Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, April 11, 2014

திருச்சி ஆன்மீக பயணம் 2014

ஆன்மீக அன்பர்களுக்கு எனது வணக்கம்.

வரும் ஏப்ரல் மாதம் 26,27[சனி-ஞாயிறு] ஆம் தேதிகளில் திருச்சி
பகுதியில் உள்ள முக்கிய திருத்தலங்களுக்கு செல்கிறேன்.

என்னுடன் திருத்தலங்களை தரிசிக்க விரும்பும் அன்பர்கள் பங்குபெறலாம்.
இதற்கு கட்டணம் இல்லை.

தங்குமிடம் போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவை
நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியது. இறைவனின் சன்னிதானமும்  எனது இருப்பும் உங்களுக்கு விருப்பம் எனில்
பயணம் செய்யலாம்.

இதற்கு முன்பதிவு தேவையில்லை.

நிகழ்ச்சி நிரலில் நான் குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த சமயத்தில்
நீங்கள் இருந்தால் போதும்.

26 சனிக்கிழமை 

ஸ்ரீரங்கம் 

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை இருப்பேன்.

திருவானைக்காவல்

ஜல ஸ்தலம் என கூறப்படும் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி
கோவிலில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இருப்பேன்.

27 ஞாயிறு 

மலைக்கோட்டை

ஞான மலை என அழைக்கப்படும் மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் தாயுமான ஸ்வாமி கோவில்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை.

மேற்கண்ட கோவில்களின் தரிசனத்தின் பொழுது  சத்சங்கம், பஜன், மந்திர ஜபம் மற்றும் தியானம் நடைபெறும்.

-------------------------------------

ஆன்மீக பயணங்களுக்கு கட்டணம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பிற விமர்சனம் கொண்டவர்களுக்காக இத்தகைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
திறந்த மனதுடன் தென்றலை போல ஆன்மீக நோக்கத்துடன் என்னுடன் பயணியுங்கள். 

தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

4 கருத்துக்கள்:

Vivek said...

While you are taking about the good things in Sanathana Dharma, why you claim that you are beyond any religion. People like you can support sanathan dharma and helpmore people get befitted.

ஸ்வாமி ஓம்கார் said...

Dear Vivek,

I think some one given wrong information to you.

First of all Sanathana Dharma is not religion. and Sanathana Dharma is not required help from people like me...!

thanks for your comment.

திவாண்ணா said...

ஆன்மீக பயணங்களுக்கு கட்டணம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பிற விமர்சனம் கொண்டவர்களுக்காக ,,,//
ஹா! அதுவும் அப்படியா?

vijay said...

were we get the books of fundamental jothidam from you , remaining other thinks are very useful as a learner. Is there any class Trichy and Thanajvaur, if so please inform to me