Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 4, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 9

உயிரினங்களில் பல வகை இருந்தாலும் சில வகை உயிர்களுக்கு மட்டும் பிரபஞ்ச ஆற்றலை உள்வாகும் சக்தி அதிகம். பசுவகைகள் அனைத்துக்கும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் சக்தி அதிகம். இது மாட்டினம் மற்றும் எருமை இவை அனைத்துக்கும் பொதுவானது.

பசு நமக்கு என்ன கொடுக்கிறது என கேட்டிருந்தேன். உண்மையில் பசு நமக்கு பால், சாணம் கொடுக்கிறது என கூறி இருந்தீர்கள். பசு நூறு மரத்திற்கு சமம் என கூறி பின்னும் பால் சாணம் கொடுக்கும் ஒரு விலங்காகவே இதை பார்த்தால் என்ன செய்வது?


பிரபஞ்ச ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.

மனித மனம் எப்பொழுதும் சில விஷயங்களை ஒரே வரிசையில் சிந்திக்கும். ஒரு மனிதன் ரோஜாப்பூவில் இருந்து தனக்கு ஒரு ஆற்றல் கிடைக்கிறது என நினைத்தால் முதலில் அவற்றை கடித்து தின்று ஜீரணம் செய்வான். மனிதன் ஜீரணம் மூலமே உடல் சக்தி பெற முடியும் என்ற எண்ணம் கொண்டவன். தற்காலத்தில் இருக்கும் நவீன மனிதன் வரை இது தொடர்கிறது.

சரியான யோக பயிற்சி (ப்ராணாயமம்) மூலம் உடல் சக்தியை பெற முடியும். உணவு மற்றும் நீர் அருந்துவதால் உடலில் கிடைக்கும் வலிமையை அவ்வாறு உணவு உற்கொள்ளாமலேயே இவ்வகை பயிற்சிகள் கொடுக்கும். தாவரத்தில் இருக்கும் உயிர்சக்தி நம் உடலில் உணவாக சென்று ஜீரணம் நடைபெற்று பின்பு உடலில் சத்தாக மாற்றம் அடையும் நீண்ட வழிமுறையை மாற்றி நேரடியாக உயிர்சக்தியை பெறும் ஆன்ம பயிற்சிகளை செய்பவர்கள் பலர். இவர்களை யோகிகள் என்பார்கள்.

சராசரி மனிதன் இப்பயிற்சி செய்வது கடினம். அவனுக்கு பிற வாழ்வியல் விஷயங்கள் இருப்பதால் மரம் மூலமும் பசு மூலமும் தான் உயிர்சக்தியை பெற முடியும். தாவரங்களில் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும், பசுவின் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும் மிக வித்தியாசம் உண்டும். பசுவின் வாழ்நாளும், இனபெருக்க அளவும் தாவத்தை விட குறைவு. அதனால் மனிதன் பசுவை பயன்படுத்தினாலும் நீண்டகாலம் அதன் மேம்பாட்டை அனுபவிக்க முடியாது.

குறைந்த காலமே வாழ்ந்தாலும் பசு மரங்களை விட அதிகமான நன்மைகளை நமக்கு தருகிறது என்பதும் உண்மை.

ப்ராண சக்தி ஐந்து விதமான உட்பிரிவு கொண்டது என பார்த்தோம். அது போல ப்ராண சக்தியை வெளிப்படும் தாவரம் மற்றும் பசு இவைகள் வெளிப்படுத்தும் செயல்களும் ஐந்து தன்மையை சார்ந்தே இருக்கிறது.

இலை, தண்டு, கிளை, பூ, கனி என தாவரமும், சாணம்,சிறுநீர்,பால், தயிர் மற்றும் நெய் என பசுமாடும் தங்கள் செயலால் ப்ராணனை அடையாளப்படுத்துகிறது. தாவரம் மற்றும் பசு கொடுக்கும் ஐந்து பொருட்களை உண்டு வாழ்ந்தால் மனிதன் ப்ராண சக்தியை பெறமுடியும் என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் தாவரம் மற்றும் பசுக்களுடன் இணைந்து வாழ்ந்தாலே போதுமானது. அவை கொடுப்பதை உண்ண வேண்டும் என கட்டாயம் இல்லை. இது தான் வேதகால ரகசியம்.
இராமேஸ்வரத்தில் பின்புறம் வழிபட பூஜா ஸ்டேண்டுடன் நிற்கும் பசு. :)

சிலர் பசுவை உண்பது பாவம் என்றும் சிலர் உண்ணலாம் தவறில்லை என்றும் வாதம் செய்கிறோம். அவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம். பசு மனிதகுலத்திற்கு நன்மை கொடுக்கிறது என நினைப்பதால் தான் சிலர் உண்ணக்கூடாது என்றும், உணவாக உற்கொண்டால் உடல் பலம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் பசுவின் உடலில் ஒன்றும் இல்லை. பசு பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி வெளியிடும் தன்மை மட்டுமே அதன் உடல் செய்கிறது. இவ்வாறு செய்யும் உடல் பகுதிகள் பசுமாட்டிடம் மட்டுமே உண்டு, காளையில் இல்லை.

இதை உணராமல் சிலர் பசுவை பின்பக்கமாக வழிபடுவது, சிலர் வெட்டி விழுங்குவதும் வேடிக்கையான விஷயம் அல்லவா?. ATM மிஷினில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அந்த மிஷினே பணம் அச்சடிக்கிறது என நினைக்கும் அறிவிஜீவிகள் இவர்கள். மிஷினை விடுங்கள் வங்கியை பாருங்கள்..!

தோடர்கள் என்ற பழங்குடியினம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் நீலகிரி மற்றும் தென் கர்நாடகவில் வாழும் ஒரு பழங்குடியினர். இவர்கள் எருமையை தெய்வமாக வணங்குகிறார்கள். எருமையை கொல்லுவது மற்றும் அவற்றை கொண்டு உழுவது என அனைத்தும் பாவம் என்பது இவர்களின் வாதம். மண்ணை கூட தோண்ட மாட்டார்கள் காரணம் மண் என்பது தாய்க்கு சமம் என்பது இவர்களின் எண்ணம். தாவர உணவை உண்டு வாழும் உலகின் ஒரே பழங்குடியினர் என இவர்களை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் தாவரத்திலிருந்து ஆற்றலை பெறுவதற்கும் எருமை பசுவின் மூலம் வழிபாடு செய்வதற்கும் கற்று வைத்திருக்கிறார்கள்.
ஊட்டி தோடர்கள் இயற்கை கோவில் முன்புற தோற்றம்

பசுவை வழிபடுங்கள் என நான் கூறவில்லை. மரங்களை வழிபடுங்கள் என்றும் கூறவில்லை. காரணம் வேதகால வாழ்க்கை என்பது வழிபாடு,மதம் மற்றும் இனத்தை தாண்டிய விஷயம்.

பிற இயற்கை உயிர்களாகிய பசு மற்றும் தாவரத்திற்கும் உங்கள் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு உண்டு அதனால் அதை மதியுங்கள் என கூறுகிறேன்.

அதனால் தான் இந்த பகுதி ஒன்பது வரை எந்த மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தும் நான் வேதகால வாழ்க்கையை விளக்கவில்லை.இனி வரும் காலத்தில் மனிதன், பசு மற்றும் தாவரம் இவை மூன்றும் இணைந்து எப்படி வேதகால வாழ்க்கை முறையாகிறது என பார்ப்போம்.

(...வேதம் ஒலிக்கும்)

13 கருத்துக்கள்:

sowri said...

I will wait for the whole episode which will give more depth and information. Please continue the good work.

Thirumal said...

முந்தய பகுதிகளை வாசித்துணர்ந்ததில், தாவர வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் அளவற்ற அன்பும், மதிப்பும் பெருகுகிறது.
இனி பசுக்களின் மீதும்.
நன்றி ஸ்வாமி..

அது ஒரு கனாக் காலம் said...

நண்பன் ஒருவர் யதேச்சையாக எனக்கு அனுப்பிய சுட்டி ... ஆங்கிலத்தில் உள்ளது. அதன் சாராம்சம் இது தான், முடிந்த வரை சைவ உணவை ( அதவாது காய்கரி / கீரை /பழம் ) சாப்பிடுங்கள் ... முடிய வில்லையெனில் குறைந்த பட்சம், மாட்டு கறி சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள் ..இதை சொல்பவர் ஒரு மேலை நாட்டார் . லார்ட் ஸ்டேர்ன் ( Lord Stern ) ...

http://www.timesonline.co.uk/tol/news/environment/article6891362.ece

Unknown said...

ஆகா அற்புதமான எளிமையான விளக்கம் , அய்யா நன்று , பசுக்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்கின்றன , ஆதலால் விவாதமே வேண்டம் பசுவை தெய்வமாக வணகுவதில் தவறில்லை ,. நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவர் பெருந்தகையார் கூறி உள்ளார் , அய்யா விவாதம் செய்பவர்களே பசுக்களை தெய்வமாக வணகுங்கள் உங்கள் தாய் உங்களுக்கு கொடுத்த தாய் பாலை விட நீங்கள் பசுவின் பாலைத்தான் அதிகம் உண்டு வாழ்கிறீர்கள் , அதனால் அதற்கு நன்றிகடன் பட்டதற்கு என்ன பதில் சொல்கிறீகள் , எதிலும் விவாதம் செய்யாலம் பசுக்களில் விவாதமே வேண்டம் பசு தெய்வம் தான் அதில் ஆட்சேபனை இல்லை . மாற்று கருதும் இல்லை. ஸ்வாமிஜி நீங்கள் உங்கள் கருத்துகளை விவாதங்களுக்கு இடையில் சுருக்க வேண்டாம் . உங்கள் என்ன பிரதிபலிப்பை அப்டியே ஒரு வரி விடமால் எண்களுக்கு அளியுங்கள் . உங்கள் கருத்துக்களின் ஆழம், எனக்கு புரிகிறது , http://sathuragiripaktharkuzhu.blogspot.com www. sathuragirisundaramahalingam.blogspot.com

ஷண்முகப்ரியன் said...

’மனித உடலின் பரிணாம வளர்ச்சிதான் குரங்கு என்பது மேற்கத்திய டார்வின் சித்தாந்தம்.மனித மனதின் பரிணாமம் பசுவிடத்தில் இருந்தே தொடங்குகிறது’ என்று எங்கோ ஓஷோ சொன்னதாக ஞாபகம்.

நிறைந்த டீ கப்புடன் வந்தால் உங்கள் டீயை நீங்கள் எங்கே ஊற்றுவீர்கள்,ஸ்வாமிஜி? அதனால் காலி கப்புடனே காத்திருக்கிறேன்.
சரணங்கள்,ஸ்வாமிஜி.

Siva Sottallu said...

// மனிதன் ஜீரணம் மூலமே உடல் சக்தி பெற முடியும் என்ற எண்ணம் கொண்டவன்.//

சரியாக சொன்னீர்கள் ஸ்வாமி.

ஸ்வாமி, நீங்கள் கூறிய பசுவின் ஐந்து தன்மையில் சாணம்,சிறுநீர்,பால், போக தயிர் மற்றும் நெய் இவை இரண்டும் மனிதனால் பாலில் இருந்து தயாரிக்கபடுபவை அல்லவா ஸ்வாமி?

இலை, தண்டு, கிளை, பூ, கனி போன்றவை இயற்கையாக நடப்பதும், தயிர் மற்றும் நெய் செயற்கையாக பால்மூலம் தயாரிக்கபடுபவை தானே ஸ்வாமி.

தாவரம் மற்றும் பசுவிற்கும் மனிதனுக்கும் தொடர்பிருப்பதுபோல், ஸர்பத்திர்க்கும்/பாம்பு மனித வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறதா ஸ்வாமி?

Unknown said...

நமது கலாசாரத்தில் பாம்பும் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதே, குண்டலியின் குறியீடு என்பது தவிர்த்து பசுவைப் போல் வேறு ஏதாவது சிறப்பு பாம்பிற்கு உண்டா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

உங்கள் வருகைக்கு நன்றி

திரு திருமால்,

உங்கள் நுண்ணுணர்வுக்கு நன்றி

திரு சுந்திரராமன்,
அருமையான சுட்டி.

திரு பிரபாகர்,
உங்கள் வருகைக்கும் வெளிப்படையான கருத்துக்கும் நன்றி.

திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் ஜென் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

திரு சிவா, நந்தன்,

நம் கலாச்சாரத்தில் நாகம் ஸ்வாசத்தில் குறியீடாக இருக்கிறது.
குண்டலினி என்ற யோகமும் ஸ்வாசத்தை அடிப்படையாக கொண்டதே.

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி,

வேதகால வாழ்க்கை.... வாழ்க்கை எனும் இத்தொடருக்கும் பார்பனர்கள் குறிப்பிடும் "ரிக் வேத கால வாழ்க்கைக்கும்" தொடர்பு எதும் இருக்கிறதா ?

எம்.எம்.அப்துல்லா said...

நமக்கு ஃபீப் பிரியாணிதான் தெரியும் :)

Self Realization said...

Friend what ever your are telling is understand by us...but not for some people...They are still not realized their lives..they know only to criticize others...

You can continue my friend..we are there with you...

ரங்கன் said...

Mr. Kovi Kannan, vedic way of life can be followed by anybody in the world irrespective of what caste or community they belong to. I have commented earlier and I am repeating here - Swamiji never discusses about any caste or religion. Of all of the people you must be knowing better than any of us. Can you please refrain from using such words denoting castes?
( If it satisfies you - yes - I belong to that community which many in this country have come to deride)

Please, I request all - let us have patience and let Swamiji complete his article fully.

கோவி.கண்ணன் said...

//
alr said...
Mr. Kovi Kannan, vedic way of life can be followed by anybody in the world irrespective of what caste or community they belong to.//

இதைத்தான் ஒவ்வொரு மதத்துக்காரர்களும் எங்க மதம் மதமல்ல மார்க்கம் என்று கூவுகிறார்கள்.
:)

//I have commented earlier and I am repeating here - Swamiji never discusses about any caste or religion. //
நானும் ஸ்வாமி பார்பனர் பற்றி சொல்கிறார் என்று சொல்லவில்லையே, என்னுடைய ஐயத்தைத்தானே கேட்டேன்

//Of all of the people you must be knowing better than any of us. Can you please refrain from using such words denoting castes?
( If it satisfies you - yes - I belong to that community which many in this country have come to deride)//

உளரல், பார்பனர் என்று சொல்வதற்கு பார்பனர் வருத்தப்பட்டால், சூத்திரன் என்ற பதம் நடப்பில் நிறுத்தப்பட்டு இருக்கனும், அது இல்லாத போது பார்பனரை பார்பனர் என்று சொல்வது தவறு அல்ல. தனிப்பட்ட மனிதர் எவரையும் நான் 'சாதி' சொல்லி குறிப்பிடுவதில்லை

//Please, I request all - let us have patience and let Swamiji complete his article fully.

//

மிஸ்டர் உங்களுக்கு ஓம்காரை தெரிந்ததைவிட எனக்கு அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். உங்களுக்கு அவர் சாமியாராகத்தான் தெரிவார். எனக்கு அவர் நண்பர்

***

ஸ்வாமி ஓம்கார்,

உங்கப் பதிவில் சாதியைப் பற்றி நான் எதுவும் பேசல. என் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியதால் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது