Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 13, 2013

பகவான் செய்த தவறு...!

அந்த மஹானின் வாழ்க்கை சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தேன். மஹானின் பெயரை சொல்லும் பொழுது அவரின் பெயருடன் “பகவான்” என சேர்த்து சொன்னேன்.

என் மாணவர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் நீங்கள் எப்படி மனித உருவில் இருப்பவரை பகவான் என சொல்லலாம். இது மிகத் தவறான முன் உதாரணம்.... பகவன் பகவான் தான்.. மனிதனாக முடியுமா? இப்படித்தான் தன்னை தானே பலர் கடவுளாக்கி வியாபாரம் செய்கிறார்கள் என நீண்ட உரை நிகழ்த்தினார்.

அவர் முடிக்கும் வரை காத்திருந்தேன்.

பின்னால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப்படத்தை காட்டி... யார் இவர்? என கேட்டேன்.

நீங்க தான் ஸ்வாமிஜி என்றார்.

ஒரே ஒரு முறை என் உருவத்தை அச்சிட்டதால் இந்த பேப்பர் நான் ஆகும் பொழுது..பல முறை இறைவன் பிரவேசித்த உடல் பகவான் ஆகாதா ? என்றேன்..

 “பகவானே.....!” என்றார்...

2 கருத்துக்கள்:

திவாண்ணா said...

உம்ம்ம்ம்... பல முறை இறைவன் பிரவேசித்த?

ஸ்வாமி ஓம்கார் said...

எப்பொழுதும் உறைகிறனு சொல்லனும். ஆனா அந்த பகூத் அறிவாளருக்கு வெளங்கனுமே.