Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, August 7, 2015

வாஸ்து கோளாறு...!


சில வருடங்களாக பேச வேண்டும் என நினைத்த தலைப்பு வாஸ்து. இது சாஸ்திரம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.


பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கூறப்பட்ட விஷயம் வாஸ்து, இது தேவலோகத்தின் சாஸ்திர விற்பன்னர் மாயன் வடிவமைத்தது என சொல்லப்படுகிறது.

ஸ்லோக வடிவில் இன்றும் மாயனின் வரிகள் வாஸ்துவை பற்றி இருக்கிறது என்பது உண்மை. ஆனால் இன்று மாயனின் வாஸ்து முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

வாஸ்துவை பற்றி தெரிந்துகொள்ளும் முன் சாஸ்திரம் என்றால் என்ன என தெரிந்து கொள்ளுவோம். சாஸ்திரம் என்பது தற்காலத்தில் தொழில் நுட்பம் என அழைப்படுகிறது. ஒரு விஞ்ஞான விஷயம் முழுமையான மெய்யுணர்வுடன் முடிவு நிலையை அடைந்தால் அது தொழில் நுட்பம் என அழைக்கலாம்.

சாஸ்திரம் என்பது இடம், மொழி, இனம் மற்றும் காலம் இவை கொண்டு மாறாமல் ஒன்று போல இருந்தால் அது (தொழில் நுட்பம்) சாஸ்திரம் என கூற வேண்டும். உதாரணமாக கணிதம் என்பது சாஸ்திரம், அதன்படி இரண்டை இரண்டால் பெருக்க நான்கு என விடைவரும் அல்லவா? எந்த நாட்டில் உள்ளவர்களும், எந்த சூழலிலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், என்ன மதமாக இருந்தாலும் இந்த விடை வரும். அப்படி இல்லாமல் என் ஜாதிக்காரன் கணிதம் செய்தால் தன் வரும் என சொன்னால் அது சாஸ்திரம் ஆகாது...!


மேலும் உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகம் மற்றும் பன்னிரு ராசியை வைத்து சொல்லும் விதிகள் உலகின் அனைத்து மனிதனுக்கும் பொதுவானது, மாறாது..! யோக சாஸ்திரமும் அப்படித்தான் அதனால் தான் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படியானால் வாஸ்து என்ற ஒரு விஷயம் தற்சமயம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கிறதா? அனைத்து நாட்டினரும், இன மொழி வேறுபாடு இன்றி பயன்படுத்த முடியுமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்...!

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என மாயனின் குறிப்பில் உள்ள விஷயம் கட்டட கலை தத்துவம் வடமொழியில் இருக்கும் சுவடி என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பஞ்ச பூதங்கள் மற்றும் அஷ்ட திக் பாலகர்கள் ( எட்டுதிசை காக்கும் தேவர்கள் ) இவர்களின் சக்தியை சம நிலைப்படுத்தும் முறையில் அமைந்த கட்டட கலை தத்துவம் வாஸ்து என மாயன் வரையறை செய்தார்.

ஒரு திறந்த வெளியில் பஞ்ச பூதங்கள் பிரச்சனைகள் இல்லாமல் இயங்கியது. ஒரு சுவர் அந்த இடத்தில் எழும்பினால் அங்கே இத்தனை நாள் சுழன்ற காற்று தடைபடுகிறது, மண் பாரம் சுமக்கிறது, வெளி (ஆகாயம்) நிரப்பப்படுகிறது. பஞ்சபூதத்தின் இயல்பு மாற்றப்பட்டு  சமநிலை தவறுகிறது. பஞ்சபூதத்தின் சமநிலை தவறாமல் எட்டு திசைகளுடனும் இணைந்து செயல்பட சில அடிப்படை விதிகளால் உருவாக்கப்பட்ட விஷயமே வாஸ்து.

வீடு எப்படி கட்டி எழுப்புவது, கொட்டகைகள், யாக சாலைகள், கோசாலைகள் எப்படி அமைப்பது என்பதை மாயன் வாஸ்து கூறுகிறது.

ஆனால் தற்சமயம் வாஸ்து எப்படி பயன்படுத்துகிறார்கள்? உங்கள் தொழில் சரி இல்லையா? குபேர மூலை உயர்வாக இல்லை- உயரமாக கட்டுங்கள்.. உடலில் நோயா வாயு மூலை சரி இல்லை அதை திறந்து வையுங்கள் என மனித வாழ்வுக்கும் வீட்டின் அமைப்புக்கு மூடிச்சு போடுவது சரியான முறையாக இருக்குமா என யோசிக்க வேண்டும்.

ஒரு மனிதன் பலவருடங்களாக வாழ்ந்து வரும் வீடு. அவருக்கு சென்ற வருடம் முதல் சில துன்பகரமான சம்பவம் நடக்கிறது. என் பிரச்சனைக்கு என்ன காரணம் என்ன என கேட்டால் உங்களின் ஜல மூலையில் சமையல் அறை இருக்கிறது அதை சரி செய்யுங்கள் என கூறும் வாஸ்து நிபுணர்கள் பெருகிவிட்டார்கள்.

இத்தனை வருடம் அங்கே தானே இருந்தார் அப்பொழுது இந்த ஜல மூலை ஏன் ஒன்றும் செய்யவில்லை என கேட்டால் அதுக்கு பதில் இருப்பதில்லை. பிரச்சனை உள்ளவர் எதை தின்றால் பித்தம் தெளியும் என இருப்பதால் இவையெல்லாம் யோசிக்காமல் வீட்டின் ஜல மூலையை இடித்து கட்ட துவங்கி இருப்பார்...!

சுப்பாண்டியின் உறவினர்கள் அவனுக்கு விலை உயர்ந்த பட்டு  துணியை பரிசாக அளித்தார்கள். அந்த துணியில் சட்டை தைக்க ஒரு தையல் கடையை அனுகினான். அங்கே இருந்த பையன் அப்பொழுது தான் தையல் பழகி வந்தான். சுப்பாண்டியின் முகத்தை பார்த்தவுடன் இவர் துணியில் சட்டை தைத்து பழகலாம் என முடிவு செய்தான். பையனிடம் துணியை கொடுத்து தனக்கு வேண்டிய டிசைனையும் சொல்லிவிட்டு வந்தான் சுப்பாண்டி.

சில நாட்கள் கழித்து சென்று சட்டையை வாங்கி போட்டு பார்த்தான் . சட்டை அஷ்ட கோணலாக தைக்கப்பட்டிருந்தது. பையன் நன்றாக தையல் பழகி இருந்தான். ஒரு தோள்பட்டை மேலும் மற்றது கீழுமாகவும், ஒரு கை மார்புக்கு அருகிலும் மற்றது முதுகுபுறத்திலும் இருந்தது. கழுத்துபட்டை பறவை இறக்கை போல மேலே எழும்பி இருந்தது. சிரமப்பட்டு போட்டுக்கொண்டு சுப்பாண்டி தையல்கடை பையனை பார்த்து இது ஏன் இப்படி இருக்கு என கேட்டான்..!

பையன் தான் தவறாக தைத்ததை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. சுப்பாண்டியிடம் எல்லாம் சரியாக இருக்கிறது இது நவீன டிசைன், உங்களுக்குத்தான் ஸ்டைலாக நிற்க தெரியவில்லை என சொல்லி தோள்பட்டையை இப்படி இறக்கி, கைகளை முன்புறமாக வளைத்து வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாக இருக்கும் என சொல்லி காசுவாங்கி கொண்டு அனுப்பி வைத்தான்.

இடுப்பை ஒருபுறம் வளைத்து, கைகளை முன்புறம் நீட்டி, தோள்பட்டையை சரித்து சுப்பாண்டி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் வந்த ஒருவர், “சார் ஒரு நிமிஷம் நில்லுங்க, இந்த சட்டை எங்க தைச்சீங்க?” என கேட்டார். சுப்பாண்டிக்கு நிலைகொள்ளவில்லை...! பூரிப்புடன், ” ஏன் சார் கேக்கறீங்க சட்டை அம்சமா இருக்கா? “ என கேட்டான். வந்தவர் “அது இல்லைசார் உங்களை மாதிரி மாற்று திறனாளிக்கே இத்தனை அம்சமா தைச்சிருக்கானே, எனக்கேல்லாம் இன்னும் சூப்பரா தைப்பான்னு தான் கேட்டேன்...!” என்றார் அவர்.

இப்படித்தான் நம் நிலமையும் இருக்கிறது. வாஸ்து பார்ப்பவர்கள் மாற்றி கட்டிய வீட்டில் செளவுகரியம் இல்லாமல் சுப்பாண்டி வளைந்து போட்டு கொண்டு நடந்த சட்டையை போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்படியானால் வாஸ்து பார்க்கலாமா கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது...

காளை மாட்டை தொழுவம் மாற்றி கட்டினால் கன்று போடுமா? என சிந்தியுங்கள் பிறகு வாஸ்துவை பற்றி அலசுவோம்.

(வாஸ்தவம் தொடரும்)

 

5 கருத்துக்கள்:

திவாண்ணா said...

நல்ல தொடர் தொடருங்கள். கருத்துக்களை இறுதியில் பதிகிறேன்!

Sermaraj S said...

சுவாமி ரிட்டர்ன்ஸ்....

எனக்கும் கொஞ்சம் வாஸ்து தெரியும் சுவாமிஜி. நீங்க தொடர முடிங்க...நா படிச்சது சரியானு தெரிஞ்சுக்கறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

// கருத்துக்களை இறுதியில் பதிகிறேன்//
//. நீங்க தொடர முடிங்க.//

நீங்க எல்லாம் சொல்றதை பார்த்தா அர்ஜண்டினா தொடர் மாதிரி இறுதி பகுதி வராதுனு தைரியத்தில சொல்றீங்க போல இருக்கே..? ;)

Thirumal said...

ஐயா
அற்புதமான ஆரம்பம் வாழ்த்துக்கள்

எம்.திருமால்
பவளத்தானூர்

Unknown said...

ஆமாம் சுவாமி அர்ஜண்டினா தொடர் மாதிரி இறுதி பகுதி வராதுனு தைரியத்தில்தான் சொல்கீரோம்.