Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, December 31, 2011

மஹா யாகம்

மஹா யாகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Friday, December 16, 2011

திரிகுண ரஹஸ்யம் - பகுதி 2

இந்திய சித்தாந்தங்கள் கூறுவதில் இறைவனின் செயல் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். இச்செயலில் தலைவனாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என பிரிக்கிறார்கள். இவ்வாறு இறை நிலை தன் தன்மையை மூன்றாக பிரித்தால் தான் உருவ நிலைக்கு வர முடியும்.

குணமற்ற நிலையில் இருப்பதை நிர்குணம் என்கிறோம். மூன்று குணங்களும் இல்லாமல் இறைவன் நிர்குண பிரம்மமாக இருந்து பிறகு தன் செயலால் முக்குண நிலையை அடைகிறார். எப்பொழுது பிரம்மம் திரிகுண நிலைக்கு வருகிறதோ அந்த நொடியே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது.

இந்திய கலாச்சாரத்தில் ஆறு வகை சமயம் (ஷண்மார்கம்) என கூறும் பிரிவுகளில் ஓவ்வொரு சமயமும் மூன்று தன்மையுடனேயே விளங்கிகிறது.

கணபதியம் என்ற விநாயகர் வழிபாட்டில் அவர் சித்தி-புத்தியுடன் மூன்று எண்ணிக்கையில் இருக்கிறார்.

கெளமாரம் என்ற சுப்ரமணியர் வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் முருகனையும், வைணவ முறையில் பூமி நீளா சமேத பெருமாளாகவும், சாக்த முறையான அம்பாள் வழிபாட்டில் லக்‌ஷ்மி, சரஸ்வதி, பார்வதியாகவும் மூன்று எண்ணிக்கையாக இறைவனை வணங்குகிறார்கள். சைவர்கள் சிவன், மஹேஸ்வரன், ருத்திரன் என்ற மூன்று நிலையில் சிவனை வணங்குகிறார்கள். சூரிய வழிபாடு செய்பவர்கள் சாயா மற்றும் மாயாவுடன் ஆதித்தியனான சூரியனை வணங்குகிறார்கள்.

சமணர்களிலும், ஜைனர்களில் கொள்கையும் மூன்று எண்ணிக்கையில் இருந்து திரிகுணத்தை பிரதிபலிக்கிறது.

கிருஸ்துவ வழிபாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியாக முக்குணங்கள் வெளிப்படுகின்றன.

இவ்வாறு உலக மதங்கள் மூக்குணங்களை கொண்டிருக்கின்றன. எனினும் சில மதங்கள் முக்குண பேதமில்லாமல் நிர்குண பிரம்மத்தை கூறினாலும், அதை பின்பற்றுபவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து திரிகுணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இறைவனில் இந்த முக்குண நிலை அந்த முக்குணத்துடனே பெருக்கம் அடைவதால் நவக்கிரகங்கள் உருவாகிறது (3X3=9). அந்த நவ நிலையுடன் மீண்டும் திரிகுண பெருக்கம் ஏற்படுவதால் நட்சத்திர மண்டலம் ஏற்படுகிறது (9X3=27).

நவக்கிரகங்களாக வெளிப்பட்ட திரிகுண தொடர்ச்சியாக நவ ரசங்கள், ரத்தினங்கள் என உலகியல் பொருட்கள் வகைப்படுத்தப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்ல ஏனைய சாஸ்திரங்கள் இந்த மூன்று நிலை சார்ந்தே இருக்கிறது.

கால நிலையில் கூட ஆறு காலங்கள் (ருது) முக்குணத்திற்கு இரண்டு என்ற வீதத்தில் இயங்குகிறது. காலை, இரவு மற்றும் சந்தியாக்காலம் என ஓர் நாள் மூன்று தன்மையை கொண்டதாக இருக்கிறது.

நம் உண்ணும் உணவு முறை காலை உணவு சாத்வீகத்தையும், மதிய உணவு ரஜோ குணத்தையும் இரவு உணவு தமோ குணத்தையும் காட்டுகிறது. உணவின் தன்மையில் எளிமையான உணவுகள் சாத்வீகத்தையும், மசாலா-கார உணவுகள் ரஜோ குணத்தையும், பழைய உணவுகள் மற்றும் அசைவம் தமோ குணத்தையும் வெளிப்படுத்துகிறது.

திரிகுண நிலை பற்றி போதிய அளவுக்கு தெளிவு பெற்றோம். இம்மூன்று குணத்தில் எத்தகைய குண நிலை சிறந்தது என முன்பு பார்த்தோம். சாத்வீக நிலை அனைவருக்கும் பொதுவானதாகவும் துன்பம் விளைவிக்காத நிலையும் கொண்டது என்றாலும் சாத்வீக நிலையிலேயே எப்பொழுதும் இருப்பது சாத்தியமா என சிந்திக்க வேண்டும்.

அப்படியானால் எந்த குணத்தில் இருந்தால் நல்லது?

(தொடரும்)

-------- தமோ குணம் / திரிகுணம் (2/3)--------