வேதகால வாழ்க்கை என்பதில் மூன்று இயற்கை உயிர்கள் சுழற்சி முறையிலும் ,பரஸ்பரமும் பகிர்ந்து வாழ்ந்தல் அவசியமாகிறது. பிரபஞ்ச சக்தியை முழுமையாக மரங்கள் பெறுவதற்கு மரங்கள் மிகவும் ஊட்டச்சத்துடன் வாழவேண்டும். மரங்களின் ஊட்டத்தை பெறுக்க பசுவின் மூலம் ஏற்படும் பஞ்சகவ்யம் மிகவும் தேவையான ஒரு விஷயம்.
பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையாகும். பஞ்சகவ்யம் இருந்தால் தான் மரம் வளரும் என்பது அல்ல. மரங்கள் செறிவுடன் மிகவும் திறன்வாய்ந்த ப்ரபஞ்ச ஆற்றல் மையங்களாக இருக்க இந்த ஊட்டம் தேவைபடுகிறது. பசு மிகவும் ஆற்றல் வாய்ந்த ப்ராண கேந்திரம் என தெரிந்துகொண்டோம்.
அது போல பஞ்சகவ்யத்தை கொண்டு வளர்ந்த மரங்கள் பசுவுக்கு இணையான ஆற்றல் ஏற்படுத்துகிறது. காரணம் மரம் தனது உயிர் சக்தியை பசுவின் ஆற்றல் மூலமே பெறுகிறது. இவ்வாறு வளர்க்கபட்ட தாவரங்கள் பசு இவை அனைத்தும் சமமான சக்தியை கொண்டு நம்மை சுற்றி பல சக்தி மையங்களை ஏற்படுத்தும்.
தொடர்ந்து தடையில்லாத பிரபஞ்ச சக்தி நம்மில் ஊடுருவ வாழ்ந்துவந்தால் வேறு என்ன நமக்கு வேண்டும்?
பஞ்சகவ்ய பொருட்களை நான் பட்டியலிட்டவுன் அதில் அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். பஞ்சகவ்யம் என்பது மரத்திற்கு போடும் உரமாகவும், ஊட்டமளிக்கும் தாவர உணவாகவும் பார்க்கப்படுகிறது.
உண்மையில் பஞ்சகவ்யம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஊட்ட சத்து. மனிதர்களுக்கு ஆயுர்வேதத்தில் சக்தியை பெற மருந்தாக வழங்கப்படுகிறது. என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான். அதுவும் சரிவிகிதத்தில் பசுவினால் கிடைக்கும் பொருட்களை கலந்தால் அவை உயிர்சக்தியை வளர்க்கும் ஒரு அருமருந்து.
பஞ்சகவ்யத்திற்காக தனியாக பசுமாடு வளர்க்கப்பட வேண்டும். இப்பசு ஒரு முறை மட்டுமே கன்று ஈன்றதாக இருக்க வேண்டும். அடுத்த முறை கன்று ஈன்றால் அவற்றை தவிர்த்து புதிய பசுவை பயன்படுத்த வேண்டும். பஞ்சகவ்யத்திற்காக பயன்படுத்தப்படும் பசுக்கள் புல் மற்றும் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என பஞ்சகவ்யம் தயாரிக்கும் பசுவை தயாரிக்கவே கொஞ்சம் சிரமம் எடுக்க வேண்டும்.
பஞ்சகவ்யம் தயாரிக்க என்றவுடன் ஒரு வாளியை எடுத்து ஒரு வாளி சாணம், ஒரு வாளி சிறுநீர் என அளந்து கலக்கிவிடக்கூடாது. பஞ்சகவ்யம் கலப்பதற்கு என சில விகிதாச்சாரம் உண்டு. மேலும் பஞ்சகவ்ய பொருட்களுடன் உபகவ்யம் என்ற வெல்லம், துளசி மற்றும் வேப்ப எண்ணெய் இவற்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.
தற்கால விவசாயிகள் பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 முதல் ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றச்சூழல், தாவரம் மற்றும் மண் தன் தன்மையை இழந்துவருகிறது. இவை நேரடி பாதிப்புகள். இது தவிர ரசாயனம் இருக்கும் விளைநிலத்தில் ப்ராண சக்தி பரவுவது தடுமாற்றம் ஏற்படுகிறது. ப்ராண சக்தி புலம் மிகவும் குறுகிவிடுகிறது. இத்தகைய விளைநிலங்களில் வளரும் உணவு பொருட்களை உண்பதால் நம் உடலில் ப்ராணனில் அளவும் மிகவும் தடுமாற்றம் ஏற்படுகிறது.
பசுமை புரட்சிக்கு பின் புற்றுநோய் ஏற்படுவதன் அளவும், குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பயணிக்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான ஒரு சூழலை சந்தித்தேன். அந்த கிராமத்தின் ஓவ்வொரு வீட்டிலும் ஒரு புற்றுநோயாளி இருக்கிறார். அவர்களுக்கு புற்றுநோய் பற்றி சரியாக தெரியவில்லை. கிராம ஆர்வலருடன் நான் சென்று அவர்களை சந்தித்தேன். தற்சமயம் அவர்கள் சற்று புற்றுநோய் பற்றிய விஷயங்கள் தெரிந்து வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் என்ன தெரியுமா? தேயிலை தோட்டத்தில் தெளிக்கும் ரசாயன உரங்கள் மண்ணில் கலந்து தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் சங்கமிக்கிறது. அந்த ஓடை நீரைத்தான் அந்த கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். யாரோ செய்யும் ரசாயன உர வியாபரத்தாலும், விவசாயத்தாலும் ஒரு கிராமமே பாதிக்கப்பாட்டுள்ளது.
உண்மையில் அந்த கிராம வாசிகள் போல நாமும் ஒருவிதத்தில் பாதிக்கபட்டு இருக்கிறோம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவு பொருட்கள் வேண்டும் என கேட்கிறார்கள்.
ஆனால் நாம் பல கப்பல்களில் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரசாயன உரத்தால் கொல்வதற்கு பதில் ஒரு அணுகுண்டை அவர்கள் நம்மீது ஏவினால் சந்தோஷப்படுவேன்.
இதுவே இயற்கை முறையில் பஞ்சகவ்யம் மற்றும் இதர இயற்கை முறை விவசாயம் செய்தால் இப்படி பட்ட நிலை இல்லை. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு பசுவும், இயற்கை விவசாயமும் அவசியம் ஆகிறது.
ரசாயன உரம் அவ்வளவு கொடியதா என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒரு விவசாயி ரசாயன உரத்தை தாவரங்களுக்கு தெளிக்கிறார், அப்படி தெளிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அந்த உரத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன ஆவார்?
ஆனால் பஞ்சகவ்யத்தை ஒருவர் பயிருக்கு செலுத்தும் பொழுது அதை ஒரு கைப்பிடி எடுத்து உண்டாலும் ஒன்றும் ஆகமாட்டார். மாறாக நல்ல உடல் நலமும் , ஆன்ம பலமும் பெறுவார்.
தாவரங்கள் நம்மை விட அதிக பலம் கொண்டவை என்பதற்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தும். விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை தெளித்தாலும் மனிதனை போல் உயிர்விடாமல் அதற்கு எதிராக போராடி உயிர்பெறுகிறது தாவரம். தாவரங்களை ஒரு உயிராக பார்க்காமல் வியாபார பொருட்களாக பசுமை புரட்சியாளர்கள் பார்த்தார்கள். அதன் விளைவு நீங்களும் நானும் தரமான விவசாய பொருட்கள் கிடைக்காமலும், கொள்ளை விலையில் அரிசியையும் பருப்பையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை போன்ற ஒரு உயிர் என விவசாயி நினைத்தால் அன்று முதல் தன்னையே தியாகம் செய்ய தாவரங்கள் தயாராகாதா? விவசாயிக்கு ஏற்படும் இந்த எண்ணம் தானே தாவரத்திற்கு தேவையான முக்கிய ஊட்டசத்து? ரசாயனத்தை கொடுத்ததற்கு பன்மடங்கு அந்த தாவரம் திரும்ப நமக்கு என்ன கொடுத்தது என நடைமுறையில் காண்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம்.

இப்படத்தில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தாவரமும், பசுவும் பரஸ்பரம் கொடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் பெற மட்டுமே செய்கிறான்.
ப்ராண சக்தியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் பெரியவன் என்ற மனித அஹங்காரம் நொருங்கிவிடும். எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....
இல்லை என்றே கூறவேண்டும்.
புளிய மரம் போன்றவை ப்ராணனை குறைக்கும் என்று கூறினேன் அல்லவா? அப்படியானால் எவை பயன்படுத்த தகுந்தவை? அடுத்த பகுதியில் பார்ப்போம்
பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையாகும். பஞ்சகவ்யம் இருந்தால் தான் மரம் வளரும் என்பது அல்ல. மரங்கள் செறிவுடன் மிகவும் திறன்வாய்ந்த ப்ரபஞ்ச ஆற்றல் மையங்களாக இருக்க இந்த ஊட்டம் தேவைபடுகிறது. பசு மிகவும் ஆற்றல் வாய்ந்த ப்ராண கேந்திரம் என தெரிந்துகொண்டோம்.
அது போல பஞ்சகவ்யத்தை கொண்டு வளர்ந்த மரங்கள் பசுவுக்கு இணையான ஆற்றல் ஏற்படுத்துகிறது. காரணம் மரம் தனது உயிர் சக்தியை பசுவின் ஆற்றல் மூலமே பெறுகிறது. இவ்வாறு வளர்க்கபட்ட தாவரங்கள் பசு இவை அனைத்தும் சமமான சக்தியை கொண்டு நம்மை சுற்றி பல சக்தி மையங்களை ஏற்படுத்தும்.
தொடர்ந்து தடையில்லாத பிரபஞ்ச சக்தி நம்மில் ஊடுருவ வாழ்ந்துவந்தால் வேறு என்ன நமக்கு வேண்டும்?
பஞ்சகவ்ய பொருட்களை நான் பட்டியலிட்டவுன் அதில் அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். பஞ்சகவ்யம் என்பது மரத்திற்கு போடும் உரமாகவும், ஊட்டமளிக்கும் தாவர உணவாகவும் பார்க்கப்படுகிறது.
உண்மையில் பஞ்சகவ்யம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஊட்ட சத்து. மனிதர்களுக்கு ஆயுர்வேதத்தில் சக்தியை பெற மருந்தாக வழங்கப்படுகிறது. என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான். அதுவும் சரிவிகிதத்தில் பசுவினால் கிடைக்கும் பொருட்களை கலந்தால் அவை உயிர்சக்தியை வளர்க்கும் ஒரு அருமருந்து.
பஞ்சகவ்யத்திற்காக தனியாக பசுமாடு வளர்க்கப்பட வேண்டும். இப்பசு ஒரு முறை மட்டுமே கன்று ஈன்றதாக இருக்க வேண்டும். அடுத்த முறை கன்று ஈன்றால் அவற்றை தவிர்த்து புதிய பசுவை பயன்படுத்த வேண்டும். பஞ்சகவ்யத்திற்காக பயன்படுத்தப்படும் பசுக்கள் புல் மற்றும் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என பஞ்சகவ்யம் தயாரிக்கும் பசுவை தயாரிக்கவே கொஞ்சம் சிரமம் எடுக்க வேண்டும்.
பஞ்சகவ்யம் தயாரிக்க என்றவுடன் ஒரு வாளியை எடுத்து ஒரு வாளி சாணம், ஒரு வாளி சிறுநீர் என அளந்து கலக்கிவிடக்கூடாது. பஞ்சகவ்யம் கலப்பதற்கு என சில விகிதாச்சாரம் உண்டு. மேலும் பஞ்சகவ்ய பொருட்களுடன் உபகவ்யம் என்ற வெல்லம், துளசி மற்றும் வேப்ப எண்ணெய் இவற்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.
தற்கால விவசாயிகள் பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 முதல் ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றச்சூழல், தாவரம் மற்றும் மண் தன் தன்மையை இழந்துவருகிறது. இவை நேரடி பாதிப்புகள். இது தவிர ரசாயனம் இருக்கும் விளைநிலத்தில் ப்ராண சக்தி பரவுவது தடுமாற்றம் ஏற்படுகிறது. ப்ராண சக்தி புலம் மிகவும் குறுகிவிடுகிறது. இத்தகைய விளைநிலங்களில் வளரும் உணவு பொருட்களை உண்பதால் நம் உடலில் ப்ராணனில் அளவும் மிகவும் தடுமாற்றம் ஏற்படுகிறது.
பசுமை புரட்சிக்கு பின் புற்றுநோய் ஏற்படுவதன் அளவும், குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பயணிக்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான ஒரு சூழலை சந்தித்தேன். அந்த கிராமத்தின் ஓவ்வொரு வீட்டிலும் ஒரு புற்றுநோயாளி இருக்கிறார். அவர்களுக்கு புற்றுநோய் பற்றி சரியாக தெரியவில்லை. கிராம ஆர்வலருடன் நான் சென்று அவர்களை சந்தித்தேன். தற்சமயம் அவர்கள் சற்று புற்றுநோய் பற்றிய விஷயங்கள் தெரிந்து வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் என்ன தெரியுமா? தேயிலை தோட்டத்தில் தெளிக்கும் ரசாயன உரங்கள் மண்ணில் கலந்து தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் சங்கமிக்கிறது. அந்த ஓடை நீரைத்தான் அந்த கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். யாரோ செய்யும் ரசாயன உர வியாபரத்தாலும், விவசாயத்தாலும் ஒரு கிராமமே பாதிக்கப்பாட்டுள்ளது.
உண்மையில் அந்த கிராம வாசிகள் போல நாமும் ஒருவிதத்தில் பாதிக்கபட்டு இருக்கிறோம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவு பொருட்கள் வேண்டும் என கேட்கிறார்கள்.
ஆனால் நாம் பல கப்பல்களில் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரசாயன உரத்தால் கொல்வதற்கு பதில் ஒரு அணுகுண்டை அவர்கள் நம்மீது ஏவினால் சந்தோஷப்படுவேன்.
இதுவே இயற்கை முறையில் பஞ்சகவ்யம் மற்றும் இதர இயற்கை முறை விவசாயம் செய்தால் இப்படி பட்ட நிலை இல்லை. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு பசுவும், இயற்கை விவசாயமும் அவசியம் ஆகிறது.
ரசாயன உரம் அவ்வளவு கொடியதா என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒரு விவசாயி ரசாயன உரத்தை தாவரங்களுக்கு தெளிக்கிறார், அப்படி தெளிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அந்த உரத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன ஆவார்?
ஆனால் பஞ்சகவ்யத்தை ஒருவர் பயிருக்கு செலுத்தும் பொழுது அதை ஒரு கைப்பிடி எடுத்து உண்டாலும் ஒன்றும் ஆகமாட்டார். மாறாக நல்ல உடல் நலமும் , ஆன்ம பலமும் பெறுவார்.
தாவரங்கள் நம்மை விட அதிக பலம் கொண்டவை என்பதற்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தும். விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை தெளித்தாலும் மனிதனை போல் உயிர்விடாமல் அதற்கு எதிராக போராடி உயிர்பெறுகிறது தாவரம். தாவரங்களை ஒரு உயிராக பார்க்காமல் வியாபார பொருட்களாக பசுமை புரட்சியாளர்கள் பார்த்தார்கள். அதன் விளைவு நீங்களும் நானும் தரமான விவசாய பொருட்கள் கிடைக்காமலும், கொள்ளை விலையில் அரிசியையும் பருப்பையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை போன்ற ஒரு உயிர் என விவசாயி நினைத்தால் அன்று முதல் தன்னையே தியாகம் செய்ய தாவரங்கள் தயாராகாதா? விவசாயிக்கு ஏற்படும் இந்த எண்ணம் தானே தாவரத்திற்கு தேவையான முக்கிய ஊட்டசத்து? ரசாயனத்தை கொடுத்ததற்கு பன்மடங்கு அந்த தாவரம் திரும்ப நமக்கு என்ன கொடுத்தது என நடைமுறையில் காண்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம்.
வேதகால வாழ்க்கை முறையை எளிமையாக விளக்கும் ஒரு படம்.
இப்படத்தில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தாவரமும், பசுவும் பரஸ்பரம் கொடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் பெற மட்டுமே செய்கிறான்.
ப்ராண சக்தியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் பெரியவன் என்ற மனித அஹங்காரம் நொருங்கிவிடும். எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....
இல்லை என்றே கூறவேண்டும்.
புளிய மரம் போன்றவை ப்ராணனை குறைக்கும் என்று கூறினேன் அல்லவா? அப்படியானால் எவை பயன்படுத்த தகுந்தவை? அடுத்த பகுதியில் பார்ப்போம்
(.... வேதம் ஒலிக்கும்)

