Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, December 10, 2015

ரங்கராஜ் பாண்டேயின் கேள்விக்கு எங்கள் பதில்..!


கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் சென்னை பேரிடரை ஜோதிட ரீதியாக அலசும் வகையில் சென்ற வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் திரு.ரங்கராஜ் பாண்டே சில கேள்விகளை முன் வைக்க பிரபல ஜோதிடர் ஷெல்வி பதில் அளித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் அடிப்படையானது மேலும் தர்க்க ரீதியாக பொதுமக்கள் கேட்க விரும்பிய கேள்விதான். நெறியாளர் பாண்டேயின் கேள்விகள் மிகவும் ஆய்வு செய்து கேட்கப்பட்டதல்ல. ஆனால் யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் பல பதில்கள் தெளிவாக இல்லாமலும் மேலும் ஜோதிடத்திற்கு முரணாகவும் இருந்தது.

கேள்விக்கான பதில்கள் பலருக்கு சாஸ்திர உண்மையை சொல்லும் என்பதாலும் தெளிவு கிடைக்கும் என்பதாலும்  அக்கேள்விகளை எனது ஜோதிட மாணவர்களிடம் கொடுத்து பதில் அளிக்க சொன்னேன். அவர்களின் பெரும்பாலனவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்கள். அவர்கள் அளித்த பதில் இங்கே தொகுத்துள்ளேன்.


கேள்வி பதில்


1. இயற்கை பேரழிவுகளை தலைவிதியா? நிர்வாகத்தின் அலட்சியமா?

இது தலைவிதியோ அலட்சியமோ இல்லை. இது வானிலையின் இயற்கை செயல்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றி வருவது நமக்கு தெரியும். நீள் வட்டப்பாதையில்ஒரு பக்கம் சூரியனிலிருந்து தள்ளியும் ஒரு பகுதி அருகிலும் இருக்கும். அருகில் இருக்கும் சூழலில்கோடை காலமும், சூரியனின் வெப்பமும் அதிகமாக இருக்கும், தள்ளி இருக்கும் சூழலில் குளிர்காலமும் சூரியனின் தாக்கம் குறைந்தும் இருக்கும். இதை நாம் எப்படி வானிலை நிகழ்வு என சொல்லுகிறோமேஅது போல பூமிக்கும் சனிக்கு இடையே இருக்கும் இடைவெளியை பொருத்தும் பூமியில் வானிலை மாற்றம் நிகழும். பூமி சூரியனை சுற்றி வர நமக்கு ஒருவருடம் ஆகிறது அதனால் குளிர் மற்றும் கோடை காலம் நமக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும். ஆனால் சனி பூமி ஆகியவற்றின் சுழற்சி 30 வருடம் எடுத்துக் கொள்ளுகிறது.
 
இதனால் சுமார் 15 வருடம் ஒரு முறை அதிக மழையும் , வறட்சியும் ஏற்படும். இடைக்கடார் சித்தரின் பாடல்கள் பரவலாக ஜோதிடத்தில் பயன்படுத்துவதில்லை, மன்மத வருஷம் மாரி உண்டு என அவர் சொல்லுவது பஞ்சாங்கத்தின் முன்னால் ஒரு பொது பலனாக இருக்குமே தவிர அவை கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதில்லை. இந்த பொதுப்பலனும் சனியின் தன்மையும் இணையும்காலத்தில் அவை மிகச்சரியாக நடக்கும்.

முண்டேன் ஜோதிடம் என்ற பிரிவு ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. அவை சமூகம் மற்றும் மக்கள் சார்ந்த பலன் சொல்லும் பகுதியாகும். அவ்வாறு முண்டேன் ஜோதிடம் கற்றவர்களால் இயற்கை பேரிடர், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் கூற முடியும்.

2. 60 வருடத்திற்கு ஒரு முறை இதே பிரச்சனை வருமா?

அவை பொதுப்பலன் சனி நீர் ராசி சம்பந்தப்பட்டு, குரு+சூரியன் ஆகியவை இணைந்தால் தான் இவை நடக்கும்.  

60 வருடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் கட்டாயம் 10 வருடத்திற்கு ஒரு முறை சனி நீர் ராசி சம்பந்தப்படும் எனவே அது மன்மத வருடமாக இல்லை என்றாலும் நடக்கும். 2004 டிசம்பர் சுனாமி, 2015 இப்பொழுது அடுத்தது 2026 செப்டம்பர் என  நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.

இதுக்கு எதுக்கு கூகுள்..!


3.மழை வருடா வருடம் வருதே, இதற்கு எதற்கு ஜோதிடம்?

மழை வருடா வருடம் வரும் என சொன்னாலும் இனி வரும் காலத்தில் 2017 முதல் 2020 வரை சனி நெருப்பு ராசியான தனுசில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் 2014 முதல் 2017 வரை இருந்த மழையின் அளவை விட மிகவும் குறைவாக இருக்கும். 2018 ஆண்டு மழை இல்லாமல் பொய்க்கும். முன்பு சொன்னது போல பூமிக்கும் சனிக்கு இடைவெளி பெருகுவதால் இவை நடைபெறுகிறது.

4. மன்மத வருடத்தில் இயற்கை பேரழிவு நடக்கும்னு நம்பரீங்க?

எந்த வருடமும் அழிவு பேரழிவு என சொல்லிவிட முடியாது. கிரகங்களின் சுழற்சியே அதை முடிவு செய்கிறது. 2017 வரை சனி விருச்சிக ராசியில் இருக்கும்

அப்படி இருக்க அது வரை சில பேரழிவு விஷயங்கள் நடைபெறும். ஜனவரி முதல் வாரம் ராகு/கேது பெயர்ச்சி உண்டு. அது மட்டுமே வைத்து சொல்லிவிட முடியாது. ராகு சனி உடன் சம்பந்தப்படும் பொழுது 2016 ஆம் ஆண்டு மார்ச், மே மாதங்கள் மனித செயலால் குழு மரணங்கள் நிகழும்.

5. கார்த்திகை பிறகு மழை இல்லை, கர்ணனை மீறிய கொடை இல்லை.  அப்பொழுது எப்படி?


கார்த்திகைக்கு பிறகு தான் மழை இல்லை. அதாவது மார்கழி மாதம். நாம் பேசும் இக்காலத்தில் கார்த்திகை முடியவில்லை. மேலும் இத்தகைய பழ மொழிகள் ஜோதிடம் இல்லை. அதனால் ஜோதிட சார்ந்த கேள்விகளை கேளுங்கள்.

6. இந்த கார்த்திகைனு சொல்றீங்களே... நம் நாட்டுக்கா? தமிழ் நாட்டுக்கா?

சனியும் சூரியனும் விருச்சிக ராசியில் 13 ஆம் டிகிரியில் சென்றார்கள். சூரியன் சனியின் டிகிரியை நெருங்க நெருங்க நவம்பர் 20ஆம் தேதியிலிருந்து சென்னை பாதிக்கப்பட்டது. காரணம் சென்னையின் ரேகாம்சம் 13 டிகிரி. சனி விருச்சிக ராசியில் பயணம் செய்ய செய்ய பல டிகிரியில் மாற்றம் அடையும் அது குறிக்கும் ரேகாம்ச இடங்கள் எல்லாம் பாதிக்கப்படும்.

7. 2016 தை வரை, ஜனவரி 29  வரை கவனம் தேவை. தமிழன், தமிழக முதலமைச்சர், தமிழகம் எல்லாம் கவனமாக இருக்க வேண்டுமா? இனியும் பேரிடர் நடக்கலாமா?

இனி பேரிடர் தமிழகம் சார்ந்து இல்லை. ஆனால் இந்தியாவில் உண்டு. தமிழகத்தில் குழு மரணம், போராட்டத்தை ஒடுக்கும் பொழுது மரணம் ஆகியவை நடைபெறும்.

8. ஒரு ஐம்பது வருஷமா நீர் நிலை, கடவுள் வணங்காம இருந்திருப்பமா? அப்போ பேரழிவு இப்பதான்னே நடக்குதா? அதுக்கு முன்னாடி நடந்ததே இல்லையா?

முன்பே சொன்னது போல வானிலை மாற்றங்கள் கிரக சுழற்சிக்க ஏற்ப நிகழும். நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் இயற்கை அதன் வேலையை செய்யும்.
 
சூரியனை நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் எப்படி ஒளி கொடுக்குமோ அது போலவே இது. ஜோதிட சாஸ்திரம் எதையும் வணங்க சொல்லுவதில்லை. மதங்கள் தான் இறைவனை வணங்கு இல்லை உனக்கு தீயவை நடக்கும் என பயத்தினால் பக்தியையும் மதத்தையும் வளர்க்கிறது. ஜோதிடத்தை மதம் போன்று மலிவாக மாற்றம் செய்ய வேண்டாம் என வேண்டுகிறேன்.

9. உங்கள் கருத்துப்படி பேரழிவு நடந்தே தீரும் இது விதி இல்லையா?
முன்பே சொன்னது போல இது விதி அல்ல, இயற்கை சுழற்சி. குளிர்காலம் வரும் என தெரிந்து கம்பளி உடை வாங்குவது போல, நிகழ்வுகளை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படலாம். அதை புரிந்து கொண்டு செயலாற்றவே ஜோதிடம் சாஸ்திரம் நமக்கு உதவுகிறது. எதையும் மாற்றவோ, இது தான் விதி என உங்களை தாழ்தவோ ஜோதிடம் செயல்படுவதில்லை. அது ஒரு முன்கூர் (ஃபோர்காஸ்டிங் டூல்) கருவி.

10. இதுக்கு பரிகாரம் இருக்கா?

இது ஒரு கருவி இதனால் அளவிட மட்டுமே முடியும். ஆன்மீகம் , இறையா ப்ரார்த்தனைகள் மாற்றம் செய்யலாம். ஆனால் கிரகத்தை வணங்குவதாலோ அல்லது கிரகம் சார்ந்த தேவதைகளை ப்ரார்த்தனை செய்வதோ ஜோதிட சிந்தாந்தத்தில் இல்லை.

[சனி சார்ந்த பரிகாரம். சனி - சூரியன் சம்மந்தப்பட்டா ஆஞ்சனேயரை வணங்க வேண்டும் - என திரு,ஷெல்வி - கூறுகிறார்]
சக்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு சக்கரை சாப்பிடுங்கள் என சொல்லுவதை போன்று ஒரு தவறான வழிகாட்டுதல் இது.  சனி மற்றும் சூரியன் என்ற இரு

கிரகத்தால் தான் இத்தகைய பிரச்சனை நடைபெறுகிறது. அப்படி இருக்க அவர்களை வணங்குவது சரியாக வருமா என சிந்திக்க வேண்டும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகும் என நான் சொன்னால் நீங்கள் இளநீர் அருந்துதல் , உடலை குளிர்விக்க முயலவேண்டுமே தவிர கோடையில் வெப்பத்தை கொடுப்பது சூரியன் தான் என கூறி வெளியில் சென்று சூரியனை வணங்கினால் வெப்பம் குறையுமா?

11. இதை செய்தால் ஆஞ்சனேய ப்ரீதி நீங்கள் சொல்வதை போல செய்தால்  ஜனவரி 29 வரை நடக்கும் பேரழிவு தடுக்கலாமா?

ஜோதிடமும், ப்ரார்த்தனையும் வேறு வேறு.

வானிலை அறிக்கை போல சூழலை சொல்லுவது மட்டுமே ஜோதிடத்தின் வேலை. அதன் ப்ரீதி, பரிகாரம் ஆகியவை தர்ம சாஸ்திரம் மற்றும் ஆன்மீக அடிப்படையில் சொல்லப்படுகிறது.

12. பரிகாரம் செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கம் தவிர்க்க முடியும் என்றால் ஜோதிட பலன் தவறாகிவிடும். ஜாதகம் உண்மையாக இருந்தால் பரிகாரம் பொய்யாகிவிடும். பரிகாரம் உண்மையாக இருந்தால் ஜோதிட பலன் பொய்யாகிவிடும். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

அதனால் தான் இவை இரண்டும் வேறு வேறு என்கிறேன். ஆனால் இவை இணையும் ஒரு புள்ளி ஒன்று உண்டு. ஜோதிடம் என்பது பரிசோதனை நிலையம் போன்று உங்கள் ஜாதகம் ஆராய்ந்து இது இப்படி இருக்கிறது என சொல்ல மட்டுமே முடியும். மாற்றம் செய்ய மருத்துவர் போன்று ஆன்மீகவாதிகள் தேவை. அவர்கள் மாற்றம் செய்தபின் தேடினால் ஜாதக பலனும் மாறுபடும். இதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஜோதிடத்தின் எல்லையை புரிந்து கொள்ளுங்கள்.

[ திருஞான சம்பந்தரே கோளரு பதிகம் கொடுத்திருக்கார் அதை படித்தால் கிரக கோளாரு நீங்கும் - என திரு,ஷெல்வி கூறுகிறார்.]
ஆம் உணமைதான்... ஆனால் நமக்கு பார்வதி தேவி 3 வயதில் ஞானப்பால் கொடுத்திருந்தால், நாமும் பக்தியில் திருஞானசம்பந்தரை போல இருந்தால் கோளாரு பதிகம் வேலை செய்யும். நீங்கள் அப்படியா என முடிவு செய்து கொள்ளுங்கள்.

13. பரிகாரம் செய்தால் விபத்தே நடக்க கூடாது. பரிகாரம் செய்தால் விபத்து காலில் மட்டும் அடுபட்டு செரியாகும் என்பது உணமையா?
ஜோதிடத்தில் பரிகாரம் இல்லை. அது அளவீட்டு கருவிதான். ஒருவருக்கு விபத்து நடக்கும் என கிரகம் சொல்லுகிறது என்றால் அவர் ஆன்மீக வழியில் ஈடுபட்டால் முற்றிலும் தவிர்க்க முடியும்.  நாகாஸ்திரம் ஏவப்பட்ட நிலையில் அர்ஜுனன் தப்பித்தார் அல்லவா அது போல. பகவான் கிருஷ்ணன்  நாகாஸ்திரத்தை நிறுத்தவில்லை அவர் தேரையே தாழ்த்தினார். பகவானாக இருந்தாலும் உங்களை காப்பாற்றுவார், ஆனால் இயற்கையை தடுக்க மாட்டார்.

14. 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 200க்கு மேல் இறந்திருக்கார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே ராசியா? ஒரு கிரக அமைப்பா? ஒரே ஜாதகமா?

ஆம் இதில் சந்தேகம் என்ன. ஒரே ராசியாக, ஒரே ஜாதகம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இறப்பை கொடுக்கும் கிரக அமைவுகள் [ மாரக பாதக ஸ்தான இணைவுகள்] ஒன்று போல இருக்கும்.

இறப்பு என்பது நமக்கு ஒரு வித மன ரீதியாக நெகிழ்ச்சி கொடுக்கும் செயலாக இருப்பதால் இப்படி கேள்வி வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 200 குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருக்கும் பொழுது , இறப்பும் சாத்தியமே. 

ஜோதிடத்தை பொருத்தவரை இறப்பு / பிறப்பு / கல்வி/ திருமணம் / குழந்தை பேறு என அனைத்தும் நிகழ்வு தான் இதில் செண்டிமெண்டுடன் பார்த்தால் இறப்பு ஒருவித மன அழுத்தத்தை தருகிறது. ஒரு முகூர்த்த நாளில் சென்னையில் மட்டும் 300க்கும் அதிகமான திருமணம் நடக்கும். அதெப்படி ஒரே நாளில் 300 திருமணம்? அனைவருக்கும் ஒரே ராசியா என கேள்வி நமக்கு ஏன் எழவில்லை என சிந்திப்பது நல்லது.


15. சனியால கூட்டு மரணம் ஏற்படும் இந்த ராசியில் சஞ்சரிக்கு பொழுது ஏற்படும்னு சொல்றீங்க.. இது இங்கே தமிழகத்தில்..சென்னையில் நடக்கும் என குறிப்பிட்டு சொல்ல முடியுமா? இது எப்படி எந்த ஊரில் விஜயவாடாவா? டெல்லியா எப்படி தெரிந்து கொள்வது?

சனியின் டிகிரி , சூரியனின் டிகிரி அவற்றை முடிவு செய்யும் என சொன்னேன். ஊரின் ரேகாம்சம் அதனுன் இணைந்து செயல்படும். அதைவைத்தே முண்டேன் ஜோதிடத்தில் சொல்லுவார்கள். இதை தவிர பல நுட்பமான விதிகளும் உண்டு. நம்மை விட வெளி நாட்டினர் முண்டேன் ஜோதிடத்திலும், லோக்கேஷனல் அஸ்ராலஜி என்ற இடம்சார் ஜோதிடத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

16. டெல்லி குஜராத்தில் குழு மரணம் நடக்கும் என்பதை எப்படி சொல்லுகிறீர்கள்?

என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. காரணம் கிரகங்களின் ரேகாம்சம் குஜராத், டெல்லியை சுட்டிக்காட்டுவதில்லை.

[தலைவர்கள் / பிரதமர் ஜாதகத்தை வைத்து முடிவு செய்ததாக திரு.ஷெல்வி கூறுகிறார். மேலும் தலைவர் ஜாதகம் உண்மை இல்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.

ஒரு ஜோதிடர் தன் கையில் இருக்கும் ஜாதகம் சரியா என பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஜாதக தகவல் சரி இல்லை என்றால் தகவலை ஜோதிட ரீதியாக கண்டரிந்து சரி செய்யதெரியவேண்டும். அதை விடுத்து கொடுக்கபட்ட ஜாதகம் தவறாக இருந்தால்  நான் என்ன செய்வது என கேட்பது ஜோதிடம் முழுமையாக கற்ற அறிவை குறிக்காது ]

17. இந்தியாவுக்கு ஜாதகம் போடுவீர்களா? நரேந்திர மோடி ஜாதகம் வைத்து இந்தியாவுக்கு சொல்லுவீர்களா?
18. மாநிலத்திற்கும் ஜாதகம் உண்டா?
19. அந்திர மாநில முதலைமைச்சர் ஜாதகம் சிறப்பா இருக்கு, ஆனா அங்க 100 பேருக்கு ஜாதகம் சரியில்லை என்றால் என்ன  நடக்கும்?
20. சந்திரபாபு நாயுடு ஜாதகம் நாட்டுக்கே பேசுமா?
21. இந்தியாவை ஆள்வது நரேந்திர மோடி என சொல்லி அவர் ஜாதகத்தை பார்ப்பீர்களா? அல்லது ஜனாதிபதியின் ஜாதகம் பேசுமா?
24. ஆள்பவர் ஜாதகமா? இந்தியாவின் பெயர் ராசியா? சுகந்திரம் அடைந்த தேதியா எதைவைத்து சொல்வீர்கள்?

22. முருகேசன் ஜாதகத்தில் தொழில் சரி ஸ்தானம் இல்லை. மனைவி கையெழுத்தில் தொழில் நடக்கும் என்றால் தொழில் கையெழுத்து போடுவது ஜாதகம் மூலமே நடக்கும் அல்லவா?


மேற்கண்ட அனைத்தும் ஜோதிடத்திற்கு முரணான செயல்.
 
விம்சோத்தரி தசா என்பது 120 வருடம் கொண்ட காலக்கணக்கு. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை கொண்டு ஜாதகம் ஆராய்வதாக கொண்டால், 120 வருடத்திற்கு மேல் இந்தியா இருக்காதா என கேள்வி வரும். அமெரிக்க நாடு தோன்றி 200 வருடங்கள் ஆகிவிட்டது. அமெரிக்கா உருவான தினத்தை கொண்டு ஜாதகம் கணித்திருந்தால் பலன் 120 வருட தசா தீர்ந்த நிலையில் இப்பொழுது வருமா என சிந்திக்க வேண்டும். அப்படியானால் பிரிட்டீஷ் அரசுக்கு எப்படி ஜாதகம் போடுவது? அவர்கள் யாரிடம் இருந்தும் சுகந்திரம் பெறவில்லை. தோற்ற நாள் கிடையாது. அப்படியானால் பிரிட்டனுக்கு ஜாதகமே கிடையாதா?

ப்ரசன்ன ஜோதிடம் என்ற முறையிலேயே இதை பார்க்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் அந்த நாடு, மாநிலம் மற்றும் குழுவுக்கு செயல்படாது.
இதை புரிந்துகொள்ள சரியான முறையில் முண்டேன் ஜோதிடம் கற்று கொள்ள வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் ஜாதகம் ஆந்திர மக்களுக்கு செயல்படும் எனபது ஜோதிடத்திற்கு முரணான தகவல்.
 
ஒரு பஸ் ட்ரைவர் இருக்கிறார். அவருக்கு இன்று மாரக தசா நடக்கிறது மரணிக்க போகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். 53 பயணிகள் பஸ்ஸில் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் இறப்பு இல்லை என ஜாதகம் சொல்லுகிறது என வைத்துக்கொள்வோம். பஸ் ட்ரைவர் ஜாதகம் தான் பேசும். அவர் போனால் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பதை போன்ற முட்டாள் தனமான ஆய்வு இது.

பிரதமர்கள், முதலமைச்சர்கள் ஜாதகம் மக்களுக்கு நடக்கும் என்றால் சில பிரதமர்கள் கொல்லப்படும் பொழுது நாட்டு மக்களும் அவர்களுடன் சேர்ந்து இறந்திருக்க வேண்டும் அல்லவா?

தலைவர்கள் ஜாதகம் அவர்களின் தனிப்பட்ட பதவி, நிர்வாகம் கட்சி சார்ந்த செயல்பாடு இவைகளையே காட்டும். மக்களின் ஜாதகம் தான் அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. மக்களின் வாழ்வும் அதன் தரமும் உயரும் என இருந்தால் அதன் தாக்கம் தலைவர்களின் செயலில் அது வெளிப்படும். இதற்கு தலைவர்களின் ஜாதகம் ஒத்துழைக்கும்.

என் ஜாதகத்தில் (பத்தாமிடம்) தொழில் ஸ்தானம் சரியில்லை என்றால் என் மனைவி ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரியாக இருக்கிறது என ஜோதிடம் சொன்னால் என் மனைவி பெயரில் தொழில் செய்வது என்பது தற்கால நடைமுறையில் இருக்கிறது. ஆனால் உணமையில் இது ஒரு மனரீதியான தீர்வு தானே தவிர உணமையான தீர்வு அல்ல.

என் தொழில் நன்றாக இல்லை தொழில் நன்றாக இருக்கும் ஒருவரின் பெயர் தொழிலை நடத்தும் என்றால் நான் முக்கேஷ் அம்பாணி பெயரில் தொழில் செய்துவிட்டு போகலாமே..!

என் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரி இல்லை , என் மனைவுக்கு தான் சரியாக இருக்கும் என்றால் நான் தொழிலை மனைவியிடம் நடத்த சொல்லிவிட்டு வீட்டில் சும்மா இருப்பது நல்லது. அதைவிட்டுவிட்டு பெயரை மட்டும் மாற்றி கையெழுத்து போடும் அதிகாரம் கொடுத்துவிட்டால் தொழில் மாறாது. காரணம் தொழில் முடிவு எடுப்பது நீங்கள் தான். கிரகங்கள் உங்களின் மனதில் இயங்கி முடிவை எடுக்க செய்யும். யார் கையெழுத்திட்டால் என்ன, தவறான முடிவு எடுத்தால் தொழில் என்ன ஆகும் என சிந்தியுங்கள்.

23. ஜோதிடம் ஒரு கணிதம் என்றால் ஏன் ஜோதிடருக்கு ஜோதிடர் ஏன் மாறுகிறது? 2 ம் 2ம் 4 என்றால் எல்லாரும் ஒன்று தானே சொல்ல வேண்டும்?

ஆம் ஒன்று தான் சொல்ல வேண்டும். சரியாக படித்த ஜோதிடர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள். எங்கள் ஜோதிட பயிற்சியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாகவே பலன் இருக்கும் முரண்படாது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நடக்கும் எங்கள் அறக்கட்டளையின் ஜோதிட ஆய்வு வகுப்புக்கு வாருங்கள் அனைவரும் ஒரே பதிலை அளிப்பதை காணலாம்.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் -ஒரே காலேஜில் படித்த மருத்துவரே வேறு வேறு மாத்திரை கொடுப்பாங்க.. ]

ஜோதிடர் மருத்துவர் போன்றவர் அல்ல. அவர்கள் இரத்த பரிசோதகர்களை போன்ற ப்யோடெக்னாலஜிஸ்ட்கள். ஒவ்வொரு ரத்த பரிசோதனையும் வெவ்வேறு தகவல் தந்தால் ஒத்துக்கொள்வீர்களா? ஒன்றாக படிக்கவில்லை என்றாலும் ரத்த பரிசோதகர்களின் முடிவுகள் முரண்படாது.  மருத்துவர்க்கு தேவையான ஆய்வு தகவல் கொடுப்பது தான் இவர்கள் வேலை மருத்துவம் பார்ப்பது அல்ல..!

நாம் யார் என்ன செய்கிறோம் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.


25. நீங்கள் ஒரிஜினல் மத்தவங்கள் எல்லாம் போலியா?

சரியான சாஸ்திர அறிவு கொண்டவர்கள் ஒரிஜினல் சுயநலத்திற்காக, பணத்திற்காக மற்றும் பிரபலத்திற்காக ஜோதிடம் பயன்படுத்தினால் போலி என கூறலாம்.

26. அடுத்த முதல்வர் யார் என பொட்டுல் அடிச்ச மாதிரி சொல்லனும்? ஒவ்வொருவர் ஒன்னு சொன்னா சரியா வருமா?

சரியாக ஜோதிட அறிவும் கல்வியும் இருந்தால் பொட்டில் மட்டுமல்ல பூவில், கம்மலில், ஜடையில் என அனைத்திலும் அடித்து சொல்லலாம். :)

27. அரைகுறை ஜோதிடர் நாட்டுக்கு கேடு அல்லவா?
அரைகுறை அறிவு ஜோதிடத்தில் மட்டுமல்ல அனைத்திலும் பிரச்சனையே.

28. ஆள் ஆளுக்கு ஒரு பதில் சொன்னா யாரை நம்புவது?
உங்களுக்கு எந்த பலன் சரியாக இருக்கிறதோ / வாழ்க்கையில் நடக்கிறதோ அதை நம்புவது நல்லது.

29. இதுக்கு சக்சஸ் ரேட் இருக்கா?

ஒவ்வொரு ஜோதிடருக்கும் இருக்கிறது. அவர்களில் ஜோதிட அறிவை பொருத்து மாறும். அனுபவத்தை பொறுத்து மாறாது. சிலர் சொல்லுவார்கள் நாம் 30 வருடமாக ஜோதிடம் பார்க்கிறேன். நான் 40 வருடமாக பார்க்கிறேன். அதனால் சக்சஸ் ரேட் அதிகம் என சொல்லுவது சரி அல்ல.

ஐந்து வருடத்தில் ஒரு பசுமாடு பால் கொடுக்க துவங்கிவிடும். 15 வருடம் ஆனாலும் காளை பால் தராது. 15 வருடம் புல் தின்ற அனுபவம் உண்டு என பால் கறக்க முயற்சி செய்ய கூடாது..! பால் தேடி செல்வது பசுவா காளையா என்பதில் முதலில் உங்களுக்கு தெளிவு வேண்டும்.

30. திருக்கணிதம், வாக்கியம் இதில் எது சரி?
வாக்கியம் என்பதும் திருக்கணிதம் என்பதும் வட மொழி பெயர்களே. வாக்கியம் என்பது பொதுவான கணக்கு. திருக்(Drig) - என்பது திசையை குறிப்பிடுவது. திசை சார்ந்து கணிப்பது திருக்கணிதம்.

வான மண்டலத்தில் உள்ள கிரகத்தின்  நிலையை ஒவ்வொரு நாளுக்கும் முன்கூட்டியே கணித்து வைப்பது தான் பஞ்சாங்கம். பூமியின் நிலையில் இருந்து

சந்திரன் எங்கே இருக்கிறது என கணிப்பதாக வைத்துக் கொள்வோம். பூமியின் விட்டத்திற்கும் சந்திரனின் விட்டத்தை கணக்கிட்டால் நீங்கள் வாக்கிய

பஞ்சாங்கம் செய்கிறீகள் என  அர்த்தம். பூமியில் சென்னையை / டெல்லியை மையமாக கொண்டு சந்திரன் எங்கே இருக்கிறது என கணித்தால் அது

திருக்கணிதம். ரேகாம்சம் / அட்சாம்சம் என்பவை திசை சார்ந்தது.

வாக்கியம் பொதுவாக கணிக்கப்பட்டதால் வாக்கிய கிரக மாற்றம் திருக்கணித கிரக மாற்றத்திற்கு சில நாள் வித்தியாசம் வரும். ஆனால் முற்றிலும் முரண்படாது. உதாரணமாக சனி வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் மேஷத்தில் இருக்கிறது என்றால், திருக்கணிதம் தனுசில் இருக்கிறது என சொல்ல மாட்டார்கள். இன்னும் துல்லியமாக மேஷத்தில் எங்கே இருக்கிறது உங்கள் ஊரின் அடிப்படையில் சொல்லுவார்கள்.

பொது நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்கம் பார்க்க வேண்டும். உதாரணமாக கோவில் திருவிழா, ஊரில் பொதுவாக கட்டிடம் கட்ட ஆகியவைகள் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்ய வேண்டும். தனிமனித நிகழ்வுகளுக்கு திருக்கணிதம் படி முடிவு செய்ய வேண்டும். நாம் எந்த ஊரில் வசிக்கிறோமே அதை பொருத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி விழாக்கள் கோவிலில் நடைபெறுவதால் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்வார்கள். ஏன் என்றால் இது அனைவருக்கும் பொழுதுவான நிகழ்வு.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் - திருத்தி அமைக்கபட்ட வாக்கியம் பஞ்சாங்கம் திருக்கணிதம். வாக்கிய பஞ்சாங்கம் என்றும் திருத்தி அமைக்கப்பட்டது இல்லை. ரிஷிகள் காலத்தில் இருந்தே அப்படி தான் இருக்கிறது. இது ஒன்றே போதும் இவரின் ஜோதிட தெளிவை அறிய.]

31. திருத்தப்பட்டது தானே செல்லும்? ஏன் வாக்கியம் இன்னும் நிலுவயில் இருக்கிறது?
திரு. பாண்டேயின் இந்த கேள்வி மிகச்சரியானது. மேலே நான் சொன்ன விளக்கம் பெற்றால், திரு.பாண்டே இந்த கேள்வி கேட்கமாட்டார். என்ன செய்ய, ஜோதிடத்தின் அடிப்படையான பஞ்சாங்கத்திலேயே குழப்பம் என்றால் திரு.பாண்டே என்ன செய்வார்?

31. ஜனவரி 8 முதல் தேர்தல் சூடு பிடிக்கும்? சரியா?

திரு.ஷெல்வி அவர்கள் -ராகு கேது பெயர்ச்சி அதனால் சூடு பிடிக்கும் என்கிறார். ராகு-கேது பெயர்ச்சி புத்தக விற்பனை வேண்டுமானால் சூடுபிடிக்கும்.

மார்ச் முதல் வாரம் சூடு பிடிக்கும் ஜனவரியில் ஒன்றும் பிடிக்காது. ராகு சிம்ம ராசியில் பிரவேசித்தவிடன் சூரியனின் நட்சத்திரத்தை கடக்கும் வரை தேர்தல் விஷயங்கள் நடைபெறாது. சுக்கிரன் நட்சத்திரத்திற்கு சென்றதும் நடைபெறும்.


32. அடுத்த முதல்வர் யார்? அதிமுக, திமுகா, மக்கள் நல கூட்டணி எது வெற்றி பேரும்?

என் குருஜி ஸ்வாமி ஓம்கார் 2015 அர்ஜண்டினா அதிபர் தேர்தல் பற்றி எழுதி இருந்தார். ஜோதிடத்தில் சொல்வது எளிது.வேறு ஊராக இருந்தால் ஜோதிடத்தில் தெரிந்து கொள்ள தலையை உடைத்துக்கொள்ளலாம். கடந்த 20 வருடங்கள் யார் ஆட்சி செய்கிறார்கள் என பாருங்கள். அடுத்த முதல்வர் யார் என கணித்து தெரிய வேண்டியது இல்லை.

33. எனது கேள்வி தனி நபர் பற்றி இல்லை. கட்சி யார் என கேட்கிறேன்.

கூட்டணியுடன் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அதாவது தி.மு.க. என்கிற கட்சி. முதல்வர் யார் என நீங்கள் கேட்காததால் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

35. பேரிடர் தவிர்க்கனும்னா ப்ரார்த்தனை செய்யனும் சரியா?

ப்ரார்த்தனை எப்பொழுதும் செய்ய வேண்டும். பேரிடர் வந்தாலும் சரி பேரானந்தம் வந்தாலும் இறைவனை வணங்க வேண்டும். அதைத்தான் நம் சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

-----------------------------------------------------------

இச்சமயத்தில் திரு. ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் ஜோதிடத்தை ஒரு பொருட்டாக எடுத்து அதை தொலைகாட்சி விவாதமாக்குவதை வரவேற்கிறேன். அதே சமயம் திரு.யதார்த்த ஜோதிடர் போன்ற ஜோதிடர்கள் பிரபலமடைவதற்கு மட்டும் இல்லாமல் பிறருக்கு சரியாக வழிகாட்டவும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.  

Wednesday, November 25, 2015

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லலாமா?

வெகு காலமாக பேசாமல் தவிர்த்து வந்த கருத்து. இரண்டு நாட்களாக ஃபேஸ்புக்கில் என் கருத்தை பிறர் கருத்தாக போட்டு விளம்பரம் தேடுவதை பார்த்தேன். அதனால் இங்கேயும் கருத்துரை இடுகிறேன்.

http://www.vikatan.com/news/article.php?aid=55482

முதல் வரி முதல் இந்த கட்டுரை அபத்தத்தையே பேசுகிறது..

உதாரணமாக

//இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது//

இந்திய கோவில்களில் இல்லை. தென் இந்தியாவில் அதுவும் தமிழக, கேரள கோவில்களில் மட்டுமே இந்த நிலை. வட இந்தியாவில் பெண்கள் இத்தகைய காலத்தில் கோவிலுக்குள் சென்று தங்கள் கைகளால் அபிஷேகமே செய்யலாம். இச்செய்தி எத்தனை போராளிகளுக்கு தெரியும்? இந்து மதம் தடை செய்கிறது புலம்பும் மதவாதிகள் திருப்பதியை தாண்டியதில்லை என புரிகிறது...!

தமிழகத்தில் இருக்கும் ஒரு அமைப்பு 80களில் பெண்களை அவர்களின் வழிபாட்டு தளத்தில் அனுமதிக்க ஆரம்பித்த பொழுது பெரிய புரட்சியாக பார்த்தார்கள். உண்மையில் நம் மரபில் இது எங்கும் தவிர்க்கவோ தடைசெய்யவோ சொல்லவில்லை..

சுகாதாரம் என்ற கருத்தாக்கத்தில் விலகி இருக்க சொன்னார்கள். நம் தென் இந்தியாவில் கோவில்கள் (ஷேத்திரம்) விசேடமானவை, வட இந்தியாவில் தீர்த்தம் ( நீர் தன்மைகள்) விஷேடமானது. தென்னக புகழ் பெற்ற கோவில்களில் கட்டமைப்பு சராசரியாக 2 சதுர கீமி இருக்கும். அதனுள் கழிப்பறை இருக்காது. அதனால் பெண்கள் ஆலயத்தில் நுழைந்து, தரிசன வரிசையில் காத்திருத்தல் என்பது அவர்களுக்கும் பிறருக்கும் சுகாதார பிரச்சனையை உண்டு செய்யும் என்பது உணர வேண்டும்.
இதே வட நாட்டில் தீர்த்தகட்டம் அருகே இருப்பதால் உடனடியாக சுத்தம் செய்ய முடியும்.

ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான கழிப்பறையை எதிர்பார்ப்பது அவசியம்.  இப்படி கட்டிட கலையின் உச்சத்தில் இருக்கும் கோவிலுக்கே கழிப்பறை சாத்தியமில்லை என்றால் ஒரு காலத்தில் வனமாக இருந்த  சபரிமலை பற்றி யோசிக்க வேண்டும்.

பழைய மரபை கண்மூடித்தனமாக பின்பற்றும் தற்கால தந்திரிகளை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இப்படியே போனால் சபரிமலைக்கு வரும் சாமிகள் வேன் மற்றும் பேருந்தை தவிர்த்து ஐயப்ப சாமி போல புலி மேல் வர சொன்னாலும் சொல்லுவார்கள்...!

கேரளாவில் மன்னார்சாலை என்ற நாக கோவில் உண்டு. இங்கே இளம் பெண்கள் தான் பூசாரிகள். ஆலயத்தின் ஒரு பகுதிக்கு மேல் ஆண்கள் அனுமதி இல்லை. காரணம் பூசாரிகள் உடை அணிவது இல்லை. இந்த கோவிலுக்குள் ஆண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என யாரும் போராடுவதில்லை.. அது போல கோவிலின் மரபு அதன் தன்மையை மதிக்கும் பொறுப்பு நமக்கு அவசியம். எந்த மரபும் ஒன்று போல இருப்பதில்லை. காலத்தால் அனைத்தும் மாறும்.

ஃபேஸ் புக்கில் Happytobleed என்ற தலைப்பில் சபரிமலைக்கு எதிராக பேசுவது வட நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு துளி கூட புரிய போவது இல்லை. மேலும் இது மதம் சார்ந்த ஒரு விஷயம். மதம் கடந்து வர நாம் தயாராக வேண்டுமே தவிர மதத்தை நாம் ஏன் தயார் செய்ய வேண்டும்?

என்னிடம் ஆன்மீக பயிற்சி செய்ய வருபவர்களிடம் மாதவிடாய் தவிர்க்க சொல்லுவது இல்லை. ருத்ராக்‌ஷம் அணிந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அதனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அணியக்கூடாது என்றும் புனிதம் என்றும் கூறுவதை தவிர்த்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எல்லா காலத்திலும் அணியலாம் என கூறுகிறேன். இதற்கு முதலில் தடையாக இருப்பது பெண்கள் தான் , நான் கூறினாலும் இந்த விஷயத்தை செய்ய முன்வருவதில்லை என்பதே நிதர்சனம்..!

இந்த பிரச்சனையில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் ஊடக அறம், இணைய  போராளிகளின் அறிவு தரம், தம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாத மேல் நாட்டு மோகம். வேறு ஒன்றும் ஆரோக்கியமான விஷயம் நடந்துவிடவில்லை...!

தற்கால இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்தாமல் கலாச்சாரத்திற்கு எதிராக தூண்டிவிடுவது வெட்கக்கேடானது.

Thursday, September 24, 2015

முரண்பட்ட குரு

காலையில் பகவத் கீதை வகுப்பு முடிந்ததும் ரிலாக்ஸாக இருந்த குருவிடம் வந்தான் சுப்பாண்டி.

குருஜி ஒரு சந்தேகம் என்றான்...

சொல்லுப்பா என்பது போல பார்த்தார் குருஜி.

“....சில தினத்திற்கு முன் பகவத் கீதை வகுப்பில் அவர் அவர் நிலைப்பாட்டுக்கு ஏற்ப ஒரு பிறப்பிலே பல பிறப்பிலோ இறைவனை அடைகிறார்கள், உதாரணமாக ஒரு ஊரை அடைய சிலர் நடந்து செல்லுகிறார்கள் சிலர் வாகனத்திற் செல்லுகிறார்கள் என சொன்னீர்கள். ஆனால் இன்று பதினாறாம் அத்தியாயத்தில் இதே பிறப்பில் இறைவனை அடைய முடியும் என சொல்லுகிறீர்களே ஏன் இந்த முரண்பாடு? நீங்கள் தான் சில நேரம் முரண்பாட்டுடன் பேசுவீர்கள் என நினைத்தேன். பகவான் கிருஷ்ணரும் இப்படி முரண்படுகிறாரே?” என கேட்டான் சுப்பாண்டி.



சுப்பு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு வழிப்போக்கர் தெருவில் இருப்பவரிடம் கேட்டார், ஐயா இந்த பக்கத்து ஊருக்கு செல்ல எத்தனை நேரம் ஆகும்? தெருவாசி ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தார். மீண்டும் எத்தனை நேரம் ஆகும்? என கேட்டார். தெருவாசி ஒன்னும் சொல்லவில்லை. வெறுப்படைந்த வழிப்போக்கர் நடக்க துவங்கினார். உடனே அவரை துரத்திக்கொண்டு வந்த தெருவாசி..இன்னும் 30 நிமிடத்தில் சென்று விடலாம் என சொன்னார். வழிப்போக்கர் அதை அங்கேயே சொல்லி இருக்கலாமே என கேட்க, தெருவாசியோ நீங்கள் எத்தனை வேகமாக நடப்பீர்கள் என எனக்கு தெரியாது. நீங்கள் நடந்து சென்ற வேகத்தை வைத்து சொன்னேன் என்றார்.

மெல்லிய புன்னகையுடன் குருஜி விளக்க துவங்கினார், “சுப்பு,  ஒருவர் தெருவில் காருடன் நிற்கிறார். அவரிடம் ஐயா இந்த ஊருக்கு செல்லும் வழி சொல்லுங்கள் என கேட்டு அதன் படி உனது வாகனத்திலோ அல்லது நடந்தோ செல்லுகிறாய் என்றால் அது உன் பொறுப்பு.

இதே ஐயா என்னை உங்கள் காரில் கொண்டு சென்று விடுங்கள் என கேட்டால் அது உன் பொறுப்பல்ல கார் வைத்திருப்பவர் பொறுப்பு. அது போல இறைவனை அடைய நானே முயற்சிக்கிறேன் என்றால் ஒரு பிறப்போ பல பிறப்போ ஆகும். அது உன் முயற்சியும் அதனால் ஏற்படும் அனுபவத்தை பொருத்தது. இதுவே இறைவா நான் உன்னை சரணடைகிறேன் என்னை முக்தி அடைய வை என கேட்டால் அது இறைவன் பொறுப்பு உடனே அவர் இப்பிறவியிலேயே அதை செய்துவிடுவார்..! ”

 குருவும் இறைவனும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள். அதை அவர்கள் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா இல்லை உன் கண்ணோட்டத்தில் சொல்லுகிறார்களா என நீ பார்க்காத வரை குரு முரண்பாடாக பேசுவதை போலவே இருக்கும்.

சுப்பாண்டிக்கு புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது...

Wednesday, August 19, 2015

வாஸ்து கோளாறு - 3

முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று உண்டு. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ஒரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.

துண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

அந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் - என எழுதி இருந்தது..!

உடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது?

வீடு என்பது நம் உடலின் மேல் அணியும் ஆடை போல பெரிய உடை என தெரிந்துகொள்ளுங்கள். உடையின் உள்ளே வசிக்கும் மனிதன் ஆற்றல் பெற்றவனாக இருந்தால் என்ன உடை அணிந்தாலும் அவனுக்கு ஆற்றல் செயல்படும். அதை விடுத்து ஒரு மனிதன் ஆற்றல் இழந்து இருக்க வீடு தான் ஆற்றலை கொடுக்கிறது என்றால் அவன் அத்தகைய ஆற்றலை எப்பொழுது வேண்டுமானாலும் இழப்பான்.

உங்கள் உடை செளகரியமாகவும், தேவையான வசதிகள் உடையதாகவும், நவநாகரீகமாகவும் இருந்தால் அது சரியான உடை என அணிந்து கொள்கிறோம்.

அதுபோல உங்கள் வீடும் செளகரியாமான, வசதி உள்ள மற்றும் நாகரீகமான நிலையில் இருந்தால் நல்லது. வாஸ்து அடிப்படையில் வீடு கட்டும் பொழுது  அமைத்துக் கொள்ளுங்கள், பிறகு வாழ்க்கை முழுவதும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. துன்பம் வரும் பொழுதெல்லாம் வாஸ்து பார்க்கும் நிலையில் மக்கள் தற்சமயம் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நிலை.


வாஸ்து என்பது உபசாஸ்திரம். பிற சாஸ்திர ஆன்மீக விஷயத்துடன் வாஸ்து இணைந்து செயல்படும். வாஸ்துவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. யாக சாலை எப்படி அமையவேண்டும், எங்கே யாக குண்டம் இருக்க வேண்டும் என்பது வாஸ்து குறிப்பில் உண்டு.

அப்படி யாகசாலையை வாஸ்து அடிப்படையில் கட்டிவிட்டு சும்மா இருந்தால் போதுமா? அங்கே யாகங்கள் நடந்தால் தானே பலன் உண்டு?

வீடு கட்டும் பொழுதும், வீட்டு கட்ட துவங்க பூமி பூஜை செய்யும் பொழுதும் வாஸ்து புருஷன் என்ற நிலையில் பஞ்சாங்க கணித தன்மை செய்கிறார்கள்.

அதன்படி வருடம் சில நாட்கள் வாஸ்து புருஷன் விழிப்பான், குளிப்பான், உணவு உண்பான் மற்றும் தாம்பூலம் தரிப்பான் என சொல்லுவதுண்டு. வாஸ்து காலத்தில் சரியான நேரத்தில் பூமிபூஜை செய்து வாஸ்து பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் என்பது பஞ்ச பூதத்தின் சலனத்தின் அடிப்படையில் ஏற்படும் விளைவை ஒரு மனிதனாக உருவகப்படுத்துவது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பிறகு கிரகபிரவேசம் நடக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்பு வாஸ்து சாந்தி என ஒரு பூஜை செய்வார்கள். வாஸ்து புருஷனை தவறாக துன்புறுத்தி இருந்தாலோ, வாஸ்து பிரச்சனை கொண்ட வீடாக இருந்தாலோ அதனால் ஏற்படும் விளைவுகளை தீர்க்க செய்வதே இந்த வாஸ்து சாந்தியாகும்.

வாஸ்து சாந்தி ஹோமங்கள் செய்த பின்பு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்றவைகள் செய்த பின்பே கிரஹபிரவேசம் செய்வோம். அதனால் இத்தனை ப்ரார்த்தனைகளுக்கு பிறகும் வாஸ்து பிரச்சனை வர வாய்ப்பு இல்லை..!

தற்சமயம் சுலநலக்காரர்களால் வாஸ்து புருஷன் - வாஸ்து பகவானாக மாறிவிட்டார். விரைவில் அவருக்கு கோவில் கட்டி அங்கே சென்று வழிபட்டால் வாஸ்து பிரச்சனை நீங்கும் என கிளப்பிவிடுவார்கள். இப்படிதான் நம் சாஸ்திரங்கள் கொச்சைப்படுத்தப்படுகிறது. நம் கலாச்சார வாஸ்து கோளாரு பத்தாது என சீன வாஸ்து , எகிப்து வாஸ்து என தனியாக குழப்பங்கள் உண்டு.இறந்த உடல் மூவாயிரம் வருடமாக காக்கப்படும் பிரமீடு வைத்து உள்ள கட்டிடம் வாஸ்துவை முடிவு செய்யும் என தான் உயிரோடு வசிக்கும் வீட்டில் பிரமீடு வைக்கிறார்கள். இதற்கு தான் நடைபிணமாக வாழ்வது என சொல்லுவார்களோ?

இவைகளை பற்றி நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை. நம் கலாச்சார வாஸ்துவே கேவலமாக பயன்படுத்தும் இக்காலத்தில் அடுத்த கலாச்சாரம் பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி நமக்கு உண்டு?

வாஸ்து சரியில்லை என்றால் வீட்டை மாற்றாதீர்கள். வாஸ்து சரி யில்லை என்றால் உங்கள் வீட்டின் பகுதியை இடித்துக்கட்டாதீர்கள். வாஸ்து சரி இல்லை என்றால் காற்றில் அசையும் மணியோ மூங்கில் நாற்றோ ,பிரமீடோ உதவாது. வேறு என்ன தான் செய்வது?

ஒரு பயில்வான் உங்களிடம் வம்பு செய்கிறான் என வைத்துக்கொண்டால் அவனை எதிர்க்க நீங்கள் உங்களின் உடையை மாற்றிக்கொண்டு போனால் போதுமா? இல்லை உங்கள் உடல் பலத்தை அதிகரித்துக் கொண்டு செல்ல வேண்டுமா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

கீழ்கண்ட ஏதாவது ஒரு விஷயத்தையோ பல விஷயத்தையோ நீங்கள் பின்பற்றினால் வாஸ்து பற்றி கவலைபட வேண்டாம்..!

மந்திர ஜபம் : தினமும் குரு உபதேசித்த மந்திரத்தை ஜபம் செய்பவராக இருக்க வேண்டும். அல்லது பாராயண மந்திரம் என சொல்லப்படும் மந்திரம் சொல்பவராக இருத்தல் வேண்டும்

தியானம் : தினமும் இறைவனின் மேல் தியானம் செய்பவராக இருத்தல் வேண்டும்.

தான தர்மம் : வருடம் ஒரு முறையாவது தானம் செய்பவராக இருத்தல் வேண்டும்

யாகம் : வருடம் ஒரு முறை வீட்டில் வேள்வி நடத்த வேண்டும்.

குரு அம்சம் : குருவின் ஆசி பெற்ற அவரின் உடை, ஜபமாலை, பாதுகை, குடை , பிரசாதம் ஏதேனும் ஒன்று பூஜையில் இருத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஆற்றலை மேம்படுத்தும் கருவிகள். இவைகள் இருந்தால் வாஸ்து கோளாரு என்ன எந்த கோளாரும் ஒன்றும் செய்யாது.

இதற்கு மேலும் இவையெல்லாம் எனக்கு தெரியாது, ஆற்றல் மேம்படுத்த முயற்சிக்கவும் மாட்டேன் என நீங்கள் சொன்னால் வாஸ்து சாஸ்திர நிபுணரை அழைத்து உங்கள் வீட்டின் மூலையையும் என்னிடம் வந்து உங்கள் மூளையையும் சரிசெய்து கொள்ளுங்கள்.


(வாஸ்தவமானது)

ஓம் தத் சத்

Tuesday, August 11, 2015

வாஸ்து கோளாறு - பகுதி 2

வாஸ்துவுக்கு நீங்கள் தோஸ்து இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. வாஸ்து என்ற கட்டிடக்கலை மேல் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அதை வைத்து எதிர்கால பலன் கூறி இதில் வாழ்பவன் இப்படி இருப்பான் என சொல்லுவது முட்டாள் தனம் என்பதே என் கருத்து. காரணம் வாஸ்து விதிகள் ஆட்களுக்கு ஏற்ப மாறுவதில்லை. வீட்டின் தன்மை வாஸ்து அடிப்படையில் இருந்தால் அதில் வாழ்பவன் யாராக இருந்தாலும் பலன் இருக்கும் என கருத்து நிலவுகிறது. இந்த பொது தன்மை தான் வாஸ்து விதிகளுக்கு முரணாக இருக்கிறது.


முக்கியமாக வாஸ்து பார்ப்பதே பணம் சேர்க்கத்தான் என்பதை போல பெரும்பான்மையான வாஸ்துகாரர்களில் வழிகாட்டுதலும் இருக்கிறது. 2010ஆம் வருடம் வரை தென்னகத்தில் ஆந்திராவில் இருந்து வாஸ்து நிபுணர்களின் படை மேலோங்கி இருந்ததும், திருப்பதி வாஸ்து அடிப்படையான கோவில் அதனால் தான் அங்கே பணம் கொட்டுகிறது என்ற புரளியும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

திருமணம் தடை உள்ள வாஸ்து அமைப்பு, குழந்தை பாக்கியம் பெற வாஸ்து அமைப்பு, நோய் இல்லாமல் வாழ வாஸ்து அமைப்பு என சொன்னாலும் அடிப்படையில் செல்வம் சேரும் வாஸ்து அமைப்பு என வாஸ்து பார்ப்பதன் நோக்கம் முற்றிலும் பணம் சேர்க்கும் சுய நலம் தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த சுயநல தன்மையை வாஸ்து நிபுணர்கள் ஊதி பெரிதாக்கி நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

குரு கிடைக்க வாஸ்து அமைப்பு, ஆன்மீக முன்னேற்றம் செய்ய வாஸ்து அமைப்பு, தினம் தினம் ஆன்மீக பயிற்சி தடையில்லாமல் செய்ய வாஸ்து அமைப்பு, முக்தி அடைய வாஸ்து அமைப்பு உண்டா என உங்கள் வாஸ்து நிபுணரிடம் கேட்டு சொல்லுங்கள்...!


வாஸ்துவால் எனக்கு பொருள் வேண்டாம் ஐயா... வாஸ்துவால் இறைவனின் அருள் பெற செய்யுங்கள் அவரிடம் பொருள் கேட்டு கொள்கிறேன் என சொல்லிப் பாருங்கள். வாஸ்து நிபுணர் உண்மையாக மாயனை பின் பற்றுவார்..மாயமாகிவிடுவார்.

வாஸ்து கட்டமைப்புகள் கோவில்களுக்கும் உண்டு. ஸ்தபதிகள் வாஸ்துவை பின்பற்றுவதும் அதன் குறிப்புகள் தமிழ் ஆகம விதிகளிலும் இருப்பதை காணலாம். தற்காலத்தில் வாஸ்து நிபுணர்கள் மனையின் மையத்தில் கட்டிடம் கட்ட கூடாது, அது பிரம்ம ஸ்தானம் இறைவனுக்கான இடம் என்கிறார்கள். ஆனால் கோவில்களின் நில அமைப்பின் மையத்தில் கூட கட்டிடம் கட்டப்படுவதில்லை. இறைவனின் சன்னிதானத்தை கோவிலின் மையத்தில் நாம் வைப்பதில்லை. பணம் கொட்டும் திருப்பதி கோவில் கூட அப்படி அமையவில்லை என்பது தான் உண்மை..! (பார்க்க படங்கள்.)

திருப்பதி - ஆந்திர பிரதேசம்

மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் - திருவண்ணாமலை

ஆனால் பிற மதக்கோவில்கள் பிரம்ம ஸ்தானத்தில் கட்டபட்டுள்ளன. சீக்கியர்களின் தங்கக்கோவில், கம்போடியாவின் அங்கோர்வார்ட் கோவில் ஆகியவை இதற்கு உதாரணம்.

 அங்கோர்வார்ட் - கம்போடியா
 குருத்வாரா - பஞ்சாப்

தமிழ் கலாச்சாரத்தில் மனையடி சாஸ்திரம் என்ற வழக்கம் இருந்தது. இன்று கூட காலண்டரின் பின்பக்கம் 12க்கு 16 அடி என சொல்லி அதற்கு பலன் எழுதி இருப்பதை பார்க்கலாம்.

மனையடி சாஸ்திரம் அந்த காலத்தில் குழி என்ற கணக்கில் பயன்படுத்தப்பட்டது. எந்த குடும்பத்திற்கு வீடு கட்டுகிறோமோ அந்த வீட்டு தலைவனின் கால் அடியை (குழி கணக்கை) எடுத்து அளவுகோலாக கொண்டு கட்டிடம் கட்டினார்கள். இதனால் பாரம்பரிய வீடுகள் நிலைத்து அடுத்த தலைமுறைக்கு சென்றது. மேலும் வேறு குடும்பங்கள் அதில் வசிக்கும் பொழுது அளவீடுகள் மாறுவதால் அவர்களுக்கு ஒத்துவராது. தற்காலத்தில் கட்டிடகலை வல்லுனர்கள் மனையடி சாஸ்திரத்தை பின்பற்றினாலும் பொதுவான அளவையே வைக்கிறார்கள். அதனால் மனையடி வேலை செய்யுமா என ஆய்வு செய்ய வேண்டும்.

எளிமையாக சொன்னால் தையல்காரரிடம் நம் அளவுக்கு தைத்த ஆடை பிறருக்கு பொருத்தமாக இருக்காது அல்லவா அது போல மனையடி சாஸ்திரம் என்பதும் அப்படிப்பட்டதே ஆகும்.

வாஸ்து என்பது பழங்காலத்தில் இருந்து இருக்கிறது அதனால் பின்பற்ற வேண்டும் என கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. என் முப்பாட்டன் கிணற்றில் நீர் இறைத்து குளித்தார் என்பதால் நானும் கிணறு வெட்டி அதில் குளிக்க வேண்டுமா? ஆழ்துளை நீர் எடுத்து மோட்டார் மூலம் குளிக்கலாமா என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

16 நிலை கோபுரம், 11 நிலை கோபுரம் என கட்டிடம் கட்டிய கலை கொண்டவர்கள் தமிழ் மன்னர்கள். ஆனால் அவர்களின் அரண்மனையை பல்வேறு நிலை கோபுரம் போல கட்டிக்கொள்ளவில்லை. இது ஏன்? மனித உடல் பூமியின் இயக்கத்துடன் ஒட்டி இருக்க வேண்டும் என்பதே இதன் காரணமாகும். பலமாடி கட்டிடம் கட்டி அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் வாஸ்து பார்க்கலாமா என யோசிக்க வேண்டும்.
மேலும் கிழக்கு சென்று வடக்கு திரும்பும் படிக்கட்டு நல்லதா வடக்கு சென்று மேற்கு திரும்பும் படிக்கட்டு நல்லதா என பல மாடி கட்டிடம் கட்டுபவர்கள் வாஸ்து பார்க்கிறார்கள்.

வீட்டின் மேல்மாடி கட்டினாலும் அந்த இடம் பரண் என பொருட்கள் சேமித்துவைக்கும் இடமே தவிர வாழும் இடமாக பயன்படுத்தவில்லை. அதற்கு படிகட்டும் ஒரே நேர்கோடாக இருக்கும். தற்கால அப்பார்ட்மெண்ட் விளம்பரத்தில் கூட வாஸ்து சாஸ்திரம் அடிப்படையில் என விளம்பரம் செய்கிறார்கள். இக்கருத்து எல்லாம் பாரம்பரிய வாஸ்துவில் சேர்க்க முடியுமா?

50 ஆண்டுகளுக்கு முன்புவரை கழிவறை என்ற அமைப்பு இல்லை. சுகாதாரத்தின் காரணமாக நம் முன்னோர்கள் கழிவறையை வீட்டின் உள்ளே அமைத்ததில்லை. வாஸ்து நிபுணர்களோ மாயன் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்டபடி கழிவறையும் செப்டிக் டாங்கும் வீட்டில் எங்கே அமைய வேண்டும் என விளக்குகிறார்கள். மாயன் குறிப்பில் உங்கள் வெஸ்டன் டாய்லட் எந்த திசை பார்த்து இருக்கும் என எழுதப்பட்டிருக்கிறதா? அவர் அட்டாச்டு பாத்ரூம் எந்த மூலையில் அமைய வேண்டும் என்பதை எந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்? சுட்டிக்காட்டினால் நான் உங்களுக்கு கடமைப்பட்டவனாவேன்.

வாஸ்து நிபுணர்களிடம் நான் கேட்க விரும்புவது இது தான்.

1) நம் முன்னோர்கள் வசித்த வீட்டின் அமைப்பு பெரும்பாலும் தனி வீடு. பிற வீட்டின் சுவற்றுடன் இணைந்திருக்காது. தற்காலத்தில் நெருங்கிய அமைப்பில் வீடும், அப்பார்ட்மெண்டும் உள்ளது. அப்படியானால் அடுக்குமாடி வாஸ்து என்பது பாரம்பரியமாக உண்டா? ஆம் எனில் வாஸ்து சாஸ்திர நூலை சுட்டிக்காட்டுக. இல்லை எங்கள் அனுபவத்தில் ஆய்வு செய்தோம் என்றால் அந்த ஆய்வை வெளியிடுக.

2) கழிவறை வாஸ்து சாஸ்திரம் உண்டா? கழிவறையில் எந்த திசை பார்த்து மலம் கழிக்க வேண்டும் என சொல்லுவதும் வாஸ்து அடிப்படையிலா?

3) முற்றிலும் 100% வாஸ்து கொண்ட வீடு என ஒன்றை காட்ட முடியுமா?

4) அக்னி மூலையில் குறை உள்ள ஒரு வீட்டில் ஒருவர் குடி இருக்கிறார். அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவர் காலி செய்த பின் மற்றொருவர் குடிவந்தால் அவருக்கும் அதே பாதிப்பு வருமா? எளிமையாக கேட்பதானால் வாஸ்து குறைபாடு ஒரு வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு இருப்பது போலவே அனைவருக்கும் இருக்குமா? அல்லது ஆளுக்கு ஆள் மாறுபடுமா?

5) ஊட்டி,கொடைக்கானல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கும் இதே வாஸ்து விதிகள் தானா? மாயன் குறிப்பில் இதன் அடிப்படை ஏதேனும் உண்டா?

இச்சமயம் கேள்வி இவ்வளவு தான். வாஸ்து நிபுணர்கள் பதில் அளிக்கலாம். அல்லது நீங்கள் அவர்களிடம் கேட்டு கூறலாம்.

மேற்கண்ட கருத்தை எல்லாம் படித்து நான் வாஸ்து விரோதி என முடிவுகட்டிவிடாதீர்கள். வாஸ்து பயன்படுத்தலாமா? வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வசித்தால் என்ன செய்ய வேண்டும் என பல தகவல்களை விளக்குகிறேன்.

(வாஸ்து வளரும்)

Friday, August 7, 2015

வாஸ்து கோளாறு...!


சில வருடங்களாக பேச வேண்டும் என நினைத்த தலைப்பு வாஸ்து. இது சாஸ்திரம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.


பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கூறப்பட்ட விஷயம் வாஸ்து, இது தேவலோகத்தின் சாஸ்திர விற்பன்னர் மாயன் வடிவமைத்தது என சொல்லப்படுகிறது.

ஸ்லோக வடிவில் இன்றும் மாயனின் வரிகள் வாஸ்துவை பற்றி இருக்கிறது என்பது உண்மை. ஆனால் இன்று மாயனின் வாஸ்து முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

வாஸ்துவை பற்றி தெரிந்துகொள்ளும் முன் சாஸ்திரம் என்றால் என்ன என தெரிந்து கொள்ளுவோம். சாஸ்திரம் என்பது தற்காலத்தில் தொழில் நுட்பம் என அழைப்படுகிறது. ஒரு விஞ்ஞான விஷயம் முழுமையான மெய்யுணர்வுடன் முடிவு நிலையை அடைந்தால் அது தொழில் நுட்பம் என அழைக்கலாம்.

சாஸ்திரம் என்பது இடம், மொழி, இனம் மற்றும் காலம் இவை கொண்டு மாறாமல் ஒன்று போல இருந்தால் அது (தொழில் நுட்பம்) சாஸ்திரம் என கூற வேண்டும். உதாரணமாக கணிதம் என்பது சாஸ்திரம், அதன்படி இரண்டை இரண்டால் பெருக்க நான்கு என விடைவரும் அல்லவா? எந்த நாட்டில் உள்ளவர்களும், எந்த சூழலிலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், என்ன மதமாக இருந்தாலும் இந்த விடை வரும். அப்படி இல்லாமல் என் ஜாதிக்காரன் கணிதம் செய்தால் தன் வரும் என சொன்னால் அது சாஸ்திரம் ஆகாது...!


மேலும் உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகம் மற்றும் பன்னிரு ராசியை வைத்து சொல்லும் விதிகள் உலகின் அனைத்து மனிதனுக்கும் பொதுவானது, மாறாது..! யோக சாஸ்திரமும் அப்படித்தான் அதனால் தான் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படியானால் வாஸ்து என்ற ஒரு விஷயம் தற்சமயம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கிறதா? அனைத்து நாட்டினரும், இன மொழி வேறுபாடு இன்றி பயன்படுத்த முடியுமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்...!

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என மாயனின் குறிப்பில் உள்ள விஷயம் கட்டட கலை தத்துவம் வடமொழியில் இருக்கும் சுவடி என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பஞ்ச பூதங்கள் மற்றும் அஷ்ட திக் பாலகர்கள் ( எட்டுதிசை காக்கும் தேவர்கள் ) இவர்களின் சக்தியை சம நிலைப்படுத்தும் முறையில் அமைந்த கட்டட கலை தத்துவம் வாஸ்து என மாயன் வரையறை செய்தார்.

ஒரு திறந்த வெளியில் பஞ்ச பூதங்கள் பிரச்சனைகள் இல்லாமல் இயங்கியது. ஒரு சுவர் அந்த இடத்தில் எழும்பினால் அங்கே இத்தனை நாள் சுழன்ற காற்று தடைபடுகிறது, மண் பாரம் சுமக்கிறது, வெளி (ஆகாயம்) நிரப்பப்படுகிறது. பஞ்சபூதத்தின் இயல்பு மாற்றப்பட்டு  சமநிலை தவறுகிறது. பஞ்சபூதத்தின் சமநிலை தவறாமல் எட்டு திசைகளுடனும் இணைந்து செயல்பட சில அடிப்படை விதிகளால் உருவாக்கப்பட்ட விஷயமே வாஸ்து.

வீடு எப்படி கட்டி எழுப்புவது, கொட்டகைகள், யாக சாலைகள், கோசாலைகள் எப்படி அமைப்பது என்பதை மாயன் வாஸ்து கூறுகிறது.

ஆனால் தற்சமயம் வாஸ்து எப்படி பயன்படுத்துகிறார்கள்? உங்கள் தொழில் சரி இல்லையா? குபேர மூலை உயர்வாக இல்லை- உயரமாக கட்டுங்கள்.. உடலில் நோயா வாயு மூலை சரி இல்லை அதை திறந்து வையுங்கள் என மனித வாழ்வுக்கும் வீட்டின் அமைப்புக்கு மூடிச்சு போடுவது சரியான முறையாக இருக்குமா என யோசிக்க வேண்டும்.

ஒரு மனிதன் பலவருடங்களாக வாழ்ந்து வரும் வீடு. அவருக்கு சென்ற வருடம் முதல் சில துன்பகரமான சம்பவம் நடக்கிறது. என் பிரச்சனைக்கு என்ன காரணம் என்ன என கேட்டால் உங்களின் ஜல மூலையில் சமையல் அறை இருக்கிறது அதை சரி செய்யுங்கள் என கூறும் வாஸ்து நிபுணர்கள் பெருகிவிட்டார்கள்.

இத்தனை வருடம் அங்கே தானே இருந்தார் அப்பொழுது இந்த ஜல மூலை ஏன் ஒன்றும் செய்யவில்லை என கேட்டால் அதுக்கு பதில் இருப்பதில்லை. பிரச்சனை உள்ளவர் எதை தின்றால் பித்தம் தெளியும் என இருப்பதால் இவையெல்லாம் யோசிக்காமல் வீட்டின் ஜல மூலையை இடித்து கட்ட துவங்கி இருப்பார்...!

சுப்பாண்டியின் உறவினர்கள் அவனுக்கு விலை உயர்ந்த பட்டு  துணியை பரிசாக அளித்தார்கள். அந்த துணியில் சட்டை தைக்க ஒரு தையல் கடையை அனுகினான். அங்கே இருந்த பையன் அப்பொழுது தான் தையல் பழகி வந்தான். சுப்பாண்டியின் முகத்தை பார்த்தவுடன் இவர் துணியில் சட்டை தைத்து பழகலாம் என முடிவு செய்தான். பையனிடம் துணியை கொடுத்து தனக்கு வேண்டிய டிசைனையும் சொல்லிவிட்டு வந்தான் சுப்பாண்டி.

சில நாட்கள் கழித்து சென்று சட்டையை வாங்கி போட்டு பார்த்தான் . சட்டை அஷ்ட கோணலாக தைக்கப்பட்டிருந்தது. பையன் நன்றாக தையல் பழகி இருந்தான். ஒரு தோள்பட்டை மேலும் மற்றது கீழுமாகவும், ஒரு கை மார்புக்கு அருகிலும் மற்றது முதுகுபுறத்திலும் இருந்தது. கழுத்துபட்டை பறவை இறக்கை போல மேலே எழும்பி இருந்தது. சிரமப்பட்டு போட்டுக்கொண்டு சுப்பாண்டி தையல்கடை பையனை பார்த்து இது ஏன் இப்படி இருக்கு என கேட்டான்..!

பையன் தான் தவறாக தைத்ததை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. சுப்பாண்டியிடம் எல்லாம் சரியாக இருக்கிறது இது நவீன டிசைன், உங்களுக்குத்தான் ஸ்டைலாக நிற்க தெரியவில்லை என சொல்லி தோள்பட்டையை இப்படி இறக்கி, கைகளை முன்புறமாக வளைத்து வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாக இருக்கும் என சொல்லி காசுவாங்கி கொண்டு அனுப்பி வைத்தான்.

இடுப்பை ஒருபுறம் வளைத்து, கைகளை முன்புறம் நீட்டி, தோள்பட்டையை சரித்து சுப்பாண்டி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் வந்த ஒருவர், “சார் ஒரு நிமிஷம் நில்லுங்க, இந்த சட்டை எங்க தைச்சீங்க?” என கேட்டார். சுப்பாண்டிக்கு நிலைகொள்ளவில்லை...! பூரிப்புடன், ” ஏன் சார் கேக்கறீங்க சட்டை அம்சமா இருக்கா? “ என கேட்டான். வந்தவர் “அது இல்லைசார் உங்களை மாதிரி மாற்று திறனாளிக்கே இத்தனை அம்சமா தைச்சிருக்கானே, எனக்கேல்லாம் இன்னும் சூப்பரா தைப்பான்னு தான் கேட்டேன்...!” என்றார் அவர்.

இப்படித்தான் நம் நிலமையும் இருக்கிறது. வாஸ்து பார்ப்பவர்கள் மாற்றி கட்டிய வீட்டில் செளவுகரியம் இல்லாமல் சுப்பாண்டி வளைந்து போட்டு கொண்டு நடந்த சட்டையை போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்படியானால் வாஸ்து பார்க்கலாமா கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது...

காளை மாட்டை தொழுவம் மாற்றி கட்டினால் கன்று போடுமா? என சிந்தியுங்கள் பிறகு வாஸ்துவை பற்றி அலசுவோம்.

(வாஸ்தவம் தொடரும்)

 

Thursday, June 11, 2015

Yoga at 35000 Feet...!

A short story about Astanga yoga...coming soon...!


Friday, April 17, 2015

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க....

அன்று சுப்பாண்டியுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தது.  சொன்ன நேரத்தை விட வழக்கம் போல அரைமணி நேரம் தாமதமாக வந்தான்.

"என்ன சுப்பு லேட்? நம்மளை சந்திக்க காத்திருக்கறவங்க என்ன நினைப்பாங்க? " என கேட்க..எதையும் காதில் வாங்கதது போல...வண்டியை கிளப்பினான்.

சில நிமிட பயணத்தில் ஏதே யோசனையுடன் வண்டி ஓட்டியவன் என்னை சீரியஸாக பார்த்து திரும்பி..."சாமி.. இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு சாமி ?"

"இப்ப லேட்ட போனா அங்க பேசுவாங்க பாரு அவங்க தான் அது" என சொல்லி நிறுத்திக் கொண்டேன்.


இருந்தாலும் மனசு கேட்கவில்லை, அவன் ஏதோ தெரிந்த கொள்ள கேட்டிருப்பானோ என நினைத்து விவரிக்க தொடங்கினேன்...


"சுப்பு... அந்த நாலு பேரு யாருனு பலர் பல வித விளக்கம் கொடுத்திருக்காங்க....சிலர் மாதா, பிதா, குரு,தெய்வம் இவங்க தான் அந்த நாலு பேருனு சொல்றது உண்டு.

தாய், தந்தையை  இப்ப யாரு மதிக்கறா? முதியோர் இல்லம் பெருகிட்டு வரும் இந்த காலத்தில அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கேட்க யார் இருக்கா? தாய் தந்தைக்கே இந்த நிலைனா...குருவையும் தெய்வத்தையும் பத்தி சொல்ல வேண்டியது இல்லை. தாய் தந்தைக்கு முதியோர் இல்லம் போல, குருவுக்கு ஆஸ்ரமம், தெய்வத்திற்கு கோவில்னு இவன் ஒதுக்கிவச்சு வாழும் மனிதன் இவங்க நாலு பேர் பேசும் பேச்சை முக்கியமானதாக எடுத்துக்குவாங்கலானு தெரியலை. இதைவிட இவங்க நாலு பேரும் நாலு விதமா பேச மாட்டாங்க. நம்ம முன்னேற்றத்தை பத்தி மட்டும் பேசுவாங்க. அதனால அந்த நாலு பேரு இவங்களா இருக்க சாத்தியம் இல்லை.

அந்த நாலு பேரு யார்னு ஸ்ரீ க்ரிஷ்ணர் கீதையில் சொல்றார். அதை வேணா உனக்கு சொல்றேன்.



பக்தர்கள் இருக்காங்களே அவங்க மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம். ஆர்த்தன், ஜிக்யாசூ, அர்த்தார்த்தி, ஞானி இவங்க்களுக்கு பேரு வச்சிருக்காரு ஸ்ரீ க்ரிஷ்ணர்.

இதுல ஆர்த்தன் சொல்லப்படறவங்க... அவங்களுக்கு பிரச்சனை வந்தாத்தன் கடவுள் ஞாபகம் வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கை பிரச்சனைனா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு அவங்க பிரச்சனை தீர்த்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை சாமியை மறந்துடுவாங்க

அர்த்தார்தி சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி அவருக்கு எப்பவும் ப்ரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க.  இவங்க வாழ்க்கை சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்ட இவங்களுக்கு போதும்.

ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு...ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை.....இதை எல்லாம் காட்டும் குருவை எனக்கு அருள்னு வேண்டுவாங்க. இயல்பு வாழ்க்கையை கடந்த வேண்டுதல் அவங்களோடது.

கடைசியா ஞானி....இவங்க எதையும் வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு ..கடவுளுக்கே வரம்  கொடுப்பாங்கலாம்.

எந்த நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் ஸ்ரீக்ருஷ்ணர். அனைவரும் எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனு சொல்றார்.

இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட.... அதனால இதையே பழமொழியா மாறி வந்திருக்கலாம். ..."


சாதாரணமா  சுப்பாண்டி  கேட்ட கேள்விக்கு பகவத் கீதையிலிருந்து தகவல் எடுத்து சொன்ன திருப்தியில் அவனை பார்த்தேன்.

"நீங்க இந்த நாலுல எது சாமி? "என்றான் சுப்பாண்டி.

வேற யாரு.......ஆர்த்தன் தான் - சாமி இந்த சுப்பாண்டி இப்படி இருக்கானே இவனை சரியாக்கி என்னை காப்பத்துனு உன்னால பிரச்சனை வரும் போது எல்லாம் கடவுளை வேண்டிக்கறனே...அதனால ஆர்த்தன், என சொல்லிவிட்டு அவனை பார்த்தேன்.

கொஞ்சம் லேட்டான பதட்டத்தில இருப்பீங்களேனு ஒரு கேள்வியை கேட்டா, என்ன என்னமோ மொக்க போடறீங்க்களே சாமி..என சொல்லி வண்டியை 'ஓட்டுவதையும்' தொடர்ந்தான் சுப்பாண்டி.

Monday, April 13, 2015

புத்தாண்டு - சத்சங்கம்

மன்மத வருஷ வாழ்த்துக்கள்

இன்று நமது ப்ரணவ பீடம் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறோம். அதன் முதல் படியாக இன்று சத்சங்கம் நடைபெறும். இலவசமாக அனைவரும் இதில் பங்கு பெறலாம்.

இனி வரும் காலத்தில் ஜோதிடம், ஆன்மீக வகுப்புகள் இங்கே நடைபெறும். அதன் அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும்.

கீழே உள்ள தகவலை பயன்படுத்தி ஆன்லைன் சத்சங்கத்தில் இணையுங்கள்.

Tomorrow zodiacal new year - 2015

Online Satsang and Inauguration of Online class from Pranava Peetam.

Free to join - All are welcome - Satsang will be in English.

Time : Tomorrow noon At IST 3 PM.

Please join me in an Adobe Connect Meeting.

Meeting Name:  Satsang - Online
Summary: Welcome to Online Satsanga and Class rooms.
Inauguration of Online classes. As a first session free Satsang for all. will explain on satsanga how the Online classes works. and Spiritual talk about Saranagathi - self surrender .

When:  04/14/2015 3:00 PM - 4:30 PM

To join the meeting:
https://meet49542053.adobeconnect.com/april14satsang/



----------------
If you have never attended an Adobe Connect meeting before:

Test your connection: https://meet49542053.adobeconnect.com/common/help/en/support/meeting_test.htm

Get a quick overview: http://www.adobe.com/products/adobeconnect.html

Adobe, the Adobe logo, Acrobat and Adobe Connect are either registered trademarks or trademarks of Adobe Systems Incorporated in the United States and/or other countries.

Friday, March 6, 2015

ஓம்கார யோகம்

இறையருள் ஒளிரட்டும், குரு அருள் பெருகட்டும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நமது இயல்பு வாழ்க்கையின் சூழலால் ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டாலும் அதை தொடர்வதிலும் ஆழ்ந்து செயல்படுவதிலும் சில தடைகள் ஏற்படுகிறது.

அத்தகைய சூழலை சரி செய்யும் நோக்கில் ப்ரணவ பீடத்தில் நடைபெறும் நிகழ்வு - ஓம்கார யோகம்.

ஓம்கார யோகம் என்பது 90 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாளை முற்றிலும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணிக்கும் வகையில் உங்களை தூண்டி ஆன்மீக வேள்வியில் ஈடுபடுத்தும் நிகழ்வாகும்.

காலை ஹத யோக பயிற்சியில் துவங்கி  பல்வேறு தியான பயிற்சிகள் மற்றும் மனவள பயிற்சி நடைபெறும். மாலை வேளையில் நம் கலாச்சார நூல்களான பாகவதம், திருமந்திரம் மற்றும் உபநிஷத்துகளுடன் சத்சங்கம் மற்றும் பஜன் நடைபெறும்.

ஆங்கில வருடத்தின் ஒற்றைப்படை மாதங்களின் மூன்றாம் ஞாயிறு அன்று ஓம்கார யோகம் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 15ஆம் தேதி கோவை ப்ரணவ பீடத்தில் நடைபெறுகிறது.

ஓம்கார யோகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு முன் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

ஓம்கார யோகத்தில் கலந்து கொள்ள நன்கொடை 500/- ரூபாய். இந்த நன்கொடையில் மதிய உணவு  தேனீர் வழங்கப்படும். ஓம்கார யோகம் என்ற இந்த அந்தர் யோக நாளில் உங்கள் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்கள் என யாரேனும் ஒருவரை உங்கள் சார்பாக அழைத்து வரலாம். அவர்களுக்கு இப்பயிற்சி இலவசம்.

உங்களின் ஆன்மீக நெருப்பை அணையாமல் ஒளிர செய்ய ஓம்கார யோகத்தில் இணைவோம்.

மேலும் விபரங்களுக்கு

ஸ்வாமி ஓம்கார்

தொலைபேசி எண் : 9944 2 333 55

Thursday, February 5, 2015

உத்தவ சுப்பாண்டி


பாகவத புராணத்தின் கடைசி பகுதியில் வருவது உத்தவ கீதை. 125 வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டு பூலகை விட்டு வைகுண்டம் செல்லுவதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தயாராகிறார்.

இச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரின் நீண்ட கால நண்பர் மற்றும் மந்திரியாக இருக்கும் உத்தவர் ஆயிரம் கேள்விகளுக்கு மேல் யோகம், ஞானம், மோட்சம் என பல விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில் உத்தவ கீதையாகும்.

ஆயிரம் கேள்விகளுக்கு மேல் கடந்த பிறகு உத்தவர் சில   நொடிகள் மெளனமாக இருக்கிறார். உடனே கிருஷ்ணர், " உத்தவா உனக்கு சந்தேகம் தீர்ந்ததா என கேட்கிறார்". 

உத்தவர் புன்னகையுடன், "ஸ்ரீ கிருஷ்ணா உன்னுடன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது முதல் வாழ்ந்து வருகிறேன். சிறுவயது  முதல் இந்த நாள் வரை நம் நட்பு தொடர்கிறது. நான் உனக்கு சித்தப்பா மகனும் கூட..! உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு  நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும்? எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது...!" என்றார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியத்துடன் பார்த்து, "அப்படியானால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை ஏனப்ப எழுப்பினாய்?" எனக் கேட்டார்.

உத்தவர் பக்தி நிறைந்த கண்களில் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக பார்த்தவண்ணம் கூறினார்....

"நான் கேட்ட கேள்விகளின் பதில் எனக்கு முன்பே தெரியும். இன்ன கேள்விக்கு இப்படித்தான் உமது பதில் இருக்கும் , அதற்கு இப்படி உதாரணம் சொல்வீர்கள் என்பது வரை எனக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் தான் நீங்களும் பதில் சொல்வீர்கள். அதை காரணமாக வைத்து உங்களுடன் சில மணி நேரம் செலவிடலாம். பகவானாகிய உங்களின் சாநித்தியத்தை நாங்கள் மெளனமாக பார்த்து எத்தனை காலம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் உங்களுக்கு சில நிமிடங்களில் எங்களின் இருப்பு சலித்துவிடலாம். அடுத்த பக்தர்களை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் இப்படி கேள்வி கேட்டால் அதன் காரணமாக எங்களுடன் இருப்பீர்களே அதனால் தான் கேட்டேன்" என நீண்ட விளக்கம் அளித்தான்.

இதை ரசித்த வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்ல தயாரானார்..

இப்படித்தான் எனக்கும்......! 

நான் தலை போகும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பொழுது சுப்பாண்டி ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் கேட்ப்பான். சுற்றம் சூழல் எதையும் பார்க்க மாட்டான். கேட்டுவிட்டு பெருமையாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். அந்த கேள்விக்கு நான் பல முறை பதில் சொல்லி இருப்பேன். இவன் இருக்கும் பொழுது யாராவது அந்த கேள்வியை கேட்டு அதற்கு பதில்  சொல்லி இருப்பேன். ஆனாலும் அவன் கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு காரணம் உத்தவர் போல என்னுடன் இருக்க வேண்டும் என்ற பக்தி என நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் சுப்பாண்டிக்கு பக்தியை விட ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் என்ற வியாதி என்றே நான் சந்தேகப்படுகிறேன்.

நீங்களும் நேரம் இருந்தால் உத்தவ கீதை படித்து அதன் சாரத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமானவரிடம் கேள்வி கேளுங்கள்...

இனி தெரிந்து கொண்டே யாராவது கேள்வி கேட்டால் மனதுக்குள் இப்படி சொல்லி கொள்ளலாம்........

-தட் உத்தவ கீதை மொமேண்ட்..!