Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, November 18, 2013

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 2

சனி பிடிச்சா ஒட்டகத்தில் போனாலும் தெருநாய் வந்து கடிக்கும் என சொல்லுவார்கள். அது போல எனது அர்ஜண்டினா பயணத்தில் எனக்கு துணையாக சுப்பாண்டி. தனியாக நானே என்னை சமாளிக்க முடியாமல் இருக்க..இதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜாக சுப்பாண்டியும் என்னுடன் இருக்க பிரச்சனை இருமடங்கு என்பதைவிட பல மடங்கு என்றே சொல்லவேண்டும்.

அர்ஜண்டினாவின் தலைநகரம் பியோனிஸ் ஏரிஸ். இது தென் அமெரிக்காவின் பாரிஸ் என அழைக்கப்படுகிறது. இங்கே தான் நான் வந்து இறங்கினேன்.

குடியுரிமை சோதனை முடித்து, எனது பெட்டி பைகளை எடுத்துக்கொண்டு விமான நிலைய கலால் சோதனை சாவடிக்கு அருகே வந்தால் பெரிய வரிசையில் மக்கள் நின்று இருந்தார்கள். ஸ்பானீஷ் 

தெரியாத குறைக்கு நானும் வரிசையில் நின்றேன். எனக்கு பின்னால் சுப்பாண்டி..

வரிசை அதிகாரியின் அருகே செல்ல செல்ல புரிந்தது இது கலால் சோதனை இல்லை ஆயுத சோதனை என புரிந்து திடுக்கிட்டோம். கையில் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாகிகள் சகிதம் மக்கள் சோதனை சாவடியில் நிற்கிறார்கள். இங்கே ஆயுதங்களை பெட்டி படுக்கை போல விமானத்தில் எடுத்து செல்லலாம். மீண்டும் அதை நாட்டுக்குள் வரும் பொழுது குறிப்பேட்டில் எழுதிவிட்டு எடுத்து செல்ல வேண்டும். 

எங்கள் முறை வந்தது- தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை திரட்டி, “டு யூ ஹாவ் எனி வெப்பன்ஸ்?” என்றார் அதிகாரி. நாங்க 

ஊதா கலர் ரிப்பனையே பார்த்ததில்லை இதில் வெப்பனாம்.. என்றான் சுப்பாண்டி.

எங்களின் நிராயுத பாணி நிலையை விளக்கிவிட்டு கடந்தோம். கடந்து செல்லுகையில் அருகே வைக்கப்பட்டிருந்த யாரும் உரிமை கோராத துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லன்சர்கள் கொஞ்சம் பீதியை உண்டு செய்தது.

தலைநகரிலிருந்து 600 கிலோமீட்டர் தூரம் உள்ள லா பம்ப்பா என்ற இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். மீண்டும் அபிநய சரஸ்வதியாகி ஒரு டாக்ஸியை பிடித்து மீண்டும் 6 மணி நேர பயணம்.

இங்கே சாலைகள் எல்லாம் ஒரே நேர் கொட்டில் இருக்கிறது. குறைந்த பட்சம் 50 முதல் 60 கிலோ மீட்டருக்கு வளைவுகள் இல்லாத வீதிகள். எங்களை கூட்டிவந்த டாக்ஸி ட்ரைவர் முன் இருக்கை அருகே ஒரு சின்ன டீவி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்த்த வண்ணம் வந்தார். இந்தியாவில் நான் பயணிக்கும் பொழுது ட்ரைவர் செல்போனில் பேசினாலே ஓரமா நிறுத்து என அலறுவேன். இவரின் செய்கை வெறுப்பூட்டவே ஏன் டீவி பார்க்கிறீர்கள் என கேட்டேன்.

தூர பயணத்தில் திருப்பம் இல்லாமல் இருப்பதால் தூங்கிவிடுவாராம். அதை தவிர்க்கவே இந்த டிவி என்றார். ஐயா நல்லா டிவியை போட்டுக்கோ என சொல்ல வைத்தது அர்ஜண்டினா சாலைகள்.

லா பம்ப்பா மாகாணத்தில் வந்து இறங்கியதும் பெரிய வரவேற்பு நிகழ்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனது தென் அமெரிக்க மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

மேலும் இந்த மாகாணத்திற்கு வரும் முதல் இந்திய ஆன்மீகவாதி என கூறி அந்த மேயர் வரவேற்றார்.

பொது நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்தும் சிறப்பாக இருந்தது.

உங்கள் பொது நிகழ்ச்சியையும் பயிற்சி வகுப்பையும் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்கிறோம். நகர மையத்தில் நீங்கள் சென்றுவிட்டு திரும்பும் பொழுது அவரை சந்திக்கலாம் என சொன்னார்கள்.

எங்கள் நகர உலா முடித்துவிட்டு வருகையில் கையில் குச்சியுடன் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று இருந்தார்.

கண்கள் பார்வையில்லாத அந்த நபர் எங்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ய போகிறாராம்....!

நாம் பரதநாட்டியம் ஆடியே பல விஷயங்களை புரியவைக்க முடியும் என நம்பிகொண்டிருந்த எனக்கு, இங்கே பார்வையற்றவர் காத்திருந்தது 

ஏமாற்றமே...இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்தேன்.

இன்று மாலை நகர மையத்தில் உள்ள அரங்கில் பொதுக்கூட்டம்...இவரை புரியவைத்து என்ன பேசி... அப்புறம் மக்கள் புரிந்துகொண்டு.. விளங்கும் என நினைத்துக்கொண்டேன்...

அந்த பார்வையற்றவரை சந்தித்த இந்த குருடன் கதையை நாளை சொல்கிறேன்.

(அன்பு பெருகும்)

5 கருத்துக்கள்:

திவாண்ணா said...

ஏன் 600 கிமீ ந்னா ட்ரெய்ன் கிடையாதா?

காவேரிகணேஷ் said...

அருமையான எழுத்து நடை...அடுத்த பாகம் காத்திருக்கிறேன்

geethasmbsvm6 said...

ஆவலுடன் காத்திருக்கேன்.

Unknown said...

'நாளை' வந்து 'வேளை' பார்த்துக்கொண்டிருக்கிறது.. ம்ம்ம்ம் ஆகட்டும், சீக்கிரம்.

vijay.s said...

Superb narration swami.