எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.
-------------------------------------------------- திருமந்திரம் 1911
மனிதர்களுக்கு உள்ளே சக்தி நிலை இருக்கிறது. ஆனால் அதை அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியான விஷயம். ஒருவர் எவரஸ்ட் ஏறுகிறார் மற்றொருவர் சிறப்பாக இசை கோர்வை செய்கிறார் என எத்தனையோ திறன் இருந்தாலும் இயற்கை அனைவருக்கும் இந்த ஆற்றலை உள்ளே கட்டமைத்தே படைத்திருக்கிறது. படைக்கப்பட்ட திறன்களில் எதை ஒருவர் தீட்டுகிறார்களோ அதில் அவர்கள் வெளிப்படுகிறார். அது போல ஆன்மீக ஆற்றல் என்பது அனைத்துக்கும் அடிப்படையான சக்தி. அந்த சக்தியை அனைவரும் தூண்டுவதோ தீண்டுவதோ இல்லை.
ப்ராணன் என்ற இந்த சக்தியானது பலருக்கு செயல்படாமலேயே அவர்கள் இறப்பு நிலைக்கு சென்று பிறப்பு சுழற்சியில் சுற்றிவருவார்கள். ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான ப்ராண சக்தி கேந்திரமும் முற்றிலும் திறக்கப்பட்டு அவர்களின் உடலை விட்டு சென்றுகொண்டே இருக்கும். ப்ராணனை செயல்படுத்தாத சாதாரண மனிதர்கள், ஆன்மீகவாதிகளின் உடலில் இருக்கும் ப்ராணனை பெற்று மேம்படுகிறார்கள்.
ப்ராணன் ஆன்மீகவாதிகளிடம் இருந்து பெறப்படுவதால்தான், முழுமையான ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவரை சந்திக்கும் பொழுது வேறு சிந்தனை எதுவும் எழாமல் முற்றிலும் ஒரு ஆனந்தத்தை உணர முடிகிறது. அவரை விட்டு நீங்கினால் ஏதோ இழந்த நிலைக்கு மனம் செல்லுகிறது.
ப்ராண சக்தி உடல் நிலையில் செயல்படுவதில்லை. உண்மையில் ப்ராணன் ஆன்மாவிலிருந்து செயல்படுகிறது. அதனால் ஒருவர் தனது உடலை இழந்தாலும் ஆன்ம சொரூபமாக ப்ராணனை பிறருக்கு வழங்க முடியும். சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்பினால் உடலை விட்டு வெளியேறுகிறது.
அப்படி வெளியேறும் பொழுது சுற்றுச்சூழலை அது மிகவும் பாதிக்கும். ஆனால் ஆன்மீகவாதிகளின் இறப்பு என்ற செயல் நிகழும் பொழுது அவர்களின் ப்ராணன் வெளியேறாமல் உள்ளேயே அடங்கிவிடுகிறது.
எளிமையாக சொல்லுவதென்றால் ப்ராணனை வெளிச்செலுத்தாத மனிதன் இறப்பில் ப்ராணனை வெளிச்செலுத்துகிறான். வெளிச்செலுத்தும் யோகி ப்ராணனை இறப்பில் உள்ளே கட்டமைக்கிறார். யோகியின் உடலில் ப்ராணன் நிலைப்படுத்தப்படுவதால் அவரின் உடலை சமாதி என்ற செயல் மூலம் நிலையாக ஒரு இடத்தில் வைத்து பின்வரும் காலத்தில் அனைவருக்கும் அதிலிருந்து ப்ராணன் கிடைக்கச்செய்கிறார்கள். இதற்கு சமாதி கிரியை என்று பெயர். சாதாரண மனிதனுக்கு ப்ராணன் உடலில் இல்லாததால் அதை எரித்து உடலை பஞ்சபூதத்தில் ஐக்கியப்படுத்துகிறார்கள். பஞ்சபூதத்தில் உருவான உடலை பஞ்சபூதத்தில் இணைப்பது என்பதை ஒருவித குறியீடாக மதசடங்குகள் அமைந்திருக்கிறது.
ஆன்மீகவாதிகளின் சமாதியில் ப்ராணன் அளவிலாத சூழலில் வெளிப்படும். திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி ஆலயம், பழனி, திருப்பதி, சபரிமலை என அனைத்து புகழ்பெற்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில் எல்லாம் ஒரு ஜீவசமாதி உண்டு. அதாவது சமாதி இன்றும் ஜீவனுடன் இருக்கிறது.
மயானத்தில் யோகிகளுக்கு சமாதி வைக்கப்படுவதில்லை. காரணம் வணங்கத்தக்க நிலையில் இருக்கும் சூழலில் மட்டுமே அவர்களுக்கான ஜீவசமாதி அமைக்கப்படும். அதே போல யோகிகளின் உடல் எரிக்கப்பட்டால் அதில் உள்ள ப்ராணன் வீணாகி அதனால் சமூக கேடுகள் நடைபெறும் என திருமூலர் கூறிகிறார்.
காசி நகரம் அனைத்து நகரம் மற்றும் நாகரீகத்தைவிட முற்றிலும் வேறுபட்டது அல்லவா? அந்த நகரமே மயானமாக இருக்கிறது. மஹா மயானம். அதனால் அங்கே யோகிகளுக்கு சமாதி வைப்பதில்லை. இவர்கள் யோகிகளின் உடலை கங்கையில் சேர்த்துவிடுகிறார்கள். கங்கையின் மையத்தில் சென்று உடல்களை கங்கையில் வேத மந்திரத்துடன் விட்டுவிடுவார்கள். அந்த உடல் சில மணி நேரத்தில் நீர்வாழ் உயிரினங்களுக்கு இறையாகும். அப்படியானால் யோகிகளின் ப்ராண சக்தி வீணாகிவிடுமே என்ற கேள்வி உங்களுக்கு எழும்.
காசி மாநகரில் ஒருவர் யோக நிலையில் இறந்தால் அவரின் ப்ராணன் உடலில் இணையாமல் காசி நகரில் முற்றிலும் கலந்துவிடுகிறது. காரணம் யோகிகள் காசியில் இருக்கும் வரை காசியே அவர்களின் உடல். ஆகவே காசி என்ற உடலில் ப்ராணன் அடங்கி நகரத்தையே சக்தி ஊட்டுவதால் அந்த உடல் கங்கையில் இணைக்கபடுகிறது. காரணம் கங்கை ப்ராண சக்தியின் நீர் உருவில் ஜீவ சொரூபமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ப்ராணன் உடல் ப்ராண பரவாகத்தில் சேர்க்கப்படுகிறது.
சில யோகிகள் தங்களின் உடல் முடிவுக்கு வரும் தன்மையை உணர்ந்து கங்கையில் இறங்கி மறைந்துவிடுவார்கள். இதுவும் காசியில் பல நூற்றாண்டுகளாக நடக்கும் விஷயம். அதனால் யோகியின் உடலும், மனித உடலும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது காசி வாசிகளுக்கு தெரிந்தே இருக்கிறது.
பல பகுதிகளாக காசியை கூறிவருகிறேன். ஆனால் காசியின் அற்புதங்களின் அற்புதமான அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை ?
இது எவ்வளவு மஹாபாதகச் செயல்?
வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்கு நடந்த மஹா அனுபவத்தையும் விவரிக்கிறேன்...
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.
-------------------------------------------------- திருமந்திரம் 1911
மனிதர்களுக்கு உள்ளே சக்தி நிலை இருக்கிறது. ஆனால் அதை அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியான விஷயம். ஒருவர் எவரஸ்ட் ஏறுகிறார் மற்றொருவர் சிறப்பாக இசை கோர்வை செய்கிறார் என எத்தனையோ திறன் இருந்தாலும் இயற்கை அனைவருக்கும் இந்த ஆற்றலை உள்ளே கட்டமைத்தே படைத்திருக்கிறது. படைக்கப்பட்ட திறன்களில் எதை ஒருவர் தீட்டுகிறார்களோ அதில் அவர்கள் வெளிப்படுகிறார். அது போல ஆன்மீக ஆற்றல் என்பது அனைத்துக்கும் அடிப்படையான சக்தி. அந்த சக்தியை அனைவரும் தூண்டுவதோ தீண்டுவதோ இல்லை.
ப்ராணன் என்ற இந்த சக்தியானது பலருக்கு செயல்படாமலேயே அவர்கள் இறப்பு நிலைக்கு சென்று பிறப்பு சுழற்சியில் சுற்றிவருவார்கள். ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான ப்ராண சக்தி கேந்திரமும் முற்றிலும் திறக்கப்பட்டு அவர்களின் உடலை விட்டு சென்றுகொண்டே இருக்கும். ப்ராணனை செயல்படுத்தாத சாதாரண மனிதர்கள், ஆன்மீகவாதிகளின் உடலில் இருக்கும் ப்ராணனை பெற்று மேம்படுகிறார்கள்.
ப்ராணன் ஆன்மீகவாதிகளிடம் இருந்து பெறப்படுவதால்தான், முழுமையான ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவரை சந்திக்கும் பொழுது வேறு சிந்தனை எதுவும் எழாமல் முற்றிலும் ஒரு ஆனந்தத்தை உணர முடிகிறது. அவரை விட்டு நீங்கினால் ஏதோ இழந்த நிலைக்கு மனம் செல்லுகிறது.
ப்ராண சக்தி உடல் நிலையில் செயல்படுவதில்லை. உண்மையில் ப்ராணன் ஆன்மாவிலிருந்து செயல்படுகிறது. அதனால் ஒருவர் தனது உடலை இழந்தாலும் ஆன்ம சொரூபமாக ப்ராணனை பிறருக்கு வழங்க முடியும். சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்பினால் உடலை விட்டு வெளியேறுகிறது.
அப்படி வெளியேறும் பொழுது சுற்றுச்சூழலை அது மிகவும் பாதிக்கும். ஆனால் ஆன்மீகவாதிகளின் இறப்பு என்ற செயல் நிகழும் பொழுது அவர்களின் ப்ராணன் வெளியேறாமல் உள்ளேயே அடங்கிவிடுகிறது.
எளிமையாக சொல்லுவதென்றால் ப்ராணனை வெளிச்செலுத்தாத மனிதன் இறப்பில் ப்ராணனை வெளிச்செலுத்துகிறான். வெளிச்செலுத்தும் யோகி ப்ராணனை இறப்பில் உள்ளே கட்டமைக்கிறார். யோகியின் உடலில் ப்ராணன் நிலைப்படுத்தப்படுவதால் அவரின் உடலை சமாதி என்ற செயல் மூலம் நிலையாக ஒரு இடத்தில் வைத்து பின்வரும் காலத்தில் அனைவருக்கும் அதிலிருந்து ப்ராணன் கிடைக்கச்செய்கிறார்கள். இதற்கு சமாதி கிரியை என்று பெயர். சாதாரண மனிதனுக்கு ப்ராணன் உடலில் இல்லாததால் அதை எரித்து உடலை பஞ்சபூதத்தில் ஐக்கியப்படுத்துகிறார்கள். பஞ்சபூதத்தில் உருவான உடலை பஞ்சபூதத்தில் இணைப்பது என்பதை ஒருவித குறியீடாக மதசடங்குகள் அமைந்திருக்கிறது.
ஆன்மீகவாதிகளின் சமாதியில் ப்ராணன் அளவிலாத சூழலில் வெளிப்படும். திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி ஆலயம், பழனி, திருப்பதி, சபரிமலை என அனைத்து புகழ்பெற்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில் எல்லாம் ஒரு ஜீவசமாதி உண்டு. அதாவது சமாதி இன்றும் ஜீவனுடன் இருக்கிறது.
மயானத்தில் யோகிகளுக்கு சமாதி வைக்கப்படுவதில்லை. காரணம் வணங்கத்தக்க நிலையில் இருக்கும் சூழலில் மட்டுமே அவர்களுக்கான ஜீவசமாதி அமைக்கப்படும். அதே போல யோகிகளின் உடல் எரிக்கப்பட்டால் அதில் உள்ள ப்ராணன் வீணாகி அதனால் சமூக கேடுகள் நடைபெறும் என திருமூலர் கூறிகிறார்.
காசி நகரம் அனைத்து நகரம் மற்றும் நாகரீகத்தைவிட முற்றிலும் வேறுபட்டது அல்லவா? அந்த நகரமே மயானமாக இருக்கிறது. மஹா மயானம். அதனால் அங்கே யோகிகளுக்கு சமாதி வைப்பதில்லை. இவர்கள் யோகிகளின் உடலை கங்கையில் சேர்த்துவிடுகிறார்கள். கங்கையின் மையத்தில் சென்று உடல்களை கங்கையில் வேத மந்திரத்துடன் விட்டுவிடுவார்கள். அந்த உடல் சில மணி நேரத்தில் நீர்வாழ் உயிரினங்களுக்கு இறையாகும். அப்படியானால் யோகிகளின் ப்ராண சக்தி வீணாகிவிடுமே என்ற கேள்வி உங்களுக்கு எழும்.
காசி மாநகரில் ஒருவர் யோக நிலையில் இறந்தால் அவரின் ப்ராணன் உடலில் இணையாமல் காசி நகரில் முற்றிலும் கலந்துவிடுகிறது. காரணம் யோகிகள் காசியில் இருக்கும் வரை காசியே அவர்களின் உடல். ஆகவே காசி என்ற உடலில் ப்ராணன் அடங்கி நகரத்தையே சக்தி ஊட்டுவதால் அந்த உடல் கங்கையில் இணைக்கபடுகிறது. காரணம் கங்கை ப்ராண சக்தியின் நீர் உருவில் ஜீவ சொரூபமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ப்ராணன் உடல் ப்ராண பரவாகத்தில் சேர்க்கப்படுகிறது.
சில யோகிகள் தங்களின் உடல் முடிவுக்கு வரும் தன்மையை உணர்ந்து கங்கையில் இறங்கி மறைந்துவிடுவார்கள். இதுவும் காசியில் பல நூற்றாண்டுகளாக நடக்கும் விஷயம். அதனால் யோகியின் உடலும், மனித உடலும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது காசி வாசிகளுக்கு தெரிந்தே இருக்கிறது.
பல பகுதிகளாக காசியை கூறிவருகிறேன். ஆனால் காசியின் அற்புதங்களின் அற்புதமான அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை ?
இது எவ்வளவு மஹாபாதகச் செயல்?
வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்கு நடந்த மஹா அனுபவத்தையும் விவரிக்கிறேன்...
[சுவாசிப்பேன்]







