Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 18, 2009

பாவனாவை பற்றிய கிசு கிசு

தென்னிந்திய சினிமா நடிகை பாவனா உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரை பற்றி ஒரு கிசு கிசு கூறப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை. நீங்கள் என்னிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். பாவனா ரசிகர்கள் என்னை பொருத்தருள்க.

நாம் இங்கே பேசப்போவது “ப்ரதி பக்‌ஷ பாவனா” என்ற விஷயத்தை பற்றியது. பதஞ்சலி என்ற மாமுனிவர் எழுதிய பதஞ்சலி யோகசூத்திரத்தின் அற்புத வரிகளில் இதுவும் ஒன்று. இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து பொருள் பார்ப்போம்.

ப்ரதி என்ற வார்தை தமிழில் பிரதி என பயன்படுத்தலாம்.
அதாவது ஒன்றை போன்ற மற்றொன்று என்று அர்த்தம்.

பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது. பக்ஷம் என்றால் பகுதி என்று அர்த்தம். உங்கள் உடல் என்பது ஒரே தன்மை என்றாலும் அதில் வலது இடது என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? அது போல எப்பொருளும் இரு பிரிவுகள் அல்லது பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இப்பிரிவுகளுக்கு பக்‌ஷம் என்று பெயர். உங்கள் இடது தக்‌ஷிண பக்‌ஷம் மற்றும் வலதை வாமன பக்‌ஷம் என்கிறது வட மொழி.

பாவனா என்றால் ஒன்றை இருப்பதாக கருதுதல். பாவனை செய்தல் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக பிறருக்கு உணர்த்துவது என்பது பொருள். உதாரணமாக நாட்டியத்தில் நட்டியம் செய்பவர் கையில் பானை இருப்பது போல அசைந்து வருவார். அதை பார்க்கும் பொழுது நமக்கு பானையுடன் அவர் வருவது போலவே இருக்கும். நாட்டிய பாவனை என இதற்கு பெயர்.

மூன்று வார்த்தைகளையும் தனிதனியாக பார்த்தோம் ஒன்றாக இணைத்தால் இதன் பொருள் என்ன தெரியுமா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் கட்டாயம் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு விஷயம் உண்டு.

தீமையான விஷயத்தில் மட்டுமல்ல. நன்மையான விஷயத்திலும் இது இருக்கும். நன்மையான விஷயத்தில் கூடுதலாகவும், பிற விஷயங்களில் குறைவாகவும் இருக்கும்.

எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.

சிலரின் வாழ்க்கையில் இயல்பாகவும், சிலர் முயன்றாலும் இவ்வழியை எளிமையாக பின்பற்ற முடியும்.

அறுபது வயது மதிக்கதக்கவர் என்னிடம் கூறினார். நல்ல வேளை நான் அரசு வேலையில் சேரவில்லை. இல்லை என்றால் இந்நேரம் ரிடையர் ஆகி இருப்பேன் என்றார். இது ஒருவகை ப்ரதிபக்‌ஷ பாவனை தானே?

சுப்பாண்டி ப்ரதி பகஷ பாவனையில் கை தேர்ந்தவன். இந்த தத்துவம் அவன் வாழ்வுடன் இணைந்துவிட்டது என்றே கூறலாம்.

காக்கை எச்சமிட்டால்.... நல்ல வேளை பசுக்கள் மேலே பறப்பதில்லை என்ற அளவுக்கு சுப்பாண்டியின் பரதிபக்‌ஷம் பிரசித்தி.

ஒரு இளைஞன் அடிக்கடி தற்கொலைக்கு முயல்கிறான் அவனை தெளிவுபடுத்துங்கள் என அவனின் தந்தை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும் என்னால் முடிந்த அளவு அறிவுரைகள், குட்டிக்கதைகள் எல்லாம் பல மணி நேரம் சொல்லிப் பார்த்தேன். இளைஞனின் நிலை அப்படியே இருந்தது.

“குருஜீ நான் வேணும்னா முயற்சி செய்யவா?” என காதில் கிசுகிசுத்தான் சுப்பாண்டி.

நானும் கொஞ்சம் ஓய்வு எடுக்க சரி என கூறினேன். அந்த இளைஞனுடன் சுப்பாண்டி தனியே பேசினான். சில நிமிடங்களில் அந்த இளைஞன் என்னிடத்தில் வந்து இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன் என்றான். எனக்கோ ஆச்சரியம். எப்படி இது. நான் தலைகீழாக நின்று முடியாத விஷயம் சுப்பண்டியால் சில நிமிடங்களில் முடிந்தது என குழப்பத்தில் அந்த இளைஞனிடமே கேட்டேன்.

அந்த இளைஞன் சொன்னான், “ முட்டாள் தனமா பேசற சுப்பாண்டியும், அவனை கட்டி மேய்க்கும் நீங்களும் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகணும்?”

பார்த்தீங்களா சுப்பாண்டியை நான் என்னுடன் வைத்திருப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

என் வாழ்க்கையில் பல நிலைகளில் ப்ரதிபக்‌ஷ பாவனையை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாததால் அவற்றை விவரிக்க முடியாது.

இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களால் விளக்குகிறேன். வேதகால வாழ்க்கை என்ற தொடரை துவங்கியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னை பற்றி சில விமர்சனங்கள் கூறினார்கள்.

இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் இருக்க முடியும்?

வேதகால வாழ்க்கை தொடரை பதிவிட்டு திரட்டியில் இணைத்தப்பின் சிலர் மட்டுமே படிப்பார்கள் என நினைத்தேன். அது அவ்வளவு சுவாரசியமான பதிவல்லவே? எல்லோரும் படிப்பார்களா என நினைத்தேன். ஆனால் பதிவின் கருத்துக்களை திரட்டிகளை விட இவர்களின் திட்டுக்களே வெளிக்கொண்டுவந்தது.

பலர் என்னை காரசாரமாக விமர்சனம் செய்ய அதைபடித்த புதியவர்கள் அப்படி என்னதான் இவன் எழுதி இருக்கிறான் என படிக்க வந்தார்கள். புதிய நபர்களை இங்கே கூட்டி வந்த பெருமையும், பலருக்கு வேதகால வாழ்க்கை முறையை கொண்டு சேர்த்ததும் என்னை விமர்சித்தவர்களே. அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு நண்பர் என்னை விமர்சித்த பதிவில் நான் பத்தாம் வகுப்பு பெயில் என குறிப்பிட்டு என் வாழ்க்கை வரலாற்ற அவரே எழுதி இருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவை தாண்டாத என்னை பத்தாம் வகுப்பு வரை படித்ததாக அவர் கூறியதும் ஒருவகை பிரதிபக்‌ஷம் தானே?

ஸ்ரீசக்ர புரியில் அந்தணர்களின் மிகைமிஞ்சிய செயலை கண்டித்துள்ள வரிகளை மறந்து பசு,வேதம் என்றவுடன் நானும் அந்தணன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஸ்ரீசக்ர புரியில் இணைத்த புகைப்படத்தை மீண்டும் இங்கே இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.
சரி இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர்கள் அந்தணன் என நினைத்ததால் இந்த புகைப்படத்தை காட்டி விளக்க முடிகிறது. இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

( சிந்தனை உதவிக்காக மாண்டோ அவர்களுக்கு நன்றி)

அதனால்தான் சொல்லுகிறேன்.... ப்ரதி பக்‌ஷ பாவனா... எல்லாவற்றிலும் காணலாம்.

47 கருத்துக்கள்:

sowri said...

Swami, I wonder How do you manage your time with so many activities besides your spiritual practices. With all these, you are blogging regularly with precise details and explanation with simple language for common people to understand. If someone (atleast myself) take that alone, there are many possibilities of becoming better. This is alone enough. There is no compulsion for you to prove anyone that they are wrong and you are right. This is my humble thought. May be you can find a prathi paksham in this also.:)

கோவி.கண்ணன் said...

//நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.

//

ஒப்புக் கொள்ள மாட்டோம், பெரியவா சின்னவா கூட பூணூல் போடுவது இல்லை, அதுக்காக அவாளெல்லலம் அவா இல்லைன்னு ஆகிடுமா ?
:)

தலைப்பைப் பார்த்து ஓடிவந்து ....

Thirumal said...

[[[எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்]]]

அழகான விளக்கம். நன்றி :-))

Mahesh said...

//நம் மக்கள் எதிர்பார்க்கும்//

இந்த வார்த்தைகளைப் போட்டதால தப்பிச்சீங்க.... இல்லை... நிறைய கேள்வி கேட்டிருக்கலாம்...

வடை போச்சே..... :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.

/தலைப்பைப் பார்த்து ஓடிவந்து ....//

இதிலும் ஒரு பிரதிபக்‌ஷம் உண்டு :) எதோ நினைத்தாலும் நல்ல கருத்தும். என் அழகான புகைப்படமும் :)) பார்க்கும் சூழல் ஏற்பட்டது அல்லவா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருமால்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//இந்த வார்த்தைகளைப் போட்டதால தப்பிச்சீங்க.... இல்லை... நிறைய கேள்வி கேட்டிருக்கலாம்... //

:) நாங்க யாரு. அச்சாப்பூ படிக்கும் போதே எங்களை யாரும் கேள்வி கேட்டது இல்லை.

Sundararajan P said...

//பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது.//
கருத்துக்கு நன்றி.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் "சத்குரு" ஜக்கி வாசுதேவ், சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று கூறினார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

விபரங்களுக்கு: http://lawyersundar.blogspot.com/2009/11/blog-post_4289.html

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வழக்கறிஞர் சுந்தரராஜன்,

உங்கள் கேள்வியின் நோக்கம் புரியவில்லை.

திரு ஜக்கிவாசுதேவ் பற்றி கருத்து கேட்கிறீர்க்ளா? இல்லை சே பற்றி கேட்கிறீர்களா?

எனக்கு இருவர்கள் பற்றியும் தனி தனி அபிப்பிராயம் உண்டு.
ஆனாலும் இந்த பதிவின் தலைப்பை போல பிரதிபக்‌ஷ பாவனையால் அவை எனக்கு தெரிவதில்லை.

அவர்களிடம் இருக்கும் நன்மையே புரிகிறது.

என்னிடம் என் கருத்தை கேளுங்கள். பிறர் கருத்துக்கு மறுகருத்து செல்லும் அளவிற்கு நான் வளரவில்லை.

Guru said...

Dear Swamiji,
Pranaams. You did a wonderful job about reminding us our Vedic ages & Life. People always see veda & vedic age is related to brahmins (paarpanar). We are losing our identity in this modern era.Your view about the criticism is thought provoking (Thanks for quoting from Pathanjali "Prathi Paksha Bhavana"). Prathi paksha Bhavana is the need of the hour in all aspects of our life.

I expected more information about vedha kaala vaazkkai.Please start vedhakaala vaazhkkai next series.

Finally I want to quote this tamil prologue. " kaitha maram than kalladi padum"
Irukkum Pothu ethan arumaiyum theriyathu.

Anbudan,
Guru

Note: google transliterate is not working.thats y i have written in English.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்ல பதிவு.

சீனு said...

//இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?//

இது ரொம்ப கீழ்தரமா இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தங்களுக்கு எப்படியோ?

Raju said...

பியாரெஸ் எழுதிய இந்த இரு புத்தகங்கள் படித்தீர்களா?

http://nhm.in/shop/Peeyares-Mani.html

***

திருஷ்டி, கருப்பு மந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நிஜமாக ஒருவரை நிலை குலைய செய்ய வைக்குமா? பரிகாரம்?

நிகழ்காலத்தில்... said...

கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க

\\பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.\\

நெகட்டிவ்-ல உள்ள பாசிடிவ பாருன்னு சொல்றாரு அப்படித்தானே

ceylonstar said...

I agree with Guru, that you seemed to have stopped the veda kala valkai abruptly.

Can you start another series in Veda kala valkai to the level of self realization.

thanks and great service.

ஷண்முகப்ரியன் said...

எந்த மார்க்கட்டிங்கிலும் ஒரு டார்கெட் ஆடியன்ஸ் உண்டு.
உங்களுடைய பதிவின் டார்கெட் ஆடியன்ஸுக்கான தலைப்பு இது இல்லை,ஸ்வாமிஜி.

’பிரதி பக்‌ஷ பாவனா’ என்பதற்கு EACH DIVISION IS AN ILLUSION' என்ற பொருளே எனக்குத் தோன்றுகிற்து,ஸ்வாமிஜி.

எதனையும் இரண்டாகப் பிளவு படுத்திப் பார்க்கும் மனதின் பாவனை.

Self Realization said...

Ayya....Your experiences are very good...that is what is reflected in your blog and writings...

swamiji you are a self realized person...even though you have studied only 5th standard you are doing research in various fields.

If a man knows any one of the 64 arts very well, he is a scholar....

our fore fathers,siddhars,Rishis,swamjis,Agoris,Babajis,Munis,yogis and so on..all are research scholars..we can give any number of Ph.ds to them and for you also swamji..:))

swamji you are already a Ph.d holder...you do research in you,and existence of outside as inside and inside as outside.

That is how you feel the relationship with your inner and self consciousness.

which i realized myself..so days before...

I am seeing as i and you are one and the same in all beings...similarly Man and the god is one and the same...

Consider this as prathi paksham...:))))

சூர்யநிலா said...

நீங்கள் பிராமணரா ? இல்லையா

Guru said...

suryanila indha kelviyellam etharkku? nathi moolam rishi moolam theda koodathu endru solli irukkirakale kelvi pattathu illaya? swamiji brahmanara illaya endru theindhu enna seyya pogireerkal? namma makkal yarudaya karuthaiyum erka mattarkal aanaal sonnavarkaludaiya kulam,kothiram thedi alaivaarkal.. kadai virikkum poluthu sarakkai mattum kettu pinbatrungal (mudinthaal) kadaiyin kadthai ungalukku etharkku?

சூர்யநிலா said...

ஐயா குரு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்ககூடாது என்று ஏன் சொன்னார்கள் என்று உமக்கு தெரியுமா ? ஏனென்றால் அது மிக அசிங்கமாக இருக்கும். எதுவுமே தெரியாமல் பெரிய அறிஞர் மாதிரி பேசக்கூடாது. உங்கள் சுவாமி தான் சொன்னார் போட்டோவை காண்பித்து பூணூல் இருக்கிறதா என்று பாருங்கள். அவரை கேளுங்கள் ஏன் சொன்னார் என்று. என்னை கேள்வி கேட்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது.

சிவகாசி ராம்குமார் said...

எனக்கு உங்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது. ஏனென்றல் எப்படி இத்தனை விசையங்களை தெரித்தது. உங்கள் குரு யாரு ?

நான் எனது குருவை தேடி கொண்டு இருக்கேன். நான் உங்களை .................... குருவாக ஏற்கிறேன் .........


மிகவு நல்ல விளக்கம் ........................ நன்றாக உள்ளது

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குரு,
திரு சிலோன் ஸ்டார்,
சகோதரி சக்தி பிரபா,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சீனு,

/இது ரொம்ப கீழ்தரமா இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தங்களுக்கு எப்படியோ?//

கட்டுரையை நீங்கள் புரிந்துகொள்ள வில்லையோ?

ப்ரதிபக்‌ஷம் பாருங்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//எந்த மார்க்கட்டிங்கிலும் ஒரு டார்கெட் ஆடியன்ஸ் உண்டு.
உங்களுடைய பதிவின் டார்கெட் ஆடியன்ஸுக்கான தலைப்பு இது இல்லை,ஸ்வாமிஜி//

எனக்கு டார்கெட் ஆடியன்ஸ் எல்லாம் இருபதாக தெரியவில்லை.

நான் வேளுகுடி கிருஷ்ணனோ, திருச்சி கல்யாண ராமனோ என்றால் நீங்கள் சொல்லும் விஷயத்தை செய்யலாம்.

நாளை பாவனா என்ற வார்த்தை கேட்டாலே என் வரிகள் ஞாபகம் வரவேண்டும். அது போதும் எனக்கு...

படிப்பவர்கள் யாராக இருந்தால் என்ன?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சூரிய நிலா,

//நீங்கள் பிராமணரா ? இல்லையா//

நான் வசிக்கும் ஏரியாவின் தாசில்தார் நீங்கள் தானா? எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்போகிறீர்களா?
உங்கள் கேள்விக்கான விடை பதிவில் உண்டு.

//என்னை கேள்வி கேட்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது.//

என்னை நோக்கி நீங்கள் கேள்வி கேட்கும் உரிமை இருக்கும் பொழுது உங்களை நோக்கி யாரும் கேள்விகேட்கலாம்.

உங்களை போன்று முகமுடி அணிந்து பிறரிடம் கேள்வியாரும் கேட்கவில்லை. முதலில் உங்களில் இருந்து கேள்வியை துவங்குங்கள்.

நிகழ்காலத்தில்... said...

\\நான் வசிக்கும் ஏரியாவின் தாசில்தார் நீங்கள் தானா? எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்போகிறீர்களா?\\

சிரிப்பு நிற்கவே இல்லை :)))

\\உங்கள் கேள்விக்கான விடை பதிவில் உண்டு\\

அதைத்தான் கோவியானந்தா சந்தேகத்துக்கு இடமாக்கிவிட்டாரே !!!

பாவா ஷரீப் said...

தலைப்பை பார்த்து ஓடி வந்தா என்னா சாமி இப்பிடி பண்ணிடீங்க

பாவா ஷரீப் said...

சூஃபி ஞானிகளை பற்றி விளக்கமா எழுதுங்க

எம்.எம்.அப்துல்லா said...

//இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

//

இதெல்லாம் ஒரு பிரச்சனையா??

என் போட்டோவை போட்டுருங்க

:))

எம்.எம்.அப்துல்லா said...

// suryanila said...
நீங்கள் பிராமணரா ? இல்லையா

//

அவர் ஹிந்துவான்னு தெரியாம நான் முழுச்சுக்கிட்டு இருக்கேன்.

NIVEDITA MAHESH said...

Dear swami,
You dint answer my lost post. So I am posting it again.Thanks for the posts. (I am fan of urs and I am also a comibatore native, (I am from a small village called anaimalai, near pollachi). I miss the atmosphere of my village even in coimbatore. I want to know your opinion about bonsai trees. Can we grow bonsai tress, because most of us are in flats. Kindly give your in put on that.) Namaskrams.

cheena (சீனா) said...

நல்லதொரு இடுகை - எல்லாம் நன்மைக்கே என்ற தத்துவம் தானே -புரிகிறது - இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Rajagopal.S.M said...

நீங்கள் எழுதி இருக்கும் கிசு கிசுவை விட இங்கு இருக்கும் எல்லா பின்னூட்டங்களும் அருமை....

ப்ரதிபக்‌ஷம் :-)))

Rajagopal.S.M said...

//இதுவே நான் சூஃபி ஞானிகளை//

//இதெல்லாம் ஒரு பிரச்சனையா??

என் போட்டோவை போட்டுருங்க //

அப்துல்லா அண்ணே நீங்க ஞானியா..
சொல்லவே இல்லை ..... அப்ப உங்ககிட்ட வந்த ஞானம் கிடைக்கும்னு சொல்லுங்க... ரெம்ப நாளா அத தேடிட்டு இருக்கேன்.....
:)))))
:))))

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்
பாவனாவை ஏன் பதிவுக்கு இழுக்கணூம்? அவ்வளொ தன்நம்மிக்கை இல்லாமலா இருக்கீங்க நீங்க.
சன்னியாசிகள் சாதிகளை விட்டவங்க. பூணூல் இருந்தாலும் கழட்டித்தான் போடணும்.
சில மக்கள் ரிஆக்ஷன் டிபிக்கல். என்ன சமாசாரம் சோல்லறாங்க? இது நமக்கு உபயோகப்படுமான்னு பாக்கிறதில்லை. பிராமணரா இருந்தா/ இல்லை இல்லைன்னா - சொன்ன விஷயம் உண்மையாவோ பொய்யாவோ ஆயிடுமா? ச்சே!
ப்ரதி பக்ஷ பாவனா பத்தி வேற மாதிரி தோணுது. யோச்சிச்சுட்டு வரேன். மேலோட்டமா பாத்தா மாற்றுக்கருத்தையும் இருக்குமான்னு யோசிக்க சொல்கிற மாதிரி தோணுது. நிச்சயமா இருக்கும் ன்னு எதையாவது சொன்னா அது பாவனை இல்லையே?

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

/அவர் ஹிந்துவான்னு தெரியாம நான் முழுச்சுக்கிட்டு இருக்கேன்.//

நான் இன்னும் மனுஷனானு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன். அப்பறம் தான மதமும் ஜாதியும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//You dint answer my lost post. So I am posting it again.Thanks for the posts. (I am fan of urs and I am also a comibatore native, (I am from a small village called anaimalai, near pollachi). I miss the atmosphere of my village even in coimbatore. I want to know your opinion about bonsai trees. Can we grow bonsai tress, because most of us are in flats. Kindly give your in put on that.)//


கோடை காலத்தில் நீங்கள் எனக்கு பக்க பலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் :))

போன்சாய் என்பது பெரிய மரத்திற்கு உண்டான சக்தி இருக்கும்.

நானும் எனது வசிப்பிடத்தில் சில போன்சாய்களை வைத்திருக்கிறேன்.

ஆனால் போன்ஸாய்களை பராமரிப்பது கொஞ்சம் சிரமம். மற்றமடி பெரிய மரத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

திரு சீனா,

திரு திவா,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

நல்லா எழுதிறீங்க சாமி

Raju said...

ஸ்வாமி, ஜெம்ஸ் கல் மோதிரம் அணிய சொல்கிறார் ஒருவர் - கேரளா நண்பர். ஐந்தாயிரம் செலவு ஆகுமாம். பணம் நிறைய கிடைக்குமாம். அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

திவாண்ணா said...

நண்பர் ராஜு! சட்டியில் இருந்தால் அகப்பையில் வர வாய்ப்பு இருக்கு!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜூ,

http://vediceye.blogspot.com/2009/10/2.html

மேற்கண்ட பதிவில் ராசிகற்கள் பற்றி கூறி இருக்கிறேன்.

படித்து பயன்பெறுக.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திவா,

//நண்பர் ராஜு! சட்டியில் இருந்தால் அகப்பையில் வர வாய்ப்பு இருக்கு!//

இந்த சட்டியில் இருப்பதை நன்றாக பாருங்கள்.

அனேகமாக சட்டியை மேலோட்டமாக பார்ப்பதால் அதைபற்றி சொன்னது தெரிந்திருக்கது. அகப்பையின் அளவு சரியில்லையோ :) ?

திவாண்ணா said...

ஸ்வாமி நீங்கள் எந்த விதமாக எடுத்துக்கொண்டீர்கள் என்று புரியவில்லை.

கர்ம விதிப்படி நமக்கு கிடைக்க இருப்பதை முழுதுமாக இவை வாங்கித்தர முடியுமே தவிர புதிதாக ஏதும் தர முடியாது என்பது என் புரிதல். உங்கள் பதிவில் ஏதாக இருந்தாலும் அவற்றை பன்மடங்கு பெருக்கித்தரும் என்கிறீர்கள், ஆனால் அதை ஆதரிக்கவில்லை, இல்லையா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திவா,
//ஸ்வாமி நீங்கள் எந்த விதமாக எடுத்துக்கொண்டீர்கள் என்று புரியவில்லை.
//
நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஸ்மைலியை நீங்கள் பார்க்க வில்லை போலும்.

நம் பதிவை சட்டி என்றும் உள் வாங்குபவர்களை அகப்பை என உருவகப்படித்தி பார்த்தேன்.


//கர்ம விதிப்படி நமக்கு கிடைக்க இருப்பதை முழுதுமாக இவை வாங்கித்தர முடியுமே தவிர புதிதாக ஏதும் தர முடியாது என்பது என் புரிதல். உங்கள் பதிவில் ஏதாக இருந்தாலும் அவற்றை பன்மடங்கு பெருக்கித்தரும் என்கிறீர்கள், ஆனால் அதை ஆதரிக்கவில்லை, இல்லையா?//

ஒருவர் கர்ம வினைப்படி ராசிக்கல் வாங்க வேண்டும் என்றால் வாங்குவார் அல்லவா? அதனால் மேன்மை அடையவேண்டும் என்ற கர்மா இருந்தால்? :)

சில வேளைகளில் முட்டாள்தனத்தை கர்மாவுடன் இணைக்காமல் தூர எறிந்துவிட்டு செல்லுவது நல்லது.

யாசவி said...

//
’பிரதி பக்‌ஷ பாவனா’ என்பதற்கு EACH DIVISION IS AN ILLUSION' என்ற பொருளே எனக்குத் தோன்றுகிற்து,ஸ்வாமிஜி.//

same blood

Bonsai will have same effect then which tree can grow in the home (flat)?