Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 3, 2012

கும்பமேளா - 2


ஜப்பானுக்கு தெற்கே உள்ள கடலை நோக்கி கப்பல் புறப்பட்டது. இரண்டு நாள் கடந்திருந்தது. வழக்கமாக மீன்பிடிக்க கடலில் பயணிக்கும் பொழுது வேலையில்லாமல் அமர்ந்து பழக்கமில்லை. ஒன்று வலையை சரிசெய்யவோ அல்லது படகை செலுத்தவோ கைகள் ஓய்வின்றி வேலை செய்து பழக்கப்பட்டவன். தானாக சென்று ஏதேனும் வேலை இருக்கிறதா என விசாரித்து தன்னை இணைத்துக்கொண்டான். 

சமையல் அடுப்பில் கரிகளை நீக்கும் பணி கொடுத்தார்கள். சாம்பலையும் கரிகளையும் எடுத்து கடலில் கொட்டிவிட்டு புதிய கரிகளை அடுப்பில் சேர்க்க வேண்டும். கடலின் மேல்பரப்பு குளிர் காற்றுக்கு இந்த பணி இதமாக இருந்தது.

அன்று இடைவேளையில் கையில் இருந்த கரித்துண்டை கொண்டு சமையல் அறையின் பின்புற கதவில் படம் வரையத் துவங்கினான்.

 “இன்னும் என்ன செய்கிறாய். இங்கே வா” என அழைத்த அந்த கருப்பு உடை கொண்டவரை தனது கைபோன போக்கில் வரைய துவங்கினான். இவன் ஒன்றும் பெரிய ஓவியனல்ல. எழுத படிக்க கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன். இவனின் அகக்காட்சியின் உந்துதலில் இவன் கை அசைய அங்கே தெளிவான அச்சிட்ட படம் போல அகக்காட்சியில் கண்டவரை வரைந்தான்.

கையில் ஊன்றுகோல் தலை மழிக்கப்பட நிலை. கருப்பு கம்பளி சுற்றிய உடல், கால்களில் தண்டை ஆபரணம் என அவன் தத்ரூபமாக வரைந்தது அவனுக்கே ஆச்சரியம் அளித்தது. அவனால் இது வரைபட்டதல்ல என நம்பினான். 

அடுத்த நாள் கரிக்கூடையை தலையில் சுமந்து கொண்டு கடலில் கொட்ட செல்லும் பொழுது அந்த அசாதாரண தன்மையை கண்டான். இவன் சமையல் அறையின் பின்புற கதவு அருகே வரைந்த ஓவியத்தின் முன்னால் சிறிது பழங்களும் உணவும் வைக்கப்பட்டிருந்தது. அருகே யாரும் இல்லை. அவனை அறியாமல் அந்த உணவை எடுத்து ருசிக்க துவங்கினான். சாப்பிட்டவுடன் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவனாக உணர்ந்தான். உணவை யார் வைத்தார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை.

அடுத்த சில தினங்களும் இது வழக்கமானதாக இருந்தது. ஒரு நாள் முன்னதாகவே கரியை எடுத்து செல்லும் பொழுது பிரதான சமையல்காரரும் மற்றொருவரும் உணவையும் பழங்களையும் வைப்பதை பார்த்தான். மனதில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தான். கூடையை அங்கேயே வைத்துவிட்டு அவர்கள் அருகே சென்று கரியில் வரைந்த ஓவியத்தை சுட்டிக்காட்டி...கைகளால் யார் இவர் என கேட்டான்.

“சங்கம் பாபா” என சொன்னார்கள். புரியாத சொற்களாக இருந்தாலும் அவர்கள் வானத்தை நோக்கி கண்களையும் கைகளையும் உயர்த்தி சொன்ன விதம் சங்கம் பாபா அசாதாரணமானவர் என உணர்த்தியது. இவர்களுக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது என்றதும் மிகவும் உற்சாகமானாலும் உடனே வருத்தமும் கொண்டான். புரியாத மொழி கொண்டவர்களிடம் எப்படி பேசுவது என்ற குழப்பம் அதிகரித்தது.

மிகுந்த யோசனையுடன் கரிக்கூடையை சுமந்துகொண்டு சென்றான். அன்று மாலை ஓய்வு நேரத்தில் மீண்டும் கரித்துண்டை கொண்டு பிற காட்சிகளை  அந்த கதவில் வரையத்துவங்கினான்.

இவன் வரைந்து முடிக்கவும் ஓவியத்தின் மேல் நிழல்கள் விழுகவும் சரியாக இருந்தது. பின்னால் திரும்பி பார்த்தான். காலையில் இருந்த சமையல்காரர் இன்னும் சிலரும் நின்றிருந்தனர். 

இவன் தத்ரூபமாக வரைந்த கூடாரங்கள், மக்கள் கூட்டம், நீண்ட ஜடாமுடி கொண்ட நிர்வாண மனிதர்கள் ஓவியம் இவைகளை கண்டு அவர்கள் உறைந்து போயிருந்தனர். 

அவர்களை நோக்கி இவை எல்லாம் என்ன என சைகையால் கேட்டான்.
“சங்கம்.....கும்பமேளா” என அவர்கள் ஒன்றுசேர உரத்த குரலில் கூறினார்கள்

இவனை நோக்கி இரண்டு அடி முன்னேறி வந்து இவனின் கால்களில் விழுந்தனர். இதை சற்றும் எதிர்பார்காத சூழலில் குழம்பி போனான். சற்று பின்வாங்கி அவர்களை கவனிக்கும் பொழுது அந்த சப்தம் கேட்டது.

“ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என புயல் அபாய சங்கு கப்பலில் ஒலித்தது.

அனைவரும் பரபரப்பானார்கள். பாய்மரங்களை சுற்றி கட்டிவிட்டு கப்பலின் கீழ்தளத்தில் சென்று பதுங்கினர். திடீரென பெரிய அட்டத்துடன் கப்பல் குலுங்கியது. அதுவரை தான் அவனுக்கு நினைவு இருந்தது.

சிதறி தெறித்த கப்பல் துண்டுகள் கடலின் மேல்மட்டத்தில் மிதந்த வண்ணம் இருந்தது. யாரும் மிஞ்சவில்லை. பதினாராம் நூற்றாண்டில் நடந்த இந்த விபத்து வரலாற்றில் பதியப்படாமலேயே அழிந்தது.

சில மாதங்களுக்கு பின் இந்தோனேசிய தீவு ஒன்றின் கடற்கரையில் மணலில் பாதி புதைந்த அளவில் ஒரு மரத்துண்டு தெரிந்தது. அதில் கரி ஓவியமாக சங்கம் பாபா கடலை பார்த்த வண்ணம் இருந்தார்.

(மேளா தொடரும்)

9 கருத்துக்கள்:

Sanjai said...

அருமை ...

புதுகை.அப்துல்லா said...

good one.

Sivakumar said...

அப்போ அந்த ஸ்பானிஷ்காரர் மீண்டு(ம்) வருவாரா?

pranavastro.com said...

ஆண்டவன் உங்கள் ருபத்திலும் இருக்கிரர்ர் நன்றி

guna said...

vry intersting

திவாண்ணா said...

வரலாறா, புனைவா, இல்லை சொல்லறத்துக்கு இல்லையா? :-)))

Unknown said...

there is some hidden message. i am eager to know

Unknown said...

there is some hidden message. plese educate me
rajendran v

geethasmbsvm6 said...

பதினாராம் நூற்றாண்டில் நடந்த இந்த விபத்து வரலாற்றில் பதியப்படாமலேயே அழிந்தது.//

பதினாறாம் நூற்றாண்டு?? அல்லது பதினோராம் நூற்றாண்டு??