Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label ஆன்மீக புரிதல். Show all posts
Showing posts with label ஆன்மீக புரிதல். Show all posts

Monday, August 26, 2019

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2  - 


    அனுபவ பகிர்வு : விஜி ராம்


பயணம் வேறு யாத்திரை வேறு. பயணத்திற்கு நண்பர்கள் தேவை. யாத்திரைக்கோ குரு மிக அவசியம். புராண தலங்கள், ஆன்மீகதலங்கள் போன்றவை நண்பர்களுடன் செல்வதை விட நம்மை அறிந்த நாம் புரிந்து கொள்ள நினைக்கும் குருவுடன் செல்வது நம்முள் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அந்தந்தத்தலங்களை இன்னும் அதிகம் அனுபவிக்க வழிவகுக்கும்.



நான் போக வேண்டும் என்று நினைத்த பெரும்பாலான தலங்கள் குரு மூலமே தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் நம் எண்ணத்தை சொல்லிவிட்டு மறந்து விடலாம், எப்படியேனும் நம்மை அழைத்து சென்றிடுவார். திருவண்ணாமலை, காசி, அலகாபத், கயா, ஹிமாலயாஸ், தேவப்ரயாகை, கும்பமேளா என்ற அந்த வரிசை இன்னும் அதிகம், 2015 வருடம் முக்திநாத் செல்லும் ஆர்வத்தை செயலாக்கும் போது பூகம்பத்தால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இதோ இந்த மேமாதம் முக்திநாத்தை தரிசிக்கும்  பாக்யம் பெற்றோம். 



முக்தி நாத்: 

நாத பரம்பரையின் பூமி, ஆதிநாதரின் ஆதிக்கபூமி. அங்கே செல்கிறோம் என்ற எண்ணமே மிக உவப்பானதாக இருந்தது. போகும் முன் பார்த்த , படித்த விசயங்கள் அனைத்துமே கொஞ்சம் பீதியளிப்பவையாகவே இருந்தது. ஆனால்  அதைப்பற்றி அதிகம் என்றுமே யோசித்ததில்லை, அழைத்துசெல்பவர் கண்டிப்பாக இவற்றை சரிபடுத்தி நல்ல தரிசனத்துடன் ஆனந்த பயணமாகவே ஆக்குவார். டெல்லி, காத்மாண்டு, போஹ்ரா, ஜோம்சம் என்று தினமுமே குறிப்பிட்ட தூரம்  பயணம்  செய்தே முக்திநாதரை அடைய முடியும். பயணத்திட்டம் நாம் தீட்டலாம், ஆனால் இயற்கையே இறுதி முடிவெடுக்கும். மழை, பனிப்புயல், நிலச்சரிவு, அடிக்கடி நடக்கும் விபத்துகள் என்று அனைத்தையும் தாண்டி இயற்கை நம் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும்.  ஆதிநாதர் அனுமதித்து, இயற்கை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். 

மே 21 நடு இரவு 1 மணி விமானத்தில் டெல்லிக்கு பயணித்து காத்மாண்டு விமானம் ஏறி  மதியம் 2 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் அடைந்தோம். காத்மாண்டு நேபாள தலைநகர், மலைப்பிரதேசமே, ஊருக்கு நடுவில் விமான நிலையம், எங்கு சென்றாலும் அதனை சுற்றியே பாதைகள். எங்களுடய பயணமத்திட்டம்  தினமும் காலை ஆரம்பித்து 3வது  நாள் தான் முக்திநாத்தை அடையும்படியானது. 


காத்மாண்டு : ஊர் முழுதும் சாலையோர  ஊதாப்பூக்கள் சிந்தும் மரங்கள், சற்றே அழுக்கான நகரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பரபரப்பிலும் நிதானமான ஊர்.  காத்மாண்டு அடைந்து மற்ற மாணவர்களும் வந்த பின் மாலை முதலில் சென்ற இடம் பசுபதிநாதர் கோவில் . யுனெஸ்கோவின்  கீழிருக்கும் சின்னமாக அறிவித்திருக்கிறார்கள். பெரிய சுற்றுப்புறத்துடன் , வெறும் செங்கல் கட்டுமானத்துடன் கேரளாவை நினைவுபடுத்தும் கோவில். இந்த பயணம் முழுதும்   துளி வெயில் இன்றி, மழை மேகங்கள் சூழ, அவ்வப்போது மழை சாறலாகவும் பெருமழையாகவும் பெய்து ஆசிர்வதித்துக்கொண்டே இருந்தது. பசுபதிநாதர் கோவில் வலதுபுறத்தில் இருக்கும் புவனேஸ்வரியை தரிசித்து , பசுபதிநாதரை தரிசிக்க வரிசையில் இணைந்த போது மணி 6. 

பசுபதிநாதர்  , லிங்க வடிவில் இருந்தாலும் நான்கு புறமும் முகம் கொண்டு சதுர்முகனாக இருக்கிறார். வழக்கமாக ஒரு கதவு திறந்திருக்கும் தரிசித்து வரலாம், காலையில் 9.30 முதல் 12.30 வரையிலும் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலும் நான்கு கதவுகளும் திறந்திருக்கும் நாற்புறம் சுற்றி வந்து சிவனை தரிசிக்கலாம். நாங்களும் காத்திருந்து நாற்புறமும் சுற்றி  நாதரை தரிசித்து வரும் போது மழை தூறலாக ஆசிர்வதிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிறிய அறிமுக உரையுடன் பிரிந்தோம்.


2 ஆம் நாள் :

 காலை பத்து மணிக்கே எங்களுக்கு போஹ்ரா விமானம். இங்கு கவனிக்க வேண்டியது விமானம் கிளம்ப எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை, வரும்போது வரும், கிளம்பும் போது கிளம்பும், எனவே உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் விமான நிலையம் அடைந்து விடுவது நலம். காலை 6 மணிக்கு கோரக்கர் சன்னதிக்கு பயணம். பசுபதிநாதர் கோவிலின் இடதுபுறம் ஒரு சாலை பிரியும் அதில் சிறு குன்று உண்டு, பெரிய பெரிய படிகளில் அநேகம் பேர் ஓடிக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் இருப்பார்கள், அந்த படிகளில் ஏறி சிறு குன்றின் உச்சியை அடைந்தால் அங்கே வசிக்கிறார் கோரக்கர்.  தலைவரின் அனுமதியுடன் தான் எந்தப்பயணமும் ஆரம்பிக்கவேண்டும், இதோ கோரக்கரை தரிசித்து, அனுமதிபெற்றுக்கொடிருக்கிறோம். மந்திர ஜெபமோடு அந்த சூழல் இன்னொரு முறை மீண்டும் வாய்க்க குருவருள் துணையிருக்கட்டும்.


விமான நிலையம் அடைந்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் போஹ்ரா அடைந்தோம். போஹ்ரா, அழகான சிறிய ஊர். காத்மாண்டு போல் கூட்டமில்லை, மிக மிக இதமான கால நிலை, அழகான ஏரியை சுற்றி அமைதியான பாதையும், ஒரு புறம் கடைகளும், நினைத்த பொழுது வானத்தை பிளந்த மழையும் தூரத்தில் வெள்ளிப்பனி மலையுமாக கண்நிறைந்த ஊர். மாலை சத்சங்கத்தில் முக்திநாத், ஏன் எதற்கு, நாத பரம்பரை, இன்னும் எங்களின் எத்தனையோ கேள்விகளுக்கு  பதிலுரைத்து அடுத்த நாள் பயணத்திற்கு மனதளவில் தயார் படுத்தப்பட்டோம்.



3-ம் நாள் = ஜோம்சம் பயணம் 

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,



 ஒரே ஒரு நீண்ட தெரு, அதில் இந்தக்கோடியில் விமானநிலையம் பாதி வழியில் ஹோட்டல், அந்தக்கோடியில் காளிகண்டகி நதி. 8 மணிக்கு  முக்திநாத் செல்ல தயாரானோம். இங்கிருந்து 21 கிலோமீட்டர் பயணம், ஆனால் 2 முதல் 3 மணிநேரம் ஆகும். சாலை என்பது கடைசி 10 கிலோமீட்டருக்கே அதுவரை தண்ணீர் வற்றிய கண்டகி நதியில் பஸ் பயணம். குலுங்கி  விலா எலும்புகள் இடம் மாறுகையில் பாதை தென்பட்டது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி புகைப்படும் எடுத்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இரண்டு கிலோமீட்டர் போனதுமே கவனித்தேன் என் ஹேண்ட் பேக் காணோம். பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லாமே இருந்தது. ட்ரைவர் உடனே வண்டியை திருப்ப முடியாது என்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் போய் வண்டியை திருப்பி நாங்கள் புகைப்படம் எடுத்த இடம் வந்த போது வைத்த இடத்திலேயே என் கைப்பை அநாதையாக கிடந்தது. அதுவரை அந்த ரோட்டில் ஒரு வண்டியோ மனிதனோ கடக்கவில்லை. 



முக்திநாத்  ஆட்டோ ஸ்டேண்ட் எனப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடக்க வேண்டும். 2 கிலோமீட்டர் மட்டுமே. நடக்க முடியாதவர்களுக்கு போனி எனப்படும் மட்டக்குதிரை சவாரியும், டோலி எனப்படும் நான்கு பேர் சேர்ந்து தூக்கிசெல்லும் வசதியும் ஹோம்சம்மிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அப்படி ஒன்றும் கடினமான பாதை அல்ல, கொஞ்சம் படிகள்  கரடுமுரடான பாதை என்று மொத்தமே 2 கிலோமீட்டர் தான். மெதுவாக ஏறலாம்.  கவனிக்க வேண்டியது இங்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறந்து மாலை 4 மணிக்கு மூடப்படும். எலுமிச்சம் பழம் கிடைக்காது. தண்ணீர் தேவைக்கு எடுத்து செல்லவும். குளிர் கொஞ்சம் அதிகம். . 



முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.



சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர்.  மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.


காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்
போஹ்ரா, காலை விமானத்தில் போஹ்ராவை அடைந்ததும் ஆரம்பித்த  மழை  விடாமல் பெய்துகொண்டே இருந்தது. போஹ்ராவில் பார்க்கவேண்டிய இடங்களில் சில, பராஹி கோவில் ( வராஹி கோவில்) ஏரிக்கு நடுவில் அமைந்துள்ளது, படகில்  இந்திய மதிப்பில் போக வர 100 ரூபாய், அழகிய சிறு கோவில், இங்கு கோவில்களில் ஸ்டிக்கர் பொட்டு, கண்ணாடி வளையல் போன்றவைகளை ஸ்வாமிக்கு சமர்பிப்க்கின்றனர். 
குப்தேஸ்வர மஹாதேவ் கேவ் : குகைக்கோவில், தரையிலிருந்து  100 படிகள் வரை கீழிறங்கி சென்றால்  ஆயிரம் வருட பழமையான சிவன் கோவிலும் இன்னும் இறங்கினால் ஆர்பரிக்கும் அருவியையையும் பார்க்கலாம்..
குப்தேஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ளது டாவிஸ் அருவி. இந்த அருவிதான் குப்தேஸ்வரர் கோவிலுக்குள்ளும் விழுகிறது.
பிந்தியபாஷினி கோவில் : பழைய பஜார் பகுதியில் உள்ள பிந்தி பாஷினி கோவில் முக்கியமான துர்கை ஆலயம். சிவன், கிருஷ்ணர், பஜ்ரங்பலி என்று எல்லாருக்கும் சந்நதி உள்ளது. சிறு குன்று போன்ற இடம். லிப்ட் உண்டு, கட்டணமும் உண்டு.
இந்த இடங்களை பார்த்து , ஓய்வெடுத்து அடுத்த நாள் காத்மாண்டு பயணித்தோம்.

காத்மாண்டு. 
நினைத்ததை விட சுலபமாக, நிறைவான தரிசனம் முக்திநாத்திலும், போஹ்ராவிலும். நாங்கள் காத்மாண்டு அடைந்த பின்னரே அறிந்தோம் அன்றும் அதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முக்திநாத் சேவை பனிப்புயல், கடும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது என்று. ஆதிநாதரின் அருளின்று எங்கள் பயணம் இதுவரை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. காத்மாண்டுவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

ஸ்வய்ம்பு நாத் : முழுதான ஹிந்துக்கள் நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதமும் பரவியிருக்கிறது. ஸ்வம்புநாத் அதில் ஒன்று. சிறு குன்றின் மேல் இருக்கும் புத்த ஆலயம், அருமையான சிற்பக்கலைகளுடன் பெரிய கண்கள் வரையப்பட்ட ஸ்தூபியை வணங்குகின்றனர்.

ஜலநாராயணன் கோவில் : தண்ணீரில் துயில் கொள்ளும் பிரம்மாண்ட  விஷ்ணுவின் கோவில், அதன் சின்ன  அளவு சிலையை வைத்து தினப்படி யாகம் நடத்தப்படுகிறது.

கைலாத்நாத் கோவில் : ஊரைவிட்டு சிறிது தள்ளி இருக்கும் 140 அடி சிவன் கோவில்,, தனியாருக்கு சொந்தமானது.

டோலேஸ்வர் கோவில் : காத்மாண்டுவை சுற்றி பெரும்பாலும் ஹிந்து கோவில்கள், அதில் முக்கியமானது டோலேஸ்வர், மஹாபாரதக்கதைகளில் இடம்பெற்ற பழமை வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

சங்குநாராயணன் கோவில். மலைமேல் இருக்கும் விஷ்ணு கோவில், மிக மிக அழகான சிற்பங்களும் விஷ்ணுபுராண சிலைகளுமாக அழகான இடம்.

இந்த கோவில்கள் அனைத்திலும் ஆள் நடமாட்டம் குறைவு, நுழைவுக்கட்டணம் உண்டு, அனைத்துமே காத்மாண்டுவின் நான்கு திசைகளிலும் தள்ளி அமைந்திருக்கிறது.



காத்மாண்டுவை விட்டு கிளம்பும் நேரம்  வந்துவிட்டது. மீண்டும் பசுபதிநாதரை தரிசித்து, கோரக்கரிடம் நன்றிகூறி தியானித்து , யாத்திரையின் நிறைவு உரையாக ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் சந்தேகம் தெளிந்து அருளாசி வாங்கி டெல்லியை நோக்கி பயணப்படுகிறோம்.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, ஆயிரம் பக்கம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை. முக்திநாத் போகவேண்டும் என்று நினைப்போருக்கு  இப்படி இருக்கும் என்ற சிறிய வழிகாட்டி. நாதர்களின் பூமியின் அருளையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் எழுத முடியாது என்றாலும் , எப்போது  படித்தாலும் மீண்டும் அந்த இடங்களுக்கு கண்மூடி மனதளவில் பயணிக்கவும், காளி கண்டகியின் வழியில் முக்திநாதரை தரிசிக்கவும், கோரக்கரை அருகிருந்து உணரவும் ,, மறுபடியும் வாழ்வில் இன்னொரு முறை அவர்களை காணும்  வாய்ப்பினையும் வேண்டவும் ஒரு வழி. மீண்டும் குருஅருள் மனம் வைத்து கோரக்கரையும் நாதபுரியையும் தரிசிக்க அருள்புரியட்டும்.

Tuesday, October 9, 2018

சபரிமலை மேலும் சில உண்மைகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதை தொடர்ந்து பெண்கள் சபரிமலைக்கு செல்லாமா என ஊடக விவாதம் நடைபெறுகிறது. ஐயப்ப பக்தர்கள் கேரளாவிலும் பல ஊர்களிலும் பேரணி செல்கிறார்கள். தேவஸ்வம் போர்டு அடுத்த மாதம் பெண் பக்தர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்வோம் என சொல்லி வருகிறார்கள். பூஜைகளில் இருக்கும் தந்திரிகள் பாரம்பரியம் அப்படி இல்லை என சங்கடத்துடன் பேட்டி அளிக்கிறார்கள். 

உண்மையில் சபரிமலை கோவிலை மையமாக வைத்து என்ன நடக்கிறது என்பதை கூற தேவையில்லை. சபரிமலை பெண்கள் செல்லலாம் என்ற விஷயம் இப்பொழுது நீதிமன்றம் தாண்டி அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது.

இப்படி நீண்ட குழப்பத்தில் இருக்கும் விஷயத்தில் என்ன உண்மையை நான் சொல்லிவிடப் போகிறேன் ?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றால் என்ன ஆகும்?

வாருங்கள் ஆராய்வோம்.

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பெண்கள் செல்லலாமா இல்லையா என்பது இல்லை, சபரிமலை கோவிலின் விதிமுறைகள் பற்றியது.

நம் நாட்டின் கோவில்கள் இரண்டு வகையான கோவில் சட்ட விதிகளுக்கு உட்பட்டவை. முதல் வகை - மனிதர்கள்/அரசர்கள் வழிபாட்டு ஸ்தலம் உருவாக்கும் பொழுது அவை ஆகம விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட வேண்டும். ஆகமம் என்பது பல்வேறு ஆன்மீக உயர்நிலை கொண்டவர்களால் உருவாக்கப்பட்டது. கோவிலின் நிர்மாணம் முதல் கோவில் எப்படி செயல்படவேண்டும் என்பது வரை ஆகமத்தில் இருக்கிறது. 

இரண்டாம் வகை என்பது சித்தர்கள் - ஆன்மீகவாதிகள் அவர்களே உருவாக்கிய ஸ்தலங்கள். இவை ஆகம விதிகளுக்கு உட்படாதவை. ஆனாலும் ஆகம சாஸ்திரத்தை உருவாக்கிய பல ஞானிகள் தனிக்கோவில்கள் உருவாக்கி இருக்கிறார்கள் அப்படி இருக்க சித்த முறை கோவில்கள் ஆகமத்திலிருந்து பெரும் வேறுபாடு இருக்காது. ஆனாலும் சில சித்த புருஷர்கள் தங்கள் உருவாக்கிய கோவில்களுக்கு புதிய சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள்.

 உதாரணமாக பழனி பால தண்டாயுதபாணி கோவில் சித்த மஹாபுருஷர் போகர் உருவாக்கினார். அங்கே ஆகமத்தை செயல்படுத்தினால் சில குழப்பம் வரும். அதை நாம் சமீபகால செய்திகளில் பார்த்திருக்க முடியும்.

கேரள கோவில்கள் எதன் அடிப்படையில் இருக்கிறது என்றால் ஆகமவிதிகளில் இல்லை என்பதே பதில். பரசுராமரால் உருவாக்கப்பட்ட பூமியில் அவர் கோவில் நடைமுறைகளையும் பூஜா விதிகளையும் நிர்ணயம் செய்துவிட்டார். அதன் அடிப்படையிலேயே கேரள கோவில்கள் செயல்படுகிறது. இதற்கு பரசுராம பத்ததி என்று பெயர். 

பரசுராமர் கோவிலின் விதிகளை ஆகமம் போல  நூலாக எழுதிவைக்கவில்லை. பாரம்பரியமாகவும் செவிவழியாகவும் அவை பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படியானால் நாளடைவில் அவை மாறிவிடவோ அல்லது தவறு ஏற்படவோ வாய்ப்பு உண்டே என உங்களுக்கு தோன்றுகிறதா? நமக்கே தோன்றுகிறது என்றால் பரசுராமருக்கு தோன்றாதா? 

எதிர்காலத்தில் பரசுராம பத்ததியில் கோவில் செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க அவர் உருவாக்கிய முறைதான் தேவப்பிரசன்னம். கோவில் நடைமுறை அல்லது விதிபற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் நடுநிலையான ஜோதிட குழுவை கொண்டு தேவப்பிரசன்னம் பார்க்க வேண்டும். பிரசன்னத்தில் இறைவனே நேரடியாக வந்து தனது கருத்துக்களை கூறுவார். இறைவனே வந்து கூறும்பொழுது சுண்டைக்காய் மனித சட்டங்கள் என்ன செய்துவிட முடியும்?

[தேவப்பிரசன்னத்தை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே செல்லவும் - தேவப்பிரசன்னம் ]

குருவாயூர் கோவிலில் பெண்கள் சல்வார் (கால்சட்டை) அணிந்து செல்லலாமா என கேள்வி எழுந்தவுடன், தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டது. பிரசன்னத்தின் விளக்கமாக கூடாது என முடிவு செய்து இன்னும் பின்பற்றி வருகிறார்கள்.

மேற்கண்டவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால், சபரிமலையில் தேவப்பிரசன்ன நடைமுறை எப்படி நடைபெறுகிறது என்பது ஊருக்கே வெளிச்சம். கோவிலின் நியமங்கள் பல கோளாருகள் பல வருடங்களாக இருக்கிறது. இறைவனின் சன்னிதியில் இருப்பவர்கள் நடுநிலையான பிரசன்னத்திற்கு தயராக இல்லை. அவர்கள் நோக்கம் ஒரு வருடத்திற்கு ஏலம் அதை பன்மடங்காக எப்படி திருப்பி எடுப்பது என்பதே..! 

தந்திரிகளும் அவர்களை இயக்கும் மந்திரிகளும் இப்படி முறையற்று இருக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தான் சாநித்யம் கெட்டுவிடும் என குதிப்பது முட்டாள்தனமானது.

கோவில் பொதுவான இடம். அங்கே ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் சில புதிய விஷயங்களை செய்வதற்கும் தேவப்பிரசன்னம் கேட்டுவிட்டே செயல்படுத்த வேண்டும். இப்படி செய்வது கேரளாவில் பல கோவில்களில் இருக்கும் நடைமுறையாகும். ஆனால் சபரிமலையில் தந்திரிகள் தேவஸம்போர்டு ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு விதிகளை காற்றில் பறக்கவிடுவார்கள் என்பது நடைமுறை. இவர்கள் தேவப்பிரசன்னத்தில் ஐய்யன் அயப்பனின் கருத்து என்ன என கேட்க முயற்சிப்பதில்லை..! 

அப்படியானால் இறைவன் எப்படி தன் சாநித்தியத்தை நிறுவுவார்? மிக எளிது, யார் சொன்னால் இவர்கள் கேட்பார்களோ அவர்களை வைத்து சொல்வார். அல்லது சொல்ல வைப்பார் என அறிக.

இதற்கு ஒர் உதாரணம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மகரஜோதி/விளக்கு தானாக தோன்றுகிறது என பல வருடங்களாக வதந்தி நிலவி வருகிறது. (இன்றும் சிலர் பரப்பி வருகிறார்கள்). தந்திரிகள் மற்றும் தேவசம் போர்ட்டின் கடமை, இது வதந்தி என கூறவேண்டும். இந்த பொய்யால் கூட்டம் வருகிறது என்பதால் அவர்களுக் கமுக்கமாக இருந்து விடுகிறார்கள். வழிபாட்டுக்கு இத்தனை ரூபாய் என பலகை வைக்கும் இவர்கள், மகரஜோதி என்பது எங்களால் ஏற்படுவது என கூறி ஒரு தகவல் பலகை வைக்கலாம் அல்லவா? செய்யமாட்டார்கள். காரணம் வருமானம். மேற்கண்ட விஷயம் உண்மை என்பதற்கு 1980க்கு பிறகு மகர விளக்கு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை உதாரணமாக காட்ட முடியும்.

இறைவன் சும்மா இருப்பாரா? ஒரு பொதுநல வழக்கு உயர்நீதி மன்றத்தில் வந்தது. அதில் தேவசம் போர்டு மெம்பர்கள் மற்றும் தந்திரியே வாக்குமூலம் கொடுத்தார்கள். 

”இது மகர விளக்கு நாங்கள் ஏற்றுவது. முன்பு ஒரு காலத்தில் மகரஜோதி ஏற்பட்டது - அதை நினைவுகூறும் வகையில் செயல்படுகிறோம்” என்றார்கள். 

2010ல் சபரிமலை உண்மைகள் தொடரில் இது மனிதர்களால் உருவாக்கும் செயல் என சுட்டிக்காட்டி இருந்தேன். பலர் எதிர்வினை செய்தார்கள் , மேலும் சிலர் என்னை சந்தேகித்தார்கள். சில வருடங்களுக்கு பின் நீதிமன்ற வழக்கில் தெளிவுபெற்றார்கள். மேற்கண்ட கருத்தை தான் நான் சுட்டிகாட்டுகிறேன், நாம் சொல்லாவிட்டால் இறைவன் சொல்லவைப்பார் என்று..!

சில விஷமிகளால் சபரிமலைக்கு பெண்களே செல்ல முடியாது என்ற கூற்று சிலவருடங்களாக பரவி வருகிறது. அது தவறு என நிரூபிக்கவே இந்த வழக்கு. பெண்கள் செல்ல முடியும் என்று எனது சபரிமலை உண்மைகள் தொடரிலும் நான் எழுதி இருக்கிறேன். கருப்பை இல்லை என சான்றிதழ் அளித்தால் இப்பொழுதும் செல்ல முடியும். கருப்பை தூய்மை கெட்டது, பெண் அசுத்தமானவள் என விஷமிகள் பரப்பும் செய்தி. எந்த கோவிலுக்கும் மாத ஓய்வில் பெண்கள் செல்ல அனுமதி இல்லை , அதற்கு காரணம் சுகாதாரம் என்பதே தவிர அசுத்தமானவள் பெண் என்பது அல்ல. மேலும் ப்ராண சக்தியை பற்றி அறிந்துகொண்டால் பெண்மையின் அடிப்படையான கருப்பை செயல்பாடு புரியும். ஆழ்ந்த ஆன்மீக சார்ந்த புரிதல் இல்லை என்றாலும் நாம் சுகாதார சார்ந்து புரிந்துகொள்வோம். 

சபரிமலையில் பெண்கள் அனுமதி இல்லை என்பது தவறான கோட்பாடு என எப்படி நமக்கு அய்யப்பன் புரியவைப்பார்? சபரிமலையில் தேவப்பிரசன்னம் நடுநிலையாளர்களால் நடத்தப்பட்டால் புரியும். இல்லையேல் நீதிமன்றம் தலையிடவே செய்யும்...!

முதலில் நாம் உறுதியாக கோவில் நடைமுறையை பின்பற்றினால் யாரும் தலையிடமாட்டார்கள் என்பதை சபரிமலை கோவிலில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வைக்கப்படுவார்கள்.

பெண்கள் அனுமதிக்கப்படுவது பாரம்பரிய முறையில் குறைபாடுவரும் என கூறுபவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி இது தான்.

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சரியான விரத அனுஷடானக்கள் பின்பற்றிய பின் தான் வருகிறார்களா?
ஒவ்வொரு ஊரிலும் குருசாமி நடைமுறையில் அவர்களை கண்காணித்து அனுப்பிவைக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? கருப்பைக்கு சான்றிதழ் கேட்கும் இவர்கள் ஐயப்ப பக்தர்களின் விரதத்திற்கு சான்றிதழ் கேட்பதில்லை. விரத குறைபாட்டுடன் வரும் பக்தர்களால் பாரம்பரியம் குறையாதா?

பம்பை முதல் சரங்குத்தி வரை அதற்கு மேலும் கான்கிரீட் பாதை அமைக்கும் பொழுது பாரம்பரியம் குறையாதா?

30 வருடங்களால டோலி தூக்கி செல்லும் நடைமுறை இருக்கிறதே இது பரசுராமர் சொன்ன பாரம்பரியமா? இருமுடியுடன் வந்து மேலே செல்ல முடியாத முதியவர்கள் பம்பா கணபதியிடம் விளக்கு ஏற்றி பிற ஐயப்ப பக்தர்களிடம் இருமுடியை கொடுத்து அனுப்புவார்களே அவர்கள் பாரம்பரியம் காப்பவர்களா? பணத்தை வீசி டோலியில் சென்று விஐபி தரிசனம் செய்பவர்கள் பாரம்பரியம் காப்பவர்களா?

முன்பு சிலகாலம் பெண்கள் கோவிலில் அனுமதிக்கப்பட்டு பதினெட்டாம் படி வழி செல்லாமல் பின்வழியாக சென்று இருக்கிறார்களே அது ஏன் நிறுத்தபட்டது? தேவப்பிசன்னம் வைத்த பிறகா? இல்லை பாரம்பரியம் கருதியா?

ஜாதிகள், மதங்கள் என எந்த கட்டுப்பாடும் இல்லமால் அனைவரும் சமம் என உணரும் சன்னிதி அருள் நிறை ஐயப்பனின் சன்னிதி. அங்கே எப்படி ஆண் பெண் வித்தியாசம் இருந்திருக்க முடியும் என நாம் சிந்திக்க வேண்டும். நடுநிலை ஜோதிட குழுவை கொண்டு தேவப்பிரசன்னம் வைத்து பெண்கள் கருப்பையுடன் அனுமதிக்கலாமா என கேட்டு முடிவு செய்ய வேண்டும். அப்படி முடிவு செய்த தீர்ப்பை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. [ உதாரணம் குருவாயூர் கோவில் ].

பாரம்பரிய முறையை நிலை நிறுத்த பாரம்பரிய வழிமுறைக்கு செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பை மாற்றகோரி மனுகொடுப்பது சரியான பாரம்பரியமா?

இப்படி கூறிக்கொண்டே போகலாம்... 
நிற்க..!

ஐயப்ப பக்தர்கள் என்பவர்கள் யார்?

விரதம் இருந்து இருமுடிகட்டி பதினெட்டாம் படி கடந்து ஐயப்பனை சந்திப்பவர்கள். நம் வாழ்க்கையில் ஏதேனும் சங்கல்பம் இருந்தால் இருமுடி சுமந்து இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்தால் நிச்சயம் நடக்கும் என நம்புபவர்கள். சாமியே நமஹ என சொல்லாமல் சாமியே சரணம் என சரணாகதி தத்துவத்தை கோஷமாக கொண்டவர்கள்.

அப்படி இருக்க, இப்பொழுது நாம் ஏன் பேரணி செல்லவேண்டும்? போராட்டம் செய்ய வேண்டும்? பாரம்பரியம் காக்கவேண்டும் சாநித்யம் காக்கப்பட வேண்டும் என சங்கல்ப்பம் செய்து விரதம் இருந்து இருமுடியுடன் ஐயப்பனிடம் அல்லவா சரணடைய வேண்டும்? 

அதைவிடுத்து சபரிமலை உரிமையை ’நான்’ காக்க போராடுகிறேன் என்றால் சரண கோஷத்திற்கு என்ன மதிப்பு? யாரோ இவர்களை தவறான பாதையில் செலுத்துகிறார்கள் என உணர வேண்டும்.

பல்வேறு இயற்கை சீற்றத்தாலும் , கொள்ளையர்களாலும் கோவில் சேதமான வரலாறு கொண்டது சபரிமலை. மூல விக்ரஹமே உடைக்கபட்டது. அப்படி இருந்தும் சாநித்யம் குறைந்ததா? ஐயன் அயப்பன் அங்கே முழுமையாக இருக்க இவர்கள் யார் ஏது செய்தாலும் அவரை அசைத்துவிட முடியுமா?

அவன் அருளால் அவன் தாழ் வணங்கி நில்லுங்கள். அவன் சாநித்யத்தை அவனே காப்பான். நாம் சுயநலம் விடுத்து சரணடைந்தால் அவனின் செயல் பல அற்புதங்களை நிகழச்செய்யும்.


தொடர்புடைய கட்டுரைகள்


Wednesday, November 25, 2015

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா?

வெகு காலமாக பேசாமல் தவிர்த்து வந்த கருத்து. இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் என் கருத்தை பிறர் கருத்தாக போட்டு விளம்பரம் தேடுவதை பார்த்தேன். அதனால் இங்கேயும் கருத்துரை இடுகிறேன்.

http://www.vikatan.com/news/article.php?aid=55482

முதல் வரி முதல் இந்த கட்டுரை அபத்தத்தையே பேசுகிறது..

உதாரணமாக

//இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது//

இந்திய கோவில்களில் இல்லை. தென் இந்தியாவில் அதுவும் தமிழக, கேரள கோவில்களில் மட்டுமே இந்த நிலை. வட இந்தியாவில் பெண்கள் இத்தகைய காலத்தில் கோவிலுக்குள் சென்று தங்கள் கைகளால் அபிஷேகமே செய்யலாம். இச்செய்தி எத்தனை போராளிகளுக்கு தெரியும்? இந்து மதம் தடை செய்கிறது புலம்பும் மதவாதிகள் திருப்பதியை தாண்டியதில்லை என புரிகிறது...!

தமிழகத்தில் இருக்கும் ஒரு அமைப்பு 80களில் பெண்களை அவர்களின் வழிபாட்டு தளத்தில் அனுமதிக்க ஆரம்பித்த பொழுது பெரிய புரட்சியாக பார்த்தார்கள். உண்மையில் நம் மரபில் இது எங்கும் தவிர்க்கவோ தடைசெய்யவோ சொல்லவில்லை..

சுகாதாரம் என்ற கருத்தாக்கத்தில் விலகி இருக்க சொன்னார்கள். நம் தென் இந்தியாவில் கோவில்கள் (ஷேத்திரம்) விசேடமானவை, வட இந்தியாவில் தீர்த்தம் ( நீர் தன்மைகள்) விஷேடமானது. தென்னக புகழ் பெற்ற கோவில்களில் கட்டமைப்பு சராசரியாக 2 சதுர கீமி இருக்கும். அதனுள் கழிப்பறை இருக்காது. அதனால் பெண்கள் ஆலயத்தில் நுழைந்து, தரிசன வரிசையில் காத்திருத்தல் என்பது அவர்களுக்கும் பிறருக்கும் சுகாதார பிரச்சனையை உண்டு செய்யும் என்பது உணர வேண்டும்.
இதே வட நாட்டில் தீர்த்தகட்டம் அருகே இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய முடியும்.

ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான கழிப்பறையை எதிர்பார்ப்பது அவசியம்.  இப்படி கட்டிட கலையின் உச்சத்தில் இருக்கும் கோவிலுக்கே கழிப்பறை சாத்தியமில்லை என்றால் ஒரு காலத்தில் வனமாக இருந்த  சபரிமலை பற்றி யோசிக்க வேண்டும்.

பழைய மரபை கண்மூடித்தனமாக பின்பற்றும் தற்கால தந்திரிகளை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இப்படியே போனால் சபரிமலைக்கு வரும் சாமிகள் வேன் மற்றும் பேருந்தை தவிர்த்து ஐயப்ப சாமி போல புலி மேல் வர சொன்னாலும் சொல்லுவார்கள்...!

கேரளாவில் மன்னார்சாலை என்ற நாக கோவில் உண்டு. இங்கே இளம் பெண்கள் தான் பூசாரிகள். ஆலயத்தின் ஒரு பகுதிக்கு மேல் ஆண்கள் அனுமதி இல்லை. காரணம் பூசாரிகள் உடை அணிவது இல்லை. இந்த கோவிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என யாரும் போராடுவதில்லை.. அது போல கோவிலின் மரபு அதன் தன்மையை மதிக்கும் பொறுப்பு நமக்கு அவசியம். எந்த மரபும் ஒன்று போல இருப்பதில்லை. காலத்தால் அனைத்தும் மாறும்.

ஃபேஸ் புக்கில் Happytobleed என்ற தலைப்பில் சபரிமலைக்கு எதிராக பேசுவது வட நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு துளி கூட புரிய போவது இல்லை. மேலும் இது மதம் சார்ந்த ஒரு விஷயம். மதம் கடந்து வர நாம் தயாராக வேண்டுமே தவிர மதத்தை நாம் ஏன் தயார் செய்ய வேண்டும்?

என்னிடம் ஆன்மீக பயிற்சி செய்ய வருபவர்களிடம் மாதவிடாய் தவிர்க்க சொல்லுவது இல்லை. ருத்ராக்‌ஷம் அணிந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அதனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அணியக்கூடாது என்றும் புனிதம் என்றும் கூறுவதை தவிர்த்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எல்லா காலத்திலும் அணியலாம் என கூறுகிறேன். இதற்கு முதலில் தடையாக இருப்பது பெண்கள் தான் , நான் கூறினாலும் இந்த விஷயத்தை செய்ய முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்..!

இந்த பிரச்சனையில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் ஊடக அறம், இணைய  போராளிகளின் அறிவு தரம், தம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாத மேல் நாட்டு மோகம். வேறு ஒன்றும் ஆரோக்கியமான விஷயம் நடந்துவிடவில்லை...!

தற்கால இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்தாமல் கலாச்சாரத்திற்கு எதிராக தூண்டிவிடுவது வெட்கக்கேடானது.

Wednesday, November 13, 2013

பகவான் செய்த தவறு...!

அந்த மஹானின் வாழ்க்கை சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தேன். மஹானின் பெயரை சொல்லும் பொழுது அவரின் பெயருடன் “பகவான்” என சேர்த்து சொன்னேன்.

என் மாணவர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் நீங்கள் எப்படி மனித உருவில் இருப்பவரை பகவான் என சொல்லலாம். இது மிகத் தவறான முன் உதாரணம்.... பகவன் பகவான் தான்.. மனிதனாக முடியுமா? இப்படித்தான் தன்னை தானே பலர் கடவுளாக்கி வியாபாரம் செய்கிறார்கள் என நீண்ட உரை நிகழ்த்தினார்.

அவர் முடிக்கும் வரை காத்திருந்தேன்.

பின்னால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப்படத்தை காட்டி... யார் இவர்? என கேட்டேன்.

நீங்க தான் ஸ்வாமிஜி என்றார்.

ஒரே ஒரு முறை என் உருவத்தை அச்சிட்டதால் இந்த பேப்பர் நான் ஆகும் பொழுது..பல முறை இறைவன் பிரவேசித்த உடல் பகவான் ஆகாதா ? என்றேன்..

 “பகவானே.....!” என்றார்...

Tuesday, September 25, 2012

தெய்வம் இருப்பது எங்கே?


இந்திய கலாச்சாரம் ஆன்மீக பின்புலத்தால் கட்டமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வழிபாடு என்பது அனைத்து மதத்திற்கும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பதால், வெவ்வேறு மதத்தவரும் தத்தம் வழிபாட்டுமுறைகளை செய்து ஆன்மீக நிலை அடைய முயல்கிறார்கள்.

வேதகால கலாச்சாரம் இந்தியாவில் வேர் ஊன்றி இருப்பதால் வேறு நிலப்பரப்பில் தோன்றிய மதங்கள் ஆனாலும் இந்தியாவிற்கு வந்தவுடன் அவைகள் வேதகால ஆன்மீக தன்மையை பெற்றுவிடுகிறது. 

கிருஸ்துவம் பாரத தேசத்திற்குள் வந்தவுடன் தன் இயல்பை நமக்காக மாற்றி பூசாரிகளும், சடங்குகளும், ஒளி ஏற்றுவதுமாக தன்னை சரி செய்துகொண்டது. 

இஸ்லாமும் இறைவன் ஒருவனே, அவனே வணங்கத்தக்கவன் என சொன்னாலும், நம் நாட்டிற்கு வந்தவுடன் பல இஸ்லாமியர்கள் நபியையும், இஸ்லாமிய ஞானிகளையும் வணங்க துவங்குகிறார்கள் என்பதை பார்க்கிறோம்.  அதனாலேயே இங்கே வேர்விடும் எந்த மதமும் தன்னை வேத மதமாக மாற்றுகிறது என்கிறேன்.

பலர் காப்பாற்ற துடிக்கும் இந்து மதத்திற்கும் வேதமதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறியவேண்டும். நம் கலாச்சாரத்தில் பலவேறு மதங்கள் வேதமதமாக மாற்றம் அடைந்தாலும், நம்மில் பலருக்கு வேத கால ஆன்மீக நிலை என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

கோவில்கள் மற்றும் ஆகம சாஸ்திரம் இவை தோன்றி அதிகபட்சம் 3000 ஆண்டுகளே ஆகிறது. அதற்கு முன் வேதகால ஆன்மீக நிலையில் மனிதன் இயற்கையையே வழிபட்டான். மஹாசக்தி, அக்னி, வருணன், வாயு மற்றும் இந்திரன் என அவனின் வழிபாடு இயற்கையை நோக்கியே இருந்தது. பிற்காலத்தில் இவை மாற்றம் அடைந்து தெய்வ வழிபாடு என்ற நிலைக்கும், ஆலய வழிபாடு என்ற நிலைக்கும் மேம்பட்டது.

ஆதி சனாதான தர்மத்திலிருந்து தற்சமயம் இருக்கும் சனாதான தர்ம நிலைக்கு வழிபாடுகள் மாற்றம் அடைந்ததும்  கோவில்களின் தோற்றம் உருவானது. 

தெய்வீக செயல்களுக்கு உருவங்கள் அளித்து மனிதன் வழிபடத்துவங்கிய காலக்கட்டம் ஆரம்பித்தது.தெய்வ வழிபாடு என்பது ஏதோ ஆலயம் தொழுதல் சாலவும் நன்று என்பதை போல நன்னெறி அல்லது ஒழுக்கம் சார்ந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் வழிபாடு என்பது கடமை சார்ந்தது, உரிமை சார்ந்தது மற்றும் வாழ்வியல் சார்ந்த ஒரு அறம் என பலருக்கு தெரிவதில்லை.

தெய்வ வழிபாடு இவ்வாறாக மூன்றாக பிரிக்கப்படுகிறது. நம் மொழி வழக்கில் சொல்வதானால் குலதெய்வம், ப்ரார்தனை தெய்வம், இஷ்ட தெய்வம் என வகைப்படுத்தலாம்.

வழிபாட்டு முறைகளை நாம் சிறு வயது முதல் கற்றுக்கொண்டாலும் நம் நம்பிக்கை மற்றும் மனதுக்கு அருகாமையில் ஒரு தெய்வத்தை வைத்திருப்போம். இதுவே இஷ்ட தெய்வம் என்பதாகும். மிக சிக்கலான காலத்திலும், எதிர்பாராது ஏதேனும் நடக்கும் சமயம் உங்கள் உதடு முனுமுனுக்கும் தெய்வம் இஷ்ட தெய்வம் என்று கூறலாம். சிலருக்கு பிள்ளையாரப்பா , பலருக்கு முருகா என்றும் ஜூசஸ் என முனுமுனுப்பதையும் நாம் பார்த்திருக்கலாம்.

ப்ரார்த்தனா தெய்வம் என்பது நம் செயல்களுக்கு எதிர்பார்த்து வணங்கும் தெய்வத்தை குறிப்பிடலாம். பரிட்சைக்கு போகும் முன் நம் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் அல்லது சரஸ்வதியின் ஞாபகம் வரும் அல்லவா? அது போல தேவைக்கு ஏற்ப வணங்கும் தெய்வத்தை ப்ரார்தனா தெய்வம் என்கிறோம். இஸ்லாமியர்கள் பழனிக்கு வருவதும், இந்து மதம் சார்ந்தவர்கள் நாகூர் அல்லது வேளாங்கன்னி போவதும் ப்ரார்த்தனா தெய்வத்தை வணங்க என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இஷ்ட தெய்வம், ப்ரார்த்தனா தெய்வம் என்பது என்ன என உங்களுக்கு புரிந்திருக்கும். எனக்கு பிடித்த தெய்வத்தை வணங்குவேன் என நீங்கள் உரிமையுடன் சொன்னால் அது இஷ்ட தெய்வம். என வாழ்க்கை முறைக்கு இது தேவை அதனால் வணங்குகிறேன் என்றால் அது ப்ரார்த்தனா தெய்வம். குலதெய்வம் என்பது என்ன தெரியுமா? உங்கள் கடமை..!

(தொடரும்)

Sunday, October 16, 2011

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, “சாமி எனக்கு ஒரு சந்தேகம்..” என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

“கால பைரவர்னா யாரு சாமி?”

“கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு..” என்றவாரு தொடர்ந்தேன்.

“இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில ‘வ’ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. ‘வ’ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க ‘பா’ என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின் அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின் சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களை உதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.”

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. “ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா?” என கேட்டேன்.

“இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன்” என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
“சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம்” என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து “யாரு அது..?” என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை” என கேட்டேன்.

“சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி....” என கூறி ஓவென அழுதான்.

“என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு”...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

“சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒரு கிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?”

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!

Thursday, May 26, 2011

தென்கைலாய திருப்பயணம் - 2011

அருள்பொருந்திய ஆன்மாக்களுக்கு,

ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.

இறையருளால் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலையில் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

வரும் ஜூன் மாதம் 10,11ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி) இரு நாட்கள் மலைப்பயணம் இருக்கும்.

தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.

இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!

இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.

எல்லோரும் கலந்து கொள்ளலாமா? - இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.

1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.

10ஆம் தேதி காலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (11ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.

பதினைந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 5ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.

ஆன்மீக அற்புதங்களை உணர நீங்கள் தயாரா?

Sunday, January 9, 2011

சபரிமலை -சில உண்மைகள் - பகுதி 8

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!

- மஹாகவி சுப்ரமணிய பாரதி

மேற்கண்ட பாடலுக்கு தமிழ் இலக்கியத்தில் பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டாலும், பக்தி ரீதியாக உணர வேண்டுமாயின் இவ்வாறு விளக்கலாம்.

கிருஷ்ணரின் கருமை நிறம் தன்னுள் நிறைந்திருப்பதால் காக்கையை பார்க்கும் பொழுது எல்லாம் கிருஷ்ணரின் கருமை நிறம் உணர்ந்திருக்கிறார் பாரதியார். மரங்களை பார்க்கும் பொழுதெல்லாம் ராமனின் பச்சை திருமேனி அவருக்கு தெரிகிறது. கேட்கும் ஒலியெல்லாம் கிருஷ்ணரின் குழலிசையாகவும், சூரிய வம்சத்தில் தோன்றிய ராமன் அக்னி ரூபமாக இருப்பதால் தீயை தீண்டும்பொழுது எல்லாம் ஸ்ரீராமனை தீண்டியது போல இருக்கிறது என்கிறார்.

கிருஷ்ண பக்தியும் ராம பக்தியும் மேலோங்கும் பொழுது பார்க்கும் கேட்கும் விஷயங்கள் எல்லாம் இறை ரூபமாகவே பாரதியாருக்கு இருந்ததை போல சபரிமலை விரதம் இருந்து பக்திமயத்தில் இருப்பவர்கள் தம்மையும் தம்மை சுற்றி உள்ள உயிரையும் இறைவனாக பாவிக்க துவங்குவார்கள். கவனியுங்கள் பாவிக்க துவங்குவார்கள், பாவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இந்த பாவனை இயற்கையாக வரவேண்டுமே தவிர கட்டாயத்தில் வரக்கூடாது.

சபரிமலை விரதம் இருப்பவரகள் தம்மையும், பிறரையும் ‘ஸ்வாமி’ என அழைக்கவேண்டும். பிறர் தன்னை ஸ்வாமி என அழைப்பதை எதிர்பார்க்க கூடாது. அனைத்திலும் இறைநிலை உணர அனைத்தையும் இறைவனாக அழைக்கும் பொழுது நம்முள் பக்தியும், ஆன்மீக உயர்வும் ஏற்படும். சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பிறரை ஸ்வாமி என அழைப்பதால் நாளடைவில் பிறரும் அவர்களை ஸ்வாமி என அழைக்கிறார்கள்.

உண்மையில் சபரிமலைக்கு மாலை போட்டிருப்பவரை நீங்கள் ஸ்வாமி என அழைக்க வேண்டும் என்பதில்லை. விரதம் இருப்பவர் தான் அனைவரையும் ஸ்வாமி என அழைக்க வேண்டும்..!

தற்சமயத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டவுன் தன் சகோதரர்களே தன்னை ஸ்வாமி என அழைக்கவில்லை என கோபித்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். துறவு நிலையில் இருப்பவர்கள் தன்னை அடையாளம் காணாமல் இருக்க செய்யும் முக்கிய யுக்தி தன் பெயரையும் உடல் அடையாளத்தையும் மறைப்பது. அதில் ஒன்றுதான் துறவு பெற்றவர்கள் பெயரை மாற்றம் செய்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே சபரிமலை செல்பவர்கள் தங்களை ஸ்வாமி என அழைத்துக்கொள்வதும் பிறரை அவ்வாறு அழைப்பதும் என்பதை உணர வேண்டும்.

மேற்கண்ட வரிகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று புரிந்திருப்பீர்கள். சாமி என்று அழைப்பார்கள் என கூறவில்லை. ஸ்வாமி என்பார்கள் என்கிறேன். ஸ்வாமி என உச்சரிக்கும் பொழுது உங்களின் சுவாசத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் உணரலாம். உங்களின் வாயின் அடிப்பகுதியில் இருந்து இந்த சப்தம் எழும். ஆனால் சாமி என்றீர்கள் ஆனால் உங்கள் உதட்டளவில் மட்டுமே இந்த சப்தம் வரும்.

சபரிமலை செல்லும் சிலர் பிறரை கூப்பிடும் செயலில் கொடுமையை பார்த்தீர்களானால் புரியும்.. “சாமீ...சாமீ...சமே..” என அவர்கள் கூப்பிடும் பொழுது நம் பாக்கெட்டில் சில்லரை தேட தோன்றும்..!

சபரிமலை விரதம் என்பது துறவின் ஒரு துளி என்பதால் துறவு என்பதை ஏற்க குரு என்பவர் அவசியம். சுயமாக துறவு என்பதை ஏற்றால் வெகுநாளுக்கு தாக்கு பிடிக்காது. மனம் கூறும் வழிகளை எல்லாம் பின்பற்ற தோன்றும். குரு இருந்தால் அவர் வகுத்த பாதையில் அடையாளங்களை தொலைத்து உயிருடன் பிணமாக வாழ்வதே துறவு. அத்தகைய துறவை சபரிமலை விரதம் என்ற பெயரில் குறைந்த காலத்திற்கு கடைப்பிடிக்கும் பொழுது குரு அவசியம்.

அதனாலேயே குரு ஸ்வாமி ஒருவர் நமக்கு மாலை அணிவித்து - அவரே விரதகாலத்தில் வழி நடத்தி - இருமுடியும் கட்ட வைத்து - சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நியதி வகுத்தார்கள். இன்று பலர் குரு ஸ்வாமியின் உதவியின்றியே தானாக செல்லுகிறார்கள். இங்கே சபரிமலை சன்னிதானத்திற்கு பம்பை நதியிலிருந்து கையை பிடித்து கூட்டி செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில் வழி நடத்த என சொல்லவில்லை. ஆன்மீக விஷயங்களை பற்றி கூறியும், சபரி சாஸ்தாவின் மேன்மையை பற்றி கூறியும் நம் சபரிமலை பயணத்தை ஆன்மீகமாக மாற்றும் குருஸ்வாமி அவசியம்.

சித்தர்கள் எத்தனை பேர் என்றால் பதினெட்டு என்பார்கள். உண்மையில் பதினென் சித்தர்கள் என்பது 18 நபர்களை குறிப்பதில்லை. சித்தர்கள் எண்ணிக்கையில்லாமல் அனேகர் இருக்கிறார்கள். பதினெட்டு என்பது சித்தர்களின் சித்த நிலையை குறிக்கும். நம் ஐம்பொறிகளையும், அதன் செயல்களையும் இணைத்தால் பத்து. அவற்றை கடந்தால் அஷ்டமா சித்தி கிடைக்கும் என்பதையே 18 என்ற எண்ணிக்கை காண்பிக்கிறது.

யோக சித்திகள் என்பதே சபரிமலையில் 18 படிகளாக இருக்கிறது. இத்தொடரில் முன்பு குறிப்பிட்டது போல பதினெட்டாம் படியை கடக்க விரதம் இருந்து இருமுடியுடன் செல்ல வேண்டும். ஆனால் இறைவனை காண இருமுடி தேவை இல்லை. இக்கருத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு யோக சித்தி வேண்டுமானால் அதற்கு கடுமையான விரதம் மற்றும் பயிற்சிகள் அவசியம்.

ஆனால் இறைவனை அடைய பக்தி மட்டுமே போதுமானது. யோகசித்தியுடன் இறைவனை அடைவது மிகவும் உன்னதமானது. இந்த அற்புத கருத்தை கூறிப்பிடுவது தான் சபரிபீடம் என்னும் ஆன்மீக ஸ்தலத்தின் நோக்கம்.

எந்த காலத்திலும் ஆன்மீக ஆற்றல் என்ற சிகரம் குறையாமல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை அடைய மனிதன் தன் அறியாமையால் வேறு பாதைகளுக்கு செல்வதால் சிகரத்தை அடைய முடியாமல் வீணாகிறார்கள். சபரிமலையும் தன்னகத்தே ஆற்றலை கொண்டிருந்தாலும், தங்களின் அறியாமையாலும், சோம்பேறித்தனத்தாலும் மற்றும் ஒழுக்கமின்மையாலும் ஆற்றலை பெறமுடியாமல் எத்தனையோ பேர் வீணாகிறார்கள்.

இத்தனை நாள் உங்களிடம் சில உண்மைகளை பகிர்ந்து கொண்டேன். இக்கருத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்து உண்மையை அறியுங்கள். பிறகு நீங்கள் சபரிமலை செல்லும் பொழுதும் உங்களின் நண்பர்கள் செல்லும் பொழுதும் இக்கருத்தை விளக்கி பயன்பெறுங்கள்.

சபரிமலையில் எத்தனையோ விஷயங்கள் பகிர்ந்துகொள்ள இருந்தாலும் முக்கியமாக சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். யோக சாஸ்தாவின் அருள்மழை அனைவரின் மேலும் பொழியட்டும்.

ஸ்வாமியே சரணம்

Saturday, January 1, 2011

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 7

சபரிமலை விரதம் இருப்பது துறவு நிலையின் சின்ன சேம்பிள் என்றேன் அல்லவா? அப்படிப்பட்ட துறவு நிலையை பலர் புரிந்து கொண்ட விதம் மிக தவறாக உள்ளது.

துறவின் அடிப்படையே எளிமை. குறைவான பொருட்களை தன்னிடம் வைத்திருப்பது. அதிக பணம் மற்றும் பணம் மூலம் கிடைக்கும் சுகபோகங்களை விடுவது என்பது மிக அவசியம்.

ஆனால் நடைமுறையில் சபரிமலை செல்லும் அனேகரிடம் எளிமை கிலோ என்ன விலை என கேட்க வேண்டி இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் வாகனம் துவங்கி அவர்களின் உணவு முறை வரை அனைத்திலும் ஆடம்பரம். உடை கூட மூன்றுக்கு மேல் இருக்க கூடாது என விரதம் இருப்பதே சாஸ்தா விரதம்.

ஆனால் கட்டுநிறை என்ற பெயரில் அவர்களின் ஆடம்பர திருவிழா எங்கும் நடைபெறுகிறது. அது போக அன்னதானம் என்ற பெயரில் எளிய உணவு அளிக்காமல், ஏதோ நட்சத்திர ஹோட்டலின் மெனுவை போட்டு தாங்கள் பெரிய ஆடம்பர பிரியர்கள் என்ற ஆணவத்தையும் காட்டுகிறார்கள்.

உண்மையில் கட்டுகட்டி செல்லும் பொழுது அதில் தேங்காய்களும் அதில் நெய் நிறைத்து எடுத்து செல்லுவது போன்ற நிகழ்வுகள் எதற்காக?

சபரிமலை கட்டுகட்டி செல்லுவதில் எடுத்து செல்லும் அனேக பொருட்கள் உலர் பழ வகையை சார்ந்தது. சபரி மலை முன்பு மிகவும் காடு சார்ந்த இடமாக இருப்பதால் சபரிமலைக்கு செல்லுபவர்கள் எத்தனை நாட்கள் காடுகளில் இருந்தாலும் உணவு தேவையை சமாளிக்கவே உலர் பழவகைகளை( Dry Fruits) கட்டுகட்டும் பொழுது அதில் இணைக்கிறார்கள்.

காடு அல்லது மலைப்பயணத்தில் செல்லும் பொழுது உலர் பழவகைகளை எடுத்து சென்றால் எடை குறைவாகவும் அதே நேரம் அதிக நாட்கள் வைத்து உண்ணக்கூடிய வகையிலும் அமையும்.நெய், தேன் ஆகியவை மிகவும் முக்கிய பொருளாக ஆயுர்வேத மருத்துவத்திலும், பூஜை பொருட்களிலும் இருப்பதற்கு காரணம், இப்பொருட்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

அரிசி, தேங்காய், உலர் பழங்கள், நெல் பொரி,நெய் மற்றும் தேன் ஆகியவை பள்ளிக்கட்டில் சேர்ப்பதற்கு காட்டுவழி பயண முறைகளே காரணம். நாம் நடுவழியில் மாட்டிக்கொண்டாலும் இப்பொருட்களை உண்டு பலநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் இவற்றை தூக்கி பல கிலோமீட்டர் நடப்பதில் சிரமமும் இருக்காது.

இவ்விஷயங்கள் அனைத்தும் பெருவழி பயணம் செல்லுபவர்களுக்கே பொருந்தும். பம்பை வரை வாகனத்தில் சென்று அங்கே இட்லி தோசை சாப்பிட்டு உடல் வளையாமல் 4 கிலோமீட்டர் பயணம் செய்பவர்களுக்கு எதற்கு உலர் பழங்கள்?

4 கிலோமீட்டரில் காட்டில் தொலைந்தாலும் அங்கே ஏகப்பட்ட கடைகள் உணவு வழங்குவதற்கு இருக்கிறதே? இன்னும் ஏன் முட்டாள்தனமாக கட்டு கட்டுகிறேன் என அனைத்தையும் தூக்கிக்கொண்டு செல்லுவது? எத்தனை பொருட்களை கொண்டு சென்றாலும் சபரிமலையில் நெய்யை மட்டுமே அபிஷேகப்பொருள் எனும் பொழுது நாம் ஏன் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்?

சபரி பீடம் எனும் சாஸ்தா கோவில் இருக்கும் இடம் வரை மசால் தோசை கிடைக்க இவர்கள் இன்னும் கட்டுக்கட்டி செல்லுவதை பார்த்தால் எத்தனை முட்டாள் தனமாக இவர்கள் செல்லுகிறார்கள் என்பதை உணரலாம். கேரளாவில் இருந்து சபரிமலை வருபவர்கள் சின்ன துண்டில் ஒரு தேங்காயை முடிந்துகொண்டு வருவதை சபரிமலை சென்றவர்கள் பார்த்திருக்கலாம். மிக எளிமையாக வருவார்கள். ஆனால் தமிழகம் மற்றும் பிற ஊரிலிருந்து வரும் ஆட்கள் ஒரு சின்ன தேங்காய் மண்டியை தலையில் சுமந்து வருவார்கள்.

அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ நெய்யை ஒரு இருமுடி துணியில் கட்டி எடுத்து சென்று அபிஷேகம் செய்து வருவது சரியான புத்திசாலி பக்தனுக்கு அழகு.

இவர்கள் செய்யும் செயல் எப்படி இருக்கிறது என்றால் வேற்றுகிரகத்திற்கு செல்லும் பொழுது ஆக்ஸிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு விண்வெளி வீரர்கள் செல்லுகிறார்கள், அந்த கிரகத்தில் பூமியை போல ஆக்ஸிஜன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகும் சிலிண்டரை கட்டிக்கொண்டு செல்லலாமா? நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

நெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன? நெய் என்பது முக்தி என்ற நிலையை குறிக்கிறது. பால் என்ற நிலையில் இருந்து தயிராகி, வெண்ணை என்ற நிலை அடைந்து நெருப்பால் உருக்கப்பட்டு நெய் என்ற நிலையை அடைந்த பிறகு மாற்றம் அடையாமல் நிலைத்திருப்பது நெய்யின் குணம்.

பால் போன்ற பக்தன் தன்னை பக்தியால் செம்மையாக்கி நெய் என்ற முக்தி நிலைக்கு உயர்த்த வேண்டும். அப்பொழுது பிறவாநிலையை அடையலாம் என்ற உயர் தத்துவத்தை சபரிமலை பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.

இக்கருத்தை உணர்ந்து நெய் கொண்டு அபிஷேகம் செய்பவர்கள் விரைவில் தாங்களே முக்தி எனும் நெய்யாகிவிடுவார்கள் அன்றோ?

அது எல்லாம் சரி... சபரிமலை இந்த இருக்கு இதற்கு செல்ல குருசாமி அவசியமா? அது என்ன குருசாமி? மாலை போட்டவர்களை எல்லாம் சாமி சாமி என சொல்ல வேண்டும் என கட்டளை வேறு..

நேற்று வரை பொய் சொல்லி கெடுதல் செய்து திரிந்துகொண்டு இருந்தவன் எல்லாம் இன்று மாலை போட்ட காரணத்தால் அவனை சாமி என கூப்பிட வேண்டுமா? என்ன கொடுமை இது?

(சரணம் தொடரும்)


Saturday, December 11, 2010

சபரிமலை - சில உண்மைகள் பகுதி 6

உடை மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல் என்னும் தளத்தில் வேலை செய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும் விரதம் மனம் என்ற தளத்தில் வேலை செய்யும்.

உடலும் மனமும் தூய்மை ஏற்பட்டால் எப்பொழுதும் சுய தூய்மையுடன் விளங்கும் ஆன்மாவை காண முடியும் என்பதே இதன் அடிப்படை. பழக்கங்கள் என நான் இங்கே கூறுவது வாழ்வியல் முறைகளைத்தான்.

எப்படி விரதகாலத்தில் நடந்துகொள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்களை கீழே குறிப்பிடுகிறேன்.

தினமும் இரண்டு வேளை கட்டாயம் குளிக்க வேண்டும். உணவு அருந்தும் முன் குளித்திருப்பது அவசியம். காலை 4 முதல் 5 க்குள் அல்லது மாலை 5 முதல் 6க்குள் குளிக்க வேண்டும்.

சோப் போன்ற கெமிக்கல் வஸ்துக்களை பயன்படுத்தாமல் மண் அல்லது காய்ந்த பசும் சாணத்தை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் கேசங்களில் பயன்படுத்தக்கூடாது.

கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் வைப்பது உங்களின் விருப்பம்.

செருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காலை 4 மணி வரைக்குமே தூங்குவதற்கான நேரம். படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல், ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். மிகவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கெட்டியான கம்பளியை விரிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மெத்தையை முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இடுப்பில் கட்டிய வேஷ்டி போக உடலில் போர்த்திய வேஷ்டியை தூங்கும் பொழுது போர்வையாக பயன்படுத்தலாம். உங்களின் கைகளை விட வேறு நல்ல தலையணை தேவையா?

புகைப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும் பொழுது புகைப்பிடிப்பதை பார்க்கிறோம். கேவலமாக விரதம் இருப்பவர்களுக்கு இவர்களை விட உதாரணம் சொல்ல முடியாது. தங்களிடம் உள்ள சின்ன பழக்கத்தை விட முடியாத அளவுக்கு மிகவும் தரம் குறைந்த வைராக்கியம் கொண்டவர்கள்.

ஒரு மதபோதகரிடம் ஒரு இளைஞர் கேட்டான், “ஐயா புகைபிடிப்பது தவறா?”
போதகர் சொன்னார், “மிகவும் கொடிய பாவம். புகைப்பிடிப்பவன் நரகம் அடைவான்”
மற்றொரு இளைஞர் போதகரிடம் கேட்டான், “ஐயா நான் தொடர்ந்து புகைப்பிடிப்பவன், புகைப்பிடிக்கும் பொழுது எல்லாம் இறைவனை தொடர்ந்து நினைக்கிறேன். இது சரியா?”
போதகர் சொன்னார், “இறைவனை நினைக்கும் எந்த காரியமும் தவறில்லை”

இப்படிபட்ட பக்தர்களும் அவர்களை வழிநடத்துபவர்களும் கொண்ட உலகம் இது. போதகருக்கு இறைவனை நினைக்க வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இளைஞனுக்கோ புகைப்பிடித்தல். இருவரும் ஒரு புள்ளியில் தங்களின் சுயநலத்தை இணைக்கிறார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்தை உங்களின் சுகபோகத்திற்கு தக்க வளைக்கலாம், அதனால் நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை. இழப்பது தான் அதிகம்.

விரத காலத்தில் ஆண்டவன் என்ற பெரிய இலக்கை அடைய தங்களின் சின்ன விஷயங்களை விட தயாராகாதவர்கள், வாழ்க்கையில் பெரிய இலக்கை சின்ன சுக போகத்தால் நழுவ விடுவார்கள் என்பது நிச்சயம்...!

இப்படி விரதகாலத்தை பற்றி கூறுகிறீர்களே இது எந்த புத்தகத்தில் இருக்கிறது? இதை யார் வரையறுத்தது என நீங்கள் கேட்கலாம்.

இந்த வழிமுறை துறவு என்ற நிலையின் அடிப்படை. ஆத்மாஸ்ரமம் என்ற துறவு நிலையே விரதமாக சபரிமலை விரதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இம்முறை மிக உயர்ந்த யோக வாழ்க்கையின் துறவு நிலை.

நாம் இனிப்பு கடைக்கு சென்று அங்கே விற்கும் இனிப்புகளை வாங்கலாமா இல்லையா என குழப்பம் வரும் சமயம் கடைக்காரர் ஒரு பீஸ் இனிப்பை நமக்கு தருவார். அதன் சுவை நன்றாக இருந்தால் அதை வாங்குவோம் அல்லது விட்டு விடுவோம் அல்லவா?

அதுபோல நம் கலாச்சாரத்தில் துறவு என்பது கட்டாயமாக்கப்படவில்லை. இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார். இது பிடித்திருக்கிறதா என்றால் இதையே வாழ்க்கையாக்கிக்கொள் என்கிறது சபரிமலை சாஸ்தா விரதம்.

அப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திலேயே தன்னையும் பிறரையும் ஏமாற்றுபவர் முழுமையான வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தால் என்ன செய்வார் என புரிகிறதா? இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப செய்தியான விடியோனந்தாவை கூறலாம்.

பலர் இந்த தொடரை படித்துவிட்டு சபரிமலை யோகியின் இருப்பிடம் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அங்கே பல சன்னதிகளும், சடங்குகளும் நடைபெறுகிறதே என கேட்கிறார்கள்.

68 வருடங்களுக்கு முன்னால் சபரிமலை எப்படி இருந்தது என்ற புகைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது பாருங்கள். திருவாங்கூர் ராஜா தான் சபரிமலைக்கு செல்லும் பொழுது 1948ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் இது.


சபரிமலை கோவிலின் அளவை பாருங்கள். தற்சமயம் இருப்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பது புரியும். மிக எளிய, தனிமை நிறைந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபரிமலை.

தற்சமயம் நிலையை இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது. இச்சூழலை திரும்ப அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால இயந்திரத்தை கண்டறிந்தால் மகிழ்வேன். கோவிலை சுற்றி இருக்கும் மரங்களையும் அதன் வளர்ச்சியையும் பாருங்கள். என்னவென்று சொல்ல?

கட்டுகட்டுவது என்றால் என்ன?

சிலர் அன்னதானத்தை ஒரு கட்டுகட்டிவிட்டு செல்லுவார்கள் அதை சொல்லவில்லை. :))

சபரிமலைக்கு கட்டு கட்டி செல்லுகிறார்களே இது ஏன்?

(சரணம் தொடரும்)