Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, December 31, 2018

2019ஆம் ஆண்டின் வருட பலன்


வருட பலன் அறிதல் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதியாகும். ஜோதிட புத்தாண்டாக ஏப்ரல் 14ஆம் தேதி வரும் சித்திரை 1 ஆம் தேதி தான் வருடபலன் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் கிரிகேரியன் காலண்டர் என்கிற ஆங்கில காலண்டர் பயன்பாட்டில் இருப்பதால் 2019ஆம் ஆண்டுக்கே வருடப்பலன் இங்கே தொகுக்கப்படுகிறது.
1 ஜனவரி நடு இரவு 00:00 மணிக்கு ஜாதகம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். லக்னம் கன்யா லக்னமாக இருந்தாலும்,  வருட கிரகம் குரு முதல் வீடாக கொண்டே பலன்பார்க்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு என்ன நிகழும்?

நன்மைகள்
  • புதிய கல்வி மற்றும் புதிய கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • மாநில ஆட்சி மாற்றம் நிகழும்
  • மத்திய ஆட்சி தொடரும்.
  • புதிய அரசியல் கொள்கைகள் உருவாகும். சட்ட திருத்தங்கள் நடைபெறும்.
  • பெண்கள் நாகரீக தாக்கத்தால் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள்.
  • விவசாயம் மற்றும் வளர்ச்சி சிறக்கும்
  • புதிய மருத்துகள் கண்டறியப்படும்.
  • அணுக்கொள்கை மற்றும் அணு உலை சார்ந்த பாதுகாப்பு உறுதியாகும்.
  • ஆன்மீக பயணங்களில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
  • இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு உலகலாவிய பட்டங்கள் கவுரவங்கள் கிடைக்கும்.


தீமைகள்
  • ஆன்மீக இடங்களில் தீவரவாத தக்குதல்கள் நிகழும்
  • பொது இடங்களின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் உருவாகும்.
  • பிரபலமான கலைத்துறை சார்ந்த ஒருவரின் இறப்பு நிகழும்.
  • நெருப்பு சார்ந்த இயற்கை சீற்றம் மூலம் குழு மரணம் நிகழும்.
  • போலியான தகவல் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மக்களின் முன் தலைகுனிவார்கள்.
  • போக்குவரத்து கட்டணங்கள் உயரும்.
  • பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும்.


0 கருத்துக்கள்: