல் இருப்பது, பிரம்மச்சரியம், அகிம்சை என கூறலாம்.இங்கு விரதம் என நான் குறிப்பிடுவது உண்ணா நோன்பு இருப்பதை பற்றிதான். இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

நம் முன்னோர்கள் சொல்லும் விரத தினங்கள் நாள், திதியின் அடிப்படையில் இருப்பதால் இவை ஜோதிடத்தின் மூலம் வந்தது என மனதில் கொள்ளுங்கள். விரதமிருப்பது என்பது உணவு உற்கொள்ளாமல் இருப்பதை மட்டும் காட்டுவதில்லை அதை மீறி சில விஷயங்கள் உண்டு.எல்லா நாளிலும் விரதம் இருக்காமல் சில நாட்களில் மட்டும் விரதமிருப்பதை கூறும் காரணமும் இதுதான்.

வான்மண்டலத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையை அனுசரித்து அதன் அடிப்படையில் விரதமிருந்தால் உடல்,மனம் மற்றும் ஆன்மா உயர்லையை அடையும் என்கிறார்கள். இந்து மதம் மட்டும் அல்லாமல் எல்லா மதத்தினரும் விரதத்தை கடைபிடிப்பது, விரதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என காட்டும்.

இந்திய கலாச்சாரத்தில் பலதரப்பட்ட விரத அனுஷ்டானங்கள் உண்டு.இதில் திதி மற்றும் வாரதினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும். ஏகாதசி, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதிகளிலும் மற்றும் திங்கள் (சோம வாரம்) , வியாழன் (குருவாரம்) போன்ற வாரநாட்களிலும் விரதமிருப்பது நன்று.

சட்டியில் இருந்தால் - அகப்பையில் வரும் - என்பது பழமொழி. இது காலத்தால் மருவி இந்த நிலையில் உள்ளது. இதன் உண்மையான கருத்து " ஷஷ்டியில் இருந்தால் -அகப்பை வளரும்".

அதாவது ஷஷ்டியில் விரதம் இருந்தால் -அகப்பை (கருப்பை)வளரும் என்பதாகும். இந்த
பழமொழியை கொண்டே இதன் சிறப்பை அறியலாம். மேலும் திதிகள் என்பது 15 நாளுக்கு ஒருமுறை வரும். மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும்.

சந்திராம்ஸ விரதம் என சிலர் வட இந்தியாவில் கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள் தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக முதல் திதி அன்று ஒரு கவளம் சாப்பாடு, 2ஆம் திதி அன்று இரு கவளம் சாப்பாடு என உயர்த்தி பௌர்ணமி அன்று முழு சாப்படு சாப்பிடுவார்கள்.

இதேபோல அடுத்தநாள் ஒரு கவளம் சாப்பாடு குறைத்துக் கொண்டே வந்து அமாவசை அன்று ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்துகிறார்கள்.

ஆனால் வேத சாஸ்திர ரீதியில் ஏகாதசி விரதித்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு. பகவத்த்கீதையில் பரமாத்மா திதியில் ஏகாதசியாக இருக்கிறேன் என கூறுகிறார். ஏகாதசியில் விரதமிப்பது மிகவும் சிறந்தது. சிலர் இதை தவறாக கடைபிடிக்கிறார்கள். ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல விரதம். இதை முறைப்படி கடைப்பிடிப்பது விரதமாகும். உதாரணமாக ஏகாதசிக்கு முன்பு 3 நாட்கள் , பின்பு 3 நாட்கள் என மொத்தம் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளவேண்டும்.

முதல் நால் எளிய உணவும், அடுத்த நாள் பழவகைகள் உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாம் நாள் பழரசம் மட்டும் பருகவும். அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் விரததினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு லையை மாற்றவும்.இதை கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,

திதி உணவு முறை
------ ---------------------
அஷ்டமி எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)

நவமி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

தசமி பழரசங்கள், எலுமிச்சை ரசம்

ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம் துவங்கவும்

துவாதசி பழரசங்கள், எலுமிச்சை ரசம்

திரயோதசி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

சதுர்தசி எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)

இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில் கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும். வழக்கமாக திடீரென ஒரு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நமது உடல் மற்றும் மனத்தடுமாற்றம் ஏற்படும். இதை தவிர்க்கவே இந்த முறை.

ஜோதிடரீதியில் விரதங்களின் தொடர்பை பார்ப்போம். 2 ஆம் பாவம் உணவு உண்பதை காட்டும். 6ஆம் வீடு உடல் நோய் குறிக்கும். விரதம் இருக்கும் சமயம் இதன் விரய பாவம் 1 மற்றும் 5 நடக்கும். 1,5 என்பது ஆன்மிக முன்னேற்றம் மற்றும் நோயற்ற வாழ்வை குறிக்கிறது.நாம் மனமுவந்து இதை செய்வதால் 1,5,11 என செயல்பட்டு சிறந்த வாழ்க்கையை காட்டும்.

விரத நாளான ஏகாதசி அன்று மௌன விரதம் இருப்பதும் நன்று. மௌன விரதம் இருந்தாலும் 1,5,11 என்ற வீடும் குரு மற்றும் சூரியன் சம்மந்தப்படு வேலை செய்வதால் உடல் மற்றும் ஆன்ம முன்னேற்றம் உண்டு

மேலும் ஏகாதசி அன்று, வளர்பிறை அல்லது தேய்பிறை என எந்த ஏகாதசியானாலும் சூரியனும் சந்திரனும் 120 டிகிரி அதாவது சரியான கோணம் என்ற நிலையில் இருப்பதால் கோள்கள் ரீதியாக இதற்கு முக்கியத்துவம் உண்டு. அன்று நமது உடல் மற்றும் மனது தெய்வ நிலைக்கு(மேல் நோக்கி) செல்ல தயாராகிறது.

நாம் உணவு உட்கொண்டு உணவை ஜீரணம் செய்ய கீழ்நோக்கி இழுப்பது பாவச்செயல் ஆகும். வட இந்தியாவில் இந்த ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் அதிக கட்டுப்பாடுடனும் கடைபிடிக்கிறார்கள். ப்ரம்மச்சாரிகள்(18 வயதுக்கு உட்பட்டவர்கள்), சன்யாசிகள், கர்பிணி பெண்கள், முதியவர்கள் விரதத்தை கடைபிடிக்க தேவை இல்லை என சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள் மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால் எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய் எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.

ஆகவே பகவத்கீதை தோன்றிய நாளான ஏகாதசியை மறக்காமல் கடைபிடித்தால் பரமனின் திருவடியை அடையலாம்.

ஜோதிடம் யாருக்கு பயன்படும்?

ஸ்ரீமத் பாகவதத்தில் மனிதகுலம் இரு பெரும் பிரிவாக உள்ளது என சுக பிரம்மரிஷி கூறுகிறார். ஒன்று கடவுளை நோக்கி பயப்பவர்கள். அடுத்த பிரிவு பல கர்மங்களை செய்து கடவுளிடத்தில் பற்று இல்லாதவர்கள். இந்த இருவரும் வெளிப்பார்வைக்கு ஒரே செயலை செய்வது போல இருந்தாலும் , ஒருவர் கடவுளை நோக்கியும் மற்றொருவர் அதற்கு எதிராகவும் செயல்படுகிறார்கள். தானம் செய்யும்பொழுது கடவுளிடத்தில் பற்றுள்ளவர் தன்னலமில்லாமல் செய்கிறார்.

கடவுளிடத்தில் பற்று இல்லாதவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்த தானம் செய்கிறார். இது போல கர்மங்கள் ஒன்றாக தோற்றமளித்தாலும் அதன் வினை இரு பிரிவாக செயல்படுகிறது. இன்றும் கூட அனேக நபர்கள் இந்த இரண்டாம் பிரிவில் இருக்கிறார்கள். இவர்கள் ஜோதிடம் மற்றும் வேத சாஸ்திரத்தின் விஷயங்களை சுய நலத்திற்கும் தவறான கர்மத்தை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். தைத்ரீய உபஷத்தில் கர்ம அனுஷ்டானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஞான நிலை அடைய முற்படாமல் செய்யும் யாகம் , மரக்கட்டைகளை தீயில் எரிப்பதற்கு ஒப்பாகும் என்றும் இதை செய்பவர்கள் நான்கு கால் பிராணியின் நிலைக்கு ஒப்பானவர்கள் என கூறுகிறது.

யாக கர்மங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்த படுகிறதோ அதே போல ஜோதிட சாஸ்திரமும் பயன்படுத்த படுகிறது எனலாம். முற்காலத்தில் ஜோதிடம் ஆன்மீக வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள மட்டுமே பயன்பட்டது. வேதசாஸ்திரத்தில் நமது கர்மத்தின் அமைப்பே அடுத்த செயல் என்றும் கர்ம வினையே எதிர்கால வாழ்க்கைக்கு காரணம் என்கிறது. இதை ரூபிக்கும் கருவியே ஜோதிடம். ஒருவர் நல்ல கர்மம் செய்வாரா? அதன் மூலம் முக்திக்கு வழியுண்டா என ஆராயும் கருவியாகவே ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. நடைமுறையில் கூறப்படும் தோஷங்களும்,யோகங்களும் ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்காக கண்டறியப்பட்டது. முற்காலத்தில் பார்க்கப்பட்ட தோஷம் மற்றும் யோகங்களை ஆன்மீக ரீதியாக ஆராய்வோம்.

செவ்வாய் தோஷம்:

செவ்வாய் தோஷம் என்பது பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும் விஷயம், இதை முற்காலத்தில் சன்யாசிகளுக்கு மட்டுமே பார்த்தார்கள் என்பது ஆச்சரியப்பட கூடிய விஷயம். செவ்வாய் என்பது காம உணர்ச்சிகளையும் கோபத்தையும் குறிக்கும் கிரகம். செவ்வாய் பிறப்புறுப்பை குறிக்கும் கிரகம் ,இதை விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதி யாக வருவதன் மூலம் அறியலாம். இத்தகைய செவ்வாய் 4,7,11 வீடுகளில் காணப்படும் சமயம் அதிக காம உணர்வையும், 2-8 ஆம் வீடுகளில் சம்பந்தப்படும் சமயம் கோபத்தையும் காட்டும். இவை அனைத்தும் சன்யாசிக்கு உகந்த உணர்வுகள் கிடையாது. செவ்வாயின் நிலையை கண்டறிந்து அதன் பின்பே சன்யாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் திருமணம் செய்ய உள்ள இளம் வயதினருக்கு செவ்வாய் தோஷத்தை பார்த்து, செவ்வாய் தோஷ வர்த்தி வேறு செய்யப்படுகிறது. குடும்ப வாழ்வில் ஈடுபடும் இவர்கள் காம மற்றும் கோப உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சிறந்த மணவாழ்வை வாழமுடியாது அல்லவா? செவ்வாய் தோஷத்தை பற்றி சிறிது சிந்தியுங்கள்.

நாக தோஷம் :

நாக தோஷம் என்பது ராகு கேது எனும் சாயா கிரகங்கள் 2,8 அல்லது 1,7 ஆம் வீடுகளில் சம்மந்தப்பட்டால் நாக தோஷம் என கூறுகிறார்கள். இதனால் மணவாழ்க்கை தாமதமாகும் மேலும் மணவாழ்க்கையில் சிக்கல்கள் காணப்படும் என கூறி பரிகாரங்களுக்கு திசை திருப்புகிறார்கள். முற்காலத்தில் தவ வாழ்வை மேற்கொள்பவர்கள் காடுகளுக்கு சென்று ஏகாந்த உணர்வில் தியானிப்பார்கள். மேலும் அனைத்து கடமைகளும் வாழ்வில் முடிவடைந்தவர்கள் வனப்பிரஸ்தம் எனும் வாழ்வியல் முறையிலும் வாழ்ந்தார்கள்.

கொடிய வனத்தில் அவர்கள் வாழும் பொழுது பாம்புகள் மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மூலம் தீங்கு வருமா என கண்டறிய உதவியது தான் இந்த நாக தோஷம். 2,7 ஆகியவை மாரகஸ்தானம் இவற்றில் சம்பந்த பட்ட சாயாகிரகம் விஷத்தின் மூலம் மரணத்தையும்,1,8 தொடர்பால் விஷத்தின் மூலம் ஆபத்தையும் கொடுக்கும் என கண்டறிந்தார்கள். ஆனால் இதை நாம் மணவாழ்க்கைக்குள் நுழையும் பெண் ஜாதகத்தில் பார்க்கிறோம். திருமணமான தம்பதிகள் காட்டில் வாழப்போகிறார்கள் என்றால் இதை எடுத்துக்கொள்ளலாம்.


கஜகேசரி யோகம் :

சந்திரனுக்கு 1,5,9ஆம் வீடுகளில் குரு இருந்தால் கஜகேசரியோகம். இதை பெற்றவர்கள் சுகபோக வாழ்வை அனுபவிப்பார்கள் என்பது தற்கால ஜோதிடர்களின் கருத்து. உண்மையில் இது போன்ற அமைப்புள்ளவர்கள் பாக்கியசாலிகளே. மனதை குறிக்கும் கிரகமான சந்திரன்(மனோகாரகன்) ஆன்மீக குருவான தனது வழிகாட்டியை மனதில் நினைத்து எப்பொழுதும் அவருக்கு பவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். இத்தகைய அமைப்பு பெற்றவர்களை குரு தன்னிடத்தில் நிரந்தரமாக இருக்க அனுமதிப்பார். ஆனால் இன்றையகால கட்டத்தில் பொருள்தேடி ஓடுபவர்களுக்கு இந்த யோகத்தை பார்ப்பது நகைப்புக்குரியது.

இவ்வாறு யோகத்தையும் தோஷத்தையும் விவரித்து கொண்டே செல்லலாம். உண்மையை ஆராய்ந்து பலன் சொல்லும் நிலைவரும் பொழுது மட்டுமே இதற்கு தீர்வு உண்டு. விஞ்ஞான ஜோதிட ரீதியாக ஆன்மீக வாழ்வை ஆராய்ந்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது.