Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 24, 2025

இலவச ஜோதிட பயிற்சி - ஸ்வாமி ஓம்கார் ஜோதிட வகுப்புகள்

நமது கலாச்சாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று ஜோதிடம். ஒரு தனிமனிதன் உணவு, உறைவிடம் மற்றும் உடை போன்ற அடிப்படைத் தேவைகளை அடைந்த பின்னர், தனக்குக் கிடைத்த வசதிகள் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தருணத்தில்தான் ஜோதிடத்தின் தேவை உருவாகிறது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, நமது கலாச்சாரம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, கலை மற்றும் கலாச்சார உயர்வில் திளைத்திருந்தது.அக்காலத்தில் ஜோதிடம் ஒரு செழிப்பான சாஸ்திரமாக விளங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்ட காலகட்டத்தில், ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கான நோக்கம் பலருக்கு இல்லாமல் போனது. ஆனால், மக்களின் தேவைகள் ஓரளவு பூர்த்தியான பின்னர், ஜோதிட சாஸ்திரத்தின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.


ஜோதிடம் என்றும் நிலைத்திருக்கும் ஒரு சாஸ்திரமாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு ஜோதிடக் கல்வி என்பது அன்னியமாகவே இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கும் வசதிகள் இல்லாத நிலை நீடித்தது.


கடந்த 25 ஆண்டுகளாக, ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை ஜோதிடப் பயிற்சியை வழங்கி வருகிறது. இனம், நிறம், பாலினம் போன்ற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்தக் கல்வி வழங்கப்படுகிறது.


ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று, ஜோதிடத்தைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்கள் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்று, ஜோதிடத்தைப் பரப்பி வருகின்றனர்.
 

ஜோதிட அடிப்படைப் பயிற்சி கடந்த சில வருடங்களாக நேரடிப் பயிற்சியுடன், ஆன்லைன் பயிற்சியும் நடைபெறுகிறது. யூடியூப் தளத்தில் அனைத்து வகையான அடிப்படை ஜோதிடப் பயிற்சிகளும் இலவசமாகக் கிடைக்கின்றன.
யூடியூப் சேவையின் மூலம், நீங்கள் ஜோதிடப் பயிற்சியைப் பெற விரும்பினால், உங்கள் இடத்தில் இருந்தே ஆழமான ஜோதிடப் பயிற்சியைப் பெற முடியும். அதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்:
 

உயர் நட்சத்திர ஜோதிடம் - பன்னிரண்டு வகுப்புகள் (YouTube Link)

 

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12


ஜோதிட அடிப்படைப் பயிற்சியில், கிருஷ்ண மூர்த்தி பத்ததி என்ற ஜோதிட முறையும், நாடி ஜோதிட முறையான சாயா நாடியும் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
 

நாடி ஜோதிட முறையான சாயா நாடி ஜோதிடப் பயிற்சி, ஆழ்ந்த ஜோதிட அறிவு இல்லாதவர்களுக்கும் எளிமையாகக் கற்று பலன் கூறுவதற்கு உதவுகிறது. அதிகமான சூட்சமங்கள் இல்லாமல் பலன் கூறும் தன்மையே சாயா நாடியின் சிறப்பம்சமாகும்.
 

சாயா நாடியைக் கற்றுக்கொள்ள, யூடியூப் இணைப்பை இங்கே தருகிறேன்:
 

சாயா நாடி ஜோதிடப் பயிற்சி - YouTube Link
 

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

மூன்று வீடியோக்களில் நீங்கள் முழுமையாக சாயா நாடியைக் கற்று, பலன் கூறும் திறனைப் பெற முடியும். அடிப்படை ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, தனித்துவமான துறைகளில் ஜோதிடத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர் வகுப்புகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் மருத்துவத் துறையைச் சார்ந்தவராக இருந்தால், அடிப்படை ஜோதிடம் படித்த பிறகு, மருத்துவ ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டு, உங்கள் துறையில் ஜோதிடத்தைப் பயன்படுத்தலாம்.


ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை வழங்கும் உயர் துறை சார்ந்த ஜோதிட வகுப்புகளின் தலைப்புகளை இங்கே தருகிறேன்

 

  1. மருத்துவ ஜோதிடம்
  2. முண்டேன் ஜோதிடம்
  3. பங்குசந்தை ஜோதிடம்
  4. ஆன்மீக ஜோதிடம்
  5. கட்டடக்கலை ஜோதிடம்
  6. கேரள ஜோதிடம்
  7. கல்வியியல் ஜோதிடம்
  8. முஹூர்த்த ஜோதிடம்
  9. திருமணப் பொருத்தம்
  10. பிரசன்ன ஜோதிடம்
  11. வேளாண்மை ஜோதிடம்
  12. தொழில் முறை ஜோதிடம்
  13. உயர்நிலை ஜோதிடம்

அடிப்படை ஜோதிடம் கற்ற பிறகு, உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து, நேரடி அல்லது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் தகவல்களை எங்கள் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் இணைந்து தெரிந்துகொள்ளலாம்.

 

ஜோதிட கூடல்
 

பயிற்சி முடிந்த பிறகும், ப்ரணவ பீடம் அறக்கட்டளை நடத்தும் ஞாயிறு ஜோதிட கூடல் என்ற ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த ஜோதிட கூடல், கற்று முடித்த மாணவர்களுக்கான கூட்டமாகும். இதில் ஜாதக ஆய்வு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஞாயிறு ஜோதிட கூடல் என்பது முற்றிலும் இலவசமாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் எந்தவித இணைய கட்டணங்களும் இல்லை. இந்த ஜோதிட கூடல் நிகழ்வு கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


உயர் வகுப்புகள் மற்றும் அடிப்படை வகுப்புகளில் கலந்துகொள்ளவும், அது பற்றிய தகவல்களைப் பெறவும், டெலிகிராம் மூலம் எங்களுடன் இணையுங்கள்.

* டெலிகிராம் குழு *

ஏப்ரல் 2025 முதல் பல்வேறு ஜோதிடப் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. உங்களை இணைத்துக்கொள்வதன் மூலம், சிறந்த ஜோதிடப் பயிற்சி முறைகள் வழியாக, ஜோதிட சாஸ்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

0 கருத்துக்கள்: