Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 29, 2009

நானும் வரம் தரப்போகிறேன்...!

என் இமயமலை பயணத்தின் இடையே கங்கையாற்றின் கரையில் இளைப்பாருவதற்காக அமர்ந்தேன். கங்கை பிரவாகமாக சென்று கொண்டிருந்தது. கண்டிப்பாக ஆழமும் வேகமும் அதிகம் என அதன் போக்கை வைத்து பார்க்கும் பொழுதே தெரிந்தது.

சில நாட்களாக வெளியுலகில் இருந்து துண்டிக்கபட்டிருந்தேன். சரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள என் மடிக்கணினியை (Laptop) திறந்து இணைய இணைப்பை இணைத்தேன். அது கம்பி இல்லா அகண்ட அலை சேவை. (wireless broadband) சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. மடிக்கணியை அங்கே இங்கே அசைத்தேன்.. தொடர்பு விட்டு விட்டுவந்தது.. சிறிது சாய்வாகவும் ஒரு மரத்தில் அருகில் சென்றால் ஓரளவு அலைவரிசை கிடைத்தது. ஒரு பக்கமாக சாய்ந்து மரத்தின் அடியே அமர்ந்து கொண்டேன்.. என் கால்கள் இரண்டும் கங்கை ஆற்றின் உள்ளே வைத்திருந்தேன். பயணத்தால் களைத்திருந்த உடலுக்கு கால்களில் குளிர் நீர் படுவது இதமாக இருந்தது.

சில இணைய பக்கங்களுக்கு சென்று உலாவி விட்டு கணினியை மூடி கிளம்ப எத்தனிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. கைத்தவறி என் கணினியை கங்கையாற்றில் விழுந்துவிட்டது...!


நினைத்துபாருங்கள் எப்படி இருக்கும் எனக்கு?... செய்வது அறியாமல் திகைத்தேன்.. ஆற்றின் வேகத்திற்கு இந்நேரம் என் மடிக்கணினி வங்காள விரிகுடாவில் கலந்திருக்குமோ என்றெல்லாம் மனதில் எண்ணம் வந்து சென்றது. நல்ல வேளை வலைபக்கத்தை பார்த்த பிறகு மூடிவிட்டேன். இல்லையென்றால் அதில் மீன்கள் மாட்டியிருக்குமே என்று ஒருபக்கம் குழப்பம். அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே என ஒரு வஞ்சக எண்ணமும் தலைதூக்கியது...

எத்தனை எத்தனை தகவல்கள் அதில்.. எதிர்கால உலகை மேம்படுத்த என சிந்தனைகளை அதில் வடித்துவைத்திருந்தேனே? மக்களை உய்விக்கும் அந்த எண்ண சிதறல்கள் எப்படி மீண்டும் நான் உருவாக்குவேன் என மனவருத்தத்தில் இருக்கும் பொழுது...கங்கை ஆற்றின் மேல் ஒரு புகைமண்டலம் உருவாகியது.....

புகைமண்டலத்தின் நடுவில் ஒரு தேவதை வெளிப்பட்டு கண்கள் கூசும் ஒளியுடன் என்முன் நின்றாள். தேவதையை நீங்கள் பார்க்க வேண்டுமே.... அப்பப்பா... திரைப்பட பாடலில் தேவதை என வர்ணிக்கும் சினிமா நடிகைகளுடன் இந்த தேவதையை ஒப்பிட்டால் அடுத்த ஜென்மத்திலும் நான் தமிழகத்தின் வாக்காளனாகவே பிறக்க நேரிடும்.

தேவதையின் அழகில் மூழ்கி இருக்கும் பொழுது தம்பூராவின் கடைசி தந்தியை மீட்டிய ஒலியில்
தேவதையின் குரல் ஒலித்தது..

“கவலைபடாதே மானிடா... உன் கவலையை போக்கவே நான் வந்திருக்கிறேன். உன் மடிகணினி இது தானே” என பிங்க் நிறத்தில் இருக்கும் சோனி வாயோ மடிகணினியை கண்பித்தாள் தேவதை. அதன் தற்சமய விலை 3800$.

நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்... பிறகு “இல்லை” என்றேன்.

சில வினாடிகளில் மீண்டும் ஒரு மடிக்கணினியை காண்பித்து இதுவா என்றாள். அது 4700$ விலைகொண்ட டெல் கணினி. தேவதையே எனக்கு சாமி டாலர் வாங்வே பணம் இல்லாத பிச்சைக்காரன். நான் எப்படி சோனியும் , டெல்லும் வாங்குவேன்? என்றேன்.

சில நொடிகளுக்கு பிறகு என் லினோவா டப்பாவை தேவதை காண்பித்தாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“மானிடா உன் நேர்மையை மெச்சினேன்” என்று என் கையை நீட்ட சொல்லி எனக்கு மூன்று கணிப்பொறியையும் கொடுத்தாள் தேவதை.

“தேவதையே உனக்கு அறிவு கிடையாதா? உங்கள் தேவதை பரம்பரையில் முன்னோர்கள் விறகு வெட்டியிடம் செய்தது என்னவோ அதையே நீயும் செய்கிறாயே? மூன்று மடிக்கணியையும் வைத்து நான் என்ன செய்ய? இருக்கும் ஒரு கணினியை வைத்தே உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.

“ தேவதை பரம்பரை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் யார் முன் தோன்றினாலும் அவர்கள் நான் கொடுக்கும் மூன்று பொருளை வாங்கி செல்லுவார்கள். நீ தான் அதிகப்பிரசங்கி போல இருக்கிறாய்”

“தேவதையே நான் அதிகப்பிரசங்கி என்பது ஊருக்கே தெரியும், ஆனால் விறகு வெட்டி போல வெகுளி அல்ல. நான் புத்திசாலி அதனால்தான் அப்படி கேட்கிறேன்.”

“சரி உனக்கு இவை எல்லாம் வேண்டாம் என்றால் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”

“நீ வரம் தருவது இருக்கட்டும். நான் மீண்டும் சொல்லுகிறேன். வரம் கொடுத்துவிட்டு பின்னால் சங்கடப்பட கூடாது”

“அற்ப மானிடனே. நீரில் விழுந்த மடிகணினியை எடுக்க தத்தளித்தாய். இப்பொழுது எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா? ”

“தேவதைகளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு..... அ.......அனுசரணை இருக்காது என கேள்வி பட்டிருக்கிறேன்..இன்று தான் நேரில் பார்க்கிறேன். நான் வரங்களை யோசித்து கேட்க விரும்புகிறேன். இப்படித்தான் ஒரு எறும்பு யோசிக்காமல் வரம் கேட்டு மாட்டிகொண்டது”

“எப்படி கொஞ்சம் விவரமாக சொல்லேன்”

“மனிதர்கள் தங்களை வாழவிடுவதில்லை என எறும்பு ஒன்று கடவுளை பார்த்து தவம் இருந்தது. கடவுள் அதன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். மனிதர்கள் மேல் இருந்த கோபத்தில் எறும்பு கேட்டது. நான் கடித்தவுடன் சாகவேண்டும்.

கடவுள் தந்தேன் என மறைந்தார். வரத்தை சோதித்து பார்க்க மனிதனிடம் சென்று அந்த
எறும்பு கடித்தது. மனிதன் கோபத்தில் அதை “சத்” என அடித்து தூர வீசினான். வரமும் பலித்தது, கடித்தவுடன் எறும்பு செத்தது. யார் சாகவேண்டும் என வரம் வாங்கவில்லை அல்லவா?. இப்படி நான் அல்லல்பட கூடாது என்பதால் யோசித்து கேட்கிறேன் என்றேன். ”

என் தத்துவ கதையை கேட்டு டயர்டான தேவதை. பெருமூச்சு விட்ட பின் கூறியது.

“அதிகம் பேச்சு ஆண்களுக்கு அழகல்ல. முதல் வரம் தர நான் தயார். கேள்”


“ கேட்கும் வரங்களை கண்டிப்பாக கொடுப்பேன் என வாக்கு கொடு. நான் கேட்கிறேன்.”

“என் தேவதை பரம்பரையின் மேல் ஆணை. கேள்”

“ம்......உனக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நான் ஒரு கதையாக எழுத போகிறேன். அதை அனைவரும் படிக்க வேண்டும்”

“தந்தேன். இரண்டாவது வரம்”

“உலகில் பலர் வரம் கொடுக்கிறேன் பேர்வழி என சுயநலத்தை தூண்டி பிறரின் எதிர்பார்ப்பு எனும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவு மக்களுக்கு கொடுக்க வேண்டும்”

“அவர் அவர் அழிவுக்கு அவர் அவரே காரணமாக இருப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? இருந்தாலும் நீ கேட்ப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என வரம் தருகிறேன்”

“மூன்றாவது வரம்... மூன்றாவது வரம்....”

“மானிடனே கேள் என்ன தயக்கம்,?”

“எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்”

சிறிது வினாடி யோசித்த அந்த தேவதை.. “சரி. தந்தேன்” என்றது.

நானும் இமயமலை சாரலில் இருந்து வரம் கேட்கிறேன் பேர்வழி என அந்த தேவதையை கூட்டிவந்து விட்டேன். இப்பொழுது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தேவதையிடம் வரம் கேட்பது என்றாகிவிட்டது. இரண்டு வரங்கள் கேட்டு விட்டு மூன்றாவதாக மீண்டும் மூன்றுவரம் கேட்டுவிடுவேன். கணிப்பொறி மென்பொருள் போல Do. Loop என திரும்ப திரும்ப தேவதை வரம் கொடுத்து என்னிடம் மாட்டிக்கொண்டது. தேவதை இப்பொழுது தான் உணருகிறது. இவனிடம் வசமாக சிக்கிவிட்டோம் என்று. இனி தேவதை பரம்பரையில் யாரும் புத்திசாலிகளுக்கு வரம் தர மாட்டார்கள்...!

உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமா? இரண்டு வரம் கேளுங்கள்... மூன்றாவது வரம் என்ன என்பது உங்களுக்கே தெரியுமே..

Saturday, September 26, 2009

வார்த்தைகளில் என்ன இருக்கு?

ஏறுவரிசை - இறங்குவரிசை
--------------------------------------
அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்ப்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!






கருணை
-------------
எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!





போதனை
---------------
நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!



அதிகப்பிரசங்கம்
-------------------------
இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!




முரண் முக்தி
--------------------
இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.





அவதார புருஷன்
-------------------------
கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!



நவயுக வேதாந்த விவாதம்
---------------------------------------
அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரத்தில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.



ஐங்கரன்
-------------

பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?



காமன் மேன்
------------------
திரைப்படத்தை பார்த்து
இசம் பற்றி பேசுபவர்கள்...
தங்கள் வீட்டில் ரசம் கூட
வைத்தது இல்லை..!


பி.கு. மேற்கண்ட வரிகள் ஜீ மெயில் ஸ்டேட்டஸ் மெசேஜாக நான் வைத்திருந்த வரிகளின் தொகுப்பு.

Thursday, September 24, 2009

பழைய பஞ்சாங்கம் 24 - 09 - 2009

நான் தமிழக பிரபலமாக்கும்

பத்திரிகையில் வந்த கற்பனையான துணுக்கு ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாதவர்களுக்குகாக இதோ..

இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலின் மகன் ஒரு மனநல மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கே மனநலம் பாதிக்கபட்டிருந்த ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தவர், சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த ஒரு நோயாளியை பார்த்தார். நோயாளி இவரிடம் நீ யார் என கேட்க..நான் சர்ச்சிலின் மகன் என்றார். அந்த நோயாளி இவரிடம் நெருங்கி வந்து ரகசியமாக, “விவரம் தெரியாத ஆளா இருக்கியே... நான் தான் சர்ச்சில்னு சொன்னதுக்கு என்னை இங்க அடைச்சு வச்சுருக்காங்க. சத்தமா சொல்லாதே.உன்னையும் அடைச்சு வைச்சுருவானுங்க” என்றார்.

இதற்கும் கீழ்கண்ட துணுக்குக்கும் சம்பந்தம் இல்லை... :)

நான் ரிஷிகேஷில் ஒரு ஆசிரமத்தில் அமர்ந்திருந்தேன். அப்பகுதியில் வசிக்கும் தோட்டவேலை செய்யும் ஒரு முதியவர் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தார். நான் மரத்தடியில் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்தவர், “எங்கிருந்து வரீங்க” என்றார். நான் தமிழ் நாட்டிலிருந்து என்றேன். உடனே அவர் , “போதும் போதும்... வேற எதையும் நான் கேட்க மாட்டேன். மேற்கொண்டு எதாவது கேட்டா நான் அங்க பெரிய நடிகன்னு சொல்லுவீங்க. இங்க வரவங்களுக்கு இதே பொழப்பா போச்சு” என்றார்.

சினிமா அளவில் இருந்த ஆன்மீக பொய் பிரச்சாரம் தற்சமயம் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறது. எதை சொல்லறேனு தெரிஞ்சுதோ? :)
------------------------------------------------------------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி...

சென்ற வாரத்தில் ஒருநாள் நான் வீர சைவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டேன். ஆமாம் மாட்டிக்கொண்டேன் என்றே சொல்லவேண்டும். என்னை சந்திக்க வந்த அவர். அவரின் சைவ கருத்துக்களை திணிக்க துவங்கினார். அவர் தான் பக்தியின் இலக்கணம் என்றும் சிவன் தென்னகத்து கடவுள் என்றும் வரிசையாக உரிமைகொண்டாடினார். அதனால் தான் தென்னாடுடைய சிவன் என அனைவரும் அழைப்பதாக சொன்னார்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான்.. கைலாயத்தில் சிவன் இருக்கிறார் என்கிறார்கள். கைலாயம் தென்பகுதியில் இல்லை. தென்னாட்டில் பிறந்து வட நாடு சென்று விட்டாரா ? தென்னாடு என்றவுடன் ஏன் ஐயா தமிழகத்தை குறிப்பிடுவதாக கருதுகிறீர்கள்?

ஸ்ரீ லங்காவும் தென்னாடுதான். தமிழகமாவது மாநிலம்.
இலங்கைதான் நாடு. எனவே தென்னாடு என ஏன் இலங்கையை அவர்கள் குறித்திருக்க கூடாது என கேட்டேன்.நீங்க என்கிட்ட விதண்டாவாதம் பேசரீங்க என்றார். (இவர் இன்னும் வலைபதிவு எழுத ஆரம்பிக்கலை போல. அரம்பிச்சா எது விதண்டாவாதம்னு தெரியும் : ) ).

கோபாவேசத்துடன்....... நான் திருமறை பாடினால் சிவனே எழுந்தருளுவார் என்றார். அதுவரை பொறுமையாக இருந்த நான், திருமறை பாடாமலேயே நான் அழைத்தால் சிவன் வருவார் என்றேன்.. எப்படி என்பது போல என்னை பார்த்தார் அவர்..

“டேய் சிவா இங்க வா என்றேன்”... நான் வளர்க்கும் சிவா என்னிடம் வந்து வாலை ஆட்டியவாரே அவரை பார்த்து குலைத்தான்.

சிவனுக்கு தெரிந்திருக்கிறது யாரை பார்த்து குலைக்கவேண்டும் என்று..!
என்னுடன் இருக்கும் சிவாவும் லீலாவும்

---------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை கலைஞர்

ஒரு மனிதனுக்கு கலை ஞானம் உள்ளே மேம்பட மேம்பட நகைச்சுவை உணர்வும் மேம்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு கட்டத்தில் அந்த கலையானது

ஒருவித இறுக்கத்தை தழுவி அழியும். நம்ம ஊர் கர்நாடக சங்கீத மேதைகள் பலர் இறுக்கமாகவே இருப்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வு மிக மிக குறைவு எனலாம். தாங்கள் கலையை காக்க வந்த பிதாமகன்கள் என்ற தோரணையிலேயே இருப்பார்கள்.

விதிவிலக்குகள் எப்பொழுதும் நம்மிடம் உண்டு அல்லவா. அப்படிபட்டவர் திரு.நெய்வேலி சந்தானகோபாலன். தமிழகத்தில் கவனிக்கபடாத கலைஞன் என சொல்லலாம். அருமையான சங்கீத ஞானமும் குரள் வளமும் கொண்டவர். பலருக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்து கர்நாடக சங்கீத உலகில் பிராசிக்க செய்பவர். தொலைக்காட்சியில் சங்கீதம் சொல்லித்தரும் இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.திரு செம்மங்குடி மற்றும் திரு.பாலமுரளி கிருஷ்ணாவிற்கு பிறகு சில ராகங்களை நுணுக்கமாக கையாளக்கூடியவர். இவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது.

ஒரு உதாரணம் இதோ... ஒரு பேட்டியில் பேட்டி எடுப்பவரிடம் சந்தானகோபாலன் கேட்டார். பைரவி ராகம் யாரால் உருவாக்கபட்டது தெரியுமா? சிறிது இடைவெளிவிட்டு அவரே சொன்னார்..

By Ravi.

இவரை பற்றி முன்பின் தெரியாதவர்களுக்கு ஒரு டைமிங் பாடல் அவர் குரலில் இங்கே கேட்கவும் “பாடல்”

(உபரி செய்தியாக இந்த பாடலை எழுதியவர் யார் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். ஸ்ரீசக்ர புரிக்கும் பாடலாசிரியருக்கும் ஒரு தொடர்பு உண்டு..!)

திரு.சந்தானகோபாலன் வலைப்பூ எழுதுகிறார். அதன் முகவரி இதோ http://guruneyveli.blogspot.com/
-----------------------------------------------------------------------------------------

நான் நீ என்றால்....


முக்கியமாக ஒரு ஆவணத்தை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் புகைப்படம் ஒட்டுவதற்கு பசை தேவைப்பட்டது. எங்கு தேடியும் ஒட்டுவதற்கு பசை கிடைக்கவில்லை. சுப்பாண்டியிடம் கேட்டதற்கு, 'நாம்'னு சொல்லுங்க ஒட்டும், பஸ்சில் போட்டிருந்துச்சு என்றான்.

முடியல...

Wednesday, September 23, 2009

நவராத்திரி ஒரு சமூகத்தினரால் மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறது?


நவராத்திரி மட்டுமல்ல ஏனைய விஷயங்களை இவ்வாறு கேள்வியாக கேட்கப்படுகிறது.

திரு ஸ்ரீதரன் சென்ற பதிவில் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்டிருந்தார்.


சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்பிட்ட சில சமூகத்தினரால் ( பிராமின்ஸ் ) மட்டுமே வீட்டில் கொண்டாடப்படுகிறது. ஒரு எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் அனைத்து சமூகத்தினராலும் நடத்தப்பட்டது என்று ஒரு ஞாபகம் ( வித விதமான சுண்டல் கிடைக்குமே! ) மேலும் வீட்டில் நவராத்திரி பூஜை எப்படி நடத்தவேண்டும் ?

இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கலாமா என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். நவராத்திரி ஆன்மீக சம்பந்தபட்டது தானே? தாராளமாக கேட்கலாம். ஆன்மீக கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். எத்தனையோ பேர் விடையளித்த கேள்வியாக இருந்தாலும் என் விடை உங்களுக்கு சில புதிய கோணங்களை காட்டும். உங்களை சிந்திக்க வைக்கும். இந்த கேள்வியின் பதில் விளக்கமாகவும் நீண்டும் இருப்பதால் தனிபதிவாகவே போட்டுவிட்டேன்.

நவராத்திரி என்பது ஒரு ஆன்மீக ரீதியாகவும்,காலநிலைக்காகவும் மற்றும் கலாச்சாரத்திற்ககவும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. வீட்டின் முன் அறையில் படிகள் வைத்து அதில் கீழிருந்து மேலாக பொம்மைகள் அடுக்கி வைப்பார்கள்.

சின்ன ஜீவராசிகள் முதல் படிபடியாக ஜீவராசிகளின் தன்மைக்கு ஏற்ப அடுக்கி உயர் படிகளில் கடவுள் சிலை இருக்கும். அனைத்து ஜீவனும் படிபடியாக முன்னேறி கடைசியில் முக்தி அடைதலை குறிப்பது போல அமையும்.நவராத்திரி விழாவை பயன்படுத்தி அருகில் இருக்கும் வீடுகளுடன் நட்பை பலப்படுத்துவது, பரஸ்பர புரிதல் ஏற்படுத்துவது என்பது நம் கலாச்சாரம். நம் நாட்டில் கலாச்சரத்துடன் இசையும், நாட்டியமும் எப்பொழுதும் கலந்துதே இருக்கும். அதனால் குழந்தைகள் பிறருக்கு தங்கள் கலை அறிவை வெளிப்படுத்தும் ஒரு நாளாக இருக்கிறது.

நவராத்திரி அன்று குழந்தைகள் பெரியவர்கள் பாடுவதையும் கலை நிகழ்ச்சி செய்வதையும் கேள்விபட்டதுண்டா?


இவை எல்லாம் இருக்கட்டும்....

அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் தலைகீழாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எடிசன் மின்சார பல்ப் கண்டு பிடிக்கும் முன் விளக்குகள் மேல் நோக்கி இருந்தது. அதன் பின் விளக்கு கீழ் நோக்கி ஒளி கொடுக்கிறது. ஆட்டுக்கல் நிலையாக இருந்தது குழவி சுற்றியது அந்தகாலம், குழவி நிலையாக இருந்து ஆட்டுக்கல் சுற்றுவது கிரண்டர் காலம்.

அது போல அந்த காலத்தில் நவராத்திரியில் பொம்மைகள் படியில் அசையாமல் இருக்கும், மக்கள் அதன் முன் ஆடுவார்கள், பாடுவார்கள், பேசுவார்கள்.

இது விஞ்ஞனான காலமல்லவா? தொலைகாட்சி பெட்டி என்ற கொலு பொம்மை ஆடுகிறது பாடுகிறது பேசுகிறது. மக்கள் கொலு பொம்மைகளாக எப்பொழுதும் அதன் முன் அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்..!

ஏனைய வேதகாலத்தில் அனேக விஷயங்கள் அனைத்து தரப்பினரும் செய்து வந்தனர். நாளடைவில் அவை யானை பூனையான கதையாக தேய்ந்து வருகிறது. பூணல் போடுவது, மந்திரம் சொல்லுவது, ஆடை அணியும் முறை என அனைத்தும் வேதகாலத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால் தற்சமயம் பிராமணர்கள் என சொல்லும் குலம் மட்டுமே அதை செய்வதாக சொல்லுகிறோம். எனக்கு தெரிந்தவரை அவர்களில் அனேகர் அவற்றை சரியாக செய்வதில்லை. இன்னும் ஒரு ஐநூறு வருடங்களில் பல கலாச்சார மாற்றம் ஏற்படலாம்.

உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ பலவருடம் கழித்து ஒரு ஆன்மீகவாதியிடம் “ஏன் ஒரு சமூகம் மட்டும் தீபாவளி கொண்டாடுகிறார்கள் ?” என கேட்கும் நிலை வரலாம்.

பக்கத்து பிளாட்டில் இருப்பவர் இறந்த பின் துர்நாற்றத்தைவைத்து கண்டு பிடிக்கும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் நவநாகரீகமாக கொண்டாடப்படுகிறது. அப்படி இருப்பவர்கள் கொலுவைத்து பிறரை கூப்பிட்டு பாட்டு பாடி ரசனையுடன் கழிப்பார்களா?

சுயநலமான பணத்தேடல் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஒன்பது நாள் இதை கொண்டாடினால் என்ன கிடைக்கும் என கேள்வி கேட்கப்படுகிறது. வேலை வேலை என ஓடி குழந்தைகளிடம் கூட பேச முடியாமல் இருக்கும் உலகில் கொலுவைத்து கொண்டாடி ரசனையுடன் வாழ்வார்கள் என எதிர்பார்ப்பது நம் முட்டாள் தனமே.

பெண்களின் கலை ஆர்வத்திற்கும் ஆவர்களின் கைவேலைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழா நவராத்திரியாகும். ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் சமூக நிகழ்வுகளை ஒரு சிறிய இடத்தில் பொம்மைகளாக செய்து வைத்திருப்பார்கள். அதை பார்க்கும் பொழுது அந்த வீட்டு பெண்மணியின் அறிவு மற்றும் திறன் வெளிப்படும்.

இந்த வருடம் ஒரு வீட்டில் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஒரு பொம்மையாக அமைத்திருந்தார்கள். ஈழ படுகொலையை இன்னொரு பெண் தத்ரூபமாக செய்து அதன் அருகில் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி இருந்தாள்.

ஒருவீட்டின் பெண் அறிவாக இருக்கிறாள் என்றால் அந்த வீடு சுபிக்‌ஷமாக இருக்கும் என்பதன் அடையாளம். பலவீடுகள் அப்படி இருந்தால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம்.

இனி வரும் காலத்திலாவத் பெண்கள் நவராத்திரி கொண்டாட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமூதாயத்தை ஏற்படுத்துவார்கள் என பிரார்த்தனை செய்வோம்.