Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 4, 2010

காசி சுவாசி - பகுதி 4

கோசேஷு பஞ்சஸ்வதிராஜமானா
புத்திர்பவானீ ப்ரதிதேஹ கேஹம் மி
ஸாக்ஷூ சிவ:ஸர்வகதோந்தராத்மா
ஸா காசிகாஹம் நிஜ போத ரூபா மிமி

ஐந்து விதமான உடல்களில் ஒளியாக வீசுவதும், மனித உடல் என்ற கோவிலில் வீற்றிருக்கும் அறிவு வடிவமானவள் பார்வதி தேவி. அந்த மனித உடலில் ஆன்மாவாக வீற்றிருப்பவரே சிவன். அந்த ஆன்மாவின் உண்மையான புறத்தோற்றமே காசி நகரம்...!

-ஆதிசங்கரர் - காசி பஞ்சகம்
-------------------------------------------------------------------------------------

ஆதி சங்கரர் - இந்த பெயர் பாரத தேசத்தில் மிகவும் அதிகமாக ஒலித்த இடம் ஒரு நகரம் மட்டுமே. அந்த நகரம் காசி. ஆதி சங்கரர் எப்பொழுது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என பல கதைகள் கூறப்பட்டிருக்கிறது. அவை நமக்கு தேவையில்லை. எப்பொழுதும் ஞானிகள், மகான்களின் கதைகள் மனதுக்கு சில உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் இவை நம் ஞானவழிக்கு இட்டு செல்லாது. ஒரு கல்லூரி மாணவனுக்கும் பேராசிரியனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை மட்டும் கேட்டு நாம் பட்டம் வாங்கிவிட முடியுமா? சில நேரங்களில் மட்டுமே ஞானியர் சரிதங்கள் படிப்பினையாக இருக்கக்கூடும்.

ஆதிசங்கரரின் சரிதம் என கூறப்படும் சங்கர விஜயம் பல அற்புதங்களை இணைத்து எழுதப்பட்டது. ஆதிசங்கரரின் நிதர்சனமான வாழ்க்கை வரலாறு தொகுக்கபட்டதா என்பது கேள்விக்குறியே. ஆனால் காசி மாநகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்கலைகழகங்களை கொண்ட கல்வி நகரமாக இருந்தது. அதனால் ஆதிசங்கரின் வாழ்க்கை சம்பவங்கள் அங்கே பதியப்பட்டு தெளிவாக இருக்கிறது.

பாரத தேசத்தின் ஆன்மீகவாதிகளில் தவிர்க்க முடியாதவர் ஆதிசங்கரர். ஆன்மீகவாதிகள், சன்யாசிகள் என பாரதத்தில் 60% ஆன்மீக மையங்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஆதிசங்கரின் பின்பற்றுதலை செய்கிறது. பிற 40% ஆதிசங்கரரின் கருத்தை மேம்படுத்து செய்கிறோம் என செயல்படுகிறது. இதை கொண்டு பார்க்கும் பொழுது ஆதிசங்கரரை தவிர்த்துவிட்டு ஆன்மீக பாதை பாரத தேசத்தில் இல்லை என்ற நிலையை உணர முடியும்.

கவிஞர், சீர்திருத்தவாதி, ஆன்மீக தலைவர், மத ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி, தத்துவ ஞானி என பல வடிவங்களில் ஆதிசங்கரரை பார்க்க முடியும். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் என பல நூல்களுக்கு விளக்க உரை கொடுத்துள்ளார். அது போக பல நூல்கள், கடவுளை பற்றிய பாடல்கள் என எழுதி இருக்கிறார். இறைவனின் முக்கிய ஆறு வடிவங்களான சிவன், விஷ்ணும், சக்தி, ஸுப்ரமணியர், விநாயகர் மற்றும் சூரியன் என அனைத்துக்கும் பாடல் இயற்றி உள்ளார். உருவ வடிவம் கடந்த அருவ இறைநிலைக்கும் இவரின் பாடல்கள் உண்டு.

ஆதிசங்கரர் பாரத தேசம் முழுவதும் ஐந்து முறை வலம் வந்திருக்கிறார். நான்கு திசையிலும் ஆச்சாரிய மடங்கள் நிறுவினார் என்று ஆதிசங்கர விஜயம் என்ற சரிதத்தில் கூறப்படுகிறது. பல நகரை கண்டவராக இருந்தாலும் காசி என்ற நகரை பற்றி மட்டுமே பாடல் இயற்றி உள்ளார் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரர் காசி நகரை தன் உடலாக கருதி தானே இறைவனுடன் ஒன்றாக கலந்து வாழ்ந்த இடம் காசி. காசியே சிவன், நானே காசி என அவர் கூறும் பாடல்களில் அவரின் ஆன்மீக நிலை பளிச்சிடுகிறது. காசி நகரை மட்டுமல்ல, காசிக்கு அழகு சேர்க்கும் கங்கையை பற்றியும், மணிகர்ணிக்கா என்ற படித்துறையை பற்றியும் அவர் பாடல் இயற்றி உள்ளார் என்றால் அவருக்கு காசி எவ்வளவு பிடித்த நகரமாக இருந்திருக்கும்?

காசியில் சர்வயங்ஞ பீடம் என்ற உயர் கல்வி பதவி இருந்தது. அதில் அமர தங்களில் அறிவாற்றலை நிரூபணம் செய்ய வேண்டும். 64 கலைகளிலும் தாங்கள் மிகவும் உண்ணத நிலையில் இருக்கவேண்டும். பல்வேறு அறிஞர்களின் சிக்கலான கேள்விக்கு பதில் கூற வேண்டும். இவற்றை செய்து நிரந்தர சர்வயங்ஞபீடாதிபதியாக இருந்தார் ஆதிசங்கரர்.

இந்த பீடத்தில் ஒருவர்
இருந்தால் உலகின் ஞானம் சார்ந்த விஷயங்களின் ஒரே தலைவர் என அர்த்தம். அத்வைத்தம் என்ற ஆதிசங்கரரின் கொள்கை பாரத தேசத்தில் புகழ்பெற்ற நேரம் அது. தனது தர்க்க திறமையாலும், இறையருளாலும் அத்வைத்த கொள்கையை நிறுவி வந்தார் ஆதிசங்கரர். ஆனாலும் அத்வைத்தம் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கபட்டது அல்ல. ஆதிசங்கரர் அத்வைத்தகொள்கையை பரப்பும் ஓர் கருவியாக இருந்தார்.

ஒருவர் பிரபலம் அடைந்தாலே அவரை பின்பற்ற பலர் கூடிவிடுவதும், பிரபலத்தின் மேல் இருக்கும் அன்பால் அவருக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என அவரின் பெயரை கெடுப்பதும் இயல்பு. அப்படித்தான் ஆதிசங்கரருக்கும் நடந்தது. ஆதிசங்கரரின் வளர்ச்சியால் பலர் அவருக்கு சிஷ்யர்களாக அமைந்தனர். புகழ் பரவ பரவ சாமான்யர்கள் சந்திக்கும் நிலையில் ஆதிசங்கரரின் நிலைமாற்றம் ஏற்பட்டு அறிஞர்கள் மற்றும் சான்றோர்களை மட்டுமே பார்க்கும் நிலை அடைந்தது.

ஆதிசங்கரரின் கருத்துக்கள் சாமனிய மனிதனை சென்றடையாமல் போகக்கூடும் என்பதாலும், ஜாதி,மதம் போன்ற வகுப்புவாத பிரிவுகளில் அவரின் கருத்துக்கள் சிக்கிவிடக்கூடாது என நினைத்தார் ஒரு ஞானி.

ஆதிசங்கரர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நித்திய அனுஷ்டானங்கள் மற்றும் அறிவுசார்ந்த கூட்டமாக இருந்தார்கள். காசியில் இருந்த ஞானியோ தன்னிலை மறந்து குளிக்க, உடுக்க என தூய்மையற்றவராக இருந்தார். ஒருவிதத்தில் அகோரி போன்ற வாழ்க்கைச் சூழல்.

ஆதி சங்கரர் குளிக்க சென்ற படித்துறை வீதி.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கை படித்துறைக்கு குளிக்க செல்லும் பொழுது வழியில் இவர் படுத்திருந்தார். அவரை சுற்றி நாய்கள் இருந்தன. நாய்களுக்கு கொஞ்சம் உணவையும், அதே கைகளில் மறு பாதியில் தானும் உண்டு மகிழ்ந்தார் அந்த ஞானி.

ஆதிசங்கரர் வி.ஐ.பி அல்லவா? அவர் வரும் முன் அவரின் சீடன் வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என எல்லோரையும் விலக்கிவிட்ட வண்ணம் வந்துகொண்டிருந்தான். அங்கே நாய்களுடன் இருந்த ஞானியை பார்த்தான். அவனுக்கு ஞானி என தெரியவில்லை. விலகு விலகு கூறினான்.


அந்த ஞானி கேட்டார் எதை விலக சொல்லுகிறாய்? என் உடலையா? என் ஆன்மாவையா என ஆழ்ந்த ஞான கருத்துக்களை கேட்டு சிஷ்யனை நிலைகுலைய செய்தார். தன் குரு கூறும் கருத்துக்களை நாயுடன் உலாவும் இவர் எப்படி கூறுகிறார் என அதிர்ந்தான். அந்த ஞானியுடன் உறையாடியதை மனீஷபஞ்சகம் என்ற நூலாக தொகுத்தார் ஆதிசங்கரர்.

சிலர் இந்த ஞானியை பன்றி மேய்க்கும் புலையன் என கூறுவார்கள். ஆதிசங்கரர் மேல்ஜாதிக்கரர் என்றும் புலையன் கீழ்ஜாதி என்றும் பாகுபடுத்தி பார்க்கும் நிலை அவர்கள் கூறும் கதைகளில் தெரியும். உண்மையில் காசியில் பன்றி, நாய் மேய்க்கும் புலையர்கள் என்ற ஒரு இனமே கிடையாது. சிலர் சிவனே அவ்வுருவில் வந்தார் என கூறுவார்கள். இவையாவும் ஆதிசங்கரரின் கதைகளில் மிகைப்படுத்தபட்ட விஷயங்களே ஆகும்.

காலபைரவர் பற்றி சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா? அவரை தவிர வேறு யார் நாய்களுடன் காசியில் உலாவர முடியும்? ஆணவம் மிகும் இடங்களில் எல்லாம் இடி போல வந்து இறங்கும் ஆற்றல் காலபைரவனுக்கு தானே உண்டு...!

இந்த நிகழ்வுக்கு பிறகு காலபைரவனின் ஆற்றல் ஆதிசங்கரருக்கு கடத்தப்பட்டது. அவரும் மனிதனின் அறியாமை மற்றும் ஆணவங்கள் கண்டபொழுது எல்லாம் கொதித்தார்.

ஒரு நாள் காசி நகர வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்
ஆதிசங்கரர். அங்கே வேத சாஸ்திரத்தில் வரும் ஒரு வார்த்தையான “டுக்ருஞ்கரணே” என்ற சொல்லை ஒருவன் மனப்பாடம் செய்ய திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். சில குழந்தைகள் தேர்வுக்கு மனப்பாடம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? மஹாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு..... மஹாத்மா காந்தி.. மஹாத்மா காந்தி...என ஒரு வார்த்தையையே உடைந்த ரெக்கார்டு போல கூறுவார்கள். அது போல காசிவீதியில் ஒருவன் “டுக்ருஞ்கரணே” என மனப்பாடம் செய்துவந்தான்.

வேதத்தை பிறர் முன் கூறி பெருமை கொள்ளுவதற்கு மட்டுமே அவன் படித்துவந்தான் என்பதை உணர்ந்து அவனை நோக்கி ஆதிசங்கரர் பாடிய பாடல் தான் பஜகோவிந்தம் என்ற மோஹமுத்கரம்.

இறைவனை பாடு, இறைவனை பாடு..முட்டாளே..! இறைவனை பாடு.
எமன் உன் உயிரை எடுக்க வரும் பொழுது “டுக்ருஞ்கரணே”
என கூறினால் உன்னை விட்டுவிடமாட்டான்.
இறைவனின் நாமமே உன்னை இறப்பற்ற முக்தி நிலைக்கு கொண்டு செல்லும்.

-என பொருள்பட பாடினார் ஆதிசங்கரர். மோஹமுத்கரம் என்றால் மோகத்தை தகர்க்கும் அயுதம்(சுத்தியல்) என்று பெயர். அதில் இருக்கும் ஒவ்வொரு வரிகள் மிகவும் அற்புதமானது. எனக்கு தெரிந்தவரை ஆதிசங்கரரும், சிவவாக்கியரும் தான் அறியாமையில் இருப்பவர்களை காண்டு கொதித்து முட்டாளே என திட்டி பாடி இருக்கிறார்கள்.

சரி உங்களிடம் ஒரு கேள்வி...


மிகவும் பழுத்து தானே வெடித்த பலாபழத்தின் தங்க நிற பலாச்சுளைகளை, மலைத்தேனில் ஊறவைத்து , அருவியின் அழகை ரசித்தவண்ணம் அருகில் அமர்ந்து சாப்பிட்டது உண்டா?

அவ்வாறு ரசிக்க வேண்டுமானால் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை, தெய்வீக பாடகி எம்.எஸ் சுப்புலக்‌ஷிமியின் குரலில் கேட்கவேண்டும்..!

சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை எழுந்துகொள்ளுங்கள். கண்களை மூடி உங்கள் சுவாசத்தை சில நிமிடம் ஒரு சாட்சியாக கவனியுங்கள். பிறகு ஒரு கப் தேனிருடன் இந்த வீடியோவை ரசியுங்கள்.



பாடலின் பொருளே தேவையில்லை... எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அந்த பக்தி ரசத்தை பாருங்கள். புனரபி ஜனனம் என்ற வரிவரும் பொழுது தன்னை மறந்து ஆன்மாவில் உறைகிறார். நான் சொன்ன மலைத்தேனும் பலாபழமும் ஞாபகம் வரும்.

காசி, இசை என்ற இருவார்த்தைகளை கேட்டாலே எனக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் ஞாபகம் வருவார். விஸ்வநாதர் கோவிலில் இளம் வயது முதல் சிவனையே செனாய் மூலம் உருகவைத்தவர். சரஸ்வதி மற்றும் சிவனை பற்றி பேசுகிறார் என்பதற்காக காசியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்பு இவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தது. இசைக்கு மதம் இடையாது. நான் இசைக்கும் பொழுது என் முன்னால் சில உருவங்கள் தெரிகிறது அதைபற்றியே நான் பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறார்.

இசை வெள்ளத்தில் மூழ்கி திளைத்தால் ஒழிய இத்தனை ஞானம் கிடைக்காது. ஆனால் சிலர் கங்கையில் குளித்தால் ஞானம் கிடைக்கும் என்கிறார்கள். என்னது... கங்கையா..?

அது மாசுபட்டு இருக்கிறதே அதில் பல கழிவுகள் மிதக்கிறதே அதில் குளித்தால் புண்ணியமோ ஞானமோ கிடைக்குமா? என நீங்கள் கேட்பது புரிகிறது.


சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்கும் மாமனிதர்களே... கங்கையில் குளித்துவிட்டல்ல.....சிறிது குடித்துவிட்டே உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறேன். பொருத்திருங்கள்...!

(சுவாசிப்பேன்)

21 கருத்துக்கள்:

Siva Sottallu said...

ஆதிசங்கரர் பற்றி பல அறிய தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி .

// ஜாதி,மதம் போன்ற வகுப்புவாத பிரிவுகளில் அவரின் கருத்துக்கள் சிக்கிவிடக்கூடாது என நினைத்தார் ஒரு ஞானி //

அந்த ஞானி நினைத்தது நடந்ததா என்று கூறவில்லையே ஸ்வாமி. அகோரியின் ஆற்றல் பாய்ந்து மனிதனிடம் அறியாமை ஆணவம் கண்டபோதெல்லாம் கொதித்தார், பாடல்கள் எழுதினர் என்று மட்டுமே கூரியிள்ளிர்கள் ஸ்வாமி.

ஸ்வாமி, அத்வைதம், துவைத்தம், விசிச்தஅத்வைதம் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க முடியுமா ஸ்வாமி?

sarul said...

ஆக, தலைவர் வாழ்க என்ற கூட்டம் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,இவர்கள் கட்சிப்பதவிகளை எதிர்பார்த்துக் கத்துகிறார்கள் , அவர்கள் சிவலோக பதவியை எதிர்பார்த்திருப்பார்களோ ?

காசி சுவாசியை எம்.எஸ் அம்மாவின் வெளிச் சுவாசம் மகிமைப்படுத்துகிறது.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

அருமை அருமை தொடர் நன்கு செல்கிறது

ஆதி சங்கரரின் படம் உட்பட - அவரைப் பற்றிஅய் இடுகை அருமை. பல தகவல்கள்.

சர்வயங்ஞபீடாதிபதி வி.ஐ.பி ஆதிசங்கரர் நடந்து செல்லும் போது - வழியில் தென்பட்ட ஞானியினைப் பார்த்து சீடர் விலகு விலகென்ற்போது - ஞானியாகிய காலபைரவர் கேட்கிறார் - எதை விட்டு விலக ? - அருமை அருமை.


ஆணவத்தினை அழிக்கும் குணம் கால பைரவரிடமிருந்து ஆதி சங்கரருக்கு கடத்தப்பட்டது.

பஜகோவிந்தம் விளக்கம் அருமை - அதனைக் கேட்க வேண்டுமென்றால் இசையரசி எம் எஸ் குரலில் கேட்கவேண்டும் - பலா - தேன் - அருவி - அடடா அடடா - கொடுத்து வைத்தவரையா நீர் - அனுபவித்து எழுதுகிறீர்கள்

புனரபி ஜனனன் புனரபி மரணம் - ரசித்தேன்

உஸ்தாத் பிஸ்மில்லா கான் சரஸ்வதி சிவன் பற்றி பாடினாரா - நல்ல தகவல்

கங்கை நீரில் குளிக்கலாம் - அதனையே குடிக்கலாம்

காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு

நல்வாழ்த்துகள் ஓம்கார்

கோவி.கண்ணன் said...

ஆதிசங்கரின் அத்வைதம் போலி பவுத்தவாதம் என்று அழைக்கப்பட்டிருக்கு.

இன்றைய பக்தி பரிணாம வளர்ச்சியில் பவுத்ததின் மாயாவாதமும், ஆதிசங்கரரின் அத்வைதமும் எந்த விதத்தில் வேறுபடுதுன்னு விளக்க முடியுமா ?

Mahesh said...

காசியை நாங்களும் சுவாசிக்கிறோம்... ஆனந்தத்துடன்..

Anonymous said...

Dear Swamiji,

Your explanations are very nice extremely nice. I have not word to describe my feel. Really Happy, So happy. Thank u so much.

"VAZHKA VAZHAMUDAN"

எம்.எம்.அப்துல்லா said...

பதிவு உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா??

:)))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//அந்த ஞானி நினைத்தது நடந்ததா என்று கூறவில்லையே ஸ்வாமி//

அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால் நானும் நீங்களும் ஆதிசங்கரரை பற்றி பேசி இருக்க மாட்டோம். ஆதிசங்கரரின் கருத்துக்கள் காசி பல்கலைகழக நூல்களில் கரைந்திருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,
//ஸ்வாமி, அத்வைதம், துவைத்தம், விசிச்தஅத்வைதம் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க முடியுமா ஸ்வாமி?//

இது சிறிய விளக்கம் கொடுக்க வேண்டிய விஷயம் அல்ல.

மேலும் சிறிய விளக்கம் கொடுத்தால் பயன்படும் விஷயமும் அல்ல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே.எஸ்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சீனா,

உங்கள் ரசிப்பு திறன் பின்னூட்டத்தில் வெளிப்படுகிறது. :)
வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//ஆதிசங்கரின் அத்வைதம் போலி பவுத்தவாதம் என்று அழைக்கப்பட்டிருக்கு.

இன்றைய பக்தி பரிணாம வளர்ச்சியில் பவுத்ததின் மாயாவாதமும், ஆதிசங்கரரின் அத்வைதமும் எந்த விதத்தில் வேறுபடுதுன்னு விளக்க முடியுமா ?//


ஆதிசங்கரரை பற்றி எழுத தொடங்கியே இடுக்கை நீண்டு விட்டது. அவரின் சிந்தாந்தத்தை பற்றி கூறி இருந்தால் விரிவாக கூற வேண்டி இருக்கும்.

விக்கிபிடியாவிலும், நீங்களும் நினைக்கும் அத்வைத்ததிற்கும் சங்கரரின் அத்வைத்ததிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

அத்வைத்ததில் நிறைய உற்பிரிவுகள் உண்டு. சுத்த அத்வைதம், சைவ அத்வைத்தம், ஞான அத்வைத்தம் என பல பிரிவுகள்.

இவற்றையெல்லாம் நான் விளக்க துவங்கி என் வலைபூவில் யாரும் வராமல் செய்யும் உள் குத்து உங்களுக்கு இருப்பதை ரசித்தேன் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,
திரு வினய்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//பதிவு உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா??
//

அவரு சினிமா டைரக்டருக்கு தான் எழுதிதருவாராம். லைப் டைரக்டர்க்கு அல்ல :)

*இயற்கை ராஜி* said...

அரிய தகவல்கள்.அருமை

ATOMYOGI said...

****
"டுக்ருஞ்கரணே" ம்ம்ஹ்ம்.... வாய்க்குள்ளேயே நுழைய மாட்டேங்குதே!!!!

சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை எழுந்துகொள்ளுங்கள்.
****


முடியல...

yrskbalu said...

jaya yaya sankara hara hara sankara.

known story. but with different approach. good.

ஷண்முகப்ரியன் said...

ஜனரஞ்சகமாகச் சொல்ல வேண்டும் என்பதே ஞானிகளின் மிகப் பெரிய சாபக் கேடு.

எல்லோருக்கும், எப்போதும், எதுவுமே புரிந்தததில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள்,ஸ்வாமி

மகா said...

ஆகா மிக அருமையான ஆன்மிக பதிவு .........

கார்மேகராஜா said...

ஐயா! சிறு விண்ணப்பம்.

நீங்கள் நடத்திகொண்டிருந்த K.P ஜோதிடத்தை பாடங்களை அவ்வப்பொழுது தொடரவும். K.P ஜோதிடத்தை பற்றி அதிகம் பேச கேட்க முடிகிறது. ஆனால் அதனை கற்க புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை. எனவே தாங்கள் ஜோதிட பாடத்தை தொடர்ந்தால் உதவியாக இருக்கும்.

குறிப்பு : ஒரு முறை ஜோதிடம் பார்க்க சென்ற பொழுது அந்த ஜோதிடர் எனது பிறந்த நேரத்தில் எட்டு நிமிட மாற்றம் உள்ளது என கூறி திருத்தினார். கேட்டதற்கு K.P ஜோதிடத்தை பற்றி சொன்னார். உண்மையில் இதன் மூலம் பிறந்த நேரத்தை சரி பார்க்க முடியும?

நன்றி.

Anonymous said...

Apple CEO Steve Jobs always wears Black Turtle neck t-shirts. Could he be an Aghori in Disguise? I am seriously asking as Jobs is very much into Eastern Philosophy and has even travelled to India in search of a Guru.