Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, November 15, 2016

விஸ்வாமித்ர டயட்...!

இணையத்தில் டயட் என பல விஷயங்கள் பேசப்படுவதால் என் பங்குக்கு புதிய டயட் முறையை உலக மக்களுக்கு தெரிவிக்கவே ‘விஸ்வாமித்ர டயட்’ பற்றி சொல்லுகிறேன்.

மேலைநாட்டுக்காரங்கள் சொன்ன பல டயட் வகைகள் அசைவத்தை தூக்கிபிடிக்கிறது. ஆனால் டயட் என்றாலே மாமிசம் சாப்பிடாதே என சொல்லுகிறது இந்திய டயட் முறைகள். எளிய உணவு பருப்பும் கஞ்சியும் சாப்பிடுங்கள் என சொன்ன டயட் முறைகளை பின்பற்றுவதைவிட வாய்க்கு ருசியாக வெண்ணையில் வாட்டிய மாமிசத்தை சாப்பிடு என டயட் பலருக்கு பிடிக்காமல் போகுமா? ஆனால் விஸ்வாமித்ர டயட் இதில முற்றிலும் மாறுபட்டது.

உடல் எடை குறைக்க வேண்டுமா?
நோய் தீர வேண்டுமா?
2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வேண்டுமா?
பக்கத்துவீட்டுக்காரருடன் சண்டை தீர வேண்டுமா?
வருமானம் அதிகரிக்க வேண்டுமா ?

பயன்படுத்துவீர் விஸ்வாமித்ர டயட்...!

இதெல்லாம் எப்படி தீரும் என கேள்வி உங்களுக்கு உதயமாகலாம்.

முதலில் விஸ்வாமித்ர டயட் பற்றி பார்ப்போம்.

ரிஷி விஸ்வாமித்ரர் நம் புராணங்களிலும் இதிஹாசங்களிலும் நிறைந்தவர். பரசுராமரும் இவரும் ஒரே சூழலில் பிறந்தவர்கள் என இவரின் பிறப்பு முதல் விளக்கம் சொல்ல ஆசைதான்.
நமக்கு ஈசனின் லீலா வினோதங்களையே திருவிளையாடல் படம் பார்த்துத்தானே தெரிந்துகொள்கிறோம். அது மாதிரியே விஸ்வாமித்ரரை பற்றியும் ராஜரிஷி என்ற அற்புத திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விஸ்வாமித்ரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் இந்த டயட்டுக்கு தூண்டுகோல்.

ஒருமுறை பாரத தேசம் முழுவதும் பட்டினியும் பஞ்சமும் பரவியது. மழையில்லாமல், வேளாண்மை இல்லாமல் மக்கள் உணவுக்காக கஷ்டப்பட்டனர். அந்த சமயத்தில் விஸ்வாமித்ரர் பயணம் செய்து பக்கத்து தேசத்துக்கு சென்று இருந்தார்.  அவர் திரும்பி பாரத தேசத்துக்குள் நுழைந்தால் தர்மம் குன்றி, பஞ்சம் பரவி இருப்பதை கண்டார்.

பிரம்ம ரிஷிக்கு யாரும் உரிய மரியாதை செய்யவில்லை. தனக்கே இங்கே வாழும் சூழல் இல்லாத நிலையில் பிரம்ம ரிஷிக்கு எப்படி உணவு கொடுத்து மரியாதை செய்வது என அனைவரும் விலகி சென்றனர்.

பாரத தேசத்தில் பல இடங்களில் சென்ற விஸ்வாமித்ரர் உணவு சாப்பிடாத காரணத்தால் பலம் குன்றி கீழே விழுந்தார். அவர் அருகே ஒரு நாய் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உணவுக்காக காத்திருந்தது. எலும்பும் தோலுமாக இருந்த விஸ்வாமித்ரரை சாப்பிட அது எண்ணியது. ராஜரிஷி உயிருடன் இருந்ததால் சாப்பிட முடியாமல் நாய் உயிர்விட்டது.. சில நாட்கள் கொடூர பசியுடன் காத்திருந்த விஸ்வாமித்ரர் இறந்த நாய்க்கு யாரும் உரிமைகொண்டாடவில்லை என்பதால் அதை உண்டு தன் உயிரை மேம்படுத்தினார். இறந்து சில நாட்கள் ஆனதால் நாய் உடல் அழுகி இருந்தது.  இருந்தாலும் தனது உயிர் தாங்கி உடலுடன் நம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தர்மம் அவரை இச்செயலை செய்ய தூண்டியது.


என்னய்யா இது டயட் என்று இறந்து அழுகிய நாயை சாப்பிட சொல்கிறீர்களா? என கேட்ப்பது புரிகிறது.

சிலர் இதையும் சாப்பிட விரும்புகிறார்கள் என்பது வேறு விஷயம். விஸ்வாமித்ரர் இப்படி உணவு சாப்பிடாதும் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை. ஜீவகாருண்யத்தை கடைபிடிக்கும் ஒரு மாமுனிவர் மாமிசம் சாப்பிட்டால் பாவம் சேரும் ஆனால் விஸ்வாமித்ரருக்கு ஒன்றும் நேரவில்லை. காரணம் அவர் உணவை மூன்று நாட்கள் கவனமாக கண்டு ஆத்ம விழிப்புணர்வுடன் சாப்பிட்டார் என்பதே இதில் நாம் பார்க்க வேண்டிய உட்கருத்து.

ஒரு லட்சியத்தை நிர்ணயம் செய்து கொண்டு (உங்கள் மொழியில் - கோல்) விழிப்புணர்வுடன் நீங்கள் விரும்புவதை சாப்பிட்டு அந்த லட்சியத்தை அடைவதையே விஸ்வாமித்ர டயட் என்கிறோம்.

மூன்று வேளையோ அல்லது ஆறு வேளையோ எப்பொழுது எத்தகைய உணவு பொருளை சாப்பிட்டாலும், முழு கவனத்துடன் இதை நான் சாப்பிடுகிறேன்-இந்த உணவில் இத்தகைய சத்துக்கள் உண்டு. இதில் இத்தனை பாதகம் உண்டு என ஆய்வு செய்து கவனம் முழுவதும் உணவில்  இருக்குமாறு விழிப்புணர்வுடன் உட்கொள்ளுங்கள்.

உங்கள் எடை 100 கிலோவா? அதை 70 கிலோவாக மாற்ற வேண்டுமா? சுலபம். இருக்கவே இருக்கு விஸ்வாமித்ர டயட்.

மூன்று மாதம் லட்சியம் வைத்திக்கொள்ளுங்கள். 

தினமும் காலையில் சுப்ரபாதம் (இதை முதலில் பாடியவர் விஸ்வாமித்ரர்தான் என்பது எத்தினி பேருக்கு தெரியும்?) இசைக்கும் வேளையில் எழுந்து என் லட்சியம் இது இன்று முழுவதும் உணவை லட்சியம் நிறைவேறவே சாப்பிடுகிறேன் என விழிப்புணர்வுடன் சொல்லுங்கள்.

தண்ணீர் அருந்தும் பொழுது, பலகாரம் சாப்பிடும் பொழுது என எப்பொழுதும் இந்த கவனம் இருக்கட்டும். 

கவனம் சிதறாமல் இருக்க வலது கை மணிக்கட்டில் ஒரு காசி கயிற்றில் உள்புறமாக சிறிய அட்டைகாகிததில் உங்கள் லட்சியத்தை கட்டி தொங்கவிடலாம்...!

ஒவ்வொரு கவளம் சாப்பிடும் பொழுதும் இந்த காதிக அட்டை நினைவூட்டி உங்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும்.

விஸ்வாமித்ர டயட் சொல்லுவதெல்லாம் இது தான், நீங்கள் விழிப்புணர்வுடன் சாப்பிடாத காரணத்தால் உடல் மற்றும் மனதில் பிரச்சனை வந்தது. விழிப்புணர்வுடன் மனதை உணவில் வைத்து சாப்பிடுங்கள் நீங்கள் நினைத்த ஆரோக்கியம் மற்றும் பெருவாழ்வு பெறுவீர்கள்.

கொழுப்பு டயட், கார்ப் டயட் என எதை எடுத்தாலும் எடுப்பவருக்கு இதை சார்ந்து தான் உணவு உண்கிறோம் என தெரியாதவறை அந்த டயட் அவர் உடலில் செயல்படாது. எத்தனையோ வகை டயட் மற்றும் ஹீலிங் முறை பின்பற்றினாலும் அனைத்தும் விழிப்புணர்வு என்ற தளத்தில் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆகவே இந்திர லோகத்திலிருந்து உங்கள் தவத்தை கலைக்க தேவ கன்னிகளை பலர் அனுப்பலாம். அதில் சபலமடையாமல் விழிப்புணர்வுடன் இருங்கள்.

Tuesday, August 30, 2016

ப்ராண வித்யா - வேதகால ஹீலிங்

சக்தியூட்டப்பட்ட நீர் அதன் தன்மைகளை அறிந்துகொள்ள கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்

Tuesday, July 19, 2016

ப்ராணாயாம ரகசியங்கள் - ஒலி பதிவு

அனைவருக்கும் குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்

ப்ராணாயாம ரகசியங்கள் என்ற உரை  இங்கே ஒலிவடிவில் அளிக்கிறேன்.
வாழ்வில் ப்ராணாயமத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

உரையின் நடுவில் அளிக்கும் பயிற்சியை செய்து பாருங்கள், ஸ்வாசத்தின் முக்கியத்துவம் உடலின் அமைப்பை பயன்படுத்துவதன் அவசியம் உணர முடியும்.



20 ஜூலை 2016 அன்று ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையில் குருபூர்ணிமா விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு குருவருள் பெற பேரன்புடன் அழைக்கிறோம்.


Tuesday, June 21, 2016

Ebook - Yoga @ 35000 Feet

Today International Yoga day.

To celebrate our Yoga Tradition,  here i give a ebook 'Yoga at 35000Ft"

Yoga @ 35000 Ft-Ebook about Astanga Yoga




Wednesday, June 1, 2016

ஜெர்மனியில் கஜமுகன்

இளங்குளிருடன் பெர்லின் நகர காலை விடிந்தது. நான் தங்கி இருந்த அறையின் ஜன்னல் திரையை திறந்து காலை நேரத்தை ரசிக்க துவங்கிய எனக்கு அதிர்ச்சி. என் அறையிலிருந்து பார்க்கும் தூரத்தில் ஒரு  ராஜ கோபுரம் கம்பீரமாக தெரிந்தது. இது பெர்லினா அல்லது கும்பகோணமா என ஒரு முறை என்னை சரி பார்த்துக் கொண்டேன்.

ஐரோப்பிய வரலாற்றில் ஜெர்மனியின் பங்கு மிக அதிகம். உலக அரசியல் மாற்றத்திற்கும் ஜெர்மனியர்கள் பல்வேறு வினைகளை செய்து இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக கிருஸ்துவ மத பிடியில் இயங்கி வந்த ஜெர்மனி உலகப்போர் சமயத்தில் விடுபட்டு இப்பொழுது பின்புலத்தில் மட்டும் மத அரசியலை வைத்துக்கொண்டு இருக்கிறது. புரட்டஸ்டண்ட் கிருஸ்துவம் தோன்றியது இங்கே என்பதால் பெரும்பான்மையானவர்கள் இந்த பிரிவில் இருக்கிறார்கள். உலகப்போருக்கு பின்பும்,  1960க்கு பிறகும் பலர் எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் சுப்பாண்டியின் பாணியில் சொல்வதேன்றால் ‘விலையில்லா யோசிப்பவர்களாக’ (Free Thinker) இருக்கிறார்கள்.

யூத கோவில்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் என பல மதவழிபாட்டுக்கூடங்கள் இருந்தாலும் இன்று வரை நம் கலாச்சாரத்தின் அடிப்படையில் கோவில்கள் இல்லை. அதற்கும் இந்தியர்கள், இந்துக்கள் குறைவு என சொல்லிவிட முடியாது. தனியாக பல இந்து ஆசிரமங்கள் வழிபாட்டுக்கூடங்களை வைத்துள்ளன. அவைகளை ஆகம சாஸ்திர கோவில்கள் என கூற முடியாது. இலங்கை தமிழர்களால் சில தனிக்கோவில்கள் உள்ளன. தனியாரால் கட்டப்பட்டு நம் ஆட்களால் வணங்கப்படும் முருகன் கோவில் ஜெர்மனியில் உண்டு. ஆனால் இவை அனைத்துக்கும் ஜெர்மனிய அரசு எந்த உதவியும் செய்தது இல்லை.  வழிபடவும், வழிபாட்டு மையம் துவங்கவும் ஜெர்மன் அரசு அனுமதி மட்டும் அளித்துள்ளது.

சில வருடங்கள் முன்னால் அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்தது. வேறு என்ன எல்லாம் தேர்தல் கால அறிவிப்புதான். ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் ஒரு பூங்காவின் அருகே இடம் ஒதுக்கினார்கள். இலங்கை தமிழர்கள் அதிகம் கொண்ட பகுதி என்பதால் அவர்களின் ஆதரவுடன் ஓர் சங்கம் உருவாக்கி தமிழ் கலாச்சார அடிப்படையில் கோவில் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெர்லின் நகரின் மிக அதிக மக்கள் கூடும் இடத்தில் கோவில் அமைவது மகிழ்ச்சியை அளித்தது.


யானை முகன் விநாயகருக்கு திருக்கோவில், ராஜ கோபுரத்துடன் மிக அற்புதமாக உருவாகி வருகிறது. மாமல்லபுரத்திலிருந்து ஸ்தபதி குழு பணி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்தேன்.  விரைவில் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிந்து மகிழ்ந்தேன்..

இனி வரும் நாட்களில் ஜெர்மனியில் காலை நேரத்தில் ஸ்பீக்கர் அலறலுடன்...விநாயகனே வினை தீர்ப்பவனே...என சீர்காழி கோவிந்தராஜன் பாடுவார்...

Sunday, April 24, 2016

வேளாண்மை பஞ்சாங்கம்- 2016-2017

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (துன்முகி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 

வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.

 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Saturday, April 2, 2016

கொலம்பஸ் ...கொலம்பஸ் .. கொலம்பலைஸிங்...போதும்...!

இன்றும் கூட நம் பள்ளிகளில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என கூசாமல் கற்பித்து வருகிறோம். இவர் இந்தியாவை கண்டு பிடிக்க சென்றார் , திசை மாறி தன் குறிக்கோளில் தோல்வியுற்றார் அதனால் தான் கண்ட நிலப்பரப்பை இந்தியா என்றும் அதில் வாழ்பவர்களை இந்தியர்கள் என்றும் அழைத்தார் என வரலாறு சொல்வதில்லை. காரணம் பிரிட்டீஷ் எழுதிய வரலாறு புத்தகமே நம் கையில் உண்டு. பிறகு தற்காலத்தில் அமெரிக்கா சொல்லுவதை கேட்கும் நிலையில் இருக்கிறோம். இதனால் இந்தியாவின் கருத்துக்கள் உரக்க சொன்னாலும் எங்கும் செல்வதில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் சொல்லுவது சத்ய வார்த்தையாக இருக்கிறது. நம்மில் பெரும்பான்மையானவர்கள் கூட ”அமெரிக்காவுல ஆராய்ச்சில கண்டுபிடிச்சிருக்கானாம்..” என கண்கள் விரிய சொல்கிறோம்.  நம் தலையில் கட்டும் விஷயங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்கள் மார்கெட்டிங் செய்கிறார்கள். அந்த செய்தியை நம் கண்ணில் படுமாறு கசிய விடுகிறார்கள். பிறகு உங்கள் வீட்டின் அருகே இருக்கும் கடைகளில் அப்பொருள் வரும் பொழுது.....ஓ அமெரிக்க கண்டுபிடிப்பு என வாங்குகிறோம்.

அதற்காக நான் அமெரிக்க ஏகாதிபத்யமே...! என புரட்சி பேசும் ஆள் இல்லை.  அமெரிக்க மனநிலை என்ற ஒரு தன்மைக்கு இளைஞர்கள் மயங்கி கிடப்பதை சுட்டிகாட்டவே இதை பேசுகிறேன். வேப்பிலை , மஞ்சள் இவைகளை ஆயிரக்கணக்கான வருடமாக நாம் பயன்படுத்தி வந்தோம். கோவில்களிலும், வீடுகளிலும் மற்றும் மருத்துவத்திற்கும் இவை இரண்டும் பயன்படாமல் இருந்ததே இல்லை. ஆனால் அமெரிக்காவில் இதன் மருத்துவ குணத்தை கண்டறிந்து காப்புரிமை வாங்க முயன்றார்கள். பிறகு சில இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல விரும்பிகள் தடுத்தார்கள் என்பது நமக்கு தெரியும்.

முன்பே பயன்பாட்டில் இருக்கும் ஒருவிஷயத்தை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என சொல்லுவது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. காரணம் அமெரிக்காவே அப்படி கண்டுபிடிக்கப்பட்டது தானே? அங்கே பல்லாயிரம் வருடமாக பூர்வகுடிகள் வாழ்ந்து வந்தார்கள். கொலம்பஸ் கண்டறிந்தார் என சொல்லி அவர்களை கொன்று குவித்து இப்பொழுது அமெரிக்கர்கள் பேசுவதை பார்த்தால் கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தகுடி போல பேசுவார்கள். சமூக ஆர்வலர்கள் இச்செயலை  கொலம்பஸிங் என கிண்டலாக சொல்லுகிறார்கள். முன்னரே இருந்த விஷயத்தை கண்டுபிடித்து அதனால் பழைய வரலாறை மறைத்து பெயர் வாங்கும் சின்ன புத்திக்கு கொலம்பஸிங் என கூறலாம்.

இணையத்தில் சூப்பர் யோகா என தோப்புகரணம் போடுவதை ஏதோ ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது போல சொல்லுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது போல இப்பொழுது இயற்கையை சேதப்படுத்தாத இலை பாத்திரங்கள் என சொல்லி தாய்லாந்து நாட்டின் யுனிவர்சிட்டி கண்டுபிடித்திருக்கிறார்களாம். இவர்கள் பின்புலத்திலும் கொலம்பஸிங் ஆட்கள் தான் இருக்கிறார்கள்.

விரிவாக பார்க்க இதோ இணைப்பு : http://m.bangkokpost.com/news/917069



மார்கழி மாச பஜனையும் தொன்னையும் அதில் வழியும் சக்கரை பொங்கலையும் மறக்க முடியுமா? இவர்கள் தான் இயற்கை வழி தொன்னையை முதன் முதலில் கண்டுபிடித்தார்களாம். நாம் நம்ப வேண்டும். புளிசோற்றை பாக்கு மட்டையில் கட்டி கட்டு சோறு என்று எடுத்து செல்வதும், தொன்னையை பயன்படுத்துவதும் நம் வழக்கமாக இருந்தது. அதில் ப்ளாஸ்டிக்கை நுழைத்து, இனியாவது மார்டனா இருங்க என சொல்லி நம் வழக்கத்தை குழைத்து இப்பொழுது இயற்கை கண்டுபிடிப்பு என சொல்லுகிறார்கள். இதை தான் கொலம்பஸிங் என்கிறோம்.

நான் அர்ஜெண்டினா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது எப்பொழுதும் தொன்னை எடுத்து செல்வேன். அங்கே இருப்பவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் எப்படி இதை உண்டாக்கினார்கள் என வியப்பார்கள். எடை குறைவாக இருப்பது, பூஜைகளுக்கு தூய்மை ஆகிய காரணங்களால் நான் தொன்னையை சுமப்பேன். அவர்களுக்கு இதன் உண்மை காரணம் தெரியாது...!

இது போன்று பல பாரம்பரியங்களை நாம்  இழந்து வருகிறோம். எதிர்வரும் காலத்தில் நம் சந்ததியினர் பிரான்ஸில் புதிய உணவு கண்டுபிடித்திருக்கிறார்களாம், பசும் பாலை ப்ராஸஸ் செய்து அதில் டோயிர் என உண்டு செய்து சாதத்தில் பிசைத்து சாப்பிடுவார்களாம் என சொல்லுவார்கள். நாமும் டோயிர் ரிஸொட்டோ என உணவு பட்டியலை பார்த்து தயிர்சாதத்தை பெருமையாக சாப்பிடுவோம்.

கற்றாழை, முருங்கை இலை பொடி என முன்பே சென்றுவிட்டது...
இப்படியாக கொலம்பஸிங் விரிவடையும் ....எப்பொழுது உண்மையை உரக்க சொல்லுவோம்?

#columbusing

Sunday, March 6, 2016

காசி பயண அனுபவங்கள் - 2016

        இந்த வருடம் காசி பயணம் திட்டம் வகுக்கப்படாமல் நடந்தது. ஐந்து மாதம் முன்பே துவங்கும் திட்டங்கள், ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி ஜனவரி கடைசி வாரத்தில் முடிந்தது.

  இந்த வருடம் காசி பயணம் வேண்டாம் என முடிவில் இருந்தேன். நான் முடிவு செய்தால் போதுமா? கால பைரவர் அல்லவா நான் வருவதையும் காசியிலிருந்து கிளம்புவதையும் முடிவு செய்கிறார்...!

சில கோவை மாணவர்கள் மற்றும் பல சிங்கை மாணவர்களுடன் என் பயணம் துவங்கியது. அங்கே நிகழ்ந்தவைகளை திரு.கோளப்பன் தமிழிலும், திரு ராம்கோபால் ஆங்கிலத்திலும் நமக்காக தந்திருக்கிறார்கள்.

My Kasi Experience Ram gopal
 

அடுத்து இமாலய மலையை நோக்கி பயணம்....இறையருள் இமையத்தை உணர்த்தட்டும்...!