Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 28, 2008

இன்று கேட்க ஒரு மந்திரம்

அனைவருக்கும் வணக்கம்,

இனி வரும் காலங்களில் ஒலி மூலம் பதிவுகள் அமைக்கலாம் என இருக்கிறேன் .

அதன் துவக்கமாக ஓர் மந்திரம்.


பிரபஞ்ச பிரார்த்தனைகள்





பொருள் :

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் தன்னிறைவுடனும், அமைதியுடனும், முழுமையுடனும் , சுபிக்ஷமாகவும் இருக்க வேண்டும்.

Friday, October 24, 2008

ஐஸ்வர்ய பூஜை

அறிவிப்பு :
இப்பதிவுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் எந்த சம்மந்தமும் அல்ல.
()அடைப்பு குறியில் கூறிய கருத்துக்கள் பிற சேர்க்கை அதில் ’சீரியசாக’ எதையும் தேட வேண்டாம்.

முதலில் அனைவருக்கும் “தீபாவளி நல்வாழ்த்துக்கள்”.

தீபாவளி கொண்டாட வேண்டுமா , நமது கலாச்சாரமா என கேட்பதற்கு முன் எனது சில கருத்துக்கள்.


மனிதன் தனது ஆனந்தத்தை புதுப்பித்து கொள்ள கொண்டாட்டங்கள் தேவைப்படுகிறது. அவனது அன்றாட பணிகளுக்கிடையே எடுக்கும் சிறிது விடுமுறை தான் இது போன்ற பண்டிகை. இதனால் அந்த தனிமனிதன் தனது வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி கொள்ள முடியும். பண்டிகைக்கு பிறகு அவனது அன்றாட செயலில் உற்சாகம் ஏற்படுவதற்கான ஒரு வித்தாக இது அமையும்.

அதனால் கொண்டாட்டங்களில் மத முலாம் பூசுவதை நான் வெறுக்கிறேன். பிறருக்கு தொல்லை தராதவகையில் தனிமனிதன் ஆனந்தமாக இருக்க முடியுமானால் அந்த ஆனந்தம் முக்கியமானது.அனைத்து கலாச்சரத்திலும் கொண்டாடப்படும் பண்டிகைகளின் காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.

ஐரோப்பிய கண்டத்தில் மதம், கடவுள் நம்பிக்கை இல்லதவர்கள் அதிகம். ஆனால் அவர்கள் கிருஸ்துமஸ் கொண்டாடுவர்கள். கிருஸ்து பிறந்ததற்காக அல்ல. தங்களின் உள்ளே ஆனந்தம் பிறக்கவேண்டும் என்பதற்காக.

கிருஸ்து
பிறந்தால் என்ன ஆனந்தம் பிறந்தால் என்ன? விஷயம் ஒன்றுதானே.?

பாரத கலாச்சாரத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் சில காரண காரியங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது கிரக அமைப்புகள். 90% பண்டிகைகள் கிரகநிலை கொண்டே முடிவுசெய்யபட்டுள்ளது. (பலகாரத்தை கொண்டு இல்லையா என கேட்பது புரிகிறது)

சூரியன் கதிவீச்சு நமக்கு பல ஆதார சக்தியாக இருக்கிறது. சூரியனின் கதிர்கள் நமது உடலுக்கு சில வைட்டமின்கள் கொடுக்கிறது.

(இதில் ’மின்’ இருக்கே அதனால தான் மின்சாரம் எடுக்க முடியுதானு கேட்ட கூடாது. ஏற்கனவே மின்சார
கொடுமையில் எனது சகோதரர்கள் வாடுகிறார்கள்- இதில் இது வேறயா?).

சூரிய ஒளி இல்லாவிட்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. இன்னும் கிராமத்தில் நோய் குணமாகும் தருணத்தில் சிறிது நேரம் வெயிலில் உற்காரச் சொல்லுவார்கள்.அதன் காரணம் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்காகத்தான்.

(இளைஞர்களே...வேலைக்கு போகாமல் இருக்கும் உங்களை உங்கள் தந்தை அவ்வாறு உற்கார சொல்லுவது நோய் எதிர்ப்பு சக்திகாக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.)

அவ்வாறு பயன்படும் சூரியன் ஐப்பசி மாதம் தனது வலுவை இழக்கிறான். வருடத்தில் 11 மாதம் சிறப்பாக செயல்படும் அவன் மழையாலும் , கால மாற்றத்தாலும் தற்காலிகமாக ஓய்வு எடுக்கிறான்.

சந்திரனுக்கு ஒளி எப்படி வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

( உண்மையா உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? என்னுடைய மாணவர் ஒருவன் - பொறியியல் படித்தவன். ஐயா சூரிய
ஒளிதான் சந்திரனுக்கு கிடைக்கிறது என்கிறீர்களே, இரவில் சூரியன் தெரிவதில்லையே அப்புறம் எப்படி சந்திரன் எதிரொளிக்கும்? மலைபகுதியில் நமது குரல் நமக்கே கேட்பது போல காலையில் இருக்கும் சூரிய ஒளி மாலையில் எதிரொ(லி)ளிக்குமா? என கேட்டான். அவனை போன்ற பிரகஸ்பதிகள் இனிமேல் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

ஐப்பசி மாதத்தில் காலை நேரத்தில் சூரிய ஒளி வலு இழக்கும் என சொன்னேன். இரவில் அதன் பிரதியான சந்திரனும் சூரிய ஒளி இல்லாமல் வலு இழக்கும் நாள், அமாவாசை.

அப்பொழுது அந்த நாள் முழுவதும் சூரிய ஒளி தாக்கம் இல்லத காரணத்தால் நோய் வர வாய்ப்புண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

வரும் முன் காப்பது விவேகம் அல்லவா? அதனால் நீராடி, நல்ல தூய்மையான உடை உடுத்தி, உடல் வலு சேர்க்கும் உணவை அதற்கு முன்பு உட்கொண்டால் உடல் நிலையில் மேம்பாடு அடைவோம்.

இதை செய்யத்தான் அமாவாசைக்கு ஒரு நாள் முன்பு தீபாவளி கொண்டாடுகிறோம்.

சூரிய தாக்கத்தை உணர்ந்தவர்கள் எண்ணெய் தேய்து குளித்து,தூய்மையான ஆடை மற்றும் உடலுக்கு உறுதி சேர்க்கும் பலகாரங்களை சுவைத்தனர். விவசாயிகள் மற்றும் பிற தொழில் செய்பவர்களும் கூட அன்று எளிதில் ஜீரணிக்கும் உணவான அரிசியையும், உடலுக்கு வலு சேர்க்கும் மாமிசத்தையும் உண்டனர்.

ஆனால் இப்பொழுது நடப்பதோ வேறு. வெள்ளை சக்கரையில் பலகாரம் ( எலும்பை கரைக்கும் வஸ்து) , மேல்நாட்டினரின் ஜீன்ஸ் ( சந்ததியை குறைக்கும் வஸ்து) அணிந்து , சீனர்கள் கண்டுபிடித்த பட்டாசை (காதுகளுக்கு நல்லது) வைத்து ஓர் உலகமயமான[Globalization] தீபாவளியை கொண்டாடுகிறோம்.

சரி தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும்?

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து ( வருஷத்திற்கு ஒருமுறையாவது செய்யுங்கள் என் தங்கங்களே), புத்தாடை உடுத்துங்கள். உடலுக்கு வலிமை சேர்க்கும் உணவை உண்டு. உடல் வேர்வை சிந்த சில தூரம் காலார நடங்கள். (ஆத்திகராய் இருந்தால் கோவிலுக்கும், நாத்திகராய் இருந்தால் கழகத்திற்கும் செல்லலாம்.). உங்கள் உறவினருடன் பேசி மகிழுங்கள். முடிந்தவரை தொலைக்காட்சியை தவிருங்கள். (அதற்காக டிவிடி பார்க்கலாம என கேட்க கூடாது)

பட்டாசு என்பது நமக்கும் நமது சூழ்நிலைக்கும் கேடுகளை கொடுக்கும். தவிர்க்கலாம். நீங்கள் தவிர்ப்பதன் மூலம் சிவகாசியில் ஓர் குழந்தை எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வாய்ப்புண்டு. அனைவரும் தவிர்ப்பது நலமே. ( ரொம்ப செண்டிமண்டா இருக்கா? எதுக்கும் ட்ரை பண்ணுங்க).


அமாவசைக்கு முன் வரும் சதுர்தசி திதியை இவ்வாறு கொண்டாட சொல்ல காரணம் வேண்டாமா? அதற்குதான் நரகாசுரனும் கிருஷ்ணர் கதையும். ( நரசூஸ் காபி வித் நரகாசுரன்னு சொர்கத்தில் ஓர் நிகழ்ச்சி நடக்குது உங்களுக்கு தெரியுமா?)


ஓர் ஆணும்
பெண்னும் வீட்டிற்கு தெரியாமல் கொண்டாடும் காதலர் தினத்திற்கே வாலண்டைன் எனும் பாதரியார் உயிர் துறக்க வேண்டி இருந்தது. ஒரு நாடே கொண்டாடும் கொண்டாட்டதிற்கு ஏதேனும் ஒர் காரணம் வேண்டுமல்லவா?.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன் (அப்போ இன்னும் ஆரப்பிக்கவே இல்லையா?).

தீபாவளிக்கு பிறகு வரும் அமாவசையின் எதிர்தன்மைகளை சொன்னேன். அதில் சில நன்மைகளும் உண்டு. ( நீங்கள் அன்று குளிப்பதை சொல்லலை. ஏன் அதையே திரும்ப திரும்ப நினைக்கிறீங்க?.)

அன்று இருக்கும் கிரக நிலையில் சூரியன் முதல் ராசிக்கு 7ஆம் இடத்தில் இருக்கிறான். நான்காம் இடமான கடகராசி அதிபதியுடன் கூடி இருக்கிறான். கிரக நிலையில் 4,7ஆம் இடங்களுக்கு என்று சில நன்மைகள் உண்டு.

என்ன நன்மைகள்?

நமது செல்வம் மற்றும் உடமைகள் மேம்படவும். நமது செளகரியங்கள் உயரவும் மனதில் தீர்க்கமான உறுதி மொழி எடுத்தால் நடைபெறும். அதனால் அன்று மாலை, அமாவாசை வரும் சமயம் உங்கள் வீட்டில் மனதார பூஜை செய்யவும்.

இதற்கு குபேர லஷ்மி பூஜை என பெயர். உங்கள் செல்வங்களை கடவுளிடம் வைத்து கண்களால் அதை நன்றாக பார்த்து மகிழ்ந்து மனதில் செல்வம் மேம்பட பிரார்தனை செய்யலாம்.

( ரத்ன்லால் கடை அடகு சீட்டை வைக்கலாமா என யோசிப்பவர்கள் மேல் கடுமையான சட்டம் பாயும் என எச்சரிக்கப்படுகிறார்கள்)


புதிதாக ஏதாவது பொருளை வாங்கி வைக்கலாம். அல்லது யாருக்காவது தானம் கொடுத்து அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சி அடையலாம். இதை செய்வதனால் அன்று ஏற்படும் கிரக ஆதிக்கம் உங்கள் மனதில் வேர் ஊன்றி வளர்ந்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.

வரும் செவ்வாய் [28-10-2008] அமாவாசை அன்று மாலை 6மணி முதல் 7 மணிக்குள் [இந்திய நேரம்] அன்று உங்கள் வாழ்க்கையை ஐஸ்வர்யமாக மாற்ற வீட்டில் ப்ரார்த்தனை செய்யுங்கள்.


இது ஜாதி,மத,இன வேறு பாடுகள் இன்றி யார் வேண்டுமானாலும் செய்யலாம். சடங்கு சம்பிரதாயம் அன்று என்ன சுலோகம் என்றேல்லாம் கேட்பது தேவை இல்லை. சூரியனும் சந்திரனும் ஓர் குறிப்பிட்ட சமூகத்திற்கோ , மதத்திற்கோ சம்பந்த பட்ட விஷயம் அல்ல. நமக்கு தேவை அன்று எடுக்கும் மன உறுதி மட்டுமே.
(ஸ்லோகம் கேட்டா சொல்லுவீங்கல்ல?)



பண்டிகையை பற்றியும் அதன் தாத்பரியத்தைப் பற்றியும் விளக்கும் இந்த கட்டுரையின் இடை இடையே நகைச்சுவை பகுதிகள் எப்படி உங்களை சிரிக்கவைத்ததோ அது போல சீரியசான இந்த வாழ்க்கையின் இடையே கொண்டாடப்படுவதுதான் பண்டிகை.

ஆனந்தமாக இருக்க காரணம் வேண்டுமா? ஆனந்தமாக இருங்கள் அதற்கு காரணத்தை தேடதீர்கள்.

மீண்டும் கொண்டாட்ட நாள் வாழ்த்துக்கள்.

Thursday, October 23, 2008

போதை பழக்கம்

- போதை ஒரு சுய வதை

பழக்கங்கள் பலவிதம். இதில் தன்னை வருத்தி அதனால் அடுத்தவர்களும் துன்பப்பட செய்யும் பழக்கத்தை தவறான பழக்கம் என கூறலாம். உலகில் இது போன்ற பழக்கங்கள் அதிக அளவில் பெருகிவருகிறது. இது போன்ற போதைப் பழக்கத்தை மூலதனமாக கொண்டு வியாபாரம் நடத்தும் பலரைக் காண்கிறோம். மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அரசின் கஜானா கூட கசமான அளவு மதுவின் மூலமே றைகிறது. புகைப்பழக்கத்தால் ஒரு நிமிடத்திற்கு 2 நபர்கள் உலகில் இறக்கிறார்கள். இது உலக புற்றுநோய் அமைப்பின் செய்தி. இந்த பக்கத்தை படித்து முடித்ததும் 4 நபர்கள் இறந்திருப்பார்கள் என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்.

3 ஆம் பாவம் பழக்கவழக்கத்தையும், சமூக கோட்பாடுகளை எதிர்த்து தைரியமாக செயல்படுவதைக் குறிக்கும். 5 ஆம் பாவம் போகத்தை குறிக்கும். 12ஆம் பாவம் தன்னிலை மறப்பதைக் குறிக்கும்.ஆக 3,5,12 ஆம் பாவங்கள் போதையைக் குறிக்கும் பாவங்கள் ஆகும். 3ஆம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி நின்ற நட்சத்திரம் 3,5,12 ஐ குறிகாட்டினால் போதைப் பழக்கத்திற்கு அடிமை எனலாம். அரசு அங்கீகாரம் செய்த போதை பொருள்களுக்கு சனியும் , அங்கீகாரம் பெறாத பொருள்களுக்கு ராகுவும் தொடர்பு கொள்வார்கள். இதில் நெப்டியூனின் தொடர்பு அதிகப்படியாக போதைக்கு அடிமையானவர்களை காட்டும்.

3,5,12 ஆம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் 3ஆம் பாவமானது 1,6 பாவத்துடன் தொடர்புகொண்டால் இந்த பழக்கத்தால் வியாதி ஏற்படும். மாரகபாதக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டால் இறப்பும் ஏற்படும்.

மேலும் ஜாதக ரீதியாக ஒருவர் எப்படிப்பட்ட போதை பொருளை பயன்படுத்துவார் என தெரிந்துகொள்ள முடியும். இதை விவரித்தால் தவறான பாதையில் செல்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை தவிர்க்கிறேன்.

அதிக போதை உற்கொள்வதால் சித்த பிரம்மை ஏற்படும் என்பதை 3 ஆம் பாவம் 8,12 உடன் தொடர்பு காட்டும். போதைப் பழக்கத்திருந்து விடுபடுவதை 1,5,11 ஆம் பாவத்துடன் 3 ஆம் வீடு தொடர்பு கொண்டு மேலும் தசா புக்தி காலம் ஜாதகரை போதை என்ற அரக்கனிடத்திலிருந்து விடுவிக்கும்.

குழந்தை பிறந்ததும் சிலர் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்டத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இதற்கு காரணம் 5,11 ஆம் வீடுகள் குழந்தை பிறப்பதையும் காட்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இப்படி சார்புடையதாக இருக்கும்.

மேலும் யோகா தியானம் முறையில் இதற்கு ஓர் தீர்வு உண்டு. நாம் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் நட்சத்திர வனம் இதற்கு ஓர் சக்தி வாய்ந்த மற்றும் எளிய தீர்வாகும்.

போதை என்பது மதுவருந்துவது, புகைபிடிப்பது மட்டும்மல்ல. ஆடை ஆபரணத்தில் மோகம், காம இச்சை கொள்வது மற்றும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள பல ஜோதிடரிடம் ஜாதகத்தை எடுத்துகொண்டு அலைவது என இவை அனைத்தும் போதைதான்.

போதை பழக்கம் இல்லாத ஒருவன் தெளிந்த நீரோடை போன்றவன்,நீரோடையின் அடியில் உள்ள பளிங்கு கல்லை அனைவரும் காணலாம்.அதைபோல அவன் மனதில் இருக்கும் கடவுள் தன்மையை அனைவரும் பார்க்க முடியும். போதை பழக்கத்தில் உள்ளவர்கள் கலங்கிய குட்டைக்கு சமம். மனம் தடுமாறும் ஒருவன் கடவுளின் இருப்பிடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்பது உபநிஷத்தின் குரலாகும்.

Wednesday, October 22, 2008

சந்திராயன் - என்ன நடந்தது?

எனது முந்தைய பதிவில் சந்திராயன் செயற்கைகோள் பற்றி ஜோதிட ஆய்வு செய்திருந்தேன்.

அதன் முடிவில் குறிப்பிட்டதை போல 6மணிக்கு மேல் 8 மணிக்குள் செயற்கை கோள் ஏவப்பட்டது. ஜோதிட ரீதியான ஆய்வு சரியாக வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற்றியடைந்தது பாராட்டவேண்டிய விஷயம்.

தினமலர் செய்தி : தினமலர்.காம்

சென்னை: உலகே வியக்கும் வகையில் சந்திராயன்-1 செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. புதன் கிழமை காலை சரியாக 06- 20 மணிக்கு சந்திராயன்- 1 செயற்கை கோளை ஏந்திய பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், நிலவை நோக்கி் குறிப்பிடத்தக்க பயணத்தைத் துவக்கி இருக்கிறோம்; இன்னும் 15 நாளில் அதன் பயணம் இறுதி கட்டத்தை எட்டும்.

நிலவிற்கு ஆளில்லா செயற்கைக்கோள் அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியான சந்திரயான்-1 திட்டத்தின் "கவுன்ட்-டவுண்' ஸ்ரீஹரிகோட்டாவில் 20ம் தேதி காலை துவங்கியது. 49 மணி நேர "கவுன்ட்-டவுண்' பிறகு திட்டமிட்டபடி இன்று காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.


மேலும் தகவல்கள் மற்றும் படங்களுக்கு இங்கே சுட்டவும்


நமது வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் விஞ்ஞானிகளின் 5 வருட கடின உழைப்பை மறக்க செய்யும் என நம்புவோமாக.

Monday, October 20, 2008

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படுமா ?- ஓர் ஜோதிட ஆய்வு

செயற்கைகோள் வரலாற்றில் இந்தியா அடுத்த இலக்கை தொடும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

22 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஏவப்படும் செயற்கைகோள் சந்திரனுக்கு சென்று ஆய்வு நடத்த இருக்கிறது. விஞ்ஞானமும் கணினி பயன்பாடும் வளர்ந்த இந்த காலத்தில் நவீன மனிதர்கள் என்பவர்கள் ஜோதிடம் சாஸ்திர போன்றவற்றை நம்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும்.
விண்வெளி ஆய்வு மற்றும் அதிக பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக்கு முன்னர் ஜோதிட ரீதியாக ஆய்வின் வெற்றியை முடிவு செய்தால் பலசிக்கல்களை தவிர்க்க முடியும்.


சந்திராயன் செயற்கைகோளுக்கு ஜாதகம் பார்க்க போகிறீர்களா என நீங்கள் கேட்பது புரிகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆருடம் எனும் பகுதியை கொண்டு ஆய்வு செய்ய போகிறேன். கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறை துல்லியமானது என நிரூபணம் செய்யப்பட முறை. இந்த முறையை ஜோதிட கருவியாக கொண்டு எனது ஆய்வு துவங்குகிறது.


சந்திராயன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா?
நாள் :20-அக்டோபர் - 2008

நேரம் : காலை 10:55
இடம் : கோவை.

ஆருட எண் : 29.
(கணிக்கப்பட்ட ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது)


ஆய்வு :

லக்னம் ரிஷபராசியில் அமைகிறது. லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தை பார்ப்பதால், கேள்வியின்
தன்மை சரியானதே என்றும், உண்மையாக கேட்கப்பட்ட கேள்வி என்றும் கூறலாம். செயல் வெற்றி அடையுமா என பார்க்க 1,6,11 ஆம் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். முக்கிய வீடாக லக்னம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

லக்னத்தின் உபநட்சத்திராதிபதி சந்திரன்.
அவர் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார். ராகு 1,6,11 ஆம் வீடுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. ராகு சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பதாலும் அதன் உப நட்சத்திர அதிபதியும் சுக்கிரனாக இருப்பதாலும் சுக்கிரன் இங்கு முக்கியத்துவம் பெருகிறார்.


சுக்கிரன் 1,6க்கு அதிபதியாகி 7ஆம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார். லக்ன உபநட்சத்திராதிபதி சந்திரனை, 11ஆம் பாவகத்தின் அதிபதி குரு பார்வை செலுத்துவது நன்மையை கொடுக்கும்.

குருவின் நட்சத்திரத்தில் யாரும் இல்லை என்பது முக்கியமான அம்சம். மேலும் குரு 1,6,11க்கு
நேரடி குறிகாட்டி. சனி லக்னத்தை பார்வை செலுத்துவதும், குருவுடன் திரிகோணத்தில் அமர்ந்திருப்பதும் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.


ஆய்வு முடிவு :

22 ஆம் தேதி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படும். ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். ஆறு மணிக்கு மேல் எட்டு மணிக்குள் துலாம் லக்னத்தில் சந்திராயனை வெற்றிகரமாக பிஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தும். இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்வோம்.


உங்கள் கருத்துக்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது.

Saturday, October 18, 2008

சினிமா சினிமா

அறிவிப்பு :
  • ஸ்வாமி என்ன சினிமாவை பற்றி சொல்லிவிட போகிறார் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
  • இதை ஓர் ஆன்மீகவாதியின் பதிவாக படித்தால் உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.!


முன்குறிப்பு :

ஆன்மீகத்தில் இருக்கும் எனக்கு சினிமா அறிவு தேவையா? இல்லையா என விவாதிப்பதற்கு முன் ஒரு வாழ்வியல் சம்பவம்.

முன்காலத்தில் காசி மாநகரம் உலகதரம் வாய்ந்த கல்விக்கான நகரமாக இருந்ததால் அனைத்து அறிஞர்களும் தங்கள் மேன்மையான கல்வி கற்கவும் - கற்று கொடுக்கும் இடமாகவும் விளங்கியது. அங்கு சர்வயங்ஞ பீடம் எனும் தலைமை இடம் உண்டு. இந்த பீடமானது தற்கால பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு ஒப்பானது எனலாம் -ஆனால் அது உலக பல்கலைகழகம்.அதில் 64 கலைகளையும் கற்று தெளிந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும். 64 கலைகள் என்பதில் அனைத்து கலைகளும் அடங்கும். அப்பீடத்தில் அமருபவர்கள் பல அறிஞர்களால் சோதிக்கப்படுவார்கள்.(இப்பொழுது போல லஞ்சம் கொடுத்து பதவி வாங்க முடியாது...!)

ஆதிசங்கரர் சர்வயங்ஞ பீடம் ஏற வேண்டும் என முயற்சி செய்தார். இதனால் தனது ஆன்மீக கொள்கையை எளிமையாக வெளிபடுத்த முடியும் என்பது அவரின் திட்டம். பல வகையான சோதனை அதிசங்கரருக்கு வழங்கப்பட்டது. அனைத்து சோதனையிலும் பல கலையில் தான் தேர்ச்சி பெற்றிருப்பதை அவர் வெளிப்படுத்தினார். கடைசியாக ஓர் அறிஞர் உங்களுக்கு பாதுகை(செருப்பு) தைக்க தெரியுமா என கேட்டார். இந்த கேள்வி, சன்யாசியாக இருந்ததால் தோலால் ஆன பாதுகையை தொடமாட்டார் என்றும் மரத்தால் ஆன பாதுகையை அணிந்திருந்த ஆதி சங்கரருக்கு தோலால் ஆன பாதுகையை தைக்க தெரியாது என்று நினைத்து அவரை தோற்கடிப்பதற்காக கேட்கப்பட்டது.


அறிஞர்கள் சூழ ஓர் செருப்பு தைப்பவனிடம் சென்று அறுந்த செருப்பை வாங்கி, நூலின் ஒரு முனையை வாயில் கவ்வி, மறுமுனையை இடதுகையில் வைத்து, பாதுகையை தனது இருகால்களுக்கும் இடையே வைத்து,வலது கையில் ஊசியை கொண்டு அவர் தைத்த லாவகத்தை பார்த்த செருப்பு தொழிலாளி அவரின் காலகளில் விழுந்து குருவாக ஏற்று கொண்டான்.
பின்பு அவர் சர்வயங்ஞ பீடத்தில் அமர்ந்திருப்பார இல்லையா என்பது உங்களுக்கே தெரியும் தானே?

ஆன்மீகவாதியானவன் தனக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் சூழ்நிலை வரும்பொழுதே அதை வெளிக்காட்டுவான். அவனிடத்தில் ஆணவம் இல்லாதகாரணத்தால் அதை விளம்பரப்படுத்துவதில்லை.

தற்சமயம் எனது நிலையும் இதுவே. கோவி.கண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

எனது சினிமா அறிவை சினிமா அறி(ந்தவ)ஞர்கள் விமர்சிக்கட்டும். எனது சொந்த அனுபவத்தையோ வாழ்க்கையையோ இதுவரை வெளியிட்டதில்லை. இதை படித்துவிட்டு எனது வாழ்க்கை வரலாற்றை முடிவு செய்யவேண்டாம். இந்த வலைதளத்தில் எனது சுயகருத்துக்களை எழுதுவதில்லை- சாஸ்திரத்தை பற்றி மட்டுமே எழுதி வருகிறேன். இப்பதிவு அதற்கு விதிவிலக்கானது. ஜனரஞ்சக பதிவாளர் போல நானும் எழுதுகிறேன். உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.

----------இத்துடன் முன்னுரை முடிந்தது-கலாட்டாவுக்குபோகலாம்.--------

இந்த கட்டுரையை கோவிகண்ணன் போன்ற பல மூத்த வலையுலக பதிவர்களுக்கும் (அவர் சொல்ல சொன்னதாக சொல்லவேண்டாம் என்றார்) சமர்ப்பிக்கிறேன்.

எச்சரிக்கை : ஆன்மீகவாதியின் சினிமா அனுபவங்கள் என இதை புத்தகமாக போட கூடாது. இதற்கான பிரதிவலது- (அதுதாங்க copyright) யாருக்கும் கொடுக்கமாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.

இனி கேள்விக்கு போகலாம்.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எனது தாயார் நான் வயிற்றில் இருக்கும் பொழுது சினிமா பார்க்க சென்றதாக கேள்வி. அவர்கள் கண் மூலம் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

பல திரையரங்கில் சினிமா போட்டவுடன் தூங்கிவிடுவேன் ( அந்த லக்‌ஷணத்தில் தானே படம் எடுக்கிறார்கள்). சிறிது நேரம் கழித்ததும் நினைவு வரும். இன்னுமா படம் முடியலை என உணர்வேன்? அதை தானே கேட்கறீங்க?

சரி சரி சீரியஸா சொல்றேன்..பாயும் புலி - தான் பார்த்த முதல் சினிமா. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். பின்பு நினைவு தெரிந்து - ”தங்க மகன்”- சிறுவயதில் எனது உறவினர்கள் எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என முடிவுசெய்ததால் என்னை சந்த்தோஷப்படுத்த(எழுத்து பிழை அல்ல-அவர் பாணியிலேயெ படிக்கவும்) இதே படத்துக்கு 25 முறைக்கு மேல் அழைத்து சென்றார்கள். அப்புறம் என்ன உணர? இனிமேல் யாரும் கூட்டிகொண்டு செல்ல கூடாது என வேண்டிக் கொண்டேன்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
எப்பொழுது டிக்கெட் வாங்கினாலும் எனக்கு நடுவில் தான் சீட் கிடைக்கும். கடைசியாக அரங்கில் அமர்ந்து படம் பார்த்ததே இல்லை. :-)

பாபா எனும் திரை காவியத்தைதான் பார்த்தேன். எனது ஆன்மீக நண்பர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ததால் சென்றேன். அது மட்டுமல்ல பரமஹம்ச யோகானந்தர் எனும் யோகியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கபட்டது என கூட்டி சென்றார்.அந்த புத்தகம் யோகியின் சுயசரிதை என்பதாகும்.

எனது 8 வயதில் இப்புத்தகம் படித்தேன். எனது வாழ்க்கையில் எப்பொழுது கேட்டாலும் அதில் வரும் சம்பவங்களை துல்லியமாக விவரிக்கும் அளவுக்கு என்னுள் பதிந்த புத்தகம் அது. ஆனால் திரையறங்கில் நான் கண்ட படத்தின் கதைக்கும் அந்த புத்தகத்தில் வரும் ஒரு இரு சம்பவத்தை தவிர வேறு சம்பந்தம் இல்லை. அந்த யோகியையும் - ஆன்மீகத்தையும் இதற்கு மேல் கேவலபடுத்த முடியாது. பலவருடங்களாக திரையரங்குக்கு செல்லாத எனக்கு “உன்னை யார் சினிமாவுக்கு வர சொன்னது” என அந்த படத்தின் நாயகன் கேட்பது போல இருந்தது. முதலும் கடைசியுமாக இவரின் படம் அமைந்தது ஓர் அசந்தர்ப்பமே.

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்த கேள்வியை மீண்டும் பகடி செய்ய விரும்பவில்லை நேரடியாக பதிலுக்கு செல்கிறேன்.

பெரியார் - சினிமா படத்தை பார்த்தேன். ஒரு மாமனிதனின் சுயசரிதையை எடுக்க பலர் இருந்தாலும் அவரை போல தோற்றத்தில் மற்றொரு மனிதர் அமைவது சிரமம். பல சுயசரிதை சினிமா கதைநாயகனின் தோற்றத்தினாலயே தோல்வியடைந்திருக்கிறது. உதாரணம் - காமராஜர். இவை அனைத்தும் இருந்தாலும் அரசியல் சாயம் பூசப்பட்டு, பெரியாரின் சுயசரிதை வீணடிக்கப்பட்டது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என தோன்றியது.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
இன்னும் எடுக்கப்படவில்லை.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அரசியல் சம்பவம் என்பதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சினிமா ஆர்வம் என்னை தாக்கியது. ஒரு நடிகரின் படம் வெளியிடும் அன்று இதற்காகவே அமெரிக்காவிலிருந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் இந்தியா வந்து பல லட்சத்தை செலவிட்டதாக செய்திகிடைத்தது. ஆனால் அவர்கள் தாய் தந்தை இறந்தால் web cam கொண்டு இறுதி சடங்கு செய்கிறார்கள். இதை நினைத்தால் நாளை சந்திரனுக்கு போனாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள் என எண்ணினேன்.

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
மயா பஜார் எனும் படம். சிக்கலான திரைக்கதை கொண்ட புராண கதையை கையாண்ட விதம். இன்னும் தமிழ் சினிமாவில் புராண கதை எடுக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். ஹாரிபாட்டர் எனும் உலக சினிமாவை மிஞ்சும் புராண கதைகள் நம்மிடம் இருந்தாலும் அதை ஒளிபடுத்த சிறந்த இயக்குனர்கள் இல்லை. அதனால் அடிக்கடி உலக சினிமா தரம் என சொல்லுவதை இவர்கள் நிறுத்தினால் நல்லது.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
தமிழ் சினிமாவில் வாசிக்க ஒன்றும் இல்லை என எண்ணுகிறேன். ஐரோப்பிய , ஈரானிய திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் , இயக்குனருக்கும் ஒர் வலியான அனுபவம் உண்டு. அதை படித்தாலாவது பிரயோஜனம் உண்டு. இவர்களை பற்றிய விஷயம் 50% பொய். மீதி உண்மை அல்ல :-)


7) தமிழ்ச்சினிமா இசை?

பல திறமையான இசையமைப்பளர்களை கொண்டது தமிழ் திரையுலகம். ஆனால் அவர்கள் அனைவரும் சூழ்நிலைகைதியாக இருக்கிறார்கள். என் பால்ய வயதில் இசையை கற்றுக்கொண்டேன். பல வாத்தியங்களை வாசிக்கும் அறிவும் உண்டு. ஆதனால் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம். ஆதனால் அவர்கள் சிக்கி கொண்டதை என்னால் உணர முடிந்தது.

இருந்தாலும் சில இசை அமைப்பாளர்களின் மாஸ்டர் பீஸ் என ஒன்று உண்டு அல்லவா?

விஸ்வநாதன் -ராம மூர்த்தி : தில்லான மோகனாம்பாள் - மறைந்திருந்தே பார்க்கும் -இன்னும் பல

இளையராஜா : செந்தாழம் பூவில் , செந்தூரப்பூவே, ஹேராம்

விஸ்வநாதன் + இளையராஜா இசையில் : குழலு ஊதும் கண்ணனுக்கு...

ஏ.ஆர் ரஹ்மான் : உழவன் மற்றும் உயிரே - இதில் இவரின் அரெஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கும்.

இவரின் ஜெண்டில்மேன் - ஜீன்ஸ் இவரின் மோசமான வேலைக்கு உதாரணம். இதை புரிந்து கொள்ள தற்சமயம் மீண்டும் ”ஒட்டகத்தை கட்டிக்கோ”- ”கொலம்பஸ்” கேட்டுப்பாருங்கள் 30 வினாடிக்கு மேல் கேட்க முடியாது.

வேதா (தேவேந்திரன்) - இவர் இசையமைத்த வேதம் புதிது எனும் படம் - அருமையான இசைவடிவம். பலர் இளையராஜ என நினைக்க வைத்தாலும், இசையில் ஓர் நவீனம் இருந்தது. இவர் வேறு படங்களுக்கு இசையமைத்தாரா என தெரியவில்லை.

இள இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் சாஸ்திரிய சங்கிதத்த தவிர்த்து செயல்படுவதால் மனதில் பதிவதில்லை.அதற்காக நான் சாஸ்திரிய சங்கீதத்தை மட்டும் ரசிக்கும் கிழவன் என நினைக்காதீர்கள்.

இமானின் -(கையவச்சுக்கிட்டு) , யுவனின் -(அறியாத வயசு) இசை நன்றாக இருந்தாலும் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் பல உண்டு.

இள இசையமைப்பளர்கலின் திறமை இவர்களை வாழ வைத்தாலும் ரீமிக்ஸ் எனும் விஷம் நின்று கொல்லும்.

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

எனக்கு தமிழ் சினிமாவை விட உலக சினிமா அதிகம் தெரியும் என எண்ணுகிறேன்.

ஐந்தாவது கேள்வியை ”உலக சினிமாவில் உங்களை பாதித்தது” என கேட்டிருந்தால் -இப்படி விவரித்திருப்பேன்

காந்தி. 1982 ஆம் ஆண்டு மூன்று லட்சம் மனிதர்களை ஒன்றிணைத்து எடுத்த யுக்தி - மேலாண்மை பிடித்திருந்தது. இந்த விஷயம் கின்னஸில் இடம் பிடித்தது.மேல் நாட்டுக்காரரான (பென் கிங்ஸ்லி) நடிகருக்கு இந்திய காந்தி வேடம் பொருந்தியது. மேலும் காந்தி திரைப்படத்தை எந்த இந்தியரும் எடுக்க முன்வராதது என சொல்லிக்கொண்டே போகலாம்.

உலக சினிமாவில் வரிசைப்படுத்த நூற்றுக்கும் மேம்பட்ட படங்கள் உண்டு.

இதை விடுத்து ரன் லோலா ரன் எனும் படம் 12பி-யாகவும், பைசைக்கிள் தீப் எனும் படம் பொல்லாதவன் ஆனதையும் பார்த்தவுடன் உலக சினிமாவை தமிழில் ”அப்படியே” பார்க்க முடியும் என்றவுடன் உலக சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
சினிமாவுடன் தொடர்பு இல்லை. ஆனால் சினிமா தொழில் செய்பவர்களுடன் தொடர்பு உண்டு.

என்னிடம் யோக பயிற்சிக்கும், ஜோதிடம் கேட்கவும் வருவார்கள்.
இவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கம், என்னிடம் தங்களை அறிமுகப்படுத்தியவுடன் பேசி முடிப்பதற்குள் குறைந்தது ஐந்து முறையாவது தாங்கள் சினிமாவில் இன்னாரக இருக்கிறோம் என மீண்டும் மீண்டும் கூறி நேரத்தை வீணடிப்பார்கள்.

தங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு இருப்பதாக என்னிடம் சொல்லும் இவர்களிடம் ஒரு சின்ன அளவில் கூட அது இல்லாததை கண்டு அவர்களை கண்டித்திருக்கிறேன். சினிமாவை அவர்களின் தொழிலாக பார்ப்பதால் அவர்களும் என்னுடன் சரியாக பழக முடிகிறது.

மக்களுக்கு சிறந்த தமிழ் படம் கொடுக்க இவர்களிடம் ஆன்மீக மற்றும் ஆன்ம ஆற்றல் இல்லை. என்னிடம் தொடர்பு கொண்ட பிரபல இயக்குனர்கள் பலர் உண்டு. அனைவரும் பெரும் நடிகர்களை வைத்து இயக்கியவர்கள் என்றார்கள். என்னிடம் உள்ள சமூக சிந்தனையை அவர்களிடம் பகிர்ந்து அதை சினிமாவாக எடுக்க சொல்லி இருக்கிறேன். சிலர் அதன் முயற்சியில் இருக்கிறார்கள். என் சினிமா அறிவை கண்டு சிலர் பயந்ததும் உண்டு. என் கருத்தை இயக்குனர்களை கொண்டு இயக்குவதில் பல ஆனந்தமான விஷயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது -என் பெயர் வெளியே வராதல்லவா?


10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதை ஜோதிடம் மூலம் சொல்லலாமா? :-)

என்னை பொருத்த வரை சிலர் மட்டுமே நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். சமூக சிந்தனை கூடிய ஜனரஞ்சகமான சினிமா எடுத்தால் சினிமா மேம்படும். பல இயக்குனர்களுக்கு நல்லவர்கள் பின்புலத்தில் இருக்க நன்றாகவே சினிமா வளரும் என நினைக்கிறேன். ( இந்த கருத்துக்கும் 9ஆம் கேள்விக்கும் சம்பந்தம் கிடையாது :-) )


10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அரசியலில் இருக்கும் சினிமா நடிகரை தமிழர்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பார்கள். அடுத்த வருடம் இன்னும் சில உலக சினிமாக்கள் தமிழில் வரும். (பின்ன ஒருவருடம் உட்கார்ந்து பார்த்த DVDயை என்ன செய்ய? )

எனக்கு நிம்மதியாக இருக்கும் - 365 நாள் சில கழிசடையான படங்கள் வந்து தமிழ் சினிமா தரத்தை கெடுக்காதல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைதளத்திற்கு புதிது என்பதால் என்னால் வேறு யாரையும் அழைக்கத் தெரியவில்லை.
அதனால் இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி ஐந்து கேள்விகளை கேட்டு திரு.கோவி.கண்ணனுக்கே இதை திருப்பி அனுப்புகிறேன். அவர் அதற்கு பதில் சொல்லி , இவரிடம் கேள்வி கேட்டவரிடத்தில் அனுப்பட்டும். அந்த பாதை மீண்டும் “சினிமா சினிமா “ கேள்வி ஆரம்பித்தவரிடமே சென்று சேரும் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கேள்விகள் :

1) உங்களை இயக்குனராக வைத்து திரைப்படம் எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அந்த திரைப்படத்திற்கு என்ன கதைஅம்சம் இருக்கும்?அதற்கான ஒன் லைன் சொல்ல முடியுமா?

2) தமிழ் நடிகர் ஒருவருக்கு சிறந்த நடிகர் என அவார்ட் கொடுக்க சொன்னால் யாருக்கு கொடுப்பீர்கள். ஏன்?

3) உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாரிப்பளர்கள் முன்வந்தால் (கஷ்டகாலம் :-) ) யாரை இயக்குனராக முடிவு செய்வீர்கள்?

4) உலகளவில் பிரபலமானவர்களின் சுயசரிதையை தமிழ் சினிமாவில் இன்னும் எடுக்க வேண்டியது என்றால் யாருடையது?

5) தற்சமயம் உள்ள தமிழ் சினிமா உலகம் ”இதை” தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைப்பது எது?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவுரை : ஆன்மீக வாழ்கையில் இருக்கும் எனக்கு பொழுதுபோக்க நேரம் இல்லை. சினிமா சம்மந்த பட்ட விஷயத்தை எப்படி தெரிந்து கொண்டேன் என சிந்திப்பதை தவிர்க்கவும் . எனது பல்துறை அறிவு சிலருக்கு எப்பொழுதும் ஆச்சரியப்படுத்தும். இக்கட்டுரை சிலருக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதால் எழுதினேன்- பொழுது போக்காக அல்ல. இதற்கு பிறகு எனது வலையுலக பதிவில் என் வாலை சுருட்டி கொள்கிறேன் மீண்டும் எனது பதிவுகள் ஜோதிடம் சார்ந்து இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன். எனது நீண்....ட பதிவை வாசித்தமைக்கு நன்றி.


Thursday, October 16, 2008

குருவை தேடி

-உனக்குள் இருக்கும் ஒருவன் ....வெளியே குருவாக..

உலக பிணிகளில் கொடுமையானது அறியாமை எனும் பிணி. தற்பொழுது இதற்கு வைத்தியமும் இல்லை, வைத்தியரும் இல்லை. அறியாமை என்பது அஹங்காரத்தின் மறு உருவம். நமது அருகில் இருக்கும் இறை சக்தியை நாம் அறியாமல் இருப்பது அறியாமை. இதை நமக்கு உணர்த்த குருவடிவில் இருப்பதும் இந்த சக்தியே ஆகும்.

அனைவரும் குரு என்றால் இருளை நீக்குபவர் என பொருள் கூறுவார்கள். குரு இருளை நீக்குபவர்மட்டுமல்ல. குருவின் செயல் வார்த்தைக்கு உற்பட்டது அல்ல. அறியாமையை போக்கும் குருவை தேடி அலைந்த மக்கள் வேதகாலத்தில் அதிகம். தற்காலத்தில் பணத்தை தேடி அலையும் மக்களே அதிகம். பணத்தை தேடினால் பணம் கிடைக்கலாம். ஆனால் குருவை தேடினால் அனைத்தும் கிடைக்கும் எனும் போது செல்வமும் இதில் அடக்கம் என உணர வேண்டும். குரு என்பவர் எங்குள்ளார், எவ்வாறு நமக்கு ஒளி தருவார் என பார்க்க வேண்டும். இந்த செயல் ,கண்கள் இல்லாத ஒருவர் சிறந்த வண்ணத் துணியை தேர்ந்தடுப்பதற்கு சமம்.

உதாரணமாக தற்பொழுது உள்ள சமூக நிலையில் குரு என்பவர் பல கோடி மதிப்புள்ள ஆசிரமம் வைத்திருக்க வேண்டும், பல லட்சம் மதிப்புள்ள வாகனத்தில் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். இவர்களின் குருவை போஸ்டரிலும் , தொலைக்காட்சி பெட்டியிலுமே தேடி அலைகிறார்கள். இதன் விளைவு , 6 மாதத்திற்கு ஒரு ஆன்மீகவாதியை இவர்கள் குருவாக வைத்திருக்கிறார்கள்.

இதற்கும் ஒருவர் சினிமா நடிகரின் ரசிகராக இருப்பதற்கு
பெரிய வித்தியாசம் இல்லை. இது தான் அறியாமையின் வெளிப்பாடு. குரு இந்த ரூபத்தில் தான் இருப்பார் என்பதை இவர்கள் முடிவு செய்வதை விட்டுவிட்டாலே அறியாமை இவர்களை விட்டுவிடும். குரு உங்கள் வீட்டின் அருகில் பிச்சைகாரராக இருக்கலாம். சில சமயம் உங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய வரலாம். நான் மிகைபடுத்தி சொல்வதாக தெரியலாம்.

ஜென் கதை ஒன்று இதை விளக்கும். ஒருவன் குருவை கொண்டு ஞானமடைய எண்னான். அவனது ஊரில் ஓர் ஜென் குரு இருப்பதாவும் அவரிடத்தில் சென்று கேட்டால் தன் குருவின் இடத்தை கூறுவார் என்று னைத்து அவரிடத்தில் சென்றான். ஜென்குரு அவரின் ஆசிரமத்தில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.


அவரிடத்தில் எனது குரு எங்கு இருக்கிறார் அவரை நான் எப்படி அறிந்து கொள்வது என கேட்டான். புதிய ரோஜாப் பூவின் மணம் கமழ ஒளிபொருந்திய முகத்துடன் யார் இருக்கிறார்களோ அவர் தான் உனக்கு ஞானம் அளிப்பவர் என்றார் ஜென் குரு.


பல வருடங்களாக தனது குருவை தேடி அலைந்தான். இருண்ட காடுகள் மலைகள் அனைத்தும் கடந்தான் எங்குதேடியும் குருவை காணவில்லை. ஓய்வு எடுக்க ஓர் மரத்தடியில் அமர்ந்தவனுக்கு திடீரென சுகந்த வாசனை வருவது அவனது நாசியில் உணர்ந்தான். அந்த மரத்தின் பின்பகுதியில் கண்களை கூசும் ஒளி இருப்பதை கண்டான். அந்த உருவத்தை நோக்கி சென்று வணங்கினான். புதிய ரோஜா பூவின் மணத்துடன் ஒளிபொருந்திய லையில் அங்கே உற்கார்ந்திருந்தவர் , அவனுக்கு முன்பு வழிகாட்டிய ஜென்குரு. கண்களில் கண்ணீர் பெருக அவரை நோக்கி கேட்டான், ஏன் ஐயா இத்தனை காலம் என்னை காக்க வைத்தீர்கள்?".

ஜென்குரு கூறினார், "உன் அறியாமை உன்னிடத்தில் இருக்கும் வரை இந்த ஒளியும் வாசனையும் நீ அறியவில்லை. இது எனக்கு எப்பொழுதும் இருந்தது. உன் தேடலின் பயனாக உன் அறியாமையை களைந்தாய் இதோ நான் உனக்காக காத்திருக்கிறேன்".

இது போலத்தான் நாம் குருவை மறந்து அவர் அருகில் இருப்பதை அறியமுடியாமல் அவரை தேடி அலைகிறோம். சினிமாவுக்கு போகும், உங்களுக்கு சமமாக கிண்டல் செய்யும் அல்லது தனது பைக்கில் ஜாலியாக சவாரி செல்லும் குருவை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். அவர் அமைதியாக புன்னகை புரியவேண்டும், காற்றிலிருந்து தங்க சங்கிலி எடுக்க வேண்டும் அல்லது மாலையை வைத்து ஜபம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். இது போல நீங்களே முடிவு செய்வதால் தான் பல தவறான வர்கள் ஆன்மீகத்தில் உதயமாகிறார்கள்.

என்னை சந்திக்க வட இந்தியாவிலிருந்து வந்த ஒருவர். சுவாமிஜீ நீங்கள் கம்யூட்டர் எல்லாம் பயன்படுத்துவீர்களா, ஆச்சரியமாக இருக்கிறது என்றார். எது என் தவறா? அவர் என்னை தான் எதிர்பார்த்ததை போல இருக்க வேண்டும் என எண்ணுகிறார். அவருடன் பேசிய சில மணி நேரத்தில் விடைபெறும் போது அவர் கூறிய வாசகம் " இது போல மனதுக்கு மிக அருகில் பேசும் ஒரு நபரை நான் பார்த்ததில்லை".

குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்கிறோம். குருவை தேடுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது. உங்கள் தாய் அல்லது மனைவி கூட உங்கள் குருவாக இருக்கலாம். அறியாமை போல அஹங்காரமும் குருவை மறைக்கும் ஒரு உணர்வாகும்.

ஹரிவரதன் என்பவரின் கதை இந்த கருத்தை உணரவைக்கும். ஹரிவரதன் என்பவர் அதிக ஆன்மீக தேடல் கொண்ட பக்தன். குருவை தேடி ஞானம் அடைய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு அதிகமாக இருந்தது. பல ஆண்டுகளாக குருவை தேடி கிடைக்காமல் களைத்து விரக்தியான நிலைக்கு சென்றான். குடும்பம் இவனை நிர்பந்தப்படுத்த திருமண வாழ்க்கைக்கு தயாரானான்.

நல்ல மனைவியுடன் குடும்பவாழ்க்கை துவங்கிய ஹரிவரதனுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சில வருடங்கள் கழித்து மீண்டும் இவன் ஆன்மீக தேடல் அதிகமானது. அந்த வேட்கை கட்டுப்படுத்த முடியாமல், ஒரு நாள் இரவு மனைவியையும் குழந்தையையும் விட்டு பிரிந்தான். உணவையும் உடல் சுகத்தையும் மறந்து பல வருடங்கள் குருவை தேடி அலைந்தான். தன் நிலை மறந்து உடல் இளைத்து உருமாறி இவனின் வைராக்கிய தேடல் அதிகமாகியது.

ஒரு நாள் ஓர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கு சிறு ஆன்மீக கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஒளிபொருந்திய இளைஞன் புன்சிரிப்புடன் ஆன்மீக கருத்துக்களை விவரித்துக்கொண்டிருந்தான். ஹரிவரதனும் களைப்பின் மிகுதியால் அந்த கூட்டத்தின் ஓர் மூலையில் அமர்ந்து, ஆன்மீக பேச்சை கேட்க ஆரம்பித்தார். ஆன்மீக கூட்டம் முடிந்ததும் இளைஞனுக்கு அருகில் சென்று பல ஆன்மீக கருத்துக்களை கேட்டு விளக்கம் பெற்றார். புதிய விடியல் அவருக்குள் பிறந்தது.

இளைஞனின் காலில் விழுந்து வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள மன்றாடினார். அந்த இளைஞன் புன்சிரிப்புடன் அவரை நோக்கி கூறினான், குருவை தேடி இவ்வளவு காலம் அலைந்தீர்கள் இதற்காக அனைத்தையும் துறந்தீர்கள். நான் வேறுயாருமல்ல உங்களுக்கு பிறந்த மகன் தான். குரு என்பவரை மகனாக பெரும் பாக்கியத்தை உங்களுக்கு கடவுள் அளித்துள்ளார். உங்களை ஞானமடைய செய்வேன் என்றான். ஹரிவரதனின் கதை உண்மையில் கதையல்ல உண்மை சம்பவம் கூட. இதே போன்று ரமணர் தனது தாயாருக்கு பிறவா வரம் அளித்த நிகழ்ச்சி இதை உறுதிப்படுத்துகிறது.

உங்கள் ஜாதகம் , குருவின் இருப்பிடத்தையும் அவர் எப்பொழுது உங்களை அடைவார் எனவும் உணர்த்தும். 9ஆம் வீடு குருவை குறிக்கும். அதனால் தான் ராசி லையில் 9ஆம் வீடு குருவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 9ஆம் வீடு யாருக்கு 1,5 ஆம் வீடுகளுடன் தொடர்பு கொள்கிறதோ அவர்கள்தான் குருவை காணமுடியும். தொடர்பற்றவர்கள் சில பிறவிகள் காத்திருக்க வேண்டிவரும். 1,5,9 ஆம் வீடுகளின் தசா புக்திகள் நடக்கும் சமயம் உங்கள் அருகில் பரமாத்ம சொருபமான குரு காணப்படுவார். 9 ஆம் வீட்டின் உபநட்சத்திரம் குருவின் இருப்பிடத்தை குறிக்கும். 2 ஆம்வீடு குடும்ப நபரையும், 9 ஆம் வீடு ஆசிரமம், 12 ஆம் வீடு மிக தொலைவாகவும் குருவின் இருப்பிடத்தை குறிக்கும். இது போல பிற வீடுகளும் அதற்கே உரிய காரகத்துவத்தை கொண்டு சொல்லலாம்.

9 ஆம் பாவம் 8 ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் குரு என நினைத்து சிலரை தவறான வழியில் தேர்ந்தெடுக்க வேண்டிவரும். இங்கு திருமூலரின் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.

குருட்டினை நீக்குங் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குடுடுங் குழிவிழு மாறே.

குருவை நீங்கள் முடிவுசெய்தால் இது போல தவறானவர்களின் கையில் சிக்கி தவிப்பீர்கள். உங்கள் குருவை நீங்கள் முடிவு செய்யாதீர்கள், அவர் உங்களை முடிவுசெய்யட்டும். குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள், அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும்.


குரு சிந்தனை மேம்பட : குருகீதை படியுங்கள்

Tuesday, October 14, 2008

ப்ராப்தம்

ப்ராப்தம்
- உங்களுக்காக பிறந்தவர்


தற்காலத்தில் சாபக்கேடு என எதை சொல்லலாம்?

1) இளமையில் வறுமை?
2) கொடிய நோய்?
3) ஊனம்?

இல்லை. இல்லை. இதைக்காட்டிலும் அதிக துன்பம் கொடுப்பது எது தெரியுமா?

உங்களுக்கு திருமண வயதில் மகனோ/மகளோ இருந்தால் இதை விட கொடுமை வேறு இல்லை. இவ்வளவு தாழ்த்தி கூற காரணம் என்ன? இக்கால ஜோதிடர்களின் சர்வதிகாரத்திற்கு அடிமைப்பட்டு "ஜாதக பொருத்தம்" என்னும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஒருவர் தன் மகளின் ஜாதகத்தை கையில் எடுத்தால் அவரும் அவரின் குடுப்பத்தாரும் மன அளவில் துன்பப்பட்டு கலங்கும் வரை இவர்கள் விடுவதில்லை.


"தோஷ ஜாதகம்" இதனால் உங்கள் பையனுக்கு ஜாதகம் அமையாது என்று தந்தை அவதிப்படுவதும், மறுபுறம் "சுத்த ஜாதகம்" இதற்கும் ஜாதகம் அமையாது என கூறுவதை கேள்விப்படுகிறோம். ஆக ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்? சுத்தமாகவா - அசுத்தமாகவா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருக்கு இருக்கும் ஜாதகம் மற்றொருவருக்கு இருக்காது என்பது விதி. இதன் அடிப்படியில் பார்த்தால் இரு ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்து இது சுத்தம் - இது தோஷம் என சொல்ல முடியாது. கடவுள் அனைவரையும் ஓர் தனித்தன்மையில் படைக்கிறார். உங்களுக்கு இருக்கும் குடும்பம்-குழந்தைகள்- தொழில் இவை உலகில் வேறு ஏதேனும் பகுதியில் உள்ள ஒருவருக்கும் இதே போன்று இருக்கிறது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இருக்க முடியாது.

உங்கள் மனதை போன்ற மென்மையான மலரை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா மலரும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் , அந்த செடியின் வேறு வேறு பாகத்தில் மலர்கிறது. இதை போன்ற தெய்வீக படைப்பான நீங்கள், பார்ப்பதற்கு ஒரே இனமானாலும் உங்கள் பிறப்பின் நோக்கம் வேறாகும்.

இவ்வாறு இருக்க உங்களை மற்றொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி தோஷமானவர், யோகமானவர் என சொல்ல முடியுமா?

திருமணம் என்று வரன் பார்க்க துவங்கியதுமே, செவ்வாய் தோஷம் , நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் என ஜாதகத்தை இழிவு படுத்துவதும், உங்கள் ஜாதகம் சுத்த ஜாதகம் அவ்வளவு சீக்கிரம் மற்றொரு ஜாதகத்துடன் சேராது என சொல்லுவதும் முட்டாள்தனமானது.

20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தவர்களை நீங்கள் கேட்டுப்பாருங்கள்- அவர்களுக்கு இவை புதுசு. அவர்கள் ஜாதக பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள் என கேட்டால் இல்லை என்றே பதில் வரும்.

ஜோதிட சாஸ்திரத்தில் பத்து பொருத்தம் பார்ப்பது என்பது கிடையாது. நவீன காலத்தில் சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக ஏற்படுத்திய விஷயம் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்க்கலாம் எனும் புத்தகம் வேறு பிளட்பாரம் வரை
விற்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்த்து வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவது நல்லதா?

பின்பு எப்படித்தான் திருமணத்தை முடிவுசெய்வது? ப்ராப்தம் என்பதை பார்த்தால் மட்டுமே இதற்கு தீர்வுண்டு.

ப்ராப்தம் என்றால்?

" ப்ராப்தம் " இந்த வார்த்தையே உங்களுக்கு பல விஷயத்தை சொல்லும். முடிவு செய்யபட்ட ஒன்று அல்லது விதிக்கப்பட ஒன்று என சொல்லலாம். உங்களுக்கு முடிவு செய்யப்பட்ட வாழ்க்கை துணைவர் இவர்தான் என துல்லியமாக சொல்லும் முறையே ப்ராப்தம்.

பெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் ராசி/நட்சத்திரம், லக்னத்தின் ராசி /நட்சத்திரம் மற்றும் ஜாதகர் பிறந்த கிழமையின் அதிபதி , ஆண் ஜாதகத்தில் நடப்பு தசா-புக்தி -அந்திரம் இவற்றுடன் இணைந்தால் ப்ராப்தம் உண்டு.இதில் ஒரு கிரகம் இல்லை என்றாலும் ப்ராப்தம் இல்லை.

இது போன்ற இணைப்பு அனைத்து ஜாதகத்துடனும் இருக்காது. ஜாதகி யாரை திருமணம் செய்ய போகிறார்களோ அவர்களுடன் மட்டுமே இருக்கும்.

திருமணத்திற்கு மட்டும் இல்லாமல், தந்தை-மகன் , சகோதர- சகோதரி மற்றும் வியாபார கூட்டாளி என வாழ்க்கையில் மற்றொருவருடன் இணையும் தருணத்தில் ப்ராப்தம் இருந்தால் மட்டுமே முடியும். கடவுள் உலகில் அனைவரையும் ஓர் சட்டதிட்டத்தில் இணைத்திருக்கிறார்- அவரின் அனுமதி இல்லை என்றால் எதுவும் நடக்காது என ப்ராப்தத்தை அறிந்தவர்களுக்கே தெரியும்.

ரமணமகரிஷியின் அமுத மொழியை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்,

"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"


திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் ப்ராப்தத்தின் விளையாட்டை இவரைவிட வேறு யார் தெளிவுபடுத்த முடியும்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் இதை மனதில் கொண்டு செயல்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமடைய வாழ்த்துகிறேன்.

Saturday, October 11, 2008

வேதகால வேளாண்மை

வேதகால வேளாண்மை
- உரமாகும் கிரக சக்தி

ப்ரணவ பீடம் வேதகாலவாழ்க்கையின் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆனால் இதை நவீன விஞ்ஞான கொள்கை உடையவர்கள் ஏற்பதில்லை. மேலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கலந்திருக்கும் அனைவரும் இதில் முரண்படுவார்கள். உண்மையில் நமது வாழ்க்கை வேதகாலத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதை முன்பே கூறி வழிநடத்துவது தான் ப்ரணவ பீடத்தின் நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் வேதகால வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும். மக்கள் அதன் படி வாழ முற்படும் சமயம் அவர்களை வழிநடத்த ஆட்கள் குறைவாக இருப்பார்கள். இந்த குறைபாட்டை போக்கவே ப்ரணவ பீடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வேதகால வாழ்க்கை :

வேதகால வாழ்க்கை என்பது விஞ்ஞான பூர்வமானது. விஞ்ஞானம் என்றவுடன் நவீன கால விஞ்ஞானத்தை கருதவேண்டாம். ஓர் விஞ்ஞான கண்டுபிடிப்பானது பிற உயிர்களுக்கும், எதிர்கால வாழ்க்கை முறைக்கும் பாதிக்காத வகையில் இருந்தால், அது வேதகால விஞ்ஞானம். நவீன விஞ்ஞானம் சுயநலமானது , அவர்களின் கண்டுபிடிப்பு ஒரு விஷயத்திற்கு தீர்வாகவும் பல விஷயத்திற்கு பாதிப்பையும் தரும். உதாரணமாக உணவு பொருட்கள் பதப்படுத்த கண்டுபிடிக்க பட்ட பொருள் ஓஸோன் மண்டலத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதில் பதப்படுத்திய உணவை உட்கொள்வதால் உடல்நல குறைகளும் ஏற்படும் என்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

உங்கள் சிறுவயதில் சமையல் அறை வாயிலில் இருக்கும் தானியத்தை கொத்தும் குருவியை பார்த்திருக்கிறீர்கள் தானே? தற்சமயம் அதை காண முடியாது. உங்கள் சந்ததியினரும் இனி காணமாட்டார்கள். அதற்கு காரணம் செல்போனில் வரும் கதிர்வீச்சால் குருவி இனம் சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கிறது.

நவீன ஆராய்ச்சியாளர்கள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள். எதிர்கால பிர்ச்சனையை உள்ளடக்கி ஆராய்ச்சியை தொடர்ந்தால் இது போன்ற விளைவுகளை தவிர்க்கலாம். வேதகாலத்தில் கண்டிபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் எவரையும் பாதிக்காதவாறு உள்ளது. இதை தெய்வீக கண்டுபிடிப்புகள்(divine invention) எனலாம். உதாரணமாக உலோக பயன்பாடுகள் இருந்தாலும், மண் பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என கண்டறிந்து பயன்படுத்தினார்கள்.

இந்த மண்பாண்டங்கள் பயனற்று போகும் சமயம் மண்ணுடன் கலந்து விடும். மேலும் மின் கடத்தா பொருளுக்காக இயற்கையான தர்பை புல்லை பயன்படுத்தினார்கள். தர்பை புல்லை பயன்பாட்டிற்க்கு பிறகு குப்பையுடன் கலந்தாலும் ,இயற்கையான பொருள் என்பதால் பாதிப்பதில்லை. நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பான செயற்கை ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பயன்படுத்தி ஏற்படும் விளைவை விளக்க தேவை இல்லை.நவீன விஞ்ஞானம் அனைத்தும் தவறு என கொள்ள வேண்டாம். பொது நல நோக்கமற்ற கண்டுபிடிப்பை மட்டுமே நாம் தவிர்க்க சொல்கிறோம்.


வேதகால விஞ்ஞானத்தை உள்ளடக்கிய வாழ்க்கை முறைதான் வேதகால வாழ்க்கை. ஜோதிடம், யோக சாஸ்திரம் போன்ற வேதகால விஞ்ஞானத்தை அனைத்து வாழ்வியல் கோட்பாடுகளிலும் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையாகும். இந்த முழுமையான வாழ்க்கையால் தனக்கோ பிறர்க்கோ எந்த ஒரு தீங்கும் இன்றி வாழலாம். மேலும் இதை நடைமுறை படுத்துவதால் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பால் பூமிக்கு ஏற்பட்ட குறைபாடுகளை போக்கலாம்.

வேத கால வாழ்க்கை முறையின் ஓர் அங்கமே வேதகால வேளாண்மை.


நவீன வேளாண்மை பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 வருடங்களில் ரசாயனங்களை புகுத்தி அழிவை ஏற்படுத்தியது. இயற்கைக்கு முரண்பாடான அதிக மகசூலை பெறும் சமயம் இதன் விளைவை அவர்கள் உணரவில்லை. விளைலம் சக்தி அற்றும். அதில் விளையும் பொருட்கள் சத்துக்கள் இல்லாமல் ரசாயனமாக இருக்கிறது. தற்சமயம் இந்த விளை நிலங்கள் எலும்புக்கூடாக நிற்கும் பொழுது ,நிதர்சனமும் முகத்தில் அரைகிறது. இதன் காரணமாக மனித குலத்தின் உடலில் இரத்தத்திற்கு பதில் ரசாயன கலவையே உள்ளது எனலாம். இதை தாமதமாகவே உணர்ந்தனர் நவீன விஞ்ஞானிகள். மேலும் 1980க்கு பிற்கு பிறந்தவர்களுக்கு மலட்டுதன்மை அதிகரிக்க ரசாயனம் கலந்த உணவு பொருளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


20 வருடங்களுக்கு முன்னால் பொது இடங்களிலும் , வீடுகளிலும் மூட்டை பூச்சி கொசு ஆகிய பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். இதற்கு தனியாக ரசாயன மருந்து மூலம் அழிப்பார்கள். இவை இக்காலத்தில் மருந்து அடிக்காமலே வெகுவாக குறைந்துவிட்டது. தற்காலத்தில் மனிதனை கடிக்கும் பூச்சிகள் தாமாகவே இறந்து விடுவதால், ரசாயன மருந்து தேவையில்லை. மனிதன் அவ்வளவு ரசாயனமாகிவிட்டான். இவ்வாறு மனித இரத்தம் ரசாயனமாக மாறியதை பற்றி வேடிக்கையாக கூறுவார்கள்.

ஜெர்மானிய மக்கள், வேடிக்கையான ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளும் உண்டு என்பார்கள். அதைபோல இதில் சில உண்மையும் உண்டு. உபஷத்துகளில் ஒன்றான கடோ பஷத்து கூறும் மந்திரம் " எதை உண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்". இயற்கையான உணவை உண்டால் இயற்கையாகவும், ரசாயன கலவையை உண்டால் ரசாயனமாகவும் மாறுவது இயல்புதானே?

ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்வது? இயற்கை விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் கேட்கும் கேள்வி இது. முற்காலத்தில் வேளாண்மை செய்யும் பொழுது ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு செய்தார்கள்? இதை தெரிந்து கொண்டால் நமது வேளாண்மை வேதகால வேளாண்மை ஆகிவிடும்.

நம் முன்னேர் கண்டறிந்த "பஞ்சகவ்வியம்" ஒரு வரப்பிரசாதம். இதை உரமாக கொண்டால் மண்ணுக்கும், விளைச்சலுக்கும் எந்த கெடுதலும் கிடையாது. பஞ்சகவ்வியம், மண்புழு உரம் ஆகியவை இயற்கை நமக்கு அளிப்பவை. இதைகொண்டு வேளாண்மை செய்வதால் நல்ல விளைச்சலையும், விளைபொருட்கள் நல்ல உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும். இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதுடன், அனைவரையும் இதை செய்ய சொல்லுகிறது. ஆயுர்வேதம் பஞ்சகவியத்தை மருந்தாக உட்கொள்ள சொல்கிறது.

பஞ்சகவ்வியம் என்பது பசு மாடு நமக்கு வழங்கும் பால்,தயிர்,நெய், பசுஞ்சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சில விகிதாச்சாரத்தில் கலந்த கலவையாகும். ஓர் மனிதன் பஞ்சகவ்வியத்தை நிலத்தில் இடும்பொழுது அதை சாப்பிட்டால் அவனிக்கு ஒன்றும் ஆகாது. இதே அவன் ரசாயன உரத்தை உண்டால் அவனின் நிலையை நினைத்து பாருங்கள். தன் உடல் போன்றது தானே அந்த பயிறும் என உணரும் நிலை விவசாயிக்கு இல்லை.முற்காலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒவ்வொருவரும் மாடுகளை வைத்திருந்தனர். தற்சமயம் நவீன கருவிகளான டிராக்டர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் மாடுக்கும் விவசாயிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

உலோகத்தை பயன்படுத்திய நம் முன்னோர் , நிலத்தை உழும் கலப்பை மற்றும் விதை வைக்கும் கலன் ஆகியவற்றை மரத்தில் வைத்திருந்தார்கள். இதற்கும் சில காரணங்கள் உண்டு. இரும்பில் இருக்கும் அயனிகள் காந்த மின்னூட்டம் அடைந்து விளைலங்களையும், விதையையும் உயிரற்றதாக்கிவிடும். விவசாயத்திற்கு பயன்படும் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழித்துவிடும். இதை அறிந்து கொண்ட வெளிநாட்டுகாரர்கள் மரத்தை கலப்பையாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தியன் என்றும் முன்னோர்களை உதாரணமாக எடுப்பதை காட்டிலும் வெளிநாட்டுகாரர்களையே உதாரணமாக்க விரும்புவான். இதனால் கூடிய சீக்கிரம் நாமும் மண்கலப்பையை பயன்படுத்துவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இது போன்ற இயற்கை வேளாண்மையை மேலும் தரம் உயர்த்தும் வண்ணம் ஜோதிடத்தையும் இணைத்து கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப வேளாண்மை காரியங்களை செய்வதால் பல வகையில் முன்னேற்றம் உண்டு. உதாரணமாக சில கிரகங்கள் சார்ந்து செய்ய தகுந்த விவசாய கடமைகள்.

கிரகம்------------------------ தன்மை ----------------------- செயல்
குரு ------------------------ புதிய வளர்ச்சி------------------- விதைத்தல்
சனி ------------------------ மறைவு பொருட்கள் ------------- கிழங்கு பயிரிடல்
சுக்கிரன்-------------------- கவர்ச்சியான பொருள் -------------பூக்கள்/ தோட்டம்
சூரியன்---------------------நிர்வகித்தல்------------------------ களை / உரமிடல்
செவ்வாய்---------------- திடீர்செயல்கள்----------------------பயிர் சீர்செய்தல்
சந்திரன் -------------------- திரவலை------------------------ நீர்விடுதல்
புதன் ------------------------ திட்டமிடல் ----------------------- உழுதல்/விதைத்தல்

இதே போல திதி மற்றும் நட்சத்திரத்திற்கு சில தன்மைகள் உண்டு. இதை கொண்டு வேளாண்மை செய்யும் பொழுது பயிரில் உயிரோட்டம் இருக்கும். சாதாரண ரசாயண உரத்தில் ஒரு கனி 5 நாட்கள் கெடாமல் இருந்தால் , இயற்கைவிவசாயம் செய்யும் பொழுது 8 முதல் 9 நாட்கள் கெடாமல் இருக்கும். இத்துடன் வேதகால வேளாண்மை இணையும் பொழுது கனியின் ஆயுட்காலம் நிச்சயமாக உயரும். இதற்காக தனியாக "வேளாண்மை பஞ்சாங்கம்" ப்ரணவ பீடத்தில் விவசாயத்திற்கு என்றே வெளியிடப்படுகிறது.


பஞ்சகவ்வியம் மற்றும் இதர இயற்கை முறை களைப் பயன்படுத்துவது போக , மந்திர ஜபம் மூலம் பயிர்களை வளர்த்துவது எனும் முறை ஒன்று இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு அருகில் காயத்திரி மந்திரம் அல்லது மஹா மிருத்தியஜெய் மந்திரத்தை ஒலிக்கவிடுவதால் பயிர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படிகிறது என நிரூபணம் செய்துள்ளோம். செடிகளுக்கு வேதமந்திரத்தால் உயிரோட்டம் பெருகிறது என்றால், மனிதர்களான நாம் அதை உண்டால் எவ்வளவு உயிரோட்டம் அடைவோம் என சிந்திக்க வேண்டும். வேதகால வேளாண்மை என்பது விவசாய விஞ்ஞானிகளாலும் ஏற்கப்பட்ட ஒன்று என கூற விரும்புகிறோம்.

மேலும் ப்ரணவபீடம் இயற்கை முறையிலோ அல்லது வேத கால வேளாண்மை முறையிலோ விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு உதவ காத்திருக்கிறது. உலகை வேதகால வேளாண்மையால் பசுமையாக்குவோம், கடவுளின் இருப்பை உணர்த்துவோம்.

Tuesday, October 7, 2008

கடவுள் பிரபஞ்சத்தை படைத்தாரா?

ஈஸ்வரன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றால் அதற்கான பொருட்கள் எங்கு இருந்தது?
எதிலிருந்து இவை அனைத்தையும் படைத்தார் என கேட்பதுண்டு. ஈஷ்வர நிலை என்பது இறைநிலையின் முதல் நிலை. இதை பற்றி விரிவாக பின்பு விளக்குகிறேன்.

ஓர் சிலந்தியை கவனித்தீர்கள் என்றால், தானே தனது வலையை உருவாக்கி அதன் மையத்தில் அமர்ந்துவிடுகிறது.

அது போல தன்னையே உலகாக்கி , அண்ட சராசரமாக்கி அதன் மையத்தில் ஈஸ்வர நிலை இருக்கிறது. சிலந்திக்கு தனது வலையை உருவாக்கும் பொருள் எங்கிருந்து கிடைத்தது? தன்னிலிருந்து எடுத்து தனக்காக உருவாக்கியதை போல, இறையாற்றல் தன்னிலிருந்தே அனைத்தையும் உருவாக்கியது. மீண்டும் ஒரு நாளில் அனைத்தையும் தன்னகத்தே எடுத்து ஒன்றாகி விடும். இதையே படைப்பு மற்றும் பிரலயம் என வழங்கப்படுகிறது.


இதை எப்படி உனக்கு தெரிந்தது? என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும்? அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் - நான் - அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.


இறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.?

இது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான்? அடிப்படை நிலையில் இருப்பதாலும், அறியாமையாலும் இந்த கருத்து வெளிபட்டுள்ளது.

பஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா? உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.


நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.


நாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் எனும் தேடல் இல்லாத காரணத்தால் இக்கேள்விக்கு பலருக்கு விடை தெரியவில்லை. இதற்கு முன் சொன்ன கேள்வி பதில் இதை தெளிவாக்கும் என்றாலும் வேறு கோணத்தில் இதை விளக்குகிறேன்.

யோக வாஷிஷ்டம் எனும் நூல் இதற்கான தகுந்த விளக்கத்தை தருகிறது.அதில் இருக்கும் ஓர் கதையை எளிய வடிவில் பதிலாக அளிக்க விரும்புகிறேன்.

சிவன் தியானத்தின் உச்சநிலையான சமாதி நிலையில் இருக்கிறார். தனது நிலை கலைந்து வெளியே வரும்பொழுது பரமாத்மா முன் ஓர் தேனீ ரீங்காரம் இடுகிறது. அதை கண்ட பரமாத்ம சொரூபம் தேனீயாக உருவெடுக்கிறது.

தேனீ பல இடங்களுக்கு சென்று தேனை சேகரிக்கிறது. அப்பொழுது அழகிய மலர் ஒன்றை பார்க்கிறது. தேனீ ஓர் மலராக மாற்றம் அடைகிறது. மலர் மணம் கமழ இருக்கும் சூழ்நிலையில் அதை பறித்து கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மலர் அர்ச்சனைக்காக கொண்டு செல்லப்பட்டு கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிக்கப்படுகிறது. மலர் தன்னிலை மீண்டும் உணர்ந்து சிவனாகிறது.

முதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.

யோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.

ஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.

நமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். காரணம் அவர்களும் இறைவனின் சொரூபமே.பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை.

தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான்.
நாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும்.

Friday, October 3, 2008

விதியை மதியால் வெல்லலாம்

கேள்வி பதில் - பாகம் 3

விதியை மதியால் வெல்லலாம் எனும் முதுமொழி இருக்கும் பொழுது பரிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என கூறுவது பொருந்துமா?


விதியை மதியால் வெல்லலாம் என்பதே அபத்தமான ஒரு பழமொழி. பரிகாரம் செய்யும் ஜோதிடர் கூட இதை மேற்கோள்காட்டி , மதி என்பது சந்திரனை குறிக்கும் அதனால் சந்திரனை வைத்து கணித்தால் விதியை மாற்றிவிடலாம் என கூறுவதுண்டு.

தன்னம்பிக்கை பயிலறங்கத்திற்கு சென்றால் , அங்கு ஒருவர் உன்னால் முடியாதது எதுவும் இல்லை - நீ நினைத்தால் அதை செய்ய முடியும் என கத்திக்கொண்டிருப்பார். வாழ்க்கையில் செல்வந்தராகவும் வெற்றி பெறவும் பலவழிகளை கற்றுக்கொடுப்பார். ஆனால் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்களை காணும் பொழுது தான் நம்மால் முடியுமா ? எனும் நிதர்சனம் விளங்கும். தன்னம்பிக்கை பேச்சாளரின் கருத்து நமக்குள் ஓர் மனமாயையை உண்டு செய்ததை புரிந்துகொள்வோம்.

இதை விட வேடிக்கை அந்த நேரத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் செல்வந்தராகவோ - வெற்றியாளரோ ஆகாமல் மைக்கை பிடித்து ஏன் கத்திக்கொண்டிருக்கிறார் என நாம் சிந்திக்க தவறிவிடுவோம்.

இதை போன்றது தான், உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறேன் என கூறும் ஜோதிடர் ஏன் ஜோதிடராகவே இருக்கிறார் என நீங்கள் சிந்திப்பதில்லை. அவர் ஏன் தனக்கு பரிகாரம் செய்து தனது வாழ்க்கையை மாற்றி இருக்க கூடாது?

தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.

விதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.

உங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக மதங்கள் தங்கள் ஆன்மீக விஷயங்களில் அற்புதத்தை பற்றி கூறுகிறது. உதாரணமாக மார்கண்டேயன் தனது இறப்பை தடுத்தது, சாவித்திரி தனது கணவனை இறப்பிலிருந்து மீட்டது என கூறிகொண்டே போகலாம்.கிருஸ்தவத்திலும் குருடனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சி உண்டு இவ்வாறு இருக்க விதியை மாற்ற முடியாது என்பது பொய்யா?

மார்கண்டேயன் தனது இளவயதில் இறக்கவேண்டும் என்பது விதி என யார் உங்களிடம் சொன்னது? மேலும் சிவன் மார்கண்டேயனை காத்ததும் அவன் பூத உடலில் வாழவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? யாரோ கூறும் கதையை முடிவான உண்மை என எண்ணி விடாதீர்கள்.

சாவித்திரி கற்பில் சிறந்தவள் என்பதால் அதை செய்தால் என கொண்டால், சாவித்திரிக்கு பிறகு கணவனை மீட்டவர் யவரும் இல்லை என்பதை வைத்து பார்க்கும் பொழுது சாவித்திரியே கடைசி கற்புகரசி என ஒத்துகொள்ளமுடியும் அல்லவா? இதனால் அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துவது போலக்கிவிடாதா?

தேவமைந்தன் கண்கள் இல்லதவர்கள் எல்லம் வரிசையில் நில்லுங்கள் கண் கொடுக்கிறேன் என தற்கால கடற்கரை கூட்டத்தில் கூறுவது போல கூறாமல் ஒரே ஒருவருக்கு மட்டும் கண் கொடுத்தது ஏன் என சிந்தியுங்கள்.

மார்கண்டேயன் தடுத்தாட்கொள்ளுதல் என்பதும், சாவித்திரி சத்தியவானுடன் மீண்டும் வாழ வேண்டும் என்பதும், கண் இல்லதவர் கிருஸ்து மூலம் கண் பெற வேண்டும் என்பதும் இவர்களின் விதியே.

இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணையிக்கிறார் எனும் பொழுது, அந்த விதியை மாற்ற முயல்வது இறைவனுக்கு எதிராக நாம் செய்யும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்கு எதிராக போராடியவர்கள் வெற்றது உண்டா என உங்கள் புராணத்தில் தேடுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கோளருபதிகம் பாடினால் கிரகதோஷம் விலகும் என்பது உண்மையா?

கோளருபதிகம் பாடி கிரகதோஷத்திலிருந்து விலகியவர் திருஞானசம்பந்தர். இவரை போல நீங்களும் ஞானப்பால் அருந்தி, முழுவாழ்க்கையும் ஆன்மீகத்திற்கு அற்பணித்தவராக இருந்தால் கண்டிப்பாக கிரகதோஷம் விலகும்.

--------------------------

மேற்கண்ட கேள்விகள் போக பரிகாரம் பற்றிய பல கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது.

ஜோதிடர்கள் பரிகாரம் செய்யாமல் விட்டாலும் மக்கள் அவர்களை திருந்த விடமாட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன். பல நூற்றாண்டாக பரிகாரம் செய்து தங்கள் தலைமுறையின் DNA-வில் அதை பதியவைத்துவிட்டனர். மெல்ல தான் புதிய ரத்தம் பாயும் என தோன்றுகிறது.

--------------------------
அடுத்த பதிவு பற்றிய முன்னோட்டம்

நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்? -கேள்வி கேட்டவர் கோவி.கண்ணன்.