Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

Friday, May 8, 2009

ஜோதிடம் விஞ்ஞானமா? மூடநம்பிக்கையா?

பல காலமாக இருக்கும் விவாதம் இது. ஒவ்வொரு காலத்திலும் ஜோதிடம் நிரூபித்தால் மட்டுமே மக்களால் நம்பிக்கை பெறும். அவ்வாறு நம்பிக்கை பெற்றாலும் அது விஞ்ஞானம் என்றோ மூடநம்பிக்கை என்றோ யாரும் முடிவுக்கு வருவதில்லை. ”ஜோதிஷம் ப்ரக்திக்‌ஷ நிரூபணம்” என்கிறார்கள் சான்றோர்கள்.


ஜோதிடத்தை மூடநம்பிக்கை ஆக்குவது எளிது. தங்களுக்கு ஏற்படும் ஆசையின் அடிப்படியில் அல்லது பிரச்சனையின் அடிப்படையில் ஜோதிடரை அனுகும் மக்கள் ஜோதிடத்தை மூடநம்பிக்கைக்கு எடுத்து செல்லும் முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.

திருமணம் தள்ளிப்போகிறது என ஜோதிடரிடத்தில் கேட்டவுடன், அவர் உண்மையான ஜோதிடராக இருந்து ஜாதகத்தை கணித்து இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்றால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள எவ்வளவு பேர் தயாராக இருப்பார்கள்? அதே நேரத்தில் திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வந்தால் 90 நாளில் திருமணம் நடக்கும் என்றவுடன் தன்னுடைய சுய தேவைக்காக கண்களை மூடிகொண்டு செல்லுகிறார்கள்.

அதற்கு பிறகு கல்யாணம் நடக்காது போனால் ஜோதிடர்(ன்)(ம்) போலி சரியில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்? திருமணஞ்சேரிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்பது சட்டமா? திருக்கடையூர் சென்றால் அனைவருக்கும் இறப்பு இல்லாத பெருவாழ்வு வருமா?

என்ன ஸ்வாமி நாத்திகம் பேசுகிறீர்கள் என கேட்ட தோன்றுகிறதா? ஏதோ ஒருவர் சொன்னார் என்பதற்காக இயந்திரமாக கோவிலில் நுழைந்து தனது சுயலாபத்திற்காக பூஜை செய்பவனுக்கு எந்த தெய்வம் வரம் கொடுக்கும்? திருமணஞ்சேரி செல்லுவதாக இருந்தால் சிவபெருமானாக செல்லுங்கள் மலைமகள் மனைவியாவாள், திருக்கடையூர் செல்லுவதாக இருந்தால் மார்க்கண்டேயனாக செல்லுங்கள். அதைவிடுத்து சுயநலத்தோடு சென்றால் அங்கே அருள் பாலிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு ஜோதிடத்தை மூட நம்பிக்கை ஆக்குபவர்களாவது சகித்துக்கொள்ளலாம். சனி பெயர்ச்சி அன்று இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களுக்கு எல்லை இல்லை. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோவிலில் கூட்டம் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. அரசன் முதல் ஆண்டி வரை அங்கே தெருவில் படுத்து காலையில் சனிப்பெயர்ச்சியை கொண்டாடுவார்கள்.

அங்கே இருக்கும் தீர்த்த குளத்தில் தங்களின் துணிமணியை கழற்றி எறிந்து சனியிடமிருந்து விடுதலை பெருவார்கள். சென்ற சனிப்பெயர்ச்சிக்கு மட்டும் தீர்த்த குளத்திலிருந்து 10 டன் துணிகளை மாநகராட்சி அகற்றி இருக்கிறது. எந்த ஆகமத்தில் கோவில் தீர்த்த குளத்தில் உடைகளை கழற்றி எறிய சொன்னது? பக்தர்களின் நலனுக்காக தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் “உண்டியல்” என பலகை வைக்கும் கோவில் நிர்வாகம் இதை தடுக்க ஏதாவது பல-கை வைத்தார்களா?

வீட்டில் ஏழரை சனி பிடித்தால் அதை திருநள்ளாற்றில் தொலைப்பான் ஏன்? வீட்டிலேயே தொலைக்க கூடாதா? தீர்த்தகுளத்தில் இருக்கும் ஈரத்துணிகள் மூலம் எப்படியெல்லாம் நோய்வரும் என்று யாராவது சிந்தித்தது உண்டா?

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் நவக்கிரத சன்னிதியில் சனியின் விக்கிரகம் இருக்கிறதே அதில் சனியின் ஆற்றல் இல்லையா? அல்லது சனி அங்கே மட்டும் தான் இருக்கிறாரா?

உண்மைதான் சனி அங்கே தான் இருக்கிறார். ஈரதுணியும் பாக்டீரியாவும் சூழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்கே இருக்க முடியும்?

நிதர்சனத்தில் மக்களுக்கு அங்கே சென்றால்தான் சனி பிடிக்கும்.


திருநள்ளாரு நள மகாராஜவுக்கு சனி விமோசனம் கிடைத்தது. நள மஹாராஜா சாதாரணமானவர் கிடையாது. MR.Perfect..! தான் செய்யும் எந்த செயலிலும் நேர்த்தியுடன் இருப்பார். அவரிடம் தவறு என்பதே கிடையாது. சனி நேர்த்தி இல்லாத, சத்தியமற்ற , தர்மம் தவறியவர்களை தான் பிடிப்பானாம். அப்படி இருக்க சனி அவரை பிடிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. காரணம் அவர் அவ்வளவு கச்சிதமானவர். நள பாகம் என கேட்டிருப்பீர்கள், சமையலில் கூட நளன் கச்சிதமாக சமைப்பான் என்பதை அதில் இருக்கும் அர்த்தம். ஒரு நாள் கால்களை கழுவும் பொழுது ஒரு இடத்தில் நீர் படாமல் கால்களை கழுவினான் நளன். இவ்வளவு நாள் மிஸ்டர்.கச்சிதமாக இருந்தவர் செய்த தவறை சாதகமாக்கி சனி அவரின் கால்களை பிடித்தான் என்றது தலவரலாறு.

இப்பொழுது நளனை ஒப்பிட்டு சொல்லுங்கள், ஈரத்துணியை கழற்றி வீசும் பக்தர்களை சனி பிடிப்பாரா மாட்டாரா? இதனால் தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என கூறுவது எளிது என்கிறேன்.

அப்படியானால் ஜோதிடம் விஞ்ஞானமா?

விஞ்ஞானம் என்பது மனித அறிவுக்கு எட்டிய ஒரு சித்தாந்தம். ஒருவர் கண்டறிந்ததை ஒரு குழு ஏற்றுக்கொண்டால் அவர் விஞ்ஞானி. அந்த குழுவினர்கள் விஞ்ஞானிகளின் சபை. மனித அறிவுக்கு ஏற்ப சான்றுகள் கொடுத்தால் போதுமானது.

150 வருடத்திற்கு முன் டார்வின் சொன்ன கருத்தை மதவாதிகள் எதிர்த்தார்கள். கடவுள் மனிதனை படைத்தார் என்ற மதவாதிகளுக்கு, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்க முடியவில்லை. பிறகு விஞ்ஞானிகளும் மக்களும் ஏற்றார்கள். இந்த நூற்றாண்டில் திரும்பவும் டார்வின் கொள்கை முரண்பாடானது என்கிறார்கள். குரங்கிலிருந்து பரிணாமம் ஆகி மனிதன் வந்தான், மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.

விஞ்ஞானிகளின் கூத்தை நினைக்கும் பொழுது ஒரு வேடிக்கை ஞாபகம் வருகிறது..

அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் மாநாட்டுக்கு பல நாட்டு விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். அதில் ஒரு அமெரிக்கர்,ரஷ்யர் மற்றும் இந்திய விஞ்ஞானி குறிப்பிடத்தக்கவர்கள்.

நாங்கள் தான் தொலைத்தொடர்பில் உலகின் முன்னோடிகள் என ஒவ்வொரு வரும் தர்க்கம் செய்தார்கள். இதை நிரூபிக்க சொன்னார்கள் பிறர். அமெரிகக் விஞ்ஞானி உடனே அங்கே இருந்த நிலத்தை தோண்டினார். பத்தடி ஆழத்தில் சில டெலிபோன் கம்பங்கள் இருந்தது. ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானியிடம் கூறினார், ”ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும், ஐம்பது வருடத்திற்கு முன்னறே நாங்கள் டெலிபோன் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

ரஷ்யர் இருவரையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றார், அவரும் நிலத்தை தோண்டினார். பதினைந்து அடி ஆழத்தில் சில தந்தி கம்பங்கள் கிடைத்தது. அமெரிக்கர் சொன்னது போலவே ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் எழுபத்து ஐந்து வருடத்திற்கு முன்பே நாங்கள் தந்தி வழிசேவையை பயன்படுத்தி இருக்கிறோம் நாங்கள் தான் தொலைத்தொடர்பில் முன்னோடி என்றார்.

நம்ம ஆள் சும்மா இருப்பாரா? இருவரையும் இந்தியா அழைத்து வந்து நிலத்தை தோண்ட ஆரம்பித்தார். பத்து , இருபது என ஆழம் கூடியதே தவிர விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை.

ரஷ்யரும், அமெரிக்கரும் என்னப்பா உன் முடிவு என கேட்க, இந்தியர் சொன்னார், ஒரு அடிக்கு ஐந்து வருடம்
என்றாலும் கூட நூறு வருஷத்திற்கு முன்னாடியே நாங்க வயர்லெஸ் டெக்னாலஜி யூஸ்பண்ணிருக்கோம்...! என்றார்.

விஞ்ஞானமும் அதன் நிரூபணமும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில் ஜோதிடம் விஞ்ஞானமா அல்லது மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் இல்லை என்றே சொல்லுவேன்.

உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். காரணம் அவர்கள் உணர்ந்த சத்தியம் ஒன்று. ஜோதிடத்தை மெய்ஞான நோக்கோடு கண்டால் அதில் இருக்கும் உண்மை புலப்படும்.

ஆதலால் சொல்லுகிறேன் ஜோதிடம் ஒரு மெய்ஞானம்.

டிஸ்கி : பரிசல் மற்றும் சஞ்சய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜோதிட உற்சவத்தில் எனது பேச்சின் உரை வடிவம் இது. எழுத தூண்டிய அவர்களுக்கு எனது நன்றிகள்.

Friday, October 3, 2008

விதியை மதியால் வெல்லலாம்

கேள்வி பதில் - பாகம் 3

விதியை மதியால் வெல்லலாம் எனும் முதுமொழி இருக்கும் பொழுது பரிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவது பொருந்துமா?


விதியை மதியால் வெல்லலாம் என்பதே அபத்தமான ஒரு பழமொழி. பரிகாரம் செய்யும் ஜோதிடர் கூட இதை மேற்கோள்காட்டி , மதி என்பது சந்திரனை குறிக்கும் அதனால் சந்திரனை வைத்து கணித்தால் விதியை மாற்றிவிடலாம் என கூறுவதுண்டு.

தன்னம்பிக்கை பயிலறங்கத்திற்கு சென்றால் , அங்கு ஒருவர் உன்னால் முடியாதது எதுவும் இல்லை - நீ நினைத்தால் அதை செய்ய முடியும் என கத்திக்கொண்டிருப்பார். வாழ்க்கையில் செல்வந்தராகவும் வெற்றி பெறவும் பலவழிகளை கற்றுக்கொடுப்பார். ஆனால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை காணும் பொழுது தான் நம்மால் முடியுமா ? எனும் நிதர்சனம் விளங்கும். தன்னம்பிக்கை பேச்சாளரின் கருத்து நமக்குள் ஓர் மனமாயையை உண்டு செய்ததை புரிந்துகொள்வோம்.

இதை விட வேடிக்கை அந்த நேரத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வந்தராகவோ - வெற்றியாளரோ ஆகாமல் மைக்கை பிடித்து ஏன் கத்திக்கொண்டிருக்கிறார் என நாம் சிந்திக்க தவறிவிடுவோம்.

இதை போன்றது தான், உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறேன் என கூறும் ஜோதிடர் ஏன் ஜோதிடராகவே இருக்கிறார் என நீங்கள் சிந்திப்பதில்லை. அவர் ஏன் தனக்கு பரிகாரம் செய்து தனது வாழ்க்கையை மாற்றி இருக்க கூடாது?

தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.

விதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.

உங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக மதங்கள் தங்கள் ஆன்மீக விஷயங்களில் அற்புதத்தை பற்றி கூறுகிறது. உதாரணமாக மார்கண்டேயன் தனது இறப்பை தடுத்தது, சாவித்திரி தனது கணவனை இறப்பிலிருந்து மீட்டது என கூறிகொண்டே போகலாம்.கிருஸ்தவத்திலும் குருடனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சி உண்டு இவ்வாறு இருக்க விதியை மாற்ற முடியாது என்பது பொய்யா?

மார்கண்டேயன் தனது இளவயதில் இறக்கவேண்டும் என்பது விதி என யார் உங்களிடம் சொன்னது? மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? யாரோ கூறும் கதையை முடிவான உண்மை என எண்ணி விடாதீர்கள்.

சாவித்திரி கற்பில் சிறந்தவள் என்பதால் அதை செய்தால் என கொண்டால், சாவித்திரிக்கு பிறகு கணவனை மீட்டவர் யவரும் இல்லை என்பதை வைத்து பார்க்கும் பொழுது சாவித்திரியே கடைசி கற்புகரசி என ஒத்துகொள்ளமுடியும் அல்லவா? இதனால் அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவது போலக்கிவிடாதா?

தேவமைந்தன் கண்கள் இல்லதவர்கள் எல்லம் வரிசையில் நில்லுங்கள் கண் கொடுக்கிறேன் என தற்கால கடற்கரை கூட்டத்தில் கூறுவது போல கூறாமல் ஒரே ஒருவருக்கு மட்டும் கண் கொடுத்தது ஏன் என சிந்தியுங்கள்.

மார்கண்டேயன் தடுத்தாட்கொள்ளுதல் என்பதும், சாவித்திரி சத்தியவானுடன் மீண்டும் வாழ வேண்டும் என்பதும், கண் இல்லதவர் கிருஸ்து மூலம் கண் பெற வேண்டும் என்பதும் இவர்களின் விதியே.

இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணையிக்கிறார் எனும் பொழுது, அந்த விதியை மாற்ற முயல்வது இறைவனுக்கு எதிராக நாம் செய்யும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்கு எதிராக போராடியவர்கள் வெற்றது உண்டா என உங்கள் புராணத்தில் தேடுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கோளருபதிகம் பாடினால் கிரகதோஷம் விலகும் என்பது உண்மையா?

கோளருபதிகம் பாடி கிரகதோஷத்திலிருந்து விலகியவர் திருஞானசம்பந்தர். இவரை போல நீங்களும் ஞானப்பால் அருந்தி, முழுவாழ்க்கையும் ஆன்மீகத்திற்கு அற்பணித்தவராக இருந்தால் கண்டிப்பாக கிரகதோஷம் விலகும்.

--------------------------

மேற்கண்ட கேள்விகள் போக பரிகாரம் பற்றிய பல கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது.

ஜோதிடர்கள் பரிகாரம் செய்யாமல் விட்டாலும் மக்கள் அவர்களை திருந்த விடமாட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன். பல நூற்றாண்டாக பரிகாரம் செய்து தங்கள் தலைமுறையின் DNA-வில் அதை பதியவைத்துவிட்டனர். மெல்ல தான் புதிய ரத்தம் பாயும் என தோன்றுகிறது.

--------------------------
அடுத்த பதிவு பற்றிய முன்னோட்டம்

நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.

Tuesday, September 30, 2008

ஜோதிடத்தில் பரிகாரங்கள் வேலை செய்யுமா?

- மாயத்தை மாயத்தால் மாய்க்கலாம்
நவீன உலகில் முட்டாள் தனமானது மற்றும் மூடநம்பிக்கை என பல நல்ல விஷயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பரிகாரங்களும் ஒன்று. உங்கள் மனலை எனக்கு புரிகிறது. பரிகாரம் இல்லை ! பரிகாரம் இல்லை! என வாய் கிழிய பேசியவன் பரிகாரம் உண்டு என கூறுவது விசித்திரம் தான். வருமானம் இல்லததால் இவரும் பரிகாரத்தை பேசுகிறார் என சிலர் சொன்னார்கள். இது வேடிக்கை தான்.


இன்றும் கூட ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஆயிரம் , ரெண்டாயிரம் என வாங்கி அல்லது கோவிலுக்கு சென்று வர கூறும் பரிகாரத்திற்கு நான் விரோதிதான்.இன்றைய கணக்குபடி சில ஜோதிடர்கள் பரிகாரத்திற்காக லட்சக்கணக்கில் கூறுகிறார்கள் என கேள்வி. இதுபோன்ற செயல்களை என் எல்லா ஜென்மத்திலும் எதிர்ப்பேன். எதிர்ப்பவனாக இருந்தால் இந்த கட்டுரைக்கு என்ன அர்த்தம்? உங்கள் கேள்வி புரிகிறது.ஜோதிட பரிகாரத்தை விஞ்ஞான பூர்வமாக அனுகும் தன்மையை கூறுவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.


நடைமுறையில் பரிகாரங்கள் செய்யும் ஜோதிடரை அணுகி சில கேள்விகளை கேட்டுப்பாருங்கள் அவரின் பதில் திருப்தி அளித்தால் அவரிடம் பரிகாரம் செய்யலாம்.

1) "இந்திய ஜோதிடத்தின் தந்தை " என கூறுப்படும் வராக மிகிரர், இளவரசனின் இறப்பை கத்ததால் புகழ் பெற்றார். இவர் ஏன் இளவரசனின் ஆயுளை நீட்டிக்க பரிகாரம் செய்யவில்லை?


2) குரு கடக ராசியில் உச்
சம் பெற்றால் ஸ்ரீராமரின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு சொல்லுவதுண்டு, பரமாத்மாவின் அவதாரமான ஸ்ரீராமர் வனவாசம் செல்வதை தடுக்க ஏன் பரிகாரம் செய்ய வில்லை?

3) ஸ்ரீகிருஷ்ணரும் பாரத போரை தடுக்க ஏன் பரிகாரங்களோ அல்லது பூஜையோ செய்யவில்லை. இதற்கும் பஞ்ச- பாண்டவர்களில் சகாதேவன் ஜோதிடனாக இருந்தும் இதை செய்யாத காரணம் என்ன?

4) வீட்டில் சண்டை சச்சரவு மற்றும் மன வேறுபாட்டை தடுக்க பரிகாரம் செய்யும் ஜோதிடர்கள்,பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் , இலங்கையில் உள்நாட்டு கலவரம் இதை தடுக்கவும் பரிகாரம் செய்வார்களா?


5) ஒரு ஜாதகரின் விதியையே மாற்றும் பரிகாரத்தை ஒர் ஜோதிடர் செய்வதாக வைத்துக்கொண்டால் , விதியை அமைத்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டார் என கூறலாம் அல்லவா?

இந்த கேள்விகள் அனைத்தும் ஜோதிடர்கள் இடத்தில் கேற்கப்பட்டு அவர்கள் வெட்கி தலை குனிந்தவை. காரணம் நடைமுறையில் ஜோதிடர்கள் அனுபவரீதியாக இல்லாமல், கேள்வி ஞானத்தால் மட்டுமே பரிகாரம் செய்கின்றனர்.

ஜோதிட மாத இதழ்களில் வரும் விஷயத்தையோ அல்லது மற்ற ஜோதிடரையோ பார்த்து பரிகாரம் செய்வது வாடிக்கையாகி விட்டது. திருமணஞ்சேரிக்கு சென்றால் திருமணம் 45 நாளில் நடைபெறும் என்கிறார்கள். அங்கு செல்லும் அனைவருக்கும் திருமணம் நடைபெறுமா? சிந்திக்க வேண்டும்.

வேதத்தில் சொல்லப்பட்ட ஜோதிடத்தையே நாங்கள் கூறுகிறோம் என்னும் ஜோதிடர்கள் 100 வருட பழைமையான கோவிலுக்கு அனுப்புகிறார்கள். வேதம் மக்களிடையோ 100வருடமாகத்தான் இருக்கிறதா? அல்ல சுமார் 90 ஆயிரம் வருடத்துக்கு முன் வந்தவை. அதில் 20 ஆம் நூற்றாண்டில் ஜோதிட பரிகாரம் செய்ய இந்த கோவிலை பற்றி சொல்லி இருக்கிறதா? சிந்தித்து பார்க்க வேண்டும்.

நவீன காலத்தில் பிறமதத்தவர்களும் ஜோதிடரை அனுகும் சமயம் அவர்களை கோவிலுக்கு அனுப்புவதா? அல்லது அவர்களின் ஆன்மீக மையத்திற்கு சென்றால் பலன் தருமா?

அப்படியானால் எனக்கு தெரிந்தவருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்தது, அவர் ஒரு கோவிலுக்கு சென்றாதும் குழந்தை பிறந்தது. இதற்கு உங்கள் பதில் என்ன என சிலர் கேற்கலாம்.
கடன், குழந்தை இன்மை, வியாதி ஆகிய பிரச்சனைகளுக்கு கோவில் ஓர் தீர்வு இதை மறுக்க முடியாது. காரணம் மேற்கண்ட பிரச்சனைகள் 6 மற்றும் 4 ஆம் பாவத்தால் வருபவை. இதை தவிர்த்தி 5ஆம் பாவம் நடைபெற்றால் 6க்கு விரய பாவமாகவும், 4 ஆம் பாவத்தின் வேலையை தவிர்க்கவும் பயன்படும். 5 ஆம் பாவம் ஆன்மீகம் , மந்திர உச்சாடனம் ஆகியவற்றை குறிக்கும்.
ஆகவே கோவிலுக்கு செல்லும் சமயத்தில் இதைபோன்ற விஷயத்தை தவிர்க்கலாம். யோகா, தியானம், ஆகியவை 5 ஆம் பாவத்தை குறிப்பதால் இதை பயிற்சி செய்பவர்களுக்கு நோய் ,குழந்தை இன்மை ஆகிய வற்றிலிருந்து விடுபடுகிறார்கள்.

ஆனால் தொழில் முடக்கம், குடும்ப பிரச்சனை, கல்வி தடை இவற்றை சரி செய்ய இவை உதவுமா என்றால் உதவாது.அந்த காலத்தில் ஜோதிடத்தை வகுப்பாக எடுக்காமல் ஜோதிடரின் பக்கத்தில் இருந்து அனுபவமாக கற்றார்கள். இப்படி பயிற்சி செய்தவைதான் தவறான பரிகாரம் சொல்ல வைக்கிறது.

இந்த நேரத்தில் பரமார்த்த குருவின் கதை ஒன்று னைவுக்கு வருகிறது. பரமார்த்த குருவின் சிஷ்யன் மட்டி என்ற முட்டாள் வாலிபன், குரு இறந்ததும் ஓர் வைத்தியரிடத்தில் வேலைக்கு சேர்ந்தான். வைத்தியரின் பையை சுமந்துவருவது அவன் வேலை. மட்டியை, வைத்தியம் செய்யம் முறையை கூர்ந்து கவனித்து அதன் மூலம் மருத்துவம் படிக்குமாறு வைத்தியர் பந்திருந்தார்.

ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் ஒருவருக்கு வயிற்று வலியை தீர்க்க வைத்தியரும் மட்டியும் சென்றார்கள். நோயாளியை பரிசோதித்த வைத்தியர் அவன் நேற்று சாப்பிட்ட வாழைப்பழம் அவனின் வயிற்று வலிக்கு காரணம் என கண்டரிந்து மருந்து கொடுத்தார். வரும் வழியில் மட்டி கேட்டான்,"ஐயா அந்த நோயாளி வாழைபழம் சாப்பிட்டதை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்?" என்றான். வைத்தியர் சொன்னார் , "மட்டி வைத்தியம் செய்யும் சமயத்தில் அங்கு நிலவும் சூழ்லையை கவனி அது உனக்கு முதல் பாடம். நாம் சென்ற வீட்டில் நோயாளியின் படுக்கை அருகில் இருந்த குப்பை தொட்டியில் வாழைப்பழத் தோல் இருந்ததை கவனித்தேன். அனுபவமே வைத்தியம்" என்றார்.

சில மாதங்களுக்கு பிறகு வைத்தியருக்கு வேலையிருந்த காரணத்தால் மட்டி வைத்தியம் பார்க்க சென்றான். அங்கு ஒரு பிராமணர் மார்பு வலியால் துன்பப்பட்டார். மட்டி சூழ்லையை கவனித்தான். குப்பைதொட்டியில் எதுவும் இல்லை. நோயாளியின் வீட்டு ஜன்னல் வழியே பார்க்க, அங்கு மாடு கட்டிவைக்கும் இடம் காலியாக இருந்தது. மட்டியின் மூளை வேலை செய்தது,
"நீங்கள் பசுமாட்டை சப்பிட்டதால் தான் இந்த நெஞ்சு வலி வந்தது" என்றான். அதன் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ஜோதிடத்தை அனுபவத்தில் கற்ற ஜோதிடர்கள் மட்டியை விட புத்திசாலிகள்.


ஒரு ஜோதிடர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தார் அது பலித்தது என்றால் , எல்ல காரியத்திற்கும் கோவிலுக்கு அனுப்புவது முட்டாள் தனமானது. தொழில் முடக்கமா கோவிலுக்கு செல்லுங்கள் என்றால், கோவில் செல்லும் சமயம் ஜாதகருக்கு 5,9,12 நடைபெறும். இது 2,6,11 என்ற வருமானத்திற்கு எதிரான பாவங்கள். உதாரணமாக ஒரு சிறுவன் படிக்கவில்லை என்றால் அவன் ஜாதகத்தில் 4,9 க்கு பதில் 3,8 நடைபெறுகிறது என புரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி அம்மன் அலயத்திற்கோ ஹயக்ரீவரின் ஆலயம் சென்றால் சிறு பிரயாணத்தின் பாவமான 3 ஆம் வீடே நடைபெறும். 3ஆம் வீடு 4க்கு எதிர் பாவம் அல்லவா? அவன் கோவிலுக்கு சென்று வந்ததும் படிப்பானா? சிந்திக்க வேண்டும்.


ஆக ஒருவருக்கு எந்த செயல் நடைபெற வேண்டுமோ அந்த செயல் சம்மந்த பட்ட பாவத்தின் வேலையை செய்தால் அதுவே பரிகாரம்.படிக்காத சிறுவனுக்கு அதிக விலையில் ஓர் புத்தகமே அல்லது எழுது பொருளோ வாங்கி கொடுத்தால் அவனின் ஜாதகத்தில் 4 ஆம் பாவ வேலை ஆரம்பிக்கும். இதே போன்று எல்ல காரியத்தை செயல் படுத்தலாம். இதற்கு பரிகாரம் என கூறாமல் சூட்சும முறையில் பாவத்தை செயல்படுத்துதல் எனலாம். அதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லாத ஒன்றை தர பரிகாரங்கள் உதவாது. படிப்பே வராது, குழந்தையே பிறக்காது என்ற ஜாதகத்தில் முடிவு செய்துவிட்டால் பரிகாரம் சொல்வதை தவிர்கவும்.


இந்த கட்டுரை இவ்வளவு பெரிதாக கூற தேவை இல்லை,பரிகாரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் போதும். ஓர் பாவத்தின் காரகத்துவத்தை முறியடிக்க மற்றொரு பாவத்தின் காரகத்துவத்தை செயல்படுத்துகிறோம். அதற்கு பதிலாக இந்த காரகம். இதை பரி+காரம் எனலாம். பரி என்றால் மாற்றாக என பொருள்படும்.காரம் என்றால் காரகத்தை குறிக்கும்.

எனது அனுபவத்தில் இது பலருக்கு பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறேன். என் அனுபவத்தை புரிந்து கொண்டு முட்டாள் மட்டியின் கதைபோல செயல்படாமல், நீங்கள் இதை பற்றி சிந்தித்து அனுபவப்பட்டு பயனடையவும். இதை பற்றிய விமர்சனத்தை வரவேற்கிறோம்.

Saturday, September 13, 2008

ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா ?

கேள்வி பதில் பகுதி இரண்டு
  • ஆமா, ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா??? -குரங்கு

முதலில் ஒன்று கூற விரும்புகிறேன்...உங்கள் பெயர் அருமை.

மனித இனம் தோன்றுவதற்கு முன்னறே பிரபஞ்சமும் அதன் ஆற்றலும் இயங்கி வருகிறது. நமது தோற்றம் பிரபஞ்ச ஆற்றலில் இருந்து நடந்ததால் , நமக்கும் அவ்வாற்றலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கடல் என்பது உயிர் தோற்றத்தின் மூலம் என விஞ்ஞானம் சொல்கிறது. சந்திரனின் அமைப்புக்கு ஏற்ப கடலில் எற்ற தாழ்வு அடைவதை காண்கிறோம். அது போல நமது உடலும் அதில் உள்ள கடல் தன்மையும் கிரக ஆற்றலுக்கு ஏற்றது போல வேலை செய்கிறது.

நவீன யுகத்தில் அனைவரும் பயன் படுத்தும் செல்போன் கருவியை எடுத்துக்கொள்ளுங்கள். இரு செல்போன்கள் தொடர்பு கொள்ளவேண்டுமானால் அருகில் உள்ள கோபுரத்தில் (tower) இணைப்பு ஏற்பட்டு பின்பு தொலைபேசி நிலையத்திற்கு(Tele Exchange) கடத்தப்படும். மீண்டும் தொலைபேசி நிலையத்திலிருந்து மற்றொரு கோபுரம் மூலம் எதிர் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு செல்கிறது. அது போல உயிரினங்கள் கண்களுக்கு புலப்படாத சக்தி மூலம் கிரகம் என்ற கோபுரமும் , நட்சத்திரங்கள் என்ற தொலைபேசி நிலையம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

அவ்வாறு இயக்கத்தை கண்டறிதலை ஜோதிடம் என்றும் , அதற்கான வரைபடத்தை ஜாதகம் என்றும் கூறுகிறோம். செல்போனின் கதிர்கள் கண்களுக்கு தெரிவதில்லை அதனால் செல்போன் தொழில் நுட்பம் என்பது மோசடியானது என சொல்லமுடியுமா? தகுந்த விஞ்ஞானியை கொண்டு ஆய்வுசெய்தால் அதை உணர முடியும். அது போலத்தான் ஜோதிடமும். மனிதன் கண்டறிந்த விஞ்ஞானத்தில் எவ்வாறு ஒரே எண்ணில் இரு செல் போன் இருக்காதோ அது போல இரட்டை குழந்தைகளுக்கும் ஜாதகம் ஒன்று அல்ல. தனிதனியே செயல்படுகிறது.

உங்களுக்காக இங்கு ஒரு வீடியோ காட்சியை இணைத்திருக்கிறேன். அதில் இவ்விளக்கம் மேலும் பல கருத்துக்களை உஙகளுக்கு சொல்லும்.





நிரூபிக்கபட்டால் ஒழிய ஜோதிடத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.அதனால் எனது அமைப்பு மூலம் பங்கு சந்தை மற்றும் இதர விஷயங்களில் ஜோதிடத்தை நிரூபித்து இருக்கிறேன். எனது மாணவர்கள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்வார்கள். அதுபோல நாங்கள் ஜோதிடத்தை அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு நிரூபிக்க வேண்டி இருக்கிறது.

தற்காலத்தில் வெறும் ராசிகட்டதை மட்டும் வைத்து பார்ப்பது ஜோதிடம் என சொல்லப்படுகிறது. ராசி - நவாம்சத்தை பார்ப்பதில்லை. கிருஷ்ண மூர்த்தி முறை , அஷ்டகவர்கம் மற்றும் மிக துல்லிய சந்திர கலா நாடி முறைகளை வைத்து கூறப்படும் ஜோதிடம் என்றும் தவறாவதில்லை.

பரிகாரம் மற்றும் ஏமாற்று வித்தையால் ஜோதிடம் தனது உண்மை தன்மையை இழந்து விட்டது. மீண்டும் அதன் எழுச்சி காலம் கூடிய விரைவில் அமையும்.



  • இந்துக்கள் நல்ல நேரம், அஷ்டமி, திதி மற்றும் இன்ன பிற நேரங்கள் பார்ப்பது போல பிற மதத்தவர் பார்ப்பது இல்லை. அப்படி அவர்கள் பார்க்காமல் செய்வதனால் ஏதேனும் தீய பலன்கள் ஏற்படுமா? நாம் நேரம், காலம் பார்த்து செய்வதனால் நமக்கு நற்பலன்கள் ஏற்படுகிறதா? -AMIRDHAVARSHINI AMMA

உயிரினங்கள் அனைத்தும் காலத்திற்கு உற்பட்டு இயங்குகிறது. எறும்பு மழைகாலம் வருவதை முன்பே அறிந்து அதற்கு ஏற்ப உணவை சேமிக்கிறது. பறவைகள் குளிர்காலம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெப்ப பகுதிக்கு பறந்து செல்கின்றன. அனைத்து விலங்குகளும் கிரகணம் ஏற்படும் போது தனது இருப்பிடத்தில் அடைந்து கொள்கிறது. ஆக சிறு உயிரினம் இவ்வாறு செயல்படும் பொழுது மனிதன் ஏன் நேரம் பார்த்து செயல்பட கூடாது?

நீங்கள் கூறியது போல அஷ்டமி நவமி என்பது கெட்ட திதி அல்ல. சில மூடபழக்கவாதிகளின் கூற்றே அது. அவ்வாறு கெட்ட திதியாக இருந்தால் ஸ்ரீ ராமரும் ஸ்ரீக்ருஷ்ணரும் தோன்றுவார்களா?

ராகுகாலம், எமகண்டம் என்பது பொதுவான கற்பிதம். ஒரு குறிப்பிட்ட திதியோ, நட்சத்திரமோ மற்றும் நாளோ நல்லது என்றோ -கெட்டது என்றோ சொல்ல முடியாது. உங்கள் தனிப்பட்ட ஜாதகம் மூலம் உங்களுக்கான சுப நேரம் தேர்ந்தெடுத்து அதன் மூலம் செயல்பட வேண்டும். அதே போல அசுப காலத்தில் தன்மையாக நடந்துகொள்வது அவசியம்.

வெளிநாட்டினர் இதன் அவசியத்தை தற்பொழுது உணர்ந்து வருகிறார்கள். தங்கள் அறியாமையில் இருப்பதை உணர்ந்து விவசாயத்தை கூட கிரகத்தின் அடிப்படியில் செய்கிறார்கள். Bio-Dynamic Agriculture என அதற்கு பெயர். நமது நாட்டில் பகுத்தறிவாளர்கள் என சொல்லுபவர்கள் மேலை நாட்டை சுட்டிகாட்டுகிறார்கள். இனி வரும் காலத்தில் மேலை நாட்டவரை சுட்டிகாட்டி ஜோதிடம் மூலம் நல்ல நேரம் பார்க்க துவங்குவார்கள். எல்லாம் நமது அறியாமையே..

உலக பொதுமறையில் கூடசொல்லப்பட்டதை இங்கு நினைவு கூறுகிறேன்... ஞாலம் கருதினும் கைகூடும்...என கூறினார்கள். காலம் கருதி செயல்பட முயற்சிப்போம்.

Tuesday, September 9, 2008

ஜோதிடம் யாருக்கு பயன்படும்?

ஸ்ரீமத் பாகவதத்தில் மனிதகுலம் இரு பெரும் பிரிவாக உள்ளது என சுக பிரம்மரிஷி கூறுகிறார். ஒன்று கடவுளை நோக்கி பயப்பவர்கள். அடுத்த பிரிவு பல கர்மங்களை செய்து கடவுளிடத்தில் பற்று இல்லாதவர்கள். இந்த இருவரும் வெளிப்பார்வைக்கு ஒரே செயலை செய்வது போல இருந்தாலும் , ஒருவர் கடவுளை நோக்கியும் மற்றொருவர் அதற்கு எதிராகவும் செயல்படுகிறார்கள். தானம் செய்யும்பொழுது கடவுளிடத்தில் பற்றுள்ளவர் தன்னலமில்லாமல் செய்கிறார்.

கடவுளிடத்தில் பற்று இல்லாதவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்த தானம் செய்கிறார். இது போல கர்மங்கள் ஒன்றாக தோற்றமளித்தாலும் அதன் வினை இரு பிரிவாக செயல்படுகிறது. இன்றும் கூட அனேக நபர்கள் இந்த இரண்டாம் பிரிவில் இருக்கிறார்கள். இவர்கள் ஜோதிடம் மற்றும் வேத சாஸ்திரத்தின் விஷயங்களை சுய நலத்திற்கும் தவறான கர்மத்தை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். தைத்ரீய உபஷத்தில் கர்ம அனுஷ்டானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஞான நிலை அடைய முற்படாமல் செய்யும் யாகம் , மரக்கட்டைகளை தீயில் எரிப்பதற்கு ஒப்பாகும் என்றும் இதை செய்பவர்கள் நான்கு கால் பிராணியின் நிலைக்கு ஒப்பானவர்கள் என கூறுகிறது.

யாக கர்மங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்த படுகிறதோ அதே போல ஜோதிட சாஸ்திரமும் பயன்படுத்த படுகிறது எனலாம். முற்காலத்தில் ஜோதிடம் ஆன்மீக வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள மட்டுமே பயன்பட்டது. வேதசாஸ்திரத்தில் நமது கர்மத்தின் அமைப்பே அடுத்த செயல் என்றும் கர்ம வினையே எதிர்கால வாழ்க்கைக்கு காரணம் என்கிறது. இதை ரூபிக்கும் கருவியே ஜோதிடம். ஒருவர் நல்ல கர்மம் செய்வாரா? அதன் மூலம் முக்திக்கு வழியுண்டா என ஆராயும் கருவியாகவே ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. நடைமுறையில் கூறப்படும் தோஷங்களும்,யோகங்களும் ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்காக கண்டறியப்பட்டது. முற்காலத்தில் பார்க்கப்பட்ட தோஷம் மற்றும் யோகங்களை ஆன்மீக ரீதியாக ஆராய்வோம்.

செவ்வாய் தோஷம்:

செவ்வாய் தோஷம் என்பது பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும் விஷயம், இதை முற்காலத்தில் சன்யாசிகளுக்கு மட்டுமே பார்த்தார்கள் என்பது ஆச்சரியப்பட கூடிய விஷயம். செவ்வாய் என்பது காம உணர்ச்சிகளையும் கோபத்தையும் குறிக்கும் கிரகம். செவ்வாய் பிறப்புறுப்பை குறிக்கும் கிரகம் ,இதை விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதி யாக வருவதன் மூலம் அறியலாம். இத்தகைய செவ்வாய் 4,7,11 வீடுகளில் காணப்படும் சமயம் அதிக காம உணர்வையும், 2-8 ஆம் வீடுகளில் சம்பந்தப்படும் சமயம் கோபத்தையும் காட்டும். இவை அனைத்தும் சன்யாசிக்கு உகந்த உணர்வுகள் கிடையாது. செவ்வாயின் நிலையை கண்டறிந்து அதன் பின்பே சன்யாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் திருமணம் செய்ய உள்ள இளம் வயதினருக்கு செவ்வாய் தோஷத்தை பார்த்து, செவ்வாய் தோஷ வர்த்தி வேறு செய்யப்படுகிறது. குடும்ப வாழ்வில் ஈடுபடும் இவர்கள் காம மற்றும் கோப உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சிறந்த மணவாழ்வை வாழமுடியாது அல்லவா? செவ்வாய் தோஷத்தை பற்றி சிறிது சிந்தியுங்கள்.

நாக தோஷம் :

நாக தோஷம் என்பது ராகு கேது எனும் சாயா கிரகங்கள் 2,8 அல்லது 1,7 ஆம் வீடுகளில் சம்மந்தப்பட்டால் நாக தோஷம் என கூறுகிறார்கள். இதனால் மணவாழ்க்கை தாமதமாகும் மேலும் மணவாழ்க்கையில் சிக்கல்கள் காணப்படும் என கூறி பரிகாரங்களுக்கு திசை திருப்புகிறார்கள். முற்காலத்தில் தவ வாழ்வை மேற்கொள்பவர்கள் காடுகளுக்கு சென்று ஏகாந்த உணர்வில் தியானிப்பார்கள். மேலும் அனைத்து கடமைகளும் வாழ்வில் முடிவடைந்தவர்கள் வனப்பிரஸ்தம் எனும் வாழ்வியல் முறையிலும் வாழ்ந்தார்கள்.

கொடிய வனத்தில் அவர்கள் வாழும் பொழுது பாம்புகள் மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மூலம் தீங்கு வருமா என கண்டறிய உதவியது தான் இந்த நாக தோஷம். 2,7 ஆகியவை மாரகஸ்தானம் இவற்றில் சம்பந்த பட்ட சாயாகிரகம் விஷத்தின் மூலம் மரணத்தையும்,1,8 தொடர்பால் விஷத்தின் மூலம் ஆபத்தையும் கொடுக்கும் என கண்டறிந்தார்கள். ஆனால் இதை நாம் மணவாழ்க்கைக்குள் நுழையும் பெண் ஜாதகத்தில் பார்க்கிறோம். திருமணமான தம்பதிகள் காட்டில் வாழப்போகிறார்கள் என்றால் இதை எடுத்துக்கொள்ளலாம்.


கஜகேசரி யோகம் :

சந்திரனுக்கு 1,5,9ஆம் வீடுகளில் குரு இருந்தால் கஜகேசரியோகம். இதை பெற்றவர்கள் சுகபோக வாழ்வை அனுபவிப்பார்கள் என்பது தற்கால ஜோதிடர்களின் கருத்து. உண்மையில் இது போன்ற அமைப்புள்ளவர்கள் பாக்கியசாலிகளே. மனதை குறிக்கும் கிரகமான சந்திரன்(மனோகாரகன்) ஆன்மீக குருவான தனது வழிகாட்டியை மனதில் நினைத்து எப்பொழுதும் அவருக்கு பவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். இத்தகைய அமைப்பு பெற்றவர்களை குரு தன்னிடத்தில் நிரந்தரமாக இருக்க அனுமதிப்பார். ஆனால் இன்றையகால கட்டத்தில் பொருள்தேடி ஓடுபவர்களுக்கு இந்த யோகத்தை பார்ப்பது நகைப்புக்குரியது.

இவ்வாறு யோகத்தையும் தோஷத்தையும் விவரித்து கொண்டே செல்லலாம். உண்மையை ஆராய்ந்து பலன் சொல்லும் நிலைவரும் பொழுது மட்டுமே இதற்கு தீர்வு உண்டு. விஞ்ஞான ஜோதிட ரீதியாக ஆன்மீக வாழ்வை ஆராய்ந்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது.