Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, October 31, 2010

ஸ்ரீசக்ர புரி - புனித பயணம்

எனதருமை சகோதர சகோதரிகளுக்கு,

இன்று ஒரு நற்செய்தியுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ஸ்ரீ சக்ர புரி என்ற திருவண்ணாமலை பற்றிய தொடர் படித்துவிட்டு பலர் என்னுடன் திருவண்ணாமலை வருவதற்கு விருப்பம் கொண்டு மின்னஞ்சல் அனுப்பினீர்கள்.

இறையருள் அதற்கு சில நாட்கள் முன்னரே அனுமதி அளித்தது. வரும் டிசம்பர் மாதம் 27,28,29 (திங்கள்,செவ்வாய் மற்றும் புதன்) அன்று மூன்று நாட்கள் திருவண்ணாமலையில் என்னுடன் பயணிக்கலாம்.

இது சுற்றுலா அல்ல. முழுமையான ஆன்மீக பயணம் என்பதால் அதற்கு தக்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

மூன்று நாட்களில் ஆன்மீக ஆற்றல் நிறைந்த திருவண்ணாமலை மற்றும் அதன் அருகில் இருக்கும் இடங்களுக்கு தரிசிப்பது முக்கிய நிகழ்வாகும்.

மேலும் தியானம் மற்றும் எளிய யோக பயிற்சியை எங்களிடம் இருந்து நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.

சில முக்கிய குறிப்புகள்

  • பத்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி

  • உணவு, தங்கும் இடம் அனைத்தும் எங்கள் பொறுப்பு

  • உங்கள் இருப்பிடத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து திரும்பும் செலவு உங்களுடையது.

  • ஆன்மீக அனுபவம் பெறவும், எங்களின் அறக்கட்டளையின் வழிகாட்டுதலில் செயல்படும் எண்ணம் இருந்தால் மட்டும் பயணத்தில் கலந்து கொள்ளவும்

  • மூன்று நாட்கள் மற்றும் தியான பயிற்சி உள்பட கட்டணம் 3000/-

  • தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை நீங்களாகவே பார்த்துக்கொள்வதாக இருந்தால் எங்களுடன் பயணிக்க எந்த கட்டணமும் இல்லை.

  • டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முன்பதிவு செய்ய இறுதி நாள்.

  • முன்பதிவு என்பது முழு கட்டணத்துடன் உங்கள் பெயரை பதிவு செய்வதாகும். பயணம் பற்றிய பிற நடைமுறைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் முன்பதிவு செய்பவர்களுக்கு தனியே மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

ஆன்மீக கொண்டாட்டங்களும் ஆனந்தமும் நிறைந்த ஸ்ரீசக்ர புரிக்கு என்னுடன் பயணிக்க தயாரா?

-ஸ்வாமி ஓம்கார்

7 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

// முன்பதிவு என்பது முழு கட்டணத்துடன் உங்கள் பெயரை பதிவு செய்வதாகும்

//

என்னா உஷாரு!!!

:)))

ஸ்வாமி ஓம்கார் said...

அண்ணே உஷாரா இல்லாம இருக்க முடியுமா?... அரிசியிலிருந்து இன்ஸூரன்ஸ் வரை ’இலவசமாக’வே வாங்கி பழகிட்ட்டாங்க ;) இதுவும் இலவசம்னு நினைச்சுட்டா :D

குசும்பன் said...

//அரிசியிலிருந்து இன்ஸூரன்ஸ் வரை ’இலவசமாக’வே வாங்கி பழகிட்ட்டாங்க ;) இதுவும் இலவசம்னு நினைச்சுட்டா :D
//

நான் கூட துபாயில் இருந்து வந்துட்டு போகும் செலவுக்கும் நீங்க பணம் கொடுப்பீங்களான்னு கேட்க நினைச்சேன்...சாமி கடைசி பாராவில் எஸ்கேப் ஆயிட்டீங்க.

- A - said...

இந்தியாவுக்கு விசாவ வாங்கி நான் அங்க வந்து உங்களை தேடி புடிச்சு பிரணவ பீடம் வந்து சேர இந்த மார்கழி போய் அடுத்த மார்கழி வந்துடுமே.. :( இதுல வேற limited 10 ஸ்வாமி அழுதுடுவன் :(:( :(

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குசும்பன், உங்கள் வருகைக்கு நன்றீ :)

ஸ்வாமி ஓம்கார் said...

//இந்தியாவுக்கு விசாவ வாங்கி நான் அங்க வந்து உங்களை தேடி புடிச்சு பிரணவ பீடம் //

உங்களோட கருத்துல சில குழப்பம். திருவண்ணாமலைக்கு வர சொன்னா நீங்க ஏன் ப்ரணவ பீடத்திற்கு வர முயற்சி செய்யறீங்க :) ?

VISA இருந்தா வெளிநாடு போல இந்த பயணத்துக்கு இதை ஜம்புள் பண்ணினா வரும் பெயர்காரர் அனுமதிச்சாத்தான் வர முடியும்...! (SIVA)

- A - said...

ஸ்வாமி :( நான் இருப்பது இலங்கையில்.. இந்தியா வர விசா வேனும் இல்ல? அப்றம் திருவண்ணாமலைக்கு உங்க கூட வரனும்னா பிரணவமீடம் வரனும்ல? அந்த அர்த்ததுல சென்னன்..