Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 4, 2012

குழலினிது யாழினிது - பகுதி 2 +18


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது வழக்கு. அது போல நம் உடல் நன்றாக இருந்தால் தான் அதன் செயல்களும் சிறப்பாக இருக்கும். உடல் என்ற உடன் கண்ணாடி முன் சென்று நின்று நன்றாக தானே இருக்கிறேன் என்றும் எனக்கு நோய் நொடி எதுவும் இல்லை என்றும் சிந்திக்கக் கூடாது.

நம் சாஸ்திரம் நமக்கு ஐந்து உடல் இருப்பதாக கூறுகிறது. ஊண் உடல் (physical body), ப்ராண உடல் (energy body), மன உடல் (Mind body),விஞ்ஞான உடல் (Knowledge body), ஆன்ம உடல் (Soul body). இவை அனைத்தும் கோஷங்கள் என அழைக்கப்படுகிறது. இது ஐந்து எண்ணிக்கையில் இருப்பதால் பஞ்சகோஷம் என பெயர்.

ஐந்து உடலில் ஏதேனும் ஒரு உடல் சமநிலை தவறினாலும் நம் வாழ்க்கை தன்மை ஏற்றத்தாழ்வு உண்டாகும். பஞ்ச உடல்களில் ஆன்ம உடல் மட்டும் வெளிப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும். மீதி இருக்கும் நான்கு உடல்கள் வெளிச்சூழலுக்கு விரைவில் மாற்றமடையும்.

பஞ்ச உடலை ஆதாரமாக கொண்டு தான் நம் ஐந்து வித உணர்வு உறுப்புக்களும், ஐந்து செயல்களும் நடைபெறுகிறது. ஒரு மனிதனுக்கு இதில் ஏதேனும் ஒரு உடல் சமநிலை தவறினால் அந்த உடலுக்கு உண்டான உணர்வு உறுப்பின் தன்மையையும் செயலையும் இழப்பார்கள்.

தம்பதியினர் இருவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நபர் ஒன்றுக்கு நான்கு உடல் வீதம் எட்டு உடல்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே குழந்தை பிறப்பும் ஏனைய மேம்பாடுகளும் உண்டு.

நவீன மருத்துவம் மேற்கண்ட நான்கு உடல்களில் ஊண் உடல் என்கிற பிசிகல் பாடியை மட்டுமே ஆராய்கிறது. ஹார்மோன் இருந்தால் குழந்தை பிறக்கும், பிறப்புறுப்புகள் சரியாக இருந்தால் குழந்த பிறக்கும் என அவர்களின் கருத்துக்கள் ஊண் உடலுக்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்காலிகமாக ஊசி மூலம் ஹார்மோன் ஏற்றுவது என்பது உடலால் கிரகித்துக்கொள்ள முடியாது. எதிர்விளைவுகளை பிற்காலத்தில் உண்டு செய்யும். ஹார்மோன் ஊசிகளால் குழந்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல் நலம் தற்சமயம் நலிவடைந்து இருக்கும். ஊசி மூலம் பெற்றெடுத்த குழந்தையை கவனிக்க கூட அவர்களுக்கு சரியான உடல் நலம் இருக்காது.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அக்குழந்தையின் பெற்றோருக்கு எட்டு உடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். நம் சாஸ்திரம் ஊண் உடலை மட்டும் பார்ப்பதில்லை. இந்த எட்டு உடலையும் எப்படி மேம்படுத்துவது என்பதையும் விளக்குகிறது.

நம் கலாச்சாரம் செயற்கையாக எதையும் உள்ளே புகுத்துவதில்லை. இயற்கையாக உங்கள் உடலிலிருந்தே அனைத்தையும் மலரச்செய்கிறது...!

தற்காலத்தில் நவீன மருத்துவம் செயற்கை கருத்தரித்தலை ஊக்குவித்தாலும் அனைவருக்கும் குழந்தை பிறப்பை வழங்க முடிவதில்லை என்பதே நிதர்சனம். தம்பதியினர் இருவருக்கும் உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படுகிறது இருந்தும் குழந்தை இல்லை என்பவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

குழந்தை இன்மை என்பது எட்டு உடல்களின் ஆற்றலை சார்ந்தது என்பதை உணர்ந்து, ஊண் உடலுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல் அந்த எட்டு உடலை மேம்படுத்த வேண்டும். நம் சாஸ்திரம் எட்டு உடலையும் மேம்படுத்தும் சூட்சுமங்களை அளித்துள்ளது.

சதுர்கோஷ நியமம் என அழைக்கப்படும் அந்த சூட்சமங்களை பார்ப்போமா?

(கரு உருவாகும்..)

12 கருத்துக்கள்:

Sanjai said...

சுவாரஷ்யமா போயிட்டு இருக்கு ... :)

சேலம் தேவா said...

எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும் குழந்தையின்மைக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள்தான்..

பொன். வாசுதேவன் said...

ஸ்வாமி..

ஊண் உடல், ப்ராண உடல், மன உடல்,விஞ்ஞான உடல், ஆன்ம உடல் என பஞ்சகோஷங்கள் பற்றி கூறியது அருமை. அதன் தொடர்ச்சியாகவே எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதன் பிறகு பஞ்ச கோஷமும் புத்திர பாக்கியமும் என்பது தொடர்பாக இருக்கிறது. புத்திர பாக்கியத்துக்கான விளக்கமாக இதை எழுதியிருக்கிறீர்களா?

பஞ்சகோஷம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஆசை. அதனால்தான் இந்த கேள்வி.

பொன். வாசுதேவன் said...

குழலினிது யாழினிது - தொடரின் தலைப்பு.. ! இப்போதுதான் கவனிக்கிறேன்... அதனால்தான் கட்டுரை இப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று உணர்கிறேன். பஞ்சகோஷங்கள் குறித்தும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Senthil said...

/* ஊண் உடல் (physical body), ப்ராண உடல் (energy body), மன உடல் (Mind body),விஞ்ஞான உடல் (Knowledge body), ஆன்ம உடல் (Soul body)*/ - புரிஞ்சுக்க குழப்பமா இருக்கு.
கண்டிப்பா இதன் விளக்கம் வரும் பதிவுகளில் இடம்பெறும் என்று நம்புகிறேன்.
இந்த பஞ்சகோஷம் கோட்பாடு பற்றி எங்களுக்கு அறிமுகபடுத்தினதுக்கு நன்றிகள்!

arul said...

arumayana thodar

திவாண்ணா said...

mmm அப்புறம்?

திவாண்ணா said...

ஒரு போர்டு போட்டுட்டு பணத்தை அள்ளறதை விட்டுட்டு... பொழக்க தெரியாத சாமி! :P

Sivakumar said...

தொடர் பயங்கர சஸ்பென்ஸா போகுது.

கொசுறு செய்தி: தென்னிந்தியாவில் தான் செயற்கை குழந்தை கருத்தரிப்பு மையங்கள் உள்ளன. அதிலும் ஆந்திராவிலும் தமிழ்நாட்டில் சென்னையிலும் மிக அதிகம்.

வட நாட்டில் இவ்வாறு இல்லையே ஏன்?

குழந்தை வேண்டி ஒருவர் இம்மையங்களுக்குச் சென்றால், அவ்வளவு தான். சொத்தை விற்று தான் மருத்துவம் பார்க்க வேண்டும்.

Sridhar said...

அருமையான பதிவு சுவாமி !!!

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளோம் !!!

Naveenkumar said...

Waiting for the சதுர்கோஷ நியமம் சூட்சம் swami... Thank you for the post...

DSP Family said...

Thirumanthiram - 481:How Deaf, Dumb, and Blind are Born
- When at the time of union,
The mother's bowels are heavy exceeding,
A dullard will be born;
If urine exceeds,
A dumb will be born;
If both exceed,
A blind will be born;
Thus is it for the infant born
The mother's condition according.