Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, February 23, 2009

மஹா சிவராத்திரி

நமது தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில் எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.

எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் கதைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை மேம்மடுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.

மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும் நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.

மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது. முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.

பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி அடைகிறது. உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம். காரணம் அது சுயமாக பிராகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை குறிக்கிறார்.

பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள், கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.

மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம் வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே இருப்பார்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான்.
சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.




அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியிங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.




சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.


உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உண்ணதமான இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என அழைக்கப்படுகிறது.

சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை. அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.

ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.
ஆன்மாவில் கொண்டாடுங்கள்.
ஆன்மாவாய் கொண்டாடுங்கள்.
ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.




22 கருத்துக்கள்:

நாமக்கல் சிபி said...

புதிய தகவல்கள்!

மிக்க நன்றி!

கோவி.கண்ணன் said...

//மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள்.//

வசை இல்லாமல் இருந்தால் கருத்து இசையும் :)

இங்கே மூடர்கள் என்று சொல்பவர்களில் போலி ஆன்மிக வாதிகளும் உண்டு என்றே நினைக்கிறேன்.

//ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.
ஆன்மாவில் கொண்டாடுங்கள்.
ஆன்மாவாய் கொண்டாடுங்கள்.
ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.
//
ஆன்மாவா ? அது யார் நடித்தப் படம், எப்போ வெளி இடுகிறார்கள்.
:)))))

ATOMYOGI said...

மிகவும் தேவையான பதிவு! சரியான நேரத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

ஷண்முகப்ரியன் said...

ஸ்வாமிஜி,நீங்கள் கூறியதின் பொருளை உணர்ந்து,படித்தவர்கள் பயன் பெற வேண்டுமென அந்த இறையருளை வேண்டுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

சாமி ஏ.ஆர்.ரஹ்மான் விருது வாங்கப் போறதெல்லாம் முன்னாடியே கணிச்சீங்களே!!!எனக்கொரு ஆரூடம் சொல்லுங்க...

என் தேசத்தில் சாதி,மதப் பிணக்குகள் அறவே ஒழிந்து என்று பூரண சகோதரத்துவம் நிலவும்??

அரசியலும் உள்ளொளி பெருக்கும் ஒரு வழி என்பதை அரசியல்வாதிகள் என்று உணர்வார்கள்??

(ரொம்ப பேராசைப்படுறேனோ?)

வினோத் கெளதம் said...

//மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள்.//

சவுக்கடி.. புரிந்தவர்களுக்கு புரியட்டும்..

தியாகராஜன் said...

ஸ்வாமி,
தாம் கணித்து கூறியது போன்றே திரு.ரஹ்மான் அவர்களுக்கு ஆஸ்கார் விருது கிடத்திருக்கிறது.
தமது ஆழ்ந்த புலமைக்கு தலை வணக்கம்.

Anonymous said...

ரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை. அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.

ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.//

//மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள்.//

சவுக்கடி.. புரிந்தவர்களுக்கு புரியட்டும்..//
புதிய தகவல்கள்!

மிக்க நன்றி!

Mahesh said...

//மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள்.//

மிகச் சரி... மிக்க நன்றி...

அப்துல்லா அண்ணனை சென்ற வாரம் சென்னையில் சந்தித்தபோது உங்கள் வலைப்போவை அறிமுகம் செய்தார். அகோரிகள் பற்றிய உங்கள் பதிவு அருமை. தெரியாத பல உண்மைகள், செய்திகள். பொதுவாகவே எனக்கு "சாமியார்" என்ற சொல் ஏற்பு இல்லை என்றாலும் சில விஷயங்கள் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதால் மறுப்புகளை என்னுடன் வைத்துக் கொள்கிறேன். மறுப்பை எடுத்துச் சொல்ல ஞானமும் காலமும் வரும்பொழுது சொல்லலாம்.

நேரம் கிடைக்கும்போது என்னுடைய இந்தப் பதிவைப் படிக்கவும். நன்றி. http://thuklak.blogspot.com/2009/02/blog-post_11.html

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நாமக்கல் சிபி, திரு கோவிகண்ணன், திரு.அணுயோகி, திரு ஷண்முகப்ரியன்..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வினோத் கெளதமன், திரு சதீஷ் குமார்,

இது எல்லாம் சவுக்கடி அல்ல. அவர்களுக்கு கொசுக்கடி.

எத்தனை கொடுத்தாலும் தாங்குவார்கள்.


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தியாகராஜன்,

உங்கள் பாரட்டுக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே என் மேல ஏதுனா கோவமா?

:)) உங்களுக்கான பதிலை கதைவடிவில் சொல்லுகிறேன்.


நீங்கள் கேட்ட கேள்வியை பார்த்தவுடன் எனக்கு மின்னஞ்சலில் வந்த கதை நினைவுக்கு வந்தது..
(உங்களை வைத்தே கதை சொல்லுகிறேன்)

அப்துல்லா முன் இறைவன் வருகிறார்.

கடவுள்: மனிதா உன் பக்திக்கு மெச்சினோம். ஒரு வரம் தர இருக்கிறேன் கேள்.

அப்துல்லா : இறைவா அடிக்கடி வெளிநாட்டுபிரயாணம் ஏற்படுவதால் நினைத்தவுடன் வெளிநாட்டுக்கு பறக்க ஒரு வாகனம் வேண்டும்.

கடவுள் : அது எல்லாம் சிரமமான காரியம். வேறு ஏதாவது கேள்.

அப்துல்லா : என் தேசத்தில் சாதி,மதப் பிணக்குகள் அறவே ஒழிந்து என்று பூரண சகோதரத்துவம் நிலவும்??அரசியலும் உள்ளொளி பெருக்கும் ஒரு வழி என்பதை அரசியல்வாதிகள் என்று உணர்வார்கள்??

கடவுள் : சரி சரி... அந்த வாகனம் எப்படி இருக்கவேண்டும் என சொல்.

-------------------------------------
:))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,
உங்கள் வருகைக்கு நன்றி.

எனது கருத்தை அங்கே பின்னூட்டிவிட்டேன்.

Anonymous said...

அருமையான விளக்கம் சுவாமி! இந்த மெய்ஞான விளக்கத்தை அறியாமல், சினிமாவில் "சிவராத்திரி, தூக்கம் ஏது!" என்று காதல் பாடல் எழுதியுருக்கிறார்கள்!

எம்.எம்.அப்துல்லா said...

////அப்துல்லா அண்ணே என் மேல ஏதுனா கோவமா?//

ஹா...ஹா...ஹா... உங்களின் முதல் வரியைப் படித்ததுமே எனக்கு உங்க பதில் எப்படி இருக்கும்னு புருஞ்சு போச்சு :)

பட்டாம்பூச்சி said...

தெளிவான விளக்கங்களுக்கு நன்றி.

Mahesh said...

நன்றி ஸ்வாமி ஓம்கார்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடுத்தமுறை கோவை வரும்போது உங்களை சந்திக்கிறேன். ரொம்ப ஸ்வாரஸ்யமான மனிதராக இருப்பீர்கள் போலும்.

sowri said...

Your explanation and expression is simply awesome and down-to-earth. Thank you swami

geethasmbsvm6 said...

தேவையான மிகவும் தெளிவான, ஆணித்தரமான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை. மிக்க நன்றி.

Mani said...

Respected Swamiji,

Azhamaana Karuthukkal. Elimaiyana ezhuthukkal. Pudhuya Thagavalgal. Migavum Nandru.
Mikka Nandri.

Manikandan.

தமிழ் கனல் said...

அருமை.. ஆழமான அறியவேண்டிய கருத்து....!!