நம்மில் பலருக்கு சிலவிஷயங்களில் உள்மன கட்டமைப்பு (Predefined Mind set) உண்டு. உதாரணம் வேதம் என்றாலே மத ரீதியான ஒரு புத்தகம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.
வேதா என்ற வார்த்தைக்கு சரியான பிற மொழி சொல்லாடல் இல்லை என கூறலாம். தமிழில் மறை என்றும் ஆங்கிலத்தில் sacred text என்றும் கூறப்படுவது நான் அறிந்தவரையில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. காரணம் இவை அனைத்தும் மதம் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.
வேதா என்றால் ஒன்றாக இருப்பதன் பல்வேறு பிரிவுகள் என கூறலாம். நீங்கள் மனித உடலாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியே கூறிக்கொண்டாலும் அனைத்தும் இணைந்தது நீங்கள் மொத்த உருவாக இருப்பீர்கள். உங்கள் உடலில் சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என இருக்கும் அல்லவா அது போன்று
பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் ஒரு ஒலியை வேறுபடுத்திக் கொள்ளுவது வேதம் என கூறலாம்.
இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் சிலர் வேதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் அது ஹிந்துமதம் என்பதன் கீழ் வருவதாக சிலர் சொல்லுகிறார்கள். சில அதிபுத்திசாலிகள் வேதம் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அது ஏதோ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொல்லிகிறார்கள்.
திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழில் இருந்ததால் சைவம் என்ற லேபிள் இட்டு அதை பன்னிரு திருமறையில் கொண்டிணைத்தனர். முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.
வேத சாஸ்திரத்தில் இருக்கும் விஷயங்கள் ஒரு மொழி சார்ந்தது அல்ல. வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சரி.. இப்பொழுது யோசிப்போம் ஒலி எந்த மதத்தை சார்ந்தது, எந்த நாட்டை சார்ந்தது , எந்த மொழியை சார்ந்தது?
மாடு “...மா” என குரல் கொடுப்பதால் அது இந்திய மொழிதான் பேசுகிறது என்றும் உலகில் இருக்கும் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் சென்றது என்றும் கூற முடியுமா?
வியாசர் என்பவர் வேதத்தை நான்காக பிரித்தார். அதற்கு முன் வேதம் ஒன்றாக இருந்தது. ஒன்றாக இருக்கும் பொழுது வேதம் என கூறப்படவில்லை. பிரிந்த பிறகே அது வேதமாகியது.
வியாசர் என்பவர் இதை பகுத்தார் என்றாலும் அவர் எத்தகையவர் என சரியான தகவல் நம்மிடையே இல்லை. வியாசம் என்றால் தொகுப்பு என பொருள். வியாசர் என்றால் வியாசம் செய்பவர். வேதத்தை வியாசம் செய்வதால் வேதவியாசர் என அழைக்கப்பட்டார்.
வேதம் என்பது பிரபஞ்ச ஒலி என்றேன் அல்லவா? அதற்கு பொருள் உண்டா என்றால் எனக்கு தெரிந்தவரை மொழிக்கு மட்டுமே பொருள் உண்டு. ஒலிக்கு பொருள் கற்பிக்கப்படலாமே தவிர இயற்கையாக இருக்காது.
வேதகால வாழ்க்கை என்ற தலைப்பில் வேதத்தை பற்றி கூறுகிறேனே என உங்களுக்கு குழப்பம் வரலாம்.
வேதகால வாழ்க்கை என்ற ஒரு காலகட்டம் நம் பூமியில் இருந்தது. வரலாற்று அறிஞர்களாலும், அனேகராலும் பதிவு செய்யப்படாத ஒரு வாழ்க்கை முறை அது.
உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம். இந்த வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது என்பதே இந்த தொடரின் நோக்கம்.
என்ன புதிய தொடரா என நீங்கள் கேட்பது புரிகிறது...!
வேதகால வாழ்க்கை என்பதை சிலவரிகளில் கூறிவிட முடியாது. முதலில் வேதம் என்றால் என்ன? காலம் என்றால் என்ன? வேதகாலம் என்றால் என்ன மற்றும் வேதகாலத்தை எப்படி வாழ்க்கை முறையாக்குவது என பலபடிகள் கொண்ட விஷயத்தை குறள் வெண்பா வடிவில் இரண்டு அடிகளில் கூறிவிட முடியாது.
மேலும் விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
வேதா என்ற வார்த்தைக்கு சரியான பிற மொழி சொல்லாடல் இல்லை என கூறலாம். தமிழில் மறை என்றும் ஆங்கிலத்தில் sacred text என்றும் கூறப்படுவது நான் அறிந்தவரையில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. காரணம் இவை அனைத்தும் மதம் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.
வேதா என்றால் ஒன்றாக இருப்பதன் பல்வேறு பிரிவுகள் என கூறலாம். நீங்கள் மனித உடலாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியே கூறிக்கொண்டாலும் அனைத்தும் இணைந்தது நீங்கள் மொத்த உருவாக இருப்பீர்கள். உங்கள் உடலில் சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என இருக்கும் அல்லவா அது போன்று
பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் ஒரு ஒலியை வேறுபடுத்திக் கொள்ளுவது வேதம் என கூறலாம்.
இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் சிலர் வேதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் அது ஹிந்துமதம் என்பதன் கீழ் வருவதாக சிலர் சொல்லுகிறார்கள். சில அதிபுத்திசாலிகள் வேதம் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அது ஏதோ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொல்லிகிறார்கள்.
திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழில் இருந்ததால் சைவம் என்ற லேபிள் இட்டு அதை பன்னிரு திருமறையில் கொண்டிணைத்தனர். முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.
வேத சாஸ்திரத்தில் இருக்கும் விஷயங்கள் ஒரு மொழி சார்ந்தது அல்ல. வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சரி.. இப்பொழுது யோசிப்போம் ஒலி எந்த மதத்தை சார்ந்தது, எந்த நாட்டை சார்ந்தது , எந்த மொழியை சார்ந்தது?
மாடு “...மா” என குரல் கொடுப்பதால் அது இந்திய மொழிதான் பேசுகிறது என்றும் உலகில் இருக்கும் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் சென்றது என்றும் கூற முடியுமா?
வியாசர் என்பவர் வேதத்தை நான்காக பிரித்தார். அதற்கு முன் வேதம் ஒன்றாக இருந்தது. ஒன்றாக இருக்கும் பொழுது வேதம் என கூறப்படவில்லை. பிரிந்த பிறகே அது வேதமாகியது.
வியாசர் என்பவர் இதை பகுத்தார் என்றாலும் அவர் எத்தகையவர் என சரியான தகவல் நம்மிடையே இல்லை. வியாசம் என்றால் தொகுப்பு என பொருள். வியாசர் என்றால் வியாசம் செய்பவர். வேதத்தை வியாசம் செய்வதால் வேதவியாசர் என அழைக்கப்பட்டார்.
வேதம் என்பது பிரபஞ்ச ஒலி என்றேன் அல்லவா? அதற்கு பொருள் உண்டா என்றால் எனக்கு தெரிந்தவரை மொழிக்கு மட்டுமே பொருள் உண்டு. ஒலிக்கு பொருள் கற்பிக்கப்படலாமே தவிர இயற்கையாக இருக்காது.
வேதகால வாழ்க்கை என்ற தலைப்பில் வேதத்தை பற்றி கூறுகிறேனே என உங்களுக்கு குழப்பம் வரலாம்.
வேதகால வாழ்க்கை என்ற ஒரு காலகட்டம் நம் பூமியில் இருந்தது. வரலாற்று அறிஞர்களாலும், அனேகராலும் பதிவு செய்யப்படாத ஒரு வாழ்க்கை முறை அது.
உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம். இந்த வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது என்பதே இந்த தொடரின் நோக்கம்.
என்ன புதிய தொடரா என நீங்கள் கேட்பது புரிகிறது...!
வேதகால வாழ்க்கை என்பதை சிலவரிகளில் கூறிவிட முடியாது. முதலில் வேதம் என்றால் என்ன? காலம் என்றால் என்ன? வேதகாலம் என்றால் என்ன மற்றும் வேதகாலத்தை எப்படி வாழ்க்கை முறையாக்குவது என பலபடிகள் கொண்ட விஷயத்தை குறள் வெண்பா வடிவில் இரண்டு அடிகளில் கூறிவிட முடியாது.
மேலும் விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(வேதம் ஒலிக்கும்..)




