Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 10, 2024

ஐஸ்வர்ய திருமுடி

 

பொருள் தேடும் உலகில் பலருக்கு பொருள் தேவை இருக்கிறது.  இந்த உலகு பொருளை ஆதாரமாக கொண்டு சுழலுகிறது. அதனால் தான் பொருளாதார நிலை என்கிறோம்.

பொருளை தேடி போகாதே என சிலர் வறட்டு தனத்தை வாழ்க்கையில் உருவாக்குகிறார்கள்.மேலும் சிலரோ அத்தனைக்கும் ஆசைப்பட சொல்லி கிளறிவிட்டு குளிர்காய்கிறார்கள். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என சொல்லுவதை போல பணம் வேண்டாம் என முடிவு செய்வதும், அத்தனை பணமும் எனக்கு வேண்டும் என சொல்லுவதும் வெவ்வேறு துருவங்கள், இரண்டுமே நமக்கு அவசியம் இல்லை. இதில் நமது வாழ்க்கை என்பது மையத்தில் இருக்கிறது. வெப்பமா குளிரா என கேட்டால் இரண்டும் வேண்டாம், இதமான தென்றல் வீசும் வானிலை தான் வேண்டும் என சொல்ல வேண்டும்.    

பொருளாதாரம் என்பது வாகனத்தில் இருக்கும் பெட்ரோல் போல ஒரு எரி சக்தியாகும். இது இல்லை என்றால் வாழ்க்கை என்ற வாகனம் இயங்காது. இதுவே மிகவும் அதிகமானால் அந்த வாகனமே எரிந்து போக வாய்ப்பு உண்டு.

சூரிய சக்தியை உதாரணமாக கொண்டால் தினமும் சூரிய ஒளி எல்லா இடங்களிலும் விழுகிறது. அந்த இடத்திற்கு தக்க விளைவை ஏற்படுத்துகிறது. தாவரத்தில் விழும் இடங்களில் அது தாவர சக்தியாக மாறுகிறது. இதுவே குப்பைகளில் விழும் பொழுது குப்பையை மக்க செய்து உரமாக மாற்றுகிறது. அதே சூரிய ஒளி நம் வைத்திருக்கும் சூரிய ஒளி தகடுகளில் விழும் பொழுது மின்சார சக்தியாக மாறுகிறது.

லஷ்மி அருள் என்றும் அனைத்து பொருளிலும் இருக்கிறது. அனைத்திலும் விழும் அருள் ஒளியானது அதற்கு ஏற்ப காரிய சித்தியை அளிக்கிறது. சூரிய ஒளி தகடுகளில் சூரிய ஒளியை மின்சாரமாக நமக்கு தேவைக்கு ஏற்ப மாற்றுவதை போல லஷ்மியின் அருளை நமது வாழ்க்கையின் அவசியத்திற்கு ஏற்ப சேமிக்க முடியுமா? அதற்கு ஏதேனும் கருவிகள் உண்டா? உண்டு வாருங்கள் லஷ்மி அருளை சேமிக்கும் ஒரு உன்னத பொருளை பற்றி கூறிகிறேன்.

பொருளாதார ஆகர்ஷணம் என்ற சூட்சமம் பலருக்கு புரியாத ஒரு விஷயம். லஷ்மியின் அருள் கொண்ட வலம்புரி சங்கு போன்ற பல ஆன்மீக பொருளை வீட்டில் வைத்திருந்தால் லஷ்மியின் அருள் கிடைக்கும் எனபது பலரின் நம்பிக்கை. வலம்புரி சங்கு போல பல விஷயங்கள் நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

இயற்கையாக கிடைக்கும் ஆன்மீக பொருட்கள் சக்தியூட்டப்பட்ட நிலையில் அமைகிறதா என பலருக்கு தெரிவதில்லை. கடையில் அலங்கார பொருள் வாங்குவது போல வாங்கி வைத்துவிடுகிறார்கள். விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும் நம்பிக்கையின் காரணமாக வைத்து வழிபடுகிறார்கள்.

பொருளாதார ஆகர்ஷணத்திற்கு லஷ்மி அருளை சேமிக்கும் ஆற்றல் கொண்டது எது எனக்கேட்டால் ஐஸ்வர்ய திருமுடி என்பதே சரியான பதில் ஆகும்.

ஐஸ்வர்ய திருமுடி

ஓம்கார ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் யந்திரேஸ்வரி எனும் மஹா சக்தி இதற்கு அருள்செய்கிறது. மகா சக்தி அருள் ஸ்ரீ மேரு என்ற வடிவில் ஸ்ரீசக்ரத்தின் முப்பரிமாண ரூபமாக விளங்குகிறது. அஷ்ட லஷ்மியாகவும் மஹாவித்யாவின் வடிவிலும் பிரபஞ்ச அன்னை யந்திரேஸ்வரியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கு ஸ்ரீ மேரு பூஜை நடை பெறுகிறது. ஸ்ரீ மேரு பூஜையில் 108 தங்க முலாம் பூசப்பட்ட செப்புக்காசுகளை கொண்டு ஸ்ரீமேரு அர்ச்சனை செய்யப்படுகிறது.
 

108 திருக்காசுகளால் அர்ச்சனை செய்யப்பட்டதும் யந்திரேஸ்வரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. திருக்காசுகள் ஆர்ச்சனை செய்யப்பட்டதும் லஷ்மி அருளை ஆகர்ஷணம் செய்யும் கருவியாக மாறுகிறது. திருக்காசுகளை வீடு மற்றும் வியாபார ஸ்தலத்தில் வைத்திருக்கும் பொழுது, லஷ்மி ஆகர்ஷணமாக செயல்பட்டு நமது பொருளாதார நிலையை எப்பொழுதும் வளர்ச்சி நிலையில் வைத்திருக்கும்.

108 திருக்காசுகள் நாணய வடிவில் அமைத்திருக்கிறது. ஒரு புறம் கஜ லட்சுமி வடிவமும், மறு புறம் ஸ்ரீ சக்ரத்தையும் கொண்ட நாணயம் முழுமையான சக்தியை நிலை நிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. ஸ்ரீ மேரு வடிவம் முப்பரிமாணம் என்றால் ஸ்ரீ சக்ர வடிவம் இரு பரிமாணங்களை கொண்ட யந்திர வடிவமாகும். ஸ்ரீ சக்ர வடிவில் லஷ்மியின் ஆற்றலை சேமிக்கும் கருவியாக நாணயங்கள் அமைகிறது.


108 திருக்காசுகளை ஒரு பேழையில் வைத்து வணங்கி வருவதன் மூலம் அதன் ஆகர்ஷண தன்மையை உணர முடியும்.கற்பக விருக்‌ஷம் என்ற கேட்டதை வரமாக அளிக்கும் தெய்வீக விருக்‌ஷத்தை அடையாளமாக கொண்ட பேழைகள் திருக்காசுகளை தாங்கி நிற்கிறது. 108 திருக்காசுகள் ஒருங்கிணைந்த பெட்டி ஐஸ்வர்ய திருமுடி என அழைக்கப்படுகிறது. யந்திரேஸ்வரியின் ஆற்றலை பிரதி எடுத்து நமது இல்லத்தில் வைப்பதற்கு சமமான செயல் ஐஸ்வர்ய திருமுடியை நாம் வைத்திருப்பதாகும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் புதிய இல்லம் அல்லது வியாபார ஸ்தலங்களில் நாம் இதை பரிசாக கொடுப்பதன் மூலம் விளக்கமுடியாத வளர்ச்சி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கிடைக்கும்.

ஓம்கார ஆலயத்தில் இருக்கும் யந்திரேஸ்வரிக்கு வாரம் ஒரு முறை என வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பூஜை செய்யப்படுவதால் வருடத்திற்கு 52 ஐஸ்வர்ய திருமுடி மட்டுமே கிடைக்கும். முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஐஸ்வர்ய திருமுடியை பெற விரும்பும் நபர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி  எண்  தத்த நாத் - +91 98401 87486


0 கருத்துக்கள்: