பல காலமாக இருக்கும் விவாதம் இது. ஒவ்வொரு காலத்திலும் ஜோதிடம் நிரூபித்தால் மட்டுமே மக்களால் நம்பிக்கை பெறும். அவ்வாறு நம்பிக்கை பெற்றாலும் அது விஞ்ஞானம் என்றோ மூடநம்பிக்கை என்றோ யாரும் முடிவுக்கு வருவதில்லை. ”ஜோதிஷம் ப்ரக்திக்ஷ நிரூபணம்” என்கிறார்கள் சான்றோர்கள்.
ஜோதிடத்தை மூடநம்பிக்கை ஆக்குவது எளிது. தங்களுக்கு ஏற்படும் ஆசையின் அடிப்படியில் அல்லது பிரச்சனையின் அடிப்படையில் ஜோதிடரை அனுகும் மக்கள் ஜோதிடத்தை மூடநம்பிக்கைக்கு எடுத்து செல்லும் முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.
திருமணம் தள்ளிப்போகிறது என ஜோதிடரிடத்தில் கேட்டவுடன், அவர் உண்மையான ஜோதிடராக இருந்து ஜாதகத்தை கணித்து இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்றால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள எவ்வளவு பேர் தயாராக இருப்பார்கள்? அதே நேரத்தில் திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வந்தால் 90 நாளில் திருமணம் நடக்கும் என்றவுடன் தன்னுடைய சுய தேவைக்காக கண்களை மூடிகொண்டு செல்லுகிறார்கள்.
அதற்கு பிறகு கல்யாணம் நடக்காது போனால் ஜோதிடர்(ன்)(ம்) போலி சரியில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்? திருமணஞ்சேரிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்பது சட்டமா? திருக்கடையூர் சென்றால் அனைவருக்கும் இறப்பு இல்லாத பெருவாழ்வு வருமா?
என்ன ஸ்வாமி நாத்திகம் பேசுகிறீர்கள் என கேட்ட தோன்றுகிறதா? ஏதோ ஒருவர் சொன்னார் என்பதற்காக இயந்திரமாக கோவிலில் நுழைந்து தனது சுயலாபத்திற்காக பூஜை செய்பவனுக்கு எந்த தெய்வம் வரம் கொடுக்கும்? திருமணஞ்சேரி செல்லுவதாக இருந்தால் சிவபெருமானாக செல்லுங்கள் மலைமகள் மனைவியாவாள், திருக்கடையூர் செல்லுவதாக இருந்தால் மார்க்கண்டேயனாக செல்லுங்கள். அதைவிடுத்து சுயநலத்தோடு சென்றால் அங்கே அருள் பாலிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு ஜோதிடத்தை மூட நம்பிக்கை ஆக்குபவர்களாவது சகித்துக்கொள்ளலாம். சனி பெயர்ச்சி அன்று இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களுக்கு எல்லை இல்லை. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோவிலில் கூட்டம் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. அரசன் முதல் ஆண்டி வரை அங்கே தெருவில் படுத்து காலையில் சனிப்பெயர்ச்சியை கொண்டாடுவார்கள்.
அங்கே இருக்கும் தீர்த்த குளத்தில் தங்களின் துணிமணியை கழற்றி எறிந்து சனியிடமிருந்து விடுதலை பெருவார்கள். சென்ற சனிப்பெயர்ச்சிக்கு மட்டும் தீர்த்த குளத்திலிருந்து 10 டன் துணிகளை மாநகராட்சி அகற்றி இருக்கிறது. எந்த ஆகமத்தில் கோவில் தீர்த்த குளத்தில் உடைகளை கழற்றி எறிய சொன்னது? பக்தர்களின் நலனுக்காக தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் “உண்டியல்” என பலகை வைக்கும் கோவில் நிர்வாகம் இதை தடுக்க ஏதாவது பல-கை வைத்தார்களா?
வீட்டில் ஏழரை சனி பிடித்தால் அதை திருநள்ளாற்றில் தொலைப்பான் ஏன்? வீட்டிலேயே தொலைக்க கூடாதா? தீர்த்தகுளத்தில் இருக்கும் ஈரத்துணிகள் மூலம் எப்படியெல்லாம் நோய்வரும் என்று யாராவது சிந்தித்தது உண்டா?
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் நவக்கிரத சன்னிதியில் சனியின் விக்கிரகம் இருக்கிறதே அதில் சனியின் ஆற்றல் இல்லையா? அல்லது சனி அங்கே மட்டும் தான் இருக்கிறாரா?
உண்மைதான் சனி அங்கே தான் இருக்கிறார். ஈரதுணியும் பாக்டீரியாவும் சூழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்கே இருக்க முடியும்?
நிதர்சனத்தில் மக்களுக்கு அங்கே சென்றால்தான் சனி பிடிக்கும்.
திருநள்ளாரு நள மகாராஜவுக்கு சனி விமோசனம் கிடைத்தது. நள மஹாராஜா சாதாரணமானவர் கிடையாது. MR.Perfect..! தான் செய்யும் எந்த செயலிலும் நேர்த்தியுடன் இருப்பார். அவரிடம் தவறு என்பதே கிடையாது. சனி நேர்த்தி இல்லாத, சத்தியமற்ற , தர்மம் தவறியவர்களை தான் பிடிப்பானாம். அப்படி இருக்க சனி அவரை பிடிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. காரணம் அவர் அவ்வளவு கச்சிதமானவர். நள பாகம் என கேட்டிருப்பீர்கள், சமையலில் கூட நளன் கச்சிதமாக சமைப்பான் என்பதை அதில் இருக்கும் அர்த்தம். ஒரு நாள் கால்களை கழுவும் பொழுது ஒரு இடத்தில் நீர் படாமல் கால்களை கழுவினான் நளன். இவ்வளவு நாள் மிஸ்டர்.கச்சிதமாக இருந்தவர் செய்த தவறை சாதகமாக்கி சனி அவரின் கால்களை பிடித்தான் என்றது தலவரலாறு.
இப்பொழுது நளனை ஒப்பிட்டு சொல்லுங்கள், ஈரத்துணியை கழற்றி வீசும் பக்தர்களை சனி பிடிப்பாரா மாட்டாரா? இதனால் தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என கூறுவது எளிது என்கிறேன்.
அப்படியானால் ஜோதிடம் விஞ்ஞானமா?
விஞ்ஞானம் என்பது மனித அறிவுக்கு எட்டிய ஒரு சித்தாந்தம். ஒருவர் கண்டறிந்ததை ஒரு குழு ஏற்றுக்கொண்டால் அவர் விஞ்ஞானி. அந்த குழுவினர்கள் விஞ்ஞானிகளின் சபை. மனித அறிவுக்கு ஏற்ப சான்றுகள் கொடுத்தால் போதுமானது.
150 வருடத்திற்கு முன் டார்வின் சொன்ன கருத்தை மதவாதிகள் எதிர்த்தார்கள். கடவுள் மனிதனை படைத்தார் என்ற மதவாதிகளுக்கு, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்க முடியவில்லை. பிறகு விஞ்ஞானிகளும் மக்களும் ஏற்றார்கள். இந்த நூற்றாண்டில் திரும்பவும் டார்வின் கொள்கை முரண்பாடானது என்கிறார்கள். குரங்கிலிருந்து பரிணாமம் ஆகி மனிதன் வந்தான், மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.
விஞ்ஞானிகளின் கூத்தை நினைக்கும் பொழுது ஒரு வேடிக்கை ஞாபகம் வருகிறது..
அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் மாநாட்டுக்கு பல நாட்டு விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். அதில் ஒரு அமெரிக்கர்,ரஷ்யர் மற்றும் இந்திய விஞ்ஞானி குறிப்பிடத்தக்கவர்கள்.
நாங்கள் தான் தொலைத்தொடர்பில் உலகின் முன்னோடிகள் என ஒவ்வொரு வரும் தர்க்கம் செய்தார்கள். இதை நிரூபிக்க சொன்னார்கள் பிறர். அமெரிகக் விஞ்ஞானி உடனே அங்கே இருந்த நிலத்தை தோண்டினார். பத்தடி ஆழத்தில் சில டெலிபோன் கம்பங்கள் இருந்தது. ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானியிடம் கூறினார், ”ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும், ஐம்பது வருடத்திற்கு முன்னறே நாங்கள் டெலிபோன் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார்.
ரஷ்யர் இருவரையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றார், அவரும் நிலத்தை தோண்டினார். பதினைந்து அடி ஆழத்தில் சில தந்தி கம்பங்கள் கிடைத்தது. அமெரிக்கர் சொன்னது போலவே ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் எழுபத்து ஐந்து வருடத்திற்கு முன்பே நாங்கள் தந்தி வழிசேவையை பயன்படுத்தி இருக்கிறோம் நாங்கள் தான் தொலைத்தொடர்பில் முன்னோடி என்றார்.
நம்ம ஆள் சும்மா இருப்பாரா? இருவரையும் இந்தியா அழைத்து வந்து நிலத்தை தோண்ட ஆரம்பித்தார். பத்து , இருபது என ஆழம் கூடியதே தவிர விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை.
ரஷ்யரும், அமெரிக்கரும் என்னப்பா உன் முடிவு என கேட்க, இந்தியர் சொன்னார், ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் கூட நூறு வருஷத்திற்கு முன்னாடியே நாங்க வயர்லெஸ் டெக்னாலஜி யூஸ்பண்ணிருக்கோம்...! என்றார்.
விஞ்ஞானமும் அதன் நிரூபணமும் இப்படித்தான் இருக்கிறது.
உண்மையில் ஜோதிடம் விஞ்ஞானமா அல்லது மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் இல்லை என்றே சொல்லுவேன்.
உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். காரணம் அவர்கள் உணர்ந்த சத்தியம் ஒன்று. ஜோதிடத்தை மெய்ஞான நோக்கோடு கண்டால் அதில் இருக்கும் உண்மை புலப்படும்.
ஆதலால் சொல்லுகிறேன் ஜோதிடம் ஒரு மெய்ஞானம்.
டிஸ்கி : பரிசல் மற்றும் சஞ்சய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜோதிட உற்சவத்தில் எனது பேச்சின் உரை வடிவம் இது. எழுத தூண்டிய அவர்களுக்கு எனது நன்றிகள்.
ஜோதிடத்தை மூடநம்பிக்கை ஆக்குவது எளிது. தங்களுக்கு ஏற்படும் ஆசையின் அடிப்படியில் அல்லது பிரச்சனையின் அடிப்படையில் ஜோதிடரை அனுகும் மக்கள் ஜோதிடத்தை மூடநம்பிக்கைக்கு எடுத்து செல்லும் முக்கிய காரணியாக இருக்கிறார்கள்.
திருமணம் தள்ளிப்போகிறது என ஜோதிடரிடத்தில் கேட்டவுடன், அவர் உண்மையான ஜோதிடராக இருந்து ஜாதகத்தை கணித்து இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்றால் இந்த பதிலை ஏற்றுக்கொள்ள எவ்வளவு பேர் தயாராக இருப்பார்கள்? அதே நேரத்தில் திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வந்தால் 90 நாளில் திருமணம் நடக்கும் என்றவுடன் தன்னுடைய சுய தேவைக்காக கண்களை மூடிகொண்டு செல்லுகிறார்கள்.
அதற்கு பிறகு கல்யாணம் நடக்காது போனால் ஜோதிடர்(ன்)(ம்) போலி சரியில்லை. தெரியாமல் தான் கேட்கிறேன்? திருமணஞ்சேரிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் திருமணம் நடக்க வேண்டும் என்பது சட்டமா? திருக்கடையூர் சென்றால் அனைவருக்கும் இறப்பு இல்லாத பெருவாழ்வு வருமா?
என்ன ஸ்வாமி நாத்திகம் பேசுகிறீர்கள் என கேட்ட தோன்றுகிறதா? ஏதோ ஒருவர் சொன்னார் என்பதற்காக இயந்திரமாக கோவிலில் நுழைந்து தனது சுயலாபத்திற்காக பூஜை செய்பவனுக்கு எந்த தெய்வம் வரம் கொடுக்கும்? திருமணஞ்சேரி செல்லுவதாக இருந்தால் சிவபெருமானாக செல்லுங்கள் மலைமகள் மனைவியாவாள், திருக்கடையூர் செல்லுவதாக இருந்தால் மார்க்கண்டேயனாக செல்லுங்கள். அதைவிடுத்து சுயநலத்தோடு சென்றால் அங்கே அருள் பாலிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு ஜோதிடத்தை மூட நம்பிக்கை ஆக்குபவர்களாவது சகித்துக்கொள்ளலாம். சனி பெயர்ச்சி அன்று இவர்கள் செய்யும் கோமாளித்தனங்களுக்கு எல்லை இல்லை. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோவிலில் கூட்டம் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. அரசன் முதல் ஆண்டி வரை அங்கே தெருவில் படுத்து காலையில் சனிப்பெயர்ச்சியை கொண்டாடுவார்கள்.
அங்கே இருக்கும் தீர்த்த குளத்தில் தங்களின் துணிமணியை கழற்றி எறிந்து சனியிடமிருந்து விடுதலை பெருவார்கள். சென்ற சனிப்பெயர்ச்சிக்கு மட்டும் தீர்த்த குளத்திலிருந்து 10 டன் துணிகளை மாநகராட்சி அகற்றி இருக்கிறது. எந்த ஆகமத்தில் கோவில் தீர்த்த குளத்தில் உடைகளை கழற்றி எறிய சொன்னது? பக்தர்களின் நலனுக்காக தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் “உண்டியல்” என பலகை வைக்கும் கோவில் நிர்வாகம் இதை தடுக்க ஏதாவது பல-கை வைத்தார்களா?
வீட்டில் ஏழரை சனி பிடித்தால் அதை திருநள்ளாற்றில் தொலைப்பான் ஏன்? வீட்டிலேயே தொலைக்க கூடாதா? தீர்த்தகுளத்தில் இருக்கும் ஈரத்துணிகள் மூலம் எப்படியெல்லாம் நோய்வரும் என்று யாராவது சிந்தித்தது உண்டா?
உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலில் நவக்கிரத சன்னிதியில் சனியின் விக்கிரகம் இருக்கிறதே அதில் சனியின் ஆற்றல் இல்லையா? அல்லது சனி அங்கே மட்டும் தான் இருக்கிறாரா?
உண்மைதான் சனி அங்கே தான் இருக்கிறார். ஈரதுணியும் பாக்டீரியாவும் சூழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு எங்கே இருக்க முடியும்?
நிதர்சனத்தில் மக்களுக்கு அங்கே சென்றால்தான் சனி பிடிக்கும்.
திருநள்ளாரு நள மகாராஜவுக்கு சனி விமோசனம் கிடைத்தது. நள மஹாராஜா சாதாரணமானவர் கிடையாது. MR.Perfect..! தான் செய்யும் எந்த செயலிலும் நேர்த்தியுடன் இருப்பார். அவரிடம் தவறு என்பதே கிடையாது. சனி நேர்த்தி இல்லாத, சத்தியமற்ற , தர்மம் தவறியவர்களை தான் பிடிப்பானாம். அப்படி இருக்க சனி அவரை பிடிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. காரணம் அவர் அவ்வளவு கச்சிதமானவர். நள பாகம் என கேட்டிருப்பீர்கள், சமையலில் கூட நளன் கச்சிதமாக சமைப்பான் என்பதை அதில் இருக்கும் அர்த்தம். ஒரு நாள் கால்களை கழுவும் பொழுது ஒரு இடத்தில் நீர் படாமல் கால்களை கழுவினான் நளன். இவ்வளவு நாள் மிஸ்டர்.கச்சிதமாக இருந்தவர் செய்த தவறை சாதகமாக்கி சனி அவரின் கால்களை பிடித்தான் என்றது தலவரலாறு.
இப்பொழுது நளனை ஒப்பிட்டு சொல்லுங்கள், ஈரத்துணியை கழற்றி வீசும் பக்தர்களை சனி பிடிப்பாரா மாட்டாரா? இதனால் தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என கூறுவது எளிது என்கிறேன்.
அப்படியானால் ஜோதிடம் விஞ்ஞானமா?
விஞ்ஞானம் என்பது மனித அறிவுக்கு எட்டிய ஒரு சித்தாந்தம். ஒருவர் கண்டறிந்ததை ஒரு குழு ஏற்றுக்கொண்டால் அவர் விஞ்ஞானி. அந்த குழுவினர்கள் விஞ்ஞானிகளின் சபை. மனித அறிவுக்கு ஏற்ப சான்றுகள் கொடுத்தால் போதுமானது.
150 வருடத்திற்கு முன் டார்வின் சொன்ன கருத்தை மதவாதிகள் எதிர்த்தார்கள். கடவுள் மனிதனை படைத்தார் என்ற மதவாதிகளுக்கு, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்க முடியவில்லை. பிறகு விஞ்ஞானிகளும் மக்களும் ஏற்றார்கள். இந்த நூற்றாண்டில் திரும்பவும் டார்வின் கொள்கை முரண்பாடானது என்கிறார்கள். குரங்கிலிருந்து பரிணாமம் ஆகி மனிதன் வந்தான், மனிதன் பரிணாமம் அடைந்து ஏன் வேறு ஒன்றாக மாறவில்லை என எதிர் விஞ்ஞானம் பேசி டார்வினை கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.
விஞ்ஞானிகளின் கூத்தை நினைக்கும் பொழுது ஒரு வேடிக்கை ஞாபகம் வருகிறது..
அமெரிக்காவில் விஞ்ஞானிகளின் மாநாட்டுக்கு பல நாட்டு விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். அதில் ஒரு அமெரிக்கர்,ரஷ்யர் மற்றும் இந்திய விஞ்ஞானி குறிப்பிடத்தக்கவர்கள்.
நாங்கள் தான் தொலைத்தொடர்பில் உலகின் முன்னோடிகள் என ஒவ்வொரு வரும் தர்க்கம் செய்தார்கள். இதை நிரூபிக்க சொன்னார்கள் பிறர். அமெரிகக் விஞ்ஞானி உடனே அங்கே இருந்த நிலத்தை தோண்டினார். பத்தடி ஆழத்தில் சில டெலிபோன் கம்பங்கள் இருந்தது. ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானியிடம் கூறினார், ”ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும், ஐம்பது வருடத்திற்கு முன்னறே நாங்கள் டெலிபோன் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார்.
ரஷ்யர் இருவரையும் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்றார், அவரும் நிலத்தை தோண்டினார். பதினைந்து அடி ஆழத்தில் சில தந்தி கம்பங்கள் கிடைத்தது. அமெரிக்கர் சொன்னது போலவே ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் எழுபத்து ஐந்து வருடத்திற்கு முன்பே நாங்கள் தந்தி வழிசேவையை பயன்படுத்தி இருக்கிறோம் நாங்கள் தான் தொலைத்தொடர்பில் முன்னோடி என்றார்.
நம்ம ஆள் சும்மா இருப்பாரா? இருவரையும் இந்தியா அழைத்து வந்து நிலத்தை தோண்ட ஆரம்பித்தார். பத்து , இருபது என ஆழம் கூடியதே தவிர விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை.
ரஷ்யரும், அமெரிக்கரும் என்னப்பா உன் முடிவு என கேட்க, இந்தியர் சொன்னார், ஒரு அடிக்கு ஐந்து வருடம் என்றாலும் கூட நூறு வருஷத்திற்கு முன்னாடியே நாங்க வயர்லெஸ் டெக்னாலஜி யூஸ்பண்ணிருக்கோம்...! என்றார்.
விஞ்ஞானமும் அதன் நிரூபணமும் இப்படித்தான் இருக்கிறது.
உண்மையில் ஜோதிடம் விஞ்ஞானமா அல்லது மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் இல்லை என்றே சொல்லுவேன்.
உள் ஒளி உணர்ந்த இருவர்கள் தங்களுக்குள் முரண்படமாட்டார்கள். காரணம் அவர்கள் உணர்ந்த சத்தியம் ஒன்று. ஜோதிடத்தை மெய்ஞான நோக்கோடு கண்டால் அதில் இருக்கும் உண்மை புலப்படும்.
ஆதலால் சொல்லுகிறேன் ஜோதிடம் ஒரு மெய்ஞானம்.
டிஸ்கி : பரிசல் மற்றும் சஞ்சய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜோதிட உற்சவத்தில் எனது பேச்சின் உரை வடிவம் இது. எழுத தூண்டிய அவர்களுக்கு எனது நன்றிகள்.






