Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, February 26, 2017

சிவனின் கண்ணீர்..!


சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்கும் நோக்கத்தில் ஒருத்தர் வந்திருப்பதாக சொன்னார்கள்.

புதிய இளைஞர் வந்திருந்தார். முதல் சந்திப்பிற்கு உண்டான பணிவுடன் வணக்கம் சொல்லி அமர்ந்தார். என்ன விஷயமாக சந்திக்க வந்தார் எனக்கேட்டேன்.

இனி எங்களுக்குள் நடந்த கலந்துரையாடல் இங்கே...

 “ஸ்வாமிஜி, எனக்கு ருத்ராக்‌ஷ மாலை வேண்டும். இங்கே கிடைக்கும் என என் நண்பர் சொன்னார்.”

“ஓ அப்படியா? கண்டிப்பாக வாங்கிக்கலாம். அதுக்கு முன்னாடி ஏன் ருத்ராக்‌ஷ மாலை வாங்கறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் சிவ பக்தன் ஸ்வாமி, சிவராத்திரி அன்னைக்கு பூஜை செஞ்சு போட்டுக்கலாம்னு வாங்க வந்தேன்”

”ரொம்ப நல்லது. கையில என்ன வச்சிருக்கீங்க?”

“இதுவா? ஐபோன் ஸ்வாமிஜி”

“நீங்க ஸ்டீவ்ஜாப் பக்தரா?...இதை எதுக்கு வச்சிருக்கீங்க?”

“என்ன ஸ்வாமி இப்படி கேக்கறீங்க?.. இது பேசரதுக்கு”

“நீங்க புரிஞ்சுக்க்கணும்னு தான் இப்படி கேட்டேன். சிவ பக்தரா மட்டும் இருந்தா போதுமா? ருத்ராக்‌ஷம் எதுக்கு பயன்படுது?”

சிறிது யோசனைக்கு பிறகு....

“அதுவா சாமி ......நல்ல எண்ணம் வரும், நம்மை சுத்தி தீட்டு இருக்காது. கெட்டவங்க வைப்ரேஷன் நம்ம கிட்ட வராது. ஒரு விதத்தில் நம்மை காப்பாத்தும்”...

ஓ......நல்ல எண்ணம், கெட்டவங்க வைப்ரேஷன்....தீட்டு...... அப்ப இவரு ஏன் அதை போட்டுருக்காரு?  இவருக்கும் நல்ல எண்ணம் வரணும்னு போட்ருக்காரா? என நான் இந்த படத்தை காட்டினேன்...

”?!?!”

மிகக்குழப்பத்துடன்...என்னை பார்த்தார் அந்த இளைஞர்.

தம்பி ருத்ராக்‌ஷம் எதுக்கு அதன் பயன்பாடு என்ன என தெரிஞ்சு பயன்படுத்தனும்.  சிவ பக்தர் சொல்லிட்டு பயன்படுத்தறது, சினிமாவில் ஹீரோ போட்ட ட்ரஸ்னு வாங்கி போட்டிருக்கற மாதிரி ஒரு செயல். அது சிவனையும் பக்தியையும் அசிங்கப்படுத்தும்.

ஒரு உயிர்த்தன்மை இல்லாத ஐ போன் வாங்கும் போதே இது என்ன என்ன வசதிகள் , செயல்பாடுகள் இருக்குனு பல மணி நேரம் செலவிட்டு , எந்த செல்போன் நல்லா வேலை செய்யும்னு யோசிச்சு வாங்கும் நீங்க, ஆன்மீக விஷயம் மட்டும் ‘நல்ல வைப்ரேஷன்’ சொன்னா கண்ணை மூடிட்டு வாங்கறீங்களே.. இது நியாயமா?

ஆனா ஒன்னு தம்பி....உங்களை மாதிரி சிவனை நோகடிக்கிறவங்கங்க ஊருக்குள்ள பலர் இருக்காங்க...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!

எப்படி ஸ்வாமி? புரியலையே...

ருத்ரனின் ஆக்‌ஷம் - சிவனின் கண்ணீர் தான் ருத்ராக்‌ஷம்னு சொல்லுவாங்க. உங்களை மாதிரி ஆட்களை பார்த்து அவருக்கு நிறைய கண்ணீர் வரும்...அதனால நிறைய ருத்ராக்‌ஷம் கிடைக்கும்...!
ஸ்வாமி என்னை வெச்சு விளையாடறீங்கனு நினைக்கிறேன். ருத்ராக்‌ஷத்தை பத்தி நல்லா தெரிஞ்சுட்டு வந்தே நான் வாங்கிக்கிறேன் எனொல்லி விடெற்றார்.
 
ஆன்மீகத்ற்றி ெரிய இளர்கைவிட.. ஆன்மீகத்ை அறைகுறையாக ற்றத்ைய இளர்கால் நம் காச்சாரத்ின் ‘வைப்ரன்’ கெட்டுப்போகிறு...!

 இப்படியாக அன்று ஆதிசிவன் திருவிளையாடல் நிகழ்த்தினார்... 

Saturday, February 18, 2017

சிவனுக்கும் யோகத்திற்கும் என்ன சம்பந்தம்?

 
யோக சாஸ்திரத்தின் மூலமாக சிவன் இங்கே நிறுவப்படுகிறார். இன்னும் சில தினங்களில் வரலாறு உருவாக்கப்பட உள்ளது. ஆதி யோகி சிவன் அவர் தான் அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்தவர் என கதை சொல்லப்படுகிறது. சப்த ரிஷிகள் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தை உலகிற்கு சொன்னார்கள் என கதை விரிவடைகிறது. 

எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்கள் கதையை மெருகேற்றுங்கள். உங்கள் செயல் எத்தகையதாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் யோக பாரம்பரியத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க முயன்றாலோ களங்கப்படுத்த நினைத்தாலோ என்னால் கடந்து போக முடியாது...!

இங்கே சில கேள்விகள் எழுப்புகிறேன். அது மக்களின் விழிப்புணர்வை தூண்டட்டும். இந்த கேள்விகளுக்கு ’நீங்கள்’ தயவு செய்து பதில் சொல்ல வேண்டாம். உண்மையான யோக சாஸ்திரத்தின் விதையான முதல் குரு பதில் சொல்வார்... பொறுத்திருப்போம்!


1) சிவன் தான் ஆதி குருவாக யோக சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தார் என்றால், இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களில் ஏன் யோகா சொல்லித்தரப்படுவதில்லை?

2) 108 வகையான நாட்டிய முத்திரைகளை காண்பிக்கும் வடிவம், நடராஜ ரூபமாக இருக்கும் சிவனை காண்கிறோம். ஆனால் எங்கும் யோகாசனம், ப்ராணாயாமம் செய்யும் சிவனை கண்டதில்லை.  இவர் வேறு யோக சிவன் வேறா?

3) நீங்கள் வடிவமைத்திருக்கும் ஆதி யோகி உண்மையான யோக பாரம்பரியம் என்றால் இந்தியாவில் உள்ள பாரம்பரியம் மிக்க யோக ஆசிரமங்களில் ஏன் ஆதி யோகி வடிவம் சிறிய அளவில் கூட இல்லை?

4) விஞ்ஞான பைரவ தந்த்ரா என்ற முதல் யோக நூல் தியானத்தை 112 வகையாக  கற்றுக்கொடுக்கிறது. அதன் அடிப்படையில் 112 ஆதார சக்கரங்களாக வைத்துக் கொண்டு பெரிய முகத்தை செய்திருக்கிறார்கள். அதில் உள்ள பைரவர் தான் ஆதி குருவா? பைரவர் தான் சிவனா? இல்லை வேறு வேறா?

5) அஷ்டாங்க யோகத்தில் முக்கியமாக சத்யா (உண்மை), ஆஸ்தேயா(ஆடம்பரம் இல்லாத எளிமை) ஆகிய யாம நியமங்களை அனுசரித்துதான் இந்த யோகத்தின் ஆதி குருவின் முகம் அமைக்கப்படுகிறதா?

யோக வரலாற்றை மறைத்து திருத்தி எழுத முயற்சி செய்பவர்களுக்கு என் கண்டனங்கள்.
மக்களுக்கு யோக பாரம்பரியத்தை பற்றிய தவறான விழிப்புணர்வு அளிப்பதற்கும் கண்டங்களை பதிவு செய்கிறேன்.