Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 17, 2009

மதுரையில் ஒரு அதிசயம்..!

னைவருக்கும் இது இவ்வளவு நாள் நான் சொல்லவில்லை. ரகசியமாக வைத்திருந்தேன். காரணம் அதிசயத்தை வெளியே சொல்ல முடியுமா என்ன?

அப்படி என்ன மதுரையில் அதிசயம் என்று தானே கேட்கிறீர்கள். வேறு ஒன்றும் இல்லை. அடுத்த வார இறுதி முழுவதும் நான் அங்கே தான் இருப்பேன். இதைவிட அதிசயம் வேறு வேண்டுமா?

ஜோதிட பயிற்சி கொடுப்பதற்காக 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன்.

உலகை காக்கும் மீனாட்சியும் சுந்தரேஷ்வரரை சந்திப்பதாக சொல்லி இருக்கிறேன். மதுரை சார்ந்த பதிவர்கள் விருப்பபட்டால் ஒரு எளிய பதிவர் சந்திப்பை செய்யலாம்.

உங்கள் விருப்பத்தை எனது மின்னஞ்சலில் தெரிவியுங்கள். நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்வோம்.


பின் குறிப்பு :

மதுரை வழக்கப்படி எனக்கு கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க விருப்பம் இருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுகே எனது புகைப்படத்தை அனுப்புகிறேன் :) என தாழ்மையுடன் கூறிக்கொ'ல்'கிறேன்.

20 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

எந்த கட்சி என்பதை குறிப்பிட்டால் மட்டுமே, கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது பற்றி முடிவு செய்ய இயலும்!!!

பயணம், நோக்கம் இனிதாக நிறைவேற வாழ்த்துக்கள்

Mahesh said...

ஃபிளக்ஸ் பேனர்கள் ?? அது என்னது? எப்பிடி இருக்கும்?

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி நிகழ்காலம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

ஜெனிவா, லூசெர்ன் என சுத்திகிட்டு இருந்தா என்ன தெரியும் ? :)

இங்க வந்து பாருங்க நாங்க இயற்கையை மேம்படுத்த ஏகப்பட்ட விஷயம் செய்யறோம்.

ஆயிரம் வருஷம் கழிச்சு அகழ்வாராய்ச்சி செஞ்சா “ஜீஜி பாய் பெற்றடுத்த சிவாஜியே..., மதுரையின் முடிசூடா மன்னனே” தலைப்போட பேனர் 'அப்படியே' இருக்கும் அதை பார்த்து விஞ்ஞானிகளும் நம்ம சந்ததிகளும் வரலாற்றை திருத்தி எழுதிக்குவாங்கல்ல?

நீங்க இங்க எப்போ வரீங்கனு சொல்லுங்க.. உங்களுக்கும் ஒரு ஆயிரம் கட்வுட் வைப்போம். :))
வரலாறு முக்கியம் அமைச்சரே..! :)

*இயற்கை ராஜி* said...

//நாங்க இயற்கையை மேம்படுத்த ஏகப்பட்ட விஷயம் செய்யறோம்.//


epdinga swami en account la etthuvum deposit panna poreengala...illa property ethum vanga poreengala:-))))

ஸ்வாமி ஓம்கார் said...

//epdinga swami en account la etthuvum deposit panna poreengala...illa property ethum vanga poreengala:-))))//

அக்கா... முடியல..


இந்த கோயமுத்தூர் குசும்புக்குதான் நான் மதுரைக்கு ஷிப்டு ஆயிடறேன்..:) !

Mahesh said...

//வரலாறு மிக முக்கியம் //

அப்ப ஃப்ளக்ஸ் பேனர்லாம் அவிங்களா பிரியப்பட்டு வெக்கறதில்லையா? நாமளா வெக்கச் சொல்லி வெச்சுக்கறதா? அட்டா... இது தெரியாம இருந்துருக்கேனே? சே... நானெல்லாம் அரசியல்ல வந்து ஒண்ணும் சாதிக்க முடியாது போல இருக்கே :(

ஆ.ஞானசேகரன் said...

ம//துரை வழக்கப்படி எனக்கு கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க விருப்பம் இருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுகே எனது புகைப்படத்தை அனுப்புகிறேன் :) என தாழ்மையுடன் கூறிக்கொ'ல்'கிறேன்.//

ஆகா....

தாரணி பிரியா said...

//மதுரை வழக்கப்படி எனக்கு கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க விருப்பம் இருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுகே எனது புகைப்படத்தை அனுப்புகிறேன் :)//

:)

இராம்/Raam said...

நல்ல வேளை.. எங்கூரூ'லே இருந்து போன வாரமே இங்கன வந்துட்டேன்... :)

இராம்/Raam said...

//மதுரை வழக்கப்படி எனக்கு கட்-அவுட் மற்றும் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்க விருப்பம் இருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சலுகே எனது புகைப்படத்தை அனுப்புகிறேன்//

எங்கூரூ பாசக்காராய்ங்கே எல்லாருக்கும் வைக்கமாட்டாய்ங்கே... விசயமில்லாமே கா'காசு நவட்டமாட்டானுக.. :)

தருமி said...

வருக .. வருக .. மதுரைக்கு.

உங்களை அங்கே தொடர்பு கொள்ள உங்கள் எண் தேவையே ..
என் முகவரி: dharumi2@gmail.com

பேனருக்கு சொல்லியாச்சி ...

எம்.எம்.அப்துல்லா said...

// சே... நானெல்லாம் அரசியல்ல வந்து ஒண்ணும் சாதிக்க முடியாது போல இருக்கே :(

//

ஒரு ரெண்டுநாள் லீவு எடுத்துக்கிட்டு வா மகேஷ் அண்ணே. சிங்கிள் டியூஷன்ல எல்லாம் புரிய வச்சுடுறேன்.

:)))

Thamizhan said...

உலகத்திலேயே அதிக இளிச்சவாயர்கள் தமிழ்நாட்டிலே தான்.
ஜோசியம்,வாஸ்து,என்னவெல்லாம் சொல்லி ஏமாத்த முடியுமோ அடிச்சுத் தள்ளுங்க.படிச்சவன்,பண்க்காரன் எல்லாம் மூளையை அடகு வச்சுட்டு பண்த்தை அள்ளி வழங்குவாங்க.
வாங்கிக்கங்க.
ஒரு ஸ்ரீ ஸ்ரீ ரேஞ்சுக்கு பிளான் போடுங்க.உலகெங்கும் உள்ள தமிழர்கள்,மற்றவர்கள் எலோரையும் புடிச்சா போச்சு.

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஞான சேகரன்,

சகோதரி தரணிபிரியா,

திரு இராம்,

அப்துல்லா அண்ணே.

திரு தமிழன்,

திரு ஆப்பு,

உங்கள் வருகைக்கு நன்றி.

sasi said...

its too much swamyji

Anonymous said...

Wow, Swamiji, Welcome to Madurai. My Divine Mother Meenakshi amman and Divine father Sundareshwarar will be happy to receive you. Best wishes and have a great time. I am a native of madurai and I am glad you are visiting my native place. Right now, I am in US though!

essusara said...

aaha oru groupaa than kelambi irukangaya

onnu kooditaganaya ! onnu kooditanga.

senthil said...

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?


நல்ல போயிட்டு வாங்க.........!!!!!!!!!!