
திருவண்ணாமலை ஒரு காந்தம் போன்றது. ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும். திருவண்ணாமலைக்கு ஒருமுறைமட்டும் தான் சென்றேன் என்பவர்கள் அரிது. ஒன்று போகாதவர்கள் இருப்பார்கள். இல்லை நிறைய முறை போனவர்கள் இருப்பார்கள். ஒரு முறை மட்டும் கிரிவலம் சென்றவர்கள் என யாரையும் காண முடியாது. கிரிவலத்திற்கு அப்படி ஒரு அசாத்தியமான காந்த சக்தி உண்டு.
சூரியன் வெடித்து சிதறி சூரியமண்டலமாக உருவாகும் பொழுது பூமி நெருப்பு கோளமாக இருந்தது. பிறகு கால மாற்றத்தால் குளிர்ந்து இறுகி பூமியாக மாற்றம் அடைந்தது. அப்படி உருவாகும் பொழுது முதலில் நெருப்பிலிருந்து உருவான இடம் திருவண்ணாமலை. அருணாச்சல மஹாத்மியம் எனும் புராணம் இதை விளக்குகிறது. நவீன காலத்தில் அருணாச்சல மலையை அகழ்வாராய்து மிகப்பழமையான கல் என உறுதி செய்திருக்கிறார்கள்.
அருணாச்சல மலை 800 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் அதன் கீழ்பகுதி எவ்வளவு தூரம் ஆழம் செல்லும் என்பது கண்டறிவது கடினம். பிரம்மாவை போல இல்லாமல் ஆணவம் இன்றி செல்லுபவர்க்கு அருணாச்சலத்தின் முடி தெரிந்துவிடுகிறது. ஆனால் மஹாவிஷ்ணுவைப் போல அடியை இன்றும் யாரும் காண முடியவில்லை.
நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்சி அளித்ததாம். கிருதா யுகத்தில் தங்கமாகவும், த்ருதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபர யுகத்தில் செம்பாகவும், கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் என அருணாச்சல மஹாத்மியம் கூறுகிறது. இக்கருத்தை உண்மையாக்கும் வகையில் அருணாச்சல மலையின் சில கற்கள் ஈரக்காற்றில் துருப்பிடித்து இருப்பதை காண முடியும். நம் உடையில் காவியை பூசி முனிவராக்கும் இறைவனின் திருவினையோ என நினைக்கத் தோன்றும்.
அத்தகைய இறைவனின் இருப்பிடத்திற்கு எனக்கு இறைவன் அளித்த பணியாக பயணத்திற்கு தயாரானேன். இரண்டு ஜோடி வேட்டிகள் மற்றும் ஒரு புத்தகம் இது மட்டுமே எனது பையில் இருந்தது. எனது உடமைகள் முழுமையாக சோதனையிட்டு எண்ணிடம் பணம் இல்லை என்பதை எனது நண்பர்கள் முடிவு செய்து கொண்டார்கள். கோவை பேருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு சிறிது தூரம் இருக்கும் கடையில் நின்று என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
இறைவன் மேல் இருக்கும் ஆழமான விஸ்வாசத்தில் கிளம்பிவிட்டேன். இருந்தாலும் பேருந்து நிலையத்தில் படபடப்பு என்னை பற்றிக்கொண்டது. திருவண்ணாமலை சென்று விட்டால் பிரச்சனை இல்லை. அங்கே பரந்துவிரிந்த உலகம் ஏதாவது மரத்தடியில் இருந்துகொள்ளலாம். ஆனால் இங்கிருந்து அங்கே செல்ல வேண்டுமே? பேருந்தில் பணம் இல்லாமல் போக முடியுமா? எனக்கு குழப்பம் பற்றிக்கொண்டது. என்னை வழியனுப்ப வந்தவர்கள் தூரத்தில் நின்று வேடிக்கைபார்த்தது மேலும் ஒரு படபடப்புக்கு காரணானது.
மனதுக்குள் இறைவனை வேண்டிய படியே பேருந்துக்கு அருகில் சென்றேன். திடிரென ஒரு வயதானவர் குறிக்கிட்டு “சாமீ எங்க போறீங்க” என்றார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. திருவண்ணாமலைக்கு என்றேன். அப்படியா நான் சேலம் போறேன். உங்க ஆசிர்வாதத்தால என் பொண்ணு கல்யாணம் நடந்துச்சு , இவர்தான் என் மாப்பிளை என அவர் காட்டியது நான் ஏற இருந்த திருவண்ணாமலை பேருந்தின் நடத்துனரை. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் விட்டு போனது. இறைவா என்னை அழைத்துவந்து அவமானபடுத்துகிறாயே.. என கலங்கினேன்.
என்னிடம் பணம் இல்லை என்பது தெரிந்து என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்ற எண்ணம். பேருந்து தூரத்தில் இருந்தது. இந்த பெரியவரை தவிர்க்க இரண்டடி தள்ளி நின்று வேறு திசையில் வேடிக்கை பார்க்க துவங்கினேன். அந்த பெரியவரும் நடந்து வேறு திசைக்கு சென்றுவிட்டார். அந்த திருவண்ணாமலை பேருந்து மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கியது.
மீண்டும் வந்த அந்த பெரியவர் சாமீ பஸ்சு போகுது ஏறலையா? என்றார். இல்லை அடுத்த பஸ்ஸில போறேன் என்றேன். இல்ல சாமீ உங்களுக்காக டிக்கெட் போட்டுட்டேன் , இந்த பஸ்ஸிலயே போங்க என்றவாறே கையில் பேருந்து பயண சீட்டை திணித்தார். பேருந்து வேகம் எடுக்கவே ஓடி சென்று ஏறினேன். என்னை கையசைத்து வழியனுப்பினார் அந்த பெரியவர். தூரத்தில் என் நண்பர்கள் என்னை வியாப்புடன் பார்த்தவாறே இருக்க பேருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணித்தது. டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து பிறகு நிம்மதியாக உறங்கிப்போனேன்.
காலை நான்கு மணிக்கு திருவண்ணாமலையின் தென்பகுதியில் ரமணாஸ்ரமம் முன் இறங்கினேன். நடத்துனரை பார்த்து ரொம்ப நன்றிங்க, உங்க மாமனாருக்கும் நன்றி சொன்னேனு சொல்லுங்க என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தவர். யாரு மாமனாரு? என் மாமனாரு எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே காலமாயிட்டாரு. ஏன் சாமி காலையில குழப்பறீங்க என்றார்.
அவருக்கு குழப்பமான விஷயம் எனக்கு புரிந்தது....
பேருந்து சென்றவுடன் அருணாச்சல மலையை பார்த்து நன்றியுடன் வணங்கினேன். திருவண்ணாமலையில் இது ஒரு சிறப்பு. நகரின் எந்த மூலையிலிருந்தும் இறைவனை தரிசிக்கலாம்.

ரமணாசிரமம் வாயிலில் இறங்கி வெளியில் இருந்தவாறே ரமணரை தொழுதேன். மெல்ல நடந்து அந்த பிரம்ம முஹூர்த்த வேளையில் அக்னி தீர்த்தம் எனும் குளத்திற்கு சென்று நீராடினேன்.
உலகின் எட்டு திக்கும் ஒவ்வொரு தேவதைகள் காப்பதாக புராணம் கூறுகிறது. அவர்களை அஷ்டதிக்கு பாலகர்கள் என்பார்கள். என்திசை தேவர் என்று பதிகங்களிலும் கூறுவர். திருவண்ணாமலையில் எட்டுதிசைக்கு உரிய தேவர்களையும் லிங்க ரூபமாகவே வைத்திருக்கிறார்கள். அது தவிர ஒன்பதாவது லிங்கமாக அருணாச்சல மலை நடுநாயகமாக நகரை சக்தியூட்டி வருகிறது.
அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு அங்கே இருக்கும் அக்னி லிங்கத்தை வணங்கி எனது பிரம்ம முஹூர்த்த கிரிவலத்தை ஆரம்பித்தேன்.கிரிவலம் வர ஏற்ற காலம் எது என்றால் பிரம்ம முஹுர்த்தம் என்பேன். எட்டு திசையில் தென் திசை எமன் என்ற மரண தேவனால் நிர்வகிக்கப்படுகிறது. மெல்ல நடக்க துவங்கினேன்.
தென்திசைக்காவலர் எமனும் என்னுடன் கிரிவலம் வருகிறார் என்று அப்பொழுது எனக்கு தெரியாது.
சூரியன் வெடித்து சிதறி சூரியமண்டலமாக உருவாகும் பொழுது பூமி நெருப்பு கோளமாக இருந்தது. பிறகு கால மாற்றத்தால் குளிர்ந்து இறுகி பூமியாக மாற்றம் அடைந்தது. அப்படி உருவாகும் பொழுது முதலில் நெருப்பிலிருந்து உருவான இடம் திருவண்ணாமலை. அருணாச்சல மஹாத்மியம் எனும் புராணம் இதை விளக்குகிறது. நவீன காலத்தில் அருணாச்சல மலையை அகழ்வாராய்து மிகப்பழமையான கல் என உறுதி செய்திருக்கிறார்கள்.
அருணாச்சல மலை 800 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் அதன் கீழ்பகுதி எவ்வளவு தூரம் ஆழம் செல்லும் என்பது கண்டறிவது கடினம். பிரம்மாவை போல இல்லாமல் ஆணவம் இன்றி செல்லுபவர்க்கு அருணாச்சலத்தின் முடி தெரிந்துவிடுகிறது. ஆனால் மஹாவிஷ்ணுவைப் போல அடியை இன்றும் யாரும் காண முடியவில்லை.
நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்சி அளித்ததாம். கிருதா யுகத்தில் தங்கமாகவும், த்ருதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபர யுகத்தில் செம்பாகவும், கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் என அருணாச்சல மஹாத்மியம் கூறுகிறது. இக்கருத்தை உண்மையாக்கும் வகையில் அருணாச்சல மலையின் சில கற்கள் ஈரக்காற்றில் துருப்பிடித்து இருப்பதை காண முடியும். நம் உடையில் காவியை பூசி முனிவராக்கும் இறைவனின் திருவினையோ என நினைக்கத் தோன்றும்.
அத்தகைய இறைவனின் இருப்பிடத்திற்கு எனக்கு இறைவன் அளித்த பணியாக பயணத்திற்கு தயாரானேன். இரண்டு ஜோடி வேட்டிகள் மற்றும் ஒரு புத்தகம் இது மட்டுமே எனது பையில் இருந்தது. எனது உடமைகள் முழுமையாக சோதனையிட்டு எண்ணிடம் பணம் இல்லை என்பதை எனது நண்பர்கள் முடிவு செய்து கொண்டார்கள். கோவை பேருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு சிறிது தூரம் இருக்கும் கடையில் நின்று என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
இறைவன் மேல் இருக்கும் ஆழமான விஸ்வாசத்தில் கிளம்பிவிட்டேன். இருந்தாலும் பேருந்து நிலையத்தில் படபடப்பு என்னை பற்றிக்கொண்டது. திருவண்ணாமலை சென்று விட்டால் பிரச்சனை இல்லை. அங்கே பரந்துவிரிந்த உலகம் ஏதாவது மரத்தடியில் இருந்துகொள்ளலாம். ஆனால் இங்கிருந்து அங்கே செல்ல வேண்டுமே? பேருந்தில் பணம் இல்லாமல் போக முடியுமா? எனக்கு குழப்பம் பற்றிக்கொண்டது. என்னை வழியனுப்ப வந்தவர்கள் தூரத்தில் நின்று வேடிக்கைபார்த்தது மேலும் ஒரு படபடப்புக்கு காரணானது.
மனதுக்குள் இறைவனை வேண்டிய படியே பேருந்துக்கு அருகில் சென்றேன். திடிரென ஒரு வயதானவர் குறிக்கிட்டு “சாமீ எங்க போறீங்க” என்றார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. திருவண்ணாமலைக்கு என்றேன். அப்படியா நான் சேலம் போறேன். உங்க ஆசிர்வாதத்தால என் பொண்ணு கல்யாணம் நடந்துச்சு , இவர்தான் என் மாப்பிளை என அவர் காட்டியது நான் ஏற இருந்த திருவண்ணாமலை பேருந்தின் நடத்துனரை. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் விட்டு போனது. இறைவா என்னை அழைத்துவந்து அவமானபடுத்துகிறாயே.. என கலங்கினேன்.
என்னிடம் பணம் இல்லை என்பது தெரிந்து என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்ற எண்ணம். பேருந்து தூரத்தில் இருந்தது. இந்த பெரியவரை தவிர்க்க இரண்டடி தள்ளி நின்று வேறு திசையில் வேடிக்கை பார்க்க துவங்கினேன். அந்த பெரியவரும் நடந்து வேறு திசைக்கு சென்றுவிட்டார். அந்த திருவண்ணாமலை பேருந்து மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கியது.
மீண்டும் வந்த அந்த பெரியவர் சாமீ பஸ்சு போகுது ஏறலையா? என்றார். இல்லை அடுத்த பஸ்ஸில போறேன் என்றேன். இல்ல சாமீ உங்களுக்காக டிக்கெட் போட்டுட்டேன் , இந்த பஸ்ஸிலயே போங்க என்றவாறே கையில் பேருந்து பயண சீட்டை திணித்தார். பேருந்து வேகம் எடுக்கவே ஓடி சென்று ஏறினேன். என்னை கையசைத்து வழியனுப்பினார் அந்த பெரியவர். தூரத்தில் என் நண்பர்கள் என்னை வியாப்புடன் பார்த்தவாறே இருக்க பேருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணித்தது. டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து பிறகு நிம்மதியாக உறங்கிப்போனேன்.
காலை நான்கு மணிக்கு திருவண்ணாமலையின் தென்பகுதியில் ரமணாஸ்ரமம் முன் இறங்கினேன். நடத்துனரை பார்த்து ரொம்ப நன்றிங்க, உங்க மாமனாருக்கும் நன்றி சொன்னேனு சொல்லுங்க என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தவர். யாரு மாமனாரு? என் மாமனாரு எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே காலமாயிட்டாரு. ஏன் சாமி காலையில குழப்பறீங்க என்றார்.
அவருக்கு குழப்பமான விஷயம் எனக்கு புரிந்தது....
பேருந்து சென்றவுடன் அருணாச்சல மலையை பார்த்து நன்றியுடன் வணங்கினேன். திருவண்ணாமலையில் இது ஒரு சிறப்பு. நகரின் எந்த மூலையிலிருந்தும் இறைவனை தரிசிக்கலாம்.
ரமணாசிரமம் வாயிலில் இறங்கி வெளியில் இருந்தவாறே ரமணரை தொழுதேன். மெல்ல நடந்து அந்த பிரம்ம முஹூர்த்த வேளையில் அக்னி தீர்த்தம் எனும் குளத்திற்கு சென்று நீராடினேன்.
உலகின் எட்டு திக்கும் ஒவ்வொரு தேவதைகள் காப்பதாக புராணம் கூறுகிறது. அவர்களை அஷ்டதிக்கு பாலகர்கள் என்பார்கள். என்திசை தேவர் என்று பதிகங்களிலும் கூறுவர். திருவண்ணாமலையில் எட்டுதிசைக்கு உரிய தேவர்களையும் லிங்க ரூபமாகவே வைத்திருக்கிறார்கள். அது தவிர ஒன்பதாவது லிங்கமாக அருணாச்சல மலை நடுநாயகமாக நகரை சக்தியூட்டி வருகிறது.
அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு அங்கே இருக்கும் அக்னி லிங்கத்தை வணங்கி எனது பிரம்ம முஹூர்த்த கிரிவலத்தை ஆரம்பித்தேன்.கிரிவலம் வர ஏற்ற காலம் எது என்றால் பிரம்ம முஹுர்த்தம் என்பேன். எட்டு திசையில் தென் திசை எமன் என்ற மரண தேவனால் நிர்வகிக்கப்படுகிறது. மெல்ல நடக்க துவங்கினேன்.
தென்திசைக்காவலர் எமனும் என்னுடன் கிரிவலம் வருகிறார் என்று அப்பொழுது எனக்கு தெரியாது.
(தொடரும்)







