Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, November 6, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 10

வேதகால வாழ்க்கை என்பதில் மூன்று இயற்கை உயிர்கள் சுழற்சி முறையிலும் ,பரஸ்பரமும் பகிர்ந்து வாழ்ந்தல் அவசியமாகிறது. பிரபஞ்ச சக்தியை முழுமையாக மரங்கள் பெறுவதற்கு மரங்கள் மிகவும் ஊட்டச்சத்துடன் வாழவேண்டும். மரங்களின் ஊட்டத்தை பெறுக்க பசுவின் மூலம் ஏற்படும் பஞ்சகவ்யம் மிகவும் தேவையான ஒரு விஷயம்.

பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையாகும். பஞ்சகவ்யம் இருந்தால் தான் மரம் வளரும் என்பது அல்ல. மரங்கள் செறிவுடன் மிகவும் திறன்வாய்ந்த ப்ரபஞ்ச ஆற்றல் மையங்களாக இருக்க இந்த ஊட்டம் தேவைபடுகிறது. பசு மிகவும் ஆற்றல் வாய்ந்த ப்ராண கேந்திரம் என தெரிந்துகொண்டோம்.

அது போல பஞ்சகவ்யத்தை கொண்டு வளர்ந்த மரங்கள் பசுவுக்கு இணையான ஆற்றல் ஏற்படுத்துகிறது. காரணம் மரம் தனது உயிர் சக்தியை பசுவின் ஆற்றல் மூலமே பெறுகிறது. இவ்வாறு வளர்க்கபட்ட தாவரங்கள் பசு இவை அனைத்தும் சமமான சக்தியை கொண்டு நம்மை சுற்றி பல சக்தி மையங்களை ஏற்படுத்தும்.

தொடர்ந்து தடையில்லாத பிரபஞ்ச சக்தி நம்மில் ஊடுருவ வாழ்ந்துவந்தால் வேறு என்ன நமக்கு வேண்டும்?

பஞ்சகவ்ய பொருட்களை நான் பட்டியலிட்டவுன் அதில் அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். பஞ்சகவ்யம் என்பது மரத்திற்கு போடும் உரமாகவும், ஊட்டமளிக்கும் தாவர உணவாகவும் பார்க்கப்படுகிறது.

உண்மையில் பஞ்சகவ்யம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஊட்ட சத்து. மனிதர்களுக்கு ஆயுர்வேதத்தில் சக்தியை பெற மருந்தாக வழங்கப்படுகிறது. என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான். அதுவும் சரிவிகிதத்தில் பசுவினால் கிடைக்கும் பொருட்களை கலந்தால் அவை உயிர்சக்தியை வளர்க்கும் ஒரு அருமருந்து.

பஞ்சகவ்யத்திற்காக தனியாக பசுமாடு வளர்க்கப்பட வேண்டும். இப்பசு ஒரு முறை மட்டுமே கன்று ஈன்றதாக இருக்க வேண்டும். அடுத்த முறை கன்று ஈன்றால் அவற்றை தவிர்த்து புதிய பசுவை பயன்படுத்த வேண்டும். பஞ்சகவ்யத்திற்காக பயன்படுத்தப்படும் பசுக்கள் புல் மற்றும் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என பஞ்சகவ்யம் தயாரிக்கும் பசுவை தயாரிக்கவே கொஞ்சம் சிரமம் எடுக்க வேண்டும்.

பஞ்சகவ்யம் தயாரிக்க என்றவுடன் ஒரு வாளியை எடுத்து ஒரு வாளி சாணம், ஒரு வாளி சிறுநீர் என அளந்து கலக்கிவிடக்கூடாது. பஞ்சகவ்யம் கலப்பதற்கு என சில விகிதாச்சாரம் உண்டு. மேலும் பஞ்சகவ்ய பொருட்களுடன் உபகவ்யம் என்ற வெல்லம், துளசி மற்றும் வேப்ப எண்ணெய் இவற்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தற்கால விவசாயிகள் பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 முதல் ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றச்சூழல், தாவரம் மற்றும் மண் தன் தன்மையை இழந்துவருகிறது. இவை நேரடி பாதிப்புகள். இது தவிர ரசாயனம் இருக்கும் விளைநிலத்தில் ப்ராண சக்தி பரவுவது தடுமாற்றம் ஏற்படுகிறது. ப்ராண சக்தி புலம் மிகவும் குறுகிவிடுகிறது. இத்தகைய விளைநிலங்களில் வளரும் உணவு பொருட்களை உண்பதால் நம் உடலில் ப்ராணனில் அளவும் மிகவும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

பசுமை புரட்சிக்கு பின் புற்றுநோய் ஏற்படுவதன் அளவும், குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பயணிக்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான ஒரு சூழலை சந்தித்தேன். அந்த கிராமத்தின் ஓவ்வொரு வீட்டிலும் ஒரு புற்றுநோயாளி இருக்கிறார். அவர்களுக்கு புற்றுநோய் பற்றி சரியாக தெரியவில்லை. கிராம ஆர்வலருடன் நான் சென்று அவர்களை சந்தித்தேன். தற்சமயம் அவர்கள் சற்று புற்றுநோய் பற்றிய விஷயங்கள் தெரிந்து வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் என்ன தெரியுமா? தேயிலை தோட்டத்தில் தெளிக்கும் ரசாயன உரங்கள் மண்ணில் கலந்து தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் சங்கமிக்கிறது. அந்த ஓடை நீரைத்தான் அந்த கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். யாரோ செய்யும் ரசாயன உர வியாபரத்தாலும், விவசாயத்தாலும் ஒரு கிராமமே பாதிக்கப்பாட்டுள்ளது.

உண்மையில் அந்த கிராம வாசிகள் போல நாமும் ஒருவிதத்தில் பாதிக்கபட்டு இருக்கிறோம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவு பொருட்கள் வேண்டும் என கேட்கிறார்கள்.

ஆனால் நாம் பல கப்பல்களில் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரசாயன உரத்தால் கொல்வதற்கு பதில் ஒரு அணுகுண்டை அவர்கள் நம்மீது ஏவினால் சந்தோஷப்படுவேன்.

இதுவே இயற்கை முறையில் பஞ்சகவ்யம் மற்றும் இதர இயற்கை முறை விவசாயம் செய்தால் இப்படி பட்ட நிலை இல்லை. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு பசுவும், இயற்கை விவசாயமும் அவசியம் ஆகிறது.

ரசாயன உரம் அவ்வளவு கொடியதா என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒரு விவசாயி ரசாயன உரத்தை தாவரங்களுக்கு தெளிக்கிறார், அப்படி தெளிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அந்த உரத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன ஆவார்?

ஆனால் பஞ்சகவ்யத்தை ஒருவர் பயிருக்கு செலுத்தும் பொழுது அதை ஒரு கைப்பிடி எடுத்து உண்டாலும் ஒன்றும் ஆகமாட்டார். மாறாக நல்ல உடல் நலமும் , ஆன்ம பலமும் பெறுவார்.

தாவரங்கள் நம்மை விட அதிக பலம் கொண்டவை என்பதற்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தும். விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை தெளித்தாலும் மனிதனை போல் உயிர்விடாமல் அதற்கு எதிராக போராடி உயிர்பெறுகிறது தாவரம். தாவரங்களை ஒரு உயிராக பார்க்காமல் வியாபார பொருட்களாக பசுமை புரட்சியாளர்கள் பார்த்தார்கள். அதன் விளைவு நீங்களும் நானும் தரமான விவசாய பொருட்கள் கிடைக்காமலும், கொள்ளை விலையில் அரிசியையும் பருப்பையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை போன்ற ஒரு உயிர் என விவசாயி நினைத்தால் அன்று முதல் தன்னையே தியாகம் செய்ய தாவரங்கள் தயாராகாதா? விவசாயிக்கு ஏற்படும் இந்த எண்ணம் தானே தாவரத்திற்கு தேவையான முக்கிய ஊட்டசத்து? ரசாயனத்தை கொடுத்ததற்கு பன்மடங்கு அந்த தாவரம் திரும்ப நமக்கு என்ன கொடுத்தது என நடைமுறையில் காண்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம்.


வேதகால வாழ்க்கை முறையை எளிமையாக விளக்கும் ஒரு படம்.

இப்படத்தில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தாவரமும், பசுவும் பரஸ்பரம் கொடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் பெற மட்டுமே செய்கிறான்.

ப்ராண சக்தியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் பெரியவன் என்ற மனித அஹங்காரம் நொருங்கிவிடும். எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....

இல்லை என்றே கூறவேண்டும்.

புளிய மரம் போன்றவை ப்ராணனை குறைக்கும் என்று கூறினேன் அல்லவா? அப்படியானால் எவை பயன்படுத்த தகுந்தவை? அடுத்த பகுதியில் பார்ப்போம்

(.... வேதம் ஒலிக்கும்)

19 கருத்துக்கள்:

Siva Sottallu said...

நல்ல சுவாரஷ்யமாக சென்றுகொண்டு இருக்கிறது ஸ்வாமி, மிக்க நன்றி.

// என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான்.//

ஆச்சரியமாகதான் உள்ளது ஸ்வாமி.

ஸ்வாமி, என் இந்த கேள்வி முட்டாள்தனமாக கூட இருக்கலாம், இருந்தாலும் உங்களிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது .

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அதுபோல் நம்மை சுற்றி அதிகமான மரங்கள்/பசுக்கள் இருந்து அதனால் ப்ராண சக்தி அதிகமாகி நமக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா ஸ்வாமி?

Anonymous said...

சுவாமி, சிறிது காலமாக நான் Organic முறை பயிர் செய்யப்பட்ட காய்கறிகளை, பழங்களை மட்டுமே சாபிடுகிறேன். பால் கூட இங்கு நன்கு இயற்கையாக வளர்க்கப்பட்ட பசுவின் பால் கிடைக்கிறது, அதைத்தான் உட்கொள்கிறோம். அமெரிக்காவில் கிடைக்கும் இதுவெல்லாம், இந்தியாவில் கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. இங்கு மக்கள் Diet முறை மிகவும் கட்ட்ருகொல்கிறார்கள், பலரும் இயற்கையாக உன்ன விரும்பி வருகிறார்கள். Dr. Oz என்னும் புகழ் பெற்ற மருத்துவர் இங்கு தொலைகாட்சியில் இந்தியாவில் இருந்து பல இயற்கை வைத்தியம், உணவுமுறை மக்களுக்கு பகிர்ந்து கொள்கிறார். அதை பார்கவே மிகவும் பெருமையாக உள்ளது. மஞ்சள், வெப்பம் ஆகிய பலவற்றை பற்றி பேசி, மக்களுக்காக இந்திய மட்டும் அன்றி, பல தேசங்களில் இருந்து உணவு வகைகள், இயற்கை மருந்துகளை பகிர்ந்து கொள்கிறார்.

http://www.doctoroz.com/

ceylonstar said...

ப்ரண சக்தியிற்கும் துளசி மரத்திற்கும் உள்ள ஈடுபாடு பற்றி அறிய ஆவல்.

நிகழ்காலத்தில்... said...

\\எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....

இல்லை என்றே கூறவேண்டும்.\\

அறியக் காத்திருக்கிறேன்

படத்தைப்பார்த்தவுடன் புத்தகம் என சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.:))

என் எண்ணம் நிறைவேறுவதாக..

sowri said...

http://palekarzerobudgetnaturalfarming.com/organic.html

He is the forerunner in implementing organic farming using panchakaviya and other natural bye-products. Amazing that your article reflects the same.
Please continue to enlighten us.

Rajasurian said...

சாமிக்கு நன்றிகள் பல

Sabarinathan Arthanari said...

thx swami

Self Realization said...

swamji the nature is the mother for every one of us...Be a part of nature..we do understand the importance of it...It is very good and understandable way of explanation.

All things of nature can be recycled for the welfare of human being...

Everyone who reading this blog now realize and try to follow nature.. Don't destroy it...

Think our fore fathers and siddhars who understand the value of nature...and they realized their body accepts natural food and medicines.Because they know how man is connected with nature..and they lived a long and happy life....

This is what essential to all humans...not money,fame,game...same thing happened in my life...even though i have money i didn't have happiness and good health but a common man has..On that day i realized.In life love,peace and happiness comes from within ourselves and also witnessed from nature...

swamji is doing a right job to understand and protect our nature which is a duty for all of us..irrespective of religion,caste,creed,race,status etc.,

Unknown said...

guruji unkalthu katturaikal aazhntha ula karuthukalai kondathu unkalai polavethaan , iyarkai vignani nammaalvaar vegukaalamaaga pathirikai oodagangalin vaayilaka solkirar , but inium idia iyarkai vivasayathirku thirumbuma apati thirubinaal ingu ulla makkaluku unavu thattu paadu illaamal kodukka mutiumaa

ஷண்முகப்ரியன் said...

என்னுடைய data விலேயே இல்லாத புதுப் புது விஷயங்கள்.
சரணங்கள்,ஸ்வாமிஜி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அதுபோல் நம்மை சுற்றி அதிகமான மரங்கள்/பசுக்கள் இருந்து அதனால் ப்ராண சக்தி அதிகமாகி நமக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா ஸ்வாமி?//

உங்கள் கேள்வி சரியானதே. அளவுக்கு மீறினால் எதுவும் பாதிப்புதான்.

அதிகமான ப்ராணசக்தி ஒரு மனிதனுக்கு எப்படி பட்ட பாதிப்பை கொடுக்கும் என கீழ் கூறியுள்ளேன்

1)சுயநலம் இல்லாத வாழ்க்கை
2) ஆன்மீக உயர்வு
3) பிற உயிர்களை தன்னுயிராக நேசித்தல்
4) தடையில்லாத பேரானந்த நிலை
5) உடல் மற்றும் மன நோயிலிருந்து விடுதலை.

இது போன்ற பயங்கர விளைவிகள் நடக்கும். :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

உங்கள் உதாரணம் சரியே.
இந்தியர்களுக்கு இன்னும் இயற்கை விவசாயம் விளைபொருட்கள் (ஆர்க்கானிக்) உண்ணும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

உலகில் இருக்கும் இயற்கை உணவு தேவை 80%. உற்பத்தியின் அளவு 5% மட்டுமே.

எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் செய்பவர் நிச்சயம் உலக பணக்காரராக இருப்பார். ராஜபாளையத்தில் எனக்கு தெரிந்தே ஒரு கோடிஸ்வரர் இருக்கிறார் :).

மருத்துவர்கள் இயற்கை முறை விவசாயம் செய்த உணவையே சப்பிடச்சொல்லுவார்கள்.
அன்றுதான் நம்மக்களுக்கு தெரியும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிலோன்ஸ்டார்,

//ப்ரண சக்தியிற்கும் துளசி மரத்திற்கும் உள்ள ஈடுபாடு பற்றி அறிய ஆவல்.//

ப்ராண சக்திக்கு நிறைய தொடர்பு உண்டு.
ப்ராணன் உடலுக்கு மின்சாரம் போன்றது. உடல் என்ற எந்திரம் வேலைசெய்ய தடையில்லாத மின்சாரம் தேவை. அப்படி பட்ட தடையில்லாத மின்சாரமே ப்ராணன்.

சில சூழல் காரணமாக ப்ராணனின் உற்பிரிவுகள்.திடீரென தடை ஏற்படும். இதனால் நமக்கு பாதிப்பு உண்டு. அப்படிபட்ட நேரத்தில் துளசி என்பது அருமருந்து.

துளசி சிலவினாடிகளில் உடலின் ப்ராண தடைகளை நீக்கி ப்ராணனை சமநிலையாக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

//படத்தைப்பார்த்தவுடன் புத்தகம் என சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.:))

என் எண்ணம் நிறைவேறுவதாக..//

உங்கள் எண்ணம் முன்பே நிறைவேறிவிட்டது. புத்தகம் மேலும் தகவலுடன் அச்சில்....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,
திரு ராஜசூரியன்,
திரு சபரிநாதன் அர்த்தநாரி,
திரு self realization,
திரு பிரபாகர்,
திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

senthil said...

என்னே தொழினுட்பம்!!
பார்க்க.

http://www.view360.in/virtualtour/madurai/
--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan-

madurai foto ennku mail vathathu nikalum pathu irupeka

Unknown said...

திரு சிவா,

//அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அதுபோல் நம்மை சுற்றி அதிகமான மரங்கள்/பசுக்கள் இருந்து அதனால் ப்ராண சக்தி அதிகமாகி நமக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா ஸ்வாமி?//

உங்கள் கேள்வி சரியானதே. அளவுக்கு மீறினால் எதுவும் பாதிப்புதான்.

அதிகமான ப்ராணசக்தி ஒரு மனிதனுக்கு எப்படி பட்ட பாதிப்பை கொடுக்கும் என கீழ் கூறியுள்ளேன்

1)சுயநலம் இல்லாத வாழ்க்கை
2) ஆன்மீக உயர்வு
3) பிற உயிர்களை தன்னுயிராக நேசித்தல்
4) தடையில்லாத பேரானந்த நிலை
5) உடல் மற்றும் மன நோயிலிருந்து விடுதலை.

இது போன்ற பயங்கர விளைவிகள் நடக்கும். :)

உங்கள் வருகைக்கு நன்றி.



ha ha haha very nice anwer swamiji .. u r doing well

Unknown said...

குரு ஜி எனக்கு தாங்கள் எழுதிய புத்தகங்கள் தேவை படுகின்றது . அதை பெற நான் என்ன செய்ய வேண்டும் . உங்களை நான் தொடர்பு கொள்ள முடியுமா ? மதுரை பிரபாகர் my no 9944494045

Siva Sottallu said...

// 1)சுயநலம் இல்லாத வாழ்க்கை
2) ஆன்மீக உயர்வு
3) பிற உயிர்களை தன்னுயிராக நேசித்தல்
4) தடையில்லாத பேரானந்த நிலை
5) உடல் மற்றும் மன நோயிலிருந்து விடுதலை. //

அனைவரும் வரவேற்க்கதக்க விளைவுகள் ஸ்வாமி. மிக்க நன்றி.

// துளசி சிலவினாடிகளில் உடலின் ப்ராண தடைகளை நீக்கி ப்ராணனை சமநிலையாக்கும். //

"Electric Stabilizer" போல் என்று கூரலமோ... அதனால் தான் பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள ஸ்வாமி?