Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, November 24, 2014

வேதகால வேளாண்மை பகுதி 2

பஞ்ச அங்கங்கள் என கூறப்படும் வாரம், நட்சத்திரம் யோகம் , திதி மற்றும் கரணம் என்பவையே பஞ்சாங்கம் என்பதாகும். பஞ்சாங்கம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வானமண்டலத்தில் இருக்கும் இடமும் அவை பயணிக்கும் இடைவேளி கொண்டு கணிக்கப்படுபவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இன்று பெளர்ணமி என திதியின் வரிசையில் கூறினால் சூரியன் சந்திரன் இருவரும் 180 டிகிரியில் எதிர் எதிராக இருக்கிறார்கள் என அர்த்தம்.

 நட்சத்திரத்தில் அஸ்வினி என கூறினால் இன்று சந்திரன் முதல் ராசியான மேஷத்தில் ராசிமண்டலத்தில் பயணிக்கிறார் என பொருள் கொள்ளவேண்டும்.  இந்த ஐந்து விஷயங்களில் வாரம், நட்சத்திரம் ஆகியவற்றை சென்ற பகுதியில் பார்த்தோம். இப்பொழுது யோகம் என்பதை விவரிக்கிறேன்.

யோகம் என்ற வார்த்தையே இதன் செயலை உணர்த்தும். நல்லதொரு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நட்சத்திர யோகத்தை பயன்படுத்துவது சிறந்தது. இந்த நட்சத்திர யோகம்  என்பது பஞ்சாங்கத்தில் காணப்படும் யோகத்தைக் காட்டிலும் வித்தியாசமானது. 

சூரியன் , சந்திரன் இவற்றின் இணைவால் 15 திதிகள் கிடைக்கின்றன. இதை மேலும் பகுக்கும் பொழுது 20 யோகங்கள் கிடைக்கிறது. யோகத்தைப் பகுத்தால் வருவது கரணம். ஆனால் வேதகால வேளாண்மைக்கு கிழமை, நட்சத்திரம், திதி, நட்சத்திரம் யோகம் இவைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். யோகம் , கரணம் ஆகியவை மிகவும் குறுகிய கால அளவீடுகள் என்பதால் இதை பயன்படுத்துவதில்லை. மேலும் திதியை பிரதானமாக பயன்படுத்துவதால் திதியின் உட்பிரிவான யோகம்,கரணத்தை உபயோகிப்பது இல்லை.  ஆனால் பழைய வேளாண்மை ஜோதிட குறிப்பில் அனைத்தும் பயன்படுத்தி வந்தனர். முகூர்த்த சூடாமணி மற்றும் பிருஹத் ஜாதகத்தில் இருக்கும் குறிப்புகள் ஒரு விவசாயி முழுமையான ஜோதிடனாக இருந்தான் என்பதை காட்டுகிறது. 

அன்றைய வாழ்வியல் சூழலில் பள்ளி கல்வியில் ஜோதிடம் / வான சாஸ்திரம் ஒரு பாடமாக இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.  ஆகையால் இங்கே நான் குறிப்பிடுவது வேதகால வேளாண்மையின் முழு தகவல் அல்ல. ஆனால் ஒன்றும் தெரியாமல் உயிரற்ற வேளாண்மை செய்வதற்கு வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதியை வைத்து பல அதிசயங்களை செய்யலாம்.

நட்சத்திர யோகம்  என்பது ஒரு குறிப்பிட்ட (வாரம்) கிழமையில் வரும் நட்சத்திரத்திற்கு இடையே உள்ள இணைவையும் மேன்மையையும் காட்டும். நட்சத்திர யோகங்களில் முக்கியமானது அமிர்த , சித்த , மரண யோகங்கள் இவற்றைக் கொண்டும் வேளாண் பணிகளை செய்யலாம்.

அமிர்த யோகம் :

"மிருதம் " எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு இறப்பு என்று பொருள். "அமிர்தம்" என்றால் இறவா (இறப்பற்ற நிலை) என்று பொருள். எனவே இந்த நாளில் உரமிடுதல் பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற பணிகளைச்  செய்யலாம். 

சித்த யோகம் :

நினைத்த காரியத்தில் வெற்றியடைவதை "காரிய சித்தி" அடைதல் என்பார்கள். 

சித்தி அடைந்தவர்கள் சித்தர் என அழைக்கபடுவார்கள். நமது எண்ணம் நிறை வேற இந்த நாளை பயன்படுத்துவது சிறந்தது.  இந்த நாளில் நீர் பாசன முறையை திட்டமிடுதல் , வேளாண் பணிகளை திட்டமிடுதல் மற்றும் விதைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

மரண யோகம் :

"மரணம்" என்பது இங்கு இறப்பை குறிப்பதில்லை. இந்த நாள் கேடு பலனை கொடுக்கும் என்பது மூடநம்பிக்கை எனலாம். மரணம் என்பது தவறானவற்றை வெளியேற்றுவதை குறிக்கும். களை எடுத்தல், தோட்டத்தை சீர் செய்தல், செடிகளை செதுக்குதல்  ஆகிய கழிவு பணிகளை மரண யோகத்தில் செய்யலாம்.

திதி :

சூரியனும், சந்திரனும்  சூரிய மண்டலத்தில் இணையும் புள்ளியையும், இடைப்பட்ட பாகையையும் குறிப்பது திதி. பஞ்சாங்கத்தில் இருக்கும் பஞ்ச அங்கங்களில் திதிக்கு என சில முக்கியத்துவங்கள் உண்டு.

புராண காலங்களில் கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார் என்றும் ராமர் நவமியில் பிறந்தார் என்றும் திதியை சிறப்பித்து கூறுவார்கள். இதன் மூலம் திதியின் முக்கியத்துவத்தை அறியலாம். திதிகள்  மொத்தம் 15, அமாவாசை துவங்கி பௌர்ணமி வரையிலும் - பௌர்ணமி  துவங்கி அமாவசை வரையிலும் 30 நாட்களுக்கு திதிகள் இருமுறை வருகின்றன. இந்த இருகாலங்களும் முறையே சுக்கில பட்சம் (வளர்பிறை)  மற்றும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) எனலாம். திதிகளும் அதற்குறிய வேளாண் பணிகளும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.


வேளாண் பணிகளை மேற்கண்ட வரிசையிலேயே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கு ஏற்றது போல திதி வரும் நாளில் செய்தால் நல்லது. சஷ்டி, பஞ்சமி , தசமி, சதுர்தசி இந்த நாட்களில் உரமிடுதல் அவசியம். அமாவசை நாளில் பயிர்களுக்கு அதிகமாக நீர் உற்றுவதும் , பயிர்களுக்கு பௌர்ணமி அன்று நீர் ஊற்றாமல் இருப்பதும் நன்று. ஏகாதசி நாளில் பூமிக்கு அடியில் விளையும் (கிழங்கு- கடலை) பயிர்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும். பூமிக்கு மேலே விளையும் பயிர்களை ஏகாதசி அன்று பண்படுத்தினால்  பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். 

இன்று கூட அமாவாசை நாளில் பெரும்பாலும் வேளாண்மை பணிகளுக்கு விடுமுறை விடுவது நம் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இது ஏன் என பலருக்கு தெரிவதில்லை. உண்மையில் நம் முன்னோர்கள் பஞ்சாங்க நுணுக்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றே இது. பெளர்ணமி அன்றும் அனேகமாக ஒவ்வொரு மாதமும் வழிபாட்டு நாளாக வருவதால் விடுமுறையாக அமைந்துவிடும். உதாரணமாக சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து மாதமும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கு உரிய நாளாகி விவசாய பணிகளுக்கு விடுமுறையாகி விடும். ஆக அமாவாசை பெளர்ணமி அன்று பூமியின் ஈர்ப்பு விசை ஏற்ற தாழ்வில் இருக்கும் என்பதே விடுமுறைக்கான காரணம்.

செடிகளை சீரமைத்தல், களை எடுத்தல் ஆகிய வேளாண் பணிகளுக்கு  திரியோதசி திதி  சிறந்த நாள்.  மேற்கண்ட தகவல்களைக் கொண்டு சிறந்த முறையில் வேதகால வேளாண்மையை செயல்படுத்த முடியும். கிரக ஆற்றல் இலவசமாக கிடைக்கும் ஒன்று, இதை தக்க முறையில் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையிலிருந்து வேதகால வேளாண்மை எனும் புதிய பரிமாணத்திற்கு மாற்றம் அடையுங்கள். உங்கள் வேளாண்மை யுக்தியை புதிய பாதையில் அமைத்து உலகை வளமாக்குங்கள்.

2 கருத்துக்கள்:

திவாண்ணா said...

அந்தேனா? முடிசி போயிந்தா?

ஸ்வாமி ஓம்கார் said...

யெஸ்...தட்ஸ் இட்...அப்ப நான் சமத்தா? :)