Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, November 24, 2014

வேதகால வேளாண்மை பகுதி 2

பஞ்ச அங்கங்கள் என கூறப்படும் வாரம், நட்சத்திரம் யோகம் , திதி மற்றும் கரணம் என்பவையே பஞ்சாங்கம் என்பதாகும். பஞ்சாங்கம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வானமண்டலத்தில் இருக்கும் இடமும் அவை பயணிக்கும் இடைவேளி கொண்டு கணிக்கப்படுபவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இன்று பெளர்ணமி என திதியின் வரிசையில் கூறினால் சூரியன் சந்திரன் இருவரும் 180 டிகிரியில் எதிர் எதிராக இருக்கிறார்கள் என அர்த்தம்.

 நட்சத்திரத்தில் அஸ்வினி என கூறினால் இன்று சந்திரன் முதல் ராசியான மேஷத்தில் ராசிமண்டலத்தில் பயணிக்கிறார் என பொருள் கொள்ளவேண்டும்.  இந்த ஐந்து விஷயங்களில் வாரம், நட்சத்திரம் ஆகியவற்றை சென்ற பகுதியில் பார்த்தோம். இப்பொழுது யோகம் என்பதை விவரிக்கிறேன்.

யோகம் என்ற வார்த்தையே இதன் செயலை உணர்த்தும். நல்லதொரு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நட்சத்திர யோகத்தை பயன்படுத்துவது சிறந்தது. இந்த நட்சத்திர யோகம்  என்பது பஞ்சாங்கத்தில் காணப்படும் யோகத்தைக் காட்டிலும் வித்தியாசமானது. 

சூரியன் , சந்திரன் இவற்றின் இணைவால் 15 திதிகள் கிடைக்கின்றன. இதை மேலும் பகுக்கும் பொழுது 20 யோகங்கள் கிடைக்கிறது. யோகத்தைப் பகுத்தால் வருவது கரணம். ஆனால் வேதகால வேளாண்மைக்கு கிழமை, நட்சத்திரம், திதி, நட்சத்திரம் யோகம் இவைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். யோகம் , கரணம் ஆகியவை மிகவும் குறுகிய கால அளவீடுகள் என்பதால் இதை பயன்படுத்துவதில்லை. மேலும் திதியை பிரதானமாக பயன்படுத்துவதால் திதியின் உட்பிரிவான யோகம்,கரணத்தை உபயோகிப்பது இல்லை.  ஆனால் பழைய வேளாண்மை ஜோதிட குறிப்பில் அனைத்தும் பயன்படுத்தி வந்தனர். முகூர்த்த சூடாமணி மற்றும் பிருஹத் ஜாதகத்தில் இருக்கும் குறிப்புகள் ஒரு விவசாயி முழுமையான ஜோதிடனாக இருந்தான் என்பதை காட்டுகிறது. 

அன்றைய வாழ்வியல் சூழலில் பள்ளி கல்வியில் ஜோதிடம் / வான சாஸ்திரம் ஒரு பாடமாக இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.  ஆகையால் இங்கே நான் குறிப்பிடுவது வேதகால வேளாண்மையின் முழு தகவல் அல்ல. ஆனால் ஒன்றும் தெரியாமல் உயிரற்ற வேளாண்மை செய்வதற்கு வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதியை வைத்து பல அதிசயங்களை செய்யலாம்.

நட்சத்திர யோகம்  என்பது ஒரு குறிப்பிட்ட (வாரம்) கிழமையில் வரும் நட்சத்திரத்திற்கு இடையே உள்ள இணைவையும் மேன்மையையும் காட்டும். நட்சத்திர யோகங்களில் முக்கியமானது அமிர்த , சித்த , மரண யோகங்கள் இவற்றைக் கொண்டும் வேளாண் பணிகளை செய்யலாம்.

அமிர்த யோகம் :

"மிருதம் " எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு இறப்பு என்று பொருள். "அமிர்தம்" என்றால் இறவா (இறப்பற்ற நிலை) என்று பொருள். எனவே இந்த நாளில் உரமிடுதல் பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற பணிகளைச்  செய்யலாம். 

சித்த யோகம் :

நினைத்த காரியத்தில் வெற்றியடைவதை "காரிய சித்தி" அடைதல் என்பார்கள். 

சித்தி அடைந்தவர்கள் சித்தர் என அழைக்கபடுவார்கள். நமது எண்ணம் நிறை வேற இந்த நாளை பயன்படுத்துவது சிறந்தது.  இந்த நாளில் நீர் பாசன முறையை திட்டமிடுதல் , வேளாண் பணிகளை திட்டமிடுதல் மற்றும் விதைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

மரண யோகம் :

"மரணம்" என்பது இங்கு இறப்பை குறிப்பதில்லை. இந்த நாள் கேடு பலனை கொடுக்கும் என்பது மூடநம்பிக்கை எனலாம். மரணம் என்பது தவறானவற்றை வெளியேற்றுவதை குறிக்கும். களை எடுத்தல், தோட்டத்தை சீர் செய்தல், செடிகளை செதுக்குதல்  ஆகிய கழிவு பணிகளை மரண யோகத்தில் செய்யலாம்.

திதி :

சூரியனும், சந்திரனும்  சூரிய மண்டலத்தில் இணையும் புள்ளியையும், இடைப்பட்ட பாகையையும் குறிப்பது திதி. பஞ்சாங்கத்தில் இருக்கும் பஞ்ச அங்கங்களில் திதிக்கு என சில முக்கியத்துவங்கள் உண்டு.

புராண காலங்களில் கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார் என்றும் ராமர் நவமியில் பிறந்தார் என்றும் திதியை சிறப்பித்து கூறுவார்கள். இதன் மூலம் திதியின் முக்கியத்துவத்தை அறியலாம். திதிகள்  மொத்தம் 15, அமாவாசை துவங்கி பௌர்ணமி வரையிலும் - பௌர்ணமி  துவங்கி அமாவசை வரையிலும் 30 நாட்களுக்கு திதிகள் இருமுறை வருகின்றன. இந்த இருகாலங்களும் முறையே சுக்கில பட்சம் (வளர்பிறை)  மற்றும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) எனலாம். திதிகளும் அதற்குறிய வேளாண் பணிகளும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.


வேளாண் பணிகளை மேற்கண்ட வரிசையிலேயே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கு ஏற்றது போல திதி வரும் நாளில் செய்தால் நல்லது. சஷ்டி, பஞ்சமி , தசமி, சதுர்தசி இந்த நாட்களில் உரமிடுதல் அவசியம். அமாவசை நாளில் பயிர்களுக்கு அதிகமாக நீர் உற்றுவதும் , பயிர்களுக்கு பௌர்ணமி அன்று நீர் ஊற்றாமல் இருப்பதும் நன்று. ஏகாதசி நாளில் பூமிக்கு அடியில் விளையும் (கிழங்கு- கடலை) பயிர்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும். பூமிக்கு மேலே விளையும் பயிர்களை ஏகாதசி அன்று பண்படுத்தினால்  பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். 

இன்று கூட அமாவாசை நாளில் பெரும்பாலும் வேளாண்மை பணிகளுக்கு விடுமுறை விடுவது நம் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இது ஏன் என பலருக்கு தெரிவதில்லை. உண்மையில் நம் முன்னோர்கள் பஞ்சாங்க நுணுக்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றே இது. பெளர்ணமி அன்றும் அனேகமாக ஒவ்வொரு மாதமும் வழிபாட்டு நாளாக வருவதால் விடுமுறையாக அமைந்துவிடும். உதாரணமாக சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து மாதமும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கு உரிய நாளாகி விவசாய பணிகளுக்கு விடுமுறையாகி விடும். ஆக அமாவாசை பெளர்ணமி அன்று பூமியின் ஈர்ப்பு விசை ஏற்ற தாழ்வில் இருக்கும் என்பதே விடுமுறைக்கான காரணம்.

செடிகளை சீரமைத்தல், களை எடுத்தல் ஆகிய வேளாண் பணிகளுக்கு  திரியோதசி திதி  சிறந்த நாள்.  மேற்கண்ட தகவல்களைக் கொண்டு சிறந்த முறையில் வேதகால வேளாண்மையை செயல்படுத்த முடியும். கிரக ஆற்றல் இலவசமாக கிடைக்கும் ஒன்று, இதை தக்க முறையில் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையிலிருந்து வேதகால வேளாண்மை எனும் புதிய பரிமாணத்திற்கு மாற்றம் அடையுங்கள். உங்கள் வேளாண்மை யுக்தியை புதிய பாதையில் அமைத்து உலகை வளமாக்குங்கள்.

Wednesday, November 19, 2014

வேதகால வேளாண்மை - பகுதி 1

ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஜோதிட சாஸ்திரத்தை தொகுத்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக விவசாய விஷயங்களை எளிமையாக கொடுத்துள்ளேன். வேதகால வேளாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.அதில் மேலும் ஆழமாகவும் விவசாய குறிப்புகளுடனும் தகவல்கள் இருக்கும். 

பழங்காலம் தொட்டு ஜோதிடமும் முஹுர்த்த சாஸ்திரமும் விவசாயத்திற்காகவே கண்டறியப்பட்டது. நம் ப்ரணவ பீடத்தில் 2007ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு என தனியே பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். வேளாண்மை பல்கலைகழகத்தில் இது பாடமாகவும் இருக்கிறது. 

இந்த வருடம் பகுத்தறிவு கொண்டவர்கள் என கூறும் பலர் வேளாண்மை பல்கலைகழகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் என கேள்விபட்டேன். நம் கலாச்சாரத்தை  இழிவுபடுத்த மேலை நாட்டின் கலாச்சாரத்தை தாங்கிபிடிக்கும் பகுத்தறிவாளிகள், மேலை நாட்டில் பல வருடமாக BIO Dynamics என பஞ்சாங்கம் கொண்டு விவசாயம் செய்கிறார்களே? அதற்கு மாநாடு வேறு உலகாளாவிய அளவில் நடக்கிறதே? அதற்கு என்ன விளக்கம் சொல்லுவார்கள்? இச்செயலை பார்த்தால் இவைகள் எல்லாம் வேறும் வெறுப்பறிவு பகுத்தறிவல்ல என்பது தெளிகிறது. இதனால் உண்மையை தெளிவுபடுத்தவே இந்த கட்டுரை தொடர். 
----------

ஜோதிட சாஸ்த்திரத்தை பல துறைகளில் பயன்படுத்தினாலும், தற்சமயம் வேளாண் துறையில் பயன்படுத்துவது குறைவே. இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்களை உபயோகித்து விவசாயம் செய்யும் முறையில் கிரக ஆற்றலை கொண்டும் விவசாயம் செய்யலாம். நம் முன்னோர்கள் இந்த ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு சான்றுகள் உண்டு.

இயற்கை விவசாயம் என்பது இயற்கையில் உள்ள சக்தியை , உயர் நிலையில் பயன்படுத்தி விளைச்சல் காண்பது என்கிறார்கள். நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சி கொல்லியைக் காட்டிலும் இயற்கையான பஞ்சகவ்வியம் மற்றும் தசகவ்வியத்தைக் கொண்டு வளப்படுத்துகிறார்கள். இந்த சிறப்பான முறையுடன், வேதத்தின் கண் எனக் கூறப்படும் ஜோதிட சாஸ்த்திரத்தையும் இணைத்து பயன்படுத்தினால் புதிய பரிமாணத்திற்கு வேளாண்துறை செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஜோதிட சாஸ்த்திரத்தை இயற்கை விவசாயத்துடன் இணைத்து பயன்படும் இந்த முறை "வேதகால வேளாண்மை"  எனலாம்.

ஜோதிடத்தை பயன்படுத்துவது என்றவுடன் கிரக ஆற்றலை மட்டும் பயன்படுத்துவது என நினைக்க வேண்டாம். ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம் மற்றும் இதர ஜோதிட குறியீடுகளான திதி, யோகம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பிரபஞ்ச ஆற்றலை முழுமையான முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் சூட்சுமங்களை பின்வரும் பகுதிகளில் காண்போம்.

மேல்நாட்டில் சிலர், கிரக ஆற்றலை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறார்கள். இதற்கு "Bio-Dynamic" முறை என அழைக்கிறார்கள். இது முழுமையான முறை இல்லை. காரணம் , இந்திய ஜோதிட முறையைத் தவிர வேறு எந்த ஜோதிடமுறையிலும் நட்சத்திரங்கள்  எனும் கோட்பாடு இல்லை . நட்சத்திரங்கள் இல்லை என்றாலே திதி மற்றும் ஏனைய பஞ்சாங்க நுணுக்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் மேல்நாட்டினர் திதியை முழுமையாக பயன்படுத்தாமல் அமாவாசை, பௌர்ணமியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சனி, ராகு/கேதுவுடன் சந்திரனின் இணைவை ஆராய்கிறார்கள். இந்த முறையை பயன்படுத்தினால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வேளாண் செயல்களைச் செய்ய முடியும்.


பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம். கிமு 5000  வருடத்திற்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் முறை இருந்ததற்கு சாட்சிகள் உண்டு.  வேத சாஸ்திரத்தின் தோற்றத்தை காலம் எனும் பரிமாணத்தில் அடக்க முடியாது. அத்தகைய  தோற்றமும் முடிவும் இல்லாதது என  கூறப்படும் வேத சாஸ்திரத்தில் அதர்வண வேத பிரிவின் கீழ் "கணிதா" (Ghanitha) எனும் பகுதி  உள்ளது. இதில் கோள்களின் நிலையை துல்லியமாக கணிக்கும் பஞ்சாங்க கணிதம் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு பல கோடி செலவழித்து நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கோள்களின் நிலையை , வெள்ளைதாளும் - எழுதுகோலும் கொடுத்தால் நமது நாட்டு பஞ்சாங்க கணிதர்கள் சில மணி நேரத்தில் கணித்து விடுவார்கள்.

பஞ்சாங்கம் எனும் வடமொழி சொல்லை , ஐந்து அங்கங்களை பற்றி கூறும் நூல் என மொழிபெயர்க்கலாம். வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவையே இதன் பஞ்ச அங்கங்கள் அகும். நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தை பயன்படுத்தி வேளாண்மை 
செய்து வந்தார்கள். இந்த முறையை எளிமைப்படுத்தி  நவீன கால வேளாண்மைக்கு ஏற்றவாறு அளித்துள்ளேன். ஜோதிடத்தில் கூறப்படும் கிரகம், நட்சத்திரம், திதி, யோகம் இவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து வருடங்களாக பஞ்சாங்கம் கணித்து வெளியிடுகிறோம். 

கிரகம் :

சூரிய மண்டலத்தில் நவகிரகங்கள் சுற்றிவருவது நமது பள்ளி நாட்களில் அறிந்தது தான். இதில் சூரியன் முதல் சனி வரை 7 கிரகங்கள் உருவமாகவும் , ராகு - கேது அருவமாகவும் (உருவமில்லாமல்) சூரிய மண்டலத்தில் உலா வருகிறது. இதை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே கணித்த  நம் முன்னோர்கள் , நவகிரகத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 கிரகங்கள் சூரியன் முதல் சனி வரை ஆட்சிசெய்கிறது. ராகு - கேதுக்கள் தனி ஒரு நாளை ஆட்சி செய்யாமல் ஏழு நாட்களிலும் சக்தியை வழங்குகிறது. சமஸ்கிருதத்தில் கிழமைகளை "வாரம்" என அழைப்பார்கள். வாரநாட்கள் அனைத்தையும் சமஸ்கிருதத்தில் கிரகப்பெயரால் சோம வாரம், மங்கள் வாரம் (திங்கள் கிழமை - செவ்வாய் கிழமை) என அழைக்கிறார்கள். ஒரு கிரகம் குறிக்கும் கிழமையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 

உதாரணமாக திங்கள் கிழமை அன்று சந்திரனின் அலைவரிசை அதிகமாக இருக்கும்.   

வடமொழி காலண்டர், ஆங்கில காலண்டர் மற்றும் தமிழ் காலண்டர் அனைத்திலும் வார நாட்கள் அனைத்தும் ஒன்று போல  இருப்பதைக் கொண்டு கிரகத் தாக்கத்தின் முக்கியதுவத்தை அறியலாம். இதனை அறிந்த முன்னோர்கள் , அந்த கிரகம் குறிக்கும் வேலையை அதன் ஆற்றல் உள்ள கிழமையில் செய்து வந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என நிருபித்தனர். சனி - நீர் தன்மை கொண்ட கிரகம். அதனால் சனிக்கிழமை உடலில் நீர் சத்து அதிகரித்துக் காணப்படும். எனவே சனிக்கிழமைகளில் ஆண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றார்கள். இதனால் நீர் தன்மையும் - எண்ணெய் தன்மையும் கலக்காமல் , தோல் பகுதி கழிவுகளை எண்ணெய் வெளியேற்றிவிடும். ஆனால் சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று இதைச் செய்தால் சூரியன் உஷ்ணத்தை குறிப்பதால் எண்ணெய் தோல்பகுதியில் இணைந்து கழிவாக மாறி நோய் உண்டாக்கும். 

கிரகங்கள் உடலில் இது போன்ற விளைவை ஏற்படுத்துவது போல தாவரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கிழமையின் அடிப்படையில் தாவரங்களை பராமரிப்பது அவசியம். கிரகங்கள் குறிக்கும் கிழமைகளும் அன்று செய்ய வேண்டிய வேளாண் பணிகளும்  பின்வருமாறு,


வேளாண் செயல்களுக்கு மட்டுமல்லாமல் பயிரிடப்படும் தாவர வகைகளும் கிரகம் சார்ந்து இருந்தால் நல்ல விளைச்சலைத் தரும்.

கிரகங்கள்  பயிர்வகைகள்

சூரியன் தானியம், கோதுமை
சந்திரன் அரிசி வகைகள்
செவ்வாய் மூலிகைச் செடிகள்
புதன் அவரை- துவரை, பருப்பு வகைகள்
குரு பழங்கள் , சதைபற்றுள்ள காய்கறிகள்
சுக்கிரன் பூக்கள், பழங்கள்
சனி கிழங்கு வகைகள் , தென்னை , எண்ணெய் வித்துக்கள்

கிரகத் தன்மைக் கொண்டு செய்யப்படும் செயல் வீணாகாது. மேலும் சில கிரகங்கள் மற்ற கிரகத்தின் தன்மைக்கு எதிர் தன்மை வாய்ந்தது. எனவே ஒரு கிரகம் ஆட்சி செய்யும் நாளில் அதற்கு எதிரான தன்மை உள்ள பணிகளையோ , பயிர்வகைகளையோ செய்தால் வேளாண்மை பாதிக்கும். உதாரணமாக செவ்வாய் அன்று செய்ய வேண்டிய பணிகளை வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ செய்தால் பயிர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புண்டு.  ஒரு கிரகத்திற்கு எதிர் தன்மை உள்ள கிரகம் எது என தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமில்லை. அதற்கு பதிலாக அந்த கிரகம் குறிக்கும் செயலை மட்டும் செய்தாலே மேன்மை கிடைக்கும்.

நட்சத்திரங்கள்

பிரபஞ்சத்தில் 27 நட்சத்திர கூட்டங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டே கிரகங்கள் இயங்குகின்றன. எனவே கிரகங்களை காட்டிலும் நட்சத்திரங்களின் ஆற்றல் மிக முக்கியமானது. மின்சார பல்புகள் மின்னாற்றலில் இயங்குவதைப் போல கிரகம் , நட்சத்திர ஆற்றலில் இயங்குகிறது. எனவே நட்சத்திர ஆற்றலைக் கொண்டு வேளாண் செயல்களை செய்தால் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும். 

நட்சத்திரங்கள் 27 நட்சத்திர கூட்டங்களாக பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் ( 9X3=27 நட்சத்திரங்கள்) ஆட்சி செய்கின்றன.  கிரகங்களின் செயல்பாடுகளை  கொண்டு வேளாண் பணிகளை செய்ததைப் போல , நவகிரகங்கள் அதன் தாக்கத்தை இந்த நட்சத்திரங்களுக்கு அளிப்பதால் , விவசாய பணிகளை மேலும் சிறப்பாக செய்யலாம். நட்சத்திரங்களின் மூலம் கிரகங்கள் 

செயல்படுத்தும் வேளாண்மை பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


       வார நாட்களைக் கொண்டு வேளாண்மையை செய்யும் பொழுது ராகு - கேதுவின் செயல்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால் நட்சத்திரங்களைக் கொண்டு வேளாண் பணிகளை செய்தால் ராகு - கேதுவை பயன்படுத்த முடியும். கிழமைகளை பயன்படுத்தும் பொழுது ஏழு தன்மைகள் மட்டுமே கிடைக்கும். கிழமையுடன் நட்சத்திரத்தை யும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிக கிரக அமைப்புகள் ( 27 நட்சத்திரம் X 7 வார நாட்கள் = 189) கிடைக்கும்.  

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் வந்தால் சூரியன் சம்மந்தப்பட்ட வேளாண் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். நட்சத்திரங்களுக்கும் கிழமைகளின் அதிபதிகளுக்கும் எதிர் - எதிர் தன்மை கிடையாது. உதாரணமாக செவ்வாய் கிழமையில் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்- விசாகம் - பூரட்டாதி அமைந்தால் செவ்வாய்க்கு உண்டான உழுதல், செடியை செதுக்குதல் போன்ற பணிகளையும் குருவுக்கு உண்டான விதைத்தல் , விதையை ஊர வைத்தல் , பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற இரு கிரகத்தின் வேலையையும் செய்யலாம். ஆகவே நட்சத்திரங்களையும் கிழமைகளையும் பயன்படுத்தும் பொழுது அதிகமான நற்பயன்களைப் பெற முடியும்.

(தொடரும்)

Saturday, November 1, 2014

சனிப்பெயர்ச்சி பலன் 2014

சனி  நவம்பர் 2 ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவர் இன்னும் இரண்டரை வருடம் அந்த ராசியில் இருப்பார். ஜோதிடத்தில் ஒரு கிரகம் மட்டும் வைத்து பலன் சொல்வது முட்டாள் தனமான விஷயம். ஆனால் கோச்சார பலன்களில் ஒரு சதவிகிதமாவது இது வேலை செய்யும். சனி தசா அல்லது சனி புக்தி ஏதேனும் ஒன்று நடப்பவர்களாக இருந்தால் சனி அதிக வேலைகளை செய்வார்.

தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் எங்கும் சனிப்பெயர்ச்சி பலங்கள் தான். சரி நாமும் சுருக்கமாக சனிப்பெயர்ச்சி பலன் சொல்லுவோமே என கிளம்பிவிட்டேன். சனிப்பெயர்ச்சி பலன்கள் ஒரு வரியில் உங்களுக்காக....

மேஷம் - தொழில் சுனக்கம், சிறு விபத்தால் காலில் காயம்

ரிஷபம் - வழக்கு, சட்ட சிக்கல், மண வாழ்க்கையில் சஞ்சலம்

மிதுனம் - உடல் நலமின்மை, நாள்பட்ட வியாதி, சிறப்பான வேலையாட்கள்

கடகம் - குழந்தைகளால் சங்கடம், ஆன்மீக நாட்டம், வேலை இழத்தல்

சிம்மம் - சொத்து சார்ந்த விவகாரங்கள் , வாகன பழுது

கன்னி - உடன் பிறந்தவர்களுடன் பிணக்கு, பூர்வீக சொத்தில் மேன்மை

துலாம் - வரவு செலவு தாமதம், புதிய கடன், உறவினர்கள் சேர்க்கை

விருச்சிகம் - வாழ்க்கை துணைவர் வழி உறவினர்களால் சிக்கல், மன
உளைச்சல்

தனுசு - வசிப்பிடம் மாற்றம், வருமானத்திற்கு அதிகமான செலவு

மகரம் - மன மகிழ்ச்சி, எதிர்ப்பார்ப்புகள் தாமதத்துடன் பூர்த்தி ஆகும்

கும்பம் - நல்ல பெயர், பதவி உயர்வு, பொருளாதார மேன்மை

மீனம் - தந்தை உடல் நலம் குறைதல், ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம்


இவை சனிக்கிரகத்தால் ஏற்படுவது....

குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி கிரகம் ஒன்றும் செய்யாது.

Monday, October 13, 2014

பக்தி யோகம் - நீங்கள் எப்படிப்பட்ட பக்திமான்? - ( யோகம் - 1)

யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 


நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம். ஆனால் இதெல்லாம் வரலாறு, தற்சமயம் நம் நிலை..?

இறைவனை தியானிக்கும் பொழுது தேவையற்ற சிந்தனை வருகிறது என நினைக்கிறோம். உதாரணமாக உங்கள் குழந்தை பற்றியோ சிலருக்கு.. காதலி நினைவு, சிலருக்கு நண்பர்களின் நினைவு, தொழில் என மனது அலைபாயும். இவ்வாறு ஆன்மீகத்தில் ஈடுபடும் பலருக்கு தங்கள் அலைபாயும் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது என தெரிவதில்லை. அதனால் அவர்களுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடுவது உண்டு. இவ்வுணர்ச்சி அதிகமாகி அவர்களை ஆன்மீகத்தை விட்டே வெளியேற வைக்கும், இவற்றை தவிர்க்க நல்ல மருந்தாக அமைவது பக்தியோகம்.

பெற்றோர், காதலன்/ காதலி , குழந்தை, நண்பர் என உங்கள் மனம் உறவால் வசப்பட்டு அதனால் எழும் உணர்வால் நிரப்பப்பட்டு இருக்கலாம். உங்களின் உணர்வுகளை விட்டுவிட்டு வாருங்கள் அப்பொழுது தான் இறைவனை காணலாம் என சொன்னால் அது எப்பொழுதும் முடியாது. மீனை தண்ணீரை தாண்டி வா உனக்கு வாழ கற்று தருகிறேன் என சொல்லுவதை போன்றதே இச்செயல்.  பல மதங்கள் இச்செயலை தான் செய்கின்றன. ஆனால் ஆன்மீகம் உங்களின் அடிப்படை உணர்வு மிகுதியை வைத்தே உங்களை மேம்படுத்தும்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.

இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் பக்தியில் பலராலும் கொண்டாடப்படும் தெய்வாம்சம். இதன் காரணம் ஸ்ரீக்ருஷ்ணர் வாழும் காலத்திலேயே இந்த ஐவகையான முறையில் பக்தி செய்யப்பட்டவர், யசோதையால் வாத்சல்யம் (குழந்தையாக), கோகுலத்தில் கோபியரிடம் தாசியம் (அடிமை தன்மை), பாண்டவர்கள் மற்றும் பிருந்தாவனத்தில் இருப்பவர்களின் பிரச்சனைக்கு சாந்தம் (பெற்றோராக), அர்ஜுனனுக்கு சகியம் ( நண்பன்), ராதைக்கு மதுரம் ( காதலன்) என பக்தி செய்யப்பட்டதால் கண்ணன் அனைவராலும் வணங்கப்படுகிறார்.  

இந்த ஐவகை பக்தியும் பஞ்சபூதத்தின் அடிப்படையில் உருவானது.

இறைவனை குழந்தையாக பாவனை செய்தல் எனும் வாத்சல்யம் பஞ்ச பூதத்தில் அக்னியை குறிக்கும். இறைவனை நண்பனாக பாவனை எனும் சகியம் பஞ்ச பூதத்தில் ஆகாயத்தை குறிக்கும்.  இறைவனை முதலாளியாக்கி நம்மை அடிமையாக பாவனை செய்தல் எனும் தாசியம் பஞ்ச பூதத்தில் பூமியை குறிக்கும்.

இறைவனை , காக்கும் தந்தையாக பாவனை செய்தல் எனும் சாந்தம் பஞ்ச பூதத்தில் காற்றை குறிக்கும்.  இறைவனை காதலனாக பாவனை செய்தல் எனும் மதுரம் பஞ்ச பூதத்தில் நீர் தன்மையை குறிக்கும். இந்த பக்தி வழிமுறையையும் பஞ்ச பூத தன்மையையும் ஆழ்ந்து ஒப்பிட்டால் பக்தி செயல்படும் முறையும் அதன் அவசியமும் தெரிய துவங்கும்.  

இந்த ஐவகைகளில் எப்படிப்பட்ட பக்தியை தேர்வு  செய்வது? எது சிறந்தது? என கேள்வி எழும். 

நம் உடல் மற்றும் மனம் பஞ்ச பூத தொகுப்பால் உருவாகி இருக்கிறது அத்தகைய பஞ்ச பூதத்தின் தொகுப்பால் உருவாகிய நாம் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கத்தில் இருப்போம்.  உதாரணமாக பஞ்ச பூதத்தில் பூமியின் ஆதிக்கத்தில் செயல்பட்டு நெருப்பு, நீர், காற்று மற்றும் ஆகாயத்தின் தன்மையை பின்னுக்கு தள்ளிய நிலையில் இருந்தால் நீங்கள் பக்தி செய்ய வேண்டிய தன்மை தாசியம் எனும் அடிமை தன்மை ஆகும். இது போன்று உங்கள் பஞ்சபூதத்தின் தன்மை ஆதிக்கம் தெரிந்து பக்தி வழியை தேர்வு செய்யலாம்.  

உங்களால் பக்தி தன்மையை உங்களின் பஞ்ச பூத தன்மையை கொண்டு அறிய முடியவில்லை என்றால் உங்கள் குருவிடம் சரணடையுங்கள் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். குரு என்றவுடன் உங்களுக்கு மற்றொரு கேள்வியும் தோன்றி இருக்கக் கூடும். ஐவகை பக்தியில் குரு பக்தி என சொல்லப்படுவது எந்த வகை சார்ந்தது? இதன் பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதற்கான விடையை நீங்களே கூற முயலுங்கள்.

பஞ்சபூதங்களின் அடிப்படையில் பக்தி வகைகள் இருக்கிறது என பார்த்தோம். பஞ்சபூதங்கள் நிலைபடுத்த வேண்டுமானால் அதற்கு பராமரிப்பு தேவை. முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் தற்கால வாழ்க்கை முறையில் பஞ்ச பூதத்தில் அனைத்தும் மாசு அடைகிறது என்பதை பார்க்கிறோம். ஆகவே தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்.



1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

ஒன்பது வழிகளை திரும்ப திரும்ப செயல்படுத்துவதாலும் அத்துடன் இணைந்து இருப்பதாலும் பக்தி வலுவடைந்து மாசுபடாமல் வளர்கிறது. இந்த ஒன்பது வழிகளும் நவக்கிரகங்களின் செயலுடன் இணையாக வருவதால் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக ஒருவர் எப்படிப்பட்ட பக்தி செய்வார் என்பதையும் எத்தகைய வழியில் ஈடுபாடு இருக்கும் என்பதையும் அறியும் முறைகள் முற்காலத்தில் இருந்தது.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம். பக்தியோகத்தை எளிமையாகவும் அதன் கருப்பொருளையும் கொடுக்கவே இவ்வாறு குறுகிய வடிவில் எழுதி உள்ளேன். இதனை வாசிப்பவர்கள் பக்தியோகத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டால் போதுமானது.  

இனி பக்தி கதைகளையோ நூல்களையோ படிக்கும் பொழுது இது ஐவகை பக்தியில் எந்தவகை சார்ந்தது என சிந்தியுங்கள். அப்படி செய்வதால் நீங்கள் ஸ்மரணம் என்ற வழியில் பக்தியை பயன்படுத்துகிறீகள் அல்லவா...? 

பக்தி யோகத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்கள் : புராணங்கள் - பாகவதம், தேவி பாகவதம். பிற நுல்கள் - நாரத பக்தி சூத்திரம். 

நீங்கள் பக்தி மார்க்கத்தில் பயணித்து பக்தியில் உள்ளார்து இறைவனுடன் இரண்டற கலக்க என் ப்ரார்த்தனைகள். 

Saturday, August 9, 2014

ஸ்வாமி ஓம்கார் சிங்கப்பூர் வகுப்புகள்

சிங்கப்பூர் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகொளுக்கு இணங்க ஸ்வாமி ஓம்கார் ஆன்மீக பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறார். மேலும் விபரங்களுக்கு இமெயில் தொடர்புகொள்ளுங்கள்.

Tuesday, July 8, 2014

புரபசர் லூஸ்னோஸ்கியும் அரை இறுதி கால்பந்தாட்டமும்

ஜெர்மனியின்  தென்பகுதியில் உள்ள சிறிய கிராம பூங்காவில்  மாலைநேர இருளில் கைகளை இறுக கட்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். கோடைக்காலம் என்றுதான் பெயர் குளிர் எலும்பை அசைத்துப்பார்த்தது.

ஏதோ யோசனையில் பூங்காவின் கடைசி பக்க புல்வெளிக்கே வந்துவிட்டேன். திரும்ப வீடுவரை செல்ல ஐந்து கி.மீ நடக்க வேண்டும். குறுக்கு வழி என்றால் பக்கவாட்டில் உள்ள மலைகுன்றை தாண்டினால் போதும் இரண்டு கி.மீ சென்றுவிடலாம். மெல்ல மலைக்குன்றில் ஏறத்துவங்கினேன்.

இதயம் வாய்க்கே வந்துவிடும் அளவுக்கு மூச்சுவாங்கியது. எப்பொழுதும் குறுக்குவழியில் பாதி வந்தவுடன் தான் நேர்வழியே தேவலாம் என தோன்றும். கொஞ்சம் தளர்வாகி நடக்கலாம் என சுற்றும் நோட்டம் விட்டேன்.

குன்றின் மேல் ஒரு கருப்பு நிற பழைய கோட்டை கண்ணில்பட்டது. பாதி செதிலம் அடைந்து உட்புற கற்கள் தெரிய ஒரு திகில் உணர்வுடன் காட்சி அளித்தது.  அந்த கோட்டையை உள்ளே பார்க்கும் நோக்கில் சென்றேன்.

வவ்வால் எச்ச நாற்றமும் கருகிய முடியின் வாசனையும் கலந்த மணம் கோட்டையில் பரவி இருந்தது. மெல்ல சுற்றியும் நோட்டம் விட்டேன். எங்கும் மாலை நேர அரை இருள் கவ்வி இருந்தது. பக்கவாட்டில் உள்ள அறையில் மங்கிய வெளிச்சம் தெரியவே பழைய கோட்டையில் யாராக இருக்கும் என தூணில் மறைந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன்.

பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்நியன்பட பாணியில் கருப்பு அங்கி அணிந்து சிலர் கையில் துடைப்பம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முகம் சரியாக தெரியாத வண்ணம் அங்கி மறைத்து இருந்தது. அறை தீப்பந்தத்தால் ஒளி ஊட்டப்பட்டு இருந்தது.

அறையின் மறு பக்க திறப்பில் சலசலப்பு கேட்டது. அறையில் அங்கி அணிந்த அனைவரும் "புரபசர் லூஸ்னோஸ்கி" என கோஷ்மிட்டார்கள்.

சாலையை கூட்டும் துடைப்பத்தை ஸ்கூட்டர் போல  காலுக்கு இடையே வைத்து காற்றில் பறந்துவந்தார் புரபசர் லூஸ்னோஸ்கி.

அனைவரையும் பார்த்து கையசைத்துவிட்டு "இன்று நான் நம் மாய மந்திர உலகிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இன்று நடக்கும் (ஜூலை 8) பிரேசில் - ஜெர்மனி கால்பந்தாட்ட போட்டியில் ஜெர்மனி தோல்வி அடையும். இரண்டாம் பகுதியில் முல்லர் அடிக்கும் கோல் வீணாக போகும்.  நாளை (ஜூலை 9)நடக்கும் போட்டியில் அர்ஜண்டினாவின் அதிரடியை காணலாம்.மிஸ்ஸி மிஸ் செய்வதில்லை" என சொல்லி துடைப்பத்தில் அமர்ந்து பறந்தார். அறையில் இருந்த அனைவரும் திசைக்கு ஒருவராக துடைப்பத்தில் பரந்தனர். தீப்பந்தம் தானாக அணைந்தது.

வேக்குவம் க்ளீனர் கண்டறிந்த விஞ்ஞான காலத்திலும்  துடைப்பத்தில் பறக்கும் இவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே வீடுவந்தேன்.

Wednesday, June 18, 2014

குரு பூர்ணிமா அழைப்பிதழ் 2014

குருவின் அருள்பெற்று ஆன்மீக உயர்நிலை பெற 
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Tuesday, May 13, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 11

வெறுமை. என்னை சுற்றி உள்ள பாலைவன சமவெளியில் மட்டுமல்ல. என் உள்ளேயும் வெறுமை. வாழ்வின் விளும்பில் நிற்கிறோம். உதவி செய்ய ஒரு சிறு எறும்பு கூட கண் முன் இல்லை.

ஆண்டவா என்னை காப்பாற்று என கதறலாம். ஆனால் அப்படி ப்ரார்த்தனை செய்து பழக்கமற்றவன். சுயநலமாக எதற்கும் இறைவனை வேண்டியது இல்லை. அதனால் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் காப்பாற்று என எப்படி வேண்டுவது? அப்படி கேட்டு செய்வதாக இருந்தால் அது என்ன இறைவன்? நான் இறை ஆற்றல் துணையில்லாமல் இங்கே வர முடியுமா? அப்படி இருக்க நான் வேண்டி தான் அவர் என்னை காக்க வேண்டுமா? இப்படி பல தர்க்கங்கள் ஏழுந்து பிறகு அடங்கி மனம் வெறுமையானது. இது தான் ஜென் நிலையோ? 

காரின் முன் புறம் ஏறி அமர்ந்துவிட்டேன். சுப்பாண்டி கற்களை எடுத்து தூர வீசி கொண்டிருந்தான். ராம தாசி செய்வது அறியாது எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கருப்பு சர்ப்பம் போல மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. முழுமையான இருள் கவிழ்ந்தது. மெல்லிய குளிர் உடலை துளைக்க துவங்கியது. கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு கார் டயரில் உடலை வெப்பத்திற்காக அணைத்து உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி. பார்க்க பரிதாபமாக இருந்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும், காரின் உள் கூரையில் இருக்கும் சிறிய விளக்கின் ஒளி மட்டுமே இருந்தது. வேறு சலனங்கள் இல்லை. 

“சாமீ...அங்க பாருங்க...” என்றான் சுப்பாண்டி.

தூரத்தில் இரண்டு வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தது. சில நிமிடங்களில் அது பெரிதாக தெரிய துவங்கியது. அருகே வர வர அது பெரிய ட்ரக் என்பது புரிய துவங்கியது.

அந்த வண்டியின் வெளிச்சத்தை விட சுப்பாண்டியின் முகத்தில் வெளிச்சம் அதிகமாகியது. மிக அருகே வந்து அந்த வாகனம் நின்றது.

அர்ஜண்டினாவின் அதிக மின் அழுத்த கேபிள் இணைப்பு வழங்கும் மின்சார இலாகாவின் வாகனம். அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்து இராமதாசியுடன் ஸ்பானீஷித்தார்கள்.

பாலைவனத்தின் ஓரத்தில் மின்சார கோபுரம் அமைத்து வேலை செய்யும் பொழுது தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி சமவெளியின் நடுவே தெரிவதை கண்டு ஏதேனும் அதிசயம் இருக்கும் என நினைத்து 80 கி.மீ பயணித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்ததோ பிரபஞ்ச அதிசயமான நான், ராமதாசி பின்னே சுப்பாண்டியும்...!

அந்த வண்டியின் பின்னால் இந்த வண்டியை கட்டி இழுத்து செல்ல துவங்கினார்கள். பல கேள்விகளுடன் என்னை சுப்பாண்டி பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் கேட்கவில்லை. நானும் ஏதும் பேசும் நிலையில் இல்லை.

வண்டி எங்களை இழுத்துக்கொண்டு 40 கி.மீ சென்று இருக்கும். திடீரென முன் சென்ற வாகனம் சமிக்கை செய்து நின்றது. வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ராம தாசி வண்டியை பிரேக் பிடித்து நிறுத்த, மின் இலாகா வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி எங்கள் அருகே வந்தார். அவர் பேசியதை மொழிபெயர்த்தார் ராமதாசி.

“மன்னிக்கவும், நீங்க எல்லாரும் சாப்பிடாமல் ரொம்ப நேரம் பாலைவனத்தில் இருந்திருப்பீங்க. சாப்பிடறீங்களா தண்ணி வேணுமானு கேக்காம உங்களை கூப்பிட்டு வந்துட்டோம். இந்தாங்க தண்ணீர் பாட்டில். நீங்க நல்ல பசியில் இருப்பீங்க. எங்க கிட்ட நல்ல மாமிசம் இருக்கும் உணவு எதுவும் இல்லை. நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்கன்ன என்னிடம் வெஜிட்டபிள் சாண்ட்விச் இருக்கு. தரட்டுமா?”

ஆ..வ்வ்வ்........பெருங்குரல் எடுத்து சுப்பாண்டி அழுக...நான் கைகளால் தொழுக... ராமதாசி உணவு பெற்றுக்கொண்டு வந்தார். பச்சை தண்ணீர் கேட்டால் கூட அதில் இரண்டு மாட்டு மாமிச துண்டுகளை இட்டு கொடுக்கும் அர்ஜண்டினாவில் , சைவ உணவு பார்ப்பதே அரிது. வெளி இடங்களில் இல்லை என்றே சொல்லலாம். அப்படி இருக்க பாலைவனத்தில் அதுவும் வேறு ஒருவர் சைவ உணவை எங்களுக்கு அளிக்கிறார். இதை என்னவென்று சொல்ல ? 

காரில் இருந்த சிறிய விளக்கு 80 கி.மீட்டர் தூரம் தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்தாலும் யாராவது வந்து பார்க்க முயற்சிப்பார்களா? இது எப்படி சாத்தியமாயிற்று ? இப்படி பல கேள்விகள் மனதில்...

அன்றைக்கு அந்த ரொட்டியில் எங்கள் எழுதி இருந்தது...! வேறு என்ன சொல்லி கேள்வி அம்புகள் கொண்ட மனதை சமாதனம் செய்வது?

இப்படியாக நாங்கள் உயிர்த்தப்பி மீண்டும் முக்கிய சாலைக்கு வந்து அந்த மின்சார இலாக்கவினர் விடைபெற்றனர். இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இது சாத்தியம் என சுப்பாண்டி என்னை இன்னும் கேட்கப்படாத கேள்வியாக கண்ணில் அந்த கேள்வியை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறான்.

மீண்டும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஜிபிஎஸ் துணையுடன் பயணம் தொடர்ந்தது...

(அன்பு பெருகும்)

Friday, May 9, 2014

வாழ்த்தும் அதன் பின்புலமும்

                                                       


இரு மனிதர்கள் சமூகத்தில் சந்திக்கும் பொழுது பரஸ்பரம் வாழ்த்து சொல்லுக்கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் இந்த வாழ்த்தின் பின்புலங்களை யாரும் ஆய்வு செய்வதில்லை. ஒரு சமூகமோ அல்லது இயக்கமோ பரஸ்பரம் தங்களுக்குள் கூறும் வாழ்த்து செய்திகள் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை பற்றியதாக இருக்கும் என்கிறது மனோதத்துவ ஆய்வு.

தற்காலத்தில் குட் மார்னிங் அல்லது குட் டே என உங்கள் மேல் அதிகாரிகளை பார்த்து நீங்கள் சொல்லுவது எனது நாளை கெடுத்துவிடாதே என்பதன் உள்கருத்தாகும். ஆனால் அதை நாம் வெளிப்படையாக சொல்ல முடியாதே? அது போல மதங்கள் சார்ந்தவர்களும் இயக்கங்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கு கிடைக்காததையும் தேவையானதையுமே பரஸ்பரம் வாழத்தாக பகிர்ந்து கொண்டார்கள்.

உதாரணமாக  நமக்கு தெரிந்த சில மதங்களையும் அதன் வாழ்த்துக்களையும் பார்ப்போம். பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவதையே இங்கே நான் குறிப்பிடுகிறேன்.

கிருஸ்துவர்கள் “அசிர்வாதம்” (Bless you) என சொல்லுவதுண்டு. ஏசு கிருஸ்து தனது இறுதி நாளில் ஏன் என்னை கைவிட்டீர் என கேட்டதன் காரணமாகவும், அனைவரும் ஆண்டவரின் ஆசி உண்டு என்பதற்காகவும் இப்படி வாழ்த்துகிறார்கள். 

இஸ்லாம் உருவான சூழல் போர் மிகு சூழல் என்பதால் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என வாழ்த்திக்கொண்டார்கள்.

இந்திய மதங்களான சைவமும், வைணவமும்  தென்னிந்தியாவில் ஏற்படும் பொழுது பொருளாதார பின்னடைவு என்பது மக்களின் தன்மையில் இருந்ததால் ‘நாராயணா’ என்றும் ’சிவாய நம’ என்றும் கூறிக்கொண்டார்கள். இதற்கு எல்லா வளமும் பெற்றுக என அர்த்தம் உண்டு.

நமஸ்கார், நமஸ்தே என்பது வடமொழியில் கூறும் வாழ்த்துக்கள். இதற்கு உண்மைக்கு(ஆன்மாவுக்கு) வணக்கம் என அர்த்தம். செல்வ செழிப்பாலும் சுக போகத்தாலும் இந்தியா திளைத்த காலத்தில், உனக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டு அதை உணரு என வாழ்த்தினார்கள். வேத வரிகளான ருத்ரத்தில் கூட ‘நமஸ்து அஸ்து பகவன்” என ஆன்ம ரூபமாக இருக்கும் இறைவனை வணங்குகிறேன் என்ற வரிகள் உண்டு.

ஜெர்மனியின் நாஜிக்கள் ‘ஹெயில் ஹிட்லர்’ என தங்கள் தலைவர் பெயரை கூறிக் கொண்டார்கள். தங்கள் தலைவனை யாரும் வாழ்த்தவில்லை என்பதே இவர்களின் வாழ்த்தாக வெளிப்பட்டது. இந்த வாழ்த்தை தற்சமய ஜெர்மனியில் சொன்னால் 4 வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கும். அத்தனை சக்தி வாய்ந்த வாழ்த்து இது. 2 மில்லியன் மனிதர்களை காவு வாங்கிய வாழ்த்து. 

எனக்கு தெரிந்த ஒரு ஆசிரமத்தில் பரஸ்பரம் பார்க்கும் பொழுது “நித்யானந்தம்” என்பார்கள். அவர்களுக்கு நித்யமும் ஆனந்தம் கிடைத்ததா என தெரியவில்லை...!

இப்படியாக தங்களுக்கு இல்லாத ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமே வாழ்த்தாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. யாரையாவது பார்க்கும் பொழுது ஷம்போ மஹாதேவா என  வாழ்த்துவேன். இதற்கு மேலான இறை நிலைக்கு வணக்கம் என்று அர்த்தம்.  ஷம்போ என்பது வெற்று கூச்சல் அதற்கு அர்த்தம் இல்லை. பாமரத்தனமாக சொல்லவேண்டுமானால் இறைவனுக்கு ஓ போடு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படி சொல்வதனால் நமக்குள் ஏற்படும் ஸ்வாச மாற்றம் நமக்கு அறிவு தெளிவை ஏற்படுத்துகிறது. இது என் நம்பிக்கை மட்டுமே.

இந்த வாழ்த்து செய்த வேடிக்கையை கூறுகிறேன் கேளுங்கள். நான் வெளிநாடு செல்லும் நேரத்தில் எனது தொலைபேசியை தானியங்கி பதில் அளிக்கும் நிலையில் (auto voice reply) வைத்துவிட்டு செல்லுவேன். அப்பொழுது யாராவது அழைத்தால் “ஷம்போ மஹாதேவா நான் இந்த நாட்டுக்கு சென்று இருப்பதால் இரண்டு வாரம் கழித்து அழைக்கவும்” என குரல் ஒலிக்கும். அது நானே பேசி பதிவு செய்தது தான். 

இந்தியாவில் சிலருக்கு இந்த விஷயம் புதிது என்பதால் நான் ஊருக்கு வந்தவுடன் பேசும் பொழுது, “ நான் ரெண்டு வாரம் முன்னாடி கூப்பிடிருந்தேன், உங்க அஸிஸ்டெண்ட் மஹாதேவன் ஒருத்தர் தான் பேசினார்” என்பார்கள். அந்த நேரத்தில் எப்படி சமாளிப்பது என குழம்பிப்போவேன். நானும் எத்தனை நாள் தான் சிரிக்காத மாதிரியே நடிக்கிறது? :)

நீங்கள் கூறும் வாழ்த்துக்களை உணர்ந்து கூறுங்கள் என்பதற்கே இதை இங்கே பதிவு செய்கிறேன். இயந்திரத்தனமாக வாழ்த்துவதால் பயனில்லை. தேவையை வாழ்த்தாக வைப்பதைவிட இறை வணக்கத்தை வாழ்த்தாக வையுங்கள். மதம் கடந்து இயக்கங்கள் கடந்து இறைவனை வணங்கும் வாழ்த்தாக இது இருக்கட்டும்.

ஓம் தத் சத்

Monday, May 5, 2014

சென்னையில் ஹதயோக பயிற்சி

சென்னை வாழ் ஆன்மீக அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.


Tuesday, April 15, 2014

அருணாச்சல விநாயகர் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக அழைப்பிதழ்

அன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அருணாச்சல விநாயகர் என்ற திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 10,11 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

எனது மாணவர் திரு.அருணாச்சலம் மற்றும் அவரின் குடுபத்தாரின் ஆழ்ந்த பக்தியால் உருவாகி இருக்கிறது இந்த கோவில். பல்வேறு கோவில்கள் விநாயகருக்கு இருந்தாலும் இக்கோவில் சில சிறப்புகளை கொண்டது. தனது இல்லத்தில் இருந்த விநாயகர் கோவிலை விரிவாக கட்ட என்னிய திரு.அருணாச்சலம் அவர்கள் என்னிடம் வடிவமைப்பு பற்றி யோசனை கேட்டார். 

நம் கலாச்சாரத்தில் விநாயகர் முழு முதற்கடவுளாக வணங்கப்படுகிறது. அதே சமயம் அருவுருவமாகவும் முழுமுதற்கடவுளாகவும் ஸ்ரீமேருவை ஆன்மீகவாதிகள் வணங்குகிறார்கள். இரண்டையும் இணைந்து வடிவமைக்கும் எண்ணம் இறையருள் அளித்தது. அதனால் கோவிலின் கோபுரமே முழுமையாக ஸ்ரீமேருவாக ஆகாயத்தை நோக்கியும். கோவிலின் கருவறையின் உட்புறம் பூமியை பார்த்த நிலையில் ஒரு ஸ்ரீமேருவாக இருக்கும் படியும் வடிவைத்து இறையருளால் முழு கற்கோவிலாக அமைந்திருக்கிறது. மஹாபலிபுரம் போன்ற பழமையான கட்டிடகலை நுணுக்கத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.


இது தவிர கருவறையில் அமர்ந்திருக்கும் விநாயக பெருமானின் பீடத்தில் உள்ளேயும் ஒரு ஸ்ரீமேரு என மூன்று நிலைகளை குறிக்கும் வகையில் ஸ்ரீசக்ர மேரு கோவிலாக உருவாகி இருக்கிறது இந்த அருணாச்சல விநாயகர் கோவில்.

கோவிலின் அற்புதத்தை காணவும், நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகத்திற்கும் வந்து இறையருள் பெருமாறு பேரன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு திரு அருணாச்சலம் : 9443107780

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



Friday, April 11, 2014

திருச்சி ஆன்மீக பயணம் 2014

ஆன்மீக அன்பர்களுக்கு எனது வணக்கம்.

வரும் ஏப்ரல் மாதம் 26,27[சனி-ஞாயிறு] ஆம் தேதிகளில் திருச்சி
பகுதியில் உள்ள முக்கிய திருத்தலங்களுக்கு செல்கிறேன்.

என்னுடன் திருத்தலங்களை தரிசிக்க விரும்பும் அன்பர்கள் பங்குபெறலாம்.
இதற்கு கட்டணம் இல்லை.

தங்குமிடம் போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவை
நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியது. இறைவனின் சன்னிதானமும்  எனது இருப்பும் உங்களுக்கு விருப்பம் எனில்
பயணம் செய்யலாம்.

இதற்கு முன்பதிவு தேவையில்லை.

நிகழ்ச்சி நிரலில் நான் குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த சமயத்தில்
நீங்கள் இருந்தால் போதும்.

26 சனிக்கிழமை 

ஸ்ரீரங்கம் 

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை இருப்பேன்.

திருவானைக்காவல்

ஜல ஸ்தலம் என கூறப்படும் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி
கோவிலில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இருப்பேன்.

27 ஞாயிறு 

மலைக்கோட்டை

ஞான மலை என அழைக்கப்படும் மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் தாயுமான ஸ்வாமி கோவில்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை.

மேற்கண்ட கோவில்களின் தரிசனத்தின் பொழுது  சத்சங்கம், பஜன், மந்திர ஜபம் மற்றும் தியானம் நடைபெறும்.

-------------------------------------

ஆன்மீக பயணங்களுக்கு கட்டணம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பிற விமர்சனம் கொண்டவர்களுக்காக இத்தகைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
திறந்த மனதுடன் தென்றலை போல ஆன்மீக நோக்கத்துடன் என்னுடன் பயணியுங்கள். 

தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Sunday, March 23, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 10

காரின் ஆடியோவில் வேத மந்திரம் ஒலிக்க.. இரண்டு பக்கமும் இயற்கை விரிந்தோங்கி இருக்க...140 கிலோமீட்டர் வேகத்தில் எங்கள் கார் பயணித்துக் கொண்டிருந்தது.

துவாபர யுகம் துவங்கி ஞானிகளே சாரதிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். மலைகளில் நடந்து பயணித்த களைப்பில் ராம தாஸியும் சுப்பாண்டியும் உறங்கிவிட்டார்கள்.

ஜிபிஸ் காட்டும் திசையில் நான் வேத மந்திரங்களை கேட்டபடியே ஓட்டிவந்தேன். ஒரு 70 கிலோமீட்டர் பாலைவனத்தில் ஓட்டி இருப்பேன். 

சுற்றிலும் வெளி...என்றால் கட்டிடங்களோ, மலைகளோ, கற்களோ இல்லை.. மைதானம் போல பரந்து விரிந்த சமவெளி போன்ற இடத்தில் சிறு செடிகள் மட்டும்... பறவைகளோ, விலங்குகளோ, பூச்சிகளோ எதுவும் இல்லை...வேற்று கிரகம் போன்ற உணர்வு...இப்படி ரசித்தபடியே வந்த எனக்கு திடீரென தார் சாலை முடிந்து வெறும் மண் சாலை மட்டுமே தொடர்ந்து வந்தது  நெருடலாக இருந்தது. 

வழிகாட்டும் ஜிபிஸ் கருவியை பார்த்தேன். நேராக போக வேண்டும் என சொல்லியது. இன்னும் விரைவாக ஆக்ஸிலேட்டரை அழுத்தினேன். மண் தளத்தில் சமவெளியில் கார் தூசியை கிளப்பிய வண்ணம் பறந்தது. மேலும் 10 கிலோமீட்டர் சென்று இருப்பேன். கார் ஒரு அடி கூட நகரவில்லை. அப்படியே நின்றுவிட்டது. மண் தரையில் நாலு சக்கரங்களும் புதைந்து பெரும் தூசி மண்டலத்தை கிளப்பிவிட்டு உறுமிக்கொண்டே கார் நின்றது.

சப்தம் கேட்டு விழித்த ராம தாசியும் சுப்பாண்டியும் என்னை மேலும் கீழும் பார்த்தனர்.

வண்டியை விட்டு இறங்கி நானும் சுப்பாண்டியும் தள்ள ராம தாசி வண்டியை எடுக்க முயற்சி செய்தார். ரெண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் மெல்ல பின்னோக்கி வந்து சம தளத்தில் ஏறி நின்றது.

காரை மண் குழியிலிருந்து மீட்க போராடியதில் பெட்ரோல் முழுவதும் தீர்ந்து பெட்ரோல் காட்டும் கருவியின் முள் E என்ற பகுதியை காட்டி எங்கள் விதியுடன் சேர்ந்து ஈ என இளித்தது.

ஜிபிஎஸ் கருவி தவறான வழிகாட்டி விட்டது என்பதை உணரும் பொழுது இருள் சூழ துவங்கியது. அத்தனை நேரம் கொழுத்திய 30 டிகிரி வெயில் சடாரென குறைந்தது. குளிர் அடிக்கத் துவங்கியது. இரவில் குளிர் -5 டிகிரிக்கு செல்லும் என ராமதாஸி சொல்லி பீதியை கிளப்பினார்.

குளிருக்கான உடை கைவசம் இல்லை. அது சுப்பாண்டி புறப்படும் பொழுதே தூக்கி வீசிவிட்டு வந்துவிட்டான். காரில் இருக்கும் ஹீட்டரை போட வழியில்லை காரணம் எரிபொருள் தீர்ந்துவிட்டது.

திரும்ப 80 கிலோமீட்டர் நடந்து சென்றால் தான் உண்டு. அதற்குள் குளிரிலோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ சுருண்டு விழுந்து இறந்து விட வாய்ப்பு உண்டு. கைவசம் உணவும் தண்ணீரும் இல்லை.

இப்படி யோசனையில் இருக்கும் பொழுது  சுப்பாண்டி டென்ஷனுடன் ,“ இதுக்கு தான் சாமி ஜீபிஸ் எல்லாம் நம்பி வரக்கூடாதுனு சொல்றது. பாருங்க எப்படி வந்து மாட்டீட்டோம்...நாம் செத்தா கூட யாருக்கும் எங்க இருக்கோம்னு தெரியாது” என புலம்ப துவங்கினான்.

புறப்படும் பொழுது, “கடவுள் வழிகாட்டாத இடத்திற்கும் இந்த ஜிபிஸ் வழிகாட்டும்,” என சுப்பாண்டி சொன்னதன் அர்த்தம் தெளிவாக புரிந்தது. 

காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து கலக்கத்துடன் யோசனையில் ஆழ்ந்தேன்.

ஐந்து நிமிடம் கூட கடந்து இருக்காது...

“என்ன சாமி இப்படி உட்கார்ந்தா போதுமா? என்ன செய்ய போறோம்னு சொல்லுங்க.. எனக்கு வேற பசிக்குது... எப்பவும் ஆண்டவன் காப்பாத்துவான்னு சொல்லுவீங்களே...காப்பாத்த சொல்லுங்க சாமி” என சுப்பாண்டி கலவரத்திலும் கிண்டல் செய்தான்.

பசி......இயலாமை....சோர்வு.....மற்றும் குழப்பத்துடன் மூன்று பேரும் காருடன் நிற்க...சூரியன் தன் பணி முடிந்து மறைய...எங்கும் இருள் சூழ்ந்தது....!


(அன்பு பெருகும்)

Monday, February 24, 2014

ஆனந்த அனுபவங்கள் பகுதி 2

ஆனந்த அனுபவங்கள் என்ற தலைப்பில் என் மாணவர்களின் ஆன்மீக அனுபவங்களை சென்ற பதிவில் தொகுத்திருந்தேன். அது இங்கே.. 

மேலும் காசி பயணம் பற்றி சில மாணவர்கள் எழுதியவைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.


திருமதி.சாயனதேவி சச்சின் - அவர்களின் அனுபவ பகிர்வு. இவர் முதன் முதலில் கட்டுரை எழுதுகிறார் என சொல்வதை நம்புவது கடினம். சரளமான நடையும் , கூட்டி செல்லும் பயண அனுபவமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

கட்டுரை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


திருமதி. பாபி நாராயணன் & அருண் - சென்ற ஆண்டு கும்பமேளாவில் ஒரு மாதமும், இந்த முறை காசி பயணத்திலும் கலந்துகொண்டவர்கள். எளிய நடையில் அனுபவத்தை கடத்தும் எழுத்து இவர்களுடையது.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

திரு.சரவண பாண்டி 
- கோவையில் வசிக்கும் இவரின் கன்னி பேச்சு போன்று மழலை நிறைந்த கட்டுரையில் தன் வெண் மனசு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறார். பசுமையான பாமர எழுத்துக்கு இவரின் கடிதம் உதாரணம். அவரின் கையெழுத்திலேயே பதிவேற்றம் செய்துள்ளேன்.

கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பங்கு சந்தை ஜோதிடம்


Monday, February 17, 2014

ஆனந்த அனுபவங்கள்...!

சென்று ஆண்டு கும்பமேளா மற்றும் அருணாச்சல திருபயணம் ஆகியவையும், இந்த ஆண்டின் துவக்கத்தில் காசி திருப்பயணமும் பல்வேறு மாணவர்களுடன் சென்று வந்தோம்.

இதில் பங்குபெற்றவர்கள் தங்களின் வலைபக்கத்திலும் தனிப்பட்ட முறையிலும் அவர்களின் அனுபவங்களை எழுதுகிறார்கள். ஆன்மீக ரீதியாகவும், தனிப்பட்ட நிலையிலும் அவர்கள் அனுபவித்த கண்டு உணர்ந்த விஷயங்கள் உங்களையும் பரவசப்படவைக்கும். 

அவர்களின் அனுபவத்தை வெளியிடுவதற்கு ஒரு முறை படித்தவுடன் நானும் அச்சூழலை மீண்டும் கண்டு களித்தது போல இருந்தது. முழு விழிப்புணர்வுடன் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது இவர்களின் எழுத்து காட்டியது.

அருணாச்சல மலை ஏற்றம் : 

சிங்கப்பூரை சேர்ந்த பாலா அவர்களின் அற்புத அனுபவம் :) இனி அருணாச்சல மலை ஏற என்னுடன் வருபவர்களுக்கு எச்சரிக்கை விடும் அனுபவம். படிக்க இங்கே க்ளிக் செய்யவும் : அனுபவம்-1

கும்பமேளா :

ஷங்கர் மற்றும் அகநாழிகை பொன்வாசுதேவன் ஆகிய இருவரும் கும்பமேளாவில் என்னை வந்து சந்தித்தனர். ஷங்கர் அவர்கள் பார்வையில் கும்பமேளா..  அனுபவம் 2

காசி திருபயண அனுபவம் :

திருமதி .விஜி ராம் அவர்களின் காசி பயண அனுபவங்கள் தொடராக இந்த சுட்டியில் படிக்கலாம். அனுபவம் 3

திரு.சுப்பிரமணியன் மற்றும் திருமதி.கோமதி ஆகியோர் தம்பதிகளாக காசி பயணம் வந்தனர். அவர்களின் அனுபவம் பெரும் பிரவாகமாக இங்கே அனுபம் 4

Monday, January 20, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 9

இந்தியாவில் உள்ள இமாலய மலை தொடர்களில் நிறைய வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. குளிரின் நடுவே அத்தகைய வெந்நீர் ஊற்றுக்களில் குளித்தால் ஏற்படும் அனுபவம் சுவையானது.

ஆனால் இங்கே ஆண்டிஸ் மலைத்தொடரில் இருக்கும் வெந்நீர் ஊற்றை காண சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வெந்நீர் ஊற்றுக்கள் கந்த அமிலத்தால் ஆனது. கந்த அமிலத்தின் புகையும் அதன் கரைசலும் பாறைகளில் கலந்து ஓடிவருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இதில் மக்கள் குளிக்கும் வண்ணம் இந்த கந்தக ஊற்று குகையில் ஓர் ஹோட்டல் வைத்திருந்தார்கள் என கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

கந்தக நீர் ஊற்றுக்கு அருகே கந்தக படிமங்களால் ஆன ஓர் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் முன்பு மக்கள் நடந்து சென்று குகையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் தற்சமயம் அதன் பலம் குறைந்ததால் அதன் மேல் மக்கள் நடக்க அனுமதி இல்லை. இந்த வெந்நீர் ஊற்றின் அருகே வாழும் உயிரினங்கள் தங்கள் இயற்கையான குணத்தை மாற்றிக் கொண்டு வெப்பத்தை தாங்கும் வண்ணம் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இச்செயலை டார்வின் கண்டறிந்து பரிணாம கொள்கையை கண்டறிந்திருக்கிறார்.

சார்லஸ் டார்வின் என்றவுடன் பலர் அவரை ஓர் விஞ்ஞானியாகவே கருதுகிறார்கள். அவர் ஓரு கிருஸ்துவ மத ஆய்வாளராக பணியாற்றியவர். பரிணாம கொள்கை அவர் இருந்த மதத்திற்கு எதிரானதாக கருதி அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தனர். அவர் ஓர் சிறந்த ஓவியரும் கூட. இந்த இயற்கை சூழலை தன் கைப்பட வரைந்தும் இருக்கிறார். அவர் வரைந்த ஓவியம் அருகே இருக்கும் ஓர் தங்கும் விடுதியில் இருந்தது. அதை கண்டு களித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அவர் கண்ட காட்சிகளை எல்லாம் அவர் ஓவியமாக பதிவு செய்தார். 

இப்படி சுவாரசியமாகவும் அறிவு தளத்திலும் பயணம் சென்றுகொண்டிருந்தது. அடுத்து நாங்கள் வான ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இந்த இடத்திலிருந்து ஜஸ்ட் 300 கி.மீட்டர்தான் என்றார்கள். வழக்கம் போல GPS-ல் வழித்தடத்தை சரி செய்துவிட்டு நான் ஓட்டத்துவங்கினேன்.

செல்லும் வழியில் ஓர் செக் போஸ்ட் எதிர்பட அங்கே இருந்த காவலர் வண்டியை ஓரங்கட்டினார். இந்தியாவில் இப்படி ஓரம் கட்டினால் நாம் இறங்கி அருகே இருக்கும் மரத்தின் பக்கம் சென்று யாருக்கும் தெரியாமல் காந்தி படத்தை அளித்தால் காவலரும் நாட்டுப்பற்றுடன் தேச தந்தையை வணங்கி வழியனுப்பி வைப்பார். அர்ஜண்டினாவில் என்ன சம்பிரதாயம் என தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருக்க அவர் அருகே வந்து செம்மொழியாம் ஸ்பேனிஷ் மொழியில்  “ஏதேனும் பழங்கள் வைத்திருக்கிறீகளா?” என கேட்டார்.

இவர் ஏன் பழங்களை பற்றி கேட்கிறார். இவங்க ஊரில் இது ஏதோ லஞ்சம் கேட்கும் சங்கேத பாஷையோ என நினைத்து, என் மாணவி ராமதாஸியை கேட்க, அவர் எனக்கு விளக்கம் அளித்தார். அர்ஜண்டினாவின் மாநிலங்கள் சுயாட்சியில் இயங்குவதால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பழம் காய்கறிகளை தனி நபர்கள் கொண்டு செல்லுவதற்கு தடை செய்து இருக்கிறார்கள். மேலும் சுகாதரம் கருதியும் சில நோய் தடுப்பு காரணத்தால் இந்த தடை அங்கே விதிக்கப்பட்டிருக்கிறது என விளக்கினார். அந்த போலீஸ்காரரரிடம் சுப்பாண்டியை காண்பித்து இந்த ஞானப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை என்றேன். 

காரின் உள்ளே சோதனை செய்துவிட்டு ரெண்டு அடி திரும்பி நடந்தவர், மீண்டும் திரும்பி.... கார் ஓட்டிக்கொண்டிருக்கும் என்னை பார்த்து, இவரை பார்த்தால் நம் நாட்டுக்காரர் போல தெரியவில்லையே, லைசன்ஸ் இருக்கா? என்றார். நான் சுப்பாண்டியை பார்க்க சுப்பாண்டி என்னை பார்க்க, நிலமையை புரிந்து கொண்டது போல ராம தாஸியும் காரைவிட்டு இறங்கி போலிஸ்காரரை தனியாக  கூட்டு சென்று ஏதே ஸ்பேனீஷில் விளக்கி கொண்டிருந்தார்.

சில நிமிடம் கழித்து ஒன்றும் புரியாமல் நான் ராமதாஸியிடம் விபரம் கேட்க, உங்களிடம் லைசன்ஸ் இல்லை, ஆனால் இவர் ஒரு பெரிய ஸ்வாமி, அதனால் லைசன்ஸ் கேட்காதீர்கள் என விளக்கி கொண்டிருந்தேன் என்றார். நான் புன்சிரிப்புடன் என் பையில் இருந்து இண்டர்நாஷனல் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து காண்பித்தேன். உலகின் குடியரசு மொத்தம் 249 குடியரசு நாடுகளில் 210 நாடுகளில் வாகனம் ஓட்டும் அனுமதி வாங்கி இருப்பார் என அந்த போலீஸ்காரர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ராமதாஸியும் மகிழ்ச்சியுடன் இவரிடம் லைசன்ஸ் இருப்பது எனக்கு தெரியவில்லை என போலீஸ்காரரிடம் கூறி அவரிடம் இருந்து விடைபெற்று கிளம்பினோம்.

மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம், “என்னிடம் லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என தெரியாமல் எப்படி என்னை கார் ஓட்ட அனுமதித்தீர்கள்?” என ராம தாஸியிடம் கேட்டேன்.  “நீங்கள் என் குரு, உங்களுடன் பயணம் செய்வது என்பது மட்டுமே என் எண்ணம், எல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என வந்துவிட்டேன்.  நான் அந்த போலீஸ்காரரிடம் பேசும் பொழுது கூட என்னை சட்டத்திற்கு புறம்பாக செல்ல விடாமல், லைசன்சுடன் நீங்கள் நிற்கிறீர்கள் பார்த்தீர்களாஸ்வாமிஜி...என்றார்.  

இப்படி ஓரு சரணாகதி நிலையில் எனக்கு ஒரு சிஷ்யையா? என்ன சொல்லுவது என தெரியாமல் பயணத்தை தொடர்ந்தேன்.

சில கி.மீட்டர் பயணித்திருப்போம், 

“ஸ்வாமிஜி இத்தனை நாள் ஓம்-காரா இருந்த நீங்க இப்ப அர்ஜண்டினாவில் அப்கிரேட்யிட்டீங்களே” என சுப்பாண்டி காட்டிய திசையில் பார்த்தால் அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. அதன் பெயர்....ஓம் பஸ்...!



இப்படியாக எங்கள் பயணம் நகைச்சுவையுடன் நகர்ந்தாலும் இனி சில கிலோமீட்டர்களில் கலவரம் காத்திருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது...

(அன்பு பெருகும்) 

Sunday, January 5, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - பகுதி 8

 முழங்கால் அளவு இருக்கும் பெரிய காலணிகள். கயிறுகள் மற்றும் உலர் பழங்கள் என நானும் சுப்பாண்டியும் எங்கள் பையில் திணித்துக் கொண்டோம்.

உலகின் இரண்டாவது பெரிய சிகரம் மற்றும் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய சிகரம் என்றால் சும்மாவா? மலையேற்றங்களும் பாறையில் லாவகமா ஏறுவதை பயிற்சி செய்திருப்பதால் சமாளித்துவிடலாம் என நினைத்து கிளம்பினோம்.

வில்லிபுத்ரர் எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு அவரின் ஆசிரியர் பணிக்கு சென்றுவிட்டார். மலைச்சிகரம் மிக அருகே என்றார்கள். விசாரித்ததில் 150கி.மீ. தூரம். இங்கே 200 , 300 கி.மீ எல்லாம் அருகே என்கிறார்கள். அரை மணி நேர பயணம் தான் என அவர்கள் குறிப்பிட்டாலே 200 கிமீ. என புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஞானம் பின்னர்தான் கிடைத்தது. சென்னைக்கு மிக அருகே என விளம்பரப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொஞ்சமும் சளைக்காதவர்கள்.


மலைஏற்றம் என்பதால் இம்முறை ராமதாசியை கார் ஓட்ட சொல்லிவிட்டு நானும் சுப்பாண்டியும் பின் சீட்டில் அடைக்கலமானோம். பின்ன இரண்டாவது சிகரம் ஏறுவதற்கு ஆற்றலை சேமிக்க வேண்டாமா? கார் ஓட்டி வீணாக்கினால் அப்புறம் மலை ஏற ஆற்றல் வேண்டாமா?

சுற்றிலும் பல்வேறு வண்ணங்களில் மலைத்தொடர்கள். அகண்ட சாலைகள் , தூய்மையான காற்று என பயணம் துவங்கிய சில மணி நேரத்தில் நானும் சுப்பாண்டியும் தூங்கிப்போனோம்.

சில மணி நேர பயணத்திற்கு பின் வாகனம் நின்றது. நாங்களும் கண் விளித்தோம். அவசர அவசரமாக தூக்க கலக்கத்துடன் எழுந்த எங்களை ராமதாசி அசுவாசப்படுத்தினார். பின்னர் காரின் வலதுபக்க கண்ணாடியை இறக்கி ஸ்வாமி இதோ நாம் சிகரத்தின் அருகே வந்துவிட்டோம் என ஜன்னல் வழியாக கண்பித்தார்.

சிகரத்தின் அருகே சென்று பார்க்கும் வரை சாலைகள் அமைத்திருக்கிறார்கள். மலை ஏறவோ பாறைகளில் கயிறு கட்டி ஏறவோ தேவையில்லை...! சிகரத்தை கண்டு ரசிக்கவும் அதன் மேல் செல்லவும் கேபிள் கார்கள் உண்டு. கார் நிறுத்தும் இடத்தில் நாம் பசியாற பிசா முதல் அனைத்து உணவும் கிடைக்கும் வகையில் உணவகங்களும் உண்டு. மலையேற்றத்திற்கு நாங்கள் கொண்டுவந்த கயிறையும் உலர் பழங்களையும் நைசாக மறைத்துவிட்டு...ராமதாசியுடன் சென்றோம். நாம் அசிங்கப்படுவது இது முதல்முறையா என்ன? :))

கேபிள் கார் பவனி வரும் இடம்.

மலையின் உச்சியை அடையும் ஒற்றையடி பாதை. (படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்த்தால் ஒரு ஆரஞ்சு கலர் உடையுடன்
பொடியாக ஒர் உருவம் தெரியும்)

அர்ஜண்டினாவின் உணவில் மாமிசம் இல்லாமல் பெற்றுக்கொண்டு, உணவகத்தின் வாசலில் அமர்ந்து சிகரத்தை ரசித்தவாறே சாப்பிட்டோம். பிறகு மெல்ல நடந்து சிகரத்தின் அருகே சென்று கண்டு களித்தோம். பிரம்மாண்ட மலைக்கு அருகே நம்மை கொண்டு செல்லும் பொழுது நாம் சிறு துரும்பு நம்மை நினைக்க வைக்கிறது இயற்கை. ஆணவம் அழிந்து பிரபஞ்ச துகளாக நாம் நம்மை அறியும் தருணம் அது. 

அடுத்து நாங்கள் செல்ல திட்டமிட்ட இடம் மிகவும் முக்கியமானது. பரிணாம கொள்கையை ஆய்வு செய்ய சார்லஸ் டார்வின் தென் அமெரிக்காவின் பல இடங்களில் முகாம் அமைத்தார். அதில் ஓர் வென்னீர் ஊற்றுக்களுடன் இருக்கும் இயற்கை சூழ்ந்த இடம் அது. அங்கே செல்லும் வரை ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமே என  நினைத்திருந்த டார்வினின் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்த பயணம் அது.

சிகரத்தின் உச்சியில்...

(அன்பு பெருகும்)




Friday, January 3, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து பகுதி 7

வில்லிபுத்திரரின் கவனிப்பில் மகிழ்ந்து அவரின் இல்லத்தில் அந்த மாலை உணவருந்தி விட்டு இரவு உறக்கத்திற்கு முன் வீட்டுக்கு வெளியே வந்தால் 5 டிகிரி குளிர். மாலை வரும் பொழுது 30 டிகிரி வெயில் அதன் சுவடே இல்லாமல் உறங்க போயிருந்தது.

வீட்டின் வெளியே அக்னியை மூட்டி அதன் அருகே அமர்ந்திருந்தார் வில்லி. மேலே நட்சத்திர மண்டலங்கள் தெளிவான ஒரு காட்சியை காட்டிக்கொண்டிருந்தன.

வில்லியின் வாழ்க்கை தன்மையையும் அவரின் ஆன்மீகத்தை பற்றியும் கேட்க அவர் தனது கதையை ஸ்பானீஷ் மொழியில் விளக்கினார். 

ஒரு சாதாரண டிஸ்கோ கிள்ப் மேலாளராக இருந்தவர் பத்து வருடம் முன் இந்தியாவுக்கு வந்து சாயிபாபாவை சந்தித்து இருக்கிறார். அவருக்கு உள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டு தன் பணிகளை துறந்து தனிமையில் தன்னை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார். டிஸ்கோ மேலாளராக இருக்கும் பொழுது பொருளாதார நிலையில் உயரத்தில் வாழ்ந்திருக்கிறார். பிறகு அவரின் இம்மாற்றம் மிக சராசரிக்கும் கீழ் வாழ வைத்திருக்கிறது. அருகே ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுக்கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார்.

சாய் பாபாவை தனது மனதில் குருவாக கொண்டு ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், அனைத்து இந்திய ஆன்மீக நூல்களையும் கற்று, சைவ உணவு பழக்கத்தில் இருந்து கொண்டு ஆன்மீக நிலையை உணர தனது வாழ்க்கையை மாற்றுக்கொண்டு இருக்கிறார் என தெரிய வந்த பொழுது ஆச்சரியம் அடைந்தேன்.

சாய்பாபாவின் மேல் பல முரண்பட்ட கருத்துக்கள் பலர் கொண்டுருந்தாலும் இத்தகைய மனிதர்களின் உள் தன்மையை மாற்றம் செய்ததற்கு அவரை நாம் பாராட்டலாம்.


சில வருடம் முன் இந்தியா சென்ற வில்லி புத்திரரின் தோழர் ஒருவர் அங்கிருந்து இந்திய கடவுளின் சிலையை கொண்டுவந்திருக்கிறார். வில்லி புத்திரரும் அவர் தோழரும் இணைந்து கோவில் போன்று ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைத்திருக்கிறார்கள்.

அதிகாலையில் நீங்கள் கோவிலை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காரணம் இயற்கை முறையில் கட்டபட்ட வில்லிபுத்திரரின் வீட்டில் மின்சாரம் இல்லை. சூரிய ஒளியில் இயங்கும் பல்ப் மட்டுமே இருக்கிறது.

சூரிய ஒளிவராத ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் ஒருவர் சூரிய ஒளி பல்ப் வைத்திருக்கிறார். ஆனால் நாம் இந்தியாவில் முழுமையான சூரிய ஒளி கிடைத்தும் அதை வீணாக்குகிறோம் என்பதை உணர்ந்து வெட்கமடைந்தேன்.

அதிகாலை புலர்ந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்ததும் நான் கண்ட காட்சியை மொழியாலும் வார்த்தையாலும் விவரிக்க முடியாது.

சுற்றிலும் மலைத்தொடர் பல்வேறு வண்ணங்களில் ஒரு புறம் சூரியன் மறுபுறம் சந்திரன். சிறிய ஓடையின் ஓசை...சுற்றிலும் சமவெளி என ஓர் கனவு உலகில் வாழ்வதை போல இருந்தது.

வில்லி புத்திரர் கட்டிய கோவிலுக்குள் நிழைந்தால் அங்கே பாராசக்தி இருக்கிறார். பர்வதம் என்ற மலை சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இவள் இங்கே பார்வதியாகி காட்சி தருகிறாள்.

வெறும் காட்சி பொருளாக இருந்த அம்பிகையை ப்ராண பரதிஷ்டா என்ற முறையில் ஆற்றல் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு வழிபாட்டு முறைகளையும் வில்லிக்கு சொல்லிக்கொடுத்தேன்.

தனது குரு பத்து வருடத்திற்கு முன் யோக வாசிஷ்டத்தை கையில் கொடுத்து, அம்பிகைக்கு கோவில் கட்டு, உன்னை தேடி இந்தியாவிலிருந்து ஒருவன் வந்து அம்பிகையின் ஆற்றலை உணர்த்துவார் என சொல்லி அனுப்பினார் என வில்லி சொன்னதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. நீங்களும் தயவு செய்து நம்பாதீர்கள்.

எளிய காலை உணவுக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய மலை சிகரத்தை காண காரை முடுக்கினோம்.

அக்கோன்காகுவா .....இது தான் அந்த சிகரத்தின் பெயர்...

(அன்பு பெருகும்)