Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, October 22, 2018

அன்னையுடன் ஒரு நாள் - A day with Ma


பிரபஞ்ச ஆற்றலின் உயிர்வடிவாக விளங்கும் உயர்சக்தியை உணர ஓர் வாய்ப்பு. நம் கலாச்சாரத்தின் பெரும் அறிவாக கருதப்படும் மஹா வித்யா என்ற அறிவை பற்றி அறிய ஒரு நாள்.

யோகங்களில் உயர் நிலை யோகம் என அழைக்கப்படும் மஹா யோகா என்பதின் நுட்பங்களை அறிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அன்னையுடன் ஒரு நாளை அனுபவிக்க தயாராங்குள்.

தசமஹா வித்யா என்ற பேரறிவு நாளடைவில் ஒரு சடங்காகவும், வழிபாடாகவும் சுருங்கிவிட்டது. நாம் உணரக்கூடிய விஷயம் என்பதை இழந்து அது பூஜிக்கக்கூடிய மதமாக மாறிவிட்டது. பத்து சக்தியின் உண்மையான பரிமாணத்தை உங்களுக்கு உணரச்செய்ய நான் காத்திருக்கிறேன்.

அன்னையுடன் ஒரு நாள் என்பது பயிற்சியோ....பயிலரங்கமோ அல்லது வகுப்போ அல்ல...! 

இனிப்பு கடைக்கு சென்று பெரிய அளவில் இனிப்பு வாங்கும் முன் கடைக்கார் ஒரு சிறிய இனிப்பை நமக்கு அளிப்பார். இச்சுவை நமக்கு பிடித்தால் அதே இனிப்பை பெரிய அளவில் வாங்குவோம் அல்லவா? 

அது போல மஹா சக்தியை - அன்னையுடன் ஒரு நாளில் தெரிந்துகொள்வோம்...சக்தியின் பாதை பிடிக்கும் என்றால் அதில் பயணிக்கலாம்..

அன்னையுடன் ஒரு நாள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
ஜாதி, மத, இன மற்றும் பாலின வித்தியாசம் இல்லை.
அனைவருக்கும் தாயானவளை உணர ஏது தடை...?

இது கட்டண பயிற்சி அல்ல. மஹாசக்தியை உணரும் வாய்ப்பை நீங்கள் பெற்றதற்கு நன்கொடை அளிக்கலாம். தாய்க்கு சேய் செய்யும் மரியாதை..!

மஹா சக்தியை உணரும் மஹத்தான ஒரு தருணம்...!


0 கருத்துக்கள்: