Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, January 3, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து பகுதி 7

வில்லிபுத்திரரின் கவனிப்பில் மகிழ்ந்து அவரின் இல்லத்தில் அந்த மாலை உணவருந்தி விட்டு இரவு உறக்கத்திற்கு முன் வீட்டுக்கு வெளியே வந்தால் 5 டிகிரி குளிர். மாலை வரும் பொழுது 30 டிகிரி வெயில் அதன் சுவடே இல்லாமல் உறங்க போயிருந்தது.

வீட்டின் வெளியே அக்னியை மூட்டி அதன் அருகே அமர்ந்திருந்தார் வில்லி. மேலே நட்சத்திர மண்டலங்கள் தெளிவான ஒரு காட்சியை காட்டிக்கொண்டிருந்தன.

வில்லியின் வாழ்க்கை தன்மையையும் அவரின் ஆன்மீகத்தை பற்றியும் கேட்க அவர் தனது கதையை ஸ்பானீஷ் மொழியில் விளக்கினார். 

ஒரு சாதாரண டிஸ்கோ கிள்ப் மேலாளராக இருந்தவர் பத்து வருடம் முன் இந்தியாவுக்கு வந்து சாயிபாபாவை சந்தித்து இருக்கிறார். அவருக்கு உள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டு தன் பணிகளை துறந்து தனிமையில் தன்னை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார். டிஸ்கோ மேலாளராக இருக்கும் பொழுது பொருளாதார நிலையில் உயரத்தில் வாழ்ந்திருக்கிறார். பிறகு அவரின் இம்மாற்றம் மிக சராசரிக்கும் கீழ் வாழ வைத்திருக்கிறது. அருகே ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுக்கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

சாய் பாபாவை தனது மனதில் குருவாக கொண்டு ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், அனைத்து இந்திய ஆன்மீக நூல்களையும் கற்று, சைவ உணவு பழக்கத்தில் இருந்து கொண்டு ஆன்மீக நிலையை உணர தனது வாழ்க்கையை மாற்றுக்கொண்டு இருக்கிறார் என தெரிய வந்த பொழுது ஆச்சரியம் அடைந்தேன்.

சாய்பாபாவின் மேல் பல முரண்பட்ட கருத்துக்கள் பலர் கொண்டுருந்தாலும் இத்தகைய மனிதர்களின் உள் தன்மையை மாற்றம் செய்ததற்கு அவரை நாம் பாராட்டலாம்.


சில வருடம் முன் இந்தியா சென்ற வில்லி புத்திரரின் தோழர் ஒருவர் அங்கிருந்து இந்திய கடவுளின் சிலையை கொண்டுவந்திருக்கிறார். வில்லி புத்திரரும் அவர் தோழரும் இணைந்து கோவில் போன்று ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைத்திருக்கிறார்கள்.

அதிகாலையில் நீங்கள் கோவிலை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காரணம் இயற்கை முறையில் கட்டபட்ட வில்லிபுத்திரரின் வீட்டில் மின்சாரம் இல்லை. சூரிய ஒளியில் இயங்கும் பல்ப் மட்டுமே இருக்கிறது.

சூரிய ஒளிவராத ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் ஒருவர் சூரிய ஒளி பல்ப் வைத்திருக்கிறார். ஆனால் நாம் இந்தியாவில் முழுமையான சூரிய ஒளி கிடைத்தும் அதை வீணாக்குகிறோம் என்பதை உணர்ந்து வெட்கமடைந்தேன்.

அதிகாலை புலர்ந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்ததும் நான் கண்ட காட்சியை மொழியாலும் வார்த்தையாலும் விவரிக்க முடியாது.

சுற்றிலும் மலைத்தொடர் பல்வேறு வண்ணங்களில் ஒரு புறம் சூரியன் மறுபுறம் சந்திரன். சிறிய ஓடையின் ஓசை...சுற்றிலும் சமவெளி என ஓர் கனவு உலகில் வாழ்வதை போல இருந்தது.

வில்லி புத்திரர் கட்டிய கோவிலுக்குள் நிழைந்தால் அங்கே பாராசக்தி இருக்கிறார். பர்வதம் என்ற மலை சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இவள் இங்கே பார்வதியாகி காட்சி தருகிறாள்.

வெறும் காட்சி பொருளாக இருந்த அம்பிகையை ப்ராண பரதிஷ்டா என்ற முறையில் ஆற்றல் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு வழிபாட்டு முறைகளையும் வில்லிக்கு சொல்லிக்கொடுத்தேன்.

தனது குரு பத்து வருடத்திற்கு முன் யோக வாசிஷ்டத்தை கையில் கொடுத்து, அம்பிகைக்கு கோவில் கட்டு, உன்னை தேடி இந்தியாவிலிருந்து ஒருவன் வந்து அம்பிகையின் ஆற்றலை உணர்த்துவார் என சொல்லி அனுப்பினார் என வில்லி சொன்னதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. நீங்களும் தயவு செய்து நம்பாதீர்கள்.

எளிய காலை உணவுக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய மலை சிகரத்தை காண காரை முடுக்கினோம்.

அக்கோன்காகுவா .....இது தான் அந்த சிகரத்தின் பெயர்...

(அன்பு பெருகும்)

10 கருத்துக்கள்:

Pattu & Kuttu said...

Swami

I am regular reader of your blog for 2 years. Read most the blog.

Great work and simple language. As some one said"all good things given by god is free"

Pl write more and enlight us

VS Balajee,Chennai

RT said...

Swami Omkar,
A good post.
Firstly, I have much respect for you, sir.
But I'm upset that you are biased about Bagawan Sri Sathya Sai Baba who is my Guru and who have given us such Divine experiences.
Not believing may be your personal view, sir. That's ok.
But you have asked others not to believe which surprises me as it departs from your unbiased narrations.
This kind of words may hurt the believers, and I believe that will not have been your real intentions as a Swamiji.
May I kindly suggest that you read Mr. Howard Murphet's book "Man of Miracles" which has been written in a scientific experimentation way.
Thank you, sir.

RAHAWAJ said...

நம்மை பற்றி அம்பாள் ஒன்றும் சொல்லலையா

RAHAWAJ said...


ம் நா நம்பல

திவாண்ணா said...

சரி சரி, நம்பலை!

நிகழ்காலத்தில்... said...

//என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. நீங்களும் தயவு செய்து நம்பாதீர்கள்.//

”சாமி நடந்த உண்மைய நம்ப வேண்டாம்னு சொல்றாரே... எந்தப்பெருமையும் தனக்கு வேண்டாம்ன்னு உணர்த்த வர்றாரு..ஞானின்னா இவர்தான் ஞானி..” -- இது நெக்குருகி நான்

’’நம்ப வேண்டாம்னா ஒத்தவரில விட்டுப்போட்டு ஒதுங்கறாங்களான்னு பாரு..@#%^&” = ஓம்கார்சாமி

Unknown said...

swamiji, you have also written more or less same experiance in 'KUMBAMELA'. So it is also definitely believable. Your disciples are blessed ones.

arul said...

superb post please write about prana prathista

SRIRAM said...

Dear Swamiji,

Every thing ok.But why delay in posting blog please try to post Thrice in a week o.k.Take care on your health.Have a Pleasant Journey in South America.

With Affection,
S.Manivannan

Unknown said...

// உன்னை தேடி இந்தியாவிலிருந்து ஒருவன் வந்து அம்பிகையின் ஆற்றலை உணர்த்துவார் என சொல்லி அனுப்பினார்//
உண்மை ஒரு நாள் உணர்வீர்