Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, July 11, 2024

மஹா கும்ப மேளா 2025

உலகில் நடக்கும் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா…!!


ஒரு குழுவோ அல்லது மனிதர்களோ ஒருங்கிணைக்காமல் நடைபெறும் திருவிழா…!


கோவில்கள் இல்லாத இடத்தில் நடக்கும் ஆன்மீக கொண்டாட்டம்.


இறைத்தூதரோ அல்லது மதமோ சம்பந்தம் இல்லாத நிகழ்வு


பூமியில் அதிக மக்கள் கூடும் பெரும் விழா


வானில் ஏவிய செயற்கைக் கோள்கள் கூட இத்தனை மனித கூட்டமா என கவனிக்கும் நிகழ்வு


உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடக்கும் சமயத்தில் மட்டும் தான் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அல்லது இடம் பெயர்வார்கள். ஓர் அமைதியான ஆன்மீக விழாவுக்கு கோடிக்கணாக மக்கள் அழைப்பிதழ் இன்றி கூடுவது உலக வரலாற்றில் இங்கே மட்டும் தான்.


வடக்கில் காஷ்மீரம், தெற்கில் தமிழகம், மேற்கில் ராஜஸ்தான் மற்றும் குஜராத், கிழக்கில் அசாம் என வெவ்வேறு மனிதர்கள் பல்வேறு கலாச்சார மொழி கொண்டவர்கள் வசிக்கிறார்கள். இத்தகைய இந்திய பெரும் நிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மொழி, இன, கலாச்சார பேதம் இன்றி மக்கள் அலை அலையாக வரும் ஓர் பெரும் நிகழ்வு.


பல நூற்றாண்டு காலமாக மேற்கண்ட முறையில் இடைவிடாமல் ஒரு நிகழ்வு அதுவும் பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது.


அது தான் மஹா கும்பமேளா….


கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கம் என்ற இடத்தில் ப்ரயாக் ராஜ் என்ற ஊரில் பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு தான் மஹா கும்பமேளா.


கும்பமேளா என்பது என்ன? 

உண்மையில் கும்பமேளா நமக்கு அவசியமான நிகழ்வா?

அது ஏன் உத்திர பிரதேசத்தில் ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெற வேண்டும்?

அடுத்த கும்பமேளா எப்பொழுது?


கும்பமேளாவின் வகைகள் மற்றும் சாஸ்திர பின்புலம் என்ன என வரும் பகுதிகளில் தெரிந்துகொள்வோம்.


(தொடரும்…)


0 கருத்துக்கள்: